<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மகசேசே விருது சர்ச்சை


டி.எம்.கே சர்ச்சை குறித்து நீங்கள் கருத்து எதுவும் சொல்லவில்லையா என்று பலரும் என்னை கேட்கவில்லை. டி.எம்.கே என்றாலே சர்ச்சைதானே அதில் புதிதாக சொல்ல என்ன இருக்கிறது என்று என்னை கேட்காதவர்களிடம் நானும் சொல்லவில்லை. ஆனால் இது பெரிய டி அல்ல சின்ன டி... கர்நாடிக் சிங்கர் டி.எம்.கிருஷ்ணா விருது விவகாரம் என்று தெரிய வந்த போது எனக்கு பேரதிர்ச்சி.. ஏனெனில் நான் இதுவரை டி.எம்.கிருஷ்ணா ஒரு வயலில் வித்வான் என்று நம்பிக்கொண்டிருந்தேன். வயலின் வித்வான் டி.என்.கிருஷ்ணன், விருது விவகாரத்தில் பேசப்படுவது டி.எம்.கிருஷ்ணா என்று பி.ஏ.கிருஷ்ணன் பேஸ்புக் பதிவுகளின் மூலம் தெரிய வந்ததும்தான் எனக்கு போன உயிர் திரும்பி வந்தது.

ஜெயமோகன் பதிவுதான் சர்ச்சைக்கு மூலம் என்று அறிந்ததும் அதை முதலில் படித்தேன். கர்நாடிக் இசை குறித்து எதுவும் தெரியாது என்று டிஸ்க்ளெய்மர் கொடுத்துவிட்டு பிறகு அதை குறித்து எழுதிய ஜெயமோகனே டிஸ்க்ளைமர் கொடுக்கும் அளவு நிலைமை கைமீறி போயிருக்கும் நிலையில் எனக்கும் கர்நாடிக் சங்கீதத்துக்கும் இருக்கும் நீண்ட தொடர்பை முதலில் நான் விளக்கிவிட்டு கருத்து சொல்வதே நல்லது  என்பதால் முதலில் அதை சொல்லிவிடுகிறேன்.

எனக்கு முதன் முதலில் கர்நாடிக் சங்கீத பரிச்சயம் என்றால் அது சங்கராபரணம் திரைப்படம் மூலம்தான் என்றால் அது மிகையாகாது. ஆனால் அப்பொழுது நான் கைக்குழந்தையாக இருந்தபடியால் முறையாக அறிமுகப்படுத்தப்பட்ட நம் பாரம்பரிய இசையை குறித்த எந்த ப்ரஞ்சையும் இல்லாமல் இருந்ததை குறித்த‌ குற்றவுணர்ச்சியில் இருந்து தப்பித்தேன். பின்பு அலைகள் ஓய்வதில்லை படத்தில்  - சென்ட்ரல் தியேட்டரில் செகண்ட் ரன் - என் வயதொத்த சிறுவர்கள் (பிஞ்சிலேயே பழுத்தவர்கள்) எல்லோரும் ராதாவை சைட் அடித்துக்கொண்டிருந்த பொழுதில் எனக்கு மட்டும் கமலா காமேஷ் கற்றுக்கொடுத்த 'சரிமா கறி சரிநி கஸா' மேல் இயல்பாகவே வந்த ஈர்ப்புதான் என் ரத்தத்தில் சிகப்பணுக்களுடன் இசையும் சேர்ந்தே இருக்கிறது என்பதை நான் உணர்ந்துகொண்ட முக்கிய தருணம என்றால் அது மிகையாகாது.

