<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மெட்டி ஒலி காற்றோடு - பாகம் II


முன்பொரு காலத்தில் தன்னைத்தானே எழுதிக்கொண்ட ஒரு சிறுகதையின் மிச்சம்.

....

என் தேவதை அவள்.. அவள் கண்களில் நான் கடைசி வரை காண விரும்பாத விஷயம் அது... எதுவும் பேசாமல் வழிவிட்டேன்... இந்த முறை கடைசி வரை திரும்பி பார்க்கவே இல்லை... அதற்கப்புறம் அவள் பேசுவாள் பேசுவாள் என்று தொலைபேசியை நம்பிக்கையோடு பார்த்த நாட்கள் நிறைய. ஆனால்... நானாக தொடர்பு கொள்ள செய்த முயற்சி எல்லாவற்றிலும் என் குரல் கேட்டவுடன் எதிர்முனையில் வெறும் மௌனம்தான் கேட்கும்.

"ஏண்டா.. என்ன திடீர்னு வந்துட்ட.. திரும்பி வேலைக்கும் போகல?"

"ஆமா, என்ன பெரிய வேலை. எனக்கு பிடிக்கல..."

மூணு வாரங்கள் அப்படியே போனது. ரயில்வே ஸ்டேஷன் ஜமாவில் டேவிட் மட்டும்தான் கவனித்தான்.

"என்னடா, எப்பவும் நாளைக்கு நாலு தம்முக்கு மேல அடிக்க மாட்ட, இன்னிக்கி என்ன.. வந்து ஒன் அவர் ஆகல அதுக்குள்ள ஒரு பாக்கெட் காலி. அதுவுமில்லாம எப்பவும் எவனையாவது தாளிச்சிகிட்டே இருப்ப.. ரெண்டு நாளா கம்முன்னே இருக்க.. என்ன மேட்டரு"

இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. அவளுக்கு பிடிக்காது.

"ஒண்ணுமில்லடா"

"என்ன அந்த பொண்ணு மேட்டரா?"

நிமிர்ந்து பார்த்தேன்.

"எல்லாம் குத்துமதிப்பா யூகிச்சி வச்சிட்டோம்டா.. நீயா என்னிக்காவது சொல்லுவன்னு வெயிட் பண்ணோம். என்ன ஆச்சு திடீர்னு"

"தெரியில..."

"...."

"...."

"சரி விடு. சும்மா நீ என் ஃப்ரண்டுன்னு இத சொல்றேன்னு நினைக்காத.. சீரியஸா சொல்றேன். அவளுக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான்... வேலைய பாரு"

கோயமுத்தூர் ரூம்மேட்டுக்கு ஃபோன் செய்து அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்த என் சமாச்சாரங்களை அடுத்த முறை அவன் ஊருக்கு வரும்போது வீட்டில் தந்துவிடுமாறு சொல்லிவிட்டு சென்னைக்கு பஸ் ஏறினேன். வந்தாரை வாழவைக்கும் ட்ரிப்ளிக்கேன் மேன்ஷனில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது.

சென்னையில் படிப்புக்காக பணம் பிரட்ட அலைந்தது, கிடைத்த வாய்ப்புக்கு பங்கம் வராமல் படித்தது அல்லது படிக்க முயற்சித்தது, பகலெல்லாம் பல்லவன் பல்லனாக வேலை தேடி அலைந்தது, பீச்சாங்கரையில் இரவு நேர நிலா ஒளி + மாமாக்கள் அறிவுரைகளுக்கு மத்தியில் தண்ணியடித்து நீந்தியது என்று ஓட்டி ஒரு வேலையில் உட்கார்ந்த போது ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தபோது அவளை 'அகஸ்மாத்தாக' சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டது. அதற்கப்புறம் இரண்டு நாடுகள் மாறி இன்னுமொரு மூன்றாண்டுகள் கழித்து வெகேஷனில் ஊருக்கு போயிருந்த போது ஆங்காங்கே சிதறிப்போயிருந்த நண்பர்களை வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்து சந்தித்த ஒரு மாலைப்பொழுதில் பேச்சுவாக்கில் டேவிட் கேட்டான்.

"ரயில்வே ஸ்டேஷன்ல நாம பேசினமே ஞாபகம் இருக்கா.. இப்ப நினைச்சா தமாஷா இருக்கு இல்ல"

"இல்ல..."

"இன்னுமா ஞாபகம் வச்சிருக்க"

"ஒரு ஓரமா.. ஆமா இப்ப அவள பத்தின டீடய்ல்ஸ் யார்ட்ட கிடைக்கும். அவ பழைய நம்பர்க்கு ஃபோன் பண்ணா உபயோகத்தில் இல்லைன்னு வருது"

"நம்ம மலையாளத்தான்கிட்ட இருக்கும். அவன் இப்ப பெங்களூர்ல இண்டியன் எக்ஸ்ப்ரஸ்ல இருக்கான்"

*

"டேய்.. நாந்தாண்டா"

"சொல்லு.. எப்ப வந்த"

"அதெல்லாம் நேரில பேசிக்கலாம். நீ அடுத்த ஃப்ளைட்ட புடிச்சி மெட்ராஸ் வா"

பத்தரை மணிக்கு கால்டாக்ஸியில் மலையாளத்தான் வந்து இறங்கிய போதே பாதி பேர் மட்டையாகியிருந்தனர். அப்புறம் முதல் விமான பயணத்தின் பக்கத்து இருக்கை ஃபிகரிடம் நடந்த கடலை பற்றியெல்லாம் விவரித்துவிட்டு மலையாளத்தான் மலையேறிய போது மணி மூன்றரை. டேவிட் கேட்டான்.

"டேய், அந்த இன்ஸ்டிட்யூட்ல வேலை செஞ்சுதே ஒரு பொண்ணு.. ஞாபகம் இருக்கா.. நீ அவங்க ஃபேமிலி கூட எல்லாம் நல்லா பழக்கம் இல்ல"

"நல்லான்னு இல்ல.. ஓரளவு. அவங்கப்பா அவங்க ஆபிஸ் மேட்டர் எல்லாம் நம்ம கடையிலதான் ப்ரிண்டிங்கு கொடுப்பாரு.. அந்த பொண்ணு மேல இவனுக்கு ஒரு கண்ணு இல்ல"

"அதெல்லாம் கிடக்கட்டும், அவங்க இப்ப எங்க"

"அவங்க அப்பாவுக்கு அப்பவே வேலூருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுச்சிடா.. அதுக்கப்புறம் அவ்வளவா கான்டாக்ட் இல்ல"

"வேலூர் நம்பர் உங்கிட்ட இருக்கா"

"பெங்களூர்ல இருக்கு.. திங்கக்கிழம ஊருக்கு போனவுடனே போன் பண்ணி சொல்றேன்"

செவ்வாய்க்கிழமை வேலூர் நம்பருக்கு போன் செய்தபோது "இல்லீங்களே... ஆறுமாசமா இந்த நம்பர் எங்களுதுதான்.. அப்படி யாரும் தெரியாதுங்களே" என்றார்கள்.

நான் இந்தியாவில் இருந்து திரும்பிய இரு மாதங்களில் அவளுக்கு கல்யாணம் ஆனது என்ற செய்தியை பிறகு மலையாளத்தான் இ-மெயில் செய்தான்.

**

ஊரிலிருந்து வந்திருந்த அம்மாவுடன் லாங் வீக்கெண்டுக்காக நயாகராவுக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அருவி என்றவுடன் பழைய அருவிப்பயண கதைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர..

"அப்ப ஒரு தடவ சித்தப்பா ஃபேமிலியோட வந்தப்போ, எத்தனை தடவ இந்த அருவிய பாக்குறது எனக்கு போரடிக்குதுன்னு, நான் ஒகேனக்கலுக்கு வரலைன்னு சொல்லி சித்தப்பா ஏகத்துக்கும் அப்ஸெட் ஆயிடுச்சே.. அன்னிக்கி நான் வராததுக்கு காரணம் வேற...போக வேண்டாம்னு எல்லாம் அவ சொல்லல.. போகணுமான்னு கேட்டா, நான் தான் வரலன்னுட்டேன்"

"என்னங்க அம்மாவுக்கு முன்னாடியே இதெல்லாம் சொல்றீங்க"

"ஆமா.. ஏழு வருசம் ஆயிடுச்சி.. இனி என்ன.. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. அதுவுமில்லாம அம்மாவுக்கும் அப்பவே அரசல் புரசலா தெரியும் ஏம்மா?"

"அரசல் புரசலா என்ன.. நல்லாவே தெரியும்... நீ கோயமுத்தூர் வேலைய விட்டுட்டு வந்தியே அதுக்கு ஒரு ரெண்டு நாள் முந்தி மிஷினுக்கு போயிட்டு திரும்பி வரும்போது இண்ஸ்டிட்யூட்ல அந்த பொண்ண பார்த்தேன். என்னன்னு இப்ப ஞாபகம் இல்ல, ஆனா அன்னிக்கி அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் பேசிட்டுதான் வந்தேன்..."




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

நாயின் கானம்


போன வார நடுநிசியில்
வயதான நாயொன்று
வசதியான இடத்திலிருந்து
கானமிசைக்க தொடங்கியது

நேற்று முளைத்த நாய்களெல்லாம்
வயதானதனை மதிப்பதில்லை
என வருத்தத்தோடுவொரு வகுளாபரணம்

தம்மினத்தின் குணம் காக்கும்
தனதிருப்பின் முக்கியத்தை
நாயுலகம் உணருவதில்லையென
உயிர்நிலையிலிருந்துவொரு முகாரி

உயிர்வாழ இரை தேடும்
இன்றியமையா இடைவெளியிலும்
இ(ம்)சையை பாட நேர்ந்த.தன் அவலத்தை
எண்ணிவொரு ஏமாவதி

எத்தனை வித கானங்கள் அதில்
எத்தனையெத்தனை விசயங்கள்
உணரா மர உலகை தனக்குள்ளே
நொந்துவொரு நடபைரவி

*

அவசரமாய் ஓடிவந்து
அதிவிரைவு பேருந்துக்கு
காத்திருந்த இடைவெளியில்
ஆரம்பித்தான் காலனிவாசி
"வாரமா அந்த நாயோட
ஊளை தாங்க முடியலில்ல?"




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

குடும்ப சண்டையும் பொதுமக்களும்




கொறிப்பு :: மேற்கண்ட படத்தொகுப்புக்கும் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், மாறன்ஸ், கருத்து "கனி"ப்பு, வாரிசு அரசியல், மதுரை வன்முரை ஆகிய எந்த *க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மறைமுகமாகவோ நேரடியாகவோ எதாவது நினைவுக்கு வந்து தொலைந்தால் சிபிஐ உட்பட எவரும் பொறுப்பல்ல.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா


I've been prime minister of this country for just over 10 years ... I think that's long enough for me, but more especially, for the country. - Tony Blair.

அடப்பாவி, நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

நீங்க என்ன எப்ப வீட்டுக்கு அனுப்பிச்சாலும் சந்தோசமா போறேன். உயிரில்லாத மொழிக்கு சேவை செய்வதில் மிச்ச காலத்த கழிச்சிக்கிறேன்னு அறிக்கை மேல அறிக்கையா, வெறும் அறிவிப்ப மட்டும் விட்டுட்டு கடேசி வரைக்கும் பதவிய கெட்டியா புடிச்சி பொளப்பு ஓட்ட தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

நார்த் இங்கிலாந்து ஒரு பையனுக்கு, சவுத் இங்கிலாந்து இன்னொரு பையனுக்கு, அயர்லாந்து அத்தை பசங்களுக்கு, மான்செஸ்டர் மகளுக்குன்னு குத்தகை போட்டு கொடுத்திட்டு அவனவன் பதவி வெறியில அடிச்சிகிட்டு அதுல அப்பாவிங்கள போட்டு தள்றத பாத்து அழுதுகிட்டே அரசாங்க பணத்த அள்ளித்தெளிச்சி அரசியல் பண்ண தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

எது எக்கேடு கெட்ட எனக்கென்ன, எனக்கு விழா எடுங்கன்னு முப்பதாவது பிறந்த நாளு, ஐம்பதாவது கல்யாண நாளுன்னு எதுனா விழா எடுத்து அதுக்கு காலிவுட்டு கோலிவுட்டு நடிகைங்கள மார்பு கச்சை இடுப்பு கச்சையோட மட்டும் ஆட விட்டுட்டு ஆறு மணிநேரம் ஆனாலும் அத தான் மட்டும் ஒக்காந்து ரசிக்கணுமின்னு நினைக்காம எலிக்கறி சாப்பிடுற பிச்சைக்கார வெத்து பசங்களோட பசியாத்த அத கஷ்டப்பட்டு மருமகனோட டிவியில இலவசமா ஒளிபரப்பி எண்டர்டெயின் பண்ணத்தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...

பொறந்ததுல இருந்து அரசியல்வாதியா மட்டுமே இருந்துட்டேன். வேற ஒண்ணும் தெரியாது. மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச காலத்தையும் பதவி நாக்காலியில நிம்மதியா கழிச்சிட்டு போலாம்னு பாத்தா அதுக்கு விடாம வம்பு பண்ற தகுதி இல்லாதவங்களோட எல்லாம் அரசியல் பண்ண வேண்டியது இருக்கேன்னு பார்லிமெண்டுல முதலைக்கண்ணீர் வடிச்சிட்டு அதுக்காக எல்லாரும் உச்சு கொட்டுறத பாத்து சந்தோசமா பொழப்பு ஓட்டாம நீயெல்லாம் என்னடா அரசியல்வாதி...

*

ஹாய் டமிள் காமன் மக்கள்ஸ் :: நமீதா இடுப்பு அழகா இல்ல த்ரிஷா இடுப்பு அழகான்னு மட்டுமே கருத்து கணிப்பு போடாம வாரிசுங்க சம்பந்தப்பட்டதா இருந்தா போட வேணாமின்னு தலைவரு எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேக்காம யாரோ என்னமோ கருத்து கணிப்பு போட்டு என்னமோ ப்ரச்னையாமே. எழவு மூணு சாவுதான விழுந்திருக்கு. செத்தவன் எல்லாம் என்ன தமிழக தலையெழுத்தையே மாத்துற அளவு அரசியல்வாதியா.. அதான் அவனுங்க அப்பன் ஆத்தா ஆயுசுக்கும் பாக்காத அளவு ரெண்டு லச்ச ரூவாய மனுநீதி சோழன் தந்திட்டாரே,வாங்கிகிட்டு பேசாம போக வேண்டியதுதான.. அதுவும் இல்லாம மனுநீதி சோழரு சிபிஐ விசாரணைக்கும் லெட்டரு போட்டுட்டாரு. சிபிஐ விசாரணை செஞ்சி எப்படியும் பதினஞ்சி இருவது வருசத்துல என்ன ஏதுன்னு சொல்லலையின்னா மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சிய கவுத்திடுவாரு.. அப்புறம் என்ன.. பொத்திகிட்டு போவீங்களா. அத வுட்டுட்டு இதயெல்லாம் ஒரு ப்ரச்னை பண்ணிகிட்டு.. வேற எதுனா உருப்படியான விசயம் இருந்தா பாருங்கப்பா... எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு... இங்கன லாஸ் ஏஞ்சலீஸ் ஜூவுல கடல் ஆமை ஒண்ணு ஆயிரம் வருசமா மூச்சு வுட்டுகிட்டு இருக்காம். அதுக்கு ஏன் இன்னும் நிர்வாகம் விழா கொண்டாடாம இருக்குன்னு விசாரிக்க போகோணும்.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

*னவீணத்தூவ பதிவு எழுதுவது எப்படி


இதென்ன இப்படி ஒரு துவம்/இஸம் இருக்கிறதா? என்றெல்லாம் வியப்பு அடைந்தால் நீங்கள் இன்னும் பதிவுலக பச்சா என்று அர்த்தம். யு ஆர் ரீடைரக்டட்டு & ரீரௌட்ட்டு டு :: ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி?

வலையுலகுல இந்த துவமெல்லாம் சகஜமடா.. அப்படியே நமக்கு ஏத்த மாதிரி ஒரு துவம் இல்லையின்னா நாமளா அப்பிடியே ஒண்ணு கிரியேட் பண்றதுதான் அப்படீன்ற டைப்பா நீங்க, அப்டீன்னா கமான் ஜ்டார்ட் மீசிக்..

இடுகை போடுறது படுத்துக்கிட்டு போத்திக்கிறது மாதிரின்னா, இந்த மாரி துவம் பதிவுகள் சமைக்கிறது போத்திகிட்டு படுக்கிறது மாதிரி. பாக்க வித்தியாசம இருக்குமின்னாலும் சமாச்சார் என்னவோ ஒண்ணுதான்.. பாத்தா மலைப்பா இருந்தாலும் ஒரு தடவ சமைச்சா போதும், அப்புறம் "ஜஸ்ட் தோ மினிட்ஸ்" அளவு பழகிடும்.

