Tuesday, March 23, 2010

சபாஷ் ‘புரட்சி தலைவி’ குஷ்பு


குஷ்பு தெரிவித்த கற்பு குறிப்புகளுக்கு பிறது கருத்து சுதந்திரத்துக்கு எதிராக 2005ல் ஆரம்பித்த ப்ரச்னை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. தலித் முன்னேற்ற அரசியல் என்று ஆர்வக்கோளாறில் ஆரம்பித்து பின்பு எந்த திக்கில் போவது என்றே தெரியாமல் எதையாவது செய்து பேப்பரில் பெயர் வந்தால் போதும் என்ற அளவில் செட்டில் ஆன நடிகர் திருமாவளனும், பச்சோந்தி மக்கள கட்சியின் அரசியல் அனாதை ராமதாஸும் இந்த இருவரின் கட்சி(?!) பொறுக்கிகளும் இதை சாக்காக வைத்து இன்னொரு 15 நிமிட புகழுக்காக அடித்த ஆட்டம் கொஞ்ச் நஞ்சமல்ல. இதே கருத்தை வேறு ஒரு பவர்ஃபுல் அரசியல்வாதி சொல்லியிருந்தால் வாலை காலுக்கு இடையில் கிடைத்த இடத்தில் மறைத்துக்கொண்டு ஓரமாக கிடந்திருக்கக்கூடிய சில்லுண்டிகளெல்லாம் எவ்வித அரசியல், அதிகார பலமும் இல்லாத காரணத்தால் குஷ்புவை சிலுக்குவார்ப்பட்டி கோர்ட் வரை இழுத்ததும், இந்த பொழைப்பு கெட்ட கேஸையெல்லாம் தள்ளுபடி செய்யாமல் ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு அப்படியாவது குஷ்புவை நேரில் பார்க்கலாம் என்றோ என்னவோ பிடிவாரண்ட் பிறப்பித்த கோர்ட்டுகளும் அடித்த கூத்துக்கள் ஒரு கேலிக்குறி.

தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கேஸ், அரசியல் தொண்ட ரவுடிகளால் மிரட்டல் என்று பல மன உளைச்சல்களுக்கு இடையிலும் குஷ்பு தமிழகத்திலேயே இருந்தது ஒரு பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். ஏனெனில் பயந்து போய் இந்திய குடியுரிமையை ரத்து செய்துவிட்டு நீலிக்கண்ணீர் விட்டு கத்தாரில் தஞ்சம் புகுந்திருந்தால் நம் நாட்டு அறிஞர் பெருமக்கள் கண்டிப்பாக ஒரு (நடிப்பு) கலைஞரை பாதுகாக்க வக்கில்லாத இந்திய நாட்டை ஒரு பிடி பிடித்திருப்போம். (யாருப்பா அது, குஷ்பு பிறப்பால் இஸ்லாமியர் என்று சம்பந்தமில்லாம கூவுறது) அதை விடுத்து மாஜிஸ்ட்ரேட், உயர் என்று பல படிகளை தாண்டி இன்று உச்ச நீதிமன்றத்தை தொட்டிருக்கிறார். இன்னமும் தீர்ப்பு வரவில்லை. ஆனால் sane மக்கள் கொஞ்சம் பேராவது இருக்கிறார்கள் என்பதற்கான அறிகுறி கீழ்க்கண்ட செய்தியில் இருப்பது நம்பிக்கையளிக்கிறது.

**


திருமணத்துக்கு முன் சேர்ந்து வாழ்வதோ, செக்ஸ் வைத்துக் கொள்வதோ குற்றமல்ல: குஷ்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

டெல்லி: திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, வயது வந்த ஆணும் பெண்ணும் திருமணம் [^] செய்து கொள்ளாமலே​ சேர்ந்து வாழ்வதோ குற்றமல்ல என்று நடிகை குஷ்பு தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வது குறித்து நடிகை குஷ்பு, கடந்த 2005ம் ஆண்டு ஒரு பத்திரிகைக்கு பேட்டி அளித்திருந்தார்.

அவரது கருத்துக்கு எதிராக, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் 22 கிரிமினல் வழக்குகள் தொடரப்பட்டன. அவருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன.

இந்த 22 வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் குஷ்பு மனுத் தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை கடந்த 2008ம் ஆண்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் குஷ்பு அப்பீல் செய்தார்.

இந்த மனுவை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன், நீதிபதி தீபக் வர்மா, நீதிபதி பி.எஸ்.சவுகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.

நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது. அப்போது புகார் [^] மனுதாரர்களின் வழக்கறிஞர் வாதிடுகையில், நடிகை குஷ்புவின் கருத்தால் இளைய சமுதாயம் கெட்டுப்போய் விடும் என்றும், நாட்டின் பண்பாடும், கலாசாரமும் வீழ்ச்சி அடைந்து விடும் என்றார்.

