<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்


தில்லைக்கோயிலுக்குள் புலவர் ஆறுமுகச்சாமி என்பவர் தமிழ்ப்பதிகம் (திருவாசகம் என்கிறது தட்ஸ்தமிழ், சிவபுராணம் என்கிறது தினமணி) பாட முற்பட்டு தடுக்கப்பட்டதை எதிர்பார்த்தபடியே தமிழ் பாதுகாப்பு இயக்கங்கள் கையில் எடுத்திருக்கின்றன... சமீப அரசியல் நிகழ்வுகளால் சோர்ந்து போயிருந்த அரசியல்வாதி(களு)க்கு இது அடுத்த போராட்ட களமாக ஆகியிருக்கிறது... இந்த நேரத்தில் எல்லாரும் கருத்து கந்தசாமியாகி திருவாய் மலர சிதம்பரத்தில் பத்து ஆண்டுகள் குப்பை கொட்டிய 'தகுதி'யில் நாமும் நம் பங்குக்கு ஒண்ணு ரெண்டு கருத்து சொல்லவில்லை எனில் எப்படி?

சிதம்பரம் கோயிலில் நடராஜரும் சிவகாமியும் சிதம்பர ரகசியமும் இருக்கும் கருவறை சித்சபை எனப்படும். அதை சுற்றி இருப்பது கனகசபை. இதுவே ஆதித்தன் மற்றும் பராந்தகனால் பொற்கூரை வேயப்பட்டது. இதனை சுற்றி பிரகாரமும் அதில் சிவலிங்கங்களும் சில சன்னதிகளும் கோயில் கிணறும் இரு காண்டா மணிகளும் உண்டு. எல்லா சிவன் கோயிலிலும் நடப்பது போன்று இங்கு சைவ ஆகம விதிகளின் படி பூஜைகள் நடைபெறுவது இல்லை. பதஞ்சலி முனிவர் வகுத்த விதிகளின் படி இங்கு பூஜைகள் நடைபெறுகின்றன. பொது தீஷிதர்கள் என்பவர்கள் பூஜைகளையும் கோயில் நிர்வாகத்தையும் நடத்துகிறார்கள்.

அது ஏன் தீஷிதர்கள் மட்டும் இதை நடத்த வேண்டும் என்று கேட்கும் வெள்ளைப்பூண்டுகளுக்கு என்னிடம் பதில் இல்லை.. அதற்கு சரித்திரத்தைதான் நாடவேண்டும். மாற்றம் வேண்டும் என்றால் அணுக வேண்டிய முகவரி, தமிழ் பாதுகாப்பு இயக்கம் அல்லது தமிழக அரசு அறநிலையத்துறை.

தீஷிதர்கள் பிராமண குலத்தில் சோழியர்கள் என்ற பிரிவில் வருகிறார்கள். இவர்கள் கொண்டை போடுவது வித்தியாசமாக இருக்கும். இதனாலேயே சோழியன் குடுமி பழமொழி... சோழியன் என்பது சோழ நாட்டுக்காரர்கள் என்பதை குறிக்க. பல சோழர்களுக்கு நடராஜர்தான் இதய (காவல்) தெய்வம். சிதம்பரம் கோயிலிலிருந்து தஞ்சாவூர் அரண்மனைக்கு சுரங்கம் உண்டு என்பது போன்ற கதைகள் பல கேட்டிருக்கிறேன். இங்கு பூஜை நடந்து காண்டா மணி ஒலிக்க அந்த சத்தம் சுரங்கம் வழியாக அரண்மனையில் கேட்டபின்பே ராஜராஜன் உணவருந்துவான் என்பது போன்ற சுவாரசிய சங்கதிகள் அந்த கதையில் அடக்கம்.

சிதம்பரம் மக்களுக்கு பழகிப்போய்விட்ட தீஷிதர் இன மக்களின் வாழ்க்கை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு அதிசயமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்... சிதம்பரம் கோயிலை சுற்றியிருக்கும் தேரோடும் அந்த நாலு வீதிகளிலேயே அவர்கள் வாழ்க்கை ஆரம்பித்து முடிந்துகொண்டிருந்தது, போன தலைமுறை வரை... சிதம்பரம் கோயிலில் ஊழியம் புரிவதை தவிர வேறெதும் செய்யாத, பழமைவாதத்தில் ஊறிப்போன தீஷிதர் இனத்தில் இருந்து முதன் முதலில் ஒரு தீஷிதர் வெளியில் வேறு வேலைக்கு போனது அதிசயமாகவும் புரட்சியாகவும் அப்போது பேசப்பட்டது...

இப்போது தீஷிதர்கள் செய்யும் அட்டூழியங்கள் ::

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் காசு 'பிடுங்குவது' :: நிதி உதவி பெறும் வழிபாட்டு தலங்கள் தவிர்த்து பார்த்தால் உலகத்தின் எந்த வழிபாட்டு தலத்திலுமே உலக நியதியான 'பணக்காரனுக்கு கூடுதல் மரியாதை' வழக்கம் இருக்கத்தான் செய்கிறது. அது வழிபடும் வரிசை சுருங்குவது ஆகட்டும், மந்திரங்கள் ஓதும் தன்மையில் ஆகட்டும், பணம் இருந்தால் பத்தும் பக்காவாக நடக்கும்... சிதம்பரம் கோயிலுக்கு அரசு நிதி உதவி எதுவும் கிடையாது. "கடவுள தொட்டு சேவை செய்ய புண்ணியமில்லா செஞ்சிருக்கணும்" என்ற கருத்தோடு கற்பூரம் காண்பிக்கப்படுவதை கண்டு பரவசமாக நிற்கும் பக்தன் அதுதான் தீஷிதரின் 'தொழில்' என்பதையும் அதன் மூலம்தான் அவரின் குடும்பத்திற்கு சோறு என்பதையும் உணருவதில்லை. இந்த கோயிலின் நடைமுறை தெரியாத பக்தனுக்கு, மற்ற இடங்களில் சாதாரணமாக நடக்கும் அர்ச்சனை ஆராதனை போன்றவற்றுக்கு கூட இங்கே காசு எதிர்பார்க்கிறார்களே என்ற சமதர்ம எண்ணம் வருகிறது... ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வெறுமே சாமியை "பார்க்க" மட்டுமே என்று கோயிலுக்கு போனால் தீஷிதர்களால் தொந்தரவு இருக்க முடியாது என்பதே என் அனுபவம். அதை தவிர்த்து ஸ்பெஷல் கவனிப்பு வேண்டும் என்றெல்லாம் எண்ணிப்போனால் சேவைக்கட்டணம் செலுத்தவும் தயாராக இருக்க வேண்டியதுதான். என்ன இங்கு மார்க்கெட்டிங்கும் சேவைக்கட்டணமும் சற்று வித்தியாசமாக இருக்கும்.. சாமி பார்க்க வரும் பெரும்பாலானவர்களிடம் தீஷிதர்கள் மாதாந்திர அபிஷேக அர்ச்சனை என்று ஒன்றை ஆரம்பிப்பர்... பகதர் முன்கூட்டியே பணமும் முகவரியும் தந்தால் மாதாமாதம் அவர்கள் நட்சத்திரம் அன்று அவர்கள் பெயருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம் அனுப்பி வைக்கப்படும்.. என்னிடம் அதுகுறித்த பேச்சு ஆரம்பிக்கப்பட்டாலே "நான் லோக்கல்" என்ற ஒரே வார்த்தையில் விஷயம் முடிவுக்கு வரும்.. ஆனால் பல பக்தர்கள் ஆம்வேகாரர்களிடம் மறுக்க கூச்சப்படுவது போலவே இவர்களிடமும் கூச்சப்பட்டு பணத்தை செலுத்திவிட்டு புலம்புவது வாடிக்கையாக நடக்கும் விஷயம். ஆனால் மாதாமாதம் ஒழுங்காக பிரசாதத்தை அனுப்பி வைப்பதில் மோசடி நடந்ததாக இதுவரை புகார் இல்லை. (எல்லா இடங்களையும் போலவே) இங்கும் பணமும் பகட்டும் காண்பிப்பவர்களுக்கு கொஞ்சம் மரியாதை அதிகமாகத்தான் கிடைக்கும் என்பதை உணர்ந்து கோயிலுக்கு போனால் எந்த ப்ரச்னையும் இல்லை...

நடராஜரை புகைப்படம் எடுப்பது :: கூடாது என்பதில் இவர்கள் உறுதியாக இருக்கிறார்கள். 2004 தேர் வைபவத்தின் போது ஏதோ ஒரு லாட்ஜில் இருந்து தேரும் நடராஜரும் புகைப்படம் எடுக்கப்பட்டு தினமலரில் வெளிவந்தது... அன்று முழுவதும் தீஷிதர்கள் கோபமாக அலைந்தனர்... அன்று மாலை எதேச்சையாக சிதம்பரத்தில் இருந்த நான், சரி சாமியைத்தானே எடுக்கக்கூடாது, அலங்கரிக்கப்பட்ட கலைநயமிக்க தேரையும் ஆனந்தத்தில் குழுமியிருக்கும் கூட்டத்தையும் வீடியோ எடுப்போம் என்று முயல தேரின் மேலிருந்து என்னை நோக்கி கோபமாக வசவு வார்த்தைகள் வந்து விழுந்தன... பக்கத்தில் இருந்த தமிழக காவல்துறை "தம்பி வந்தானுங்கன்னா வீடியோ கேமிராவ உடைச்சி நொறுக்கிறுவானுங்க, உள்ள வச்சிடுங்க" என்றார்.. "என்ன விளையாடுறானுங்களா, கோயிலுக்குள்ள எடுக்ககூடாதுன்னு சொன்னா சரி... பொது இடத்துல இவனுங்க என்ன சட்டம் பேசறது... நீங்க என்னடான்னா போலீஸா இருந்துகிட்டு இப்படி சொல்றீங்க... என்றேன்... "இது ஸ்டேஷன் இல்ல தம்பி.. அவனுங்க இடம். தினமலர்காரன் மேல இருக்கிற கோவத்த எங்கடா காட்லாம்னு அலையிறானுங்க.. இந்த கூட்டத்துல எங்களால ஒண்ணும் பண்ண முடியாது.. பேசாம உள்ள வப்பீங்கலா?" என்றார். பக்கத்தில் வேடிக்கை பார்த்த பொதுஜனம் ஒருவர் மிகவும் மெதுவாக சொன்னார் :: "தயிர் சாதம் சாப்டறவனுங்களுக்கே என்ன தெனாவட்டு பாத்தீங்களா.. இருக்கட்டும் இருக்கட்டும் ஒருநா எதுலனா மாட்டாமலா போயிடுவானுங்க.. அன்னிக்கி காமிப்பம் கறிசோறு பலத்த..." அன்று "தினமலர் உபயத்தில்" தீஷிதர்களின் ஈகோவால் தேரில் இருந்த நடராஜருக்கு நடந்த பூஜைகள் வெளிச்சம் பாய்ச்சாமல் இருட்டிலேயே நடந்தன... கோயிலின் உள்ளே புகைப்படம் எடுக்கக்கூடாது என்ற நியதியை மதிக்கும் நான் பொதுவிலும் இப்படியான சட்ட திட்டங்களை அவர்கள் பின்பற்றுவதை அநியாயம் என்று கருதி துண்டை சுற்றிக்கொண்டு ஹாண்டிகாமை மறைத்து ஒரு சில நிகழ்வுகளை வீடியோ எடுத்தேன். ஆனால் இந்த வருடம் அமெரிக்காவில் பொது இடத்தில், அதாவது வானில் நடந்த ஜூலை 4 வாணவேடிக்கையை பார்க்க டிக்கெட் வாங்கி ஸ்டேடியத்தின் உள்ளே நுழையும் போது வீடியோ எடுக்கக்கூடாது என்ற அவர்கள் சட்டத்தை மதித்து கேமிராவை உபயோகிக்காமல் நடந்துகொண்ட நான் அன்று மட்டும் அப்படி செய்ததில் உள்ள சில பூர்த்தியாகாத கட்டங்களை குறித்து யோசித்து பார்க்கிறேன்.

குழந்தை திருமணங்கள் :: என்றால் குழந்தையை வயதில் பெரியவருக்கு கல்யாணம் செய்வது என்ற அர்த்தத்தில் இல்லை... குழந்தையை குழந்தைக்கு கட்டிவைப்பது.. 'வெளி'யில் கொடுக்கம் வாங்கல் இல்லாமல் தீஷிதர் இனத்துக்குள்ளேயே திருமணங்கள் நடக்கும்... அதுவும் சின்ன வயதிலேயே.... கல்யாணம் ஆன தீஷிதர் இன ஆண்தான் சிதம்பரம் கோயிலில் பூஜை செய்ய உரிமை உள்ளவர் என்பது முக்கிய காரணம்... ஆனால் கடுமையான சட்டங்கள் தரும் பயம் காரணமாக இப்போதெல்லாம் வெளிப்படையாக திருமணங்கள் நடைபெறுவது இல்லை, என்றாலும் வேறு வருமானம் இல்லாத குடும்பங்களில் ரகசியமாக நடந்துகொண்டுதான் இருக்க வேண்டும் என்பது என் கணிப்பு... இதில் கற்பனையே செய்ய முடியாத ஒரு கொடுமையும் நடக்கும். குழந்தை திருமணம் நடந்தால் பருவமெய்தும் வரை தாய்வீட்டில் இருக்கும் அந்த சிறுமிகளின் கணவர்கள் - சிறுவர்கள் - ஏதோ காரணத்தால் இறந்துவிட்டால் பழமைவாத ஆணாதிக்கம் நிறைந்த தீஷிதர் இனத்தின் கட்டுப்பாடுக்குள் இருக்கும் அந்த கணவனை இழந்த சிறுமிகளின் உள, புற போராட்டங்கள்... இது கண்டிப்பாக சீர்திருத்தத்துக்கு உட்படுத்தப்பட வேண்டியது...

கோயில் பராமரிப்பு :: அரசு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோயிலை எடுத்தால் சிதிலமடைந்திருக்கும் சில இடங்களும் பொலிவடைந்து கோயிலின் நிலை சிறப்பாக மாறும் என்று நம் அறிவுக்கொழுந்துகள் நம்புவது போன்ற நகைச்சுவை வேறெதும் இல்லை... அரசு பராமரிப்பில் உள்ள ஏகப்பட்ட - சிதம்பரம் கோயில் போன்று அளவில் பெரியதாக கூட இருக்க வேண்டாம் - சிறிய ஆனால் புகழ் பெற்ற, வரலாற்று சிறப்பு மிக்க, பல அரிய ஓவியங்கள், சிற்பங்கள் போன்ற பொக்கிஷங்களை தன் வசத்தில் கொண்டிருக்கும் கோயில்களின் இன்றைய நிலை பற்றி யாருக்காவது தெரியுமா? சிதம்பரம் கோயில் அளவு பெரிய கோயில்களின் நிலையை அரசு பராமரிக்கும் லட்சணம் தெரியுமா? மிகச்சமீபத்தில் நான் கண்ட உதாரணம் திருவையாறு... சிதம்பரம் கோயில் போலவே அளவில் பெரிய திருவையாறு கோயிலில் சாமியே இருக்க பயப்படும் அளவு கும்மிருட்டு... அதனோடு ஒப்பிட்டால் அரசு வருமான இல்லாத இந்த கோவிலின் பராமரிப்பு எவ்வளவோ மேம்பட்டது... இந்த கோவிலுக்கு பராமரிப்பு தேவைதான், ஆனால் ஒப்பீட்டு அளவில் சிறப்பாகவே உள்ளது. ஆகவே பராமரிப்பு பற்றியெல்லாம் தற்போதைக்கு கவலைப்பட தேவையில்லை...

இப்பொழுது முக்கிய விஷயமான கோயிலுக்குள் தமிழ் மறுப்பு விவகாரத்துக்கு வருவோம்.

நடராஜர் சன்னதிக்கு எதிரே பெருமாள் சன்னதி குறுக்கிடும் இடத்தில் பூக்கட்டுபவர்களுக்கு பின்புறம் அமர்ந்து சாமான்யர்கள் பூஜை வேளை தவிர்த்த நேரங்களில் பாடல்கள் பாடுவதும், இசை வாத்தியங்கள் ஒலிப்பதையும் நான் கண்டிருக்கிறேன்.
ஆகவே ஜாதி காரணமாக தீஷிதர்கள் அல்லாதவர்கள் சத்தமாக பாட தடை என்பது கேள்விக்குறியது...

சிதம்பரம் கோயிலில் ஆறு கால (வேளை) பூஜைகள் நடக்கும். அதில் மாலை ஆறு மணிவாக்கில் ஆதிசங்கரர் தந்ததாக நம்பப்படும் ஸ்படிக லிங்கத்துக்கும் நடராஜருக்கும் நடக்கும் பூஜையை பல முறை நான் கண்டிருக்கிறேன். அரை மணி நேரத்துக்கும் மேலாக அந்த பூஜை நடக்கும்.. மைல் கணக்கில் கேட்கும் பெரிய இரு காண்டா மணிகள் 'டாண் டாண்' என்று விடாமல் ஒலிக்க, வரிசையாக கட்டப்பட்டிருக்கும் பத்துக்கும் மேற்பட்ட சிறு மணிகள் 'கிலுகிலு' என்று விடாது சப்தமெழுப்ப, இந்த சத்தத்தில் சித்சபையில் நம் காதில் கூட விழாத வேத முழக்கத்தின் இடையில் பூஜை நடக்கும்... திடீரென அனைத்து மணிகளும் வேதங்களும் நின்றுவிடும்... அந்த அமைதியை கிழித்துக்கொண்டு ஓதுவார் என்பவர் கணீரென்ற குரலில் தமிழ் பதிகங்கள் பாடுவார்... பிறகு மீண்டும் மணிச்சத்தம் பலமாக ஒலிக்க பூஜை நடக்கும். பிறகு மீண்டும் அனைத்தும் நின்று அமைதியை கிழித்துக்கொண்டு கணீரென தமிழ் பதிகங்கள்... இந்த பதிகங்கள் சத்தியமாக தமிழ்தான்... தேவாரமோ, திருவாசகமோ, சிவபுராணமோ தெரியாது... ஆனால் தமிழ்... ஒரு தேர்ந்த ஆர்க்கெஸ்ட்ராவின் இசையில் முகிழ்ந்தால் கிடைக்கும் பரவசம் கிடைக்கும் அந்த அனுபவத்திற்காகவே நாத்திகனாக அலைந்த காலங்களிலும் இந்த பூஜைக்கு செல்வேன் (அப்படியே பெருமாள் மடப்பள்ளி புளியோதரை, சர்க்கரை பொங்கலுக்கும்)...
ஆகவே தமிழ் பதிகங்களை பாட முற்படுவதாலேயே கோயிலுக்குள் தடையென்று வரும் செய்திகளில் எனக்கு நம்பிக்கையில்லை...

இரவு ஒன்பது மணிவாக்கில் நடக்கும் அர்த்த ஜாம பூஜையின் போது நடராஜரின் பாதுகைகளை பள்ளியறைக்கு ஊர்வலமாக எடுத்து செல்லும்போதும் தமிழ் பதிகங்கள் பாடக்கேட்டிருக்கிறேன். (இந்த ஊர்வலத்தின் போது இந்து மதத்தின் அனைத்து புனித பிம்பங்களும் கலந்துகொள்வார்கள் என்பது நம்பிக்கை.. அப்போது வாசிக்கப்படும் மிருதங்கம் பார்க்கவும் அதன் ஒலி கேட்க வித்தியாசமாக இருக்கும். அது தும்புருவோ நாரதரோ யாரோ உபயோகித்த மிருதங்கத்தின் மாதிரி என்று சொல்லக்கேள்வி. இந்த பூஜையை கண்டு 12 வருடங்களுக்கு மேலாகிய நிலையிலும் தக் தக் தகும், தக் தக் தகும், தக் தக் தகும், தகும் தகும்... என்று அந்த மிருந்தங்கத்தின் ரிதம் மனதுக்குள் தங்கியிருக்கிறது)

மாணிக்கவாசகர் சிதம்பரத்தில் தங்கியிருந்துதான் திருவாசகத்தை எழுதினார். மேலும் நடராஜர் கேட்டுக்கொண்டபடி திருக்கோவையார் பதிகங்களையும் இயற்றினார். நடராஜரே இந்த பதிகங்களை எழுதி அதை கோயில் குளத்தில் வைத்துவிட்டார் என்பது புராணம். குளத்தில் பதிகங்களை கண்ட கூட்டம், மாணிக்கவாசகரை அணுகி அதன் அர்த்தம் என்னவென கேட்க அவர் கூட்டத்தை கோவிலுக்கு அழைத்து சென்று நடராஜ்ரை காண்பித்து அந்த பதிகங்களுக்கு அர்த்தம் சிவபெருமானே என்று சொல்லி கோவில் குளத்தில் நடந்து சென்று மறைந்துவிட்டார் என்று சொல்வார்கள். மாணிக்கவாசகருக்கும் தில்லைக்கும் உள்ள நெருக்கம் காரணமாக தேர் தரிசன உற்சவத்தின் போது பத்து நாட்களும் மாணிக்கவாசகர் சிலை கனகசபையில் முன்பு கொண்டுவரப்பட்டு அனைத்து பக்தர்களும் ஓதுவாருடன் சேர்ந்து திருவெம்பாவை பதிகங்களை சத்தமாக பாடுவார்கள்... திருவெம்பாவை தமிழ்தான்... தேர் திருவிழாவின் போது தேர் நிலைக்கு வந்ததும் நடராஜரை கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன் தமிழ் பதிகங்களை பாடித்தான் தீப ஆராதனை நடக்கும்... இது சிதம்பர ரகசியம் அல்ல... வெளிப்படையாக நடக்கும் நிகழ்வு... தேர் தரிசன கொண்டாட்டங்களில் கலந்து கொண்ட எல்லாருக்கும் இது தெரியும்... ஆகவே கேட்டதை வைத்து விரும்பிய மாதிரி உருவகித்து நடராஜர் தமிழை மிதிக்கிறார் என்று படம் போடும் நாத்திகர்களின் நோக்கம் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத்தேவையில்லை...

கோவிலுக்குள் தமிழ் பதிகங்களை ஓதுவார்கள் அல்லது தீஷிதர்கள் மட்டும்தான் பாட முடியும், வெளியாட்கள் பாடமுடியாது என்று தடை போடுகிறார்கள் என்று வரும் செய்தி உண்மையெனில் அதை வன்மையாக கண்டிப்பதில் முதல் ஆளாக இருக்க விரும்புகிறேன்... ஆனால் தினமணி செய்தியோ புலவர் ஆறுமுகச்சாமி நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் சிவபுராணம் பாட சென்றார் என்கிறது... திருச்சிற்றம்பல மேடை என்று எதை சொல்கிறார்கள் என்று புரியவில்லை... அது கனகசபை அல்லது அதை ஒட்டிய இடங்கள் எனில் ஏற்கனவே வாங்கப்பட்ட தடையுத்தரவை ஒட்டி அவரை கைது செய்ததில் எந்த தப்பும் இல்லை...

img crtsy: lotussculpture.comஇங்கே ப்ரச்னை ஆறுமுகச்சாமி தமிழை பாட விரும்பியதா, அல்லது அவர் பாட விரும்பிய இடமா?

ஆறுமுகச்சாமி சமஸ்கிருதத்தில் பாட முற்பட்டிருந்தால் அவர் மேல் நடவடிக்கை இருந்திருக்காது என்று தமிழ் போராட்டக்குழு நம்புகிறதா?


ஏற்கனவே கோவில் கொடிமரம் அருகே கைகளை தலைக்குமேல் உயர்த்தி கும்பிட முயன்றது, சிவ சிவா என்று சொல்லுதல், சாஷ்டங்கமாக நமஸ்கரித்தல், கற்பூரம் கொளுத்துதல் போன்ற வழிபாட்டு முறைகளை செய்ததற்காக கைது செய்யப்பட்டவர் புலவர் என்று சொல்லப்படுகிறது... கோவில் கொடிமரம் அருகே நூற்றுக்கணக்கானவர்கள் தலைக்கு மேல் கையை உயர்த்தி கும்பிடுவது, சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிடுவது போன்றவற்றை தினமும் பார்க்கலாம். சிவ சிவா என்பது கோவிலில் எப்போதும் கேட்கும் மந்திரம். இதை செய்ததற்காக ஆறுமுகச்சாமி மாத்திரம் ஏன் கைது செய்யப்பட்டார் என்பதை கொஞ்சம் யோசித்தல் நலம்... பல முறை கண்டிக்கப்பட்டு, கைதும் செய்யப்பட்ட புலவர் ஆறுமுகச்சாமியின் பின்புலம் என்ன, அவரின் நோக்கம் என்ன என்பதை பற்றியெல்லாம் எந்த செய்தியும் வரவில்லை..

எல்லாவற்றிற்கும் முன்பாக இந்த விவகாரம் விதவிதமான வேஷங்களை அடைந்து மக்களின் படைப்பிலக்கிய கற்பனைத்திறனை வெளிக்கொணர்கிறது... புலவர் ஆறுமுகச்சாமி விரும்பியோ விரும்பாமலோ நந்தனார் ஆக்கப்படுகிறார்... வழக்கம் போலவே அரசியல்வாதியின் தமிழ்ப்பற்று அறிக்கையை கண்டவுடன் கார்த்திக்ரமாஸ் உட்பட்ட பதிவர்கள் தீஷிதர்கள் தெருப்பொறுக்கிகள், அவர்கள் தொழில் விபச்சாரம் என்று நாகரீகமான வார்த்தைகள் (செந்தமிழ்?!) கொண்டு கருத்து சொல்ல ஆரம்பித்துவிட்டனர்... சிவன் சொத்து அபகரிக்கப்படுகிறது என்கிறார் ராகவன்... உண்மையிலேயே சிவன் பாதத்தில் இருந்து சதங்கையில் இருந்த வைரம் சில வருடங்களுக்கு முன்பு காணாமல் போனது... அதுதான் சிவன் சொத்து அபகரித்தல்.. இந்த விவகாரம் எப்படி சிவன் சொத்து "அபகரிப்பு" என்பது அவருக்கே வெளிச்சம்... பெரியாரிஸ்டுகள் காலத்தின் கட்டாயத்தில் தமிழை மதிக்காத கோயிலில் தமிழ்ர்கள் புக மறுப்போம் என்று போராட்டத்துக்கு அறைகூவல் விடுக்கிறார்கள். வெறும் வாயை மென்று கொண்டிருந்த வெள்ளப்பூண்டு கோஷ்டிகளும் தன் பங்குக்கு தமிழக அரசுக்கு கோயில் சுவீகாரம், பிரஹஸ்பதிகளை நாடுகடத்துதல் என்று பலவாறு யோசனைகள் சொல்லி அவல் கருத்துகள் மெல்ல ஆரம்பித்தாயிற்று.

இது உண்மையிலே "தமிழ் பாடுதல் vs தமிழ் பாடும் இடம்" ப்ரச்னையா அல்லது "தயிர் சாதம் vs கறி சோறு" ப்ரச்னையா என்பது தில்லையம்பலத்தானுக்கு மட்டுமே தெரிந்த சிதம்பர ரகசியம்




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


எனக்கும் சிதம்பரம் கோவிலில் சில அனுபவங்கள் உண்டு, அதாவது நாங்கள் பொற்கலசத்தை புகைப்படம் எடுக்க முற்பட்ட பொழுது அவர்கள் அதை தடுத்துவிட்டார்கள். அதில் பிரச்சனையில்லை.

நாங்கள் பிரகாரத்திற்கு வெளியில் உட்கார்ந்திருந்தோம்(கால் நீட்டி) வந்தவர்கள் நடராஜர் சன்னதியின் எதிரில் கால் நீட்டி உட்காரக்கூடாதென்று சொல்லி திட்டிய நினைவும் உண்டு.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நடராஜரென்றால் காலை பிறகு எங்கே தான் நீட்டுவது????
 



ஒரு விஷய்த்தை கண்டிப்பதில் சில பேர் சரியான முறையிலும் பல பேர் தவறான முறையிலும் கண்டிப்பார்கள்.

கருத்து சுதந்திரம் என்றால் தவறான முறையில் கண்டிப்பதை சுட்டி காட்டி கண்டிப்பதையே தவறு என்று முகமூடி கூறுவது தான்.
 



//கருத்து சுதந்திரம் என்றால் தவறான முறையில் கண்டிப்பதை சுட்டி காட்டி கண்டிப்பதையே தவறு என்று முகமூடி கூறுவது தான். //
என்ன சொல்கிறார் என்றே புரியவில்லை :(((
 



// எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நடராஜரென்றால் காலை பிறகு எங்கே தான் நீட்டுவது //

நல்ல கேள்வி... ஆனால் உங்கள் காலில் தடுக்கி யாராவது உண்மையிலேயே நடராஜர் "இருக்கும்" இடத்துக்கு போய் சேர்ந்துவிடப்போகிறார்கள் என்ற ஆர்வக்கோளாறில் அப்படி சொல்லியிருக்கலாம்... அதுவுமில்லாம வெளியூர் கோஷ்டிங்க கிட்ட உள்ளூர் ஆளுங்க எப்படித்தான் கெத்த காமிக்கிறதாம்?

*

// கருத்து சுதந்திரம் என்றால் தவறான முறையில் கண்டிப்பதை சுட்டி காட்டி கண்டிப்பதையே தவறு என்று முகமூடி கூறுவது தான் //

கணேசன், நான் அவர்கள் சொல்வது தவறு என்று சொல்லவில்லை... கார்த்திக்ராமாஸின் நினைப்பு சரியாகவும் இருக்கலாம்... ஆனால் அதற்காக தெருப்பொறுக்கிகள், விபச்சாரம் என்று எழுதி அதை நாகரீகம் என்று கற்பிப்பதை சும்மா சுட்டினேன், அவ்வளவுதான்.. (அதற்காக நான் தீஷிதர் என்று அர்த்தம் இல்லை...) ஒரு உதாரணம் கொண்டு விளக்க வேண்டுமெனில் :: கார்த்திக்கின் மரியாதைக்குரிய திரு. வேலுப்பிள்ளை பிரபாகரனை நான் கொண்ட கற்பிதம் காரணமாக தமிழுக்கு துரோகம் செய்கிறவர் என்று நினைத்துக்கொண்டு அவர் மாமா வேலை பார்க்கிறார் என்றால் அவர் அதற்கு விளக்கம் கொடுக்கும்போது என் பெயரை சும்மா சுட்டுவார் அல்லவா, அது போல.. (அதற்காக அவர் பிள்ளை என்று அர்த்தம் இல்லை)

ராகவனின் கூற்றை எழுதியது அவரின் மித_மதவாத_ஆபத்தற்ற‌ கருத்து குறித்து எனக்கு இருக்கும் சந்தேகத்திற்கு பதில் அறிந்து கொள்ளும் ஆர்வத்தில்.. மற்றபடி வெள்ளைப்பூண்டுகள் எப்போதும் முகாரி ராகத்தில் பாடும் ராக்கம்மா கைய தட்டு பாடலை இப்போது இந்த விவகாரத்தால் கொஞ்சம் மாற்றி சங்கராபரணம் ராகத்தில் பாடுவார்கள் என்று சொல்லவே... அவர்கள் அனைவரின் கருத்துக்களையும் மதிக்கிறேன்... அவர்கள் சொல்வதெல்லாம் தவறு, நான் சொல்வதுதான் சரி எனும் தொனி என் எழுத்தில் இருந்தால் வருந்துகிறேன்.
 



நீள் பதிவுகளுக்கு நடுவே மூச்சு வாங்கிக் கொண்டு படிப்பது என் வழக்கம். இந்த நேரத்தில் மூச்சு வாங்கினால், குஷி ஜோதிகா மாதிரி அர்த்தப்பட்டுக் கொள்ளும் வாய்ப்பிருப்பதால் (என்னுடைய சாதா ஸ்பெஷல் வாய்தா + தூக்கக் கலக்க மறுமொழி :-)

1. லெனின் சமாதியில் கையை கோட் பாக்கெட்டுக்குள் வைத்திருந்திருக்கிறார். வாயிற்காப்போன் ஓடி வருகிறான். முறைக்கிறான். குளிருக்கு உள்ளே இருந்த அவளின் விரல்களை, வெளியே எடுக்கிறான். தலைக்கு மேல் உடற்பயிற்சி செய்வது போல் தூக்கி விட்டு; இடுப்புக்குப் பக்கத்தில் வெளியே வைத்து - மரியாதை செலுத்துமாறு அறிவுறுத்தி மறைகிறான்.
(நேற்றைய Jeopardy நிகழ்ச்சியில் பங்கு கொண்டவர்)

2. வாடிகன் உள்ளே செல்ல அரை டிரவுசர், மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் ஆடை ஆகாது.

யாரிடமாவது 'நியமத்தைப் பரிபாலி' என்று சொன்னால், அதிகார அபின் சிரத்திலேறி, வழிப்போக்கர்களைத் தட்டி வைக்க சொல்கிறது.

உங்கள் பதிவுக்கு சம்பந்தமில்லாத மறுமொழி என்றால், முதல் ஆளாக என் பக்கமாக திசைத் திருப்பிக் கொண்டதற்கு நன்றி நவின்று விடவும் :-)
 



கோவி.கண்ணன் :)))

சைடுபாரில் உள்ள அறிவுப்பசி அண்ணாசாமி கருத்தை பாருங்கள்.. அதை கொண்டு என்னை குத்தி, அடுத்தவங்க சொல்றதையும் மதிக்கணும்னு சொல்ற முகமூடி, என்னதான் சில பேரு தப்பா சில கருத்துக்கள சொன்னாலும், அவங்க சொல்ற கருத்துல உள்ள தப்ப பத்தி பேசலாமே தவிர, அவங்க தப்பா சொல்ற கருத்தை சொல்லவே கூடாது, சொல்றதே தப்புன்னு எப்படி சொல்லலாம் அப்படீன்னு கணேசன் கேட்கிறார்னு நானே புரிஞ்சிகிட்டேன் (இத மறுபடி படிச்சா எனக்கே புரிய மாட்டேங்குது)
 



----அவர்கள் அனைவரின் கருத்துக்களையும் மதிக்கிறேன்... அவர்கள் சொல்வதெல்லாம் தவறு, நான் சொல்வதுதான் சரி எனும் தொனி என் எழுத்தில் இருந்தால் வருந்துகிறேன். ----

முகமூடியா!!! நம்ப முடியலியே :P

உம்ம ஐடியை எவராவது கொந்தர் போலி பின்னூட்டம் இட்டுட்டாங்களா ;-))
 



//(இத மறுபடி படிச்சா எனக்கே புரிய மாட்டேங்குது) //
இதுக்கு அவரே பராவாயில்லை என்று நினைக்கிறேன் :)))
 



//Boston Bala said...
----அவர்கள் அனைவரின் கருத்துக்களையும் மதிக்கிறேன்... அவர்கள் சொல்வதெல்லாம் தவறு, நான் சொல்வதுதான் சரி எனும் தொனி என் எழுத்தில் இருந்தால் வருந்துகிறேன். ----

முகமூடியா!!! நம்ப முடியலியே :P
//

பாலா ... இதுக்கு எதுக்கு அதிர்ச்சி அடையிறிங்க... 'கருத்துக்களை மதிக்கிறேன்' என்று தானே சொல்கிறார், 'ஏற்கிறேன்' என்றா சொல்கிறார்? பஞ்ச் இல்லாம இருந்தால் தான் அதிர்ச்சி அடையனும் :)))
 



உங்க முதல் கருத்த படிச்சவுடனே எங்கியோ கேள்விப்பட்டது மாதிரிக்கீதே... இவருக்கும் அந்த அனுபவமான்னு ஒரு நிமிசம் சுகுராயிட்டேன்... நேத்தி பாத்தது என்னிக்கோ பாத்தது மாதிரிக்கீது... (இருந்தாலும் அவங்க ரெண்டாவதாவது வருவாங்கன்னு எதிர்பார்த்தேன்)

உங்க கருத்துக்கு ஒரு அருஞ்சொற்பொருள் போட்டுக்கிறேன் பாஸு :: அதாவது ஒரு அமெரிக்க பெண்மணி ரஷ்யாவில் லெனின் சிலையை பராக்கு பார்த்துக்கொண்டு நிற்கிறார். குளிருக்கு இதமாக அவர் கைகள் பாக்கெட்டில் இருக்கின்றன... அப்போது ஆஜானுபாகுவான காவலர் ஒருவர் வருகிறார். எதுவுமே பேசாமல் பெண்ணின் கையை பிடித்து வெடுக்கென்று இழுத்து தலைக்கு மேல் தூக்கி வைத்து பின் கீழே இறக்கி விடுகிறார். ஒரு எச்சரிக்கை இல்லை, ஒரு விளக்கம் இல்லை.. இத்தனையும் அந்த பெண்மணி எதிர்பாராத விநாடியில் நடக்கிறது... பிறகுதான் அந்த பெண்ணுக்கு புரிகிறது, ரஷ்யாவில் பாக்கெட்டுக்குள் கைவிட்டு நிற்பது அவமரியாதை செய்வதாக அர்த்தம்.. லெனின் (சிலைக்கு) அவமரியாதையா? அன்றிலிருந்து மொத்தமாக கையை பாக்கெட்டில் விடுவதையே விட்டுவிட்டதாக அந்த பெண்மணி சொன்னார்...

*

// முகமூடியா!!! நம்ப முடியலியே // எத்தினி பேரய்யா இப்படி கிளம்பியிருக்கீங்க...
 



// வாடிகன் உள்ளே செல்ல அரை டிரவுசர், மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் ஆடை ஆகாது.//

இது எல்லோருக்கும் உள்ள பொது விதி.இவர் இவர் மட்டும் அரை டவுடர் போட்டுக்கொண்டு போகலாம் என்று இருந்தால் அது பித்தலாட்டம்.
 