*

அ) பிச்சி போடுதல். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது சப்பாத்தி சுடும் நேரத்தில் உங்கள் ரவுசு பொறுக்காமல் உங்களை அ(ம)டக்க ஒரு டெம்பரரி ரிலீப் காக்கா சப்பாத்தி உங்களிடம் தரப்படும். அந்த சப்பாத்தியை...

1. கொடுத்தவுடன் முழுங்கிவிட்டு ரீவியில் யம்மாடி ஆத்தாடி பாக்க போவேன்
2. நாய்க்கு கொடுத்துவிடுவேன்
3. அதை கண்ட மாதிரி பிச்சி போட்டுவிட்டு அதில் பொம்மை உருவங்கள் கண்டுபிடித்து பயர் இஞ்சின் மாதிரி ஒரு உருவம் தெரிந்தால் அதற்கு வேலை தருவதற்காக கார்ப்பெட்டில் மூச்சா போவேன்

ஆ) பிரிச்சி மேய்வது. . உம், பக்கார்டி என்ற வார்த்தையை பார்த்தால்...

1. ரம் ஞாபகம்
2. அப்படின்னா என்னா
3. பக்கா ஆருடி, பக்கு கார்டு, பக்கா காருடி, பக்க கரடி, பக்காரு டிங், பக்கா டிங்கரடிங்காலே என்றெல்லாம் எந்த ஒரு வார்த்தையும் ஒரே வார்த்தையாக தோன்றாமல் பல வார்த்தைகளாக பல்லிளித்து பரிமாணம் காண்பிக்கிறது.

இ) வார்த்தை தொடுத்தல். ங்கா என்று சொல்ல சொன்னால்...

1. வேற வேல இல்ல என்று தூங்க போவேன்
2. ங்கா என்று மட்டும் சொல்லிவிட்டு நாய்க்கு எத்தினி பல்லு என்று அது வாய நோண்டி எண்ணி பார்ப்பேன்
3. ங்கா, தங்கா, மங்கா, திங்கா, ஜும்பா, ஜும்பரிக்கி ஜுலூப்பா, ஜும்பாலகரி, ஜலபுலஜங்க்ஸ், ஜிங்கிரிஜிப்பிடி, ஜிலுஜிலுஜும்பா, ஜங்கரிஜம்பா என்று ரைமிங்காக வார்த்தைகள் பிடிப்பேன்.

ஈ) ரெட்டை கிளவி (கிழவி அல்ல) காதல். கந்த சஷ்டி கவசம் பாடக்கொடுத்தால்...

1. நாலி வரி பாடிவிட்டு முழுசா பாடுனதாக கத விட்டு அதுக்கு லஞ்சமா சாக்லேட் கேப்பேன்
2. இது ஆத்திக கடவுளுக்காக அகண்ட வெளியிலந்து வந்த பாப்பான் எளுதுனது. இங்கயே புழு பூச்சியில இருந்து பொறந்த நம்ம சாதி சனம் இத செய்யக்கூடாதுன்னு அத எரிச்சி பீடி பத்திக்குவேன்
3. எடுத்தவுடன் நேராக பாதி பாட்டுக்கு போய் ரரரர,ரிரிரிரிரி,ருருருருரு,நகநகநக,டிகுகுண, டகுடகு,கடகட,கட்டுக்கடகட,டிகுடிகு,டங்குடிங்கிகு, விந்து விந்து என்ற பாராவை மட்டும் 'சனியனே போதும் பாடுனது, நிறுத்தி தொலை' என்று யாராவது பெல்டால் அடிக்கும்வரை கத்தி பாடுவேன்

உ) தொடர்வண்டி வார்த்தைகள். சுவத்தில் பல்லி சப்தமிட்டால்...

1. அது மாதிரியே சப்தமிடுவேன்
2. பல்லி வாலை எப்படியாவது வெட்ட முடிகிறதா என்று பார்ப்பேன்
3. பல்லி சப்பு தட்டுது, பறவ எச்சி கொட்டுது, பாம்பு கிஸ்ஸு அடிக்கிது, காண்டா மிருகம் குமுறுது, கழுத உறுமுது, கண்டாங்கி சேல நழுவுது, காட்டன் மேல தழுவுது, காட்டுச்சுப்பிரமணி நாட்டுக்கு போனா, கழுதமேல ஏற்ற குமரன் வேட்டைக்கு போனான் என்று தொடர்ச்சியாக சம்பந்தமில்லாமல் முழ நீளத்துக்கு முழங்குவேன்

ஊ) வார்த்தை அலங்காரம். I gotta pee என்பதை...

1. மூச்சா போகணும்
2. டாய்லட்
3. முதுகு தண்டுவடம், மூளை ஸ்டெம், செரிபரல் கார்டெக்ஸ் ஆகியவற்றின் நரம்பு மண்டலம் தசைகளின் மூலம் கட்டுபடுத்தும் அளவு நூறு முதல் நூத்திஐம்பது மில்லி என்றான காரணத்தால் கொஞ்சம் அசவுகரியம் ஏற்பட்டு மூத்திரப்பை எனப்படும் ப்ளாடரிலிருந்து மூத்திரம் வெளியேறியது என்றுதான் சொல்லுவேன்.

மேற்கண்ட மேட்டர்களில் எல்லாவற்றிலும் எண் 3ஐ தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அளவை விட நவீனத்த்துவம் ஊறிக்கிடக்கிறது. சும்மா அப்படியே பீச்ச வேண்டியதுதான். மற்ற எண்காரர்களும் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சோனாகஞ்சியில் பாடி ஜோசியம் பாத்துவிட்டு வந்து அ முதல் ஊ வரை உள்ள குறிப்புகளை உபயோகித்து 'ஆழமான பதிவு' தயாரிக்கும்போது மீந்து போன சில பல நவீனத்துவ வார்த்தைகளையும் ஆங்காங்கே தூவி I gotta pee என்பதை எடுத்துக்கொண்டு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு சின்ன செய்முறை குறிப்பு கொறிக்கவும்.

" தன்னாலே தில்லாலே தண்டுவடம் நல்லால்லே. அம்மு கம்முனு ஆச்சி, எனக்கோ ஸ்டெம்மு ஸ்டன்னாச்சி.. கால்டெக்ஸு பாக்கத்துல கீது ஒரு பங்கு, நம்ம கார்ட்டேக்ஸுக்கோ ஊது சங்கு. எல்லாமும் சேந்துகிச்சி, நாமோ ஒரு சோத்து பச்சி மச்சி குச்சி கச்சி. தசைகளின் பின்ன ஏற்பட்ட கட்டுப்பாடு கடுப்பு கட்டுப்படு கட்டுக்கடங்காமல் கட்டு கட்டு கட்டுன்னு கடகடகடன்னு லொடலொடவா ஆயி கொஞ்ச போயி மிஞ்ச நாயி. ஊர்க்கோடி ஆல, பலா, வேப்ப, முருங்க, விலா, வேம்ப, ஆலிலக்கு, புல்லலுக்கு, புதினா, சிறுகீர, அறகீர, முழுகீர, பொன்னாங்கன்னி, கரிசலாங்கன்னி, ஜூப்புமுர, இஞ்சிமுரப்பா, ஆலோல மூங்கி காட்டுல காச்சுர சாராயத்த சூடா அடிக்கிம்போது போத தெரியிற நூறு நூத்து அம்பது மில்லி மாதிரி எனக்கும் பிளாட்டரு க்ளாட்டரு ஆகாம சும்மா சலசலன்னும் சல்லுன்னும் (மூத்திர) கொழாய் வழியா குறியால வெளியேத்தினேன்ம்பா "

(மூத்திரம் போன்ற வார்த்தைகள் சரளமாக எழுதவும். தயக்கம் வேண்டாம். உங்கள் ஜாதியை பொறுத்து 'வார்த்தையில் இல்லை நாகரீகம். கருத்தில் மட்டும்தான்' என்ற ஆதரவு குரல் விட, for a nominal price, 'ஏஜன்சி' மூலம் ஆள் ஏற்பாடு செய்து கொள்ளலாம்)

ஓரளவு க்ளோஸா வரீங்களா.. ஓகே. இதுமாதிரியே இருக்க வேண்டும் என்பதில்லை, ஓவ்வொருவர் எழுத்தும் தனித்தன்மை கொண்ட நவீனத்துவம்தான். இந்த பார்முலா படி இப்போ இப்பதிவின் தலைப்பை பாருங்கள்.

*நவீனத்துவ என்பதை ஒரு எதுகை மோனையோடு (கே)ன+வீணா+த்தூ+வ என்பதாக பார்க்கும் சித்தி அடைந்திருப்பீர்கள்..

இப்போது நீங்கள் உங்கள் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் - பதிவே சம்பந்தமில்லாததுதான், இதுல எங்க அதுக்கும் சம்பந்தமில்லாமன்னு எல்லாம் சலிச்சிக்க கூடாது - ஒரு ம்யூஜிக் போடணும். அட்லீஸ்ட் அதுவாவது உங்கட பதிவை கஷ்டப்பட்டு படிக்சி சன்னி கண்ட சனங்களுக்கு ஆறுதலா இருக்கும்.

http://www.musicindiaonline.com/p/x/0UX2koX1vd.As1NMvHdW/

இப்பிடி மூசிக் போடறதுல உள்ள இன்னொரு பிரயோசனம், இதுல டார்க்கெட்டு ஆடியன்ஸுக்கு எதாவது மெசேஜ் இருக்குமோந்து சாதா ரணம், டார் கெட்டு ரெண்டுமே பாட்ட முழுசா கேக்கும். அததுக்கு ஏத்தா மாதிரி பாட்ட பதிவோட லிங்கு பன்னி கெரோன்னு போகும்.

மண்ட சாயுற நேரம் கொஞ்ச நஞ்ச விசரயும் விட்டு வக்க கூடாது. மொத்தமா போட்டு தள்ள இன்னொரு விசயமும் இருக்கு. அத போட்டாத்தான் பதிவு முழுசு பெறும். அது படம்.

உங்க கம்பியூட்டரில் உள்ல குப்ப கூடயில் (அதாம் ரீசைக்கிளு பின்னு) எதாவது படம் இருக்காண்டு பாக்கோணும். அத ரீ ஸ்டோரு பண்ணிக்கணும். அந்த படத்த மைக்ரோசாப்டு பெயிண்டு பிரஸ்ஷுல ஓப்பன் பண்ணி அதுல ஒரு பாகத்த மட்டும் வெட்டி எடுக்கணும். அதாவது உங்க படம் 1280 x 1024 என்றால் ரேண்டமா அந்த படத்துல ஒரு பகுதிய 128 x 102 அளவுல வெட்டி புது படமா உருவாக்கிக்கோணும். பின் நவீனத்துக்கு ஏத்தா மாரி *னி, *த்து சம்பந்தப்பட்ட படங்களா இருந்தா ரொம்ப நல்லது. (இந்த வார்த்தைகளை பார்த்தால் உங்களுக்கு உடனே கூனி, கூத்து என்பதாக தோன்றினால் நீங்கள் இன்னும் முன்நவீனத்திலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பின்நவீனத்துவவாதியா இருந்தால் உங்களுக்கு அந்த வார்த்தைகள் சோ சோ சோ சோனி, நா நா நா நாத்து என்பதாக் தோன்றவேண்டும்)

ஹோம் வொர்க் :: சென்ற பதிவில் சொன்ன 'தி பார்க்' கேட்டுக்கு வெளியே குந்திகினு இருந்த ஒரு ஆளிடம் நடந்த இந்த உரையாடலை, கேன வீண த்தூ வ மார்க்க ச்சீய ரண பதிவாக மாற்றவும்.

ஏம்பா.. வருசம் முச்சூட இப்பிடி அழுக்காவே திரியிறியே. பாரு.. தலய தண்ணியே காணாம சிக்கு புடிச்சி கட்டி தட்டி போயி குருவி கூடு கட்டி வச்சிருக்கு. இதுக்கு மேல ஓட்டையே வுழாதுங்கிற அளவுல கிழிஞ்சி போன சட்டையும் முழுசு அரையாகி நூல் நூலா தொங்கற டப்பா டவுசரும் போட்ருக்க. நகம் ஏகத்துக்கும் வளந்து அதுக்கு கீழ அழுக்கு படிஞ்சி கிடக்கு. நாத்தம் வர கிழிஞ்ச சாக்க காவக்கார போர்வைன்னு போத்திகிட்டு துண்டு சுருட்ட வாயில வச்சிகிட்டே திரியிற. எவ்வளவோ பேர் நல்ல துணிமணி தராங்களே, ஒனக்கு ஏண்டாப்பா இப்பிடியே இருக்கணும்னு தோணுதுன்னு ஒரு வார்த்தை கேட்டா.... போடா வெண்ண, போன தீவாளிக்கி கோடி வூட்டு (லாஸ்) ஜிஞ்ஜிலிக்கி கொடுத்த கோமேதகம் பிராண்டு ஜட்டி போட்ருந்தனே பாக்கலியா.. என்ன பத்தி இந்த மாரி இன்னொருக்கா பேசுன ஒனக்கும் சாக்ரமண்டோ சங்கிலி பருப்பு கெதிதான்னு வுட்டான் ஒரு சாபம்.

*

வெயிட். பதிவு இவ்ளோதான்னாலும் அது முழுமை பெற இன்னும் ஒரு விஷயம் இருக்கு. அது நவீனத்துவத்தை அடுத்த நிலைக்கு, அதாவது இடுகையின் பின்னூட்டிலும் கொண்டு செல்லுதல்.

அதாவது உங்கள் இடுகையின் முதல் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் ::

பின் ஊட்டு ஒன்று, அதில கேள்வி ரெண்டு ::

அ) அண்ணை, இந்த பதிவுல நீங்க சொல்லாதது எதுவும் உண்டா?
ஆ) அண்ணை, இந்த பதிவுல அப்பால கொஞ்சம் மப்பால நீங்க சொல்ல நனைக்கிறது எதுனா உண்டா?

- தன் வாயால தனக்கு தானே வெச்ச நெருப்பால வெந்த றக்கயால பறக்க முடியாம விந்தி விந்தி நடக்குற பாம்புடம்பும் யாளிமுகமும் கொண்ட நாத விந்து பேரு கொண்ட ஒரு ஜந்து (சுருக்கமா FD,Handicapped)

*

அதாவது உங்கள் பதிவின் இரண்டாம் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் ::

ஒண்ணுமில்ல FDHங்கிற பேருல வந்த பின்னூட்டம் எனக்கு நானே போட்டுகிட்டதுதான். அதாவது திராவிட கச்சி தலைவரு கரு.நா.நிதி நெதமும் யாருக்குனா மெசேஜ் கொடுக்கணுமின்னு ஆசப்பட்டா இப்படித்தான் கூவாம்பேட்ட குப்புசாமி கேக்குறதா ஒரு கேள்விய எளுதி, உடன்கட்டை ஏறுற ஈன பிழைப்பேன்னு ஒரு பதிலும் எளுதி ஒட்டுவாறு. அது மாதிரியே, நானும் மெசேஜ் கொடுக்கலாமின்னு கேள்வி கேட்டுகினேன். கேட்டவரு பேரு பேன்ஸி பனியனாட்டமா இருக்கா.. இப்ப பதில்.

பறக்கவியால ஜந்து, இங்க வந்து குந்து, போகப்போற நொந்து. இரு மொதல்ல ஒரு கவித சொல்லிக்கிறேன்.நான் கவிஞர் குடுமிபேட்ட குஞ்ஞாயிங்கிற நாமகிரகணத்துல தேசவிசாரியா அலைஞ்ச ப்போ எளுதுனது.. இப்ப உட்டா அப்புறம் எப்பத்தான் இத நான் சொல் உரது. கேளு,

வாலாட்டி திரிகிறேன் நான்,
வள்ளென்று குலைக்கிறாய் நீ,
நம்மிருவரில் யாரடி நாய்?