அப்போது, அந்த வழக்கறிஞரை நோக்கி நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர். நீதிபதிகள் எழுப்பிய கேள்விகள் விவரம்:

திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு வைத்துக் கொள்வதோ, திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வதோ குற்றமல்ல. அவற்றை தடை செய்ய சட்டத்தில் இடமே இல்லை. இந்த செயல்கள் எந்த விதிப்படி குற்றம் என்று நீங்கள் சொல்லத் தயாரா?

வயது வந்த இருவர் சேர்ந்து வாழ விரும்பினால், அதில் என்ன தவறு? அது குற்றமா?. சேர்ந்து வாழ்வது குற்றமல்ல. புராணங்கள் சொல்வதன்படி, பகவான் கிருஷ்ணரும், ராதையும் கூட சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது என்பது `வாழும் உரிமை'. வாழும் உரிமையையும், சுதந்திரத்தையும் அடிப்படை உரிமை என்று அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு கூறுகிறது.

நடிகை குஷ்பு கூறியது, அவரது தனிப்பட்ட கருத்து. அது உங்களை எப்படி பாதித்தது? எப்படி உங்களுக்கு கவலை ஏற்படுத்தியது? தனிப்பட்ட முறையில் தெரிவித்த அந்த கருத்து, எப்படி குற்றம் ஆகும்? எந்த சட்டவிதியின்படி குற்றம் என்று விளக்குங்கள் பார்பபோம்.

குஷ்புவின் கருத்துகள் இளைஞர்கள் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும் என்று வாதிடுகிறீர்களே,​​ அதன்படி இந்த பேட்டியைப் படித்துவிட்டு வீட்டைவிட்டு ஓடிப்போன பெண்ணையோ பிள்ளையையோ உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?

குஷ்புவின் பேட்டிக்கு பிறகு, அதனால் எத்தனை இளம் பெண்கள் வீட்டை விட்டு ஓடினார்கள் என்று ஆதாரம் காண்பிக்க தயாரா? எத்தனை குடும்பங்கள், வீடுகள் பாதிக்கப்பட்டன என்று விளக்கத் தயாரா?.

திருமணம் செய்து கொள்ளாமலே ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்ந்தால் அவர்கள் முறைகேடான செயலில்தான் ஈடுபடுவார்கள் என்ற அனுமானத்தில் எப்படி நாம் இறங்க முடியும்?.

ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழலாம் என்று குஷ்பு சொன்னது எந்த சட்டப்படி குற்றம் என்று உங்களால் கூற முடியுமா?.

இவ்வாறு சரமாரியாக கேள்விகள் எழுப்பிய நீதிபதிகள், புகார்தாரருக்கு மகள்கள் இருக்கிறார்களா? என்று கேட்டனர். அதற்கு `இல்லை' என்று வழக்கறிஞர் பதில் கூறவே, பிறகு எப்படி அவர் பாதிக்கப்பட்டார்? என்று கேட்ட நீதிபதிகள் தொடர்ந்து,

நடிகை குஷ்பு தெரிவித்தது அவருடைய சொந்தக் கருத்து.​ அது எப்படி உங்களை பாதிக்கிறது?​ அவர் பேசியது எங்களை பாதிக்கவில்லை என்றனர்.

பின்னர் இந்த மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.



Monday, September 17, 2007

மெட்டி ஒலி காற்றோடு - பாகம் II


முன்பொரு காலத்தில் தன்னைத்தானே எழுதிக்கொண்ட ஒரு சிறுகதையின் மிச்சம்.

....

என் தேவதை அவள்.. அவள் கண்களில் நான் கடைசி வரை காண விரும்பாத விஷயம் அது... எதுவும் பேசாமல் வழிவிட்டேன்... இந்த முறை கடைசி வரை திரும்பி பார்க்கவே இல்லை... அதற்கப்புறம் அவள் பேசுவாள் பேசுவாள் என்று தொலைபேசியை நம்பிக்கையோடு பார்த்த நாட்கள் நிறைய. ஆனால்... நானாக தொடர்பு கொள்ள செய்த முயற்சி எல்லாவற்றிலும் என் குரல் கேட்டவுடன் எதிர்முனையில் வெறும் மௌனம்தான் கேட்கும்.

"ஏண்டா.. என்ன திடீர்னு வந்துட்ட.. திரும்பி வேலைக்கும் போகல?"

"ஆமா, என்ன பெரிய வேலை. எனக்கு பிடிக்கல..."

மூணு வாரங்கள் அப்படியே போனது. ரயில்வே ஸ்டேஷன் ஜமாவில் டேவிட் மட்டும்தான் கவனித்தான்.