// 'கருத்துக்களை மதிக்கிறேன்' என்று தானே சொல்கிறார், 'ஏற்கிறேன்' என்றா சொல்கிறார்? //

அதே! அதே!!
(ஒரு நிமிசம் முன்னாடி பாத்திருந்தா இதையே பாபாவுக்கு பதிலாக்கியிருக்கலாம்)
 



// இது எல்லோருக்கும் உள்ள பொது விதி //

இதையே ஒரு போராட்டக்காரனின் பார்வையில் பார்ப்பதென்றால் ::

அது என்ன பொது விதி... மனிதன் உருவாக்கியதுதானே இந்த விதிகள் எல்லாம்... ஏதோ ஒரு குழு எப்போதோ போட்ட தீர்மானத்தை இன்னமும் நியதி என்ற பெயரில் எதற்கு பின்பற்ற வேண்டும்... விதிகள் போட்ட காலத்தில் ஸ்லீவ்லெஸ் என்ற உடையே கண்டுபிடிக்கப்படவில்லை... காலத்துக்கு ஏற்ப இந்த நியதிகளில் மாற்றம் தேவையா இல்லையா? இதற்கெல்லாம் ஒரே வழி ரோம் அரசு வாடிகனை கைப்பற்றி இந்த விதிகளை எல்லாம் தளர்த்திட வழி செய்ய வேண்டும்...

பிகு :: இது எனது கருத்து அல்ல.. ஒரு போராட்டக்காரனின் கருத்து.
 



திருவாசகமா சிவபுராணமா என்ற உங்கள் சந்தேகத்திற்கு மட்டும் எனது பதில்.மாணிக்க வாசகர் பாடிய அத்தனை பாடல்களும் திருவாசகம் எனவே அழைக்கப்படும். திருவுந்தியார், திருக்களிற்றுப்படியார், திருக்கோவையார், சிவபுராணம், பத்துகள், பொற்சுண்ணம், என்று திருவாசகத்தின் வகைகளில் ஒன்றுதான் சிவபுராணம்
 



//அது என்ன பொது விதி... மனிதன் உருவாக்கியதுதானே இந்த விதிகள் எல்லாம்... ஏதோ ஒரு குழு எப்போதோ போட்ட தீர்மானத்தை இன்னமும் நியதி என்ற பெயரில் எதற்கு பின்பற்ற வேண்டும்...//

அது தானே!

//விதிகள் போட்ட காலத்தில் ஸ்லீவ்லெஸ் என்ற உடையே கண்டுபிடிக்கப்படவில்லை... காலத்துக்கு ஏற்ப இந்த நியதிகளில் மாற்றம் தேவையா இல்லையா?//
தேவை தான் போலிருக்கிறது

//இதற்கெல்லாம் ஒரே வழி ரோம் அரசு வாடிகனை கைப்பற்றி இந்த விதிகளை எல்லாம் தளர்த்திட வழி செய்ய வேண்டும்...//
செஞ்சுட்டா போச்சு .(எல்லா ஜாதி ,மொழி,இனத்துக்கும் ஒரே விதியாய் இருக்கும் பட்சத்தில்)

//பிகு :: இது எனது கருத்து அல்ல.. ஒரு போராட்டக்காரனின் கருத்து.//
போராட்டக்காரனுக்கு என் சார்பா நன்றி சொல்லிடுங்க
 



//
அவர்கள் சொல்வதெல்லாம் தவறு, நான் சொல்வதுதான் சரி எனும் தொனி என் எழுத்தில் இருந்தால் வருந்துகிறேன்.
//

politically correct statement...

உண்மையில் பகுத்தறிவு பகலவன்கள்! சும்மாவே மெல்லும் வாயில் அவலைப் போட்டுவிட்டது இந்த விஷயம்.

உண்மை எதுவாக இருந்த்தாலும், தமிழ் என் மூச்சு என்று சொல்லிக்கொண்டு "வில்ஸ்" அடிக்கும் தமிழ் பாதுகாவலர்கள் சொல்வது தவறு என்று நேரடியாக மூஞ்சியில் அடித்தார் போல் சொல்வது தானே...இதிலென்ன வெட்கப்பட்டுக் கொண்டு இப்படி politically correct statement இடையில் அடிக்கவேண்டிய கட்டாயம்?

வெட்கப்படவேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை, பொய் சொல்பவர்களுக்குத்தான் அது வேண்டும்.
 



// வாடிகன் உள்ளே செல்ல அரை டிரவுசர், மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் ஆடை ஆகாது.//
இது பொது விதி என்றால் அங்குள்ள நிர்வாகிகளும், சேவை புரிபவர்ளும் கூட அதை பின்பற்றுகிறார்கள்.

இது உள்ளுக்குள் ஒரு விதி, வெளியே இருந்து வருபவர்களுக்கு ஒரு விதி.

சரி பொது விதியினால் அனைவருக்கும் ஏதாவது பயன் இருக்க வேண்டும்.
// வாடிகன் உள்ளே செல்ல அரை டிரவுசர், மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் ஆடை ஆகாது.//
இதில் ஒரு சமூக நலன் எதிர்பார்க்கப்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

வெளியார் ஒருவர் தமிழில் பாட தடை செய்யும் பொது விதியில், உள்ளாரின் சுய நலன் கூடி வெட்டவெளிச்சமாக தெரிகிறது.
 



தகவலுக்கு நன்றி ஈழநாதன்

*

கண்டிப்பாக ஜோ.. நன்றி ! (போராட்டக்காரனுடையதும்தான்)

*

// இதிலென்ன வெட்கப்பட்டுக் கொண்டு இப்படி politically correct statement இடையில் அடிக்கவேண்டிய கட்டாயம்? //

கொஞ்ச நேரமாவது செக்கூலரிஸ்டா 'வாழ்ந்து' பாக்கலாம்னு பாத்தா, உட மாட்டீங்களே... :))

*

விழி // வாடிகன் உள்ளே செல்ல அரை டிரவுசர், மினி ஸ்கர்ட், ஸ்லீவ்லெஸ் ஆடை ஆகாது :-
இதில் ஒரு சமூக நலன் எதிர்பார்க்கப்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகிறது //

இதில் என்ன சமூக நலன் என்பதை கொஞ்சம் எனக்கு புரியும்படி விளக்குவீர்களா?
 



//
இதையே ஒரு போராட்டக்காரனின் பார்வையில் பார்ப்பதென்றால் ::
//

போராட்டக்காரன் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள், முக்கியமாக அவர்கள் "தலீவர்கள்" தற்பொழுது உள்ள சூள்நிலைகளில் பார்க்கும் போது, வேற்று மதத்தின் ஒற்றர்கள் என்ற பார்வை தவிர வேறு ஏதும் சரியாக இருப்பதாகத் தெரியவில்லை.

Agents of Hostile foreign power!!


பெரியாரிசம் பேசுபவர்கள் சொல்பதைப் பார்த்தீர்கள் என்றாலே தெரியும்,
"திரு நீறு பூசுவது நாட்டின் சாபக்கேடு"..என்றெல்லாம் பேசுபவர்கள், சிலுவை அணிவது, குல்லா போடுவது பற்றி கேட்டால், உடம்பில் உள்ள அத்துணை துவாரங்களையும் மூடிக் கொள்வார்கள். இவர்கள் தான் இந்து கோவிலில் தமிழ் காவலர்கள்...உண்மையில் இவர்கள் தான் நாட்டின் சாபக் கேடுகள்...
 



//போராட்டக்காரன் என்று சொல்லிக் கொண்டு திரிபவர்கள், முக்கியமாக அவர்கள் "தலீவர்கள்" தற்பொழுது உள்ள சூள்நிலைகளில் பார்க்கும் போது, வேற்று மதத்தின் ஒற்றர்கள் என்ற பார்வை தவிர வேறு ஏதும் சரியாக இருப்பதாகத் தெரியவில்லை.

Agents of Hostile foreign power!!//

முகமூடி,
வஜ்ரா சங்கர் உங்களுக்கு தெரிஞ்ச போராட்டக்காரர பத்தி பின் நவீனத்துவ பாணியில் எனக்கு புரியாத மாதிரி ஏதேதோ சொல்லுறாரே! நீங்க சொன்ன போராட்டக்காரர் இது மாதிரி ஆளு தானா?
 



//பெரியாரிசம் பேசுபவர்கள் சொல்பதைப் பார்த்தீர்கள் என்றாலே தெரியும்,
"திரு நீறு பூசுவது நாட்டின் சாபக்கேடு"..என்றெல்லாம் பேசுபவர்கள், சிலுவை அணிவது, குல்லா போடுவது பற்றி கேட்டால், உடம்பில் உள்ள அத்துணை துவாரங்களையும் மூடிக் கொள்வார்கள்.//

வஜ்ரா சங்கர் ,
இப்போ நீங்க கூட இங்க தமிழக கோவிலில் தமிழில் பாடுவது குறித்த சர்ச்சையைப் பற்றி எதுவுமே சொல்லாமல் எல்லா துவாரங்களையும் மூடிக் கொண்டு சம்பந்தம் இல்லாமல் எதையோ சொல்கிறீர்கள் தானே!

மற்ற படி பெரியார் கிறிஸ்தவ ,இஸ்லாம் மதங்களை தாக்கி எழுதிய கட்டுரைகளை தி.க வெளியிட்ட புத்தகங்களில் நான் படித்திருக்கிறேன் .அது போக சேலத்தில் நடந்த தி.க மாநாட்டில் "பரிசுத்த ஆவியில் இட்லி வேகுமா?" என்றும் ,"768 என்ன அல்லாவின் பூட்டு நம்பரா?' என்ரும் தட்டியில் எழுதி வைத்திருந்ததாக கேள்விப்பட்டேன் .இதெல்லாம் உங்களுக்கு சற்று ஆறுதலைக் கொடுக்கும் என நம்புகிறேன்.
 



Mr.Mask is in full form :)
 



முகமூடி,
ஜீ.வி யில் வந்த கட்டுரையில் கூட நீங்கள் சொன்ன சில விடயங்களை தீட்சிதர்கள் சொல்லியிருக்கிறார்கள்..அதில் ஒன்று "இந்த கோவில் என்றில்லை ,தமிழ்நாட்டின் எந்த கோயிலிலாவது ஓதுவார் மூலவர் சந்நிதிக்குள் சென்று தேவாரப் பாடல்களைப் பாடுகிறாரா என்று பாருங்கள்.பாட மாட்டார்கள் ! மகா மண்டபத்தில் நின்று தான் பாடுவார்கள் .அப்படி இருக்கும் போது இங்கு மட்டும் மூலவர் சந்நிதியாக இருக்கும் திருச்சிற்றம்பலத்தில் ஏறித்தான் பாடுவேன் என்று சொல்லுவது என்ன நியாயம் ?" -என்று ஒரு தீட்சிதர் கேட்டிருக்கிறார் .

இது ஒரு மரபு என்று புரிகிறது .ஆனால் ...

1.மகா மண்டபத்தில் அதே இறைவனை நோக்கி பாடுவதற்கும் ,மூலவர் சந்நிதானத்தில் சென்று பாடுவதற்கும் என்ன வேறுபாடு ?

2.எதனால் மகா மண்டபத்தில் தேவாரம் பாடக்கூடாது என்று சொல்லப்படுகிறது ? அது சமஸ்கிருதத்தில் இல்லாததாலா (தேவாரம் அதே கடவுளை பற்றிய பாடல் தான் என புரிந்து கொண்டுள்ளது சரியே என நம்புகிறேன்) ?

3.அல்லது யார் யார் பாட முடியும் என்பது தான் பிரச்சனையா?
 



முகமூடி,
முந்தைய கேள்விகளில்
//2.எதனால் மகா மண்டபத்தில் தேவாரம் பாடக்கூடாது என்று சொல்லப்படுகிறது ?//
என்பதை 2.எதனால் சந்நிதானத்தில் தேவாரம் பாடக்கூடாது என்று சொல்லப்படுகிறது ? என்று திருத்தி வாசிக்கவும்
 



ஜீ.வி தகவலுக்கு நன்றி ஜோ.. இப்பொழுதுதான் பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடியே திருவாசகம் பாடுவதில் அல்ல ப்ரச்னை, அதை திருச்சிற்றம்பலத்தில் ஏறிப்பாடுவேன் என்ற ஆறுமுகச்சாமியின் பிடிவாதமே ப்ரச்னை... அரசியல் படை ஒன்றை திரட்டி ஒரு முடிவோடு வந்திருக்கிறார் என்று தெரிகிறது...

உங்கள் கேள்விகளுக்கு சரியான விடை எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்ததை சொல்கிறேன்..

1. மூலவர் சன்னிதானம் என்பது கடவுள் உரையும் இடம்.. பெரும்பாலும் இது பூஜை செய்ய பாத்தியதை பட்டவர்கள் மட்டுமே செல்லும் இடமாகத்தான் இருக்கும்... (எங்கள் கிராம குலதெய்வக்கோயிலில் நான் சென்று சாமியை தொடுகிறேன் என்றால் பூசாரி ஒன்றும் சொல்லப்போவதில்லை.. ஆனால் என்னை பொறுத்த வரை அது எனக்கு வேண்டாத வேலை) இந்த இடத்தின் அடுத்த வெளி சுற்றை பொறுத்த வரை ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு நியதி இருக்கும்.. குருவாயூர் போலவே சிதம்பரத்தில் திருச்சிற்றம்பலம் எனப்படும் கனகசபையில் ஆண்கள் சட்டையை கழற்றிவிட்டுத்தான் நுழைய வேண்டும் (கார்த்திக் மாதிரி பெண்களுக்கும் இப்படி ஒரு சட்டம் போட்டால் என்று குதர்க்கமாக கேட்டால் எனக்கு பதில் தெரியாது). ஆனால் தரிசனம் செய்ய வருபவர்களுக்கு பூஜை செய்ய அனுமதி கிடையாது. மேல்மருவத்தூரில் பெண்களும் கருவறைக்குள் நுழைந்து பூஜை செய்யலாம். தென்னிந்தியாவில் பெரும்பாலான கோயில்களில் சாமியை தொடக்கூடாது. வட இந்தியாவில் தொடலாம். இந்த நியதிகளுக்கெல்லாம் ஏன் என்று எனக்கு அர்த்தம் தெரியாது... சிதம்பரத்தை பொறுத்த வரை மகா மண்டபம் என்பது கனகசபைக்கு வெளிச்சுற்று.. இங்கு இருந்து பாடலாம், இசைக்கலாம், பேசலாம், ஓதலாம்.. ஆனால் மூலவர் சந்நிதானத்தில் (கனகசபை) ஆண்கள் சட்டையின்றி சென்று தரிசனம் மட்டுமே செய்யலாம், சிதம்பர ரகசியத்தை காணலாம்... அங்கு போய் சத்தமாகத்தான் பாட்டு படிப்பேன் என்றால் எப்படி? சரியான உதாரணம் இல்லை என்றாலும் குத்துமதிப்பாக சொன்னால், ஞாயிற்றுக்கிழமை காலையில் நடக்கும் ஜெபத்தில் பாதிரியார் நின்று பைபிள் வாசிப்பாரே, அந்த இடத்தில் அந்த நேரத்தில் அதே போன்ற உடை என்னிடம் இருக்கிறது அதை அணிந்து நான் பைபிள் வாசிக்கிறேன் என்று சொல்வதை போல என்று வைத்துக்கொள்ளலாம்.

2. மூலவர் சன்னிதானத்தில் பாடக்கூடாது.. அவ்வளவுதான்.. தேவாரம் சிவபுராணம் என்று இல்லை, சமஸ்கிருதமாக இருந்தாலும் அதேதான்.. பாடக்கூடாது என்பதுதான் நியதி.

3. ஆம். பூஜை செய்யும் உரிமை பெற்றவர்கள் மட்டுமே பாடலாம்.
 



தமிழுக்கு ஏன் கட்டுப்பாடு? - சிதம்பரத்தில் ஒரு ஆறுமுகச்சாமி! :: நன்றி :- ஜீனியர் விகடன் 23-07-06 இதழ்

சிதம்பரம் நடராஜர் கோயிலை மையமாக வைத்து அவ்வப்போது ஏதாவது ஒரு சர்ச்சை கிளம்புவது வழக்கம்தான் என்றாலும், இந்த முறை கிளம்பியிருக்கும் சர்ச்சை... நாடு முழுவதும் உள்ள தமிழ் ஆர்வலர்களை டென்ஷனாக்கியிருக்கிறது. சிவனடியார் ஆறுமுகச்சாமி என்பவர் தேவாரம், திருவாசகத்தை சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள சிற்றம்பலத்தில் போய் பாடப்போவதாக அறிவித்தார். நடராஜர் ஆலய நிர்வாகத்தைத் தங்கள் கையில் வைத்திருக்கும் தீட்சிதர்கள் தரப்பில் இதற்கு பயங்கர எதிர்ப்புக் கிளம்ப, கூடவே பதற்றமும் பற்றிக்கொண்டது.

கடலூர் மாவட்டம், குமுடிமூலை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி. இல்லற வாழ்க்கையில் இருந்தவர், பிறகு துறவறம் பூண்டு தேவாரம், திருவாசகத்தை கற்றுத் தேர்ந்தவர். ஊர்ஊராக ஆலய தரிசனம் மேற்கொண்டிருக்கும் இவர், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள சிற்றம்பலத்தில் வைத்து தேவாரம், திருவாசகத்தைப் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், ஏற்கெனவே ஒருமுறை இதே முயற்சியில் கசப்பான அனுபவம் இருந்ததால், பல்வேறு அமைப்புகளின் ஆதரவைப் பெறும் வேலையில் இறங்கினார். அதற்குள்ளாகவே விஷயம் தெரிந்து, ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடக்கூடாது என்று சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் தடையுத்தரவை வாங்கி விட்டார்கள் தீட்சிதர்கள்!

அதற்குப் பிறகுதான் விவகாரம் சூடுபிடித்தது. தடையை மீறி 15&ம் தேதி கோயிலுக்குள் நுழைந்து, ஆறுமுகச்சாமியைப் பாடவைப்பது என்று ‘மனித உரிமை பாதுகாப்பு மையம்’ என்ற அமைப்பு அறிவித்து, அதற்காக முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் (அ.தி.மு.க.), சிதம்பரம் நகர் மன்ற முன்னாள் தலைவர் வி.எம்.எஸ்.சவுந்திரபாண்டியன் (பா.ம.க.) ஆகியோர் களையும் கம்யூனிஸ்ட், திராவிடர் கழகம் ஆகிய கட்சிகளையும் ஒருங்கிணைத்தது அந்த அமைப்பு. அதன்படி, 15&ம் தேதி காலை பத்து மணிக்கு சிதம்பரம், பெரியார் சிலை அருகில் எல்லோரும் ஒன்றுகூடி, ஆறுமுகச்சாமியை வழியனுப்பும் கூட்டம் நடத்தினர்.

ஒவ்வொரு பிரபலமாக ஆறுமுகச் சாமியை வாழ்த்திப் பேசிக்கொண்டிருக்க, நாம் ‘மனித உரிமை பாதுகாப்பு மைய’த்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜுவிடம் பேச்சுக் கொடுத்தோம். ‘‘உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை 1972 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் இது சம்பந்தமான வழக்குகளில், Ôஆகம விதிப்படி என்பதையும் பரம்பரை பழக்கம் என்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாதுÕ என்று தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும் இங்குள்ள தீட்சிதர்கள், ‘சிற்றம்பலத்தில் பாடுவதும் அர்ச்சனை செய்வதும் எங்களது பரம்பரை உரிமை’ என்று சொல்லி வருகிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழக அரசு ஆணையே பிறப்பித்து விட்ட நிலையிலும், ஆறுமுகச்சாமியை சிற்றம்பலத்தில் ஏறி பாடு வதையே இவர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள். இதற்காக நீதி மன்றத்திலும் பொய்யான தகவல்களைக் கொடுத்து ஒரு தடை ஆணையையும் வாங்கியிருக்கிறார்கள்’’ என்று சொன்னார்.

முன்னாள் அமைச்சர் வி.வி.சாமிநாதன் தன்னுடைய வாழ்த்துரையில், ‘‘ஆறுமுகச்சாமியைப் பாடக்கூடாது என்று சொன்னதன் மூலம், தன்மானமுள்ள ஒவ்வொரு தமிழனின் கன்னத்திலும் தீட்சிதர்கள் ஓங்கி அறைந்திருக்கிறார்கள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு தீட்சிதர்கள் தொடுத்த ஒரு வழக்கில் இந்தக் கோயில் தீட்சிதர்களுக்கு சொந்தமில்லை என்றும் ஒட்டுமொத்த சைவர்களுக்கும் சொந்தம் என்றும் உயர் நீதிமன்ற நீதிபதி முத்துசாமி ஐயரும் இன்னொரு வெள்ளைக்கார நீதிபதி யும் தீர்ப்பளித்தனர். அப்படி அவர் களுக்கு சொந்தமில்லாத கோயிலை ஆக்கிரமித்து அமர்ந்துகொண்டு, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று வேறு சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்ன நியாயம் இது?’’ என்றார்.

அடுத்தடுத்துப் பேசிய பலரும் இதே போலவே தீட்சிதர்களின் செயல்பாடுகள் குறித்து ஏகத்துக்கும் கண்டித்துப் பேசினர்.

ஒருகட்டத்தில் கூட்டத்தினர் ஆறுமுகச்சாமியை அழைத்துக்கொண்டு விறுவிறுவென கோயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தனர். சுமார் நூறு அடிதூரம் அவர்களை நடக்கவிட்ட காவல்துறையினர், அதன்பின் அவர்களைக் கைது செய்வதாகச் சொன்னார்கள். உடனே, ‘திருக்கோயிலில் பாட போலீஸார் அனுமதிக்காததால் தெருவிலேயே பாடுகிறோம்’ என்று சொல்லி திருவாசகப் பாடல்களைப் பாட ஆரம்பித்துவிட்டார் ஆறுமுகச்சாமி. அவர் பாடி முடித்ததும், அவரையும் மற்றவர்களையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

ஆறுமுகச்சாமியிடம் நாம் பேசியபோது, ‘‘மாணிக்க வாசகர் தமது திருவாசகத்தைப் பாடி அதை சிவபெருமானே சரிபார்த்த புராண வரலாறு உடையது இந்த சிற்றம்பலம். அதிலே திருவாசகம் பாடக்கூடாது என்று சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? நான் ஏற்கெனவே 2000&ம் ஆண்டு மே மாதம் அங்கே போய்ப் பாடியிருக்கிறேன். அடுத்து இன்னொருநாள் பாடப் போகும்போது என்னைப் பாடக்கூடாது என்று சொல்லி அடித்துக் கையை முறித்துவிட்டனர்.

இந்த முறை எனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்டு போலீஸிலும் மனு கொடுத்துவிட்டுதான் வந்தேன். ஆனால், தமிழ்நாட்டுக் கோயிலில் தமிழில் பாடுபவனுக்குப் பாதுகாப்பு கொடுப்பதற்குப் பதில், கைது செய்திருக்கிறது போலீஸ். இப்போது என்னைத் தடுத்து விடலாம். ஆனால், என் உயிருள்ளவரை இந்த முயற்சியை விட மாட்டேன்’’ என்று ஆவேசம் பொங்கச் சொன்னார் ஆறுமுகச்சாமி.

தீட்சிதர்கள் தரப்பில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்க ஆலய அலுவலகத்துக்குச் சென்றோம். அங்கிருந்த தீட்சிதர்கள், ‘‘இந்தக் கோயில் என்றில்லை, தமிழ்நாட்டின் எந்தக் கோயிலிலாவது ஓதுவார் மூலவர் சந்நிதிக்குள் சென்று தேவாரப் பாடல்களைப் பாடுகிறாரா என்று பாருங்கள். பாடமாட்டார்கள்! மகாமண்டபத்தில் நின்றுதான் பாடுவார்கள். அப்படி இருக்கும்போது இங்கு மட்டும், மூலவர் சந்நிதியாக இருக்கும் திருச்சிற்றம்பலத்தில் ஏறிதான் பாடுவேன்’ என்று சொல்வது என்ன நியாயம்?

நாங்கள் தமிழுக்கு எதிரிகள் என்பதுபோல பேசு கிறார்கள். நாங்களும் தமிழர்கள்தான். தமிழில்தான் பேசுகிறோம். இதே தேவாரம், திருவாசகத்தை நாங்களும்தான் பாடுகிறோம். இங்கு தேவாரம் பாடுவதே இல்லை என்று அவர்கள் சொல்வதெல்லாம் கவைக்குதவாத பேச்சு. இப்பவும் சொல்கிறோம்... அந்த ஆறுமுகச்சாமி தாராளமாகக் கோயிலுக்குள் வரட்டும். மகாமண்டபத்தில் வைத்து தேவாரம், திருவாசகம் பாடட்டும்’’ என்றனர்.

இப்போதைக்கு ஓய்ந்ததுபோல இருந்தாலும் தங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தப் போவதாக சொல்கிறார்கள், ஆறுமுகச்சாமிக்கு ஆதரவளிப்பவர்கள். மேலும் இந்த விஷயத்தில் தமிழக அரசு தலையிட வேண்டும் என்றும் விரும்புகிறார்கள். விவகாரம் பெரிதாக வெடிப்பதற்குள் அரசு தலையிட்டு, பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவந்தால் நன்றாக இருக்கும்.
 



Thanks.Now there is some
clarity regarding the issue.
It is not a question of not allowing Tamil in the temple.
But allowing it where and
when.If there is a discrimination
against one person there is a
strong case.It it is against
tradition then the case is not
that strong.As HRC&E is not controlling this temple the
dhikidhars have an upper hand.
I think legally their position
is strong.
 



முகமூடி,
பதில்களுக்கு நன்றி!

இவை குறித்த மேல் கேள்விகள் தோன்றினால் பிறகு கேட்கிறேன்.

//சரியான உதாரணம் இல்லை என்றாலும் குத்துமதிப்பாக சொன்னால், ஞாயிற்றுக்கிழமை காலையில் நடக்கும் ஜெபத்தில் பாதிரியார் நின்று பைபிள் வாசிப்பாரே, அந்த இடத்தில் அந்த நேரத்தில் அதே போன்ற உடை என்னிடம் இருக்கிறது அதை அணிந்து நான் பைபிள் வாசிக்கிறேன் என்று சொல்வதை போல என்று வைத்துக்கொள்ளலாம்.//

ஹி.ஹி..நல்ல உதாரணம் .ஆனால் ஓப்பீட்டளவில் அல்ல ..நீங்கள் குறிப்பிட்டதால் அது குறித்த சிறு விளக்கம்.

கண்டிப்பாக ஒரே நேரத்தில் இரண்டு பேர் பைபிள் வாசிக்க முடியாது (வாசிப்பது இன்னொரு பாதிரியாராய் இருந்தாலும் .ஹி.ஹி) .ஆனால் நீங்கள் குறிப்பிட்ட அந்த காலை ஜெபம் (திருப்பலி) நடவாத மற்ற நேரங்களில் யாரும் சென்று பைபிள் வாசிக்கலாம் .தாங்களே பாட்டெழுதிப் பாடலாம் .ஜெபம் செய்யலாம். அதற்கேதும் தடை இல்லை.

சிதம்பரம் கோவிலிலும் திருவாசகம் பாட முனைபவர் தீட்சிதர்கள் பூசை செய்யும் அதே நேரத்தில் தானும் சென்று பாட வேண்டும் என்று அடம் பிடிப்பதாக நான் நினைக்கவில்லை . பூசை நடவாத நேரங்களும் உண்டு என நம்புகிறேன்.
 



//
வஜ்ரா சங்கர் ,
இப்போ நீங்க கூட இங்க தமிழக கோவிலில் தமிழில் பாடுவது குறித்த சர்ச்சையைப் பற்றி எதுவுமே சொல்லாமல் எல்லா துவாரங்களையும் மூடிக் கொண்டு சம்பந்தம் இல்லாமல் எதையோ சொல்கிறீர்கள் தானே!
//

ஐயா, ஜோ, திரு நீறு பூசுவதையே நாட்டின் சாபக்கேடாக கருதுபவர்கள், சிவன் கோவிலில் தமிழில், தெலுங்கில், உருது, துலு, பாசா மொழியில் அர்ச்சனை செய்தால் என்ன, இல்லை ஊமை சங்கேத மொழியில் அர்ச்சனை செய்தால் தான் என்ன கேடு வந்தது அவர்களுக்கு?
 



//தமிழ்நாட்டின் எந்தக் கோயிலிலாவது ஓதுவார் மூலவர் சந்நிதிக்குள் சென்று தேவாரப் பாடல்களைப் பாடுகிறாரா என்று பாருங்கள். பாடமாட்டார்கள்! //

முகமூடி,
மூலவர் சந்நிதிக்குள் எந்தமொழியில்(அல்லது இந்த மொழியில்தான்) பாட/ஓத/அர்ச்சனை/பேச வேண்டும் என்று ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா? தெரிந்தால் பகிர்ந்து கொள்ளவும்.

எந்த மொழியும் இல்லாமல் அமைதி மொழியான மெளனமே அங்கே செல்லுபடியாகும் என்றால் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

மெளனம் தவிர வேறுமொழியும் உண்டென்றால் அதில் தமிழ்தான் முதலில் இருக்க வேண்டும்.
 



// சிதம்பரம் கோவிலிலும் திருவாசகம் பாட முனைபவர் தீட்சிதர்கள் பூசை செய்யும் அதே நேரத்தில் தானும் சென்று பாட வேண்டும் என்று அடம் பிடிப்பதாக நான் நினைக்கவில்லை . பூசை நடவாத நேரங்களும் உண்டு என நம்புகிறேன் //

ஜோ நான் ஏற்கனவே சொன்னது போல் இது ஒரு குத்துமதிப்பான உதாரணம்தான்.. இதை ஒப்பிடுவது சரியல்ல.. சர்ச்சில் பூஜை நடக்கும் நேரத்தில் இருவர் ஒருசேர வாசிக்க முடியாது என்பது நியதி என்பதை போல் சிதம்பரம் கோயிலில் தீஷிதர் அல்லாத எவரும் பூஜை நடக்காத சமயமாக இருந்தாலும் "மூலவர் சன்னிதானத்தில்" இருந்து பாட முடியாது என்பது நியதி...

*

வஜ்ரா, ஆறுமுகச்சாமி பலே ஆளாக இருக்கிறார்.. அதிமுக, பாமக, கம்யூனிஸ்டு, தி.க இவர்கள் சப்போர்ட் திரட்டிக்கொண்டே காரியத்தில் இறங்கியிருக்கிறார். இவரின் நோக்கம் நந்தனாராவது.. அரசியல் கட்சிகள் & திகவின் நோக்கம்தான் எல்லாருக்கும் தெரியுமே...

*

கல்வெட்டு, நீங்கள் எடுத்தாண்ட பகுதியில் ஓதுவார் என்ற வார்த்தை முக்கியம்.. இவர்கள் சொல்வது என்னவெனில் எந்த கோயிலிலும் ஓதுவார்கள் எனப்படுவோர் மூலவர் சன்னதிக்குள் சென்று தமிழ்ப்பதிகங்கள் பாடமாட்டார்கள் என்பதே.. அதாவது அர்ச்சகர் மூலவர் சன்னதிக்குள் தமிழ்ப்பாடல் பாடலாம், ஓதுவார் பாடமாட்டார்கள்.

மற்றபடி அர்ச்சனை முதலியவற்றை பொறுத்த வரை சில கோயில்களில் சமஸ்கிருதம் மட்டும், சிலவற்றில் தமிழ் மட்டும், சிலவற்றில் இரண்டும் அல்லது கேட்டால் தமிழில் என்று நினைக்கிறேன்...
 



//எந்த கோயிலிலும் ஓதுவார்கள் எனப்படுவோர் மூலவர் சன்னதிக்குள் சென்று தமிழ்ப்பதிகங்கள் பாடமாட்டார்கள் என்பதே.. அதாவது அர்ச்சகர் மூலவர் சன்னதிக்குள் தமிழ்ப்பாடல் பாடலாம், ஓதுவார் பாடமாட்டார்கள்.//

முகமூடி,
ஓதுவார்களுக்கும் அர்ச்சகர்களுக்கும் என்ன வித்தியாசம்?
சாதீ? சாதீதான் என்றால் மேற்கொண்டு பேசிப் புண்ணியம் இல்லை. வேறு காரணங்கள் இருந்தால் பேசலாம்.


//மற்றபடி அர்ச்சனை முதலியவற்றை பொறுத்த வரை சில கோயில்களில் சமஸ்கிருதம் மட்டும், சிலவற்றில் தமிழ் மட்டும், சிலவற்றில் இரண்டும் அல்லது கேட்டால் தமிழில் என்று நினைக்கிறேன்... //

தமிழ்நாட்டில் தமிழ்தான் முதலில் இருக்க வேண்டும். கேட்டால்தான் தமிழ் அல்லது சம்ஸ்கிருதம் மட்டும் என்பது தமிழனுக்கு கேவலமான ஒன்று. அத்தகைய இடங்களுக்கு போகாமல் இருக்கலாம் அல்லது போராடலாம்.
 



///கருத்து சுதந்திரம் என்றால் தவறான முறையில் கண்டிப்பதை சுட்டி காட்டி கண்டிப்பதையே தவறு என்று முகமூடி கூறுவது தான்.///

எனக்கும் புரியலீங்க...ஆனா முகமூடி இதையும் புரிஞ்சுக்கிட்டு விளக்கம் குடுக்கறாரு பாருங்க...
 



சிதம்பரம் கோவில் Hindu religious charitable institution and endownment கீழ் வரவில்லையா இன்னும்...?

அது தான் பிரச்சனை, தீக்ஷிதர்கள் கையில் இருப்பதை பிடுங்கவேண்டும் இந்த திராவிடத் தடியர்களுக்கு. அதற்காக யாரைவேண்டுமென்றாலும் கூட்டு சேர்த்துக் கொள்வார்கள் இந்த மதத் துரோகிகள்.

தமிழ் என்று சொல்லி ஒரு பக்கம் சாதாரணத் தமிழனின் பார்வையைத் திருப்பி, கோவில் உண்டியலிலிருந்து வரும் பணத்தை எப்படி அரசுடமையாக்கப்பட்ட இந்துக் கோவில் சுரண்டல் கழகமான HRC&E யை வைத்து சிதம்பரத்தில் ஆதிக்கம் செய்யலாம் என்பது இவர்களின் நோக்கம்.

இந்த பிரச்சனையில் அரசு தலையிடவேண்டும் என்று எல்லோரும் குரல் எழுப்புவார்கள்...

உடனே கோவிலை HRC&E க்குள் கொண்டுவரவேண்டும் அப்போது தான் பிரச்சனைக்கு முடிவு என்று முடிவு சொல்வார்கள்...

இது காலம் காலமாக நடந்து வரும் technique தானே...
 



//ஐயா, ஜோ, திரு நீறு பூசுவதையே நாட்டின் சாபக்கேடாக கருதுபவர்கள், சிவன் கோவிலில் தமிழில், தெலுங்கில், உருது, துலு, பாசா மொழியில் அர்ச்சனை செய்தால் என்ன, இல்லை ஊமை சங்கேத மொழியில் அர்ச்சனை செய்தால் தான் என்ன கேடு வந்தது அவர்களுக்கு?//

ஐயா!
திருநீறு பூசுவது புனிதம் என்று கருதுகிற இந்து ஒருவர் இதைக்கேட்டால் மட்டும் நீங்கள் பதில் சொல்லக் காத்திருப்பது போல ..போங்க சார்..விதண்டாவாதம் பேசுவது என்று முடிவாகி விட்ட பின் யார் கேட்டால் என்ன ? உங்கள் பாணி மாறவா போகிறது ..என்னை விட்டு விடுங்கள் .நான் திருநீறு பூசுவது சாபக்கேடு என்று கருதும் இந்து மத எதிர்ப்பாளனும் அல்ல .நாத்திகனும் அல்ல .இந்துவும் அல்ல.
 



//சர்ச்சில் பூஜை நடக்கும் நேரத்தில் இருவர் ஒருசேர வாசிக்க முடியாது என்பது நியதி//
முகமூடி,
மன்னிக்கவும் .மீண்டும் விளக்க வேண்டியவனாயிருக்கிறேன்.

இது போல் நியதி எதுவும் கிடையாது .கோவிலில் ஒரு பலிபீடம் மட்டுமே இருப்பதால் ஒரே நேரத்தில் இருவர் திருப்பலி நிகழ்த்துவது நடைமுறை சாத்தியமில்லை .ஏனென்றால் திருப்பலி என்பது பாதிரியார் மட்டும் தனியாக செய்ய முடியாது .பாதிரியாரும் இறைமக்களும் இணைந்து தான் திருப்பலி செய்ய முடியும் .எனவே ஒரே நேரத்தில் ஒரே அரங்கில் இரண்டு பாதிரியார்கள் இரண்டு கூட்டத்தை வழிநடத்த நடைமுறையில் முடியாது என்ற நடைமுறை சிக்கல் தான் உள்ளதேயொழிய இதில் நியதி என்றெல்லாம் இல்லை .ஒன்றுக்கு மேற்பட்ட அரங்குகள் (வேளாங்கண்ணியில் இருப்பது போல) இருந்தால் ஒரே நேரத்தில் நடத்தலாம்.
 



சிற்றம்பலம் என்பது கருவறை அல்ல. கருவறை சிற்றம்பலத்திற்குள் இருக்கும் நடுவறை. அதில் ஆடவல்லான் திருமேனியும், பொன் வில்வம் தொங்கியதாய், காய நிலை இலிங்கமும் இருக்கின்றன.

ஒரு காலத்தில் (பிற்காலச் சோழர் காலத்திற்கு முன்) அது ஒரு சிறிய கோயிலே. சிற்றம்பலம் என்றாலே சிறு கோயில் என்றே பொருள். ஊருக்கு பெயர் எழுந்ததும் அதே பொருள் தான். (சிற்றம்பலம்>சித்தம்பரம் என்று வடமொழியாளர்களால் பலுக்கப் பெற்றது.) அந்தக் கோயிலின் கூரையில் பொன் வேய்ந்து அதைப் பொன்னம்பலமாக மாற்றி, பின் அங்கேயே ஒவ்வொரு பிற்காலச் சோழரும் முடிசூடிக் கொண்டனர். (பாண்டியருக்கு வெள்ளியம்பலம் எப்படியோ அது போல சோழருக்குப் பொன்னம்பலம்.) பிற்காலச் சோழர் காலத்திற்கு முன்னால் இன்று நாம் பார்க்கும் பேரம்பலம் கிடையாது.