- சிர்கா 37/13/1469

(கலைக்கிற நாய் வெறிக்காது மாதிரி புது கிழமொழி யாராவது எளுதுனா, அவங்களுக்கு அண்டாகாகசம் ஒரு பானை எலவச திட்டத்துல திரட்டி தரப்படும்)

அ) அப்பால என்னா கேட்ட, சொல்லாதது எதுவும் உண்டா... இதுல எதாவது சொல்லியிருக்கேன்னு நினைச்சியே அதுக்கே ஒனக்கு மாலும் ஜாலும் போடலாம்னாலும் சோக்கா கேட்டியே ஒரு கேள்வியேன்னு பதில் சொல்றேன் கேளு. இது ஒரு புவிக்கோட்டு கேட்டு பதிவு. அதாவது வல்லூறுலியோ கடலாமையிலயோ பிரயாணிச்சி ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி தூர தேசத்துல இருக்குற சிங்கத்தலை ஊருக்கு போனா, அங்க இலக்கிய விசாரத்துல என்ன விட மேன்மை தங்கிய அண்ணை ஒருத்தரு இருப்பாரு. அவரு எந்த மனவிசாரமும், தன சகாப்தமும், சகல சஞ்சாரங்களும் இல்லாத அட்வைஸு எளுத்தையே குப்பன்னுட்டாரு. அப்ப ரத்த கொதிப்பு தரும் இத்த என்னன்ன சொல்வாரு. அதனால அவருக்கு ஒரு முன்-வருத்தத்த பின்னாள்ல இல்லாம இந்நாள்லயே பேஸ்ட் அண்ட் போஸ்ட் பண்ணிட்டு எங்ட குப்பையில யாருக்க்காவது கோமேதகம் இல்லையின்னாலும் கோலிகுண்டாவது கெடக்காமலா போகுமின்னு மனச தேத்திங்கோன்னு மட்டும் சொல்லிக்கிறேன்

ஆ) அம்பு உட்ட ஒடம்பொறப்பே, நீ கேக்கிறியோ கேக்கலயோ சொல்லிக்கிரேன் கேளு. இது இதோட கடேசி. எது இதோட கடேசின்னு கேக்காத. இது இதோட கடேசிதான்.. அடுத்த தடவ இத நான் திருப்பியும் சொல்வேன். அப்போ போன தடவ கடேசின்னு சொன்னியே வாத்யாரேன்னு கேக்காத. அது அப்போதைய கடேசி. இது இப்போதைய கடேசி. கடிச்சி விட்ட காயமும், கிளிச்சி விட்ட கிங்கரரும் சும்மா இருக்குமோ சண்டமாருதமே என் ஞானத்தங்கமே. அதனால எத்தன தடவ சொன்னாலும், அந்த வார்த்த அப்போதக்கி மட்டும்தான் கடேசிய தவிர அது எப்போதைக்கும் கடேசி இல்லன்னு புரிஞ்சிக்க. அப்புறம் எம்க்கிட்ட இருக்கிற பெருங்காய டப்பாவுக்கு வயசு ரொம்ப ஆச்சி. அதுனால 83 வரிசம் மின்னாடி வாசமா இருந்ததயே கெலரி கெளரி இப்பவும் காலி டப்பாவுல வாசன இருக்கான்னு கேட்டு ரணகள ப் படுத்தாத..அப்புறம் நான் நேத்தி பொறந்த பாப்பாவுக்கும் அடுத்த வருசம் பொறக்கலாமான்னு ஆச்சரியமா நீந்திகிட்ட இருக்கிற வாலுள்ள வெள்ள ஆசாமிகிட்டயும் என்ன பத்தி சொல்றேன் கேளுன்னு இன்னும் கொஞ்சம் டேமேஜ் ஆக்கிக்குவேன். நாள்பட சட்டி சுட்டதடா கை விட்டதடான்னுதான் ஆகுதே தவிர பிரயோசனம் எதுவும் இருக்கிறதா காணும். ஆகவே இதே கடஏசி. நெஞ்சம் கொஞ்சமாக http://www.musicindiaonline.com/p/x/gqQgCnsJSS.As1NMvHdW/ கேட்டு சுகம் பெறவும்.

*

தட்ஸ் ஆல். உங்களுக்கு *னவீணாத்தூவ பதிவு உழுவது கைகூட அந்த கண்டி கதிர்காமன் அருள் புரிவானாக.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி கொலை ?


பொதுவாகவே தமிழகம் முழுவதும் E&E என்றால் கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் இருக்கும் என்பதாக நாங்கள் படிக்கும் போது இண்டர்-யுனிவர்சிடி கேம்ஸ் போகும்போது பகிர்ந்து அறிந்ததுதான் என்றாலும் அண்ணாமலையின் இந்த பிரிவுகளில் - எல்லோரும் இல்லை - கால்வாசிக்கும் மேற்பட்ட வாத்திகள் சைக்கோக்களாக இருப்பார்கள்... அறையின் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு மாணவர்கள் அனைவரும் வியர்வையில் குளிக்க குளிக்க ஒரு லூஸு பாடம் நடத்தும். என்னது Oscilloscopeல் Volt/Div என்று ஒரு Knob இருக்கிறதா... எங்க காட்டு என்று Ph.D முடித்த லாப் இன்சார்ஜ் ப்ரபொசர் ஞானி இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை நடந்து "ஆமா இருக்கு" என்று வழிந்து விட்டு போனாலும் லேபுக்கு வரும்போது முழுக்கை சட்டையில் இப்படி இருக்க வேண்டும், பேண்ட் அப்படி இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட ரூல்ஸை போட்டு தாளிக்கும்... மத்த டிபார்மெண்ட் மக்கள்ஸ் எல்லாம் ஜாலியாக இருக்க இந்த துறை மட்டும் 34 பக்கத்துக்கு அப்ஜெக்டிவ், ப்ரொசீஜர் என்று ஈயடிச்சான் காப்பியாக ரிகார்டை - இங்குதான் ஜூனியர்களை வாட்டுவது ஆரம்பமாகும் இடம் - எழுதி கழுத்தறுபடும். ஆணும் பெண்ணும் பேசினால் இந்த வாத்திகளுக்கு பேதி போகும். எப்பொழுது சான்ஸ் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆண்களாக இருந்தால் "ஏம்பா ஆனா அந்த ஐஸ்க்ரீம் கடையில பிகர் பார்க்க மட்டும் நல்லா தெரியுது, மத்ததுக்கெல்லாம்... " என்றும் பெண்களாக இருந்தால் "பேண்ட் சர்ட்ன்னு ஸ்டைலா போட்டுகிட்டு சினிமாவுக்கு கூட்டமா போய் கூத்தடிக்க தெரியிது ஆனா... "என்று குத்தி காண்பிப்பது. இண்டர்னல் மார்க் இருக்கிறது என்பதால் சம்பந்தா சம்பதமில்லாமல் பயங்கரமாக ஓட்டுவது என்பதெல்லாம் சகஜமாக நடக்கும் இடம் மின்/னணுவியல் துறை.

பிட் அடிக்கும்போது பிடிபட்டதால் மாணவி தற்கொலை என்று செய்தியை படித்தால் எழும் பொது சிந்தனை, இதென்ன இவ்வளவோ கோழையாக இருக்கிறார்கள் என்பதாக இருக்கும். ஆனால் அண்ணாமலையில் மாணவி தற்கொலை என்று வந்த செய்தியை படித்ததும், இந்த பெண் மட்டும் E&E அல்லது E&I பிரிவில் படிப்பதாக இருந்தால் இவளது தற்கொலைக்கு முக்கால் காரணம் விரிவுரையாளராகத்தான் இருப்பான் என்பதே எனது முதல் சிந்தனையாக இருந்தது. அவர்கள் மாணவர்களை நடத்தும் விதம் அப்படி... மனதளவில் ரொம்பவே பாதிப்பார்கள்.

அமெரிக்காவில் எல்லாம் ஒரு மாணவனோ மாணவியோ இது போன்ற அகால மரணம் அடைந்தால் அதனால் மனதளவில் பாதிக்கப்படும் மற்ற மாணவர்களுக்கு - மாணவர்களின் வயது காரணமாக - ஆறுதல் சொல்வதெற்கென்றே counsellors உண்டு. ஆகவே இந்த தற்கொலை செய்தியை கண்டவுடன் அண்ணாமலையில் தற்பொழுது படிக்கும் எனக்கு தெரிந்த அந்த மாணவன் நினைவு வந்தது. ஒருவேளை அவனுக்கு அந்த பெண்ணை தெரிந்திருந்தால் அவனுக்கு ஆறுதல் சொல்லலாம் என்றும் மேற்விபரங்களுக்கும் அவனை தொடர்பு கொண்டேன். பார்த்தால் அவன் அந்த மாணவியின் வகுப்பு தோழன்.

சேட்னா (தற்)கொலை பற்றி அவன் சொன்னது ::

சேட்னா நன்றாக படிக்கக்கூடியவள். அவளது GPA > 9.0/10.0... Group Discussion, Seminar போன்றவற்றில் நன்றாக பிரகாசிக்கக்கூடியவள். எல்லாரிடமும் நன்றாக பழக்ககூடிய சுபாவம். தோற்றத்திலும் நல்ல அழகு. சம்பந்தப்பட்ட விரிவுரையாளன் மணிக்குமார் இளைஞன்.. கடந்த ஒரு வருடமாகவே இந்த பெண்ணுக்கு செல்போன் மூலமாகவும் ஏனைய வழிகளிலும் டார்ச்சர் தந்து வந்துள்ளான். இவனுக்கு இன்னொரு விரிவுரையாளனும் கூட்டாளி. இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று மாடல் தேர்வில் பங்கேற்ற மாணவி சேட்னாவிடம் சென்று அவள் பிட் வைத்திருப்பதாக தான் சந்தேகப்படுவதாக கூறியிருக்கிறான் மணிக்குமார்.. கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இது செமஸ்டர் தேர்வு கூட இல்லை. வெறும் மாடல் தேர்வுதான். இந்த மாடல் தேர்வில் மார்க் வாங்குவதால் கிடைக்கும் அதிக பட்ச பயன் இண்டர்னல் மார்க்கின் ஐந்தில் அல்லது மூன்றில் ஒரு பங்கில் மட்டுமே உபயோகப்படும்.

சேட்னா அவன் குற்றச்சாட்டை மறுத்து தனது துணிகளை உதறி காண்பித்திருக்கிறார். மேலும் சந்தேகம் இருந்தால் பெண் விரிவுரையாளர் எவராவது வந்து தன்னை சோதித்துக்கொள்ளலாம் என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சேட்னாவின் உடையில் கையை விட்டு சோதனை செய்திருக்கிறான் மணிக்குமார். பிட் என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.. உடன் இதையும் ஏற்கனவே அவனால் தான் பாதிக்கப்பட்டதையும் துறைத்தலைவரிடம் சென்று புகாராக சொல்லியிருக்கிறார் சேட்னா. ஆனால் அவரோ விரிவுரையாளனையும் அழைத்து இது நீங்கள் இரண்டு பேரும் தீர்த்துக்கொள்ள வேண்டிய ப்ரச்னை என்று சொல்லியிருக்கிறார். வெளியில் வந்த உடனேயே "நீ எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்து கொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறான் மணிக்குமார். தன் உடைக்குள் கைவிட்டு சோதனை நிகழ்ந்த அதிர்ச்சியிலும் அதனை துறைத்தலைவர் கூட கண்டுகொள்ளவில்லை என்ற அதிர்ச்சியிலும் சேட்னா தற்கொலை செய்து கொண்டாள்.

இந்த நிலையில் சேட்னா இறந்த பிற்பாடு கூட அந்த விரிவுரையாளர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது போக அந்த பெண்ணின் நடத்தை மீதே களங்கம் கற்பிக்க முயற்சி நட்ந்திருக்கிறது. சேட்னா நடத்தை ஒரு மாதிரி என்று நிர்வாகமும் போலீஸும் எழுதி கொடுக்க சொல்லி ஹாஸ்டல் மாணவிகளை வற்புருத்தியிருக்கின்றனர். விசாரணையின் போது 'அவ அடிக்கடி பாண்டி போறவளாமே' என்பது மாணவிகளிடம் விசாரணை என்ற பெயரில் அண்ணாமலை நகர் போலீஸ் விடுத்த ஸ்டேட்மெண்டில் ஒன்று. அவள் விபச்சாரி என்ற ரீதியிலேயே "விசாரணை" நடத்தப்பட அது SMS மூலமாக மாணவர்களை சென்றடைய மாணவர்கள் கொதித்திருக்கின்றனர்.. அதன் பிறகே ஸ்ட்ரைக்கில் இறங்கியிருக்கின்றனர். போலீஸ் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரி நிர்வாகம் அங்கு வர அதுவே கல்லெறிதல் முதற்கொண்டு கலவரமாக மாறியிருக்கிறது. உடனே பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற மூடல் நடத்தியாகிவிட்டது..

"அவ பாவம் க்ளாஸ் டாப்பர்ணே, அவள போயி பிட்டு வச்சிருக்கான்னு பொய் சொல்லி சாகடிச்சிட்டான் அந்த லெக்சரரு.. ஏண்ணே அந்தாள ஒரு சஸ்பெண்டு கூட பண்ணாம வச்சிருக்காங்க"

"சஸ்பெண்டு பண்ணா காலேஜ் பேரு கெட்டு போயிருமின்னு பண்ணியிருப்பாங்கப்பா"

"எண்ணனே இது, சஸ்பெண்ட் பண்ணா, தப்பு பண்ணவங்கள கண்டிக்கிறாங்கன்னு காலேஜ் மேல நல்ல பேருதான வரும். எப்படி அது கெட்ட பேரா ஆகும்"

"அது இல்லப்பா, சஸ்பெண்ட் பண்ணா, தப்ப ஒத்துகிட்ட மாதிரி இருக்கும். அப்படின்னா அங்க அப்படித்தான் நடக்குதுன்னு செய்தியாயிரும். அடுத்த வருசம் புள்ளங்கள அங்க சேக்க பேரண்ட்ஸ் பயப்படுவாங்க. வருமானம் வராதுல்ல"

"அதுக்காக எப்படின்னே இப்படி பொய் சொல்ல முடியுது இவங்களால... அது காப்பியடிச்சதாலதான் தூக்கு மாட்டிகிச்சின்னு எல்லா பேப்பர்லயும் வருது"

"கொஞ்சம் எங்கிட்ட போன கொடு... யேய். நீ கொஞ்சம் புத்திமதி சொல்லப்பா.. நேத்தியிருந்து நியூசையே பாத்துகிட்டு இருக்கான். சோறு தண்ணி சரியா சாப்பிட மாட்றான்"

"ஆமா.. கூடவே பேசி பழகுன பொண்ணு பொக்குனு செத்து போயிட்டா... எப்படி சாதாரணமா இருக்கிறது"

"நீ ரொம்ப மனச அலபாய விடாம இருடா... தப்பு செஞ்சவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கெடைக்கும்.. நீ கொஞ்சம் அமைதியா இரு" - இதை சொல்லும்போது எனக்கே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லை...

"ஆமாண்ணே, இந்த அண்ணாமலை நகர் போலீஸ் மாதிரி இல்லாம ஏ.எஸ்.பி எங்ககிட்ட நடந்த உண்மைய கேட்டு வாங்கி எழுதிகிட்டு போயிருக்கார். அதுதான் கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு... அவங்க அப்பாம்மாவுக்கு பர்னாலா கிட்ட இன்புளுயன்ஸ் இருக்கிறதா பேசிக்கிறாங்க.. பாவம் அவங்க.. அவ்ளோ தூரம் எடுத்து போக ரொம்ப செலவாகும்னு இங்கயே பொதச்சிட்டாங்க... எண்ணன்னே இது வாழ்க்கை"

ஒரு 20 வயது சிறுவன் என்ன வாழ்க்கை இது என்று கேட்டால் என்ன சொல்வது?


தினமலர் செய்தி
தினமணி செய்தி
தி ஹிந்து செய்தி


š இப்பதிவை மின்னஞ்சலிட


 

பஸ் எரிப்பு வழக்கின் தீர்ப்பு - ஒரு வழியாக


தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு : 3 குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை

சேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு தூக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

- தினமலர் கடைசி செய்திகள்

இந்த தண்டனை நிறைவேற்றப்படுவதை தடுக்க ஏகப்பட்ட முட்டுக்கட்டைகளும் சட்ட போராட்டங்களும் இனி நிகழும். எனினும் மரண தண்டனை நிறைவேற்றப்படவேண்டும் என்று பல காரணங்களுக்காக மனதார விரும்புகிறேன்.