"என்னடா, எப்பவும் நாளைக்கு நாலு தம்முக்கு மேல அடிக்க மாட்ட, இன்னிக்கி என்ன.. வந்து ஒன் அவர் ஆகல அதுக்குள்ள ஒரு பாக்கெட் காலி. அதுவுமில்லாம எப்பவும் எவனையாவது தாளிச்சிகிட்டே இருப்ப.. ரெண்டு நாளா கம்முன்னே இருக்க.. என்ன மேட்டரு"

இதுவரை யாரிடமும் பகிர்ந்துகொண்டதில்லை. அவளுக்கு பிடிக்காது.

"ஒண்ணுமில்லடா"

"என்ன அந்த பொண்ணு மேட்டரா?"

நிமிர்ந்து பார்த்தேன்.

"எல்லாம் குத்துமதிப்பா யூகிச்சி வச்சிட்டோம்டா.. நீயா என்னிக்காவது சொல்லுவன்னு வெயிட் பண்ணோம். என்ன ஆச்சு திடீர்னு"

"தெரியில..."

"...."

"...."

"சரி விடு. சும்மா நீ என் ஃப்ரண்டுன்னு இத சொல்றேன்னு நினைக்காத.. சீரியஸா சொல்றேன். அவளுக்கு கொடுத்து வச்சது அவ்ளோதான்... வேலைய பாரு"

கோயமுத்தூர் ரூம்மேட்டுக்கு ஃபோன் செய்து அப்படி அப்படியே போட்டுவிட்டு வந்த என் சமாச்சாரங்களை அடுத்த முறை அவன் ஊருக்கு வரும்போது வீட்டில் தந்துவிடுமாறு சொல்லிவிட்டு சென்னைக்கு பஸ் ஏறினேன். வந்தாரை வாழவைக்கும் ட்ரிப்ளிக்கேன் மேன்ஷனில் எனக்கும் ஒரு இடம் கிடைத்தது.

சென்னையில் படிப்புக்காக பணம் பிரட்ட அலைந்தது, கிடைத்த வாய்ப்புக்கு பங்கம் வராமல் படித்தது அல்லது படிக்க முயற்சித்தது, பகலெல்லாம் பல்லவன் பல்லனாக வேலை தேடி அலைந்தது, பீச்சாங்கரையில் இரவு நேர நிலா ஒளி + மாமாக்கள் அறிவுரைகளுக்கு மத்தியில் தண்ணியடித்து நீந்தியது என்று ஓட்டி ஒரு வேலையில் உட்கார்ந்த போது ஒன்றரை வருடங்கள் ஆகியிருந்தது. குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தபோது அவளை 'அகஸ்மாத்தாக' சந்திக்க கிடைக்கும் வாய்ப்புகளும் அடைக்கப்பட்டது. அதற்கப்புறம் இரண்டு நாடுகள் மாறி இன்னுமொரு மூன்றாண்டுகள் கழித்து வெகேஷனில் ஊருக்கு போயிருந்த போது ஆங்காங்கே சிதறிப்போயிருந்த நண்பர்களை வலுக்கட்டாயமாக ஏற்பாடு செய்து சந்தித்த ஒரு மாலைப்பொழுதில் பேச்சுவாக்கில் டேவிட் கேட்டான்.

"ரயில்வே ஸ்டேஷன்ல நாம பேசினமே ஞாபகம் இருக்கா.. இப்ப நினைச்சா தமாஷா இருக்கு இல்ல"

"இல்ல..."

"இன்னுமா ஞாபகம் வச்சிருக்க"

"ஒரு ஓரமா.. ஆமா இப்ப அவள பத்தின டீடய்ல்ஸ் யார்ட்ட கிடைக்கும். அவ பழைய நம்பர்க்கு ஃபோன் பண்ணா உபயோகத்தில் இல்லைன்னு வருது"

"நம்ம மலையாளத்தான்கிட்ட இருக்கும். அவன் இப்ப பெங்களூர்ல இண்டியன் எக்ஸ்ப்ரஸ்ல இருக்கான்"

*

"டேய்.. நாந்தாண்டா"

"சொல்லு.. எப்ப வந்த"

"அதெல்லாம் நேரில பேசிக்கலாம். நீ அடுத்த ஃப்ளைட்ட புடிச்சி மெட்ராஸ் வா"

பத்தரை மணிக்கு கால்டாக்ஸியில் மலையாளத்தான் வந்து இறங்கிய போதே பாதி பேர் மட்டையாகியிருந்தனர். அப்புறம் முதல் விமான பயணத்தின் பக்கத்து இருக்கை ஃபிகரிடம் நடந்த கடலை பற்றியெல்லாம் விவரித்துவிட்டு மலையாளத்தான் மலையேறிய போது மணி மூன்றரை. டேவிட் கேட்டான்.