மாணிக்க வாசகர் மூன்றாம் நூற்றாண்டு காலத்தவர். அவர் அந்தச் சிற்றம்பலத்தின் மேலிருந்துதான் சிவனைத் தொழுது திருவாசகத்தின் பெரும்பாலான பாடல்களைப் பாடியிருக்க முடியும். (ஏனென்றால் பெரும்பாலான மற்ற மண்டபங்களும் சுற்றாலைகளும் அப்பொழுது கிடையா.) [சிவ தாண்டவம் சிற்றம்பலத்தில் நடந்ததாக தொன்மம் கிடையாது. அது சிற்றம்பலத்திற்கும் வெளியே உள்ள அரங்கத்தில் நடந்ததாகவே பலரும் சொல்லுவார்கள்.]

ஊரில் இல்லாத வகையில், சிற்றம்பலமே கருவறை என்று ஒரு புதுப் புரிதலை இன்றைய முட்டாள்த் தனமான தீட்சிதர்கள் அளிப்பது வெறும் புரட்டு. காசு கொடுக்கும் யாரையும் சிற்றம்பலத்தில் தீட்சிதர்கள் ஏற்றிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அப்புறம் என்ன அது கருவறை? யார் காதில் பூ சுற்றுகிறார்கள்? சிற்றம்பலத்தில் ஏறி நின்று ஆடவல்லானை உளமாற எண்ணி சிவபுராணம் பாடினால் புனிதம் கெடும் என்பது அந்தச் சிவனுக்கே அடுக்காது.

கோயிலைக் கட்டியவனே நான் கட்டினேன் என்று கல்வெட்டில் அங்கு சொந்தம் கொண்டாடக் காணோம். (இத்தனைக்கும் சிவநெறியாளருக்கு அதுவே முதற் கோயில்) நிர்வாகப் பொறுப்பைப் பெற்றுக் கொண்டவர்கள் கோயில் எங்களுடையது (private property) என்பார்களாம். (எப்பொழுது நிர்வாகப் பொறுப்பு ஏற்பட்டது என்ற வரலாற்றையும் அறிய வேண்டுமா? களப்பிரர் காலம் பற்றிய மயிலை சீனி வேங்கடசாமியாரின் நூலைப் படியுங்கள்.) இது என்ன leveraged buy-out ஆ? மண்ணாங் கட்டி.

இவர்களுடைய பொருளாதார, குமுக, உளவியற் சீரழிவுகளைப் பற்றி ஒரு காலத்தில் வருத்தப் பட்டது உண்டு. இவர்களுக்கும் ஒரு விடிவு காலம் ஏற்படாதா என்று எண்ணியதும் உண்டு. ஆனால் இன்னும் நீக்கமற நிறைந்து கிடக்கும் இவர்களின் திமிர்த் தனம் பார்த்தால், சினம் தான் மிஞ்சுகிறது.

சிவன் சொத்து குலநாசம் என்பதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி. தேவார காலத்தில் 3000 என்பது இன்று வெறும் 287 ஆக ஆகியிருக்கிறது. மேலே சொல்ல என்ன இருக்கிறது?

அன்புடன்,
இராம.கி.
 



//.மகா மண்டபத்தில் அதே இறைவனை நோக்கி பாடுவதற்கும் ,மூலவர் சந்நிதானத்தில் சென்று பாடுவதற்கும் என்ன வேறுபாடு ?
//

ஜோ,
விவகாரமான கேள்வியெல்லாம் கேடகப்படாது.
கேள்வி போப் எழுதி கொடுத்தாரா ? :)
 



நான் அறிந்தவரை, சிற்றம்பலம் எனப்படும் இடம், மற்ற கோவில்களில் நாம் கருதும் கர்ப்பக்கிரகம் போன்றது, சிதம்பரத்தில்.
கர்ப்பக்கிரகத்தில் நுழைய அர்ச்சகர் அல்லாத மற்றவருக்கு அனுமதி கிடையாது என்பது போலவே இதையும் கருத இடமுண்டு.

வழக்கம்போல, ஒரு நியாயமான அலசலைத் தந்திருக்கிறீர்கள், முகமூடி!

மிக்க நன்றி.
 



'தோழர்' ஜெயகாந்தனின் 'ஹரஹர சங்கர' படித்தது போன்று இருந்தது :-)

நன்றி - சொ. சங்கரபாண்டி
 



In my understanding, govt. could
not take over the temple.If somebody tries to sing from a place where sofar nobody has been
permitted to sing then preventing
it is not discrimination.i am not
going into the merits/demerits of
that practice.As it is a temple
controlled by dikshithars they
have right to enforce customary
practices.but how customary are
they is a different issue and
courts can decide on that.
The rules of the temple are
codified.I understand that they
were codifed once in 19th century.
They were revised later, in the
20th century.These rules were
produced before the court as
evidence. If the rules are
not followed or any deviation
is done that can be taken up
as an issue. But if the rules
forbid such practice and if it
has been uniformly applied then
their case is strong. I think to reduce this issue to Tamil vs Sanskrit or denial of tamil inside temple is not the right approach.it is more complex than that.One has to look at among other things article 25 of the
constitution, judgments on
the ownership of the temple
and codified rules.
 



இப்போழுதுதான் பிரச்சனை என்னவென்றே புரிகிறது. பதிவுக்கு நன்றி தலைவரே.
 



I am deleting my comment posted earlier as I will be writing a blog post on this issue.
 



The New Indian Express news (நன்றி :: நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் & பாஸ்டன் பாலா)

Group stopped from reciting verses in Tamil at Shiva temple
Sunday July 16 2006 00:00 IST

CUDDALORE: Police foiled an attempt of a group led by an ‘Odhuvar’ to recite devotional hymns in Tamil at the famous Nataraja temple with the arrest of 76 people, including the Odhuvar and seven women, in Chidambaram on Saturday.

Odhuvar and volunteers of Manitha Urimai Padhukappu Maiyam, Vivasaigal Vidutahlai Munnani, Pudhiya Jananaiyaka Thozhilalar Munnani, Makkal Kalai Ilakkiya Kazhagam, Tamil Ilakkiya Pervai, Dravidar Kazhagam, Pattali Makkal Katchi and Dalit Panther’s of India, proceeded to the shrine defying prohibitory orders, which was clamped to scuttle the move apprehending tension in the temple town, on Saturday morning.

In the wake of the recent government order allowing persons from all castes to become ‘archakars’ and recite devotional hymns in their mother tongue at temples, Arumugasamy (73), an Odhuvar at Naalvar Madam in Kumudimoolai near Bhuvanagiri, had sought police security for reciting hymns in Tamil at the ‘Chit Saba’ in the temple a week ago. Arumugasamy, who belonged to a Vanniya community, had proposed to sing verses from Devaram and Thiruvasagam for six days from July 15.

The Deekshidars, who control all affairs of the temple, objected to this and obtained a ban order from a munsif court in Chidambaram two days ago. The court had prevented the Odhuvar from undertaking the move till July 20.

Meanwhile, the Odhuvar lodged a complaint with the Chidambaram police alleging that he had received threatening calls from unidentified persons.

According to legend, renowned Saivite quartet, Appar, Sundarar, Thirunavukkarasar and Manikkavasakar, had worshipped the Lord and composed devotional hymns at the shrine centuries ago. An ardent devotee of Lord Shiva, Nandanar, a Dalit, was prevented from entering the temple by the Deekshidars. Later, he was set to ‘‘mingle with the jyothi’’ of Lord Shiva, a euphemism of burning him to death.

Armugasamy said that the temple was the birth place of great epics Devaram and Thiruvasagam, which were penned in Tamil several centuries ago. But, the Deekshidars had been reciting verses in Sanskrit for several decades.

Earlier, Arumugasamy had sought the permission of Hindu Religious and Endowment Board in May 2004 and recited verses from Devaram. A month later, he was attacked by unidentified persons. Superintendent of Police Sanjay Kumar posted a large contingent of police force around the shrine and other parts of the temple town to prevent any untoward incident on Saturday.

Defying the prohibitory order, Arumugasamy and his supporters assembled at the Melaveethi. Leaders from various parties also joined the protest and proceeded towards the temple.

A team led by ASP Pradip Kumar and tahsildar Parasuraman stopped the group and arrested 76 persons, including Arumugasamy and seven women, at Melaveedhi in the afternoon.
 



// கேட்டால்தான் தமிழ் அல்லது சம்ஸ்கிருதம் மட்டும் என்பது தமிழனுக்கு கேவலமான ஒன்று. அத்தகைய இடங்களுக்கு போகாமல் இருக்கலாம் அல்லது போராடலாம் // வாழ்த்து.

*

செந்தழல் ரவி :)) என்னதான் புரியாததா இருந்தாலும் நம்ம வசதிக்கு புரிஞ்சிகிட்டு கருத்து சொல்றதுதானே நல்ல பதிவருக்கு அழகு?

*

// உடனே கோவிலை HRC&E க்குள் கொண்டுவரவேண்டும் அப்போது தான் பிரச்சனைக்கு முடிவு என்று முடிவு சொல்வார்கள்... //
ப்ரச்னையின் ஆணிவேரே இதுதான்... இந்த கோரிக்கை ரொம்ப நாளாகவே இருந்து வருகிறது... கோயிலை அரசு கையகப்படுத்தி நாத்திகர் ஒருவரை அறங்காவலராக்கி அவர் பராமரிப்பில் கோயிலை பொலிவாக்கி கோயில் சொத்துக்களை நல்ல முறையில் கட்டிக்காத்து "நியதிகள் ரிவ்யூ கமிட்டி" ஒன்றை அறநிலையத்துறை அமைச்சர் தலைமையில் அமைத்து காலத்துக்குதவாத பழம் பஞ்சாங்களை போகி கொண்டாடி தீஷிதர்களின் கொட்டத்தை அடக்கினால் எல்லா ப்ரச்னையும் ஒரு முடிவுக்கு வரும்... அந்தளவு சொரணையை தமிழர்களுக்கு ஊட்டுவதற்குத்தான் பொதுநலவாதிகள் இவ்வளவு கஷ்டப்பட வேண்டியிருக்கிறது... எப்பத்தான் நமக்கு (தமிழர்களுக்கு) கற்பூர புத்தி வாய்க்குமோ?

*

ஜோ, நான் ஏற்கனவே சொன்னது போல இது குத்துமதிப்பான உதாரணமே.. மதமும், முறைகளும், பழக்கங்களும் முற்றிலும் வேறுபட்ட இருவேறு விஷயங்களை வரிக்கு வரி அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது... நியதி குறித்த சாரம் மட்டுமே நான் விளக்க முனைந்தது...
 



முகமூடி சார்,

நீங்கள் சொல்வது போல் கோவிலை இந்து அறனிலைத்துறையின் கீழ் கொண்டுவரலாம்...ஏற்றுக் கொள்கிறேன்...ஆனால் இந்த அறனிலைத்துறையை நம்பிக்கையுள்ளவர்கள் தான் நடத்தவேண்டும்...(இந்து மதத்தவராக இருக்கவேண்டும்..செகுலரிஸ்டு, மார்க்ஸிஸ்ட், மெக்காலேயிஸ்ட், ஆக இருத்தல் கூடவேகூடாது...) அரசால் முடியுமா?

இந்து அறனிலைத்துரை என்று பெயர் வைத்துவிட்டு கிறுத்தவரை தலைவராக்குவது தான் மதச்சார்பின்மையா..?

கிருத்தவ அறனிலைத்துரை, இஸ்லாமிய அறனிலைத்துரை என்று அரசு அமைச்சகம் அமைக்கட்டுமே...அதில் இந்தியாவில் உள்ள அனைத்து சர்ச்சுகளும், மசூதி, மதரஸாக்களும், கொண்டுவது, அதில் இந்துக்கள் தலைவர்களாக நியமிக்கப் படவேண்டும், அதை 2% கிருத்துவர்களும், 15% இஸ்லாமியரும் ஆதரிக்கவேண்டும்...எந்த மதச்சார்பற்ற அரசுக்கு இதைச் செய்ய துணிச்சல் இருக்கிறது...?
 



இராம.கி.. எக்ஸ்பிரஸ் செய்தியை படித்தால் இவர்(கள்) பாட வந்தது சிற்றம்பலத்தில் அல்ல என்பதும் சித்சபை எனப்படும் கருவறைக்குள் என்பதும் தெரிய வருகிறது... அப்போது சிற்றம்பலத்தில் பாடலாமா எனும் கேள்வி வரலாம்... சிற்றம்பலம் எனப்படும் கனகசபையில் முணுமுணுப்பாகவும் மெதுவான குரலிலும் பலர் தமிழ்ப்பதிகங்கள் பாடி நானே கேட்டிருக்கிறேன்... இங்கே ப்ரச்னை சித்சபை எனப்படும் கருவறைக்குள் சத்தமாக திருவாசகம் பாடப்போகிறேன் என்று காவல்துறை, பத்திரிக்கை என்று எல்லாருக்கும் அறிவித்துவிட்டு, நாத்திக அமைப்பான தி.க உட்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்களையும் அழைத்துக்கொண்டு கூட்டமாக கோயிலுக்குள் நுழைவது... சிற்றம்பலத்திலேயே காலம் காலமாக சத்தமாக பாடக்கூடாது, தலைகீழாக தொங்கக்கூடாது, படுத்து உருளக்கூடாது என்பதுதான் நியதி என்றால் அதனால் யாருக்கும் எந்த பாதகமும் இல்லாத பட்சத்தில் அதை கடைபிடிக்கவும் எல்லாரும் கடைபிடிக்க வலியுறுத்தப்படுவதையும் நான் ஆதரிக்கிறேன்... நியதிகள் மாற்றத்துக்குட்பட்டவை எனும்போது நான் மாற்ற விரும்பும் நியதிகள் என்று சட்டசபை சபாநாயகருக்கு அளிக்கப்படும் மரியாதையில் ஆரம்பித்து ஏகப்பட்டது கைவசம் வைத்திருக்கிறேன்... ஆனால் இங்கே ப்ரச்னை வெறும் விளம்பரத்துக்காக நியதியை மீறுவது என்பதை தாண்டி தமிழை அணைத்துகொண்டு அரசியலாகவும் ஆக்கப்படுகிறது... தமிழ் மெக்கார்த்திகள் தங்கள் வசதிக்கேற்ப செய்தியை வளைத்து தமிழ் மறுக்கப்படுகிறது, தமிழனின் உணர்வு முகத்தில் அறையப்படுகிறது என்றெல்லாம் ஜல்லியடிககிறார்கள்...

இது உண்மையில் ஆலய கருவறை நுழையும் போராட்டம்... அதனால் கிளைந்த உபவிருப்பங்களான தயிர்சாதம் vs கறிசோறு ஈகோ, தீஷிதர்களின் கட்டுப்பாட்டில் இருந்து கோவில் நிர்வாகத்தை அரசுக்கு கொண்டுவருவது... எனக்கு புரியாதது என்னவென்றால், அதுதான் சட்டம் போட்டாகிவிட்டதே, தைரியமாக கருவறை நுழையும் போராட்டம் என்றே அறிவித்துவிட்டு ஆண்மையுடன் செல்ல வேண்டியதுதானே... கண்டிப்பாக இந்த பெயரில் நுழைந்தாலும் "எதிர்பார்த்த" விளம்பரம் கிடைக்கும், நினைத்ததை சாதிக்கலாம்... எதற்காக தமிழை பூசிக்கொண்டு செல்ல வேண்டும்... இன்னமும் "அனைத்து சாதி அர்ச்சகர் திட்டம்" என்பது "தமிழுக்கு இழுக்கு திட்டம்" அளவு தமிழனின் நரம்புகளை தூண்டவில்லையா?

மற்றபடி இந்த கோயில் தீஷிதர்களின் ப்ரைவேர்ட் ப்ராபர்ட்டி என்ற வாதத்தை, சீமாச்சு பின்னூட்டத்தை தவிர வேறெங்கும் படித்த கவனம் இல்லையென்பதால் சொல்வதற்கு ஏதுமில்லை... தீஷிதர்களின் குடும்பங்கள் 3000 லிருந்து 287 ஆகியிருப்பது சிவன் சொத்து குல நாசம் என்ற பழமொழியினாலேயே என்பது உங்கள் கருத்தானால் அது குறித்தும்...
 



நல்ல பதிவு தலைவா. இப்பொழுதுதான் என்ன பிரச்சனை என்ன என்பதே புரிகிறது. இனிமேல்தான் நம் கருத்து என்னவென்பதை முடிவு செய்ய வேண்டும்!
 



ஆதிரை, கருத்துக்கு நன்றி என்பது மட்டுமே நான் சொல்ல விரும்புவது.. ஆனால் இது சம்பந்தமாக நடந்த விவாதத்தை படித்தீர்களா என்பது நான் அறிய விரும்புவது...

*

நன்றி SK, இலவச கொத்தனார்...

*

ரவி நீங்கள் பதிவு எழுதுங்கள், அதற்கு இங்கு இருப்பதை அழிப்பானேன்.. உங்கள் இஷ்டம்.. விட்டு வைத்தால் தொடர்ந்து பேசுவோம்...

*

உங்கள் பாராட்டுக்கும் உயர்வான மதிப்புரைக்கும் நன்றி சுடலைமாடன் :))) இதுவரை 'தோழர்' ஜெயகாந்தனை படித்ததில்லை... 'ஹரஹர சங்கர'வில் ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்... 'தோழர்' ஜெயகாந்தனை நன்கு அறிந்த நீங்கள் என்னை போன்றவர்களுக்கு மேலும் ஏதாவது பரிந்துரைகள் செய்ய விரும்பலாமே?
 



எனக்குத் தெரிந்து அம்பலம் என்பது இரண்டாவது லெவல். கருவறை அல்ல.
 



// இந்து அறனிலைத்துரை என்று பெயர் வைத்துவிட்டு கிறுத்தவரை தலைவராக்குவது தான் மதச்சார்பின்மையா..? //

வஜ்ரா, இந்த பின்னூட்டத்தை உங்களுக்கு வழங்குபவர் ஆதிரை

விவகாரமான கேள்வியெல்லாம் கேடகப்படாது.
கேள்வி போப் எழுதி கொடுத்தாரா ? :)

*

// எனக்குத் தெரிந்து அம்பலம் என்பது இரண்டாவது லெவல். கருவறை அல்ல //

ஆதிரை, அம்பலம் என்பது கருவறை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை... எக்ஸ்பிரஸ் நியூஸ் சொல்வது "Arumugasamy (73), an Odhuvar at Naalvar Madam in Kumudimoolai near Bhuvanagiri, had sought police security for reciting hymns in Tamil at the ‘Chit Saba’ in the temple a week ago. Arumugasamy, who belonged to a Vanniya community, had proposed to sing verses from Devaram and Thiruvasagam for six days from July 15"

இங்கு சித்சபை எனப்படுவது அம்பலத்துக்குள் மேலும் ஐந்து படிகள் ஏறிச்சென்றால் வரும் நடராஜர், சிவகாமி இருக்கும் கருவறை.
 



மேலே ஆதிரைக்கான பதிலில் "அம்பலம் என்பது கருவறை என்பதில் கருத்து வேறுபாடு இல்லை" என்பதை "ஆதிரை, அம்பலம் என்பது கருவறை அல்ல என்பதில் கருத்து வேறுபாடு இல்லை" என்று படிக்கவும்.

*

கணேஷ், கிழிஞ்சது லம்பாடி லுங்கி... இப்ப பின்னூட்ட போலீஸ்ல இருந்து பல பேரு கிளம்பி வந்து ph.d பண்ண ஆரம்பிச்சுருவாங்க... போதாக்குறைக்கு உங்க ப்ரொஃபைல் வெரிஃபை பண்ண முடியாம, கணேஷ் நான்தான்னு வேற பஞ்சாயத்து கோஷ்டி பிராது சுமத்த ஆரம்பிக்கும்... (கார்த்திக் வேற, முகமூடி எழுதியத படிச்சதால maskனு அவர் பதிவுல பின்னூட்டம் போட்ட 'மென்டல்' நானா இருக்க முடியாதுங்கிற முடிவுக்கு தான் வந்துட்டேன்னு சொல்லி என் வயித்துல பீர வார்த்தார்... நல்ல வேளை நான் இந்த பதிவ எழுதாம இருந்திருந்தா என் கதி என்ன ஆகியிருக்கும்னு ஒரு நிமிஷம் நினைத்து பார்க்கிறேன்)

// உங்கள் பதிவிலே comment எழுத வந்தாக்கூட உங்க வாசமடிச்சுடுது // இதுதான் சூப்பர் உள்குத்துங்கிறதா?

மற்றபடி அறச்சீற்றம் குறித்த உங்கள் கருத்துக்கு நான் சொல்ல விரும்புவது :))) [இதுக்கு அர்த்தம் தெரியுமில்ல]
 



சிதம்பரம் கோவிலுக்குள் தமிழ் மறுக்கப்படவில்லை என்பதை காட்டியிருக்கிறீர்கள். ஆனால் இந்த பதிவில் தமிழ் சர்ச்சுக்குள் கடந்த 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் பூசை பண்ணுவதை விட பூட்டி வைத்திருக்கலாம் என்றுதான் பூட்டி வைத்திருக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டுக்குள்தான். செங்கல்பட்டில். அறச்சீற்றம் ஒன்றையும் காணோமே?
http://chinthanais.blogspot.com/2006/07/blog-post_19.html
 



//சிவன் சொத்து குலநாசம் என்பதை உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி. தேவார காலத்தில் 3000 என்பது இன்று வெறும் 287 ஆக ஆகியிருக்கிறது. மேலே சொல்ல என்ன இருக்கிறது?

அன்புடன்,
இராம.கி.
//

நாட்டுகோட்டை செட்டியார்கள் கைவசமுள்ள கோயில்களுக்கும் குலநாச கோசம் பொருந்தும்தானே இராமகிருஷ்ணன் சார்!

கோயில் சொத்து குலநாசம். குலத்தை நாசமாக்கும் (கந்து) வட்டித் தொழில் நாட்டுகோட்டை செட்டியார் குலத்துக்கு பால் வார்க்கும். எப்படி இந்த புதுமொழி!

அன்புடன்,
மூனா கானா லேனா சூனா
 



சித் சபா என்பது சிற்று அம்பலம் என்பதன் அரைகுறை வடமொழி மொழிபெயர்ப்பே. பொன் அம்பலம் என்பது கனக சபா என்று மொழிபெயர்க்கப் படும். யாரும் இங்கு சிறிய கருவறைக்குள் நுழைவது பற்றிப் பேசவே இல்லை. நீங்கள் திசையை மாற்ற வேண்டாம்.

நீங்கள் தில்லையில் பத்தாண்டுப் பழக்கம் ஏன்கிறீர்கள், அப்புறம் எப்படி இது போலப் புரிந்து கொள்ளுகிறீர்கள்? கருவறை என்றால் "கர்ப்ப கிருகம்" என்று ஆங்கில செய்தித் தாளில் வடமொழிப் பெயரைப் போட்டிருப்பானே? எந்தக் கோயிலிலும் (தில்லையையும் சேர்த்துத் தான் சொல்லுகிறேன்.) கருவறைக்கு கர்ப்ப கிருகம் என்றே வடமொழியில் சொல்லுவார்கள். சித் சபா என்று சொல்லுவதில்லை. எந்தச் சிவநெறியாளனும் அப்படிப் புரிந்து கொள்ளமாட்டான். சித் சபை/சிற்றம்பலம் என்பது கூடத் தெரியாதவன் சிவநெறியாளனே இல்லை. கேப்பையில் நெய்வடிகிறதென்றால் கேட்பாருக்கு எங்கே புத்தி போயிற்று? இது போன்ற திருகு தாளங்கள் எதற்கு?

தமிழை விளங்கிக் கொள்ளுவதில் குழம்பினால் எப்படி? வெறுமே சொல்லில் சல்லியடித்துக் கொண்டிருப்பதில் பலனில்லை. அப்புறம் உங்கள் பாடு. நான் சொல்லி நீங்கள் மாறப் போவது இல்லை. தவறைத் தவறென்று ஒப்புக் கொள்ள மனத் திடம் வேண்டும்.

சிற்றம்பலத்தில் திருவாசகம் படிக்கக் கூடாது என்று சொல்லும் நண்பர்கள் வல்வழக்கு ஆடுகிறார்கள். அவ்வளவு தான் சொல்ல முடியும்.

காலம் இதற்கு விடை சொல்லும். தேவாரச் சுவடிகளை இந்த முட்டாள் தீட்சிதர்களிடம் இருந்து வெளிக்கொணர ஒரு இராசராசன் வந்து சேர்ந்து தன் தந்திரத்தையும், அரச அதிகாரத்தையும் காண்பித்தது போல், இன்னொரு இராசராசன் வருவான். அவனும் தந்திரம், அரச அதிகாரம் காண்பிப்பான்; இல்லையென்றால் மக்களே .... வேண்டாம் சொல்லைக் கொட்டக் கூடாது. நா காக்க.

அதுவரை அடியார்கள் திருவாசகத்தை ஆடவல்லானின் வேறு அம்பலங்களிலும், அரங்குகளிலும் கேட்டுக் கொண்டு இருக்கட்டும். திருவாசகம் சுண்ணப் பத்தில் ஒரு பாட்டு: இதைப் படித்தால் எத்தனை ஓசை ஒலிக்க (வெறுமே வடமொழி அருச்சனை மட்டும் கேட்டுக் கொண்டிராமல்) அந்த ஆடவல்லான் ஆடுகிறான் என்று தெரியும். இந்தப் பாடலை அந்த ஆடவல்லானுக்கு உரிய சிற்றம்பலத்தில் பாடக் கூடாதாம். எரிச்சல் வருகிறது.

"சூடகம் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்ப
தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்பா ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மாமலை அன்ன கோவுக்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே"

(ஆர்த்தல் = ஆரவாரித்தல், ஓசை எழுப்புதல்; இங்கே ஒரு தாண்டவம் நடக்கிறது; தொண்டர் குழாம் கூடி ஓசை எழுப்புகிறார்கள்; பெண்கள் அந்தத் தாலத்திற்கு ஈடாக பொற்சுண்ணம் இடிக்கிறார்கள்)

உங்களுக்கெல்லாம் எங்கள் சினங்களின் ஆழம் புரியாமல் இருக்கிறது. அவ்வளவு தான்.

எது நடக்க வேண்டுமோ, அது நடக்கும்.

அன்புடன்,
இராம.கி.
 



//சிதம்பரம் கோவிலுக்குள் தமிழ் மறுக்கப்படவில்லை என்பதை காட்டியிருக்கிறீர்கள். ஆனால் இந்த பதிவில் தமிழ் சர்ச்சுக்குள் கடந்த 8 ஆண்டுகளாக மறுக்கப்பட்டிருக்கிறது. தமிழில் பூசை பண்ணுவதை விட பூட்டி வைத்திருக்கலாம் என்றுதான் பூட்டி வைத்திருக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டுக்குள்தான். செங்கல்பட்டில். அறச்சீற்றம் ஒன்றையும் காணோமே?
http://chinthanais.blogspot.com/2006/07/blog-post_19.html//

வாப்பு கிறிஸ்துவ அடிப்படைவாதி ஜோப்பு. செய்யப்பு எம் காதுல பூ ஜோடிப்பு. மனிதர்கள் செய்கிற தவறுக்கு யேசு என்ன செய்வார் என்று சப்பை கட்டப்பு. பின்பாட்டுக்கு சிறில் அலெக்சை கூப்பிடப்பு. கைதட்ட முற்போக்கு இந்து எதிர்ப்பு வெறியர் கூட்டம் ரெடியப்பு.

யேசு வருகிறார் யேசு வருகிறார் மனிதர்களை பாவிகள் என்று சொல்லும் வேதத்தை தூக்கி வருகிறார். அடிமைதனத்தை நியாயபடுத்தும் வசனங்களை தாங்கி வருகிறார். சுந்தர வடிவேலர்களின் கண்களை திறக்க வருகிறார். இராமகிருஷ்ணன் போன்ற மொழிவெறியர்களுக்கு லத்தீன் மட்டுமே புனிதமொழி என்று சொல்ல வருகிறார்.

அன்புடன்
பாவியாக பிறந்த அப்பாவி
 



முத்துகுமரனின் பதிவில் இட்ட பின்னூட்டம், தொடர்புடையது என்பதால் இங்கேயும்

http://eenpaarvaiyil.blogspot.com/2006/07/blog-post.html

//பார்ப்பனியம் மறைந்துவிடவில்லை. இழந்த வலுவை மீட்க முன்னைவீட வீரியமாக இயங்குகிறது. குறிப்பாக அரசு அதிகார இயந்திரத்தில்.

''சிதம்பர ரகசயம் = பார்ப்பனியத்தை அழியாது காப்பதே''
//
மிகச்சரி.....நீதிமன்றங்கள் மனுநீதிமன்றங்களாக இப்போது மாறவில்லை, அது எப்போதும் அப்படித்தான் இருக்கின்றது,

சிதம்பரம் கோவிலில் சிற்றம்பலத்தில் பாடக்கூடாது என்பது விதியாம், அது விதியானால் தாழ்த்தப்பட்டவர்களை தொடக்கூடாது என்பதும் ஒரு சாரரின் விதிதான், பிராமணர்கள் கடல் தாண்டி பயனம் செய்யக்கூடாது என்பதும் விதிதான் சிலருக்கு, பிச்சை எடுத்துதான் சாப்பிடவேண்டும் என்பதும் விதிதான் சிலருக்கு, அவைகள் எல்லாம் உடைக்கப்படவில்லையா? யார் வகுத்தது இந்த விதியை? எதற்காக இந்த விதி, எதை காப்பதற்கு இந்த விதி, சிதம்பரத்தில் ரயில் ரோட்டுகு அந்தாண்ட வாண்டையாரின் ரவுடித்தனமென்றால் இந்தான்ட தீஷிதர்களின் ரவுடித்தனம்.

தீஷிதர் சமூகம் பட்டயங்கள், கல்வெட்டுகளெல்லாம் காண்பித்து நீதி(?!)மன்றத்தில் தங்கள் பாத்யதையை உறுதி செய்து கொள்ளும் அளவிற்கு அறியாமை(?!) ஆட்கொண்டுள்ளது.

சரி பாத்யதை பட்டதையாவது ஒழுங்காக வைத்திருக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை,

நடராசர் யாருக்கு ஜீவனமளிக்கிறாரோ இல்லையோ சில குடும்பங்கள் நோகாமல் நோம்பு கும்பிட சிதம்பரத்தில் வழிசெய்கிறார்.

தற்போதைக்கு பின்னூட்டம் மட்டுமே.... முடிந்தால் விளக்கமான பதிவுடன் வருகிறேன்.
 



முந்தைய என்னோட பின்னூட்டத்தை பார்த்து பதிவுபோட என்னலே உனக்கு என்ன உரிமை இருக்குனு கேக்குறிங்களாப்பு, ஹி ஹி எனக்கும் சேம்பரத்துக்கும்(சிதம்பரம்) இது வரை 29 வருச பந்தமிருக்குங்கோ....
 



முகமூடி,
மேலே பெயர் தெரியாத ஒருவர் என்னை கிறிஸ்தவ அடிப்படை வாதி என்று தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கிறார் .இதை நீங்கள் அனுமதிப்பதற்கு வருந்துகிறேன்.

எனினும் அங்கே குறிப்பிடப்பட்டுள்ள செய்தியில் இருந்து...

ஒரே பங்கில் பெரும்பான்மையாக இருக்கும் ரெட்டியார் இன மக்களுக்கும் தலித் இன மக்களுக்கும் கோவில் வழிபாடு விஷயத்தில் மோதல் .தங்களுக்கு உரிய மரியாதை தரவில்லை என தலித் மக்கள் கருதுகிறார்கள் .ரெட்டியார்கள் தெலுங்கில் நடத்துகின்ற திருப்பலியை தமிழிலும் நடத்த வேண்டும் என தலித் மக்கள் கோருகிறார்கள் .

இதில் தலித் மக்களின் கோரிக்கை நியாயமானது .ரெட்டியார்கள் தங்கள் சாதி மேலாதிக்கத்தை கோவிலில் காட்டுவது கண்டிக்கத் தக்கது .சரி! இவ்விசயத்தில் திருச்சபையின் நிலை என்ன?

Dalit Christians of Thatchur village, led by the Catholic Bishop of Chengalpattu, Neethinathan, presented a memorandum to Collector R. Venkatesan on Monday seeking his intervention in a church dispute between Dalit and Reddiyar Christians in Thatchur.

The memorandum said the Reddiyar Christians refused to give equal respect and rights to the Dalit and Arundhathiyar Christians in holding of Church rituals despite the efforts ofthe Diocese.

They had opened the Church, which remained closed for the past several years in view of legal proceedings initiated by Dalit Christians in Madurantakam courts, on April 27 and started holding mass.

The Diocese, on behalf of the Dalit and Arundhathiyar Christians, urged the District administration to ensure that the Church be kept locked until an amiable solution was reached, the memorandum added.

அநியாயம் செய்பவர்களுக்கு திருச்சபை துணை போயிருந்தால் அதை கண்டிக்கலாம் .ஆனால் இங்கே திருச்சபை பாதிக்கப்பட்டவர் சார்பாக நிற்கிறது ..இதிலே கிறிஸ்தவ அடிப்படைவாதியான நான் என்ன சொல்ல வேண்டும் என்று எதிர்பார்க்கிறார் இந்த பெயரிலி ? திருச்சபை அநியாயத்தின் பக்கம் நின்றிருந்தால் தில்லை விவகாரத்தில் பலர் செய்வது போல சப்பை கட்டு கட்டுவேன் என்று நினைக்கிறாரா ? பாவம் ! ரெட்டியார்கள் செய்வது கிறிஸ்தவத்துக்கு எதிரானது .கண்டனத்துக்குரியது .திருச்சபை இவ்விஷயத்தில் நியாயத்தின் பக்கம் நிற்பது குறித்து மகிழ்ச்சி .அவ்வாறில்லையெனில் திருச்சபையை கண்டிப்பேனே தவிர இவர் போல் சப்பைக்கட்டு கட்டவோ ,இரட்டை வேடம் போடவோ எனக்கு அறிவு கிடையாது.
 



"சூடகம் தோள்வளை ஆர்ப்ப ஆர்ப்ப
தொண்டர் குழாம் எழுந்து ஆர்ப்ப ஆர்ப்ப
நாடவர் நந்தம்மை ஆர்ப்பா ஆர்ப்ப
நாமும் அவர்தம்மை ஆர்ப்ப ஆர்ப்ப
பாடகம் மெல்லடி ஆர்க்கும் மங்கை
பங்கினன் எங்கள் பராபரனுக்கு
ஆடக மாமலை அன்ன கோவுக்கு
ஆடப் பொற்சுண்ணம் இடித்து நாமே"

- Thanks. It is a pleasure to read this aloud.

Thanks Iramaki
- AK
 



இராம.கி,

நீங்கள் சிதம்பரம் கோயிலின் அமைப்பை அறிந்து புரிந்து சொல்கிறீர்களா அல்லது எல்லாக்கோயிலிலும் புழங்கும் வார்த்தைகளுக்கும் இங்கு புழங்கும் வார்த்தைகளுக்கும் உள்ள வித்தியாசத்தை கருத்தில் கொண்டு ஒரு அனுமானத்தில் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை...

தமிழ் வடமொழி வார்த்தை குழப்பத்திற்குள் போகாமல் ப்ரச்னையை மட்டும் பேசுகிறேன்... எந்த ஒரு கோயிலிலும் கர்ப்பக்கிரகம் என்று மூலவர் இருக்கும் இடத்தைத்தான் குறிப்பிடுவர். ஆனால் சிதம்பரம் கோயிலில் மூலவர் இருக்கும் இடம் சித்சபை என்று அழைக்கப்படுகிறது.. சிதம்பரம் கோயிலில் மற்ற கோயிலை போல மூலவர், உற்சவர் என்று இரண்டு விக்ரகங்கள் கிடையாது... தேர் தரிசன திருவிழாவின் பொழுது மூலவரே உற்சவராக மாறி ஊர்வலத்துக்கு கிளம்புவார். மற்ற கோயில் போலன்றி சிதம்பரத்தில் அந்த இரு நாட்களும் சித்சபை காலியாக இருக்கும்.

இந்த தளத்தை சுட்டுங்கள்

....At the entrance to the inner enclosure the golden roof of 'Chittambalam' comes into view. It is in this 'manadapam' that Lord Nadarajah performs his dance (the Anandathandavam) eternally. The Chitsabah and the Kanakasabah are linked together and are called 'Ponnambalam'. This is also called as 'Chittambalam' and 'Gnanasabah'.....

.... It is said that the Ponnambalam rests on 64 wooden rafters to represent the 64 types of different art forms and the 21600 tiles forming the roof indicate the number of breaths taken by a human being in a day. The Ponnambalam is designed to represent the human body. The sanctum is not in the centre but slightly to the left denoting the heart. The entrance to these shrines is not in the front but on the side drawing parallel to the flow of blood into the heart.

The five steps leading unto the Chitsaba is said to represent the five syllables of the 'Panchakshara mantram' (Na,Ma,Si,Va,Ya). The dancing figure of Lord Nadarajah itself is the subject of many long theses by scholars of the past and present giving various interpretations of Hindu philosophy....

சமதளத்தில் இருந்து ஒரு சற்று உயரமாக அமைக்கப்பட்ட மண்டபமே கனகசபை எனப்படும் பொன்கூறை வேய்ந்த இடம். இதற்கும் உள்ளே ஐந்து வெள்ளிப்படிகள் கடந்து சென்றால் இருக்கும் சிறிய அறையில் நடராஜர் சிவகாமசுந்தரி சிலைகள் அமைந்துள்ளன... இதுவே சித்சபை... சித்சபைக்குள் அமைந்துள்ள சிலைக்கு பின்புறமோ பக்கவாட்டிலோ நீங்கள் நினைப்பது போல வேறு எந்த ஒரு தனி அறையும் கர்ப்பக்கிரகம் என்ற பெயரில் கிடையாது... நடராஜர் இருக்கும் இடத்தையே சித்சபை என்று குறிக்கின்றனர். (சித்சபையே சிதம்பரத்தை பொறுத்த வரை கர்ப்பக்கிரகம்)

இங்கு கர்ப்பக்கிரகம் என்பதை விட சித்சபை என்ற வழக்குதான் பிரபலம் என்பதனால் வட இந்திய பத்திரிக்கைகள் சித்சபை என்று குறிப்பிட்டிருக்க வேண்டும்... கருவறைக்கு கர்ப்ப கிருகம் என்றே வடமொழியில் சொல்லுவார்கள் என்ற உங்கள் புரிதலை வைத்து எல்லா இடத்திலும் அப்படித்தான் என்று வாதம் வைக்கிறீர்கள்...