இந்த இடத்தில் நான் கர்நாடிக் இசை என்று குறிப்பிடாமல் வெறுமே இசை என்று ஏன் குறிப்பிடுகிறேன் என்பதற்கு கவனத்தில் கொள்ளவும். ஏனெனில் எங்கள் வீட்டில் தண்ணீர் வைக்க என்று இருந்த பானையை கவிழ்த்துப் போட்டு தாளம் தப்பாமல் 'தட்டி பார்த்தேன் கொட்டாங்குச்சி' பாடலை நான் வாசித்த‌போதும், அதியமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு எதிரில் நெல்லிக்காய், கமர்கட் வாங்கித்தின்ன போன பொழுதில் அங்கு வந்தவர்கள் நக்ஸலைட்டுகள் என்றே தெரியாமல் அவர்கள் பாடிய 'ஓட்டு வேட்டை ஓநாயெல்லாம் ஓட்டு கேட்டு வாராங்களாம்' பாடலை பல மாதங்களுக்கு சுதி தப்பாமல் பாடிக்கொண்டு திரிந்த‌பொழுதும், எதிர் வீட்டு ஜெயபால் அண்ணனின் (அதிமுக முன்னாள் கவுன்சிலர்) தாயார் மறைந்த பொழுது பறையடிக்க வந்த கோஷ்டி வந்த நிமிடம் முதல் கிளம்பும் நிமிடம் வரை சோறு தண்ணி இல்லாமல் பக்கத்திலேயே இருந்து 'ஜன்ஜனக்கு ஜனக்கு ஜகம்' என்று ஆரம்பித்து உச்சம் தொடும் இசையை அனுபவித்த போதும் எனக்கு ஒரே வித ஈர்ப்பு ஏற்பட்டது என்பதில் இருந்து இசை என்பது எனக்கும் அகண்ட பிரபஞ்சத்துக்குமான‌ ஒரு கம்யூனிகேஷன் என்ற புரிதலை எனக்கு ஏற்படுத்தியது. தண்ணீருக்கு பானை கிடைக்காத கடுப்பிலும் என் தொணதொணப்பிலும் நான் முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டேன். அப்பொழுது எதிர்த்த வீட்டு கவிதா பாட்டு கற்றுக்கொள்ள போன அதே இசையாசிரியரே எனக்கும் இசையாசிரியராக அமைவார் என்பது ஆண்டவன் சித்தமாக இருக்கும் என்று எனக்கு தெரியாது.

'இவன் பொண்ணு பார்க்க போகும்போது சமாளிக்கிற அளவுக்கு ரெண்டு பாட்டு கத்துக்கொடுங்க சாமி' என்று சொல்லப்பட்ட போது, இசை வாத்தியார் 'நான் சாமி இல்லைங்க, க்றிஸ்டியன்' என்று சொன்னது அப்பொழுது சாதாரண நிகழ்வுதான் என்றாலும் கர்நாடிக் சங்கீதம் என்பது அன்று முதல் இன்று வரை ஒரு குறிப்பிட்ட சட்டகத்துக்குள் அடைபட்டிருப்பதன் அரசியல் இப்பொழுது இந்த சர்ச்சையான நேரத்தில் புரிகிறது. பொண்ணு பார்க்க போகும்போது ஆண்களுக்கு பாட தெரிய வேண்டியதில்லை என்று நான் தெளிந்து கொண்ட நிமிடம் நான் வயலினுக்கு மாறிக்கொண்டேன். புன்னகை மன்னன் படத்தில் வரும் 'கால காலமாக வாழும் காதலுக்கு' பாடலில் வயலின் உபயோகப்பட்டதற்கும் இந்த நிகழ்வுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பல மாதங்களாக நோட்ஸ் பார்த்து நான் வயலினில் இழுத்த இழுப்புக்கும் இசை என்ற அந்த அற்புத அனுபத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை, இசை என்பது நோட்ஸில் இல்லை அது ஒரு அனுபவம் என்பதை அனுபவித்த நிமிடம் வயலின் க்ளாஸில் இருந்து நின்று விட்டேன். நான் நின்ற அதே நாளில் கவிதாவும் வெளியூர் காலேஜுக்கு மாறிப்போனது ஒரு தற்செயல் நிகழ்வு என்பதால் அதை குறித்து நாம் இங்கு பேச வேண்டியதில்லை.

பின்பு இசைக்கும் எனக்குமான தொடர்பு என்பது இளையராஜா, ரகுமானுக்கும் எனக்குமான தொடர்பு என்ற அளவில் மாறிப்போனது... அவர்கள் இருவரும் போட்ட அனைத்து பாடல்களிலும் கர்நாடிக் சங்கீதத்தின் ஏழு ஸ்வரங்களும் மாறி மாறி வருவதும் அனைத்து பாடல்களிலும் மாயாமாளவ கொள ராகத்தின் சாயலிலுமே இருப்பதை நான் நான் முயற்சிக்காமலேயே உணர்ந்த போது எனக்கு நான் பிரபஞ்ச இசையிலிருந்து விலகி அகாடமி(க்) இசை பக்கமாக போகிறேனோ என்று முதன் முதலாக பயம் வந்தது. அப்பொழுது முதல் பயம் போகும் வரை தேவா பாடல்கள் மட்டும் கேட்க ஆரம்பித்தேன்.