"டேய், அந்த இன்ஸ்டிட்யூட்ல வேலை செஞ்சுதே ஒரு பொண்ணு.. ஞாபகம் இருக்கா.. நீ அவங்க ஃபேமிலி கூட எல்லாம் நல்லா பழக்கம் இல்ல"

"நல்லான்னு இல்ல.. ஓரளவு. அவங்கப்பா அவங்க ஆபிஸ் மேட்டர் எல்லாம் நம்ம கடையிலதான் ப்ரிண்டிங்கு கொடுப்பாரு.. அந்த பொண்ணு மேல இவனுக்கு ஒரு கண்ணு இல்ல"

"அதெல்லாம் கிடக்கட்டும், அவங்க இப்ப எங்க"

"அவங்க அப்பாவுக்கு அப்பவே வேலூருக்கு ட்ரான்ஸ்பர் ஆகிடுச்சிடா.. அதுக்கப்புறம் அவ்வளவா கான்டாக்ட் இல்ல"

"வேலூர் நம்பர் உங்கிட்ட இருக்கா"

"பெங்களூர்ல இருக்கு.. திங்கக்கிழம ஊருக்கு போனவுடனே போன் பண்ணி சொல்றேன்"

செவ்வாய்க்கிழமை வேலூர் நம்பருக்கு போன் செய்தபோது "இல்லீங்களே... ஆறுமாசமா இந்த நம்பர் எங்களுதுதான்.. அப்படி யாரும் தெரியாதுங்களே" என்றார்கள்.

நான் இந்தியாவில் இருந்து திரும்பிய இரு மாதங்களில் அவளுக்கு கல்யாணம் ஆனது என்ற செய்தியை பிறகு மலையாளத்தான் இ-மெயில் செய்தான்.

**

ஊரிலிருந்து வந்திருந்த அம்மாவுடன் லாங் வீக்கெண்டுக்காக நயாகராவுக்கு பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். அருவி என்றவுடன் பழைய அருவிப்பயண கதைகள் எல்லாம் ஞாபகத்துக்கு வர..

"அப்ப ஒரு தடவ சித்தப்பா ஃபேமிலியோட வந்தப்போ, எத்தனை தடவ இந்த அருவிய பாக்குறது எனக்கு போரடிக்குதுன்னு, நான் ஒகேனக்கலுக்கு வரலைன்னு சொல்லி சித்தப்பா ஏகத்துக்கும் அப்ஸெட் ஆயிடுச்சே.. அன்னிக்கி நான் வராததுக்கு காரணம் வேற...போக வேண்டாம்னு எல்லாம் அவ சொல்லல.. போகணுமான்னு கேட்டா, நான் தான் வரலன்னுட்டேன்"

"என்னங்க அம்மாவுக்கு முன்னாடியே இதெல்லாம் சொல்றீங்க"

"ஆமா.. ஏழு வருசம் ஆயிடுச்சி.. இனி என்ன.. எல்லாம் கனவு மாதிரி இருக்கு. அதுவுமில்லாம அம்மாவுக்கும் அப்பவே அரசல் புரசலா தெரியும் ஏம்மா?"

"அரசல் புரசலா என்ன.. நல்லாவே தெரியும்... நீ கோயமுத்தூர் வேலைய விட்டுட்டு வந்தியே அதுக்கு ஒரு ரெண்டு நாள் முந்தி மிஷினுக்கு போயிட்டு திரும்பி வரும்போது இண்ஸ்டிட்யூட்ல அந்த பொண்ண பார்த்தேன். என்னன்னு இப்ப ஞாபகம் இல்ல, ஆனா அன்னிக்கி அதுகிட்ட ஒரு அஞ்சு நிமிசம் பேசிட்டுதான் வந்தேன்..."



Friday, September 14, 2007

அழுவாச்சி காவியங்களும் அல்லக்கை இம்சைகளும்


வலைப்பதிவை விட்டு போகிறேன். திரட்டியை விட்டு கிளம்புகிறேன். ஒரு மாதம் ஊருக்கு போகிறேன். மூணு நாட்களுக்கு கையில் சுளுக்கு. என்றெல்லாம் பல ஜல்லிகளை கொட்டிவிட்டு காணாமல் போவதும் பின்பு ஏதோ ஒரு காரணம் சொல்லி திரும்பி எழுதுவதும் அல்லது எழுதாமல் இருப்பதும் தொன்று தொட்ட நிகழ்வுதான். ஆனால் சமீப கால போறேன் பதிவுகள் வலைப்பதிவுலகை நெசமாலுமே அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி சென்றிருக்கின்றன.