சித்சபா சிற்றம்பலம் என்றே சிவநெறியாளர்கள் புரிந்து கொள்ளட்டும்.. ஆனால் அதுதான் இங்கு கருவறை என்பதையும் அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.. உங்கள் நம்பிக்கைக்கு அப்பாற்பட்ட வட்டார மொழி வழக்கு காரணமாக இது திருகுதாளமாகத்தான் இருக்க வேண்டும் என்பது உங்கள் கருத்தானால் அதற்கு ஏதும் செய்ய இயலாத நிலையில் இருக்கிறேன்.

// இந்தப் பாடலை அந்த ஆடவல்லானுக்கு உரிய சிற்றம்பலத்தில் பாடக் கூடாதாம் // மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... சிற்றம்பலத்தில் திருவாசகம் பாடப்படுவதில்லை என்பது பொய்... பாடுகிறார்கள்.. ஆடவல்லான் சன்னதியான சித்சபையில் திருவாசகம் பாடக்கூடாதாம் என்ற வாதம் பொய், பாடுகிறார்கள்... ப்ரச்னை கூத்தனின் கருவறையான சித்சபையில் யாரால் பாட முடியும், யாரால் முடியாது என்பதில் மட்டுமே...
 



// தமிழில் பூசை பண்ணுவதை விட பூட்டி வைத்திருக்கலாம் என்றுதான் பூட்டி வைத்திருக்கப்படுகிறது. இது தமிழ்நாட்டுக்குள்தான். செங்கல்பட்டில். //

சுட்டிக்கு நன்றி அனானி... ஆதிக்க சாதி இந்துக்களான ரெட்டியார் இன மக்கள் தமிழ் நாட்டுக்குள் தெலுங்கில் ஜெபம் செய்ய வேண்டும் என பிடிவாதம் பிடிக்க, தலித்துக்கள் தமிழில் ஜெபம் நடைபெற வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, எந்த மொழியிலும் மந்திரத்தை கேட்காமல் பூட்டப்பட்ட கதவுகளுக்கு பின் ஆண்டவனை நிற்க வைத்திருக்கிறார்கள்...

சிதம்பரத்திலாவது தமிழ் பாடப்படுகிறது, ஆனால் கருவறைக்குள் மட்டும் மற்றவர்கள் எந்த மொழியிலும் பாட ப்ரச்னை இருக்கிறது.. ஆனால் இங்கோ ஆண்டவன் சன்னிதானத்தில் தமிழிலேயே ஜெபம் செய்யக்கூடாது என்று ப்ரச்னை இருக்கிறது... உண்மையில் இதுதான் மொழிப்பிரச்னை.. இதை நான் கண்டிக்கிறேன்.. அப்படியே சிதம்பர விவகாரத்துக்கு கருத்து சொன்னவர்கள் கருத்துக்களையும் அதே வீர்யத்துடன் எதிர்பார்க்கிறேன்...

இதுபோலவே ஆதிக்க சாதியினரான முக்குலத்தோரால் கட்டுப்படுத்தப்படும் கண்டதேவி ப்ரச்னை குறித்தி அந்த வட்டார ஆட்கள், அந்த சாதியில் பிறந்தவர்கள் - இப்போது சாதியை மறுதலித்திருந்தாலும் - யாராவது தனது அனுபவத்தை வைத்து எழுதிய கட்டுரை எங்காவது இருந்தால் அதை படித்து புரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன்...

*

ஜோ, உங்களை அடிப்படைவாதி என்று எழுதி வந்த பின்னூட்டத்தை வெளியிட்டதற்காக வருந்துகிறேன்.. நீக்கிவிட்டால் அவருக்கு நீங்கள் சொன்ன பதில் சம்பந்தமில்லாமல் இருக்குமே என்ற குழப்பமும் உண்டு... உங்கள் கருத்தை எதிர்பார்க்கிறேன்...

வேறு சில பதிவர்களையும் சாதி குறிப்பிட்டு ஒரு பின்னூட்டம் வந்திருக்கிறது.. யாருக்காவது ஆட்சேபம் இருப்பின் எனக்கு உங்களுடைய ஆட்சேபத்தை தெரிவித்தால் அதையும் நீக்குகிறேன்...

*

வாங்க குழலி.. உங்கள் பின்னூட்டம் உண்மையிலேயே மெய் சிலிர்க்க வைக்கிறது... கூட்டமா போய் பெரிய பெரிய விதிகளை உடைக்கிறதுக்கு முந்தி ஒரு ஆப்படைசர் மாதிரி நம்மால சுலபமா செய்ய முடிஞ்ச ஒரு குட்டி விதிய உடைப்போம்னு சமூகநீதின்னு ஒரு பதிவு போட்டிருந்தேன்.. உங்கள மாதிரி சமூக நலன் விரும்பும் ஆட்கள்தான் இது மாதிரி விசயங்களுக்கு முதல் ஆளா வந்து மாரல் சப்போர்ட் தருவீங்கன்னு காத்திருந்து காத்திருந்து காலங்கள் போயிச்சே... நீங்க மட்டும் இல்ல ஒரு சமூக நீதிகாரரையும் ஆளயே காணோம்... கண்ல பட்டிருக்காது... அவசியம் படிச்சிட்டு உங்க கருத்த சொல்லுங்க... ஹாங்.. அப்பால விதிய உடைக்க புறப்பட்டீங்கன்னா ஒரு வார்த்தை சொல்லுங்க.. நானெல்லாம் கொஞ்சம் அட்வான்சா ஃப்ளைட் டிக்கட் புக் பண்ணனும்...

*

// Thanks. It is a pleasure to read this aloud. // எனக்கும்.. அந்த சுண்ணப்பத்து பதிகத்தை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி
இராம.கி.
 



ஜோ அவர்கள் திருச்சபை தவறு செய்தால் சுட்டிக்காட்டுவாராம். ஜீஸஸ் தவறு செய்தால் சுட்டிக்காட்டுவாரா? பைபிள் தவறாகச் சொல்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறாரா? என்னப்பா கூத்து?

கேள்வியையே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே!
 



//ஒரு ஆப்படைசர் மாதிரி//

:-)
 



எனக்கென்னமோ இந்த "கிரிஸ்துவத்துக்கு எதிரானது" என்ற வரியை பார்த்தால், "unislamic" என்று கண்டனங்கள் வருமே அது ஞாபகம்தான் வருகிறது.
 



//நீக்கிவிட்டால் அவருக்கு நீங்கள் சொன்ன பதில் சம்பந்தமில்லாமல் இருக்குமே என்ற குழப்பமும் உண்டு... //
நீங்கள் சொல்வது சரியே! நீக்க தேவையில்லை என நினைக்கிறேன்.

//சிதம்பரத்திலாவது தமிழ் பாடப்படுகிறது, ஆனால் கருவறைக்குள் மட்டும் மற்றவர்கள் எந்த மொழியிலும் பாட ப்ரச்னை இருக்கிறது.. ஆனால் இங்கோ ஆண்டவன் சன்னிதானத்தில் தமிழிலேயே ஜெபம் செய்யக்கூடாது என்று ப்ரச்னை இருக்கிறது... உண்மையில் இதுதான் மொழிப்பிரச்னை//

முகமூடி,
கத்தோலிக்க ஆலயத்தில் எந்த மொழியிலும் திருப்பலி நிறைவேற்றலாம் .உதாரணத்திற்கு ஒரு இந்தி பேசுகின்ற குடும்பம் இந்தி தெரிந்த பாதிரியாரைக் கொண்டு தங்கள் பிராத்தனைக்காக தமிழகத்தில் உள்ள ஒரு கோவிலில் இந்தியில் திருப்பலி நிறைவேற்ற விரும்பினால் ,அந்த கோவிலின் பொறுப்பாளராக இருக்கின்ற பாதிரியாரின் அனுமதி பெற்று நிறைவேற்றலாம் .ஆக மொழி ஒரு தடையே கிடையாது .வேளாங்கண்ணியில் இந்தி ,மலையாளம் ,ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் அட்டவணைப்படுத்தப்பட்ட நேரங்களில் அந்தந்த மொழியினர் பங்கு பெற்று பயன் பெறும் வகையில் திருப்பலி நடை பெறுகிறது . கேரளத்தில் ஒரு பங்கில் தமிழர்கள் கணிசமாக இருந்தால் அவர்கள் பாதிரியார் கிடைக்கிற வசதியை பொறுத்து தமிழ் திருப்பலிக்கு குறிப்பிட்ட நேரத்தில் அனுமதி பெற்று நடத்திக்கொள்ளலாம் .

தமிழகத்தில் கிராமங்களில் மற்ற மொழிகளுக்கு தேவையில்லாததால் தமிழில் மட்டுமே திருப்பலி நடைபெறுவது வழக்கம் .குமரி மாவட்டத்தில் சில இடங்களில் தேவைக்கேற்ப மலையாளத்திலும் திருப்பலி நடக்கலாம் .

ஒரு பங்கைப் பொறுத்தவரை அங்குள்ள மக்களின் தேவையைப் பொறுத்தே எந்த மொழியில் திருப்பலி எந்த அளவுக்கு நடை பெறும் என்பது அந்த பங்கிலுள்ள மக்கள் குழு தீர்மானிக்கலாம் .செங்கல்பட்டில் இந்த கிராமத்தில் தெலுங்கு பேசும் ரெட்டியார்கள் அதிகமாக இருப்பதால் தெலுங்கிலும் திருப்பலி நிறைவேற்றிக்கொள்ளுவது தவறல்ல .ஆனால் தலித் மக்களின் வசதிக்காக தமிழில் தனியாக திருப்பலி நடப்பதை அவர்கள் தடுப்பார்களெனில் இது மாபெரும் அராஜகம் .இதை திருச்சபை அனுபதிக்க முடியாது .அதுவும் தமிழகத்தில் தமிழில் திருப்பலி நிறைவேற்ற சிலர் தடையாக இருப்பது பெருத்த அவமானம் .இதற்கு திருச்சபை எந்த விதத்திலும் துணையாக இருக்கக் கூடாது .இதுவே என் கருத்து.
 



//ஜோ அவர்கள் திருச்சபை தவறு செய்தால் சுட்டிக்காட்டுவாராம். ஜீஸஸ் தவறு செய்தால் சுட்டிக்காட்டுவாரா?//
ஜீசஸ் செய்த தவறுகளை சொல்லுங்கள் .எனக்கு இதுவரை தெரியாததால் சுட்டிக்காட்டவில்லை.

//பைபிள் தவறாகச் சொல்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறாரா?//
சுட்டிக்காட்டியிருக்கிறார் .தன்னால் ஒப்புக்கொள்ள முடியாமையையும் சொல்லியிருக்கிறார்

//என்னப்பா கூத்து?//
அதை நீங்க தான் சொல்லணும்

//கேள்வியையே புரிஞ்சிக்க மாட்டேங்கறாங்களே!//
முதல்ல கேள்விய கேளுங்க.
 



//அந்த கோவிலின் பொறுப்பாளராக இருக்கின்ற பாதிரியாரின் அனுமதி பெற்று//
:-)
 



//வாப்பு கிறிஸ்துவ அடிப்படைவாதி ஜோப்பு. செய்யப்பு எம் காதுல பூ ஜோடிப்பு. மனிதர்கள் செய்கிற தவறுக்கு யேசு என்ன செய்வார் என்று சப்பை கட்டப்பு. பின்பாட்டுக்கு சிறில் அலெக்சை கூப்பிடப்பு. கைதட்ட முற்போக்கு இந்து எதிர்ப்பு வெறியர் கூட்டம் ரெடியப்பு.

யேசு வருகிறார் யேசு வருகிறார் மனிதர்களை பாவிகள் என்று சொல்லும் வேதத்தை தூக்கி வருகிறார். அடிமைதனத்தை நியாயபடுத்தும் வசனங்களை தாங்கி வருகிறார். சுந்தர வடிவேலர்களின் கண்களை திறக்க வருகிறார். இராமகிருஷ்ணன் போன்ற மொழிவெறியர்களுக்கு லத்தீன் மட்டுமே புனிதமொழி என்று சொல்ல வருகிறார்.

அன்புடன்
பாவியாக பிறந்த அப்பாவி
//
என்னங்க முகமூடி, செதம்பர எழவு ஊட்டுல "பாவியாக பிறந்த அப்பாவி" செங்கல்ப்பட்டுல பூனை செத்ததுக்கு ஒப்பாரி வைக்கிறாரு, என்னது என்னனு கேக்குறிங்களா, நுனிப்புல் பக்கம் நீங்க சொன்னது தானே....

சரி இதெல்லாம் பேசுனா இன்னும் நிறைய போய்கிட்டே இருக்கும் இப்போதைக்கு கெளம்புறேன்....
 



////அந்த கோவிலின் பொறுப்பாளராக இருக்கின்ற பாதிரியாரின் அனுமதி பெற்று//
:-)//

இதுல சிரிக்கிறதுக்கு என்னங்க இருக்கு .ஒரு கோவிலுக்கு பொறுப்பாளராக ஒரு பாதிரியாரை திருச்சபை நியமிக்கும் போது ,அவரைத் தவிர வேறு எந்த பாதிரியாரும் எந்த மொழியிலும் திருப்பலி நிறைவேற்ற வேண்டினால் அங்கு பொறுப்பாளராக இருக்கின்ற பாதிரியாரின் அனுமதியைப் பெற வேண்டும் .
 



முன்பு உங்கள் பதிவிலேயே ஒருவர் பழைய ஏற்பாடு விதிகள் அனைத்தையும் நிறைவேற்றச்சொல்லி இயேசு சொன்னதை காட்டியிருந்தார். மீண்டும் அவரை காப்பாற்றும் முயற்சியில் நீங்கள்.
//பைபிள் தவறாகச் சொல்கிறது என்று சுட்டிக்காட்டியிருக்கிறாரா?//

அந்த கேள்வி ஜீஸசுக்கு அல்ல உங்களுக்கு
http://www.evilbible.com/end_times.htm
http://www.evilbible.com/Jesus_Lied.htm"
http://www.evilbible.com/jesus_false.htm
veritable treasure trove of Apolegetics, Mr Joe. Go on
 



விளக்கத்துக்கு நன்றி ஜோ...

*

எங்கிட்ட அட்டெண்டன்ஸ் கொடுக்க வேண்டாம் குழலி... ஏகப்பட்ட இடத்துல கொடுக்கறீங்களே அங்க எங்கயாவது உள்ளேன் ஐயா தவிரவும் வேற விசயத்த சொல்லியிருந்தீங்கன்னா நான் ஏன் இப்படி கேட்க போறேன்.. காணாமத்தான் கேக்குறது? அதுக்கு என்னடான்னா, வழக்கம் போல சிலம்பத்த கையில எடுத்து சுத்த ஆரம்பிச்சிட்டீங்க? விஷயம் என்னன்னா, நீங்க உங்க சுட்டி மூலமா சுட்டிக்காட்ட விரும்புவது என்னன்னே எனக்கு புரியல... என் கேள்வி வேற... அதாவது ஏற்கனவே (ஒப்பீட்டு அளவில்) வசதியான சூழலை அடைந்த நீங்கள் (ஒப்பீட்டு அளவில்) இன்னமும் முன்னேறாமல் இருக்கும் சமூக கடைநிலை வாரிசுகள் பயன்பெற ஏதுவாக உங்கள் வாரிசுகளுக்கு சாதி சான்றிதழை வாங்காமல் இருப்பீர்களா இல்லையா? இட ஒதுக்கீடு சம்பந்தமா எழுதும் போது எழுதுவீங்களே 'நச்'னுன்னு, அந்த மாதிரி சிம்பிள் தமிழ்ல ஒரு வரி, ஒரே வரி... இங்கயோ, எங்கியாவதோ சொல்லிட்டு போங்க...

*

// அந்த கோவிலின் பொறுப்பாளராக இருக்கின்ற பாதிரியாரின் அனுமதி பெற்று }} :-) //

:-)) எனக்கு என்னன்னவோ புரியுது...
 



//நீங்க உங்க சுட்டி மூலமா சுட்டிக்காட்ட விரும்புவது என்னன்னே எனக்கு புரியல... //
சுட்டியை படிச்சுதான் பாருங்களேன் அதிலே என்ன சொல்லியிருக்குனு...

உங்ககிட்ட அட்டென்டன்ஸ் கொடுக்காததாலேயே உலகில் உள்ள அனைவரும்...என்ன மிச்சத்தையும் நானே முடிச்சிடவா? உங்களுக்கு புரிஞ்சிருக்கும் :-)
 



// செதம்பர எழவு ஊட்டுல "பாவியாக பிறந்த அப்பாவி" செங்கல்ப்பட்டுல பூனை செத்ததுக்கு ஒப்பாரி வைக்கிறாரு, என்னது என்னனு கேக்குறிங்களா, நுனிப்புல் பக்கம் நீங்க சொன்னது தானே.... //

குழலி நான் அப்ப சொன்னது உங்களுக்கு ஏதாவது புரிஞ்சிதா, இல்ல புரிய வேணாம்னு அப்படியே விட்டுட்டீங்களா, இல்ல வேணும்கிறத மட்டும் புரிஞ்சிகிட்டீங்களா?

எனிவே, அப்ப விடாம கேட்ட லக்கிலுக்குக்கும், எதிர்காலத்துல சந்தர்ப்பம் கிடைத்தால் மடக்க ஆசைப்படும் உங்களை போன்ற மக்களுக்குமாக சேர்த்து என் உரைக்கு தனி உரை எழுதிப்போட்டேன்.. சந்தர்ப்ப சூழ்நிலை, அது வெளிவரல... படிச்சி பாருங்க... அதுல நான் இப்படித்தான் சொல்லியிருந்தேன் ஒரு ப்ரச்னை பற்றி பேசினால் அதனோடு தொடர்புடைய இதர ப்ரச்னைகளை பற்றி பேசலாம் தப்பில்லை... சில சமயங்களில் சம்பந்தமில்லாத, ஆனால் தனது கொளுகைகளால் சம்பந்தமிருப்பதாக நினைத்துக்கொண்டு பேசுவது ஓரளவு ஓக்கேதான்.. ஆனால் அது படிப்பவருக்கும் சுகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை... அதுவும் அந்த கொளுகைகள் கண்மூடித்தனமானதான கொளுகையாக இருக்குபோது யாராவது பதில் சொல்லத்தான் செய்வார்கள்... (இது எழுதப்பட்டது ஜூலை 13... மாற்றம் ஏதுமில்லாமல் சேமிக்கப்பட்டது..)
 



//// அந்த கோவிலின் பொறுப்பாளராக இருக்கின்ற பாதிரியாரின் அனுமதி பெற்று }} :-) //

:-)) எனக்கு என்னன்னவோ புரியுது...//

உங்களுக்கு என்ன புரிகிறது என்பது எனக்கு புரிகிறது.

பொறுப்பாளராக இருக்கின்ற பாதிரியாரின் அனுமதியைப் பெறுவது ,வேற்று மொழியில் திருப்பலி வைப்பதற்கு அல்ல .தான் பொறுப்பாக இருக்கின்ற கோவிலில் இன்னொரு பாதிரியாரை திருப்பலி நிறைவேற்ற அனுமதிப்பதற்குத் தான்.

அப்படியே ஒரு பாதிரியார் தன் இஷ்டப்படி வேண்டுமென்றே அனுமதி மறுக்கிறார் என்றால் என்ன செய்வது என்று கேட்கிறீர்கள் .அப்படியானால் அனுமதி மறுக்கப்பட்ட பாதிரியார் இது குறித்து அந்த மறைமாவட்ட ஆயரிடம் (Bishop) புகார் செய்யலாம் .ஆயர் அது குறித்து விளக்கம் கேட்க நேரிடும் .சரி! ஆயர் முறைகேடு செய்தால் என்ன செய்வது ..போப்பிடம் தான் முறையிட முடியும் .போப் முறை கேடு செய்தால் இறைவனிடம் தான் முறையிட முடியும் .அதற்கு மேல் என்ன செய்வது .ஆக நாம் முறைகேட்டை கண்டிக்கிறோமா இல்லையா என்பது தான் பிரச்சனை .ஆனால் பொறுப்பாளர் ஒருவர் இருக்கிறார் என்பதற்காக அவர் தான் தோன்றித்தனமாக என்ன வேண்டும் செய்யலாம் ,அதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று என்னால் சப்பைக் கட்டு கட்ட முடியாது.
 



//ஒரு ப்ரச்னை பற்றி பேசினால் அதனோடு தொடர்புடைய இதர ப்ரச்னைகளை பற்றி பேசலாம் தப்பில்லை... சில சமயங்களில் சம்பந்தமில்லாத, ஆனால் தனது கொளுகைகளால் சம்பந்தமிருப்பதாக நினைத்துக்கொண்டு பேசுவது ஓரளவு ஓக்கேதான்.. ஆனால் அது படிப்பவருக்கும் சுகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை...
//
இப்படி வெவரமா எழுதியிருந்தது வரலையா? சரி அதுனால என்ன இப்போ புரிஞ்சிக்கிட்டேன் உங்க கொள்கையை...

இப்போ உங்க கொள்கையை படிச்ச ஒடனே எனக்கு என்ன கேட்கனும்னு தோணுச்சினா... அய்யய்யோ சாமி வேணாம் பொறவு எதிர்காலத்துல சந்தர்ப்பம் கிடைத்தால் மடக்க ஆசைப்படும் உங்களை போன்ற என ஆரம்பிச்சிட்டிங்கனா?
 



This comment has been removed by a blog administrator.
 



(இந்த வலைப்பதிவாளரின் முகத்தைப் பார்த்தால் பார்ப்பான் போலத் தெரியவில்லை, வெறும் பார்ப்பன மூளைச்சலவை தான் தெரிகிறது.
ஆரூரன்
www.unarvukal.com)




திருவாசகமா, சிவபுராணமா அல்லது தமிழ்ப்பதிகமா பாடப்பட்டதல்ல என்பதல்ல இங்கு முக்கியம். தமிழர்களின் சமயம் சைவம், சைவர்களால் கோயில் என்றழைக்கப்படுவது சிதம்பரம். அதாவது சைவர்களின் உயிர் போன்றது சிதம்பரத் தலம், கோயிலைக் கட்டியது தமிழ் மன்னர்கள், இரத்ததையும், வேர்வையையும் சிந்திக் கோயிலைக் கட்டியது தமிழர்கள், கோயிலுக்கு மானியங்களை, நிலங்களைக் கொடுத்தது தமிழர்கள், கோயிலிருப்பது தமிழ்நாட்டில், கோயிலிலுக்குள் தமிழில் பாடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது, அது சரியா, தமிழ்நாட்டில் தமிழுக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது அது முறையா என்பது தான் கேள்வி.

ஆகமமுறைப்படி நடந்தால் என்ன, பதஞ்சலி முறைப்படி நடந்தாலென்ன, இந்த தீட்சிதர்கள் தமிழர்களல்ல, வந்தேறு குடிகள், இந்த தீட்சிதர்களிடம் கோயிலைப் பராமரிக்கப் பட்டயம் எழுதிக் கொடுத்த, ஆதித்த சோழனோ, பராந்தக சோழ்னோ அல்லது ராஜ ராஜ சோழனோ, இவர்கள் இப்படித் தமிழுக்குத் தடை விதிப்பார்கள் என்று நினைத்திருந்தால், ஆலயத்தைப் பராமரிக்கும் பொறுப்பை இவர்களிடம் கொடுத்திருப்பார்களா? இது நம்பிக்கைத் துரோகம் அல்லவா? பரம்பரை, பரம்பரையாகக் கோயில் சொத்துக்களை, தமிழ்நாட்டு மண்ணில் இருந்து தின்று கொண்டே, தமிழுக்குத் துரோகம் செய்யும் பாதகர்களை சிதம்பரத்து ஆடலரசன் கூட மன்னிக்க மாட்டார். மாணிக்கவாசகரின் திருவாசகத்தைக் கேட்க ஆசைப்பட்டு, திருவாசகத்துக்கு அடியெடுத்துக் கொடுத்துச் சிவபெருமானே எழுதியதாக ஐதீகம். திருஞானசம்பந்தருக்குக் கூட தேவாரம் பாட அடியெடுத்துக் கொடுத்தது சிவபெருமானல்லவா, என்னை நன்றாக இறைவன் படைத்தது தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே, என்றல்லவா எங்களுடைய முன்னோர்கள் பாடினார்கள். அப்படியானால் சிவபெருமானுக்கு உகந்த தமிழைச், சிவனைத் தமிழ் கேட்காமல் செய்யும் இந்தக் கயவர்களைத் தட்டிக் கேட்கத் தமிழ்நாட்டில் யாருமில்லையா?

சரித்திரங்கள் பல காலக்கட்டாயத்துக்காக மாற்றப்பட்டு விட்டன, பல சமஸ்தானங்கள், ஜமீந்தார்கள் எல்லோரிடமும் அவர்களது சமஸ்தானங்கள் பறிக்கப்பட்டு விட்டன. இந்தியாவின் ஜமீந்தார்கள் அனைவரும், தமது உரிமையை நிலைநாட்டும் பட்டயங்களையும், ஆவணங்களையும் வைத்திருந்தும், அவர்களுடைய சமஸ்தானங்களை அரசுடைமையாக்குவதில் தடையேதும் இருக்கவில்லை. ஆனால் சிதம்பரத்துத் தமிழெதிர்ப்புப் பார்ப்பான்களை மட்டும் தட்டிக் கேட்கத் தமிழ்நாட்டில் ஆளில்லை, ஏனென்றால், தமிழ் நாட்டுத் தமிழர்கள் கையாலாகாதவர்கள், இன்றும் தமிழ்நாட்டின் அதிகாரம் பார்ப்பான்களின் கையில். மத்திய அரசும் பார்ப்பான்களின் கையில், தமிழ்நாட்டு அரசால், மத்திய அரசின் அங்கீகாரமில்லாமல் எந்த நடவடிக்கையையும் தங்களின் மாநிலத்திலேயே எடுக்க முடியாது. பார்ப்பான்கள் விடமாட்டார்கள்,. தமிழ் நாட்டில், தமிழர்களின் தயவில் வாழ்ந்து கொண்டே, தமிழ் நாட்டுக் கோயில்களை ஆக்கிரமித்துக் கொண்டே, தமிழை எதிர்க்கும் கொழுப்பு பார்ப்பான்களுக்கு மட்டும் தான் உண்டு.

சோழர்கள் மட்டுமல்ல, சேர, பாண்டியர்களும், யாழ்ப்பாணத்து அரசர்களும் சைவர்கள் தான். இந்தப் பார்ப்பான்கள் தான் தமிழ்த் தேவாரத்தை அழிந்து போகச் செய்ய வேண்டுமென்பதற்காக, ஒரு அறையில் போட்டு மூடிக் கறையானைப் புற்றெடுக்க விட்டு, நாயன்மார்கள் அனைவரும் ஒரே நேரத்தில், உயிரோடு வந்தால் தான், கதவைத் திறப்போம் என அடம் பிடித்தது மட்டுமல்ல அது தான் ஐதீகம் என்று கதை விட்டார்கள், அவர்களுக்குத் தெரியும் நாயன்மார்கள் எவரும் உயிரொடு திரும்பி வரப் போவதில்லையென்பது.

தில்லையின் ஆடலசரனில் பக்தியும், பாரம்பரியத்தையும் பேணும் அருண்மொழிச் சோழன் , இவர்களின் வாதத்தை, தன்னுடைய புத்தியாலே வெல்ல நினைத்துத், தேவாரங்களுள்ள அறையைத் திறவுங்கள் நாயன்மார்கள் எல்லோரும் உயிரோடு வருவார்கள் என்று செய்தியனுப்பினான். சொல்லிய படி நாயன்மார்களின் பொற்சிலைகளைக் கோயிலுக்கு ஊர்வலமாக வரச் செய்தும், பார்ப்பான்கள் கதவைத் திறக்கத் தயங்கியதும், இந்த நாயன்மார்கள் எல்லாம் வெறும் சிலைகள் என்றால், கருவறையிலுள்ள சிவனும் சிலையா என்று கேட்டாராம், அதற்கும் தயங்கிய, தமிழ்த் தேவாரங்கள் பாதுகாக்கப்படுவதை விரும்பாத பார்ப்பான்களிடம், இது அரசகட்டளை கதவைத் திறவுங்கள் என ஆணையிட்டுக் கதவைத் திறக்கச் செய்து தேவாரங்களைக் காத்து, ஈழ மண்டலத்திலும், பரந்த சோழ மண்டலத்திலும் ஒவ்வொரு கோயிலிலும் தேவாரங்களைச் செப்புத் தகட்டில் பதித்து, தேவாரம் பாடும் வழக்கத்தை ஏற்படுத்தினார் தமிழ்ப்பேரரசன் ராஜ ராஜ சோழன், அந்த வழக்கம் இன்றும் ஈழத்தில் உண்டு, தேவாரம் பாடாமல் எந்தக் காரியமும் நடை பெறுவதில்லை.

இன்று சரித்திரம் திருப்புகிறது, திருவாரூரில் பிறந்த கருணாநிதிச் (சோழனின்) ஆட்சியிலும் சிதம்பரத்தில் தமிழுக்குச் சோதனை வந்துள்ளது கருணாநிதிச் சோழன் சிதம்பரத்தில் தமிழைக் காப்பாரா காலம் தான் பதில் சொல்லும்.

இன்றும் தமிழர்களில் பலர் சொத்துக்கள் முழுவதையும் சிதம்பரத்துக்கு எழுதி வைத்து விட்டுச் சிவலோகம் போய்க் கொண்டிருக்கும் போது, தில்லைப் பார்ப்பான்கள் எதற்காக வெளியில் போய் உழைக்க வேண்டும், எல்லாக் கோயில்களையும் விட சிதம்பரத்துக்குத் தானே நிலங்களையும், பொன்னையும் பொருளையும், தமிழரசர்களும் எங்களின் முன்னோர்கள் எழுதி வைத்தார்கள். அதை தில்லைப் பார்ப்பான்கள் தின்று ஏப்பமிட்டதால், தமிழர்களால் "கோயில்" என்றழைக்கப் படும் சிதம்பரம் சிதிலமடைந்தது. இன்றும் இலாபமில்லாமலா யாருக்கும் கணக்குக் காட்டாமல், யாரையும் அணுக விடாமல் தடுக்கிறார்கள்.

சிதம்பரத்துக்கு இவ்வளவு சொத்துக்களிருந்துM,. கோயில் பஞ்சப்பட்டுப் போனதற்குக் கணக்குக் காட்ட வேண்டாமா? "சோழியன் குடுமி சும்மா ஆடுவதில்லை", வருமானமில்லாத கோயிலைக் கட்டியழப் பார்ப்பான்கள் ஒன்றும் பத்தாம் பசலிகளல்ல.

எங்களின் முன்னோர்கள் கட்டிய கோயிலில், சிவபெருமான் விரும்பிக் கேட்கும் தமிழ்த் தேவாரத் திருவாசகங்களைப் பாட மறுத்து, தமிழ்ச்சைவர்களின் புனிதமான் கோயிலில், யார் காசு கூடத் தந்தால் கூடுதலாக, அதிக நேரத்துக்குத் திறந்து காட்டுவேன், அதை விடக் காசை முதலிலேயே கட்டி விட்டுப் போ, நான் போட்டோ எடுத்து மாதந்தவறாக அனுப்புகிறேன் என்று சொல்லும் பார்ப்பன விபச்சாரிகள் செய்யும் வியாபாரத்துக்கும், விபச்சாரத்துக்கும் நாங்கள் வாயை மூடிக்கொண்டு, துணை போக வேண்டுமென்கிறார், இதை எழுதிய இன்னொரு பார்ப்பான், "வேலிக்கு ஓணான் சாட்சி"

சிதம்பரம் நடராஜரைப் போட்டோ எடுக்க விடமாட்டார்கள் என்பதெல்லாம் வெறும் பம்மாத்து, அவர்களிடம் $ டொலரை நீட்டினால், தாமாகவே எடுத்துத் தந்து விட்டுப் போவார்கள், இந்த அனுபவம் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் எங்களுக்கு நடந்தது, முதல் முறையாக நான் என்னுடைய பெற்றோருடன் மதுரைக்குப் போன போது கூட்டம் நன்றாக இருந்தது, அங்குள்ள பார்ப்பான்கள் எல்லாம் பஸ் நிலையங்களிலுள்ள பிக்பொக்கற்காரர்கள் மாதிரி ஒரு குழுவாகத் தான் இயங்குகிறார்கள். யாருடன் கொள்ளையடிப்பது என்பதையும் நான் இந்தக் கிராக்கியைப் பார்த்துக் கொள்கிறேன், நீ மற்றவரை எடு என்று அவர்கள் தங்களின் கண்களாலேயே எங்களைப் பங்கு போட்டுக் கொள்கிறார்கள், எப்படியோ எங்களைக் கண்டதும் மதுரைப் பார்ப்பான்கள், நாங்கள் வெளிநாடு என்று கணித்துக் கொண்டார்கள், எங்களைக் கூட்டிக் கொண்டு போய், மீனாட்சியம்மனுக்கு நேர் முன்னால் விட்டு விட்டர்கள், எங்களுக்கும் மீனாட்சியம்மனுக்கும் சில அடிகள் தான் வித்தியாசம், உண்மையிலேயே ஒரு சாந்நித்தியத்தை எங்களால் உணர முடிந்தது, ஆனால் எங்களை ஒரு நிமிடம் கூட நிம்மதியாக அம்மனைக் கும்பிட அந்தப் பார்ப்பான் விடவில்லை, "டாலர் இருக்கா? டாலர் இருக்கா? டாலர் டாலர்" என்று பிடுங்கத் தொடங்கி விட்டார். இவ்வளவு கிட்டக் கொண்டு வந்து அம்மனைத் தரிசனம் செய்ய விட்டதற்கு, "டாலர்" கொடுப்பதற்கு நாங்கள் தயங்கவில்லை, அது மட்டுமல்ல், கோயிலுக்குள் படம் பிடிக்க விரும்பினால், டாலரைத் தன்னிடம் தருமாறு கேட்டார். என்னால் சகிக்க முடியாதிருந்தது என்னவென்றால் பார்ப்பான்களின் பணம் பிடுங்கித் தன்மையும், எங்களின் மதத்தை வைத்து எங்களை ஏமாற்றி அவர்கள் பணம் பண்ணுவதும் தான். அவர்களிலும் சில உண்மையான கடவுள் நம்பிக்கையுள்ள பிராமணர்கள் உண்டென்பதையும் நான் மறுக்கவில்லை.

குழந்தைகள் பாலியல் வதைக்குட்படுவதையும், இப்படியான மூடிய சமூகத்தில் பெண்களுக்கு பாலியல் வக்கிரம் கொண்ட கிழவர்கள், இளஞ் சிறுமிகளை மணக்கும். கொடுமைகளை நாம் அமெரிக்காவில் சில கிறிஸ்தவ சமூகங்களில் காணலாம், அமெரிக்க அரசாங்கம் அவர்களில் பலரைக் கைது செய்து சிறைத் தண்டனையும் வ்ழங்கப் பட்டுள்ளது, சுதந்திர இந்தியாவில், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் நடைபெறும் கொடுமைகளைச் சமூக சேவை நிறுவனங்களும், பத்திரிகைகளும் அம்பலத்துக்குக் கொண்டு வரவேண்டும்.

தமிழ்நாடு அரசும், சமூக சேவை நிறுவனங்களும், பொலீசும் இப்படியான, மூடிய சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதை ஆராய வேண்டும்.

தமிழர்களின் கோயிலில் தமிழ் வெளியே தூக்கி எறியப்பட்டு விட்டது, தமிழில் தமிழர்கள் பாடத் தடை என்றால், மற்றக் கோயில்களுடன் ஒப்பிட்டுக் கதை விடுகிறார் இந்தப் பார்ப்பான், உண்மையில் பிராமணர் பாடித்தான் திருவாசகத்தைக் கேட்கச் தில்லையின் ஆடலரசன் விரும்பியிருந்தால் சூத்திரன் மாணிக்கவாசகரைத் திருவாசகம் பாடச் சொல்லிக் கேட்டிருக்கவும் மாட்டார், அவரை ஆட்கொண்டு திருவாசகம் பாட வைத்திருக்க மாட்டார்.

சிதம்பரத்துச் சொத்துக்களின் அளவுக்கு, சிதம்பரம் கோயில் சிதிலமடையக் கூடாது, இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும், பார்ப்பான்கள் சொத்துக்களை ஏப்பமிட்டாதால் தான், அரசுடமையாக்குவதை எதிர்க்கிறார்கள். "சிவன் சொத்துக் குலநாசம்"

ஈழத்துப் பாடசாலைகளிலும் வகுப்புக்கள் தொடங்க முன்பு தேவாரம், திருவாசகம், சிவபுராணம் பாடிய பின்பு தான் வகுப்புகள் தொடங்கும். தேவாரம் பாடுமுன்பு " திருச்சிற்றம்பலம்" என்று சொல்லித் தான் தொடங்க வேண்டும் அதன் பின்பு ஒருவர் தென்னாடுடைய சிவனே போற்றி என்று சொல்ல, எல்லோரும் என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று சொல்வார்கள். அதன் பின்பு அரோகரா மகாதேவா என்று முடிப்பார்கள், அங்கும் சிதம்பரத்தை முன்னிறுத்தித் தான் எதையும் தொடங்குவதும் வழக்கம்.