தொடர்புடைய முந்தைய பதிவுகள் ::

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு

ஹேமலதா, கோகிலவாணி, காயத்ரி


****

பிப் 16, 2007 - பத்திரிக்கை செய்தி குறிப்புகள்

முதலில் கண்ணில் பட்ட தினமலர் செய்தி ::

சேலம் : தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளிகளான ரவீந்திரன், முனியப்பன், நெடுஞ்செழியனுக்கு துõக்கு தண்டனை வழங்கி சேலம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்கள் அனைவரும் அ.தி.மு.க., கட்சியைச் சேர்ந்தவர்கள். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவர் விடுதலை செய்யப்பட்டனர். மூன்று பேர் மீது பஸ்சை எரித்தது, மூன்று மாணவிகளை கொலை செய்தது மற்றும் 46 பேரை கொலை செய்ய முயற்சி செய்தது, பொது சொத்துகளுக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன என தீர்ப்பு கூறிய சேலம் முதலாவது கூடுதல் அமர்வு கோர்ட் நீதிபதி கிருஷ்ணராஜா, இவர்களின் தண்டனை விவரம் இன்று அறிவிக்கப்படும் என்றார்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு இறுதி தீர்ப்பு நேற்று வழங்கப்படும் என சேலம் முதன்மை கோர்ட் நீதிபதி தெரிவித்திருந்தார். நாடே ஆவலுடன் எதிர்பார்க்கும் தீர்ப்பு என்பதால், சேலம் நகரம் நேற்று பரபரப்புக்குள்ளாகி இருந்தது. நேற்று முன்தினம் மாலை முதலே அஸ்தம்பட்டி பகுதியிலும், கோர்ட் உள்ளேயும், வெளியேயும் 700க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நேற்று கோர்ட்டில் கடும் கெடுபிடி நிலவியது. மெட்டல் டிடெக்டர் வைத்து சோதனை செய்த பின்னரே ஒவ்வொருவரும் அனுமதிக்கப்பட்டனர். கோர்ட் பணியாளர்கள், வக்கீல்கள் மற்றும் வழக்கு தொடர்புடையவர்கள் மட்டுமே கோர்ட்டுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 30 பேரில் பழனிசாமி (ஏ15), மாதேஸ் (ஏ27) ஆகியோர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவர்களை விடுதலை செய்வதாக நீதிபதி தெரிவித்தார். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட ஒவ்வொருவரையும் அழைத்த நீதிபதி கிருஷ்ணராஜா, ""உங்கள் மீதான குற்றம் நிரூபணமாகி உள்ளது. தண்டனை அளிக்க போகிறோம். ஏதாவது சொல்வதானால் சொல்லலாம்,'' என்றார். 28 பேரும் நீதிபதி முன் ஆஜராகி தண்டனையை குறைக்க வேண்டும் என்றும், கருணை காட்ட வேண்டும் என்றும், தங்களுக்கும் இந்த வழக்குக்கும் சம்மதமே இல்லை என்றும் கருத்து கூறினர்.

இதற்கு பதில் அளித்த நீதிபதி கிருஷ்ணராஜா, ""தண்டனை அளிப்பது என்பது முடிவு செய்யப்பட்டு விட்டது. அதை மாற்ற முடியாது,'' என்றார். பின்னர் நீதிபதி கிருஷ்ணராஜா தனது தீர்ப்பில் கூறியதாவது: குற்றம்சாட்டப்பட்டவர்களில் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவர் மீது பஸ்சை எரித்தது, பஸ்சுக்கு தீ வைத்து, மூன்று மாணவிகளை கொலை செய்தது, பஸ்சுக்குள் இருந்த 46 பேரை கொலை செய்ய முயற்சித்தது மற்றும் பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது ஆகிய குற்றங்கள் நிரூபணமாகி உள்ளன. இவர்களுக்கு கொலை செய்தமைக்கு மூன்று முறையும், கொலை முயற்சிக்கு 46 முறையும் தண்டனை வழங்கப்படும். மற்ற 25 பேர் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தது, கலகம் ஏற்படுத்தியது
கொலை குற்றம் நிரூபணமான குற்றவாளிகள் நெடு என்ற நெடுஞ்செழியன், மாது என்ற ரவீந்திரன், முனியப்பன் ஆகிய மூவருக்கும் துõக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற 25 பேருக்கும் மற்ற 25 பேருக்கும் 7 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

****

பிப்ரவரி 16, 2007 பஸ் எரிப்பு தீர்ப்பு: மாணவியின் தந்தை திருப்தி

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் சேலம் நீதிமன்றம் கொடுத்துள்ள தீர்ப்பு திருப்தி தருவதாக கண்ணீர் மல்க கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறியுள்ளார்.

தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணையில் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று சேலம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்தத் தீர்ப்பைக் கேட்பதற்காக பஸ் எரிப்பில் இறந்து போன 3 மாணவிகளில் ஒருவரான கோகிலவாணியின் தந்தை வீராசாமி வந்திருந்தார்.

தீர்ப்புக்குப் பின்னர் அவரிடம் செய்தியாளர்களிடம் தீர்ப்பு உங்களுக்குத் திருப்தி தருகிறதா என்று கேட்டனர். அதற்கு கண்களில் நீர் ததும்ப வீராசாமி கூறுகையில், நாமக்கல்லில் இருந்து தீர்ப்பை அறிவதற்காக வந்துள்ளேன். 7 ஆண்டுகளுக்கு முன்பு எனது மகள் கோரமாக பலியாகி விட்டாள்.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு திருப்தி தருகிறது. சுற்றுலாவுக்காக போன மகளை கரிக் கட்டையாகத்தான் கண்ணில் காட்டினார்கள்.

வேளாண்மை அதிகாரியாக அவளை ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது, நடக்காமலேயே போய் விட்டது என்று கதறி அழுதார் வீராசாமி.

கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணை அதிமுகவினருக்கு சாதகமாக, பாரபட்சமாக நடப்பதாகக் கூறி வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமிதான் வழக்கு தொடர்ந்தார். இதைத் தொடர்ந்தே இந்த வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையும் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இவ்வளவு தூரம் வந்ததற்கு வீராசாமியின் தைரியமும் அவர் எடுத்த உறுதியான முயற்சிகளுமே காரணம்

****

பிப்ரவரி 16, 2007 பஸ் எரிப்பு: 3 அதிமுகவினருக்கு தூக்கு25 பேருக்கு 7 ஆண்டு சிறை

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் கொலைக் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளிக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.

கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு சென்னை தனி நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து 2000மாவது ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அராஜகத்தில் இறங்கினர்.

கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது இலக்கியம்பட்டி என்ற இடத்தில் அதிமுகவினர் அவர்களது கல்லூரி பஸ்ஸை வழி மறித்தனர்.

உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ் மீது பெட்ரோலை ஊற்றி அந்தக் கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி (19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர். மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர்.

இந்த தீ வைப்பு தொடர்பாக அப்போதைய தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜேந்திரன், நகர இணைச் செயலாளர் நெடு என்ற நெடுஞ்செழியன், எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவர் மாது என்ற ரவீந்திரன் (இந்த மூவரும் தான் பஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தவர்கள்)

ஊராட்சி மன்றத் தலைவர் முனியப்பன், அதிமுக நிர்வாகிகளான முருகேசன், வேலாயுதம், முத்து என்ற அறிவழகன், தவுலத் பாஷா, ரவி, முருகன், விபி முருக், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், வடிவேல்,

மணி என்ற கூடலர் மணி, மாது, பழனிச்சாமி, ராஜு, அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டரும் அதிமுக தொண்டருமான ராமன், சந்திரன், செல்லகுட்டி, காவேரி, மணி, மாதையன், செல்வம், மாதேஸ், மாணிக்கம், உதய குமார், செல்வராஜ், சண்முகம் ஆகிய 31 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் செல்லக்குட்டி இறந்துவிட்டார்.

அதிமுக அரசால் ஏகப்பட்ட இழுத்தடிப்புகள் செய்யப்பட்டதால் சம்பவம் நடந்து ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நேற்று தான் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சேலம் முதலாவது அமர்வு நீதிபதி கிருஷ்ணராஜா வழங்கிய தீர்ப்பில், 28 அதிமுகவினரும் குற்றவாளிகள் என தீர்ப்பளித்தார்.

இவர்களுக்கான தண்டனை இன்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நெடு என்கிற நெடுஞ்செழியன், முனியப்பன், மாது என்கிற ரவீந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதித்தார் நீதிபதி கிருஷ்ணராஜா.

25 பிற குற்றவாளிகளுக்கு தலா 7 ஆண்டு, 3 மாத சிறை தண்டனையும் மற்றும் தலா ரூ. 13,000 அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

****

Bus-burning case: 3 AIADMK men sentenced to death ::

Salem (TN), Feb. 16 (PTI): Seven years after the death of three girl students in the burning of a bus in Dharmapuri following the conviction of AIADMK leader J Jayalalithaa in a corruption case, a Salem Court today sentenced three AIADMK workers to death on charges of murder, and 25 others to seven years imprisonment.

The three girl students of the Tamil Nadu Agricultural University were charred to death when their institution's bus was set ablaze in neighbouring Dharmapuri district on February 3, 2000 by AIADMK workers protesting the conviction of Jayalalithaa in Kodaikanal Pleasant Stay hotel case.

Eighteen others had received burn injuries after the bus was intercepted by the party's agitated workers and set on fire.

Yesterday, First Additional Sessions Judge D Krishnaraja pronounced Nedu alias Nedunchezhiyan, then Secretary of the Dharmapuri town unit of AIADMK, Madhu alias Ravichandran, then local MGR Forum functionary, and P Muniappan, a former panchayat president, guilty of murder, attempt to murder and various other charges under the IPC.

After the three pleaded innocence, the Judge ordered cancellation of their bail and directed the police to take them into custody.

The Judge also held 25 other accused guilty of rioting and wrongful confinement among other lesser charges while convicting them.

In 2002, Jayalalithaa was cleared of the charges of non-application of mind in granting building permission in the Kodaikanal Hill Area in the hotel case by the Supreme Court.

****

பிப்ரவரி 16, 2007 மாணவிகளின் குடும்பத்தினர் உறவினர்கள் கண்ணீர்!

சேலம்: 3 மாணவிகளை உயிரோடு வைத்து எரித்துக் கொலை செய்த தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 பேருக்கு தூக்குத் தண்டனை கொடுக்கப்பட்டதை மாணவிகளின் குடும்பத்தினரும், உறவினர்களும் வரவேற்றுள்ளனர்.

பலியான கோகிலவாணியின் தந்தை வீராசாமி கூறுகையில், தாமதமாக வந்த தீர்ப்பு என்றாலும் இறுதியில் நீதி வென்றுள்ளது. 3 பேருக்கு மட்டும் தூக்குத் தண்டனை கொடுத்தது போதாது, மற்றவர்களுக்கும் கடுமையான தண்டனை கொடுத்திருக்க வேண்டும்.

சுற்றுலாவுக்காக போன மகளை கரிக் கட்டையாகத்தான் கண்ணில் காட்டினார்கள். வேளாண்மை அதிகாரியாக அவளை ஆக்கிப் பார்க்க ஆசைப்பட்டேன். ஆனால் முடியாமல் போய் விட்டது, நடக்காமலேயே போய் விட்டது என்று கதறி அழுதார் வீராசாமி.

கிருஷ்ணகிரி கோர்ட்டில் நடந்து வரும் விசாரணை அதிமுகவினருக்கு சாதகமாக, பாரபட்சமாக நடப்பதாகக் கூறி வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வீராசாமிதான் வழக்கு தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்தே இந்த வழக்கு சேலத்திற்கு மாற்றப்பட்டது. விசாரணையும் ஒழுங்காக நடந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு இவ்வளவு தூரம் வந்ததற்கு வீராசாமியின் தைரியமும் அவர் எடுத்த உறுதியான முயற்சிகளுமே காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இன்னொரு மாணவி ஹேமலதாவின் தந்தை கேசவசந்திரன் கூறுகையில், இத்தகைய படு பாதகச் செயலை இனியும் யாரும் செய்யக் கூடாது. இதைப் பார்த்தாவது இனி வன்முறையில் ஈடுபடுவோர் திருந்த வேண்டும். இப்படிப்பட்டவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார்.

இதேபோல பலியான காயத்ரியின் உறவினர்களும் தீர்ப்பை வரவேற்றனர்.

அதே போல தண்டனை விவரத்தை அறிய சேலம் நீதிமன்ற வளாகத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடியிருந்தனர். முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதும் அவர்கள் கை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மறுபக்கம், தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரின் குடும்பத்தினரும், உறவினர்களும் கதறி அழுது சோகத்தை வெளிப்படுத்தினர். 'அம்மா' நம்ம பக்கம் இருப்பதால் பாதகமான தீர்ப்பு எல்லாம் வராது என இவர்கள் நினைத்திருந்ததாகத் தெரிகிறது.

அம்மாவுக்காக பஸ்ஸை எரித்த வழக்கில் அவ்வளவு சீக்கிரத்தில் தூக்கு தண்டனை தந்துவிட மாட்டார்கள் என இந்தக் கொலைகாரக் கும்பலும் கூட நினைத்திருந்தது. ஆனால், அவர்களுக்கு நீதி மரண அடி தந்துள்ளது.


****

பிப்ரவரி 16, 2007 தூக்கு தண்டைக்காக போராடிய வக்கீல் சீனிவாசன்

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில், மாணவிகளை இரக்கமில்லாமல் எரித்துக் கொன்ற 3 அதிமுகவினருக்கும் தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என அரசு வழக்கறிஞர் சீனிவாசன் மிகத் தீவிரமாக வாதாடினார். அவர் இந்த வழக்கை நடத்திய விதத்தால் தான் இந்த வன்முறைக் கும்பலுக்கு கூண்டோடு தண்டனை கிடைத்துள்ளது.

வழக்கில் தொடர்புடைய 28 அதிமுகவினரும் குற்றவாளிகளே, அதிலும் 3 பேர் நேரடியான கொலையாளிகள் என நேற்று சேலம் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணராஜா தனது தீர்ப்பை அறிவித்தார்.

இதையடுத்து எழுந்த அரசு வழக்கறிஞர் சீனிவாசன், கொலைக் குற்றவாளிகள் என நெடுஞ்செழியன், மாது, முனியப்பன் ஆகியோர் நிரூபிக்கப்பட்டுள்ளனர். கொலைக் குற்றவாளிகளுக்கு பொதுவாக ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.

அரிதான சம்பவங்களில் தூக்குத் தண்டனை விதிக்கப்படும். இந்த வழக்கும் அரிதான வழக்குதான். எனவே இந்த 3 குற்றவாளிகளுக்கும் தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும். அவர்கள் வெளியே வந்தால் சமுதாயத்தில் மக்களால் நிம்மதியாக வாழ முடியாது.

மாணவிகள் சுற்றுலா சென்று விட்டுத் திரும்பியபோது 2வது எதிரியும், 3வது எதிரியும் பஸ்சுக்குத் தீ வைக்கச் சென்றபோது, பேராசிரியைகள் அகிலா, லதா, டிரைவர் கந்தசாமி ஆகியோர் பஸ்சில் மாணவிகள் இருக்கிறார்கள், அவர்களை ஒன்றும் செய்து விடாதீர்கள் என காலில் விழாத குறையாக கெஞ்சினார்கள்.

ஆனால் அதைப் பொருட்படுத்தாத 3வது எதிரி மாது என்கிற ரவீந்திரன், எல்லோரையும் சேர்த்து தீவைத்துக் கொளுத்தச் சொன்னார். 2வது எதிரி நெடு என்கிற நெடுஞ்செழியன் பஸ் மீது பெட்ரோலை ஊற்றி (இதற்காக டிவிஎஸ் 50ல் பெட்ரோல் கேன் எடுத்து வந்தவர் இவர்) ஊற்றி தீ வைத்தார்.

இதற்கு 4வது எதிரி முனிப்பன் உடந்தை. எனவே இந்த மூன்று பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று வாதிட்டார் சீனிவாசன்.

சீனிவாசன் சந்தித்த சவால்கள்:

இந்த வழக்கில் 31 அதிமுகவினர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஒருவரான செல்லக்குட்டி இறந்துவிட்டார்.

ஆனால், இந்த வழக்கை முதல்வராக ஜெயலலிதா இருந்ததால் அதிமுகவினர் மீதான இந்த வழக்கை தலைமையின் உத்தரவுப்படி போலீசார் மிக அலட்சியமாக நடத்தினர். விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தினாலும் அதிமுகவினரை தப்ப வைக்க அரசும், போலீசாரும், அரசு வக்கீலும் முயன்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மிக தெனாவட்டாக நீதிமன்றத்தில் நடந்து கொண்டனர்.

மேலும் போலீஸ் மற்றும் அதிமுகவினரின் மிரட்டலால் 20 சாட்சிகள் பல்டி அடித்தனர். (மொத்த சாட்சிகள் 22 பேர்). இதனால் இந்தக் கும்பல் மொத்தமாக வழக்கில் இருந்து தப்பிவிடும் சூழல் ஏற்பட்டது.

இதையடுத்து இறந்த மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி, வழக்கை கோவைக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அதை விசாரித்த நீதிபதி கனகராஜ் தமிழக அரசுக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தார். அரசு கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது என்று சாடிய நீதிபதி வழக்கை கிருஷ்ணகிரியில் இருந்து சேலத்துக்கு மாற்றினார்.

மேலும் அரசு வக்கீலையும் மாற்ற உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்றம் நியமித்த புதிய வழக்கறிஞரான சீனிவாசனுக்கு போதிய ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்தனர். மேலும் அவருக்கும் கூட மிரட்டல்கள் வந்தன. இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போனது.