ஒரு வலைப்பதிவாளன் எழுதாமல் இருப்பதால் யாருக்கும் ஒரு மசுரும் பாதிப்பு கிடையாது என்பதுதான் நிதர்சனம். உலகம் ரொம்ப பெரிசு. பெரிய புடுங்கி எழுத்தாளன் என்றெல்லாம் எவனுமே இல்லை. ஒரு காலத்தில் வாரம் நான்கு 'இடுகைகள்' தன் தளத்தில் எழுதிக்கொண்டிருந்த சாருநிவேதிதா - இப்பல்லாம் இப்படிப்பட்ட பெயர்களை தூவி எழுதுனாத்தான பதிவுக்கே கெத்து, கத்துகுட்டி வாசகன் நம்மள மதிப்பான் - இப்பொழுதெல்லாம் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை எழுதுகிறார். வெகுசன பத்திரிக்கைகள் மூலம் வாரா வாரம் லடச்க்கணக்காணவர்களுக்கு எழுதிக்கொண்டிருந்த பல எழுத்தாளர்களின் கட்டுரைகள் நிறைவு பெற்றிருக்கின்றன. அய்யய்யோ எழுதுனத நிறுத்தினதால வாசகனுக்கு பயங்கர பாதிப்பு, அவனுக்கு கை கால் இன்னபிற சமாச்சாரங்கள் இயங்கல அப்படீன்னு எவனும் அழுவறதில்லை. தமிழ் வலையுலகிலயே அருமையாக எழுதிக்கொண்டிருந்த பலர் திடீரென காணாமல் போயிருக்கிறார்கள். உலகம் தலைகீழாக எல்லாம் சுற்றவில்லை. வலைப்பதிவுங்கிறது டைரி குறிப்பு மாதிரி. எழுத முடிஞ்ச நாள்ல எழுது. இல்லியா வுடு. இல்ல எங்கிட்ட புலம்பறதுக்கு ஏகப்பட்ட மேட்டர் இருக்குங்கிறியா. புலம்பு. எல்லாரும் செய்யிறதுதான்.. ஆனா, கடைசியில இனிமே எழுதமாட்டேன் பஞ்ச் டயலாக் எதுக்கு.

ரொம்ப நாளைக்கு முன்ன சடார்னு நன்றின்னு சொல்லிட்டு கிளம்புன யாரோ ஒருவரிடம் ஒரே முறை நான் சொன்னதுதான் :: "ஊர் கூட்டி அறிவிப்பெல்லாம் எதுக்கு. எழுத எண்ணமில்லை, விருப்பமில்லை, சூழ்நிலை இல்லை, விஷயம் இல்லை என்றால் எழுதாதீர்கள். மீண்டும் எப்பொழுது அமைகிறதோ எழுதுங்கள். உங்களுக்கு என்று வாசக வட்டம் சதுரம் எதாவது இருந்தால் தாங்களாகவே புரிந்து கொள்வார்கள். இல்லாதவர்களுக்கு ஒரு நஷட்முமில்லை" அவ்வளவுதான்.

ஆனால் சமீபமாக இத்தகைய போகிறேன் பதிவுகளை ஒட்டி நிகழும் அபத்தங்கள் சுவாரசியம் நிகழ்ந்தவையாக இருக்கிறது. முன்பெல்லாம் போகிறேன் என்றால் பத்து பேர் மறுபரிசீலனை செய் என்று பின்னூட்டுவார்கள். போறேன்னு சொல்பவன் என்னை போன்ற ஆள் என்றால் ரொம்ப சந்தோஷம் ஒழிஞ்சி போ என்று பின்னூட்டுவார்கள். ஆனால் தற்கொலை செய்பவன் மனோநிலைக்கு சற்றும் குறைவில்லாத வகையில் கழிவிரக்கமும் சுயபச்சாதாபமும் கலந்து சமைக்கப்பட்டு ஒரு பதிவு வருவதும், அதில் ஏதோ ஒரு நபரை குறிப்பிட்டு அவன் என் பலப்பத்தை உடைச்சிட்டான், துண்டு பீடி வலிச்சிகிட்டு அதுக்கு துட்டே தரல என்றெல்லாம் சுயபுராணங்கள் பாடுவதும் பின்பு சேந்து அடிச்ச தண்ணிக்கான நன்றிக்கடனுக்காக நாலஞ்சு பேர் தனிப்பதிவாக போட்டு போனவனை அழைப்பது + அவன் எதிரியை கும்முவது என்று மொக்கை போடுவதும் மூணு நாள் கழித்து இன்னின்ன காரணங்களுக்காக திரும்பி வந்திட்டேன் என்று வருவதும் எஸ்.வி.சேகரின் துணுக்கு தோரண நாடக வடிவத்துக்கு சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது.

சமீபத்தில் கூட வேறு ஒரு வலைப்பதிவு விஷயமாக வந்த ஒரு தொலைபேசி அழைப்பின்போது - எனக்கும் அமெரிக்காவில் இருந்து எல்லாம் தொலைபேசி வரும். என்ன எழவு, ஃபாரின் கால் வந்தது என்று பீலா விட முடியாது - சாதி சொல்லி திட்டிட்டாங்க போயிட்டு வாரேன் விவகாரம் குறித்து நான் பேசியதை பிரசுரித்தால் - அப்புறம் நான் சொன்னதுதான் நடந்தது என்றாலும் - பலருக்கு பி.பி எகிறும்.