தமிழர்களின் கோயிலில் தமிழ் வெளியே தூக்கி எறியப்பட்டு விட்டது, தமிழில் தமிழர்கள் பாடத் தடை போடப்படுகிறது என்றால், மற்றக் கோயில்களுடன் ஒப்பிட்டுக் கதை விடுகிறார் இந்தப் வலைப்பதிவை எழுதிய பார்ப்பான், உண்மையில் பிராமணர் பாடித்தான் திருவாசகத்தைக் கேட்கச் தில்லையின் ஆடலரசன் விரும்பியிருந்தால் சூத்திரன் மாணிக்கவாசகரைத் திருவாசகம் பாடச் சொல்லிக் கேட்டிருக்கவும் மாட்டார், அவரை ஆட்கொண்டு திருவாசகம் பாட வைத்திருக்கவும் மாட்டார்

விடயத்தைத் திசை திருப்புவதற்காக, இந்த வலைப்பதிவுக்காரர் ஆறுமுகசாமியின் பின்புலத்தைத் தேடுகிறார். ஆறுமுகசாமியின் பின்புலம் இங்கு அவசியமில்லாத ஒன்று, தமிழ்நாட்டில், தமிழர்களின் சிதம்பரம் கோயிலில், சஉலகத் தமிழ்ச்சைவர்களெல்லாம் கோயில் என்று மனதால் நினைத்துக் கையெடுத்துக் கும்பிடும் சிதம்பரத்தில் பார்ப்பான்கள் தடை போட்டு விட்டார்கள், தமிழ் கேட்க விரும்பித் தமிழால் சூத்திரன் மாணிக்கவாசகனுக்கு, சிவபெருமானே அடியெடுத்துக் கொடுத்த தில்லையில் அந்த ஆடலரசனுக்கு முன்னால் தமிழில் பாடப் பார்ப்பான்கள் தடை போட்டு விட்டார்கள், இதை தமிழர்கள் எப்படி எதிர் கொள்ளப் போகிறார்களென்பது தான் கேள்வி, இதற்கு என்ன பதிலென்பது அந்த ஆடலரசனுக்குத் தான் தெரியும்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரும், தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவரும், சிவபெருமானில் அளவு கடந்த பக்தியுமுள்ள நந்தனார், சிதம்பரத்துக்குத் நடராஜனைத் தரிசிக்கப் போனவர், வீடு திரும்பவில்லை, நடராஜனிடமே போய்ச் சேர்ந்து விட்டார். அவர் சிவபெருமானுடன் சோதியில் கலந்து விட்டதாகக் கதை விட்டார்கள், தில்லைப் பார்ப்பான்கள், அது உண்மையா?

அவர் சிவபெருமானுடன் சோதியில் கலக்கவில்லை, சிதம்பரம் கோயிலை அவர் அசுத்தப்படுத்தும் அளவுக்குத் துணிந்து விட்டார் என ஆத்திரம் அடைந்த தில்லைப் பிராமணர்கள் அவரை உயிருடன் கொழுத்தி விட்டுச் சோதியில் கலந்து விட்டதாகப் பொய் சொன்னது மட்டுமல்ல, எந்த ஒன்பதாவது கதவினால் நந்தனார் நடராஜரைத் தரிசித்தாரோ அந்தக் கதவு, இன்னும் 21ம் நூற்றாண்டில் திராவிடக் கழகங்களின் ஆட்சியில், தீண்டத் தகாத நந்தனார் நுழைந்து அசுத்தப்படுத்தி விட்டார் என்ற காரணத்துக்காக, இத்தனை நூற்றாண்டுகளாக இழுத்து மூடப்பட்டுள்ளது. இந்தியாவிலுள்ள இத்தனை மில்லியன் தலித்துகளுக்கும் இது பற்றித் தெரியாதா? திருமாவளவனுக்கு கடவுள் நம்பிக்கையில்லாது விட்டாலும், மானப்பிரச்சனையாக எடுத்து, இதை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டாமா
 



அடேடே, வாங்க மானி,
மூனா கானா லேனா சூனா, (முகமூடியையே நையாண்டி பண்ணி முகலேசு ன்னு ஒரு பேரா? புரியலெ.)

எக்குத் தப்பா ஆட்டம் ஆடினா எப்படி? ஆட்டம்னா விதின்னு ஒண்ணு இருக்கு; "பந்தை ஆடுங்க, கூட்டாளி, பந்தாளியை ஆடாதீக!" படிச்சவுகளே, இப்படி ஆடினா, அப்புறம் என்ன சொல்றது? பார்த்துச் செய்ங்க.....இப்படி ஆடுற ஆட்டத்துக்குப் பொதுவாச் சிவப்பு அட்டை கொடுத்திருவாக! [ஆனா நம்ம முகமூடியார், போனாப் போகட்டுமேன்னு விட்டு வச்சிருக்காக போல. ரொம்ப நல்ல referee.].

சிவன் சொத்து குலநாசம் கிறது எல்லாருக்கும் தான், இதுலே நீங்க என்ன, நான் என்ன, சாதி வேறுபாடு பார்த்துக்கிட்டு. [உலகம் பூரா அரசன் லேர்ந்து ஆண்டி வரைக்கும் ஒண்ணு தான். கோயில் சொத்தைச் சீரழிச்சா, அனுபவிக்க வேண்டியது தான். கல்வெட்டுப் படிச்சிருக்கீகளோ! பெரும்பாலான கல்வெட்டுக்கள் இப்படி ஒரு சாபத்தோடு தான் முடியும்! "சிவன் சொத்தைச் சீரழிக்காதீகப்பா"ன்னு சொல்லும்.]

பந்தாளியை ஆடுற மாதிரி எழுதிட்டீக, பாருங்க! அதுக்குள்ளே, உங்க உள்ளார்ந்த சிந்தனை முயல் கணக்கா குப்புக்கடீர்னு வெளிலே வந்திருச்சு. இனிமே உங்களோட பேசி ஆகப் போறதில்லெ.

வாரேன்.

அன்புடன்,
இராம.கி.

பி.கு.

திரு.முகமூடி!

தில்லையில் சிற்றம்பலத்திற்கு வந்து இறைவனைத் தொழுத முறையில் தெரிந்து தான் சொல்லுகிறேன். நடவரசன், சிவகாம சுந்தரியின் ஊருலாத் திருமேனிகள் (அங்கு மூலவர் இருக்கிறார்; ஆனால் காயநிலை இலிங்கமாய் இருக்கிறார் என்று என் பின்னூட்டில் குறித்தேனே; காயம் = ஆகாய பூதம்.) இருக்கும் பகுதி நாம் காசு கொடுத்துப் போய் நிற்கும் மேடைப் பகுதியில் இருந்து சுவரால் பிரிக்கப் பட்டிருக்கிறது. அந்தச் சுவரில்லை என்றால், என்னைச் சிற்றம்பலத்தில் ஏற விட்டிருக்க மாட்டார்கள். எனவே சுவர் இருப்பதை நான் உறுதி செய்ய முடியும்.

சுவருக்கு அந்தப்புறம் இருப்பது கருவறை; இந்தப்புறம் இருப்பது சிற்றம்பலம். நான் சிற்றம்பலம் என்று சொல்லுவதை நீங்கள் கருவறை என்றால், அப்புறம் கருவறை என்று சொல்லுவதை எப்படிச் சொல்லுவீர்கள்? கருவறைக்கும் கருவறை என்றா? விளங்கியது போங்கள்.

My dear,

You are defending the undefensible. Because what I am talking is simple temple architecture.

அந்தச் சிற்றம்பலத்தில் காசு கொடுத்துப் போகும் நாம் எல்லாம் நிற்கலாம்; ஏன், ஓர் அழனி ஓதி (agni hotri; unfortunately this is also a transcription from Tamil; if needed, please check Sanskrit etymological dictionaries and carry out research.) கூட நின்று ஓதலாம்; ஆனால் ஒரு தமிழ் ஓதுவார் அதில் ஏறி நின்று திருவாசகம் பாடமுடியாது; அப்படித்தானே? இந்தக் கடைந்தெடுத்த பிற்போக்குச் சாதியம் மொய்த்துக் கிடப்பதால் தான் தாழ்ந்த மக்கள் வேறு மதம் நாடுகிறார்கள்; அவ்வளவுதான் சொல்ல முடியும். மேலை நாட்டு மதங்கள் இங்கு ஊன்றுவதில் எனக்கு வியப்பே இல்லை. உடையவர்களுக்கு அறிவில்லை என்றால் அப்புறம் மற்றவரைக் குறை சொல்லி என்ன பலன்?

இனிப் பேசிப் புரியப் போவதில்லை. நீங்கள் வல்வழக்கு ஆடிக் கொண்டு இருங்கள். I don't intend to join this debate any more in your blog.

Thank you.

- இராம.கி.
 



குழலி,

என் கேள்வியை மீண்டும் சொல்கிறேன்... அதாவது ஏற்கனவே (ஒப்பீட்டு அளவில்) வசதியான சூழலை அடைந்த நீங்கள் (ஒப்பீட்டு அளவில்) இன்னமும் முன்னேறாமல் இருக்கும் சமூக கடைநிலை வாரிசுகள் பயன்பெற ஏதுவாக உங்கள் வாரிசுகளுக்கு சாதி சான்றிதழை வாங்காமல் இருப்பீர்களா இல்லையா? இதற்கு ஆம்/இல்லை என்ற பதிலை மட்டுமே எதிர்பார்க்கிறேன்... ஃபில் இன் த ப்ளாங்க்ஸ், இட்லி வடை போட்ட ஏ ப்ளஸ் பி ஹோல் பவர் என் ஃபார்முலா, ஸ்மைலி போட்டு நழுவிக்கொண்டே தவழுதல், சுட்டி கொடுத்து சுத்தி வளைத்து நழுவுதல் என்று மீண்டும் மீண்டும் எத்தனை முறை சித்து விளையாடினாலும் என் கேள்வியை மட்டுமே நான் கேட்பதாக இருக்கிறேன்... நன்றி, மீண்டும் வருக.

*

ஜோ, எனக்கு புரிந்தது இதையும் தாண்டி... ஆனால் கிறிஸ்துவ உள் விஷயங்கள் சிலவற்றை அறிந்து கொள்ளாமல் அதை நான் சொல்ல ஆரம்பித்தால் அது ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பீடு மாதிரி அவ்வளவு சரியாக இருக்காது என்பதால் பிரிதொரு சமயம் உங்களிடம் (ஞாபகம் இருந்தால்) விவாதிக்கிறேன்.

*

ஆரூரன், என் முகத்தை பார்த்தீர்களா! என்ன ஒரு தீட்சன்யமான பார்வை.. உங்களுடைய கருத்தில் அளவான சீரியஸ்தனமும் ; தீட்சிதர்கள் வந்தேறுகுடிகள், கருணாநிதி சோழன் போன்று அளவான நகைச்சுவை பகுதிகளும் ; மதுரையில் மீனாட்சி கோயிலில் அனுபவம் போலவே சிதம்பர அனுபவமும் கிடைக்கும் என்ற பசுமாட்டை தென்னை மரத்தில் கட்டியது போன்ற மசாலா பகுதிகளும் கலந்து நல்லதொரு ஜனரஞ்சக பதிலாக சமைக்கப்பட்டுள்ளது... தொடர்ந்து எழுதுங்கள்..
 



Is there a lay out of the temple available indicating the various
sabhais and sanctum sanctorum.
Putting that will clarify some
points.
 



This comment has been removed by a blog administrator.
 



இராம.கி,

அரூப ரூபம் என்றெல்லாம் concept குறித்து பேசினால் இன்றெல்லாம் பேசலாம்... ஆனால் இன்றிருக்கும் physical structure பற்றி மட்டும் பேசுகிறேன்... நீங்கள் காசு கொடுத்து சென்றதாக குறிப்பிட்டதை சிற்றம்பலம் என்கிறீர்கள் நீங்கள். அது பொன்னம்பலம் என்கிறேன் நான்.. நீங்கள் காசு கொடுத்து சட்டையை கழற்றிவிட்டு சில படிகளை ஏறினால் பெரிய வெள்ளி விளக்கு ஒன்று வரும். அதன் இடப்புறத்தில் ஓட்டைகள் நிறைந்த சுவர் இருக்கும். அதன் வழியாகவே திரை விலக்கப்பட்டு வில்வ இலைகள் தொங்கும் சிதம்பர ரகசியம் காண்பீர்கள்.. நீங்கள் இப்போது நின்று கொண்டிருப்பது பொன்னம்பலம். சுவற்றுக்கு அப்பால் திரையால் மறைக்கப்பட்ட வில்வ இலைகள் தொங்கும் அறைதான் சித்சபை... அதில்தான் நடராஜரும் இருக்கிறார்... அப்படியே சுவற்றை ஒட்டியே பக்கவாட்டில் கொஞ்சம் நகர்ந்தால் ஒரு கம்பித்தடுப்பு வரும். அதில் சாய்ந்துகொண்டு பார்த்தால் நடராஜரை மிகவும் அருகிருந்து - ஒரு பத்து அடி கூட இருக்காது - தரிசனம் செய்யலாம்... அந்த கம்பியை தாண்டி சென்றிருக்கிறீர்களா? உங்களால் செல்ல முடியாது.. அனுமதி கிடையாது... அந்த கம்பிக்கு அந்தப்பக்கம் ஐந்து வெள்ளிப்படிகள் இருக்கும். அதில் ஏறியே நடராஜர் இருக்கும் சின்ன அறையை தீட்சிதர்கள் அடைந்து தீபாராதனை காண்பிப்பார்கள்... அந்த படிகளில் ஏறி தொடும் தூரத்தில் நடராஜரை தரிசிக்கும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்திருக்காது... அந்த சின்ன அறையையே சித்சபை என்கிறேன் நான். அந்த சித்சபையில் நின்று மந்திரம் ஓதவே புலவர் முயல்கிறார் என்கிறது எக்ஸ்பிரஸ் செய்தி...

அழனி ஓதி என்று நீங்கள் யாரை குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை.. தீட்சிதர் அல்லாத ஒருவர் அழனி ஓதி என்ற பெயரில் சித்சபைக்குள் நுழைய முடியாது என்பதே என் எண்ணம்... அது ஏன் தீட்சிதர்கள் மட்டும் அந்த இடத்தில் இருந்து சத்தமாக ஓதுகிறார்கள், தமிழ் ஓதுவார் ஓதுவதை மட்டும் குறை சொல்கிறார்கள் என்பது சமூக நீதி கேள்வி... இங்கு ப்ரச்னை, "தீட்சிதர் அல்லாதோர் சித்சபையில் நின்று பதிகங்கள் பாட ஏன் அனுமதி இல்லை" என்பதாக இருந்திருக்க வேண்டுமே அன்றி "சித்சபையில் நின்று தமிழ் பதிகங்கள் பாட ஏன் அனுமதி இல்லை" என்று மாறியது ஏன் என்பதை குறித்தே... இதில் தமிழ் எங்கு வந்தது என்பதை பற்றியதே என் கேள்வி...

(அப்படியே "தீட்சிதர் அல்லாதோர் சித்சபையில் நின்று பதிகங்கள் பாட ஏன் அனுமதி இல்லை" என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் என் பதில் So What? தீட்சிதர்கள் ஆரியர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எம்மண்ணில் குடியேறிய வந்தேறு குடிகள் என்ற வாதத்துக்கு என் பதில் So What? என்னிடம் இருக்கும் சமூக நீதி லிஸ்டின் முன்னுரிமைகளே வேறு...)

என் அனுபவங்களை நான் சொல்கிறேன்.. உங்கள் அனுபவத்தை நீங்கள் சொல்கிறீர்கள்.. எதிரில் இருந்தாலாவது ஒரு drawing board வைத்து என் மனதில் இருப்பதை வரைந்து புரிய வைப்பேன்.. அதற்கு வழியில்லாமல் பின்னூட்டத்தில் ஏதோ முடிந்த அளவு முயற்சிக்கிறேன்.. இதை வல்வழக்கு என்று நீங்கள் நினைப்பீர்களேயானால் என்னால் ஒன்றும் செய்ய இயலாது... உங்கள் அனுபவப்பகிர்வுக்கு நன்றி...
 



// என் கேள்வியை மட்டுமே நான் கேட்பதாக இருக்கிறேன்... நன்றி, மீண்டும் வருக.
//
நன்றாக கேளுங்க அப்படியே இந்த இடஒதுக்கீடு பற்றி உங்கள் கருத்துகளையும் சொல்லுங்களேன், அது தெரிஞ்சி நான் ஒன்னும் செய்ய போறதில்லை, இருந்தாலும் அட்டென்டன்ஸ் எடுக்கும் வாத்தியாரை பற்றி தெரிஞ்சிக்கலாமேனு தான்... வேறொன்றுமில்லை....அப்படியே இதுக்குமுன்னாடி எங்கனயாவது சொல்லியிருந்திங்கனா சுட்டி கொடுங்க... ஏன்னா நான் வலைப்பதிவுல வர்ற எல்லாத்தையும் படிக்கிறது இல்லிங்கோ...
 



//அப்படியே "தீட்சிதர் அல்லாதோர் சித்சபையில் நின்று பதிகங்கள் பாட ஏன் அனுமதி இல்லை" என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் என் பதில் So What?
தீட்சிதர்கள் ஆரியர்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எம்மண்ணில் குடியேறிய வந்தேறு குடிகள் என்ற வாதத்துக்கு என் பதில் So What? என்னிடம் இருக்கும் சமூக நீதி லிஸ்டின் முன்னுரிமைகளே வேறு...)
//
ஸ்ப்ப்ப்ப்பா என்ன எல்லாருக்கும் புரிஞ்சிதா? அவ்ளோதான்பா... மேட்டரு..... தெள்ளத்தெளிவா இருக்குல்ல... அப்புறமென்ன இதுக்கு போயி விவாதம் விதண்டாவாதம்னு
 



சந்தோஷம் குழலி.

*

// Is there a lay out of the temple available indicating the various sabhais and sanctum sanctorum. Putting that will clarify some points. //

தேடியதில் கிடைத்தவை :

இதில் ஓரளவு தெளிவாக இருக்கிறது

இதில் கொஞ்சம் சுமாராக
 



//தீட்சிதர் அல்லாதோர் சித்சபையில் நின்று பதிகங்கள் பாட ஏன் அனுமதி இல்லை" என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் என் பதில் So What?//

சும்மா நச்சுண்ணு சொல்லிருக்கீங்க !அதுக்கப்புறம் ஏன் இவ்வளவு விவாதங்களும்-ன்னு தான் புரியல்ல!
 



// ஸ்ப்ப்ப்ப்பா என்ன எல்லாருக்கும் புரிஞ்சிதா? அவ்ளோதான்பா... மேட்டரு..... தெள்ளத்தெளிவா இருக்குல்ல... அப்புறமென்ன இதுக்கு போயி விவாதம் விதண்டாவாதம்னு //

பொதுவா இந்த செவுத்துக்கோழி வேஷத்த போடுறவர் இன்னிக்கி லீவா... சப்ஸ்ட்யூட் நீங்க வந்திருக்கீங்க... நான் சிம்பிள் தமிழ்லதான் எழுதியிருக்கேன்.. அப்புறம் என்ன கட்டியங்காரன் ரேஞ்சுல தனியா ஒரு பறையறிவிப்பு... அதான் நிரந்தர சமூக நீதி காவலர் பட்டம் ஏற்கனவே கிடைச்சிடுச்சில்ல... வேலைய பாப்பீங்களா? சரி, உங்க குஞ்சுகள் அடுத்த ரவுண்ட் வேலையில இறங்கும் முன்னாடி உங்க அனுமானத்துக்கு ஒரு knot கொடுக்கிறேன்.. என் சமூக நீதி முன்னுரிமை, என்றோ படித்து மனதில் தங்கிவிட்ட இந்த கவிதையில் இருக்கிறது...

நடராஜா
உன் சன்னதிக்குள்
சட்டையை கழற்றினால்தான்
அனுமதியாம்...
சட்டையே இல்லாதவர்க்கு?
 



//
Is there a lay out of the temple available indicating the various
sabhais and sanctum sanctorum.
Putting that will clarify some
points.
//

Temple map
 



// சும்மா நச்சுண்ணு சொல்லிருக்கீங்க !அதுக்கப்புறம் ஏன் இவ்வளவு விவாதங்களும்-ன்னு தான் புரியல்ல //

ஆரம்பிச்சிட்டீங்களா? மறுபடியும் முதல்ல இருந்தா... சிவ சிவா...

நான் சொன்னத நல்லா கவனிச்சீங்களா? "தீட்சிதர் அல்லாதோர் சித்சபையில் நின்று பதிகங்கள் பாட ஏன் அனுமதி இல்லை" என்ற கேள்வி என்னிடம் கேட்கப்பட்டால் என் பதில் So What? னு தெளிவாத்தான சொல்லியிருக்கேன்... இவ்வளவு விவாதங்களும் இந்த விஷயத்தில் தமிழை நுழைத்து ஏன் சிலம்பு சுத்துகிறார்கள்... கருவறை நுழைவு என்ற பெயரில் நடத்துவதுதானே என்பதை குறிப்பிடத்தான்... சித்சபைக்கு வெளிச்சுற்றில் இருந்து கோவிலின் எந்த பகுதியிலும் சிவபுராணம் புத்தகத்தை எடுத்துக்கொண்டு போய் சத்தமாக பாட எனக்கு அனுமதி மறுத்தால் நான் கண்டிப்பேன்... மற்றபடி சித்சபையில் வன்னியரான புலவர் ஆறுமுகச்சாமி பதிகம் பாடுவதற்கோ ரோமில் முஸ்லீம் போப் ஆவதற்கோ போராட்டம் நடத்த தெம்பிருப்பவர்கள் சந்தோஷமாக நடத்துங்கள்... அது குறித்த போராட்டத்தில் நானும் கலந்து கொள்வதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டால் எனக்கு தோன்றும் பதில் So What? அவ்வளவுதான்...
 



thanks.Chit Sabha according to the plans is what is called as Sanctum
Sanctorum aka Garbha Graha in temples.Only those who do pooja
are permitted there.So i assume
that they object to a person
who is not entitled to do pooja
entering there and reciting songs.
If so their objection is valid.
 



முஸ்லீம் போப் ஆவதைவிட, பெண்கள் போப் ஆவதற்கு சவுண்டு கொடுக்கலாம், இந்து மதத்தில் வன்னியர்களின் சதவிகித்தைவிட, ஜனதொகையில் பெண்கள் சதவிகிதம் அதிகமல்லவா?
 



// Chit Sabha according to the plans is what is called as Sanctum Sanctorum aka Garbha Graha in temples. Only those who do pooja are permitted there.So i assume that they object to a person who is not entitled to do pooja entering there and reciting songs.//

Exactly... From the map, ::

A :: சித்சபை, நடராஜர் சிலை இருக்கும் இடம். தற்போதைக்கு தீட்சிதர்கள் மட்டுமே சென்று பூசை செய்ய உரிமை பெற்றவர்கள். இதில் இருந்து தமிழ் பாடல் பாடவேண்டும் என்பதே புலவர் ஆறுமுகச்சாமியின் விருப்பம்.

B :: பொன்னம்பலம், பொதுமக்கள் - ஆண்கள் சட்டையை கழற்றி விட்டு - செல்வாக்கை பொறுத்து காசு தந்தோ தராமலோ செல்லலாம். தரிசிக்கலாம். பூஜை இல்லாத நேரத்தில் மெதுவான குரலில் தமிழ் பதிகங்கள் பாடலாம்.

B & J Intersection :: பொதுமக்கள் நின்று தரிசனம் செய்யும் இடம். இங்கிருந்தும் பொது மக்கள் தரிசிக்கலாம், பொதுமக்களுக்கு இடையூறு தராமல் பாடலாம்.

B & H Intersection :: இங்கே இசை கலைஞர்கள் (பொதுமக்களில் ஒரு பிரிவு) பாடல்கள் பாடுவதையும், இசை வாத்தியங்கள் வாசிப்பதையும் பொதுமக்களுக்கு இடையூறு தராமல் செய்யலாம்.
 



// இவ்வளவு விவாதங்களும் இந்த விஷயத்தில் தமிழை நுழைத்து ஏன் சிலம்பு சுத்துகிறார்கள்... கருவறை நுழைவு என்ற பெயரில் நடத்துவதுதானே என்பதை குறிப்பிடத்தான்...//

ஏற்றுக்கொள்ளுகிறேனோ இல்லையோ ,உங்கள் கோணம் புரிகிறது .

முகமூடி,
மரபுகளை விடுங்கள் .இனி வரும் காலங்களில் சாதி பேதம் இல்லாமல் யாரும் அர்ச்சகராக ஆகலாம் என்பதை தார்மீக ரீதியிலாவது ஆதரிக்கிறீர்களா ? அல்லது எதிர்க்கிறீர்களா ?

//மற்றபடி சித்சபையில் வன்னியரான புலவர் ஆறுமுகச்சாமி பதிகம் பாடுவதற்கோ ரோமில் முஸ்லீம் போப் ஆவதற்கோ போராட்டம் நடத்த தெம்பிருப்பவர்கள் சந்தோஷமாக நடத்துங்கள்...//

இது சத்தியமாக எனக்கு புரியவில்லை .முஸ்லீம் ஒருவர் கிறிஸ்தவ மதத்துக்கு தலைமை தாங்குவது பற்றிய மிகப்பரந்த நிலை..அது சரி .அதோடு 'வன்னியரான புலவர் ஆறுமுகசாமி பதிகம் பாடுவது' அப்படி ஒரு அதிசயமான ஒன்றா ? அவரும் இந்து தானே?
 



குழலி,

இந்த பிரச்சினை(?) பற்றிய பதிவுகளில் நான் படித்தவைகளில் முகமூடியின் பதிவுதான் objective ஆக, சாந்தமாக, உணர்ச்சிவசப்படாமல் பிரச்சினை¨ய அலசுகிறது. இ¨த பாராட்டும் மனது வேண்டாம். உங்கள் கருத்துக்களை அதே போல் எதிர் வைத்து விவாதத்தை மேலும் சிறக்கச் செய்ய வேண்டாம். ஆனால் எள்ளல் செய்து, நல்ல விவாதத்தை simplistic ஆக reduce செய்ய வேண்டாமே. கருத்து இண்மை, நேரமிண்மை, மற்றும் பின்புலம் இல்லாததால் ஒதுங்கி இருந்து வாசித்து வந்தேன். ஆனால் உங்கள் பதிலை படித்த உடன் தாங்க முடியவில்லை. இகலப்பை இறக்கி, ப்ளாகர் account திறந்து, தட்டு தடுமாறி எழுதி முடிதுவிட்டேன். தவறாக எண்ண வேண்டாம்.
சிறப்பான பதிவிற்கும், அதன் பின்னால் உள்ள உழைப்பிற்கும் முகமூடிக்கு எனது நன்றி.

சுவாமி
இருப்பிடம் : CA
சாதி: பிள்ளை
மதம்: இந்து
இந்த மூன்றும் தானே நம் எல்லோரையும் இன்று வலைப்பதிவுகளில் வகைப்படுத்துகிறது. நான் எங்கே?
 



//அவரைத் தவிர வேறு எந்த பாதிரியாரும் எந்த மொழியிலும் திருப்பலி நிறைவேற்ற வேண்டினால் அங்கு பொறுப்பாளராக இருக்கின்ற பாதிரியாரின் அனுமதியைப் பெற வேண்டும் .
//
ம்ம்... கோர்ட்டுக்கோ திருச்சபைக்கோ போகாமல் அவரை உதைத்து தள்ளிவிட்டு பூசை பண்ண முடியாதா? அங்கே பலிபீடம் நுழைவு போராட்டம் நடத்த வன்னிய தலித் போராட்ட குழுவினர் போவதில்லையா? ஏன் அப்படி?
 



//வன்னியரான புலவர் ஆறுமுகச்சாமி //
ஊப்ஸ் இது வேறவா வெளங்குன மாதிரிதான் சும்மாவே செலம்பம் சுத்துவாங்க, முகமூடி எனக்கு ஒரே ஒரு சந்தேகம் இப்போ இந்த பிரச்சினைக்கு ஆறுமுகச்சாமியின் சாதியை குறிப்பிடுதலின் நோக்கமென்ன? இல்ல சொல்லனும்னு அவசியமில்லை இருந்தாலும் சொம்மா எனக்கு ஒரு சந்தேகம் வந்துச்சி....

//பொதுவா இந்த செவுத்துக்கோழி வேஷத்த போடுறவர் இன்னிக்கி லீவா... சப்ஸ்ட்யூட் நீங்க வந்திருக்கீங்க... நான் சிம்பிள் தமிழ்லதான் எழுதியிருக்கேன்.. அப்புறம் என்ன கட்டியங்காரன் ரேஞ்சுல தனியா ஒரு பறையறிவிப்பு...
//
அந்த செவுத்துக்கோழி யாருனு தெரியாது ஆனா என்ன செய்ய நீங்கள் சொன்னது நம்ம அறிவுப்பசி அண்ணாசாமிக்கு புரியலையாம் என்கிட்ட கேட்டார் அதனால் அந்த மாதிரி அறிவுப்பசி அண்ணாசாமி, குவாட்டர் கோவிந்தன், அப்புறம் கவிஞர் கோந்துவாயன் மாதிரி ஆளுங்களுக்காவது பறையறிவிப்பு தேவைப்படுதே...

//அதான் நிரந்தர சமூக நீதி காவலர் பட்டம் ஏற்கனவே கிடைச்சிடுச்சில்ல... வேலைய பாப்பீங்களா?
//
இது வேறவா? வெளங்குச்சி போங்க :-)

// சரி, உங்க குஞ்சுகள் அடுத்த ரவுண்ட் வேலையில இறங்கும் முன்னாடி //
யாருனு நான் லிஸ்ட் கேட்பேன், அப்புறம் அனானியா யாராவது வந்து காமெடி செய்வாங்க, இதெல்லாம் தேவையா எனக்கு...

//என் சமூக நீதி முன்னுரிமை, என்றோ படித்து மனதில் தங்கிவிட்ட இந்த கவிதையில் இருக்கிறது...

நடராஜா
உன் சன்னதிக்குள்
சட்டையை கழற்றினால்தான்
அனுமதியாம்...
சட்டையே இல்லாதவர்க்கு?
//
ஆகா அது சரி...
காவிக்கொடி தாழும்பொழுது செங்கொடி ஏந்துவதும், சமயம் வந்தவுடன் செங்கொடியை காவிக்கொடி மறைப்பதும் நடப்பது தானே,மவுன்ட்ரோடு மகாவிஷ்னு உட்பட...
அதுக்காக இப்படி நான் சொன்னது உங்களையும்னு நீங்க புரிஞ்சிக்கிட்டா நான் ஒன்றும் செய்ய இயலாது....

சட்டையே இல்லாதவங்களுக்கு எதுனா பேசி இல்ல இல்ல எதுனா எழுதியிருக்கிங்களானு தெரிஞ்சிக்கனும்னு அடியேன் ஆசைப்படுறேன்.... சட்டையே போடாதவனுங்க மேல மறைக்க பனியன் போடவாவது உதவுற இடஒதுக்கீட்டை பற்றி உங்கள் கருத்துகளை அறிய ஆவலோடு இருக்கிறேன்... அட உங்க சமூகநீதிக்கு என் குரலை எதிர்பார்த்தீங்களே அந்த மாதிரி ஒரு கொடுக்கல் வாங்கல்னு வச்சிக்கிங்களேன்.... ரொம்ப நாளாச்சியில்ல நாம ரெண்டுபேரும் சந்திச்சி...
 



This comment has been removed by a blog administrator.
 



தமிழில் பாட நினைப்பவர் பேசாமல் போய் நின்று பாடி விட்டு வர வேண்டியது தானே? அது எதற்கு நோட்டீஸ் விட்டு, ராமசாமி நாயக்கர் சிலைக்கு மாலை போட்டு கிளம்புகிறார். இதிலிருந்தே தெரியவில்லையா பிரச்னையின் 'உள்குத்து'?!

'அவள் விகடனில்' வந்துள்ள கட்டுரையிலிருந்து ஹைலைட்டான சில வரிகள் :

எதற்காகக் கோயிலுக்குப் போகிறோம்? பலனுக்காக. பலன் வேண்டுமா, சாமியைத் தொட வேண்டுமா? இரண் டாவதுதான் உங்கள் பதில் என்றால், உங்கள் நோக்கம் வேறு ஏதோ.. இந்தக் கோயில் உங்களுக்கான இடமும் அல்ல. போகக் கூடாது என்கிற கோயிலுக்குப் போவேன் என்று சொல்வதில் பக்தி இல்லை. ஒருவரின் சட்ட திட்டங்களில் தலையிட இன்னொருவருக்கு உரிமை இல்லை.


http://www.vikatan.com/aval/2006/jul/21072006/aval0403.asp
 



இந்தப் பதிவில் பிரச்னை 'சிதம்பரம்' குறித்தது தான். தேவையில்லாமல் கிறுஸ்துவ, இஸ்லாமிய பழக்க வழக்கங்கள் குறித்தெல்லாம் கேள்வி எழுப்புவது நாகரிகமல்ல.

இருப்பினும், பொறுமையாக பதிலளிக்கும் 'ஜோ' பாராட்டுக்குரியவர். என்றாலும் இந்தப் பதிவில் இந்தப் பதிவுக்குரிய விஷயத்தை மட்டும் விவாதிக்கும் படி அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்.


****

குழலியிடமிருந்து நேரடியான பதிலை எதிர்பார்க்கும் முகமூடியைப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது.

குழலிக்கு கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கு காரணம், சாதரணமாக அவர் தான் 'சமூக நீதி உறுப்பினர்' அட்டை வழங்கி, அட்டண்டன்ஸ் எல்லாம் எடுப்பார். அதை வேறு யாராவது கைப்பற்ற பார்க்கிறார்கள் என்பது போல் தோன்றினால் கோபம் வராமல் என்ன செய்யுமாம்?!
 



பெயர் குறிப்பிட விரும்பாமல் மின்னஞ்சலில் வந்த பின்னூட்டம் ::

//மற்றபடி சித்சபையில் வன்னியரான புலவர் ஆறுமுகச்சாமி பதிகம் பாடுவதற்கோ ரோமில் முஸ்லீம் போப் ஆவதற்கோ போராட்டம் நடத்த தெம்பிருப்பவர்கள் சந்தோஷமாக நடத்துங்கள்... அது குறித்த போராட்டத்தில் நானும் கலந்து கொள்வதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டால் எனக்கு தோன்றும் பதில் So What? அவ்வளவுதான்...//

முகமூடி,

மறுபடியும் 100 பின்னூட்டங்கள் பெற்று கயமைத்தனம் செய்ய ஆசையா?

தமிழ்நாட்டின் கோயபல்ஸ்கள் வலிமையானவர்கள் என்று சுஹாசினியின் கொம்பைத் திரித்தபோதே தெரிந்துவிட்டது; இதை இப்படியும் சொல்ல முடியுமா, மூளையுள்ளவர்கள் நம்புவார்களா என்ற எந்தச் சுமையும் இல்லாமல் திரிப்புச் செய்தவர்களை ஆதரித்துவிட்டு (அல்லது எதிர்ப்பாக எதையும் சொல்லாமல்), என் தலைவனை ஊடகம் வன்முறை செய்து கொல்கிறது, அதைக்கேட்க என் சமூக நீதிபதி மட்டும்தான் வேண்டும் என்று கூக்குரல் இடுபவர்களின் ரத்தத்தை கொதிநிலைக்கு வரச்செய்வது சித்சபை, கனகசபை என்று சொன்னால் சுலபமா, தமிழ் / பார்ப்பன ஆதிக்கம் என்று சொன்னால் சுலபமா? (எப்போதும் கொதிநிலைக்கு அருகிலேயே இருப்பதால் அதற்கு ஒரு பெரிய கஷ்டமும் படவேண்டாம் என்பது வேறு விஷயம்).

அவருக்கு திருவாசகம் சிவபுராணம் படிப்பது பாடுவதுதான் நோக்கமாக இருந்திருந்தால் அது நிறைவேறவில்லை (அதுதான் நோக்கம் என்று LKG படிக்கும் குழந்தை கூட நம்பாது - நம் பிரபல சகவலைப்பதிவாளர்கள் விதிவிலக்கு). உப்புச்சத்தியாக்கிரகத்துக்கு இணையாக, தீட்சிதர்கள் மேல் மற்றவர்களுக்கு உள்ள வெறுப்பை தன் பிரபலத்துக்கு Exploit செய்யும் அவரது உண்மையான நோக்கம் நிறைவேறிவிட்டது.

இந்த விஷயத்தால், நமக்கு நாகரீகம் என்பதன் வரையறைகள் திருத்தப்பட்டது மட்டுமே பிரயோஜனம். ரத்தம் கொதித்தது மட்டுமே பின்விளைவு.

வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர்.
 



குறிப்பிட மறந்து விட்டேன்.. 'அவள் விகடனில்' வந்திருந்த கட்டுரை, கேரள ஐயப்பன் கோயில் குறித்தது. ஏனோ அது இந்தப் பிரச்னையிலும் ஒத்து வருவது போல தோன்றியதால் இங்கே சுட்டிக் காட்டினேன். அம்புட்டு தான்.
 



// முஸ்லீம் ஒருவர் கிறிஸ்தவ மதத்துக்கு தலைமை தாங்குவது பற்றிய மிகப்பரந்த நிலை.. //
ஜோ, இது காலம் காலமாக இருக்கும் மரபு என்பதனாலேயே மிகப்பரந்த நிலை என்பது மாதிரியான ஒரு மாயத்தோற்றம் தருகிறது.. யாராவது ஒருவர் எப்போதாவது ஆரம்பிக்க வேண்டியதுதான்... வாடிகன் கிளை தி.க விடம் பேசிப்பார்க்கலாம்...