ஆனாலும் சேர்ந்து போகாமல் வழக்கை நடத்தினால் சீனிவாசன். மிக வேகமாகவும், தீவிரமாகவும் செயல்பட்டு 123 சாட்சியங்களை நீதிமன்றத்தில் கொண்டு வந்து நிறுத்தச் செய்தார்.

அதில் தர்மபுரி கலெக்டர், கோவை விவசாயக் கல்லூரி துணை வேந்தர் ஆகியோரும் அடக்கம். இந்த வழக்கில் பஸ்சில் சென்ற ஆசிரியைகள், மாணவிகள் அளித்த சாட்சியம் தான் மிகவும் உதவிகரமாக இருந்தது. அதிமுகவினரின் மிரட்டல்களையும் மீறி எரிக்கப்பட்டபோது பஸ்சில் இருந்த மாணவிகளும் ஆசிரியைகளும் சாட்சியம் அளித்தனர்.

அப்போது அந்த சம்பவத்தை நினைவு கூர்ந்து அவர்கள் அழுத அழுகையும், மயங்கி விழுந்ததும் நீதிமன்றத்தில் இருந்தவர்களை எல்லாம் கண் கலங்கச் செய்தது. ஆனால், அதிமுக மட்டும் கலங்கவே இல்லை. இந்த 31 பேர் கும்பலை காப்பாற்றுவதில் தான் தீவிரமாக இருந்தது. இதற்கு போலீசாரும் உடந்தையாக இருந்தனர்.

ஆனால், நீதிமன்றத்தின் உதவியோடு தடைகளை எல்லாம் உடைத்து எறிந்து நீதி வெல்ல உதவியிருக்கிறார் வழக்கறிஞர் சீனிவாசன்.

மிக பொருத்தமான தீர்ப்பு: சீனிவாசன்

முக்கியக் குற்றவாளிகள் 3 பேருக்கும் தூக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று நான் வாதாடினேன். அதை நீதிபதி ஏற்று தீர்ப்பு வழங்கியுள்ளது மகிழ்ச்சி தருகிறது. இது மிகப் பொருத்தமான, சரியான தீர்ப்பு.

இனிமேலாவது இதுபோன்ற கொடூர செயலில் யாரும் ஈடுபடக் கூடாது. அப்படிப்பட்ட நினைப்பு உள்ளவர்களுக்கு இந்தத் தீர்ப்பு சரியான பாடமாகும் என்றார் சீனிவாசன்.

****

பிப்ரவரி 16, 2007 பஸ்: விசாரித்த போலீஸ் டீமூக்கு பதவி உயர்வு!

சேலம்: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் விசாரணையை நடத்திய மற்றும் குற்றத்தை நிரூபிக்க போதிய ஆதாரங்களைத் திரட்டிய சிபிசிஐடி போலீஸ் டீமுக்கு முதல்வரின் பதக்கமும் பதவி உயர்வும் கிடைக்கும் என்று தெரிகிறது.

இதற்கான பரிந்துரையை சிபிசிஐடி டிஐஜியான ராஜேந்திரன் முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பியுள்ளார்.

டிஎஸ்பிக்கள் பி.கே.பெரியசாமி, ஏ.பெரியசாமி, கிருஷ்ணராஜ், இன்ஸ்பெக்டர்கள் ராஜபாண்டி, தம்பிதுரை, மாதையன், போபாலன்,

போலீஸ்காரர்களான முத்துவேல், ரமேஷ்குமார், குமாரவேலன், சர்புதீன், ராஜன், குணசேகரன் ஆகியோரது பெயர்கள் பதவி உயர்வுக்காகவும் பதக்கத்துக்காகவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இதில் போலீஸ்õகரர்களுக்கு எஸ்.ஐ. பதவி தருமாறு ராஜேந்திரன் பரிந்துரைத்துள்ளார்.

இந்த வழக்கில் அதிமுக ஆட்சியின்போது சாட்சிகளை கலைக்கவும், ஆதாரங்களை அமுக்கவும் பலத்த நெருக்குதல் தரப்பட்டது. இதனால் வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட்டது.

ஆனால், அதையும் மீறித் தான் இந்த அதிகாரிகளும் போலீசாரும் வழக்கை சாட்சியங்களுடன் நிரூபித்துக் காட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கு முதன்முறையாக சிபிசிஐடி விசாரித்தபோது அதன் எஸ்.பியாக இருந்தவர் சமுத்திரப்பாண்டியன். இவர் இவர் லஞ்ச ஒழிப்புப் பிரிவில் உள்ளார்.

தீர்ப்பை அறிய சமுத்திரப்பாண்டியனும் சேலம் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார். தீர்ப்புக்குப் பின் அவர் கருத்து தெரிவிக்கையில், இது சிபிசிஐடி போலீஸுக்குக் கிடைத்த வெற்றி.

இந்த வழக்கில் பத்திரிக்கையாளர்களின் சாட்சியம், அவர்கள் கொடுத்த ஆதாரங்களும் பெரும் உதவியாக இருந்தன. 5 ஆண்டுகள் ஆன பிறகும் கூட மாணவிகள், நேரில் வந்து சாட்சி கூறியது எனக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது என்றார்.

***

Dec 06, 2007 தர்மபுரி பஸ் எரிப்பு-3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம் ::

தர்மபுரி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் குற்றவாளிகளான 3 அதிமுகவினருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இன்று சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு எதிரான கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கில் முதலில் அதிமுகவினரை போலீசார் கைது செய்யவில்லை. கடும் எதிர்ப்பு கிளம்பவே 31 அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், தர்மபுரி நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையை முடக்க ஆளும் தரப்பில் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட்டன.

வழக்கையே திசை திருப்பினர் போலீசாரும் அதிமுகவினரும். இதையடுத்து இறந்த கோகிலவாணியின் தந்தை வழக்கை வேறு இடத்திற்கு மாற்றக் கோரினார். அதை ஏற்ற உயர் நீதிமன்றம் அதிமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்ததோடு வழக்கை சேலத்துக்கு மாற்றியது.

இந்த வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது குற்றவாளி ஒருவர் இறந்தார். 2 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இதனால் மீதமுள்ள 28 பேர் மீது விசாரணை நடந்தது.

இதில் 28 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டது. இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

(மாணவிகளை எரித்துக் கொன்றபோது இந்த நெடுஞ்செழியன் தர்மபுரி நகர அதிமுக செயலாளராக இருந்தார். மாது என்ற ரவிச்சந்திரன் தர்மபுரி எம்ஜிஆர் இளைஞர் அணி துணைத் தலைவராக இருந்தார். முனியப்பன் புளியம்பட்டி அதிமுக பஞ்சாயத்து தலைவராக இருந்தார்)

இந்தத் தீர்ப்பை 28 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவை நீதிபதி முருகேசன், நீதிபதி பெரிய கருப்பையா ஆகியோரைக் கொண்ட டிவிசன் பெஞ்ச் விசாரித்து வந்தது.

9 மாத விசாரணைக்குப் பின் இன்று நீதிபதிகள் தங்கள் தீர்ப்பை அளித்தனர். தங்களது தீர்ப்பில் 3 கொலைகாரர்களுக்கும் சேலம் நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், இந்த சம்பவத்தில் தொடர்புடைய 25 பேரின் சிறை தண்டனையையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

தீர்ப்பின் முழு விவரம்:

அரசியலில் ஈடுபடுபவர்கள் தங்கள் கட்சிக்கும் கட்சித் தலைமைக்கும் விசுவாசமாக இருப்பதை காட்ட அடிக்கடி போராட்டங்கள் சாலை மறியல்கள் செய்கிறார்கள். சில சமயம் தீ எரிப்பு சம்பவத்திலும் ஈடுபடுகிறார்கள். இதனால் பொதுமக்கள் அடிக்கடி பாதிப்புக்குள்ளாகிறார்கள். இதையெல்லாம் ஏற்கவே முடியாது.

பலியான 3 மாணவிகளும் அறியா பருவத்தினர். அவர்களுக்கும் அரசியலுக்கும் எந்தத் தொடர்பு இல்லை.

தேவையில்லாமல் பஸ்சுக்கு தீ வைத்து எரித்து அவர்கள் 3 பேரையும் கொன்று விட்டனர். அவர்கள் தப்பிவிடாதபடி பஸ்சின் கதவை மூடி தீ வைத்துள்ளனர். 3 மாணவிகள் பலியானதை இந்த நீதிமன்றம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது திட்டமிட்ட கொலை மாதிரி தான்.

தீயில் கருகிய 3 மாணவிகள் துடிக்க, துடிக்க இறந்ததை நினைக்கும்போது மனம் வேதனைப்படுகிறது, பதபதக்கிறது. இது ஒரு கொடூரமான செயல். இந்த கொடூர செயலுக்கு காரணமானவர்களை மன்னிக்கவே முடியாது.

இதனால்தான் அவர்களுக்கு சேலம் நீதிமன்றம் உரிய தண்டனை வழங்கியுள்ளது. இந்த தண்டனைகளை பெற்றவர்கள் அதை ரத்து செய்யவேண்டும் என்று மேல் முறையீடு செய்துள்ளனர். அவர்களது வாதத்தை ஏற்க இயலாது. இதனால் அவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டியது அவசியமாகிறது.

குற்றவாளிகளுக்கு எதிராக சாட்சியங்கள் வலுவாக உள்ளன. 123 சாட்சிகள், 242 ஆவணங்கள் குற்றத்தை உறுதிபடுத்துகின்றன.

குற்றவாளிகளின் மேல் முறையீட்டை ஏற்று அவர்களை இந்த வழக்கிலிந்து விடுவித்தால் நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையே வீணாகிவிடும். எனவே நீதித்துறை மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது எங்கள் கடமையாகிறது.

இதனால் இந்த வழக்கை சாதாரணமாக விட்டு விட முடியாது. இவர்களது தண்டனையை குறைக்கவும் முடியாது.

நெடுஞ்செழியன், ரவிச்சந்திரன், முனியப்பன் ஆகிய 3 பேருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை இந்த நீதிமன்றம் உறுதி செய்கிறது. அவர்கள் தலா ரூ.59,000 அபராதம் கட்டவும் உத்தரவிடுகிறோம்.

அது போல மற்ற 25 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை உறுதிபடுத்தப்படுகிறது. அவர்களும் தலா ரூ. 13,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றனர் நீதிபதிகள்.

7 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்கள் விவரம்:

முத்து என்ற அறிவழகன், ரவி, வி.முருகன், வடிவேல், காவேரி, மாணிக்கம், வீரமணி, உதயகுமார், சம்பத், நஞ்சன் என்ற நஞ்சப்பன், ராஜூ, மணி என்ற கூடலர்மணி, மாதுராமன் (இவர் அரசு போக்குவரத்துக் கழக கண்டக்டர் என்பது குறிப்பிடத்தக்கது), முருகேசன், மணி, மாதையன், செல்வம், செல்வராஜ், தெளலத் பாஷா, வேலாயுதம், வி.பி.முருகன், சண்முகம், சந்திரன், செல்லக்குட்டி ஆகியோர்.

தண்டனை பெற்ற 28 பேருமே அதிமுகவில் பல்வேறு பதவிகளில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

***

jan 04, 2008 பஸ் எரிப்பு அதிமுகவினரின் தூக்கு தண்டனை நிறுத்தி வைப்பு-அரசு உத்தரவு ::

சென்னை: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 3 குற்றவாளிகளின் அப்பீல் மனுக்களையும் உச்ச நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனை நிறைவேற்றப்படாது என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு இன்று தெரிவித்தது.

இதையடுத்து இந்த மூவருக்கும் வரும் 10ம் தேதி நிறைவேற்றப்படவிருந்த தூக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்படவுடுள்ளது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுகவினர் போராட்டம் நடத்தினர்.

அப்போது தர்மபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி வழியாக வந்த கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களில் 28 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். இவர்களில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு 7 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டையும் விதிக்கப்பட்டது.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 3 பேரையும் 2008 ஜனவரி 10ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கில் போடுமாறு சேலம் முதலாவது செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி மாணிக்கம் உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை தூக்கில் போட கோவை சிறையில் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தங்களுக்கு வழங்கிய தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு நிலுவையில் இருப்பதால் தூக்கு தண்டனையை 8 வாரத்திற்கு தள்ளி வைக்க வேண்டும் என மூவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மனுதாரர் சார்பில் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பி.எச்.மனோஜ் பாண்டியனும் (பி.எச்.பாண்டியனின் மகன்), அரசு தரப்பில் டி.குமரேசனும் வாதாடினார்கள்.

அதிமுகவினர் சார்பில் பாண்டியன் வாதாடுகையில், தண்டனையை உறுதி செய்து நீதிமன்றம் கடந்த மாதம் 6ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு நகல் எங்களுக்கு 14ம் தேதி தான் கிடைத்தது. தீர்ப்பை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் கிருஸ்துமஸ் விடுமுறை விடப்பட்டதால், 3வது வாரத்தில் தான் உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு விசாரணைக்கு வரும்.

உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வேளையில் தூக்கில் போட நாள் குறிக்கப்பட்டது தவறானதாகும். வரும் 10ம் தேதி தூக்குத் தண்டனையை நிறைவேற்ற நாள் குறிக்கப்பட்டுள்ளது. எனவே தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க நீதிமன்றம் உத்தரவை பிறப்பிக்க வேண்டும். இல்லையேல் 3 பேரின் உயிருக்கு பாதகம் ஏற்படும் என்றார்.

வாதத்தை கேட்ட பின்னர் நீதிபதி டி.முருகேசன் கூறியதாவது, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்பீல் செய்யப்படுவதற்கு முன்பாக தண்டனையை நிறுத்தி வைக்க இந்த நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்த பின்னர், இந்த விஷயத்தில் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது.

சிறை விதிப்படி செஷன்சு நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய பின்னர் வாரண்ட் பிறப்பித்து தண்டையை நிறைவேற்ற உத்தரவிட்டுள்ளது. இதில் என்ன தவறு இருக்கிறது. இந்த தண்டனையை நிறுத்தி வைக்க உச்ச நீதிமன்றத்தை தான் மனுதாரர்கள் சார்பில் அணுக வேண்டும். அங்குதான் இதுகுறித்து அவசர உத்தரவுகளை பெறமுடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய பாண்டியன், உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தண்டனையை நிறைவேற்ற தேதி நிர்ணயிக்கப்பட்டது தவறு. உச்ச நீதிமன்றத்தில் இந்த மனு நிராகரிக்கப்பட்டு பின்னர் கவர்னர், ஜனாதிபதியிடம் கருணா மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு அவையும் நிராகரிக்கப்பட்டால் தான் தண்டனையை நிறைவேற்ற முடியும் என்றார்.

இதையடுத்துப் பேசிய நீதிபதி முருகேசன், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விட்டீர்கள். அங்கு இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இந்த நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க அதிகாரம் கிடையாது. இந்த வழக்கு மீண்டும் 4ம் தேதி (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம்.

இது போன்ற சூழ்நிலையில் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதா. ஏற்கனவே இதுபோன்று உயர்நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதா. இதற்குரிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்க வேண்டும்.

இதேபோல அரசு தரப்பிலும் தனது கருத்தை இந்த நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்றார் நீதிபதி.

இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதிகள் முருகேசன், பெரியகருப்பையா ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் சார்பில் வழக்கறிஞர் ராஜ இளங்கோ ஒரு பதில் மனு தாக்கல் செய்தார்.

அவர் கூறுகையில், மூன்று குற்றவாளிகளும் அடைக்கப்பட்டுள்ள கோவை சிறையின் கண்காணிப்பாளர் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதன்படி, இந்த மூவரின் மனுக்கள் மீதும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளிக்கும் வரை தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை உச்ச நீதிமன்ற பதிவாளருக்கும் அவர் அனுப்பி வைத்துள்ளார். அந்த உத்தரவின் நகலை நான் இந்த நீதிமன்றத்திடம் வழங்குகிறேன் என்று கூறி கோவை சிறை கண்காணிப்பாளர் உச்ச நீதிமன்றத்துக்கு அனுப்பிய உத்தரவின் பேக்ஸ் நகலை சமர்பித்தார்.

இதையடுத்து தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி மூன்று அதிமுகவினரும் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.


***

ஜனவரி 18, 2008 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 அதிமுகவினருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த பிப்ரவரி 2000ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதாவிற்கு கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில் தண்டனை கொடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தர்மபுரியில் கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவிகளின் பஸ்சுக்கு அதிமுகவினர் தீ வைத்தனர். இதில் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகிய 3 மாணவிகள் உயிரோடு எரிந்து கருகி பலியானார்கள்.

இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட 28 அதிமுகவினரில் நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகிய முக்கிய குற்றவாளிகளுக்கு ஜனவரி 10ம் தேதி தூக்கு தண்டனையை நிறைவேற்ற சேலம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இதை எதிர்த்து 3 பேரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் நவ்லேக்கர், பாஞ்சல் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.

அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் அல்தப் அகமதுவும், அதிமுகவனர் தரப்பில் பி.எச்.பி. மனோஜ் பாண்டியன், சுசீல் குமார், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோரும் ஆஜராகினர்.

அல்தப் அகமது வாதாடுகையில், 3 அதிமுகவினரின் தூக்கு தண்டனையையும் உறுதி செய்ய வேண்டும் என்றார்.

அதிமுகவினரின் வழக்கறிஞர்கள் வாதாடுகையில், இந்த வழக்கு விசாரணை கீழ்க் கோர்ட்டில் சரியாக நடக்கவில்லை. முறைப்படி விசாரிக்கப்படவும் இல்லை. எனவே 3 அதிமுகவினருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடைவிதிக்க வேண்டும் என்றனர்.

இந்தக் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் 3 அதிமுகவினருக்கும் விதிக்கப்பட்ட தூக்கு தண்டனைக்கு தடை விதிப்பதாக அறிவித்தனர்.

மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக முழு விபரங்களுடன் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

மேலும் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கின் அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யவும் ஆணையிட்டனர்.

இதன் மூலம் தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் முதலில் இருந்து முழுமையாக விசாரிக்கலாம் எனத் தெரிகிறது.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் . Indibloggies Awards 2006


இண்டிப்ளாக்கீஸ் விருதுகள் 2006க்கான மனு தாக்கல் ஆரம்பமாகிவிட்டது. யார் வேண்டுமானாலும் தங்களுக்கு விருப்பமான பதிவை இவ்விருதுக்காக முன்மொழியலாம். மற்றவர்கள்தான் செய்ய வேண்டுமென்றில்லை, தன் பதிவின் மேல் நம்பிக்கை கொண்டவர்கள் 'நமக்கு நாமே' திட்டத்தில் தமது பதிவை தாமே முன்மொழியலாம். பிப்ரவரி திங்கள் ஐந்தாம் நாள் இந்திய நேரம் இரவு 9 மணிக்கு பரிந்துரைப்பதற்கான கெடு முடிவடைகிறது.

எப்படி முன்மொழிவது என்பதற்கான விளக்கம் இந்த சுட்டியில் காணலாம்

இந்த வருட(மு)ம் பல பிரிவுகளாக இப்போட்டி நடத்தப்படுகிறது. தமிழில் மட்டும் எழுதப்படும் பதிவுகள் Best Indic blog பிரிவில் வரும்.

இவ்வருடம் சிறந்த தமிழ்ப்பதிவாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசாக (இதுவரை) முகமூடி ரூ.1000 மதிப்பிலான புத்தகங்களும், தமிழோவியம் $25 மதிப்புக்கான அமேசான் பரிசு அட்டையும் தரவிருப்பதாக தெரிகிறது. நீங்கள் தமிழ் பிரிவிலோ அல்லது வேறு ஏதாவது பிரிவிலோ சிறந்ததாக தேர்ந்தெடுக்கப்படும் பதிவுக்கு பரிசுகள் தர விரும்பினால் இங்கே தெரிவிக்கலாம்

இவ்வருடம் தமிழ் பிரிவுக்கான ஜூரி குழுவில் தமிழ் வலைஞர்கள் பத்ரி சேஷாத்ரியும், முகமூடியும் இருப்பதாக இண்டிப்ளாக்கீஸ் வலைக்குறிப்பு தெரிவிக்கிறது.

இவ்விருது சம்பந்தமாக 'அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்' சிலவற்றுக்கு இந்த சுட்டியில் பதில்கள் தரப்பட்டுள்ளன.

நம்பிக்கை இருப்பவர்கள் அனைவருக்கும் குடியரசு தின நல்வாழ்த்துகள்.




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அன்புள்ள இயக்குனர் அய்யாவிற்கு...


நீங்க பெரியார் படம் எடுக்கிறது தெரிஞ்சி ரொம்ப மகிழ்ச்சிங்க. நான் பாக்க போறதில்லைன்னாலும் தமிழ்நாட்டுல இருக்கிற முக்காவாசி சனம் பாக்குற அளவு குவாலிட்டியா எடுப்பீங்கன்னு நினைக்கிறேன். நான் பாக்க மாட்டேன்னதும் நான் என்னவோ பெரியாரிய எதிரின்னு நினைச்சிக்காதீங்க.. நான் இன்கேபபில்-ஆஃப்-ஹாண்டிலிங்-சம்-genre-பை-டமில்-இயக்குனர்ஸ் phobia வியாதியால பாதிக்கப்பட்டவன் அப்படீங்கிறதால தமிள்ல வர சில வகை படங்கள பாக்கிறதில்லை..

அதாவது ரொம்பன்னு இல்லாத ஓரளவு சின்ன வயசுல, சாமி பக்தி வரணுமின்னு நம்ம வூட்டுல சாமி படத்துக்கு மட்டும் பர்மிஷன் கொடுப்பாங்க, இராம.நாராயணன் படத்துக்கு மட்டும்னா ஓகேன்னு... ஆடி வெள்ளி, கோடி பல்லின்னு சில பல படங்கள் பாத்ததுல, யானை சில்க்கு சுமிதாவுக்கு முத்தம் கொடுத்தது பாம்பு டிஸ்க் ஜாக்கியா இருக்கிறது குரங்கு கம்ப்யூட்டர் சாப்ட்வேர் தயாரிக்கிறதுன்னு பாத்த வேடிக்கை பத்தாதுன்னு, நடுவுல தியேட்டர்ல பல பேருக்கு சாமி வந்து அத சாக்கா வச்சி சூடத்த கொளுத்திகிட்டு ஒரு கூட்டம் அங்கிட்டும் இங்கிட்டும் ஓட, அடப்பாவிகளா தியேட்டர்ல தீ பிடிச்சிச்சின்னா எல்லாரும் சாமிகிட்ட போயிடுவேமோடான்னு நான் சூடத்தட்ட தள்ளிவிட்டு ஓவர் கலாட்டா ஆகி அன்னியிலேர்ந்தே சாமி படம் பாக்க கூடாதுன்னு தீர்மானம் போட்டுட்டேன். அப்புறம் அவளின்ட இரவுகள், அஞ்சரைக்குள்ள வண்டின்னு சில பல சாமி படங்கள் ஓவரா பாத்து அது மேலயும் வெறுப்பு வந்து நிறுத்தி அப்படியே வயசாவ வயசாவ கொஞ்சம் கொஞ்சமா மசாலா படம் நிறுத்தி, ரஜினி படம் நிறுத்தின்னு ஒரு கட்டத்துல தமிழ் படம் நிறுத்திங்கிற அளவு வந்துட்டோம். அப்புறமா செலக்டிவ்வா சில படங்கள் பாக்குறதுதான்னாலும், இந்த நாவல மூவி ஆக்குற படம், சுயசரிதைய ஸ்க்ரீன்ல சமைக்கிற படங்கள்னா கொஞ்சம் அலர்ஜிதாண்ணா.. கண்டிப்பா நோ எண்ட்ரிதான். உங்க பாரதி, மோகமுள் எல்லாம் கூட பாத்ததில்லை நானு.

சரி வுடுங்க... சொல்ல வந்த மேட்டர வுட்டுட்டு என்னன்னவோ சொல்லிக்கிணு இருக்கேன்...

இந்த வார ஜூ.வியில "சீதையை ராமன் தொடவேயில்லை?" அப்படீன்ற தலைப்புல வந்த கட்டுரையும் அதுல உங்க பேட்டியும் பாத்தேன் அய்யா..

அதாவது "அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூணு... அப்படியே இருக்குதுவோய், அழியலையே பாரும்!" என்று பக்தர் ஒருவர் சொல்ல, "ஓஹோ... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... எங்காணும்... முதுகைத் தொட்டதும் மூணு கோடு விழுந்துடுச்சோ... சீதையின் முதுகில் கோடுகள் இல்லையா? இல்ல, சீதையை ஸ்ரீராமர் தொடவே இல்லையா?" என்று கிண்டலாகப் பெரியார் கேள்வி எழுப்புவதுபோல் பாட்டு இருக்குதுங்களாம்...

இதுனால இந்து மக்கள் கட்சி கோவமா இருக்காமே.. போராட போவறதா சொல்லியிருக்காய்ங்க போல... கெடக்கிறாங்க விடுங்க வெங்காய பசங்க.. இது சம்பந்தமா எவ்ளோ தன்மையா உங்க கருத்த பேட்டியா கொடுத்திருக்கீங்க..

"அப்படியா? அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அது அவர்களுடைய சொந்தக் கருத்து. யாருக்கும் அவர்களுடைய கருத்துகளைச் சொல்ல உரிமை இருக்கிறது. அந்தப் பாடலில் உள்ள வரிகள் பெரியாரால் பல மேடைகளில் பேசப்பட்ட கருத்துதான். இன்றும் பெரியாரை பின்பற்றுபவர்கள் அந்தக் கருத்துகளைப் பல மேடைகளில் பேசி வருகிறார்கள். பாடலாசிரியர் வைரமுத்துவும் பெரியாரின் கருத்துகளைதான் அந்தப் பாடலில் பதிவு செய்திருக்கிறார். மற்றபடி அது எங்களுடைய தனிப்பட்ட கருத்து கிடையாது. நான் எப்படி பாரதியாரின் வாழ்க்கையை ஒளிவு மறைவு இல்லாமல் பதிவு செய்தேனோ, அதே போலதான் பெரியாரின் வாழ்க்கையையும் பதிவு செய்து வருகிறேன். அதில் பெரியாரின் கருத்துக்களைத் திரித்துக் கூறாமல் அப்படியே பதிவு செய்திருக்கிறேன். அந்தப் பாடல் வரிகளை நீக்க வேண்டும் என்று சொல்ல, புகார் கூறும் அமைப்பினருக்கு உரிமை இல்லை. அது தணிக்கை குழுவின் வேலை. அவர்களின் வேலையை இந்து அமைப்புகள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை"

நானும் கருத்து சுதந்திரம்தான் முக்கியம்னு நினைக்கிறவந்தான்... உங்க பேட்டியில எனக்கு பரிபூரண சம்மதம்யா.. பெரியாரின் கருத்துக்கள் திரிக்கப்படாமல் மக்களை சென்று அடைய வேண்டியது ரொம்ப முக்கியம்யா.. இருங்க, கொஞ்சம் தண்ணி குடிச்சிட்டு வாரேன். அதுவரைக்கும் இத படிங்க, மேட்டர் பெரியார் பத்திதான்...

".... குறிப்பாக, சிறுபான்மையினர் குறித்த அவருடைய அணுகுமுறையில் பெரும்பான்மையினரின் குரலைத்தான் நான் பார்க்கிறேன். சிறுபான்மையினர் பிரச்னை தொடர்பான ஒரு கட்டுரையில் முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் மிகக் கடுமையாக அவர் தாக்குகிறார். "பாப்பானுக்குப் பயந்துகொண்டு நாம் முஸ்லிம்களுக்கு இடம் கொடுத்துவிட்டோம். இது சாணியை மிதிக்க விரும்பாமல் மலத்தில் கால் வைத்தது போல் இருக்கிறது" என்று சொல்கிறார் அவர். மேலும், "சிறுபான்மையினர் கையில் அதிகாரம் வருவது நாட்டுக்குக் கேடு" என்றும் சொல்கிறார்...."

வந்துட்டங்க.. ஓ.. இத எங்க புடிச்சேங்கறீங்களா.. பெரியார் பத்தி என்ன சொந்தமாவாய்யா கருத்து சொல்ல போறேன். இல்ல அதுக்கு வயசும் அனுபவமும்தான் எனக்கு போதுமா.. அத சொன்னது எனது மதிப்புக்குரிய வி.சி சட்டமன்ற உறுப்பினர் திரு.ரவிக்குமார் அவர்கள்தான்... வெளிவந்தது, சூலை மாத குமுதம் தீராநதியில (சுஜாதா கதை வந்துச்சே அய்யமார் பத்திரிக்கை, அதேதான்)

சரி, எவ்ளோ ஆராய்ச்சி பண்ணியிருப்பீங்க.. எப்படியும் இதயெல்லாம் படத்துல வச்சிருப்பீங்க, இருந்தாலும் கவனக்குறைவா விட்டு போயிருந்தா படம் ஃபினிஷிங் உள்ளார எப்பிடியாவது ஒரு பாட்டுல சேத்துருலாம்லன்னு ஒரு அணில்குஞ்சா இருந்து சொன்னேன். வேற ஒண்ணுமில்ல.. அப்புறம் பெரியார் சம்பந்தபப்ட்ட சில மெட்டீரியல்ஸ் கிடைக்கலன்னு வருத்தப்பட்டதா எங்கியோ படிச்சேன்.. இங்கதான் நம்ம ப்ளாக்குகல நீங்க ஊஸ் பண்ணிக்கணும். சாமானியமா நினைக்காதீங்க, கொஞ்சம் நோண்டி பாத்தீங்கன்னா கீழ்வெண்மணி ராமய்யா குடிசை எரிஞ்ச காலத்துல வந்த பெரியார் அறிக்கை கூட பிளாக்குல கிடைக்கும். மத்தபடி இந்து அமைப்பெல்லாம் பத்தி கவலையே படாதீங்க... என்னவிதமான தார்மீக சப்போர்ட்னாலும் கேளுங்கய்யா, ரெடியா இருக்கோம்....




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

அன்புள்ள பத்திரிக்கை ஆசிரியருக்கு...


நான் ஃபாரின்ல இருக்குற பிற்படுத்தப்பட்ட தமிழன். அது என்னவோ தெரில, பிளாக்கு எழுத ஆரம்பிசச்துல இருந்தே இப்படிதான் என்ன நான் இன்ட்ரட்யூஸ் செஞ்சிக்கிறது.

இன்னிக்கி பொங்கல். தலைவர் தமிழர் திருநாள்னுதான் சொல்லணும்னு ஆர்டர் போட்டுக்கிறாரு.. தலைவருன்ன உடனே நம்ம கேப்டன சொல்றேன்னு நினைக்காதீங்க. என்னிக்கி வெளிநாடு வந்தேனோ, அன்னிக்கே கேபடன வுட்டு வெலகிட்டேன். இப்பல்லாம் தலைவன்னா அது எங்க வாழ்க்கையில வெளிச்சம் ஏத்துற தலைவர மட்டும்தான் குறிக்கும்.

சின்ன புள்ளயா இருக்க சொல்ல, நமக்கு தீவாளி பொங்கல்னு எதுவா இருந்தாலும் சந்தோசம்தான். ஏன்னா புது சொக்கா ட்ரவுசரு கிடைக்கும். பண்டிக காசு கிடைக்கும். வூட்ல எல்லாம் சந்தோசமா இருப்பாங்க. நாலு நாளக்கி என்னா சேட்ட பண்ணாலும் திட்ட மாட்டாங்க. அதுவும் இல்லாம அல்லா சொந்தக்காரங்களும் இருப்பாங்களா, ஆராவது ஒருத்தராவது காவந்து பண்ண வந்துடுவாங்க. அப்புறம் பெரியவன் ஆனப்புறம், நமக்கு தலைவர் படம் ரிலீஸ் ஆவுற நாள் எதுவோ அதான் தீவாளி, பொங்கல் எல்லாம். அதெல்லாம் ஒரு காலம்க.. அறியாப்புள்ளயா சந்தோசமா இருந்த காலம். அது ஒரு காலம்க.. ஒலகம், பிளாகு எதுவும் அறியாத வயசு..