இதில் உச்சபட்ச காமெடி அல்லக்கைகளின் உணர்ச்சிவசப்படுதல் கொசுக்கடிதான்.

சந்தையில் கந்துவட்டி வசூல் செய்ய வரும்போது மாமூல் கணக்கு போக சந்தடி சாக்கில் ப்ளாட்ஃபாரம் ஓரமாக படுத்து கிடப்பவனிடம் 'தலைகிட்ட சொல்லிடுவேன்' என்று மிரட்டி அஞ்சு பத்து சுருட்டிக்கொள்ளும் மொட்டைபாஸின் அடியாட்களின் ஒருவன் - ஆதாரத்துக்கான ஸ்க்ரீன்ஷாட்ஸ் தரன் மற்றும் டூண்டு பதிவுகளில் காணக்கிடைக்கும் - மாதிரியான செந்தழல் ரவி போன்ற அல்லக்கைகள் கொரியா போகும் அவசரத்திலும் கக்கூஸில் உட்கார்ந்து கொண்டு பெருமூளையின் பெரும்பகுதி கம்மோடில் கழிந்தது போக மிச்ச மீதி சிறுமூளையை கசக்கி முகமூதியின் மனநிலையை ஆராய்கிறேன் பேர்வழி என்று மொபைல் போன் மூலம் பதிவு போட்டு பிறாண்டிக்கொண்டு திரியும்..இவன் மூக்கு நுனி சுதந்திரம் பற்றியெல்லாம் பேசுவது செம காமெடி. நமக்கு என்ன மொக்கை தெரியுமோ அதோட நிறுத்திக்கணும். அதிக பட்சமா ஆபிஸ்ல இருக்கிற அடுத்தவன் வூட்டு பொண்ணுங்க போட்டோ எல்லாத்தையும் - அவங்களுக்கு எல்லாம் நீ பண்றது தெரியுமா - வலையேத்தி ஜொள்ளு பார்ட்டிங்களுக்கு மாமா வேலை பாக்கிறதோட நிறுத்திக்கிறத விட்டு இப்படியெல்லாம் பிச்சைக்காரன் வாந்தி எடுத்த மாதிரி கலந்து கட்டி உளருவது சகிக்கலைன்னு யாராவது அவனுக்கு சொல்லுங்கப்பா..

காந்தி படம் போட்டு :whatever you do will be insignificant. it is very important that you do it: போறேன்னா போடா வெண்ணையின்னு மத்தவங்கள பாத்து இவனும் இவன் கோஷ்டியும் சொல்ற மெசேஜ இவனுங்க நண்பர்கள பாத்து மத்தவன் சொன்னா அதுக்கு பேரு அழுக்கு, கசடு.. அங்கங்க எரியுது? ஊருக்குன்னா ஒரு உபதேசம் தன் நண்பனுக்குன்னா வேறயா.. ஒரு வேளை இதுக்கு பேருத்தான் மப்புப்பாசமா? இவன் சுகுணாவை வரகுணான்னு கிண்டலடிச்சி எழுதலாம் ஆனா மத்தவன் சொன்னா மூக்கு மேல விரல் வைக்கிறன்னு ஒரு ஒப்பாரி. அவன் உனக்கு நண்பன்னா அத பொதுவுல சொல்லாம பாரோட நிறுத்திக்கணும்.. ஆனா மூக்கு மேல விரல் பத்தி சொல்லும் இவனே அதை எழுதும்போது முகமூதியின் ஆ****யில் விரலை வைத்துதான் எழுதுகிறோம் என்பதை உணரமுடியாத அளவுதான் அறிவு இவனுக்கு.

இதில் இன்னும் இரண்டு துணுக்கு காமெடிகள்.

அ) சுகுணா போறது எனக்கு பொறாமை. அவர் போன்றவர்கள் எனக்கு இம்சை என்று... சுகுணா என்பவரின் பதிவை நான் முதலில் படித்ததே வெகு சமீபத்தில் போலி விவகாரத்தில்தான். அவர் ஒரு ஆண் - வளர்மதி என்ற பெயரில் எழுதுவதும் ஆண் - என்பதும் கம்யூனிஸம் இன்ன பிற சொந்த கதைகளும் அவரின் போகிறேன் பதிவில்தான் கண்டேன். மேலும் நான் கடந்த ஆறு மாதங்களில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் தான் எழுதியிருக்கிறேன். அப்படி இருக்கும்போது என்ன பெரிய கருத்து வேறுபாடு வெங்காயம் எல்லாம். சுகுணா மீண்டும் எழுத வந்தால் என் அற்ப சந்தோஷம் பறிபோகுமா. அட மட சாம்பிராணி, சுகுணான்னு இல்ல எவன் வந்தாலும் போனாலும் எல்லாம் எனக்கு ஒண்ணுதான். எனக்கு மட்டுமில்லை நிறைய பேருக்கு அப்படித்தான். உலகம் ரொம்ப பெரிசு... என் கூகிள் ரீடர்ல இருக்கிற 23 பேர் தினமும் எழுதறவங்க. எல்லாருமே மொக்கை கலப்பேயில்லாமல் என் விருப்பத் துறை சம்பந்தமாக அற்புதமாக எழுதுபவர்கள். அவர்கள் கட்டுரைகளே ஏகப்பட்டது வாசிக்க இயலாமல் பெண்டிங்கில் இருக்கும்போது யார் போறாங்க வர்றாங்கன்னு பாத்து அழுவாச்சி புராணம் பாட நான் என்ன....