// இனி வரும் காலங்களில் சாதி பேதம் இல்லாமல் யாரும் அர்ச்சகராக ஆகலாம் என்பதை தார்மீக ரீதியிலாவது ஆதரிக்கிறீர்களா ? அல்லது எதிர்க்கிறீர்களா ? //

ஜோ... பால், ஜாதி, இனம், மொழி, நிறம், வயது, மதம், மத நம்பிக்கை, பிறந்த நாடு என்ற எந்த வேறுபாடும் இல்லாமல் அனைவரும் அர்ச்சகராக ஆகி நாட்டு மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாகவும் சுபிட்சமாகவும் வாழ வேண்டும் என்பதே என் அவா. ஆனால் இந்த சட்டத்துக்கு பொதுமக்களிடம் பெரிய அளவில் ஆர்வம் இல்லாதது போல ஒரு மாய தோற்றம் தெரிகிறது.. அடுத்த தலைமுறை இந்த அவலத்தை காணாமல் பிறக்க அரசு துரித கதியில் சில நடவடிக்கை எடுக்க வேண்டும். அர்ச்சகர் என்பது அரசாங்க வேலையாக அறிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சட்டம் போட்டும் அவ்வளவாக ஆர்வம் காட்டாமல் ஒதுங்கி நிற்கும், இன்ஜினியரிங் டிகிரி முடித்துவிட்டு 4th க்ரேடு க்ளார்க்காக வேலை செய்து கொண்டிருக்கும் இளைய தலைமுறை இது பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும். அரசு தன்வசமாகவும் தனியாருக்கு மானியம் தந்தும் வேத ஆகம் கல்லூரிகள் தொடங்க வேண்டும்... இது அர்ச்சகர் ஆக குறைந்த பட்ச ஒரு தகுதி வேண்டும் என்ற என் அதிகபட்ச எதிர்பார்ப்பில்.. இல்லை வேண்டாம் தமிழ் பேசத்தெரிந்து மணியாட்டத்தெரிந்தால் போதும் என்றால் அதுவும் ஓக்கேதான்... அப்படி குறைந்த பட்ச தகுதி வேண்டும் என்று நிர்ணயிக்கும் பட்சத்தில் வேத ஆகம கல்லூரியில் சேருவதற்கும், படித்து முடித்த பின்பு வேலையில் சேருவதற்கும் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு மட்டும் இல்லாமல் இத்துறையில் காலம் காலமாக ஒதுக்கப்பட்டு வந்திருக்கும் பெண்டிர், கணவனை இழந்த பெண்கள், திருநங்கைகள் ஆகியோருக்கு ஸ்பெஷல் இட ஒதுக்கீடு வேண்டும் (மதம் மறுத்த ஆனால் சம்பளத்துக்காக இந்த வேலையை பார்க்க விரும்பும் நாத்திகர்களுக்கும் கொஞ்சம் ஒதுக்கலாம்) வேத ஆகமங்களை தமிழில் மொழி பெயர்த்து தரும் வேலையின் மூலம் வேலை வாய்ப்பை அதிகரிக்கலாம்.. இல்லை அது என்ன வேதம் வேண்டிக்கிடக்கு, தமிழ்ப்பதிகங்கள் மட்டும் பாடினால் போதும் என்றால் அதுவும் எனக்கு ஓக்கேதான்... காலப்போக்கில் திருக்குறள், நெஞ்சுக்கு நீதி போன்றவற்றை curriculamல் சேர்ப்பது எனக்கு ப்ரச்னை இல்லை.. ஆனால் அரசாங்க பள்ளிகளில் உருது படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வசதி இருப்பது போன்று வேதாகம கல்லூரியில் சமஸ்கிருதத்தில்தான் படிப்பேன் என்று விருப்பம் தெரிவிப்பவர்களுக்கு அந்த ஆப்ஷனை மறுக்கப்பட்டு தமிழ்நாட்டில் வேத்து மொழிக்கு இடமா என்றெல்லாம் கழுதையை கூட்டிக்கொண்டு கூச்சல் போட்டால் அது ஃபாஸிசம் என்று நான் பதிவு போடுவேன்...
 



வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுவாமி.

*

// அங்கே பலிபீடம் நுழைவு போராட்டம் நடத்த வன்னிய தலித் போராட்ட குழுவினர் போவதில்லையா? ஏன் அப்படி? //
நம் இனத்துக்குள் நாம் எப்படி வேண்டுமானாலும் அடிச்சிக்கலாம் பிடிச்சிக்கலாம்... ஆனால் சிறுபான்மையினர் பாதுகாப்பு எனறு வரும்போது அது பெரும்பான்மையினரான நம் கையில்தானே இருக்கிறது என்ற எண்ணத்தால் இருக்கலாம்.]

*

// இப்போ இந்த பிரச்சினைக்கு ஆறுமுகச்சாமியின் சாதியை குறிப்பிடுதலின் நோக்கமென்ன? //

இந்த ப்ரச்னையில் தமிழ் என்பது ஒரு கவசம்தான்.. அதற்கு பின்னே கருவறை நுழையும் போராட்டம் என்னும் நோக்கமே மேலோங்கியிருக்கிறது என்று சொல்லத்தான்... கண்ட தேவி தேரோட்ட சமூக நீதி போராட்டங்களுக்கு திருமாவளவனை மட்டும் தனித்து விட்டுவிட்டு காணாமல் போகும் பா.ம.க ஆறுமுகச்சாமி போராட்டத்துக்கு மட்டும் பேக்-அப் கொடுக்க முண்ணனியில் இருக்கிறதே, அதன் நோக்கம் என்ன?

// இடஒதுக்கீட்டை பற்றி உங்கள் கருத்துகளை அறிய ஆவலோடு இருக்கிறேன்... // பதில் தயார் பண்ணவெல்லாம் வேண்டாம்... மனசிலயே இருக்கிறதுதான... அத இப்ப சொன்னா ட்விஸ்ட்ஸ் & டர்ன்ஸ் எல்லாம் பலமா இருக்கும்... அதுக்கு நான் ஓவர்டைம் வேலை செய்யணும்... நான் கேட்டு ஒரு வாரம் கழிச்சி பல ரிமைண்டர்கள் அப்புறம்தானே நீங்க என் கேள்விக்கு பதில் சொல்லியிருக்கீங்க.. அதுபோல காலம் கனியும்போது அவசியம் பதில் சொல்றேன்.. கேட்டவுடனே பதில் சொன்னாத்தான் ஆச்சின்னு அடம் பிடிச்சா எப்பிடி?

அப்படியே உங்களோட ஒரு சில பதிலகள் மற்றும் வேல்பாண்டி, உங்க கருத்து இவற்றை என் சமூக நீதி பதிவுக்கு கடத்துகிறேன்.. இதுக்கு மேல இது சம்பந்தமான விவாதத்த நாம அங்க வச்சிக்குவோம்... இங்க தொடர்வதில் ஒன்றும் சிக்கம் இல்லை, ஆனால் அங்கு என்றால் கொஞ்சம் பொருத்தமாக இருக்குமே என்று... என்ன சொல்றீங்க.

*

// போகக் கூடாது என்கிற கோயிலுக்குப் போவேன் என்று சொல்வதில் பக்தி இல்லை // பக்தின்னு அவங்க சொல்லவே இல்லியே... சமூகநீதின்றதுதானே முழக்கமே... ஆறுமுகச்சாமி கூட பக்தின்னா சொல்லியிருக்கார்... தமிழ் பாட முடியலையேன்னுதான வருந்தறார்...

// இருப்பினும், பொறுமையாக பதிலளிக்கும் 'ஜோ' பாராட்டுக்குரியவர். // வழிமொழிகிறேன்.
 



கோயில் வரைபடங்கள்,விளக்கங்களைப் படித்த பின் என் சிற்றறிவிற்கு எட்டியது இதுதான் : ஒருவர் கருவரை அல்லது கர்ப்பக்கிரகம் (இங்கு சித்சபை)த்துக் சென்று பாடுவேன் என்கிறார்.அங்கு பூஜை
செய்யும் நாங்கள்தான் நுழைய முடியும்.எனவே உங்களை அனுமதிப்பதற்கில்லை, நுழைய உங்களுக்கு உரிமையும் இல்லை என்கிறார்கள் தீட்சிதர்கள்.சட்டப்படி அவர்கள் வாதம் சரியே. இதை பெரிய பிரச்சினையாக சில சக்திகள் முயல்கின்றன. இங்கு தமிழ் என்பது ஒரு சால்ஜாப்பு.
உண்மையான நோக்கம் கோயில் நிர்வாகத்தினை கைப்பற்ற முயலுதல். கலைஞர் ஆட்சியில் இது நிறைவேறாதா என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனாலும்
அர்ச்சகர் தவிர பிறர் கருவறைக்குள் நுழைய முடியாது. மடாதிபதிகளுக்கும் கூட கருவறையிலும் நுழையும் உரிமை இல்லை. ஆனால் இங்கு அதையெல்லாம் யோசிக்காமல் எதை சாக்கு வைத்துக் கொண்டு சிதம்பரம் கோயிலை அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று துடிக்கும் ஒரு கும்பல் தமிழ் முகமூடி போட்டுக் கொண்டு தங்கள் முயற்சியின் முதல் படியாக இந்த சர்ச்சையை எழுப்பியிருக்கிறது.

நான் எழுதியது தவறு என்று வாதிக்க விரும்புவோர் என் புரிதலில் என்ன பிழை என்று சுட்டிக்காட்டிடுக.
 



// அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனாலும் அர்ச்சகர் தவிர பிறர் கருவறைக்குள் நுழைய முடியாது. மடாதிபதிகளுக்கும் கூட கருவறையிலும் நுழையும் உரிமை இல்லை. //

இது மிகவும் முக்கியமான வாதம். இங்கு கருவறையிக்கு செல்ல விருப்பப்படும் ஆறுமுகச்சாமி ஒரு ஓதுவார்தான்... தீட்சிதரோ அர்ச்சகரோ அல்ல... (ஏன், மனிதனாக பிறந்த அனைத்து இந்துக்களும் கருவறை செல்ல என்ன தடை இருக்க முடியும் என்ற கேள்விக்கு நான் ஏற்கனவே சொன்னதை தவிர்த்து என்னிடம் பதிலில்லை)
 



//நடராஜா
உன் சன்னதிக்குள்
சட்டையை கழற்றினால்தான்
அனுமதியாம்...
சட்டையே இல்லாதவர்க்கு?
//
மீதி கவிதையை நான் முடிக்க முயல்கிறேன்!

சட்டை அணிந்தறியா
சாதியிற் பிறந்த சிவபக்தர்
நந்தனாரை வீதியிலே நிற்கவைத்து
நந்தியாரை நகர சொல்லியருள் புரிந்து
தொடத்தகாதவனின் சுத்த பக்தி அறித்தும்
தூரத்திலேயே நிற்க வைத்த நடவரசை
நற்றமிழில் பாராட்ட புறப்பட்ட
ஆறுமுகசாமியை தாறுமாறாக வையாமல்
மாறாக புகழ்ந்தால் நூல் அறிவார் பொறுப்பாரோ!
 



//நடராஜா
உன் சன்னதிக்குள்
சட்டையை கழற்றினால்தான்
அனுமதியாம்...
சட்டையே இல்லாதவர்க்கு?
//
மீதி கவிதையை நான் முடிக்க முயல்கிறேன்!

சட்டை அணிந்தறியா
சாதியிற் பிறந்த சிவபக்தர்
நந்தனாரை வீதியிலே நிற்கவைத்து
நந்தியாரை நகர சொல்லியருள் புரிந்து
தொடத்தகாதவனின் சுத்த பக்தி அறித்தும்
தூரத்திலேயே நிற்க வைத்த நடவரசை
நற்றமிழில் பாராட்ட புறப்பட்ட
ஆறுமுகசாமியை தாறுமாறாக வையாமல்
மாறாக புகழ்ந்தால் நூல் அறிவார் பொறுப்பாரோ!

-வேல்-
 



அர்ச்சகர் மட்டும்தான் நுழைய வேண்டுமா, பிறர் ஏன் நுழையக் கூடாது என்று கேட்கலாம்.பின்பற்றப்பட்டும் மரபில், வழிகாட்டும் ஆகமம் போன்றவற்றில் அதற்கு
அனுமதி இருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.கோயில் என்பது பக்தர்களின்
தேவைகளை,மத நம்பிக்கைகளைப் பூர்த்தி செய்ய,வழிபாடு செய்ய ஒரு இடம்.
அங்கு போய் நம்முடைய அத்தனை சமத்துவத்தினையும் திணிக்க வேண்டும்
என்பதில்லை.தீண்டாமை,பெண்களுக்குத் தடை போன்றவை வேறு. அனைவரும்
கருவறைக்குள் நுழைய வேண்டும் என்பது வேறு.முன்னதை நீக்க வேண்டும்.
பின்னதைப் பற்றி அரசு தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. பக்தர்கள்,
மதப் பிரதிநிதிகள்,மடாதிபதிகள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் அது.
மரபினைப் பின்பற்ற, மாறுதல்களை நிராகரிக்க அவர்களுக்கு உரிமை
உண்டு. அதை மதிக்க வேண்டும். சிறுபான்மையினர் விஷயங்களில்
கண்ணையும்,காதையும் மூடிக்கொள்வோம், இந்து மதத்தில் மூக்கையும்,
கையையும் நுழைப்போம், கோயில்களில் எங்கள் சமத்துவத்தினை
திணிப்போம் என்பது சரியல்ல, நல்லதல்ல.இந்து மதத்தில் மூக்கையும்,
கையையும் நுழைப்போம், கோயில்களில் எங்கள் சமத்துவத்தினை
திணிப்போம்- இப்படிச் செய்தால் இந்து அடிப்படைவாதம் கட்டாயம் பலம் பெறும்.
 



எந்த நிலையிலும் பொறுமை இழக்காமல் அடுக்கடுக்காய் நேர்மையான, ஆதாரபூர்வமான வாதங்களைப் பதிலிறுத்தியே விவாதத்தை வளர்த்தும் உங்கள் திறமை கண்டு பிரமித்து நிற்கிறேன்.

புகழ்ச்சி, ஜால்ரா என சிலர் ஜல்லியடித்தாலும் கவலையில்லை.

சொல்ல நினைத்தேன்!
சொல்லிவிட்டேன்!

திரு. 'ஜோ'வுக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள்!

அருமையான, அறிபூர்வமான விவாதம்!
நன்றி!

இதில் வேடிக்கை என்னவென்றால், பக்தி பூர்வமாக இதனை அணுகுபவர்களுக்கு இது ஒரு பிரச்சினையே இல்லை.

இவர்கள் தமிழை இதில் எப்படியாவது நுழைக்காவிட்டால், இவர்களும் பக்திமான்கள் ஆகிவிடுவார்களே என்னும் பயம்!

அவரவர் வீட்டில் கொஞ்சம் கேட்டுவிட்டு வரச்சொல்லுங்கள்!
இதைப் பற்றி எழுதும் முன்னர்!
 



http://www.hindu.com/2006/07/11/stories/2006071109120300.htm

In his petition to the police, he urged that he be allowed to enter the "Thiruchitrambalam", an elevated structure "close to the sanctum sanctorum," to recite the hymns.

Generally, "special permission has to be obtained from the Deekshithars," who administer the temple, to offer worship to the Lord from Thiruchitrambalam.


இந்து எழுதியிருப்பதை பார்த்தால் இந்த இடத்திலிருந்து வணங்கும்
பர்மிஷன் கொடுக்கும் வழக்கம் உள்ளது போல தெரிகிறது.

நாராயண நாராயண
 



நாங்கள் கருவறைக்குள் நுழைந்தால் தான் என்ன? SO WHAT? what is your problem mr.mugamoodi???
 



So What? = "சிம்பிள் தமிழ்"
oxymoron? or you moron?
 



that is a general statement to cover any contingencies like fire, flood, renovation work etc which are beyond the realm of the dhikshithars.
It does not mean for worship .
that is exclusively reserved for dhikshithars only.

I have lived in chidhambaram during my school days.
I have vivid memories of the Senior Sankaracharya standing outside and worshipping Lord Nataraja!

This is pure politics!
There is neither Thamizh nor devotion!
 



ஜீன் ஆராய்ச்சியில் ஆரியரும் இல்லை திராவிடரும் இல்லை
என்று கண்டுபிடுத்து பதிவு போட்டுவிட்டு இங்கு ஒருவர்
'திராவிட தடியர்' என்று சொல்வது :) :)
 



// அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆனாலும் அர்ச்சகர் தவிர பிறர் கருவறைக்குள் நுழைய முடியாது. மடாதிபதிகளுக்கும் கூட கருவறையிலும் நுழையும் உரிமை இல்லை. //

From Hindu

Generally, special permission has to be obtained from the Deekshithars, who administer the temple, to offer worship to the Lord from Thiruchitrambalam.
.
.
Inside the Thiruchitrambalam premises only qualified persons would be permitted to recite the Vedas and mantras in Sanskrit, and no outsider or recitation in any other language would be entertained.
 



பிரச்சினை தெளிவாக புரிந்தது... நன்றி
 



முகமூடி,
இங்கே சில கருத்துக்களை எழுதியிருக்கிறேன். உங்களையும் சில இடங்களில் கோடிட்டிருக்கிறேன்.

http://karthikraamas.net/pathivu/?p=159


நன்றி.
 



நன்றி திரு முகமூடி,
இந்த விஷயத்தில் த்வேஷம் நிறைந்த பதிவுகளையே கண்டு சலிப்புற்றுரிந்த எனக்கு நடுநிலையான தங்கள் பதிவு சிறிது ஆறுதலை கொடுத்தது .

நீங்கள் காட்சிப் படுத்திய ஆறு கால பூஜையையும், தேர் திரு உலாவையும் நானும் கண்டு உணர்ந்திருக்கிறேன்.

இந்த போராட்டங்கள், தில்லை கோயிலை அரசுக்கட்டுப்பாட்டில் கொணரும் முயற்சியின் முதல்படி என்றுதான் நினைக்கிறேன்.

இறைசேவையே வாழ்க்கையாக அமைத்துக்கொண்ட அந்தனர்களை விட எந்த அரசாங்க/அரசியல் ஊழல் பெரிச்சாளிகளால் கோவில் நிர்வாகத்தை சிறப்பாக செய்துவிட முடியும்?.

இந்த கால கட்டத்திலும் மாதம் ஐநூறு ரூபாய் சம்பளத்திற்காகவும், தட்சனையாக வரும் சில சில்லரை காசுக்காகவும் வாழ்நாள் முழுவதும் இறைசேவையே கதி என்று கிடக்கும் பல அந்தனர்கள் என் சொந்தத்திலேயே உண்டு.
உண்மையான பக்தி இருந்தால் ஒழிய இது சாத்தியமல்ல.

கோயில் நிர்வாகம்; ராமர் படத்திற்கு செருப்பு மாலை போட்டு ஊர்வலம் விட்டவர்கள் கைகளிலும், கோயபல்ஸ் திக போன்றவர்களின் கைகளில் போவது இந்து மதத்திற்கு நல்லதல்ல.

எத்தனையோ கோயில்களில் தீபம் ஏற்ற எண்ணை வாங்கக் கூட காசு கிடையாது.இந்த மாதிரியான விஷயங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி சரி படுத்தலாம்.அர்ச்சகர்களும் பூசாரிகளும் அரசாங்கத்திடம் பொருளாதார உதவி வேண்டி நிற்கிறார்கள்.அவர்களுக்கு உதவலாம்.

போராட்டக்காரர்கள் தங்கள் கறிசோறு திமிரைத்தான் காட்ட முற்படுகிறார்கள்.புலால் மறுத்தவன் மட்டுமே போராட்டத்தில் கலந்து கொள்ளவேண்டும் என்று சொல்லிப்பாருங்கள்.இந்த பிரியாணி கூட்டங்கள்,நான் அப்படித்தான் என்று தண்ணி அடித்துவிட்டு வந்து நிற்பார்கள்.

ஒரு அமைதியான சமூகத்தை ஆலய பனியிலிருந்தும் விரட்டி அடிக்க ஒரு கூட்டம் முனைகிறது.இது பெரும் சீரழிவிற்குத்தான் வழிகோலும்.இந்த திராவிட பேரினவாதம் முனை மழுங்கிப்போவது ஆத்திகத்திர்க்கு நல்லது.
என்றென்றும் அன்புடன்,
பா. முரளி தரன்.
 



சுட்டிகளில் சிறிய தவறு இருந்ததால் அதை மாற்றி இந்த பின்னூட்டமளித்துள்ளேன்...

//ஆனால் எள்ளல் செய்து, நல்ல விவாதத்தை simplistic ஆக reduce செய்ய வேண்டாமே. கருத்து இண்மை, //
ஸ்வாமி இன்று நான் நக்கல்,நையாண்டி
செய்வதாக நீங்கள் சொல்கிறீர் ஆனால்
சத்தியமா நான் நக்கல் நையாண்டியெல்லாம் செய்யவில்லையென்றால் நீங்கள் நம்பவா போகின்றீர் :-)

//நேரமிண்மை, மற்றும் பின்புலம் இல்லாததால் ஒதுங்கி இருந்து வாசித்து வந்தேன்.//
இதிலிருந்து நீங்கள் வெறும் இந்த பதிவை மட்டும் படித்தவர், முகமூடி மற்றும் என் முந்தைய பதிவுகளையெல்லாம் படித்தவர் என
எடுத்துக்கொள்ளலாம் தானே?

// ஆனால் உங்கள் பதிலை படித்த உடன் தாங்க முடியவில்லை. இகலப்பை இறக்கி, ப்ளாகர் account திறந்து, தட்டு தடுமாறி எழுதி முடிதுவிட்டேன். தவறாக எண்ண வேண்டாம்.
//
ஸ்வாமிகள் அநியாயம் நடக்கும் போது
பக்தர்களுக்கு கஷ்டம் வரும்போது அந்த பக்தர்களை பாதுகாக்க கோபம் கொண்டு அவதாரம் எடுப்பார்கள், நீங்களும் முகமூடியின் பதிவில் என் நக்கல் நையாண்டிகளை (சத்தியமா
நான் அப்பிடி நினைக்கலைனு சொல்ல ஆசை தான்) தாங்க முடியாமல் இறங்கிவிட்டீரோ?! ஸ்வாமி முகமூடி பதிவில் மட்டும் நக்கல் நையாண்டிக்கு எதிராக அவதாரம் எடுப்பீரோ?....அப்பிடினு நான் கேட்கலை நம்ம குவார்ட்டர் கோவிந்தன் கேட்குறார் :-)

ஹேய் அது யாருப்பா சூரியனுக்கே டார்ச் லைட்டானு வையிறது.அது சரி இந்த ஸ்வாமியாவது அவதார நோக்கம் முடிஞ்சிடிச்சினு கெளம்பிடாம தங்கி
இருக்கனும்னு நம்ம அறிவுப்பசி அண்ணாசாமி சொல்றாரு, ஏன்னு கேட்டதுக்கு அவ்வப்போது க்தர்களுக்கு சிரமம் வரும் போது அவதாரம்
எடுத்த குரல்,மீட்டர் முருகேஷ், அப்புறம் அப்பப்போ அவதாரம் எடுக்கும் அப்பாவிதமிழன், சில சமயங்களில் சில பதிவர்களுக்கு மட்டும் மின் மடல் அனுப்பி பின்னூட்டம் போட சொல்லும்
நாட்டாமை மற்றும் பலர் மாதிரி அவதார நோக்கம் முடிஞ்சுதுனா கிளம்பிடாதிங்கனு நம்ம கவிஞர்
கோந்துவாயன் சொல்றாரு....

ஸ்வாமி எல்லா கலைகளும் எல்லோருக்கும் தெரியும்... :-) ஒரே ஒரு இடத்திற்கே பொறுக்க முடியாமல் அவதாரம் எடுத்தீர்களே அப்போ மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் பொறுமை காத்தவங்களை என்ன சொல்ல அப்படினு நான்
கேட்களை அது கூட அவருதான் கேட்டாரு.

வர்ர்ர்ர்ரரரட்ட்ட்ட்டா... ஸ்வாமி.....
 



சுட்டிக்கு நன்றி ஆதிரை!

http://www.hindu.com/2006/07/11/stories/2006071109120300.htm

//This renowned temple is under the sole control of the Deekshithars and not under the Hindu Religious and Cultural Endowment Department of Tamil Nadu. Representatives of the Deekshithars told the Chidambaram Assistant Superintendent of Police Pradeep Kumar that the petitioner would be allowed only up to the common worshipping place.

Inside the Thiruchitrambalam premises only qualified persons would be permitted to recite the Vedas and mantras in Sanskrit, and no outsider or recitation in any other language would be entertained.

முகமூடி,
சம்ஸ்கிருதம் தவிர எதுவும் கிடையாது என்று சொல்கிறார்கள். நீங்கள் தமிழ் உண்டு (தீட்சிதர்கள் பாடும் தமிழ்) என்று சொல்கிறீர்கள்.ஒன்றும் புரியவில்லை.

சத் சித் சின்னம்பலம் பொன்னம்பலம் போன்ற விளக்கமான படங்களின் சுட்டிகு நன்றி.உங்களின் பதிவில் இருந்து நிறைய தகவல்கள் தெரிந்துகொள்ள முடிந்தது.
 



நீங்கள் சொன்னால் நம்புகிறேன்.

நக்கல் செய்வதை மட்டும் வைத்து தவறாக சொல்லவில்லை. விவாதம் நன்றாக செல்லும் ஒரே பதிவிலும் ஒரிரு வார்த்தையை வைத்து அர்த்ததை திருப்பி ‘அட, இதுதான் சங்கதியா’ என்று terminate செய்தது உசிப்பி விட்டுவிட்டது.

முகமூடி, உங்கள், வேறு பதிவுகளையும் படித்திருக்கிறேன். ஏன் இங்கு மட்டும் என்பதற்கு என்னிடம் பதிலில்லை. முகமூடியின் பதிவுகளில் வேறு சிலர் எள்ளல் செய்த போது பேசாமல் இருந்து உங்களுக்கு மட்டும் ஏன் பதிலளிக்க தோனியது என்பதற்க்கும் பதிலில்லை.

முகமூடி கஷ்டப்படுவது போன்றா உங்களுக்கு தோன்றுகிறது? எனக்கு இல்லை. அவருடைய கேள்விகளுக்கு எதிர்வாதம் செய்பவரிடம் பதில் இல்லை அல்லது ஒப்புக்கொள்ளும் தன்மை இல்லை என்றுதான் தோன்றுகிறது.

All apart, உங்கள் approach இந்த ஒரு பதிவினால் இல்லை என்று தெரியும்.
மற்றபடி, வேறு சில ‘அவதாரங்களை’ போல் நானும் ஒரிரு பின்னூட்டங்களுடன் மறையலாம் (can’t spend hours like this typing 4 paragraphs). ஆனால் ஒன்று. அப்படி தங்கி, பதிவுகள் எழுத ஆரம்பித்து, ஒரு நாள் யாராவது எப்படி எழுத ஆரம்பித்தாய் என்று கேட்டால் உங்களை சுட்டி கொள்கிறேன்!

நீளமாகிவிடடது. நல்ல பதிவை one-up-manship between two smart alecs என்று மாற்றாமல் இருப்பதற்கு, இத்துடன் முடித்து கொள்கிறேன். முடிந்தால் email (மின்மடல்) செய்யுங்கள். மேலும் பேசலாம். இல்லை யார் கண்டா, உங்கள் பதிவில், நல்ல விவாதத்தில், யாராவது தவறாக பேசினால், விவாதத்தை முடிக்க பார்த்தால், அதை நான் படித்தால், அவதாரம் எடுக்கிறேன்!
 



பொதுவாகவே "இந்தியர்கள்" வீரம்,தன்மானம்,சுய உரிமை இல்லாதவர்கள்தான்.
ரா வண்ணன் ஆண்டாலும்,இரா மண்ணன் ஆண்டாலும் அவர்களுக்குக் கவலையில்லை.
அதனால்தான் முதலில் பிற மண்ணர்கள்(அவா) நம் தோளில் ஏறி தலையில் மிளகாய் அரைத்தார்கள்.
பின்னர் முஸ்-இல் மண்ணர்கள்(அல்லா),கிருத்தவர்களென்று(ஜிசஸ்) வரிசையாக வந்து ஏறி மேய்ந்தார்கள்.
சில நேரங்களில் ஆறுமுகச்சாமி போன்ற கோட்டிக்காரப் பயலுக கொஞ்சம் அலம்பல்
பண்ணுவாக.
மத்தபடி இந்த மூனு பயலுக பிடிலதான் நாம இருந்தாகனும்.
எந்த ஊருக்குப் போனாலும் ஏந்தான் எல்லாரும் இந்தியாவைப் பிட்சித் தொங்கிட்டுகீறோம்.

இதயெல்லம் சைடுல வச்சுட்டு, மல்லாட்ட கேக் சாப்டிட்டே நூறு மில்லி ஊத்திப்பாருங்க.
சும்மா ...த்..த்..தூக்குமே....(மல்லாட்ட கேக் ஒங்க ஊருல கெடைக்கா?)
 



/ஆனால் தினமணி செய்தியோ புலவர் ஆறுமுகச்சாமி நடராஜர் ஆலய திருச்சிற்றம்பல மேடையில் சிவபுராணம் பாட சென்றார் என்கிறது... திருச்சிற்றம்பல மேடை என்று எதை சொல்கிறார்கள் என்று புரியவில்லை... அது கனகசபை அல்லது அதை ஒட்டிய இடங்கள் எனில் ஏற்கனவே வாங்கப்பட்ட தடையுத்தரவை ஒட்டி அவரை கைது செய்ததில் எந்த தப்பும் இல்லை... /
- பதிவில் இருந்து.

/
எக்ஸ்பிரஸ் நியூஸ் சொல்வது "Arumugasamy (73), an Odhuvar at Naalvar Madam in Kumudimoolai near Bhuvanagiri, had sought police security for reciting hymns in Tamil at the ‘Chit Saba’ in the temple a week ago. Arumugasamy, who belonged to a Vanniya community, had proposed to sing verses from Devaram and Thiruvasagam for six days from July 15" /

/ * "இந்த கோவில் என்றில்லை ,தமிழ்நாட்டின் எந்த கோயிலிலாவது ஓதுவார் மூலவர் சந்நிதிக்குள் சென்று தேவாரப் பாடல்களைப் பாடுகிறாரா என்று பாருங்கள்.பாட மாட்டார்கள் ! மகா மண்டபத்தில் நின்று தான் பாடுவார்கள் .அப்படி இருக்கும் போது இங்கு மட்டும் மூலவர் சந்நிதியாக இருக்கும் திருச்சிற்றம்பலத்தில் ஏறித்தான் பாடுவேன் என்று சொல்லுவது என்ன நியாயம் ?" -என்று ஒரு தீட்சிதர் கேட்டிருக்கிறார் .


* கடலூர் மாவட்டம், குமுடிமூலை என்ற ஊரைச் சேர்ந்தவர் ஆறுமுகச்சாமி. இல்லற வாழ்க்கையில் இருந்தவர், பிறகு துறவறம் பூண்டு தேவாரம், திருவாசகத்தை கற்றுத் தேர்ந்தவர். ஊர்ஊராக ஆலய தரிசனம் மேற்கொண்டிருக்கும் இவர், சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் உள்ள சிற்றம்பலத்தில் வைத்து தேவாரம், திருவாசகத்தைப் பாட வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறார். ஆனால், ஏற்கெனவே ஒருமுறை இதே முயற்சியில் கசப்பான அனுபவம் இருந்ததால், பல்வேறு அமைப்புகளின் ஆதரவைப் பெறும் வேலையில் இறங்கினார். அதற்குள்ளாகவே விஷயம் தெரிந்து, ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடக்கூடாது என்று சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் தடையுத்தரவை வாங்கி விட்டார்கள் தீட்சிதர்கள்!

- விகடன் /

/ஜீ.வி தகவலுக்கு நன்றி ஜோ.. இப்பொழுதுதான் பார்த்தேன். நான் எதிர்பார்த்தபடியே திருவாசகம் பாடுவதில் அல்ல ப்ரச்னை, அதை திருச்சிற்றம்பலத்தில் ஏறிப்பாடுவேன் என்ற ஆறுமுகச்சாமியின் பிடிவாதமே ப்ரச்னை... அரசியல் படை ஒன்றை திரட்டி ஒரு முடிவோடு வந்திருக்கிறார் என்று தெரிகிறது... /


/இங்கே ப்ரச்னை ஆறுமுகச்சாமி தமிழை பாட விரும்பியதா, அல்லது அவர் பாட விரும்பிய இடமா? /


/ http://www.hindu.com/2006/07/11/stories/2006071109120300.htm

In his petition to the police, he urged that he be allowed to enter the "Thiruchitrambalam", an elevated structure "close to the sanctum sanctorum," to recite the hymns.

Generally, "special permission has to be obtained from the Deekshithars," who administer the temple, to offer worship to the Lord from Thiruchitrambalam.

Inside the Thiruchitrambalam premises only qualified persons would be permitted to recite the Vedas and mantras in Sanskrit, and no outsider or recitation in any other language would be entertained. /


So as per Hindu, Armugasamy wants to recite hyms from Thiruchirambalam.

As per Hindu, NO OTHER languages are entertined in Thiruchitrambalam other than Sanskrit.

/ மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... சிற்றம்பலத்தில் திருவாசகம் பாடப்படுவதில்லை என்பது பொய்... பாடுகிறார்கள்.. ஆடவல்லான் சன்னதியான சித்சபையில் திருவாசகம் பாடக்கூடாதாம் என்ற வாதம் பொய், பாடுகிறார்கள்... ப்ரச்னை கூத்தனின் கருவறையான சித்சபையில் யாரால் பாட முடியும், யாரால் முடியாது என்பதில் மட்டுமே.../ - முகமூடி.

The New Indian Express மட்டுமே 'சித்'சபை என்று குறிப்பிட்டுள்ளது, அதன் தமிழான தினமணி சிற்றம்பலம் என்று சொல்லியுள்ளது. விகடன் & இந்து வும் சிற்றம்பலம் என்றே சொல்கின்றன.
**** இதன் படி ஆறுமுக சாமி சிற்றம்பலத்தில் இருந்து தான் பாடமுனைந்துள்ளார், நடராசரின் காலுக்கடியில் இருந்தல்ல.
****
முகமூடியின் கூற்றுப்படி சிற்றம்பலத்தில் திருவாசகம் பாடப்படுவதில்லை என்பது பொய், (இந்துவின் படி தமிழுக்கு அங்கு இடமில்லை) ஆனால் எல்லா செய்திகளும் சிற்றம்பலத்தில் பாடதான் தடை போட்டுள்ளார்கள் என்கிறது. அதாவது இங்கு ஆறுமுக சாமி சிற்றம்பலத்தில் தேவாரம் பாடுவது தான் பிரச்சனை.
அப்படியெனில் ஏன் அவரை மட்டும் தடுக்கவேண்டும்?
 



கருத்து சொன்னவர்களுக்கு நன்றி. ஏற்கனவே போதுமான அளவு சொன்னதாக நினைத்த பதில்கள் தவிர்த்து மேல்விளக்கம் அளிக்க அவசியமானது என்று நான் கருதும் விஷயங்களுக்கு திங்கள் அன்று எனது கருத்தை எழுதுகிறேன். கொஞ்சம் வேலை காரணமாக உடனடியாக செய்ய இயலவில்லை.

முத்துக்குமரன் பதிவில் "நான் வலைப்பதிவுகளுக்குப் புதிய அறிமுகம், என்னுடைய முதல் பதிவை அனுமதித்த முகமூடி, என்னுடைய அடுத்த பதிவுகளை வெளியிடவில்லை, நீங்கள் வெளியிடுவீர்களா?" என்று ஆரூரன் குறிப்பிட்டிருந்தார். இதுவரை இந்த பதிவிற்காக வந்த அனைத்து பின்னூட்டங்களையும் வெளியிட்டிருக்கிறேன். எதையும் நிராகரிக்கவோ தணிக்கை செய்யவோ இல்லை. வேறெதுவும் நிலுவையிலும் இல்லை. நன்றி.
 



//
இதை பெரிய பிரச்சினையாக சில சக்திகள் முயல்கின்றன. இங்கு தமிழ் என்பது ஒரு சால்ஜாப்பு.
உண்மையான நோக்கம் கோயில் நிர்வாகத்தினை கைப்பற்ற முயலுதல். கலைஞர் ஆட்சியில் இது நிறைவேறாதா என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள்.
//

ரவி ஸ்ரீனிவாஸ்,

நீங்கள் சொல்வதுபோல் முன்னமே நான் யூகித்து விட்டிருந்தேன்..

உங்கள் கணிப்பு சரியே.
 



முகமூடி,

சிறந்த பதிவு. உங்கள் கருத்துகளுடன் பெரும்பாலும் உடன்படுகிறேன். இது பற்றிய என்னுடைய பதிவின் சுட்டி:

http://oagaisblog.blogspot.com/2006/07/blog-post_21.html
 



நம்ம Aaruran சொல்றது என்னன்னா:

//** எந்த ஒரு பார்ப்பனத் தலைவரும்,ராஜகோபாலாச்சாரியோ. சோ ராமசாமியோ, வெங்கட்ராமனோ, சங்கராச்சாரிகளோ, தம்மைத் தமிழனாக, அல்லது திராவிடனாக எப்பொழுதாவது, வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்களா? முடிந்தால் நிரூபியுங்கள் பார்க்கலாம் *//

வா வே சு அய்யர் ஒரு தமிழன். நிரூபித்து விட்டேன். நீ ஒரு தமிழச்சி மகனாக இருந்தால், இணையத்தில் மன்னிப்பு கேள்...
 



//சுவாமி அருளியது:
இந்த பிரச்சினை(?) பற்றிய பதிவுகளில் நான் படித்தவைகளில் முகமூடியின் பதிவுதான் objective ஆக, சாந்தமாக, உணர்ச்சிவசப்படாமல் பிரச்சினைய அலசுகிறது. இத பாராட்டும் மனது வேண்டாம். உங்கள் கருத்துக்களை அதே போல் எதிர் வைத்து விவாதத்தை மேலும் சிறக்கச் செய்ய வேண்டாம். ஆனால் எள்ளல் செய்து, நல்ல விவாதத்தை simplistic ஆக reduce செய்ய வேண்டாமே. கருத்து இண்மை, நேரமிண்மை, மற்றும் பின்புலம் இல்லாததால் ஒதுங்கி இருந்து வாசித்து வந்தேன். ஆனால் உங்கள் பதிலை படித்த உடன் தாங்க முடியவில்லை. இகலப்பை இறக்கி, ப்ளாகர் account திறந்து, தட்டு தடுமாறி எழுதி முடிதுவிட்டேன். தவறாக எண்ண வேண்டாம்.
சிறப்பான பதிவிற்கும், அதன் பின்னால் உள்ள உழைப்பிற்கும் முகமூடிக்கு எனது நன்றி.

சுவாமி
இருப்பிடம் : CA
சாதி: பிள்ளை
மதம்: இந்து
இந்த மூன்றும் தானே நம் எல்லோரையும் இன்று வலைப்பதிவுகளில் வகைப்படுத்துகிறது. நான் எங்கே?
//

அடேங்கப்பா, என்ன ஒரு அறச்சீற்றம்!!

மொழியுரிமைப் போராட்டத்தை, ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தை, அடித்தளத்து சாதியினரின் பிரதினிதிகளான இராமதஸை, திருமாவளவனைப் பற்றி "எள்ளல் செய்து, நல்ல விவாதத்தை சிம்ப்லிச்டிc ஆக ரெடுcஎ செய்"வதற்காகவே ஆரம்பிக்கப் பட்ட இத்தளத்தில் வந்து இதுவரை இப்படியெல்லாம் சொல்லாமல் இப்பொழுது மற்றவர்கள் அதே தொனியில் எதிர்வினை செய்வதற்கு சுவாமிக்குக் கோபம் பொத்துக் கொண்டு வருவதற்கு சுவாமியின் வேளாள-பார்ப்பனியத்தனமும் சாதிப்புத்தியும் தவிர வேறு என்ன இருக்க முடியும்?