அப்புறம் இளந்தாரியா ஆனப்புறமா பொங்கலு வேற விதமா ஆச்சி.. பொங்க மொத நாளு அய்யா படியளப்பாரு. கூலியாளுங்க மட்டுமில்லாம வண்ணான், சங்கூதி, சக்கிலியரு, தோட்டிமாரு, நாவிதன்னு எல்லாருக்கும் மூட்ட நெல்லும், வேட்டி பொடவயும், காசு பணமும் அய்யா தருவாரு. சனங்க சந்தோசமா போவும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமா ஊருல பொங்க களையிழக்க ஆரம்பிச்சிடுச்சிங்க.. போன பொங்கலுக்கு வாழ்த்து சொல்லலாம்னு ஊருக்கு போன் போட்டப்ப அய்யா சொன்னத கேக்க பாவமா ஆயிடுச்சி.. "என்னடா பொங்கலு... ஊர்ல ஒரு நாய் இல்ல... கூலிக்கார நாய்ங்க, அலுங்காம சம்பாதிக்க ஆசப்பட்டு கேரளாவுக்கு கட்டட வேல செஞ்சு பொழக்க போயிட்டானுங்க. மொழி தெரியாத எடத்துல அடிமையா சம்பாதிச்சு என்ன பிரயோசனம், இந்தூர பொருத்த வரைக்கும் பிச்சக்கார பயலுவதான, கூழோ களியோ நம்மூர்ல திங்கிற மாதிரி வருமான்னு நென்னப்பு வருதா பாரு இவனுங்களுக்கு? முந்தி மாதிரி இல்லடா, எனக்கும் வயாசாயிட்டே போகுது. நீ வேற ஃபாரின்ல போய் இருக்க. பெசாம எல்லாத்தயும் ஏரக்கட்டலாம்னு பாக்குறேன்"

என்னய்யா ப்ரச்னைன்னு கணக்குகிட்ட கேட்டா அவரு வேற புலம்புனாரு "சின்னய்யா, இந்த கீழ்சாதியில பொறந்த எளந்தாரி பயலுவளுக்கு மட்டு மரியாத தெரியரதில்ல.. அவனுங்க அப்பனாத்தாளும் அவனுங்களுக்கு சொல்லித்தரதில்ல... நேத்திக்கி பக்கத்தூரு படையாச்சி அய்யா தேவரய்யாவ பாக்க வந்திருந்தாக... பொங்கலுக்கு கேரளாவுல இருந்து வந்திருந்த அந்த சக்கிலி வூட்டு பய, பெரியய்யா திண்ணையில உக்காந்து இருக்கிறது தெரிஞ்சும் கண்டும் கானாத மாதிரி சைக்கிள வுட்டு இறங்காம போனான்.. அத பாத்ததும் படையாச்சி அய்யா நம்ம பெரியய்யாவ பாத்த பார்வ இருக்கே.. என்னாத்த சொல்வேன் போங்க... அப்புறம் சின்ன படையாச்சி போய் அவன் செவுள்ள ரெண்டு வுட்டாங்க. நீங்க இங்க இருந்தா இந்த பயலுங்க இப்பிடி துள்ளுவானுங்களா... பேசாம வந்திருங்க தம்பி"ன்னாரு... இதுனாலதான் வூட்டுக்கு போன் போடுறதுன்னாலே யோசனையா இருக்கு இப்பல்லாம்.

சரி வுடுங்க... சொல்ல வந்த மேட்டர வுட்டுட்டு என்னன்னவோ சொல்லிக்கிணு இருக்கேன்...

சமீபத்துல சுஜாதா கத ஒண்ணு எளுதியிருக்காருன்னு அத நீங்க பப்ளிஸ் பண்ணியிருந்தீங்க. அது பத்தி நான் ரெண்டு வார்த்த சொல்ல ஆசப்படுறேனுங்க.. பொதுவா உங்க பத்திரிக்கைய நான் படிக்கிறதில்ல.. டிவி, ப்ரண்ட்ஸ்ன்னு பொழப்பு ஓடும். அய்யா சினிமாவுலனாலதான் சின்ன பசங்க கெட்டு போறாங்கன்னு சொன்னதால சன் டிவிய நிறுத்தியாச்சி. மக்கள் டிவி இங்க வரதில்ல. வழக்கமா பண்டிகைனா வூட்டுக்கு வர என் பிரண்டு மூக்கையா தேவன், திண்ணியம் ப்ரச்னை பத்தி காரசாரமா விவாதிச்ச நாள்ல இருந்து இங்க வரதில்ல. அதுவும் இல்லாம ஃபாரின் வந்ததுல இருந்து நம்ம சிந்தனை எல்லாம் மாறிப்போச்சி... அய்யமாருங்க பத்திரிக்கை படிக்கிறதில்லை.. முந்தி மாதிரின்னா கஸ்டம், எல்லாமே அய்யமாருங்கதான் நடத்திகிட்டு இருந்தாங்க.. இப்ப அப்பிடி இல்ல. நக்கீரன், தராசுல ஆரம்பிச்சி கீத்து வரக்கும் உண்மைய சொல்ற பத்திரிக்கைங்க வந்தாச்சி. இனிமே வெகுசன ஊடகங்க பப்பு அவ்வளவா வேகாது... இருந்தாலும் பாழாப்போன சனங்க வெகுசன ஊடகங்களத்தான விரும்பி படிக்கிறாங்கங்கிறது மனசுக்கு கஷ்டமா இருக்கு. அதுனால அவங்களோட வேசத்த கலைக்கிறத எப்பியுமே ஒரு தவமா நான் செய்யிறது... அதனால கருமம், வேற வழியில்லாம பொழுத போக்க உங்க பத்திரிக்கைய படிச்சேன். படிச்சப்புறமா ஏண்டா படிச்சி தொலைஞ்சோமின்னு ஆயிப்போச்சி.

சுஜாதா ஒரு அய்யரு.. அவரு பையனுக்கு சப்பான் பொண்ண கட்டிவச்சாருன்னவுடனே அவரு லிபரல்னு நானே நெனச்சிகிட்டேன். அவரு பெர்சனல் வாழ்க்கைய பத்தி நமக்கு என்னங்கறீங்களா... என்னங்க பண்றது, தமிழன் பொறந்தவுடனே, பக்கத்து பெட்ல பொறந்த பாப்பா அழுதுச்சான்னு கேட்டுட்டுதான் தன் அழுகையவே ஆரம்பிக்கிறான். அப்புறம் சினிமாக்கரன்ல ஆரம்பிச்சி அரசியல் தலைவன் வரைக்கும் எவனுக்கு எவ கூட காதலு, எவன் எவ்ளோ சம்பாதிக்கிறான், எவ எவங்கூட ஓடிப்போனா அப்படீன்னே யோசன பண்ணி யோசன பண்ணி, ஒரு எழுத்தாளனா இருந்தா கூட சரி, அவனுக்கு ஒரு ஐடல் ஒர்ஷிப் பண்ணி அவன் பெர்சனல் கேரக்டரு என்ன, அவன் என்ன ஜட்டி போடறான்னு எல்லாத்தையும் பிரிச்சி மேஞ்சாத்தான் மனசுக்கு ஒரு நிம்மதி கெடைக்கிது.. இப்ப பாருங்க, சமுதாய முன்னேத்தத்துக்காக நானும் வரிஞ்சி கட்டி எளுதறேன். ஆனா நெகட்டிவ் குத்தா குத்தறானுங்க. ஏன்னா நான் ஒரு தாழ்த்தப்பட்டவன். ஆனா சுஜாதா கதைய பல லட்சம் பேர் படிக்கும்படி பப்ளிஷ் பண்றீங்க.. ஒருத்தனும் அவருக்கு நெகட்டிவ் குத்த மாட்றான்.. ஏன்னா அவரு அய்யங்காரு... இதுதான் சமுதாயம்.

இப்ப கதைக்கு வருவோம்... அதுல அவரு என்ன சொல்றாரு. ஒரு அய்யர் இல்லாத பொம்பள, புருசன் கிட்ட அக்ரசிவ்வா பேசற மாதிரி எளுதறாரு. அய்யர் இல்லாத பொம்பளங்க எதுக்காவது புருசன்கிட்ட சண்ட போட்டு பாத்திருக்கீங்களா... வீட்டு விவகாரம் ஆனாலும் சரி, புருசன் சக்களத்தியே வச்சிகிட்டாலும் சரி, "கள் ஆனாலும் கணவன், full ஆனாலும் புருசன்"னு வாழுறவங்க அவங்க. என்ன ப்ரச்னைனாலும் அமைதியா 'என்னங்க இப்படி பண்ணிக்கலாமா, உங்களுக்கு வேணாம்னா வேணாம்" அப்படீன்னு மட்டுமே பேசற பொம்பளை சாதியில ஒருத்தி புருசன்கிட்ட கொஞ்சம் சவுண்டா பேசுற மாதிரி எழுதறாரு. இது தாழ்த்தப்பட்டவங்க மேல மேட்டுகுடிக்கு இருக்கிற காழ்ப்பத்தான காமிக்கிது.

எங்கூருல தேவமாரு ஊட்டுல பொறந்த பையன் அரிசன காலனியில பொண்ண கடத்துனா பொத்துனாப்புல வெட்டிருவோம்.. தாலிய வெட்டி வுட்டுறுவொம்னு இல்ல, ரெண்டு பேரயும் உண்மையிலேயே வெட்டிருவோம். அப்பிடி இல்லையின்னா, பெரியவங்க எல்லாம் எதுவுமே பேசாம இருப்பாங்க. "ஏண்டா பய போயும் போயும் அந்த எசக்கி பொண்ண இழுத்துகிட்டு ஓடிட்டாணாமே.. அவன் சாதி என்ன, நம்ம சாதி என்ன, ஏண்டா இவம் புத்தி இப்பிடி தரங்கெட்டு போவுது"ன்னு எல்லாம் பேச மாட்டோம். நடமுற இப்பிடி இருக்க, ஒரு அய்யிரு கிழவன், "அவா சாதி என்ன" அப்பிடின்னு சாதி அமைப்ப இழிவு படுத்தற மாதிரி பேசற மாதிரி சுஜாதா எழுதியிருக்கிறது அவரோட மன வக்ரத்த தான் காட்டுது.

அட அவரு எழுதினது வெறும் கதைதான்னு சொல்றீங்களா? அது எப்பிடீங்க... அவரு அய்யங்காரு. அவரு கதைய எப்பிடி வெறும் கதையா பாக்குறது. அதுவுமில்லாம அவரு தி.கவோட "எதிர்வினை"ய நைச்சியமா குற்றம்கிற மாதிரி எழுதறாரு... அத அவரு சாதியோட பொது புத்தியாத்தான் பாப்போம்.. இப்ப பாருங்க சாரு நிவேதிதா, அவரு அமெரிக்காவுல இருந்து ஆஸ்திரேலியா வரைக்கும் இருக்கிற பதினாரு வயசு குட்டிங்க கூட எல்லாம் சைபர் செக்ஸ் வச்சி அவளுங்க எல்லாம் இவரத்தான் கண்ணாலம் கட்டிக்கணும் இல்ல அவரோட டைம வேஸ்ட் செஞ்சதுக்காக அட்லீஸ்ட் ஒரு முறை அவரோட படுத்துக்கவாவது செய்யணும்னு பப்ளிக்கா எழுதும்போதும், அவரு பொண்டாட்டிக்கு மனதளவில ப்ரச்னை, அதனால பொண்டாட்டி கூட புணர்வதே இல்லைன்னு செல்ப் தம்பட்டம் அடிக்கும்போது அத அவரோட சாதியோட பொது புத்தியாத்தானே பாக்குறோம். நக்கீரன் ராசகோபால் எப்பயுமே அரசாங்கத்த எதுத்து எளுதறதுக்கு என்ன காரணம். ஏன்னா அது அவரோட சாதியிலயே ஊறியிருக்கு... ஆக சுஜாதாவுக்கு மட்டும் இல்ல அவர் படிக்கிற எல்லாருக்கும் அவரோட தப்பு புரியணுமின்னு நான் இத எழுதறேன். இத நீங்க வெளியிடுவீங்களா? வாழ்க ஜெய்கிந்த் தனித்தமிழகம்.

ஒரு அன்பான வேண்டுகோள் :: என்னிக்கி பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் எல்லாரும் பார்ப்பனீய பத்திரிக்கைகள் படிக்கிறத நிறுத்தி சிறு மற்றும் குறு பத்திரிக்கை மட்டும் படிக்கிற காலம் வருதோ, என்னிக்கி சாதி இல்லாத சமுதாயம் உருவாகுதோ அன்னிக்கிதான் உண்மையான மறுமலர்ச்சி உண்டாகும்... அது வரைக்கும் இப்படிப்பட்ட மறுப்புகள எழுதிகிட்டேதான் இருப்பேன்.. இத நீங்க வெளியிடலேன்னா ஊத்து பத்திரிக்கைல வெளியிட வேண்டியிருக்கும் சாக்கிரதை... இது ஒரு அன்பான வேண்டுகோள் மட்டுமே




š இப்பதிவை மின்னஞ்சலிட


 

2006 பதிவுகள் - லிஸ்டிங் பதிவுகள் பற்றி ஒரு பதிவு


வருசக்கடைசியானா போதும், என்ன பதிவுகள் எழுதலாம்னு யோசிக்கவே வேண்டியதில்லை. போன வருசம் நடந்த பல விசயங்கள பத்தி ஆ(பீ)ராய்ஞ்சி "என் பார்வையில் இது அல்லது அது" அப்படீன்னு கண்ணோட்டப்பதிவா எழுதித்தள்ளிடலாம். ஆமா, இப்படி எழுதறதால என்ன புண்ணியம். புண்ணியமாவது பாவமாவது... பதிவாளன் (பாவபுண்ணிய) கணக்கு பாத்தா என்னவோ கூட மிஞ்சாதுன்னு ப(கி)ழமொழி கேள்விப்பட்டதில்லை?

கண்ணோட்டப்பதிவு சரி, தலைப்பு?
பூமிசூடேற்றம் முந்தைய வருடங்களை விட இவ்வருடம் மட்டும் 3.6 மடங்காக உயர்ந்தது எப்படி?
உலகத்தில் இவ்வருடம் நடந்த நவீன வகை கவலை தரவைக்கும் குற்றங்கள்.
இந்த வருடம் பணவீக்கம் எப்படி, அது வரும் வருடங்களை எப்படி பாதிக்கிறது...
ஸ்டாப் ஸ்டாப்... நீங்க தமிழ் வலைப்பதிவாளர்தானே? என்ன யோசனை இது சிறுபிள்ளத்தனமா... இப்படியெல்லாம் சிந்திக்கப்படாது...


நீங்கள் எழுதவேண்டிய பதிவின் தலைப்பு :
2006 தமிழ் பதிவுகள் - எனது பார்வையில்

சரி. இது ரொம்ப ஈஸிதானே, கண்டமேனிக்கு எழுதலாம்னு ஒரு ஸ்(மை)மால் சந்தோசம்? நோ வே... கண்டமேனிக்கு எழுத இது என்ன இஸம் பற்றிய குறிப்புகளா.. இதுக்குன்னு ஒரு இலக்கணம் இருக்குண்ணே..

**

இலக்கண குறிப்புகள் ::

அ) டிஸ்கி விடுதல் :: முதலில் டிஸ்கி எனப்படும் பின்குறிப்பு எழுதிட்டுதான் பதிவே எழுத ஆரம்பிக்க வேண்டும். பின்குறிப்பு எனப்படுவது : "இது, என் பார்வையில் எனக்கு சிறந்ததாக தோன்றியதை பற்றிய ஒரு குறிப்பு மட்டுமே. என் தேர்வுகளில் ஒன்றிரண்டாவது, 'அட சரியாத்தான் சொல்லியிருக்கான்' என்று உங்களுக்கும் தோன்றினால் அது விபத்தே அன்றி வேறல்ல"

இது ஏன் முக்கியம் :: ஒரு சாம்பிள். நியாயமாக பார்த்தால், இடது சாரி மார்க்சீய சிந்தனைகளை பற்றியும் தென் அமெரிக்க புரட்சிகளை பற்றியும் தமிழகத்தில் உரிமைக்குரல் எப்படி மேல்வர்க்க ஆட்களால் நசுக்கப்படுகிறது என்பது பற்றியும் சென்ற வருடம் 70 பதிவுகள் எழுதி 'இது எனது 70வது பதிவு' என்று வேறு ஒரு பதிவு எழுதி அதில் 69 பேர் வந்து வாழ்த்துக்கள் என்று பின்னூட்டமும் விட்டிருப்பார்கள்.. ஆனால் அதை விட்டுவிட்டு "&%#@ பாப்பான்கள்/பாப்பாத்திகள்" என்று (இங்கே &%#@ என்ற இடத்தில் சாப்பிடும், தூங்கும், குளிக்கும், துணிதோய்க்கும், பாத்திரம் தேய்க்கும், பாட மறுக்கும் என்று எதையாவது ஃபில்லப் செய்துகொள்ளலாம்) எழுதி அவா இவா என்று சில பல வார்த்தைகளை தூவி மொத்தமே ஒரு வருடத்தில் 6 இடுகைகள் மட்டும் போட்டிருக்கும் பதிவரின் பதிவை - பலவித இண்டர்னல் அஃபர்ஸ் காரணமாக - சிறந்த புரச்சிகர பதிவு என்று சொன்னால் எவனாவது பொழுது போகாத பொடலைச்சாமி வந்து அதை கேள்வி கேட்கலாம். அப்போது பின்குறிப்புதான் கைகொடுக்கும். <போல்டு>"என் பார்வையில்" ன்னு சொல்லியிருக்கேன் பாருங்கன்னு பொடலைக்கு பதில் சொல்லி ஈஸி எஸ்கேப் ஆகலாம்.