தெளிந்த பிறகே சென்னையில் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தி.நகர் வெங்கட்நாராயணா கோவிலில் நடக்கும் கர்நாடிக் இசை கச்சேரிகளுக்கு செல்ல ஆரம்பித்தேன். இப்பொழுது இசை என்பது கேட்கும் கலை என்பதை விட பார்க்கும் கலை என்பது நன்றாக வசப்பட்டிருந்தது. சங்கீதம் கேட்க வந்த அனைத்து ஆண்ட்டி அங்கிள்ஸும் (தனது) தொடையில் தட்டி தட்டி விரலை எண்ணி மேடை கலைஞருக்கு டஃப் பைட்டு கொடுப்பதில் பெருமிதம் அடைகிறார்கள் என்பதையும், தாவணிகள் குறைய ஆரம்பித்து சுடிதார்கள் திராவிட கலாசாரத்தை ஆக்ரமிக்க ஆரம்பித்தையும் என்னை விட தீவிரமாக யாரும் பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே. ஒரு முறை ஜேசுதாஸ் பாடுவதை பார்த்துக்கொண்டிருந்த போது, 'வர வர எவனுக்கும் இசை மேல பக்தியே இல்லை, நோட்ட எதிர்ல வச்சிகிட்டு பாட்றான் பாரு' என்று ஒரு அங்கிள் கமெண்ட் அடித்த போது அது சரிதான் என்று தோன்றவே இப்போது வரை திநகர் சங்கீத கச்சேரிக்கே செல்வதில்லை.

இப்பொழுது டி.எம்.கிருஷ்ணா விவகாரத்துக்கு வருவோம். 'ensuring social inclusiveness in culture' என்ற பிரிவில் மகசேசே விருது அவர்கள் கொடுத்தார்களா இவர் வாங்கினாரா என்பதே முக்கிய கேள்வி. டி.எம்.கே என்ன செய்தார் என்று எனக்கு தனிப்பட தெரியாது. இது குறித்து ஜெயமோகன் பக்கத்தில் நான்கு பதிவுகளை படித்தேன். எதிர்கருத்தாக பிஏகே அண்ட் கோ சுவர்களில் எழுப்பப்பட்ட விவாதங்களையும் படித்தேன். கொத்தனார் லத்தீன் மொழியில் எழுதிய நீண்ட பதிவை மூன்று வரிகள் படித்தேன். அனைவர் சொல்வதும் சரியாகவே இருப்பதாக எனக்கு தோன்றுவதற்கு காரணம் எனது கர்நாடிக் பேக்ரவுண்ட்தான் என்றால் அது மிகையாகாது. இதெல்லாம் ஜல்லி... இந்த விருதுக்கு இவர் தகுதியானவர் அல்லது இல்லை என்று கட் அன்ட் ரைட் அல்லது ப்ளாக் அண்ட் வொயிட்டாக சொல் என்றால் இந்த விருதுக்கு இவர் சரியென்றே சொல்வேன். அதற்கான காரண்ம் -

கருணாநிதி சொல்வதுதான் கல்ச்சர் என்று நம்பும், பார்ப்பனர்களை தன் கல்ச்சரில் இருந்து exclude செய்து வைத்து சதா சர்வகாலமும் பார்ப்பனர்களை (பார்ப்பனீயத்தை அல்ல) திட்டி பாயை பிறாண்டுவதையே தன் பிழைப்பாக‌ வைத்திருக்கும், லக்கி கிருஷ்ணா, தனக்கு  டி.எம்.கிருஷ்ணாவால் ஆதாயம் கிடைக்காது என்ற நிலையிலும் டி.எம்.கிருஷ்ணாவை ஆதரித்து அறிக்கை விட்டதை எண்ணிப்பார்க்கும் போது டி.எம்.கிருஷ்ணா ensuring social inclusiveness in culture என்பதை சாதித்து விட்டதாகவே தோன்றுகிறது.

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


தல, நீங்க கலங்குங்க-2006 லிருந்து நம்ம இலக்கு மாறவேயில்லை போல. நான் சரின்னா, தழிழ் (ழை அடுத்த கட்டத்துக்கு) தாயை பக்கத்து தெருவு வரைக்கும் தள்ளிக்கிட்டு போவோம்ம்ன்னு - திராவிட ராஷ்கோலெல்லாம் குத்தாட்டம் ஆடிக்கொண்ட போது ஆரம்பிச்ச கடுப்பு.

சிலுக்குவார்பட்டி ரசிகர் மன்றம்
 



செம கலக்கு, தலீவா :-) அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே! இருங்க... இருங்க, லக்கிக்கு இந்த இடுகை லிங்கை அனுப்பறேன். அவரு வாசிச்சாரான்னு தெரில ;-) சர்ச்சை குறித்து வாசித்தவற்றில் ஆகச் சிறந்தது இது என்றால் அது “மிகையாகாது” (இதை ரொம்ப யூஸ் பண்றீங்க பாஸ்)
அன்புடன்
பாலா
 



சரி, உங்க கருத்து ??