ஆ) எனக்கு ஆப்பு வச்சிட்டேன் என்று சுயபுராணம் பாடிக் கொல்(ள்)கிறான் ரவி. சமீபத்தில் மணிக்கூண்டும் இதுபோலவே ஒரு பின்னூட்டம் எழுதியிருந்தார். யார் எங்கே எனக்கு ஆப்பு வைத்திருக்கிறார்கள், அதை ஏன் என்னிடம் சொல்லவில்லை என்பது தெரியாமல் புரியாமல் அறியாமையில் இருக்கிறேன்.. யாராவது அறியத்தந்தால் தன்யனாவேன். இல்லை என் தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு கூடுதல் பொறுப்புகள் காரணமாக சில பல மாதங்களாக நான் எதுவும் எழுதாமல் இருப்பதைத்தான் "ஆப்பு வைக்கப்பட்டதாக" நினைத்து இந்த ஜந்துக்கள் மகிழ்ந்தால் வாவ்.. கவலைப்பட வேண்டாம் உங்கள் மகிழ்ச்சி நீடிக்கும். ஆனால் உண்மையிலேயே கதவைத்திற.. காற்று வரட்டும்...

எப்பிடிப்பட்ட ஆட்களோட எல்லாம் வலைப்பதிவு சமைச்சிட்டு இப்ப கோழித்திருடனுங்க கூட எல்லாம் சமைக்க வேண்டியிருக்கேன்னு ஒரு சைக்கிள் கேப் திராவிட ஸ்டைல் சுயபுராணம் பாடி மொசு மொசுன்னு அழுவலாம்தான்... ஆனா...

**

தமிழச்சி "ஜாதிப்புத்தி என்ற தலைப்பில் பதிவா?" என்று ஒரு இடுகை எழுதியிருந்தார். அதிலும் மற்ற சில பதிவுகளிலும் பல பொன்/செப்பு/ஈய/தகர மொழிகள் காணக்கிடைத்தது. முக்கியமாக ஒரு குறிப்பிட்ட சாதியை சொல்லி திட்டுவதையே பிழைப்பாக வைத்திருக்கும் ஜந்துக்கள் சுகுணாவிற்கு ஆதரவாக பேசும் நிலையில் மட்டும் - நான் தமிழச்சியை சொல்லவில்லை - சாதி சொல்லி திட்டுவதை அருவருப்பானதாக கருதும் பச்சோந்தி மொழிகள்.

அந்த பதிவில் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன்::

// ஒரு சகபதிவரின் ஜாதியை வைத்து பேசும் போது எப்படி உங்களால் இவ்வளவு கூலாக பேசமுடிகிறது // வாவ்... பார்ப்பான் பார்ப்பான் என்று ஒரே கூச்சலாக இருக்கிறதே. அப்போது மட்டும் ஏன் யாரும் அதிர்ச்சி அடைவதில்லை. ஒருவேளை பார்ப்பான் என்பது ஜாதி இல்லியோ...
(பார்ப்பான் என்று ஜாதியை குறிப்பிடவில்லை. பார்ப்பனீயத்தை தூக்கி பிடிப்பவர்களை பற்றிய ஒரு குறியீடாகத்தான் குறிப்பிடுகிறேன்/றோம் என்ற ஜல்லி 2003ல் இருந்து தமிழ் வலையுலகில் புழக்கத்தில் இருக்கிறது என்பது உங்களுக்கான உபரி செய்தி)

இந்த பின்னூட்டமும் அதற்கு எதிர்வினையாக "நான் தான் எல்.ஏ.ராம், நான் பார்ப்பான்" போன்ற ப்ராண்டட் பின்னூட்டங்களும் - முன்பெல்லாம் இது மாதிரி வந்தா நான் ஒருத்தனைத்தான் நினைப்பேன். ஆனா பன்னிக்குட்டி கூட சேர்ந்த கன்னுக்குட்டியே கெட்டுப்போகும் போது, உளவறிகிறேன்னு சொல்லிகிட்டு பன்னிக்குட்டி கூட இன்னொரு பன்னிகுட்டியும் சேர்ந்து சுத்தி ரவுடித்தனம் செஞ்சிகிட்டு திரிஞ்சதால இப்ப எந்த பன்னி இப்படி எழுதுதுன்னு தெரியல - நேற்று வெளியிடப்பட்டிருந்தது..