ஆ) பதிவுகள் தேர்வு :: இப்போது சிறந்த பதிவுகள் பட்டியல் தயாரிக்க வேண்டும். தயாரிப்பு என்பது தமிழ் பதிவு சூழலில் கொஞ்சம் டெலிகஸி சார்ந்த விஷயம்.. அது என்ன என்று பார்க்கும் முன், எத்தனை பேரை "சிறந்த" பட்டியலில் சேர்ப்பது என்பதை முடிவு செய்வோம். அப்படியே கொஞ்சம் கொசுவத்தி சுருள் ஓட்டி தமிழக அரசு கலைமாமணி பட்டம் தரும் வைபவத்தை நினைவு படுத்திக்கொள்ளவும். பணமுடிப்பு, பட்டம், விழா ஏற்பாடு என்று செலவு பிடிக்கும் அதையே மானாவரியாக அள்ளி அள்ளிக்கொடுக்கும்போது, நாம் எதற்காக வஞ்சனை செய்யணும்?

இப்ப டெலிகஸி மேட்டருக்கு வருவோம்... உங்கள் பதிவுகள் தேர்வு கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பட்டியல் படித்து முடிக்கும் வாசகருக்கு உங்கள் "பொலிட்டிகல்லி கரெக்ட்னெஸ்" பளிச்சென்று தெரியவேண்டும். ஆனால் அது உங்களுக்கு அமையவிருக்கும் "லைஃப் டைம் தொடர் வாசகர்" வட்டத்துக்கு பங்கம் ஏற்படுத்தும் அளவில் அமையக்கூடாது. சில சமயங்களில் சீரியஸ் விவாதப்பதிவுகள் வரும். அப்போது ஒரு கோஷ்டி குழுவாக வந்து கும்மியடிக்கும். அதிலிருந்து பவர்ஃபுல் கோஷ்டி எது, இளிச்சவாய் கோஷ்டி எது என்று அடையாளம் காணலாம். அந்த பவர்ஃபுல் கோஷ்டியில் இருந்து அதிகமாக நாய்ஸ் விடுபவரை உங்களின் பட்டியலில் சேர்ப்பது உங்கள் வலைப்பதிவு எதிர்காலத்துக்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

இ) கேட்டகரி தலைப்புகள் :: எந்த தலைப்பும் தராமல், எனக்கு பிடித்த பதிவுகள் என்று மொட்டையாக எழுதலாம். ஆனால் அது சுவாரசியமற்றதாகவும், உங்கள் 'சீசன்டு' எழுத்தாளர் பட்டத்திற்கு அவமதிப்பாகவும் ஆகலாம். ஆகவே என்ன என்ன கேட்டகரியில் பதிவுகளை அறிவிப்பது என்று யோசிக்க வேண்டிவது ரொம்ப முக்கியம். நாமோ பதிவுகள் தேர்வின்போது எக்கச்சக்கமாக தேர்வு செய்துவிட்டோம். அதில் எதையும் விடவும் முடியாது. இப்ப என்ன செய்வது. கவலைப்படாதீர்கள்... கூகுளிலோ அல்லது வேறு ஏதாவது பரிசு தரும் வெப்சைட்டையோ ஃபாலோ செய்து அதிலிருந்து தலைப்பு தேர்ந்தெடுக்கலாம். அல்லது நீங்களே பெர்முட்டேஷன் காம்பினேஷனில் தலைப்பு அமைக்கலாம். உ.ம் :: சிறந்த சமையல் பதிவு, சிறந்த வெங்காய சமையல் பதிவு, சிறந்த சின்ன வெங்காய பதிவு, சிறந்த வெட்டும்போது கண் எரியாமல் இருக்கும் சின்ன வெங்காய பதிவு, இதர இதர இதர...

**

பின் கொறிப்பு :: இந்த பதிவு "மூத்த" வலைஞரான பாஸ்டனை நையாண்டி செய்வது போல் உள்ளது. ஆகையால் (VAI - Vaலைப்பதிவு Aத்தாரிட்டி ஆஃப் Iண்டியா) சட்டத்தின் கீழ் இப்பதிவுக்கு எதாவது 'அடையாள' தண்டனை கொடுத்து கண்காணிக்க வேண்டியது சமூக முன்னேற்றத்துக்கும் சட்ட பாதுகாப்புக்கும் மிகவும் அவசியமானது என்று பெட்டிகோட்சன் போட சுறுசுறுப்பாக மனு தயார் செய்யும் சில்வண்டுகளுக்கு ஒரு வார்த்தை... இது பாஸ்டனை "மட்டும்" குறிவைத்து எழுதப்பட்டது அல்ல

**

கொறிப்புக்கு பின் வரும் குறிப்பு :: பணக்காரனாவது எப்படி என்று எழுதியவனே பிச்சைக்காரனாக இருந்தால் எப்படி? ஆகவே இதோ ஒரு.. 2006 தமிழ் பதிவுகள் - என் பார்வையில்

முன்குறிப்பு :: இது, என் பார்வையில் எனக்கு சிறந்ததாக தோன்றியதை பற்றிய ஒரு குறிப்பு மட்டுமே.

செய்தி :: மருத்துவம், செக்ஸ், வேலைவாய்ப்பு, செய்திக்குறிப்பு, வெட்டி, வீண்வம்பு, தும்பு, அரசியல் கட் பேஸ்ட், அரசியல் அலசல், தன் கட்சி தலைவனை புகழ்தல், எதிர் கட்சியை சேர்ந்த தலைவனை சாதி சொல்லி திட்டுதல், விஞ்ஞானம், அஞ்ஞானம், ஆராய்ச்சி, அபிவிருத்தி, உண்மையான புரட்சி குறிப்பு, சரோஜாதேவி டைப் புரட்சி குறிப்பு, திராவிடம், தமிழ் வளர்ச்சி, தமிழ் அவளர்ச்சி, தமிழுக்காக வெறும் சவுண்டு மட்டும் கொடுப்பது போன்ற கேட்டகரிகளில் சிறந்த பதிவர்களாக நான் கருதும் பதிவர்கள் பற்றி அறிய இங்கே சொடுக்கவும் இப்போது, இந்த பட்டியலில் இருக்கும் பதிவர்கள் அனைவரும் கீழ்க்கண்ட இன்ஷ்டண்ட் பின்னூட்டங்களில் ஒன்றையாவது இப்பதிவில் பின்னூட்டம் இடவில்லை என்றால் அவர்களுக்கு தூங்கும்போது கண் தெரியாமல் போகக்கடவது.

அ) இயர் எண்ட், என்ன பண்ணுவது என்று முழிக்கும் நேரத்தில் அவசியமான பதிவு. நீங்கள் குறிப்பிடும் எல்லாவற்றையும் படிக்கிறேன்.
ஆ) அனைவரையும் என் டெம்பிளேட்டில் சேர்த்துவிட்டேன். இப்போதுதான் பேஜ் லோடிங் ஆக அதிக நேரம் ஆகிறது. மகிழ்ச்சியாக இருக்கிறது.
இ) இன்னா நைனா ஒரே கும்மாங்குத்தா கீதே.
ஈ) என் பதிவை நீங்கள் குறிப்பிட்டிருப்பது மிகவும் ஊக்கமளிப்பதாக இருக்கிறது.
உ) என் பதிவை "நீங்கள்" குறிப்பிட்டிருப்பது மிகவும் வருத்தமாகவும், வேதனையாகவும், வெட்கமாகவும், சோகமாகவும் இருக்கிறது.



š இப்பதிவை மின்னஞ்சலிட


 

புதுப்பிக்கப்பட்ட தளம்


எங்கள் அலுவலகம் இருக்கும் கட்டிடத்தின் பதினான்காவது மாடியில் அலுவலகம் நடத்திக்கொண்டிருந்த டுபாக்கூர் & கோ தங்கள் சொந்த கட்டிடத்தில் குடிபெயர்ந்த பிறகு அந்த தளத்தையும் எங்கள் ஆட்களே குத்தகைக்கு எடுத்துவிட்டார்கள். அதை ஸ்டேட்-ஆஃப்-த-ஆர்ட் தளமாக நிர்மாணிக்கப்போவதாக கேள்விப்பட்டபோது, அட நம்மாளுங்களுக்கு கூட இப்படியெல்லாம் யோசிக்க தோன்றுமா என்று நாங்கள் ஆச்சரியமாக பேசிக்கொண்டோம். அதற்கப்புறம் பொழுதுபோகாதவர்கள் எல்லாம் இது சம்பந்தமான மெயில்கள் பரிமாறும்போது மட்டும் இப்படி ஒன்று இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது என்று தெரியவரும். திடீரென ஒரு நாள், தள நிர்மாணம் முடிவடைந்துவிட்டது என்றும் திறந்த வீட்டில் நுழைந்து பார்க்க (open house) வரும் வெள்ளி அன்று அனைவரும் வரலாம் என்றும் மெயில் வந்தது. அன்று வேலைப்பளுவால் செல்லவில்லை. அதற்கப்புறம் அங்கு செல்லவே வாய்ப்பு கிடைக்கவில்லை. சரி, ஈயடிக்கும் இடத்தில் எறும்புக்கு என்ன வேலை... அங்கு வேறு டிபார்ட்மெண்ட்.

இன்று காலை பதினான்காவது தள கான்பரன்ஸ் அறையில் நடக்கும் தங்களது மீட்டிங்கில் கலந்து கொள்ள வருமாறு 'அவசியம் கலந்துகொள்ளவேண்டியவர்கள்' பட்டியலில் பெயர் போட்டு மெயில் வந்ததும் வேறு வழியில்லாமல் பதினான்காவது தளத்துக்கு சென்றேன். எங்கள் மீட்டிங் நடக்க வேண்டிய அறையில், அதற்கு முன்பு மீட்டிங் போட்டிருந்தவர்கள் இன்னமும் முடிக்காமல் கடலை வறுத்துக்கொண்டிருந்தார்கள். சரி அப்படி என்னத்தை ஸ்டேட் ஆப்பு த ஆர்ட்டு கட்டிவிட்டார்கள் என்று சித்தி ச்சே சுத்தி பார்த்து வரலாம் என்று கிளம்பினேன்.

சிரிப்புதான் வந்தது. தனித்தனி cubicleஆக இருந்ததையெல்லாம் அப்புறப்படுத்தி ஓபன் டைப் ஆபிஸ் என்று நெஞ்சு வரை மட்டும் தடுப்பு ஏற்படுத்தி இந்த மூலையில் நின்று பார்த்தால் அந்த மூலையில் இருப்பவனை பார்க்கலாம் என்ற அளவில் கல்யாண மண்டபம் போல் ஆக்கிவிட்டிருந்தார்கள். இது வித்தியாசமாக இருந்தாலும் நமக்கு ஸ்டேட் ஆர்ட் எல்லாம் இல்லை. ரொம்ப காலமாகவே நம்மூரில் - இடப்பற்றாக்குறையால் - நிர்மாணிக்கப்படும் ஆபிஸ் தள டிசைன்தான். நம்மூரில் நான்கு பேர் முதுகோடு முதுகு இடித்துக்கொண்டு இருப்போமே அதையே இங்கு ஏகப்பட்ட இடம் விட்டு நடுவில் ஒரு தடம் விட்டு ஓபன் ஆபிஸ் என்று வைத்திருந்தார்கள்.

சரி, தனித்தனி க்யூபிக்கலில் ஜில்பான்ஸி ஆடிக்கொண்டிருந்தவர்களை ஒருவரின் கண்ணி திரையை குறந்தது அவருக்கு diagonal ஆக அமர்ந்திருக்கும் - குறைந்த பட்சம் - நாலு பேராவது பார்க்க இயலும் எனும் சூழ்நிலையில் விட்டால்... இந்த ஏற்பாடு சகிக்கவில்லை என்று நான் சந்தித்த அனைத்து ந(ண்)பர்களும் குறிப்பிட்டார்கள். முக்கால்வாசி ஆட்கள் docking stationஐ உபயோகப்படுத்தாமல் மடிக்கணினியை மூலையில் வைத்துக்கொண்டு வழக்கம் போலவே ஸ்டாக் மார்கெட்டோடு போராடிக்கொண்டிருந்தார்கள். யாருக்குமே ப்ரைவஸி என்பதே கிடையாது. கான்பரன்ஸ் அறைகள் கூட கண்ணாடி தடுப்புகள் ஊடே அமைக்கப்பட்டிருந்தன. முக்கியமான மீட்டிங் என்றால் பாதிப்பேரின் கண்கள் கான்பரன்ஸ் அறைகளையே பார்த்துக்கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்பவர்களின் முகபாவங்களை வைத்தே அறையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை ஆராய்ச்சி செய்யும் அளவுக்கு நிறைய பேருக்கு மனோதத்துவம் கைவசப்பட்டிருந்தது.

மற்ற தளங்களை விட கிச்சன் மிகவும் பெரிதாக இருந்தது. நான்கு குளிர்சாதன பெட்டிகள் (அதே அளவு ஆட்கள் இருக்கும் எங்கள் தளத்தில் இரண்டு), நான்கு புதிய பெரிய மைக்ரோவேவ் (பழைய சிறிய இரண்டு), புதிய வகை காப்புசினோ மெசின்கள் இரண்டு (பழையது ஒன்று), அதிநவீன வெண்டிங் மெசின்கள் மூன்று (பழையது ஒன்று) என்று கலக்கலாக இருந்தது. "இங்கு மெயிடுகள் கிடையாது. இதை நீங்களேதான் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்" என்ற சாயம் போன ப்ரிண்ட்-அவுட்டில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை.

சுத்திய வரை போதும் என்று கான்பரன்ஸ் ஹால் வந்தால் பழைய மீட்டிங் இன்னமும் முடிவடைந்திருக்கவில்லை. சரி என்று பாத்ரூம் பக்கம் நடையை கட்டினேன் (வெறுமே சுத்தி பார்க்க மட்டும் இல்லை). பாத்ரூமும் கலக்கலாக இருந்தது. விஸ்தாரமான அறையில் ஒரு சோபா போட்டிருந்தார்கள். ஏற்கனவே நிறைய பேர் காலையில் எழுந்து வந்து இங்குதான் பாதி வேலையை முடிக்கிறான்கள், இந்த லட்சணத்தில் சோபா வேறா.. உருப்பட்டா மாதிரிதான் என்று நினைத்துக்கொண்டேன். மேலும் தண்ணீர் புழங்கும் அறையில் இப்படி துணி சோபா போட்டிருக்கிறார்களே, விரைவில் mold பிடித்துவிடாதா என்ற யோசனையில் 'காரியமாற்றும்' இடத்தை பார்த்தால் அதிர்ச்சி. நின்ற வாக்கில் செயலாற்ற உதவும் பீங்கான்களை காணோம். அடப்பாவிகளா புதுமை என்ற பெயரில் இதற்கு கூடவா ஆப்பு வைக்க வேண்டும் என்று கம்மோடு அறையில் நுழைந்து "ஆஜா ஆஜா ஆஜா (ஜில்லுன்னு ஒரு காதல்)" விசிலடித்துக்கொண்டே வேலையை முடித்துவிட்டு, கை கழுவ வந்து பார்த்தால் முதல் குழாயில் தண்ணீர் வரவில்லை. அதானே, என்னதான் புதுசாக இருந்தாலும் இப்படி ஏதாவது திருஷ்டி இருக்க வேண்டுமே என்று எதிர்பக்க கடைசி குழாய்க்கு நகர்ந்து (பீங்கான், கம்மோடு, தண்ணீர் குழாய் என்று எதாக இருந்தாலும் ஒன்று இந்த கடைசி அல்லது அந்த கடைசி என்றே தேர்ந்தெடுக்கும் எனக்கு ஏதாவது ப்ரச்னையா) கைகழுவிவிட்டு பக்கத்தில் இருந்த டவல் ஹோல்டரை பார்த்தால் பேப்பர் டவல் இல்லை. சரி என்று பழைய மூலைக்கு திரும்பி வந்து அல்ட்ரா சாஃப்ட் பேப்பர் டவலில் கைதுடைத்துவிட்டு பாத்ரூமை விட்டு வெளியேறும் சமயம் பாத்ரூம் டிசைனை பற்றியதாக சிந்தனை மாறியது.

மூடியிருந்த ஆபிஸை திறந்த வெளியாக்கியதாவது வேண்டுமானால் ப்ரொடக்டிவிட்டுக்கு உதவினாலும் உதவலாம், ஆனால் பாத்ரூமை மூடப்பட்ட அறைகளாக மாற்றியது எந்த விதத்தில் உபயோகம். தனித்தனி அறையால் சில நேரங்களில் நெரிசல் + க்யூ ஏற்பட்டு அதனால் அனாவசியமான நேர விரயம்தானே ஏற்படும் என்ற சிந்தனையில் வெளியேறியபோது 'ஏச்சி ஏச்சி என்ன பேச்சு' என்ற வரியில் இருந்த என் விசில் அப்படியே நின்றது. தட்டிய பொறியில் திரும்பி மேலே பார்த்தேன். WOMEN என்று எழுதியிருந்தது.




š இப்பதிவை மின்னஞ்சலிட