எல்லாவிதப் போராட்டங்களிலும், அரசியல் இயக்கங்களிலும் கொள்கையடிப்படையிலான வெளிப்பாடுகளும், வழிமுறைகளும் இருக்கும். மக்கள் கவனத்தைப் பெற சர்க்கஸ் செய்யும் கவர்ச்சி அரசியலும் இருக்கும். (0) பின்னதை (சர்க்கஸை) நையாண்டி செய்வதும் விமர்சனம் செய்வதும் ஜனநாயக அரசியலில் தேவை என நான் கருதுகிறேன். ஏனெனில் அது காலப் போக்கில் முன்னதே இல்லாமல் பின்னது மட்டுமே ஆகிவிடாமல் இருக்க (அதாவ்து கொள்கைப் பிடிப்புள்ள வழிமுறைகள் அல்லாமல் வெறும் சர்க்கஸாக மாறி விடாமல் இருக்க) உதவும். சோ, முகமூடி போன்றவர்கள் அதைச் செய்வதை நான் வரவேற்கிறேன், இரசிக்கிறேன். ஆனால், (1) பின்னதை எள்ளல் செய்வதன் மூலம் முன்னதை நீர்த்துப் போகச் செய்வது நேர்மையற்றது. (2) அதை எல்லா அரசியல் இயக்கங்களின் (சக்திகளின்) மேலும் பிரயோகிக்காமல் அடித்தளத்து வர்க்கத்து மேல் மட்டும் பாவிப்பது பார்ப்பனியத்தனம் - வேளாளத்தனம். (3)அதற்கும் மேல் ஒரு படி போய் தன் வர்க்க அமைப்பின் சர்க்கஸ்களை சப்பை கட்டி அவற்றுக்கு மட்டும் ஆதரவான விளக்கம் கொடுப்பது அயோக்கியத்தனம். சோ போலவே முகமூடியும் '0'-யிருந்து '3'-க்குப் போய் விட்டார் இந்தப் பதிவில்.

முகமூடிகளும், சுவாமிகளும் வாழ்க!!

(பின் குறிப்பு - உங்கள் வர்க்கத்து அமைப்புகளின், அரசியல் கட்சிகளின் சர்க்கஸூக்கு எடுத்துக்காட்டுகள் வேண்டுமானால் நிறைய இருக்கு - சொல்ல ஆரம்பித்தால் இன்று முடியாது. எனக்கு அவற்றைப் பற்றி அக்கறை இல்லை. உங்கள் வர்க்கத்து கட்சிகள் நடத்தி வரும் இனப் படுகொலைகள் தான் எனக்கு முக்கியம். உங்கள் தேசியக்கட்சியான காங்கிரஸ் டெல்லியில் நடத்திய சீக்கிய இனப்படுகொலைகளும், இன்னொரு தேசியக் கட்சியான பாரதீய ஜனதா நடத்திய குஜராத் முஸ்லீம் இனப் படுகொலைகளும், அவற்றின் மூலம் உசுப்பி விடப் படும் பாகிஸ்தான் ஆதரவு முஸ்லீம் பயங்கரவாதிகள் நடத்தும் பொது மக்கள் படுகொலைகளுமே முக்கியம்.)

நன்றி - சொ. சங்கரபாண்டி
 



இதுவரை பின்னூட்டங்களை வெளியிடுவதற்கென்று கொள்கைகள் என்று எதுவும் எனக்கு கிடையாது... திடீரென இன்று இப்படி ஒரு கொள்கையை பின்பற்ற ஆரம்பிப்பது ஏன் என்பது அவ்வளவு முக்கியமில்லை, ஆனால் கொள்கை என்ன என்று பொதுவில் அறிவிக்க வேண்டியது அவசியமாகிறது...

இப்போதிலிருந்து இந்த பதிவில் பின்னூட்ட கொள்கை ::

* வலைப்பதிவாளரின் சாதியை குறிப்பிட்டு பின்னூட்டம் வந்தால் அந்த வரிகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்.

* வலைப்பதிவாளரின் தனிப்பட்ட தகவல்கள் (உ.ம் வேலைபார்க்கும் நிறுவனம், கல்வி பயிலும் நிறுவனம்) குறித்து வரும் தகவல்களும் தணிக்கை செய்யப்படும்.


(எப்போதாவது கவனக்குறைவினால் இது மீறப்படும் பட்சத்தில், உடனடியாக சுப்ரீம் கோர்ட் பதிவுகளில் போய் என் 'யோக்கிதையை' பற்றி கேள்வி எழுப்புபவர்கள் அதோடு மட்டும் நின்றுவிடாமல் அதன் ஒரு நகலை என் பதிவிலும் போடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..)
 




**தணிக்கை செய்யப்பட்டது** Sat, 22 Jul 2006 15:23:48 Anonymous has left a new comment on your post "அரசியல் :: தீஷிதர்கள் Vs தமிழ்":

//எக்குத் தப்பா ஆட்டம் ஆடினா எப்படி? ஆட்டம்னா விதின்னு ஒண்ணு இருக்கு; "பந்தை ஆடுங்க, கூட்டாளி, பந்தாளியை ஆடாதீக!" படிச்சவுகளே, இப்படி ஆடினா, அப்புறம் என்ன சொல்றது? பார்த்துச் செய்ங்க.....இப்படி ஆடுற ஆட்டத்துக்குப் பொதுவாச் சிவப்பு அட்டை கொடுத்திருவாக! [ஆனா நம்ம முகமூடியார், போனாப் போகட்டுமேன்னு விட்டு வச்சிருக்காக போல. ரொம்ப நல்ல referee.].//

என்னலே ரானா கினா அண்ணாச்சி,

சும்மா சலம்புதீரு. உம்ம சாதியை இழுத்ததும் ஆங்கிலத்திலே பீத்துரீரு. தமிழார்வம் அம்புட்டுதானா. (*தணிக்கை - சாதி பற்றிய குறிப்பு *).

எக்குதப்பா ஆட்டம் ஆருலே ஆடுறா. பாப்பானை அடிக்கறதுன்னா பசியோடகூட ஓடிவாறீரே, உம்ம சாதியை அடிக்கறதுன்னா வருவீரானு பாத்தேன். எதிர்பாத்தமாதிரியே பதுங்குதீரே. பந்தாளியை ஆரு ஆடுதாக இங்கே. உம்ம ஸ்டைல்தானே இது ஓய். பாரதியை பாப்பார கிறுக்கன்னு கற்பக விநாயகம் சொன்னப்போ, எடுத்து போட்டு குளிர் காஞ்ச மவராசன்தானே நீரு. உமக்கென்ன யோக்கியதை இருக்கய்யா பந்தாளியை ஆடாதீகன்னு பம்ம. கண்ணாடி வூட்ல இருந்து கல்லெறியறது உம்ம கூட்டம்தானே ஓய். நீரு கொஞ்சி குலாவுற (* தணிக்கை - சில பதிவர்களின் பெயர்கள் *) எல்லோரும் பந்தாளியைதானே அடிக்கிறாக. அப்போ பங்காளி எங்க போயிருந்தீக. ஓடிபோயி ஓடிபோயி கமெண்ட் வுட்டீகளே.

எலே பெரிய மனுசா. நீயெல்லாம் பெரிய மனுசனா. ஒரு குலம் அழியர ஸ்டாடிக்டிக்ஸ் கொடுத்து சந்தோசபடுரீரே. சேடிஸ்ட்டய்யா நீரு. பாரும் இது உமக்கே பொருந்துதே அய்யா. தமிழ்நாட்டுல ஒருகாலத்துல மொழிவெறியங்க அட்டகாசம் பண்ணாக. இன்னைக்கு உன்ன மாதிரி ஒன்னு ரெண்டு லூசர்ஸ் பொழப்பத்துபோயி உளரிட்டு இருக்காக. ஆரியமும் தமிழும் தந்தான் சிவன். இதுல தமிழை ஆரியத்துக்கெதிரா திருப்பின பாவத்துக்குதான் மொழிவெறியர் கூட்டம் குறைஞ்சு அழிஞ்சு போச்சா அண்ணாச்சி.

பாப்பானைவிட மோசமா செட்டிநாட்டுல ஆண்டான் அடிமை இருக்குதே. அதுபத்தி எங்கயாவது எழுதியிருக்கீரா. இன்னைக்கும் செட்டிநாட்டுல ராசா, ராணி, இளவரசன், இளவரசின்னு பட்டம் வெச்சிட்டு ஒரு கும்பல் ஏச்சி பொழைக்குதே. அரண்மனைல கைகட்டி வாய்பொத்தி வேல பாக்குறவக எத்தனை பேரு தெரியுமா. எதிர்த்து என்ன புரட்சிலே பண்ணி கிழிச்சீரு நீரு. மொதல்ல உம்மதை கழுவிட்டு அப்புறம் ஊரை கழுவ வாரும். (* தணிக்கை - வேலை பார்க்கும் நிறுவனம் பற்றிய குறிப்பு *). பேச வந்துட்டாரு பெரிய மனுஷன். ஆத்துல போறதை விட்டுட்டு காவாயில் போறதை பத்தி கவலபடுகிறாரு.

வயசான காலத்துல டென்சன் ஆகாதீரு. ஆச்சி கவல படும்.

அன்புடன்,
முனா கானா லேனா சுனா
 



வாங்க சங்கரபாண்டி, அவ்வை முருகனை நோக்கி பாடிய மாதிரி நீங்க என்னை நோக்கி ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப் படுத்தி பாடுவது உங்களுக்கு புளகாங்கிதமா இருந்திருக்கும்.. எனக்கென்னவோ கூச்சமாத்தான் இருக்கு. (அவ்வையும் முருகனும் தமிழ் சம்பந்தப்பட்ட ஆளுங்கதானே... அவங்களுக்கு இன்னும் வட இந்திய roots எதுவும் கண்டுபிடிக்கலையே? ஏன் கேக்கிறேன்னா, அப்படி எதுவும் இருந்தா உதாரணத்துலயே இவனின் ஆரிய தொடர்பு தெரியுதேன்னு நீங்க அடுத்த ரவுண்ட ஆரம்பிச்சிடுவீங்களே? என்னவோ போங்க... உங்க வர்க்கம் உங்க வர்க்கம்னு சொல்றீங்க.. சுட்டும்போது பாஜகவையும் சொல்றீங்க, காங்கிரஸையும் சொல்றீங்க... நான் ஆளும் அரசாங்க வர்க்கம்னு சொல்றீங்களா? எத வச்சி? நீங்க எல்லாம் எந்த வர்க்கத்துல வர்றீங்கன்னு தெரியல... சுரண்டப்படும் தொழிலாளர் வர்க்கமா? எத வச்சி? இடதுசாரி கொள்கைகளை இணையத்தில் ப்ளாக் வைத்து பரப்புகிறேன்னு எல்லாம் கிச்சுகிச்சு மூட்டிடாதீங்க... என்னை பார்ப்பன ஆரிய வர்க்கம்னு சொல்றீங்களா, எத வச்சி... என் கருத்த வச்சின்னா அப்ப என் கருத்த எதிர்க்கிற உங்கள் என்ன வர்க்கம்னு சொல்றது... திராவிட தலித் வர்க்கம்னா.. அது திராவிட தலித் வர்க்கத்திற்கு செய்யும் மிகப்பெரிய கேவலம்.

நீங்கள்லாம் "ஆழ்சிந்தனை வட்டம்" கோஷ்டின்னு வெளியில பேசிக்கிறாங்க... ஆனா, நீங்க என்னடான்னா நேத்திக்கி ஹைஸ்கூல் முடிச்சி இன்னிக்கி ப்ளாக் ஓப்பன் பண்ண இளவட்டம் மாதிரி, பார்ப்பனருக்கு ஆதரவாக எழுதியிருப்பதாக "நமக்கு" தோன்றினால் அப்படி எழுதியவனும் பார்ப்பான், பார்ப்பனருக்கு எதிராக கருத்து சொல்றவனெல்லாம் நம்ம ஆளு எனும் ஒன்றாம் வாய்ப்பாட்டையே படிச்சிகிட்டு இருக்கீங்க... இந்த பதிவோட சாரம் உங்களுக்கு புரியாது.. ஒருவேளை கார்த்திக்ராமாஸ் மாதிரி நாகரீகமான மொழியில "சிதம்பரம் விவகாரத்தில் கருவறை நுழைவு என்று வெளிப்படையாக ஆண்மை காண்பிக்காமல், ஆறுமுகச்சாமியை முன்புலமாக கொண்டு திக, பாமக, விசி, அதிமுக, கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த தெருப்பொறுக்கிகள் வழக்கம் போல தமிழை வைத்து விபச்சாரம் செய்கிறார்கள்" அப்படீன்னு சொல்லியிருந்தா ஒருவேளை உங்களுக்கு சரியா புரிஞ்சிருக்குமோ என்னவோ...

// மொழியுரிமைப் போராட்டத்தை, ஈழத்தமிழர் உரிமைப் போராட்டத்தை, அடித்தளத்து சாதியினரின் பிரதினிதிகளான இராமதஸை, திருமாவளவனைப் பற்றி "எள்ளல் செய்து, நல்ல விவாதத்தை சிம்ப்லிச்டு ஆக ரெடுயூசு செய்"வதற்காகவே ஆரம்பிக்கப் பட்ட இத்தளத்தில் வந்து //

பக்கத்துல இருக்கிற குப்பத்தில ஒரு தாதா உண்டு. பணக்காரங்கள கொள்ளையடிச்சி தான் தின்னது போக குப்பத்து ஜனங்களுக்கும் அள்ளி அள்ளித்தரும் வள்ளல் அவர்... குப்பத்து ஜனங்கள பொறுத்த வரைக்கும் மகான்... அவருக்கு அப்பப்போ மூடு கிளம்பும்போது சில பல பெண்களை வன்புணர்ச்சி செய்வார்... அதை எவனாவது கண்டிச்சா, அடப்பாவி எவ்ளோ நல்லது செஞ்சிருக்காரு, அவரு செய்யிற 'சின்ன சின்ன' தப்புங்கள பெரிசு பண்ணறானே என்று கூச்சல் போடும் "அப்பாவி"க்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? என் பதிவுகளில் ராமதாஸ் அல்லது திருமாவின் ஈழத்தமிழர் உரிமை போராட்டத்தை கிண்டல் செய்ததாக உங்களால் சுட்ட முடியுமா? இவர்களின் மொழியுரிமை போராட்டம் - அது மொழியுரிமை என்ற பெயரில் இவர்கள் நடத்தும் துக்ளக்தன கோமாளித்தனம்.. இவர்கள் அடித்தளத்து சாதிகளின் பிரதிநிதிகள் (என்று நீங்கள் நினைத்துக்கொள்வதனால்) இவர்கள் செய்யும் எல்லா அடாவடித்தனங்களையும், பாஸிசத்தையும் ஏற்றுக்கொள்ள முடியாது...

குழலி, இத இத இதத்தான் நானும் சொல்றேன்னு குஷ்பு போராட்டத்தில் என் நிலையையும் இன்றைய சிதம்பர போராட்டத்தில் என் நிலையையும் அமாவாசை அப்துல்காதர் முடிச்சு போட்டு, இதுவரை சிதம்பரம் சம்பந்தமாக வந்திருக்கும் மூன்று நான்கு பதிவுகளோட கதவுகளை தட்டி தட்டி கேட்கிற நீதிதான் நீங்க கேட்பதும்... (குழலியும் நீங்களும் ஒத்த சிந்தனையாளர்கனு சொல்றதால முதல்ல யார் கோவிச்சிக்க போறீங்களோ தெரியல) குழலிக்கு பதில் சொல்லும்போது அதுக்கு விளக்கம் சொல்றேன். முடிஞ்சா நீங்க ஒன்னாம் வாய்ப்பாடு முடிச்சி ரெண்டாம் வாய்ப்பாட்டுக்கு வாங்க.
 



//சுவாமிநாதையரின் தமிழ்ப்பற்றையும் தமிழ்த்தொண்டையும் நான் குறை கூறவில்லை, ஆனால் பணமும், புகழும் கிடைக்குமென்றால் ஆபிரிக்காவில் ஜம்ஜம் தேசத்துக்குப் போய், ஜம்ஜம் மொழியிலும் கவிதையும், கட்டுரையும் எழுதுவார்கள் பிராமணர்கள்//

மற்ற சாதியினர் மட்டும் செய்ய மாட்டார்களாக்கும்?பணமும் புகழும் கிடைத்தால் உலகில் எந்த மனிதனும் எதையும் செய்வான்.
 



//சுவாமிநாதையர், பழைய ஓலைச் சுவடிகளைக் காக்குமுன்பே, யாழ்ப்பாணத்து ஆறுமுகநாவலரும், யாழ்ப்பாணம் தாமோதரம்பிள்ளையும் அந்தப் பணியைத் தொடங்கி விட்டார்கள், அதை சுவாமிநாதையரே ஒத்துக் கொண்டுமுள்ளார், ஆனால் இந்தியாவின் பார்ப்பனப் பத்திரிகைகள் சுவாமிநாதையர் தான் எல்லாம் செய்ததாக யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரையும், தாமோதரம்பிள்ளையையும் இருட்டடிப்புச் செய்து விட்டன.
In this endeavour it has been rightly observed that Arumuka Navalar laid the foundation, C. W. Thamotherampillai raised the walls and U.V.Swaminatha Aiyar built the superstructure."//

தஞ்சை பெரியகோயிலை கட்டியது ராஜராஜன் என்று பார்ப்பனர் கதை கட்டிவிட்டனர்.உண்மையில் அதை கட்டியது தலித் வகுப்பை சேர்ந்த கொத்தனார்களும் சித்தாள்களும் தான்.

ஐயோ..சதி..சதி...
 



//அதிலும் ஒரு விடயத்தை விவாதிக்கும் போது,//

விடயம் என்றால் என்ன?!!!!!!!!!!!!!!!

சரி, அதை விடுங்கள்!

//
ஆனால் பணமும், புகழும் கிடைக்குமென்றால் ஆபிரிக்காவில் ஜம்ஜம் தேசத்துக்குப் போய், ஜம்ஜம் மொழியிலும் கவிதையும், கட்டுரையும் எழுதுவார்கள் பிராமணர்கள், அதற்காக அவருக்கு ஜம்ஜம் மொழியில் அளவு கடந்த பற்று, அவர் தம்மை ஜம்ஜம் மக்களில் ஒருவராகக் கருதுகிறார்கள் என ஜம்ஜம் மக்கள் நினைத்தால், அந்த ஜம்ஜம் மக்களைப் போல் அடிமுட்டாள்கள் வேறு யாருமில்லை.//

அப்போது கடல் கடந்து பொருள் ஈட்டும் பார்ப்பனர் அல்லாத மற்றவர் எல்லாம் என்ன வகையில் சேர்த்தி!???????????

உணர்ச்சிவசப்படாமல் ஒரு நிகழ்வை[விடயத்தை, விஷயத்தை!!] அணுக எப்போதுதான் நாம் உணர்வோமோ?? தெரியவில்லை!!
 



//எந்த இடத்தில் எந்தப் பிராமணர் தம்மைத் திராவிடர்கள் என்று அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர், திராவிடரல்லாதவர்கள் எப்படித் தமிழராக முடியும். எந்த இடத்தில் வ.வே.சு ஐயர் தன்னைத் திராவிடன் அல்லது தமிழன் என்றார் என்பதை நிரூபியுங்கள் மன்னிப்புக் கேட்கிறேன்.//

அதெப்படிங்க்ணா தமிழன் என்று ஒருவர் அடையாளம் காட்டிக்கொள்வது?"நான் தமிழன்,தமிழன்" என்று ரோட்டில் நின்று கத்தணுமா?இல்லை சுத்த தமிழ் அதாரிட்டிகளிடம் சென்று அஞ்சோ பத்தோ லஞ்சத்தை அமுத்தி நான் தமிழன்னு ஜட்டிபிகேட் வாங்கிகிட்டு வரணுமுங்களா அண்ணா?

இல்லை எம்சிஆரு பண்ண மாதிரி குதிரைல உக்காந்துகிட்டு "அச்சம் என்பது மடமையடா,அஞ்சாமை திராவிடர் உடமையடா"ன்னு பாடிகிட்டு போட்டொ எடுத்துட்டா தமிழன்னு முத்திரை குத்திபுடுவீங்களா அண்ணா?

இல்லை கள்ளத்தோணி ஏறி கிருபாகரனோட போட்டோ புடிச்சு கொண்டாந்து காட்டினா தமிழன்னு ஒத்துக்குவீங்களா?

ரேஷன்ல எச் முத்திரை குத்தற மாதிரி டி அப்படின்னு மாட்டுக்கு சூடு போடறமாதிரி எல்லாத்துக்கும் போட்டு தமிழன்னு ஒத்துக்க வெச்சுபுடலாம்.என்ன சொல்றீங்க?
 



தமிழ்நாட்டில் பிறந்து புகழுக்காகவும் நிதிக்காகவும் தெலுங்கில் பாட்டெழுதி தொண்டாற்றிய தியாகய்யர் போலத்தான் உ.வே.சா வின் தமிழ் தொண்டும்.

-வேல்-
 



2000 வருஷம் உழைக்காத ஒரு கும்பல் ..........

பிறப்பால் ஒருவனை தாழ்தவன் என்று சொல்லும் ஒரு மதம்.............

தமிழ்-யை வேசி மொழி என்றும்,,,பெண்களை திண்டதகாதவர்கள் என்றும்.,...

இப்படி
மனிதத்திற்கு எதிரான மதத்தை இன்னும் ஆதரிப்பவர்களை என்ன செய்யலாம்?

முடிவு செய்ய வேண்டும்...

நாடு முழுவதும் அடிமை ஆவதர்குள்
 



//நீங்கள்லாம் "ஆழ்சிந்தனை வட்டம்" கோஷ்டின்னு வெளியில பேசிக்கிறாங்க... //

அதையெல்லாம் நம்பாதீங்க, எனக்குப் பின்னால் அப்படி ஒளிவட்டமெல்லாம் இல்லீங்க, உங்களவுக்குப் படிப்பறிவும், படம் போடற அறிவும் இருந்தா நானும் ஒரு பதிவ ஆரம்பித்து ஜமாய்ச்சிட மாட்டேனா? நம்மகிட்ட இருக்கிற சரக்கெல்லாம் ரண்டு இடுகையில முடிஞ்சிருங்கிறதுதான் மெய். நான் ‘இலக்கியவாதி’யுமில்ல, இலக்கியம் படிக்கிறவனுமில்ல. எனக்கு மனசுக்குப் பட்டத சொல்ற ஒன்னாங்கிளாசுதானுங்க. தைரியமா அடிச்சு ஆடுனீங்கன்னா தடம் தெரியாம காணாமப்போயுடுவேன். ஆனா ஒன்னு, கார்த்திக் இராமாஸ்கிட்ட கேட்க வேண்டியத அவர் பதிவுல போய் அவரையே கேட்டுருங்க. அவர் சொல்றதுல எனக்கு உடன்பாடுன்னா அவருடைய பதிவுல போய் பின்னூட்டம் விடுவேன்.

//என் பதிவுகளில் ராமதாஸ் அல்லது திருமாவின் ஈழத்தமிழர் உரிமை போராட்டத்தை கிண்டல் செய்ததாக உங்களால் சுட்ட முடியுமா? //

நான் அப்படிச் சொல்ல வில்லையே, நீங்க வரிசைய மாத்திப் படிச்சிருக்கீங்க, திரும்பப் படிச்சுப் பாருங்க.

//இவர்களின் மொழியுரிமை போராட்டம் - அது மொழியுரிமை என்ற பெயரில் இவர்கள் நடத்தும் துக்ளக்தன கோமாளித்தனம்.. //

இங்கயும் நான் சொன்னத நீங்க புரிஞ்சுக்கல, அதான் நான் சொன்னேனே, நீங்க அதச் செய்யுங்க, துக்ளக்தனம் கோமாளித்தனத்தெல்லாம் வெளிச்சம் போட்டுக் காட்டுங்க. ஆனால் அவங்க சொல்றதுக்குப் பின்னால் உள்ள நியாயத்தையும் போட்டு அடிக்காதீங்க.

'தமிழ்த்தாயின்' பேர்ல நடக்கிற கோமாளித்தனத்தை மட்டும் சொல்ற உங்களுக்கு 'பாரத மாதா' பேர்ல நடக்கிற ஜல்லியெல்லாம் ஏன் கண்ல படல. நீங்க தூக்கிப் பிடிக்கிற (அல்லது மௌனமாக இருக்கிற) தேசியக் கட்சிகள் காவிரிப் பிரச்னைல வெவ்வேறு மானிலங்கள்ல போடற வெவ்வேறு கோமாளித்தனங்களையும் சுட்டிக் காட்டுனீங்கன்னா உங்க வர்க்கம் பத்தியெல்லாம் எனக்கு குழப்பமா போயுடுமே!

செம்மொழி ஆயிட்டா தேனும் பாலும் ஓடுமான்னு கிண்டலடிக்கிற உங்களுக்கு சமஸ்கிருதம் கம்ப்யூட்டருக்காகவே கடவுள் உருவாக்கின பாஷைன்னு அடிக்கிற ஜல்லியெல்லாம் தெரிய மாட்டேங்கிறது.

திராவிடக்கட்சிகளெல்லாம் அனுப்புற ஆட்டோக்கள பத்தியே நீங்க எப்பவும் எள்ளல் பண்ணுறது கொஞ்சம் அலுப்பாயிருக்கு. அதை முழுக்க விடவேண்டாம். காங்கிரஸ், பிஜேபி நடத்துன/நடத்துற இனப்படுகொலைகளைப் பற்றியும் கொஞ்சம் சொன்னா மாறுதலா இருக்கும்.

'திராவிடம்' பேரால என்னத்த கிழிச்சிட்டாங்க திராவிடக் கட்சிகள்னு கேட்கும் போது யோசிக்க வைக்குது. அதையே 'தேசியம்'கிற பேரால தேசியக் கட்சிகள் என்னத்தக் கிழிச்சிட்டாங்கன்னு கேட்டா/சொன்னா உங்க வர்க்கம் பற்றியெல்லாம் கவலை வராது.

உங்க சமூக நீதி உறுதிமொழியெல்லாம் பாராட்ட வேண்டியதுதான், இந்த அளவுக்கு முன்னேற்றம் நாட்டில நடக்குன்னு பெருமையா இருக்கு. அப்படியே கல்யாணம் கட்டிக்கிறதுக்கு பெண்ணோ, மாப்பிள்ளையோ தேடும் போதும், நம்ம சாதிக்குள்ளேயேதான் வேணும்னு இட ஒதுக்கீடு கேட்டு அடம் பண்ணாம சமூக நீதி சபதம் எடுக்க அழைப்பு விடுத்தீங்கன்னா நாமெல்லாம் ஒரே வர்க்கமாப் போயிடலாம் பாருங்க. இல்ல எங்க பண்பாடு - சாப்பாடு, கலாச்சாரம் - வெங்காயம் இருந்தாதான் எங்க தனியுரிமைப் படி சரியா இருக்கும்னு வசனம் விட்டா, அப்புறம் எங்களுக்கு வேண்டிய நீதிபதி, வங்கிக் கணக்காளரும், வாத்தியாரும் எங்க ஆளாத்தான் இருக்கனும் நாங்களும் தனியுரிமை வசனம்தான் பேச முடியும்.

அப்புறம் இந்தக் கற்பு விவகாரத்துல நீங்கள்லாம் 'லிபரல்'லா நடந்துக்குறதும், பிற்போக்கு-முற்போக்கு-புறம்போக்கு பட்டம் கொடுக்குறதும் கேட்கவே நல்லாயிருக்கு, அந்த லிபரல் பாலிஸி ஏன் சாதிவெறியின் அடையாளங்களான பூணூல், பூஜை, புனஸ்காரங்கள், பெண்ணடிமைத்தனமான திருமண மந்திரங்கள் மேல் பாய மறுக்கிறது. யாராவது ரொம்பக் குடைஞ்சா சிதம்பரம் தீட்சிதர்களின் மூடத்தனத்துக்கு வக்காலத்து வாங்குவது போல் ஏன் புத்தி போறது? அப்புறம் உங்களுக்கும் நீங்க சொன்ன அந்தக் "குப்பத்து தாதா" உதாரணம் பொருத்தமா இருக்குமே!

இருவரும் இப்படி மாத்தி மாத்தி மணிக்கணக்கா அடுக்கிக் கொண்டே போகலாம். நான் சொல்ல வந்தது உங்கள் கிண்டல், கேலி, ஒருவருடைய உருவத்தை, மொழியைப் பற்றிய எள்ளல், கடினமான உழைப்பிற்கிடையே ஒருவரின் கவனத்துக்கு வராமல் நடக்கும் தவறுகளுக்காக அவரை மொத்துவது - இவையெல்லாவற்றுக்கும் ஒரு அளவு வேணும் ஐயா. அதுவும் முகமூடி போட்டுக் கொண்டு செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை? கார்த்திக் சிதம்பரம் தீட்சிதர்களைப் பற்றி 'தெருப்பொறுக்கிகள்' என்று சொன்னது என்னைப் பொறுத்தவரை எல்லை கடந்தது. அதைப் பற்றி உங்களுக்கு வந்திருக்கும் விசனத்தில் ஒரு பங்காவது உங்களால் மன உளைச்சல் அடையும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் எண்ணுவதுண்டா? நான் இதைச் சொன்னவுடனே என்னையும் சேர்த்துத் தாக்க இன்னும் சில முகமூடிகள் வரும். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஏனெனில் அவற்றை யார் அனுப்புவார்கள் என்று தெரியும். இதற்கு மேல் நான் இனி இங்கு பேசப் போவது இல்லை. உங்களைப் போலவே சிலர் இங்கு நையாண்டியாக கேள்வி கேட்டதைக் குறை கூறிய சுவாமிகளுக்குச் சுட்டிக் காட்டவே இங்கு வந்தேன்.

உங்கள் நையாண்டித் திறமையையும், குதர்க்கம் பேசுவதையும் எல்லாத் திசைகளிலும் பாரபட்சமில்லாமல் அளவோடு பயன்படுத்தினால் பிராமணர்களை மட்டுமே ஆபாசமாகத் திட்டி எழுதும் அசிங்க முகமூடிகளும் காணாமல் போகும் என்று நினைக்கிறேன்.

//குழலியும் நீங்களும் ஒத்த சிந்தனையாளர்கனு சொல்றதால முதல்ல யார் கோவிச்சிக்க போறீங்களோ தெரியல//

நானும், குழலியும் ஒத்த சிந்தனையென்ன ஒரே ஆளாகவே இருந்துட்டுப் போறோம். எனக்கு மகிழ்ச்சியே!

நன்றி - சொ. சங்கரபாண்டி
 



தமிழுக்காக தனி நாடு கேட்டு போராடுகிறவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டு அங்கேயே இருக்கையில், உயிருக்கு பயந்து ஓடிப்போனவனெல்லாம் எங்கே போனாலும் தமிழ் என்று சொல்வோம் என்று கூறுவது நகைப்புக்குரியது. அதிலும் ஓடிப் போய் 'refugee' லிஸ்டில் அடைக்கலம் தேடியவர்கள், பார்ப்பனர்கள் வெளிநாடுகளில் 'நேர்மையாக' சென்று பிழைப்பதை குறை கூறுவதை பார்த்து back-side வழியாக சிரிக்க தான் முடிகிறது.
 



//2000 வருஷம் உழைக்காத ஒரு கும்பல் ..........

பிறப்பால் ஒருவனை தாழ்தவன் என்று சொல்லும் ஒரு மதம்.............

தமிழ்-யை வேசி மொழி என்றும்,,,பெண்களை திண்டதகாதவர்கள் என்றும்.,...

இப்படி
மனிதத்திற்கு எதிரான மதத்தை இன்னும் ஆதரிப்பவர்களை என்ன செய்யலாம்?

முடிவு செய்ய வேண்டும்...//

50 வருடமாக நாஜியிசத்துக்கும் கேவலமான இனத்துவேஷத்தை பரப்பிவரும் கும்பல்

ஒரு இனத்தின் மீது ஒட்டுமொத்தமாக பழிசுமத்தும் இனவெறி

சொல்லாத ஒன்றை சொன்னதாக இட்டுக்கட்டி செய்யும் கோயபல்ஸ் புளுகு

இப்படி மனிதத்துக்கு எதிராக நாஜியிசத்தை ஆதரிப்பவர்களை என்ன செய்யலாம்?

யோசிக்க நேரமில்லை.நாடு அடிமையாகிவிடும்
 



//யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலரும், தாமோதரம்பிள்ளையும், பண்டைய ஒலைச்சுவடிகளைக் காப்பதில் முன்னோடியாக இருந்தனர் என்பதை சுவாமிநாதையரே ஒத்துக் கொண்ட பின்னரும், ராஜ ராஜ சோழன் தஞ்சையில் பெருவுடையாருக்குக் கட்டிய கோயிலைப் பார்ப்பான்கள் பிரகதீஸ்வரர் என்று சமஸ்கிருதப்படுத்தி விட்டு, பார்ப்பான்கள் தான் வடக்கிலிருந்து, தமிழகக் கோயில்களில் கழுவிப் பிழைக்க வந்த போது, பிரகதீஸ்வரரை அழைத்து வந்ததாகச் சொன்னால் எப்படியோ அப்படித்தான் முன்னோடியாக இருந்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரை இருட்டடிப்புச் செய்து விட்டு சுவாமிநாதையரை மட்டும் பிராமணர் என்ற காரணத்துக்காகப் பார்ப்பனப் பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியதும்.//

கொத்தனாரும், சித்தாளும், பிரகதீஸ்வரர் கோயிலை கட்டியதில் முன்னோடியாக இருந்தனர் என்பதை ராஜராஜ சோழனே ஒத்துக் கொண்ட பின்னரும், சுவாமிநாதைய்யர் தமிழுக்கு செய்தசேவையை தமிழ்பாஸிஸ்டுகள் பார்ப்பான் செய்தான் என்று ஒதுக்கிவிட்டு, இலங்கை அகதி தான் தெற்கிலிருந்து, தமிழகக் அகதிமுகாம்களில் கழுவிப் பிழைக்க வந்த போது, தமிழை அழைத்து வந்ததாகச் சொன்னால் எப்படியோ அப்படித்தான் முன்னோடியாக இருந்த சுமாமிநாதைய்யரை இருட்டடிப்புச் செய்து விட்டு யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலரை மட்டும் இலங்கை தமிழன் என்ற காரணத்துக்காகப் தமிழ் தீவிரவாத பத்திரிகைகள் புகழ்ந்து தள்ளியதும்.
 



உதாரணத்தை உண்மையாக அப்படியே எடுத்துக் கொண்டார் இந்த நண்பர் SK, ஜம்ஜம் என்ற ஒரு நாடு ஆபிரிக்கவிலுள்ளதா என்பதே எனக்குத் தெரியாது, நான் சொல்ல வ்ருவதெல்லாம், பிராமணர்கள் கடின, தந்திரமான உழைப்பாளிகள், அவர்கள் பணத்துக்காகவும், புகழுக்காகவும் தமிழில் புத்தகம் எழுதினாலோ, திரைப்படம் எடுத்தாலோ, அதைப் பார்த்து விட்டு, ஆகா. அவருக்குத் தான் எவ்வளவு தமிழ்ப்பற்று எனத் தமிழர்கள் கருதினால் தமிழர்களைப் போல் அடிமுட்டாள்கள் வேறெங்கும் கிடையாதென்பது தான் கருத்தாகும்.//

உதாரணத்தை உண்மையாக அப்படியே எடுத்துக் கொண்டார் இந்த நண்பர் ஆரூரான், தமிழீழம் என்ற ஒரு நாடு இலங்கையில் உள்ளதா என்பதே எனக்குத் தெரியாது, நான் சொல்ல வ்ருவதெல்லாம், இலங்கை தமிழர்கள் கடின, தந்திரமான உழைப்பாளிகள், அவர்கள் பணத்துக்காகவும், புகழுக்காகவும் தமிழில் புத்தகம் எழுதினாலோ, திரைப்படம் எடுத்தாலோ, அதைப் பார்த்து விட்டு, ஆகா. அவருக்குத் தான் எவ்வளவு தமிழ்ப்பற்று எனத் தமிழர்கள் கருதினால் தமிழர்களைப் போல் அடிமுட்டாள்கள் வேறெங்கும் கிடையாதென்பது தான் கருத்தாகும்.
 