அட பரவாயில்லையே, வலைச்சமூகத்தில் விவாதம் என்று இல்லாவிட்டாலும் உரையாடலுக்காவது வாய்ப்பு இருக்கும் போலிருக்கே என்று நினைத்தேன். ஆனால் இன்று திடீரென எதையும் காணவில்லை. சரி இதெல்லாம் அரசியல்ல சகஜம்தான்.

ஆனாலும் சில கேள்விகள் ::

1) தனக்கு ஒவ்வாத கருத்து என்று எவன் எதை சொன்னாலும் ஒரு கோஷ்டி கொண்டையை மறை என்று சொல்லிக்கொண்டு திரிகிறதே. அதற்கு ஐ.பியை மறைப்பது என்ற ஜல்லி கொடுக்கப்பட்டாலும் காரணப்பெயராக கொண்டையை மறை என்பதன் பிண்ணனி உண்மையிலேயே யாருக்கும் தெரியாதா? அப்போது எல்லாம் சாதி குறித்த அதிர்ச்சி மதிப்பீடுகள் வெளிப்படுவதில்லையே ஏன் ??

2) கருணாந்தி, திருமா, ராமதாஸ் ஆகியோரை சாடினால் பார்ப்பான். பெயர் பார்ப்பனப்பெயரோடு ஒத்து வந்தால் பார்ப்பான். தன் கருத்தை எதிர்த்தால் பார்ப்பான் என்று சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் நிறைய பேரை பாப்பான் பாப்பான் என்று சாதி சொல்லி பச்சையாக திட்டுகிறீர்களே. அவன் வலைப்பதிவு சமூகத்திற்கு - இது ஒரு சமூகம் த்தூ - தன் நிலையை உணர்த்த என்ன செய்ய வேண்டும். லாண்டரி கணக்கு எல்லாம் போட்டு அழுவாச்சி காவியம் படைக்க வேண்டுமா? அப்பொழுதும் "இப்படியெல்லாம் பேசிவிட்டு எப்படி கூலாக இருக்க முடிகிறது இந்த ஜென்மங்களால்" என்று ஒரு குரலாவது கேட்கும் என்ற நம்பிக்கை யாருக்காவது இருக்கிறதா ??

3) திட்டுவது என்பதுதான் அடிப்படையான குறிக்கோள் மற்ற எதுவும் முக்கியமில்லை என்ற கோட்பாட்டில் திட்டும்போது பார்ப்பன சாதியில் பிறந்தவனை பார்த்து பாப்பார நாயே என்பதற்கும் பள்ளர் சாதியில் பிறந்தவனை பார்த்து பிறந்த பள்ள நாயே என்பதற்கும் எப்படி வித்தியாசம் காண்கிறீர்கள் ??

பிகு :: மேலே படத்தில் இருப்பவர் ஆங்கில தேசத்து ரேச்சல் வைஸ். என்னது அவருக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தமா.. ஹிஹி. நீங்க என்ன பட்டறை மூலம் பதிவுலகுக்கு வந்தவரா?



Tuesday, July 10, 2007

நாயின் கானம்


போன வார நடுநிசியில்
வயதான நாயொன்று
வசதியான இடத்திலிருந்து
கானமிசைக்க தொடங்கியது

நேற்று முளைத்த நாய்களெல்லாம்
வயதானதனை மதிப்பதில்லை
என வருத்தத்தோடுவொரு வகுளாபரணம்

தம்மினத்தின் குணம் காக்கும்
தனதிருப்பின் முக்கியத்தை
நாயுலகம் உணருவதில்லையென
உயிர்நிலையிலிருந்துவொரு முகாரி

உயிர்வாழ இரை தேடும்
இன்றியமையா இடைவெளியிலும்
இ(ம்)சையை பாட நேர்ந்த.தன் அவலத்தை
எண்ணிவொரு ஏமாவதி

எத்தனை வித கானங்கள் அதில்
எத்தனையெத்தனை விசயங்கள்
உணரா மர உலகை தனக்குள்ளே
நொந்துவொரு நடபைரவி

*

அவசரமாய் ஓடிவந்து
அதிவிரைவு பேருந்துக்கு
காத்திருந்த இடைவெளியில்
ஆரம்பித்தான் காலனிவாசி
"வாரமா அந்த நாயோட
ஊளை தாங்க முடியலில்ல?"



Monday, May 14, 2007

குடும்ப சண்டையும் பொதுமக்களும்




கொறிப்பு :: மேற்கண்ட படத்தொகுப்புக்கும் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், மாறன்ஸ், கருத்து "கனி"ப்பு, வாரிசு அரசியல், மதுரை வன்முரை ஆகிய எந்த *க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மறைமுகமாகவோ நேரடியாகவோ எதாவது நினைவுக்கு வந்து தொலைந்தால் சிபிஐ உட்பட எவரும் பொறுப்பல்ல.