//அம்பி, தமிழன் என்று அடையாளம் காட்டுவது ரோட்டில் நின்று கத்துவதில்லை, லஞ்சம் கொடுப்பதுமில்லை, உங்களுக்கு லஞ்சம் வாங்கித் தானே பழக்கம், எப்படிக் கொடுப்பீர்கள், அதிருக்கட்டும். சுவாமிநாதையர் புலமை மிக்கவர் தானே, எந்தக் கவிதையிலோ, வெண்பாவிலோ, பாரதியார் மாதிரித் தன்னுடைய தமிழுணர்வை, தான் தமிழன் என்பதைக் கூறியிருக்கிறாரா?
நீங்கள் உண்மையிலே தமிழனாக இருக்க விரும்பினால்,

நீங்கள் எங்களுக்கு எம் சி ஆரு மாதிரிப் பாட்டும் பாடத்தேவையில்லை, தெலுங்குப் பிராமணன் கமலகாசன் மாதிரி ஆட்டம் போட்டுக் காட்டத் தேவையில்லை. தமிழைப் பேசிக் கொண்டே தமிழை இழிவு படுத்தாதீர்கள், உங்களின் தலைவன் காமகேடி தமிழை நீச பாசையெனும் போது வாயை மூடிக் கொண்டு மெளனம் சாதிக்காதீர்கள்.
திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரி "செந்தமிழ்ப்பயனறியாத அந்தக மந்திகளாக" இருக்காதீர்கள்//

அகதி, தமிழன் என்று அடையாளம் காட்டுவது ரோட்டில் நின்று கத்துவதில்லை, லஞ்சம் கொடுப்பதுமில்லை, உங்களுக்கு கள்ளத்தோணி ஏறிவந்து அகதிமுகாமில் பிச்சை எடுத்து பிறகு அடைக்கலம் தந்த நாட்டு தலைவனை குண்டு வைத்து கொல்வது தானே பழக்கம்?, அதிருக்கட்டும். பெரியார் பேச்சு திறமை மிக்கவர் தானே, எந்தக் கவிதையிலோ, வெண்பாவிலோ, பாரதியார் மாதிரித் தன்னுடைய தமிழுணர்வை, தான் தமிழன் என்பதைக் கூறியிருக்கிறாரா?
நீங்கள் உண்மையிலே தமிழனாக இருக்க விரும்பினால்,

நீங்கள் எங்களுக்கு எம் சி ஆரு மாதிரிப் பாட்டும் பாடத்தேவையில்லை, கன்னட நாயக்கன் பெரியார் மாதிரி ஆட்டம் போட்டுக் காட்டத் தேவையில்லை. தமிழைப் பேசிக் கொண்டே தமிழை இழிவு படுத்தாதீர்கள், உங்களின் தலைவன் பெரியார் தமிழை காட்டுமிராண்டி பாசையெனும் போது வாயை மூடிக் கொண்டு மெளனம் சாதிக்காதீர்கள்.
திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரி "செந்தமிழ்ப்பயனறியாத அந்தக மந்திகளாக" இருக்காதீர்கள்
 



'பாரதத்தாயின்' பேர்ல நடக்கிற கோமாளித்தனத்தை மட்டும் சொல்ற உங்களுக்கு 'தமிழ்த்தாயின்' பேர்ல நடக்கிற ஜல்லியெல்லாம் ஏன் கண்ல படல. நீங்க தூக்கிப் பிடிக்கிற (அல்லது மௌனமாக இருக்கிற) 'பிராந்தி'ய கட்சிகளின் கூட்டணிக்கட்சிகளான தேசிய கட்சிகள் காவிரிப் பிரச்னைல வெவ்வேறு மானிலங்கள்ல போடற வெவ்வேறு கோமாளித்தனங்களையும் சுட்டிக் காட்டுனீங்கன்னா உங்க வர்க்கம் பத்தியெல்லாம் எனக்கு குழப்பமா போயுடுமே!

சமஸ்கிருதம் கம்ப்யூட்டருக்காகவே கடவுள் உருவாக்கின பாஷைன்னு கிண்டலடிக்கிற உங்களுக்கு செம்மொழி ஆயிட்டா தேனும் பாலும் ஓடும்னு அடிக்கிற ஜல்லியெல்லாம் தெரிய மாட்டேங்கிறது.

காங்கிரஸ், பிஜேபி நடத்துன/நடத்துற இனப்படுகொலைகளைப் பத்தியே நீங்க எப்பவும் எள்ளல் பண்ணுறது கொஞ்சம் அலுப்பாயிருக்கு. அதை முழுக்க விடவேண்டாம். திராவிடக்கட்சிகளெல்லாம் அனுப்புற ஆட்டோக்கள பற்றியும் கொஞ்சம் சொன்னா மாறுதலா இருக்கும்

'தேசியம்' பேரால என்னத்த கிழிச்சிட்டாங்க தேசியக் கட்சிகள்னு கேட்கும் போது யோசிக்க வைக்குது. அதையே 'திராவிடம்'கிற பேரால திராவிடக் கட்சிகள் என்னத்தக் கிழிச்சிட்டாங்கன்னு கேட்டா/சொன்னா உங்க வர்க்கம் பற்றியெல்லாம் கவலை வராது.

உங்க கல்யாண நீதி உறுதிமொழியெல்லாம் பாராட்ட வேண்டியதுதான், இந்த அளவுக்கு முன்னேற்றம் நாட்டில நடக்குன்னு பெருமையா இருக்கு. அப்படியே தேர்தலில் நிற்க வேட்பாளரோ,வேட்பாளியோ தேடும் போதும், தொகுதியில் மெஜாரிடியா உள்ள நம்ம சாதிக்குள்ளேயேதான் வேணும்னு இட ஒதுக்கீடு கேட்டு அடம் பண்ணாம சமூக நீதி சபதம் எடுக்க அழைப்பு விடுத்தீங்கன்னா நாமெல்லாம் ஒரே வர்க்கமாப் போயிடலாம் பாருங்க. இல்ல எங்க பண்பாடு - சாப்பாடு, கலாச்சாரம் - வெங்காயம் இருந்தாதான் எங்க தனியுரிமைப் படி சரியா இருக்கும்னு வசனம் விட்டா, அப்புறம் எங்களுக்கு வேண்டிய நீதிபதி, வங்கிக் கணக்காளரும், வாத்தியாரும் எங்க ஆளாத்தான் இருக்கனும் நாங்களும் தனியுரிமை வசனம்தான் பேச முடியும்.

அப்புறம் இந்தக் சிதம்பரம் விவகாரத்துல நீங்கள்லாம் 'லிபரல்'லா நடந்துக்குறதும், பிற்போக்கு-முற்போக்கு-புறம்போக்கு பட்டம் கொடுக்குறதும் கேட்கவே நல்லாயிருக்கு, அந்த லிபரல் பாலிஸி ஏன் சாதிவெறியின் அடையாளங்களான கற்பு, கண்ணகி சிலைக்கு பூஜை, புனஸ்காரங்கள், பெண்ணடிமைத்தனமான பொதுசிவில் சட்ட மறுப்பு மேல் பாய மறுக்கிறது. யாராவது ரொம்பக் குடைஞ்சா கற்புக்காவலர்களின் மூடத்தனத்துக்கு வக்காலத்து வாங்குவது போல் ஏன் புத்தி போறது? அப்புறம் உங்களுக்கும் உங்க ஆட்கள் சொன்ன அந்தக் "தெருப்******" உதாரணம் பொருத்தமா இருக்குமே!

இருவரும் இப்படி மாத்தி மாத்தி மணிக்கணக்கா அடுக்கிக் கொண்டே போகலாம். நான் சொல்ல வந்தது உங்கள் கிண்டல், கேலி, ஒருவருடைய உருவத்தை, மொழியைப் பற்றிய எள்ளல், கடினமான உழைப்பிற்கிடையே ஒருவரின் கவனத்துக்கு வராமல் நடக்கும் தவறுகளுக்காக அவரை மொத்துவது - இவையெல்லாவற்றுக்கும் ஒரு அளவு வேணும் ஐயா. அதுவும் முற்போக்கு வேஷம் போட்டுக் கொண்டு செய்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை? பெரியார் தமிழர்களைப்பற்றி 'காட்டுமிராண்டிகள்' என்று சொன்னது என்னைப் பொறுத்தவரை எல்லை கடந்தது. அதைப் பற்றி உங்களுக்கு வந்திருக்கும் விசனத்தில் ஒரு பங்காவது உங்களால் மன உளைச்சல் அடையும் மற்றவர்களைப் பற்றி நீங்கள் எண்ணுவதுண்டா? நான் இதைச் சொன்னவுடனே என்னையும் சேர்த்துத் தாக்க இன்னும் சில ஆட்டோக்கள் வரும். அதைப் பற்றி எனக்குக் கவலை இல்லை. ஏனெனில் அவற்றை யார் அனுப்புவார்கள் என்று தெரியும். இதற்கு மேல் நான் இனி இங்கு பேசப் போவது இல்லை. உங்களைப் போலவே சிலர் இங்கு நையாண்டியாக கேள்வி கேட்டதைக் குறை கூறிய சுவாமிகளுக்குச் சுட்டிக் காட்டவே இங்கு வந்தேன்.

உங்கள் நையாண்டித் திறமையையும், குதர்க்கம் பேசுவதையும் எல்லாத் திசைகளிலும் பாரபட்சமில்லாமல் அளவோடு பயன்படுத்தினால் திராவிடர்களை மட்டுமே ஆபாசமாகத் திட்டி எழுதும் அசிங்கங்களும் காணாமல் போகும் என்று நினைக்கிறேன்.

//முகமூடியும் நீங்களும் ஒத்த சிந்தனையாளர்கனு சொல்றதால முதல்ல யார் கோவிச்சிக்க போறீங்களோ தெரியல//

நானும், முகமூடியும் ஒத்த சிந்தனையென்ன ஒரே ஆளாகவே இருந்துட்டுப் போறோம். எனக்கு மகிழ்ச்சியே!
 



// உங்களுக்கு கள்ளத்தோணி ஏறிவந்து அகதிமுகாமில் பிச்சை எடுத்து பிறகு அடைக்கலம் தந்த நாட்டு தலைவனை குண்டு வைத்து கொல்வது தானே பழக்கம்? // இந்த வாக்கியத்தை எழுதிய அனானிக்கு என் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்... நாளை காலை எங்கோ கிளம்பும் ஒரு சிறு பொறியோ அல்லது இயற்கை மாறுதலோ போதும், நாமும் அகதிமுகாமில் தஞ்சமடைந்து பிச்சையெடுத்து வாழும் ஒரு சூழ்நிலையை உருவாக்க. இன்று ஏதோ ஒரு காரணத்தால் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்பதற்காக சக மனிதர்களை இப்படி பேச வேண்டாம்.
 



//இந்த வாக்கியத்தை எழுதிய அனானிக்கு என் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்... நாளை காலை எங்கோ கிளம்பும் ஒரு சிறு பொறியோ அல்லது இயற்கை மாறுதலோ போதும், நாமும் அகதிமுகாமில் தஞ்சமடைந்து பிச்சையெடுத்து வாழும் ஒரு சூழ்நிலையை உருவாக்க. இன்று ஏதோ ஒரு காரணத்தால் நாம் நல்ல நிலையில் இருக்கிறோம் என்பதற்காக சக மனிதர்களை இப்படி பேச வேண்டாம். /

அவர் பேசியது எவ்வளவு தவறு என்பதை அவர் உணர வேண்டும் என்றுதான் பேசினேன்.வறுமையை இகழ்வது தவறு என்றால் ஜாதியை சுட்டிக்காட்டி 'ஒரு ஜாதி முழுக்க கழுவிப்பிழைக்க வந்தவர்கள்' என்று பேசும்போது அந்த ஜாதிக்காரனுக்கு நெஞ்சில் எந்த மாதிரி விஷம் இறங்கும் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா?

அம்பி என ஜாதி பேர் சொல்லி படித்தவன் என்று சொல்லிக்கொள்ளும் ஒருவர் பேசுகிறார்.ஜாதி வசைகளை அனுமதிக்க மாட்டேன் என்று நேற்று முழக்கம் இட்ட நீங்கள் அதை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்கிறீர்கள்.

அவர் மன்னிப்பு கேட்டு அந்த வார்த்தையை எடுத்தால் நானும் மன்னிப்பு கேட்கிறேன்.அவர் கேட்கவில்லை என்றால் நானும் கேட்கவில்லை.உங்கள் கண்டனம் அவர் பேசிய வார்த்தைகளுக்கும் இருக்கும் என்பது எனக்கு தெரியும் என்பதால் அவரை ஏன் கண்டிக்கவில்லை என கேட்கப்போவதில்லை.

என்/அவர் வார்த்தைகளை எடிட் செய்வதும் செய்யாததும் உங்கள் விருப்பம்.இல்லை பார்ப்பானை மட்டும் எவன் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம் அதற்காக அவர்கள் ஒழுக்கமாக காந்திய வழியில் பதில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் அதுவும் சம்மதமே.
 



என் பதிவில் வெளிவரும் பின்னூட்டங்களில் தணிக்கை பற்றி நான் சொன்னதை தெளிவாக சொல்லவில்லை போல் தெரிகிறது. இப்பதிவுகளில் வெளிவரும் பின்னூட்டங்கள அனைத்தும் அதை எழுதியவருக்கே சொந்தம். எழுதப்படும் கருத்தில் எனக்கு ஒப்புமை இருக்கிறதோ இல்லையோ அவை வெளிவரும். என் பதிவில் மட்டுறுத்தல் என்பது இழிசொற்களை தடுக்கும் பொருட்டே... மட்டுறுத்தல் என்பதை அனைவரும் ஒரு நாளில் ஒரு கொள்கையாக, டர்ம்ஸ் அண்டு கண்டிஷன்ஸ் பிரகாரம் செயல்படுத்துவதற்கு முன்பிருந்தே என் பதிவில் மட்டுறுத்தல் செய்யப்பட்டு வருகிறது... அது எனக்கு தினமும் வந்துகொண்டிருந்த ஆபாச மடல்களை தடுக்கும்பொருட்டே...

// ஜாதி வசைகளை அனுமதிக்க மாட்டேன் என்று நேற்று முழக்கம் இட்ட நீங்கள் அதை கண்ணை மூடிக்கொண்டு அனுமதிக்கிறீர்கள் //

விவாதத்தில் சுட்டப்படும் வலைப்பதிவாளர்களின் ஜாதியோ தனித்தகவலோ குறிப்பிட்டால் மட்டுமே அது தணிக்கை செய்யப்படும் என்று சொன்னேன். ஜாதி பற்றி பேசுவதே தணிக்கை செய்யப்படும் என்று சொல்லவில்லை. அதே நேரத்தில் இது அடுத்த வலைஞருக்கே பொருந்தும்.. என்னை பற்றி பேசும்போது இவனின் இந்த கருத்தால் இவன் இன்ன ஜாதியாகத்தான் இருப்பான் என்று அனலைஸ் செய்து யாரும் என்னை ஜாதி சொல்லி திட்டினால் அவற்றிற்கு எல்லாம் தடை கிடையாது..

// அவர் பேசியது எவ்வளவு தவறு என்பதை அவர் உணர வேண்டும் என்றுதான் பேசினேன் // நீங்கள் இருவரும் பரஸ்பரம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பது எல்லாம் என் நோக்கம் இல்லை.. உங்கள் வழி காந்திய வழியோ உங்கள் வழியோ, நீங்கள் எப்படி பதில் சொல்ல வேண்டும் என்பதும் உங்களின் விருப்பம்.. உங்கள் கருத்து உங்களுடையது.. எனக்கு தோன்றியதை நான் பதிவு செய்தேன்.. அவ்வளவே..
 



//திருஞானசம்பந்தர் சொன்ன மாதிரி "செந்தமிழ்ப்பயனறியாத அந்தக மந்திகளாக" இருக்காதீர்கள்//

இதையே திரும்பத்திரும்பப் பிதற்றும் இந்த 'ஆரூரன்' என்பது இலங்கையில் முளைத்த மிஷிநரிக்குஞ்சு போலிருக்கிறது. சமஸ்கிருதத்தையும், தமிழையும் இருகண்களாகக் கண்ட திருஞானசம்பந்தர் அங்கே, 'செந்தமிழ்ப் பயன் அறிகிலா அந்தகர்' என்று மட்டுமா பாடுகிறார்?
ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அந்தகர்' என்று சமஸ்கிருதம் தெரியாதவனை அல்லவா முதலில் வைத்துத் திட்டுகிறார்?

மானின்நேர்விழி மாதராய்வழு
திக்குமாபெருந் தேவிகேள்
பானல்வாயொரு பாலனீங்கிவன்
என்றுநீபரி வெய்திடேல்
ஆனைமாமலை ஆதியாய
டங்களிற்பல அல்லல்சேர்
ஈனர்கட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

ஆகமத்தொடு மந்திரங்க
ளமைந்தசங்கத பங்கமாப்
பாகதத்தொ டிரைத்துரைத்த
சனங்கள்வெட்குறு பக்கமா
மாகதக்கரி போல்திரிந்து
புரிந்துநின்றுணும் மாசுசேர்
ஆகதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

அத்தகுபொருள் உண்டுமில்லையு
மென்றுநின்றவர்க் கச்சமா
ஒத்தொவ்வாமை மொழிந்துவாதில்
அழிந்தெழுந்த கவிப்பெயர்ச்
சத்திரத்தின் மடிந்தொடிந்து
சனங்கள்வெட்குற நக்கமே
சித்திரர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

சந்துசேனனும் இந்துசேனனுந்
தருமசேனனுங் கருமைசேர்
கந்துசேனனுங் கனகசேனனும்
முதலதாகிய பெயர்கொளா
மந்திபோல்திரிந் தாரியத்தொடு
செந்தமிழ்ப்பயன் அறிகிலா
அந்தகர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

கூட்டினார்கிளி யின்விருத்தம்
உரைத்ததோரொலி யின்தொழிற்
பாட்டுமெய்சொலிப் பக்கமேசெலும்
எக்கர்தங்களைப் பல்லறங்
காட்டியேவரு மாடெலாங்கவர்
கையரைக்கசி வொன்றிலாச்
சேட்டைகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

கனகநந்தியும் புட்பநந்தியும்
பவணநந்தியுங் குமணமா
சுனகநந்தியுங் குனகநந்தியுந்
திவணநந்தியும் மொழிகொளா
அனகநந்தியர் மதுவொழிந்தவ
மேதவம்புரி வோமெனுஞ்
சினகருக்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

பந்தணம்மவை யொன்றிலம்பரி
வொன்றிலம்மென வாசக
மந்தணம்பல பேசிமாசறு
சீர்மையின்றிய நாயமே
அந்தணம்மரு கந்தணம்மதி
புத்தணம்மது சித்தணச்
சிந்தணர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

மேலெனக்கெதி ரில்லையென்ற
அரக்கனார்மிகை செற்றதீப்
போலியைப்பணி யக்கிலாதொரு
பொய்த்தவங்கொடு குண்டிகை
பீலிகைக்கொடு பாயிடுக்கி
நடுக்கியேபிறர் பின்செலுஞ்
சீலிகட்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

பூமகற்கும் அரிக்குமோர்வரு
புண்ணியன்னடி போற்றிலார்
சாமவத்தையி னார்கள்போல்தலை
யைப்பறித்தொரு பொய்த்தவம்
வேமவத்தைசெ லுத்திமெய்ப்பொடி
யட்டிவாய்சக திக்குநேர்
ஆமவர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

தங்களுக்குமச் சாக்கியர்க்குந்
தரிப்பொணாதநற் சேவடி
எங்கள்நாயகன் ஏத்தொழிந்திடுக்
கேமடுத்தொரு பொய்த்தவம்
பொங்குநூல்வழி யன்றியேபுல
வோர்களைப்பழிக் கும்பொலா
அங்கதர்க்கெளி யேனலேன்திரு
ஆலவாயரன் நிற்கவே.

எக்கராம்அமண் கையருக்கெளி
யேனலேன்திரு ஆலவாய்ச்
சொக்கனென்னு ளிருக்கவேதுளங்
கும்முடித்தென்னன் முன்னிவை
தக்கசீர்ப்புக லிக்குமன்தமிழ்
நாதன்ஞானசம் பந்தன்வாய்
ஒக்கவேயுரை செய்தபத்தும்
உரைப்பவர்க்கிடர் இல்லையே.

இது பாண்டியராசனுடைய சுரப்பிணி தீர்ப்பதற்காகத் திருஞான சம்பந்தசுவாமிகள்
எழுந்தருளியிருக்கும்போது பாண்டிமாதேவி யாகிய மங்கையர்க்கரசியார்கண்டு சுவாமிகளுடைய
திருமேனி மிகுந்த பாலியமாயிருக்கின்றதுமன்றித் தனிமையாயுமிருக்கின்றது;
சமணர்களோ சரீரதிடமுள்ளவர்களும் பலருமாயிருக்கின்றார் களென்று உட்பரிவுற்றக்
குறிப்பினைத் திருஞானசம்பந்த சுவாமி கள் திருவுள்ளத்திலுணர்ந்து
கொண்டு அன்னையே அஞ்சவேண்டு வதில்லை யென்று கட்டளையிட்ட பதிகம்.


- கோவைத்தம்பி
 



அகதி மாமாவுக்கு வாதம்பண்ணத் தெரிகிறதோ இல்லையோ, வாதம் பண்ணுவதாக நினைத்துக் கொண்டு கோமாளித்தனம் பண்ண மட்டும் தெரிகிறது. உங்களைச் சொல்லிக் குற்றமில்லை. நீங்கள் அகதிகளாக ஒன்றுமில்லாமல் ஓடிவந்து, மண்டபம் அகதிமுகாமில் வரிசையில் நின்று ரேஷனில் கஞ்சி வாங்கி தின்றபோதும்,
பாம்புக்குப் பாலூற்றினாலும் அது ஒரு நாளுக்குக் கடிக்குமெனத் தெரிந்திருந்தும், அகதிகளை இறக்குமதி செய்து குடியேற்றுகிறோம் அல்லவா அதற்கு எங்களுக்குச் செருப்பால் அடிக்க வேண்டும். எங்களின் அகதிமுகாம்களில் பல்லை இழித்துக் கொண்டு அகதி மானியம் வாங்கும் போது மட்டும் நாங்கள் உங்களுக்கு வாழ்வு தந்தவர்கள் என்பது ஐயனுக்குத் தெரியாதோ?

அகதிக் கூத்தாடிகள் அகதிக் கூத்தாடிகளை கூட்டிக் கொண்டு வந்து அகதி மானியத்துக்காக எங்களுக்கு முன்னால், ரூபாய் பிச்சைக்காக ஆடும் போது, நாங்கள் போடும் ரூபாய் இந்திய ரூபாய் என்பது தெரியாதோ அல்லது அகதிகளுக்கு காசால் அடித்தால் அகதிக்காசெல்லாம் நல்ல காசாகத் தெரியும் போலிருக்கிறது. இவர்களைக் காசாலடித்தால் , யாரும் யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல,வன்னியில் கூடப் பாடலாம் இல்லையா?

தெலுங்குப் பிராமணன் கமலகாசன், சுகாசினி, மணிரத்தினம் மூவரும் கனடாவுக்கு நீங்கள் ஜொள் ஒழுக்கி கூப்பிட்டதால் வந்த போது, அவர்களின் டப்பாங்கூத்துக்களுக்கு ஏற்பாடு செய்து காசு சம்பாதிக்க துடித்த இலங்கை அகதி சங்கத்தினர் அந்நிகழ்ச்சி அகதிகளின் ஆதரவைப் பெறுவதற்காகப் பிரபாகரனை புகழோ, புகழ் என்று புகழ்ந்து தள்ளுங்கள் என கமலஹாசனின் காலில் விழுந்து கெஞ்சும்போதும் போது மட்டும். இந்தியதமிழர்களின் முதுகில் குத்திய உங்கள் தலைவனுக்குத் தண்டனை கொடுக்கப்போவது யாரென்பதும், நாங்கள் கொடுத்த ரூபாய், அகதி மானியம் என்பதும், கமலகாசன், சுகாசினி போன்ற தெலுங்குப் பார்ப்பனர்களை வரச்சொல்லி கெஞ்சிய அகதிகளுக்குத் தெரியாதோ?

விசு என்ற பிராமணன், ஈழத்தமிழர்களுக்குக் கூத்துக்காட்டிப் பணம் சம்பாதிக்க அந்த அகதிகளின் சங்கத்தினர் கூப்பிட்டதால் வந்த வேளையிலாவது, தனது தமிழ்பாசிச எதிர்ப்பு ஆண்மைத்தனத்தை விலைபேசி விற்க விரும்பாமலோ அல்லது ஈழத்தமிழர்களுக்கு இந்தியத் தமிழர்களுக்குப் போல வெட்கம்,மானம்,சூடு,சுரணை,ரோஷம் வரவைக்கலாம் என நினைத்து, பிரபாகரனையும், தமிழீழத்தையும் பற்றி வாயைக் கொடுத்து, அதனால் அகதி சங்கத்தினர் உங்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டு, கூத்தாடியவனுக்கு காசு கூட கொடுக்காது ஓசியில் கூத்து பார்த்த மகிழ்ச்சியில் கனடாவை விட்டுத் துரத்தியது ஈழத்தமிழர்களென்பது அகதி மாமாவுக்குத் தெரியுமோ? அதை விடக் கேவலம் என்னவென்றால், கனடாப் பொலீஸ், இந்த மாதிரி தீவிரவாதிகளிடமிருந்து விசுவுக்குப் பாதுகாப்புத் தரமுடியாதெனக் கூறி உடனடியாக நாட்டை விட்டுப் போகச் சொன்னது மட்டுமல்ல, அவரைக் பிரதமர் மாதிரி விமானநிலையம் வரை பாதுகாப்பாய் அழைத்துப் போய் அவர் நாட்டை விட்டுப் போவதை உறுதி செய்தது தான், இலங்கைத் தமிழ் அகதிகளுக்குக் கூத்துக்காட்டிப் பணம் பண்ண வந்த பார்ப்பான விசு, கூத்தாடிக்கு கூட காசு தர வக்கிலாத கும்பலால் வந்த காசும் எடுக்காமல் நட்டப்பட்டுப் போன கதை தான் இது.

என்னுடைய உடலில் ஒடுவது சுத்த தமிழ் இரத்தம், எந்தப் அகதியும் நெஞ்சைத் தொட்டு இதைச் சொல்லட்டும் பார்க்கலாம்,
அமிர்தலிங்கத்துக்கும் பிராமணருக்கும் எந்தத் தொடர்புமில்லை, அவரது தேவை தமிழகத்தில் தேவைப்படவுமில்லை, அவர் இறந்து இத்தனை ஆண்டுகளின் பின்பும், அகதிகள் அவர் மேல் கொண்டுள்ள காழ்ப்புணர்வைப் பார்க்கும் போது, அவர் எந்தளவுக்கு, உங்களுக்குச் சிம்ம சொப்பனமாக இருந்துள்ளார் என்பது தெரிகிறது.

அமிர்தலிங்கத்தில் எனக்கு எந்த விதமான அபிமானமோ, அக்கறையும் இருந்ததில்லை, இப்பொழுதும் அகதிகள் வரிந்து கட்டிக் கொண்டு அவரை வசை பாடும்போது, அந்த மனுசனில் தனி மரியாதையே ஏற்படுகிறது, அமிர்தலிங்கத்தை தமிழனென்று நான் கருதவில்லை ஆனால் அவர் தமிழர்களில் நலிந்தவர்களைத் தூக்கி நிறுத்த தன் வாழ்நாளைச் செலவழித்துள்ளார், இன்றும் தமிழரான அமிர்தலிங்கம் வாழ்ந்த வீட்டை தீட்டுப்பட்டதாகப் பூட்டி வைத்திருக்கிறார்கள் வைத்திருக்கிறார்கள் இலங்கை அகதிகள், ஆனால் அதே இலங்கையில் சட்டசபை உறுப்பினராகத் தாழ்த்தப்பட்ட மக்களின் கட்சியான தொண்டமான் காங்கிரஸ் இருக்கிறது, அது தான் மலையகத்தமிழரின் மகிமை, அமிர்தலிங்கம் இல்லாது விட்டால் அது நடந்திருக்காது, தாழ்த்தப்பட்ட தமிழர்களுக்கு விடிவு கிடைத்திருக்காது, அதற்காகவாவது அமிர்தலிங்கத்துக்கு ஒவ்வொரு தமிழர்களும் நன்றிக்கடன் பட்டிருக்கிறார்கள்.

நலிந்த தமிழர்களின் நலனுக்காக தன் வாழ்நாளைஅர்ப்பணித்த அமிர்தலிங்கம், அகதிகளைப் பழித்தாலும், அது தாய் தன்குழந்தைகளை "தீவிரவாத பயங்கரவாதியே" என்று அழைப்பதைப் போன்றது தான், அந்தத் தாய் தன்னுடைய மகனை தீவிரவாதி என்று கருதவில்லை, உரிமையுடன் கண்டிக்கிறார் அவ்வளவு தான், அந்தக் கருத்தில் தான் அமிர்தலிங்கமும் சொன்னார், கோழி மிதித்துக் குஞ்சு சாவதில்லை என்பது அகதி மாமாவுக்குத் தெரியாதா போலிருக்கிறது? மேலும், அமிர்தலிங்கம் காட்டுமிராண்டிப் பசங்களென்றது அகதிகளின் காட்டுமிராண்டித்தனத்தை காட்ட, அகதிகள் அவரை கொலை செய்தது, தீட்டுப்பட்டு விடுமென்று, அத்தகைய தீவிரவாதத்தை, துவேசத்தை , அத்தகைய கொழுப்பை இந்தியாவில் யாரும் காட்ட முடியாது . காட்ட விட மாட்டார்கள், அது தான் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்குமுள்ள வேறுபாடு.

"அகப்பையில் வந்தால் தான் சட்டியில் ஏதாவது இருக்கும் என்று பொருள்" ஆனாலும் நான் கிளிப்பிள்ளை மாதிரி ஒப்பிப்பதையே சொல்லிக்கொண்டிராமல் உருப்படியாக ஏதாவது பதிலெழுத முயற்சியுங்கோ அகதி மாமா அவர்களே.

(அகதிகள் சாதியை இழிவுபடுத்தும் சொல்லல்ல, பாரதியார் கூட அந்த வார்த்தையைப் பாவித்திருக்கிறார். பாருங்கள் "தமிழ்மண்ணில் பிறந்த பார்ப்பனனுகொரு நீதி, தண்டச்சோறுண்ணும் அகதிக்கு வேறொரு நீதி சாத்திரம் சொல்லிடுமாயின், அது சாத்திரமன்று சதியென்று கண்டேன்" என்கிறார் பாரதியார்.)
 



திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.

If you are talking about Kaundiya
Gothra you are wrong.There are
many iyers/iyengars with that
Gothra.
No gothra becomes extinct
with the death of an individual
or a family.Please understand
this.
 



//திருஞான் சம்பந்தரின் தமிழ்ப்பற்றால் அவரை பதினாறு வய்தில் பார்ப்பனர்களால் உயிரோடெரிக்கப்பட்டார். //

அட அப்டிப் போடுங்க! பூனைக்குட்டி கடைசில வெளிய வந்துவிட்டது. ஞானசம்பந்தர் எரிக்கப்பட்டார் என்று எந்தச் சைவனும் கற்பனை கூட செய்ய மாட்டான். அப்படி அபாண்டமாய்ச் சொல்வது, பாம்பு கடித்து எப்போதோ மாண்ட ஒரு பெண்ணை, சாம்பலை வைத்து உயிருடன் எழுப்பிய அந்த தெய்வக்குழந்தையின் பெருமைக்கே இழுக்கு. அப்படி எங்குமே சொல்லப்படவில்லை. இது ஒரே அடியில் சைவத்தின் வேரையே வெட்டப் பார்க்கும் பொய்வீச்சு. சில வெளிநாட்டில் துட்டுவாங்கும் மதவெறிநாய்கள் இப்படித்தான் திரிக்கும். அவர்போலவே நீரும் சைவரும் அல்லர், பக்தரும் அல்லர். புரட்டர். உம் பின்னணியில் இருக்கும் சக்திகளும் தெரிந்தவைதான்.

//தமிழ்மொழி வழிபாட்டை எதிர்த்த பிராமணர்களை 'செந்தமிழ்ப் பயன் அறியாத மந்திகள்" எனக் கடுமையாகக் கண்டிக்கவும் செய்தார். //

My dear missionary boy, you seem to be very poor in homework. மேலே முழுப்பதிகமும் இருக்கிறது. அவர் யாரைச் சொல்கிறார் என்று விளங்கவில்லையா? ஆரியத்தொடு செந்தமிழ்ப்பயன் அறிகிலா அந்தகர் என்று திட்டுவது சமணர்களை, பிராமணர்களை இல்லை.

//திருஞானசம்பந்தர் பிறந்ததாகச் சொல்லப்படும் கவுணிய கோத்திரம் இன்று தமிழ்நாட்டிலோ அல்லது வேறெங்கிலுமோ இல்லை! இது அவரது சந்ததி பூண்டோடு அறுக்கப்பட்டதைக் காட்டுகிறது.//

என்னய்யா இது! பலபேர் இப்படி ஒரே மாதிரி பாடம் ஒப்பிக்கிறீர்கள்! யார் எடுத்த ட்யூசன் இது? அதுவும் தப்புத்தப்பாய்! kaundinya gotra என்று வலையில் துழாவிப் பாரும். எண்ணி மாளாது. இன்னும் எத்தனை பொய்களை அடுக்கப் போகிறீர்கள் பார்க்கலாம்.

- வன்றொண்டன்
 



//சாதி வெறி பிடித்த ஆதி சங்கரர் சம்பந்தரை திராவிட சிசு என அழைத்தார். அதன் பொருள் ஞானசம்பந்தர் சூத்திரன் என்பதாகும். //

ஹஹ்ஹஹாஹா!
சிசு என்றால் சூத்திரனா! நல்ல ஜோக்!
கேக்கறவன் கேணையன் எவனாவது இருந்தா இங்கேயும் படித்துக் கொள்ளட்டும்.
 



யாருங்க இந்த மன்னார்குடி ராஜகோபால தீட்சிதர்?யாரோ ஒருவர் ஏதோ சொன்னா எல்லா பிராமணரும் அப்படின்னு ஆயிடுமா?கருணா மோசம் என்பதால் எல்லா கிழக்கு மாவட்ட தமிழரும் மோசம் என்றாகிவிடுமா?

ஞானசம்பந்தன்,மாணிக்கவாசகர் பேர் எல்லாம் ஒல்ட் பேஷன் ஆயிடுச்சு.நெடுஞ்சேரலாதன்,குந்தவைபிராட்டின்னு கூடத்தான் யாரும் பேர் வைத்துக்கொள்வதில்லை.சுந்தர்ன்னு நிறைய பிராமணர்கள் இருக்காங்க.சுந்தரர்ன்னு நீங்க வேணா 'ர்' விகுதி சேத்து மரியாதையா கூப்பிடுங்க.

பாரதியார் மட்டுமில்லை சுப்ரமணிய சிவா செத்தப்ப 10 பேர் கூட போகலை.அப்பல்லாம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு பயந்து போலிஸ் கண்காணிக்குமோன்னு யாரும் தியாகிக செத்தா சுடுகாட்டுக்கோ,இல்லை அவங்க வீட்டுக்கோ போகமாட்டாங்க.வ.வு.சிதம்பரம் பிள்ளை செக்கிழுத்து ஜெயிலிலிருந்து வந்தபோது 7 பேர் தான் வரவேற்க போனாங்களாம்.உடனே பிள்ளைமார் சமூகம் மேல குற்றம் சாட்டுவீங்களா?

ஜோதியில் கலந்தவர்கள் எல்லாரும் எரித்து கொல்லப்பட்டார்களா?ஏங்க இப்படி ஜோக் அடிக்கறீங்க.ராமர் கூட ஜோதிவடிவா தான் விண்ணுலகம் போனாருன்னு வரலாறு இருக்கு.அவரைகூட பார்ப்பனர்கள் எரிச்சு கொன்னாங்களா?

அட போங்க சார்.

கவுடிண்ய கோத்திரமே கிடையாதா?சிரிப்பு மூட்டாதீங்க சார்.

திராவிட சிசுன்னா சூத்திரனா?ராகுல் திராவிட ஐயர் அப்ப சூத்திரனா?என்ன சார் இது?கேக்கறவன் கே.பு என்றால் எருமை ஏரோப்ளேன் ஓட்டும் என்பீர்கள் போலிருக்கு

(கே.பு என்றால் கேன புண்ணாக்கு என அர்த்தம்)
 



முகமூடி,
அனானிமசின் கே.பு மாதிரியான பின்னூட்டங்களை தவிர்த்திருக்க வேண்டாமா? உங்கள் சுதந்திரம்தான், ஆனால், முழு பதிவின் மதிப்பை இம்மாதிரி பின்னூட்டங்கள் குறைக்கிறது. நேரடியாக சொன்னால் என்ன, abbreviaion னில் சொன்னால் என்ன, abbreviation சொல்லி அதற்கு அறிவாளியாய் அர்த்தம் சொன்னால் என்ன, எல்லாம் ஒன்றுதான்.
Is the last word on this topic out yet?
 



http://mugamoodi.blogspot.com/2006/07/vs.html

இல்லைங்கண்ணா.. இதெல்லாம் கிரிஸ்துவ மிஷனரியில ஆரம்ப பாடம். இதுமாதிரி கண்டதையும் கட்டுடைச்சி கட்டுடைச்சி, பிள்ளையார் துதிக்கை வரைக்கும் வந்திருக்கி.

சும்மா இதே பிரச்சாரத்தை திருப்பிப்போட்டு, தொங்கறாரே இயேசு கிரிஸ்துன்னு ஆரம்பிச்சி அவர் தொங்கறதுக்கு ஒரு பாலியற் காரணம் கண்டுபிடிச்சி நேரு பல்கலைக்கழகத்தில பிஹெச்டி போட்டு உலகம் பூரா கலர் பேப்பர்ல பிரிண்டு அடிச்சி ஆதாரப்பூர்வமாக்கணும். சரியாப்போயிடும். மூஞ்சி பேஸ்தடிச்சிறும்.

ஆனா நம்ம போலி திராவிட சிசுக்கள் விடாது. ஆஹா எப்படி சிறுபான்மையை சொல்லபோச்சின்னு கிரிஸ்துவத்துக்குத்தானே நம்ம தலித்துகளையெல்லாம் துரத்திக்கிட்டிருக்கோம். இப்படிப்போட்டு ஒடக்கிறானேன்னு பாஞ்சி வந்துரும்..
 



/உண்மை, கற்பனை பண்ணக் கூடமுடியாத கொடுமை, பிராமணராகப் பிறந்து தமிழில் பற்று வைத்த ஒரே காரணத்துக்காக பதினாறு வயதில் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமை./

இதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா இல்லை சும்மா அடிச்சு விடுவதா?உண்மை,உண்மைன்னு இத்தனை உறுதியா சொல்லுகிறீரே அதனால் கேட்டேன்.

/ஆத்திரமடைந்த பார்ப்பான்கள் அவரை அக்கிரகாரத்திலிருந்து வெளியேற்றி, அடுத்த வேளைக்கு உணவில்லாமல் நலிந்த பாரதியாரைத் திருவல்லிக்கேணிக் கோயில் யானையை மோதவிட்டுக் கொன்றார்களோ அதே போல் தான், ஞானசம்பந்தரின் திருமணம் முடிந்ததும், திருவெண்ணெய் நல்லூர்க்கோயிலுக்குள் நுழைந்த் அவரையும், அவரது குடும்பத்தினரையும், சம்பந்தர் தமிழைப் போற்றித் தன்னைத் தமிழனாக நினைத்ததால் உயிரோடு கொளுத்தி விட்டு சோதியில் புகுந்ததாகக் கதை விட்டார்கள்./

இந்த கப்சாக்கெல்லாம் ஆதாரம் இருக்கா இல்லை சும்மா வெறும் கையிலேயே "உண்மை,உண்மை"ன்னுமுழம் போடப்போகிறீரா?1000 வருஷத்துக்கு முந்தி நடந்தது உண்மை,உண்மைன்னு முழங்கறீரு.எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்லுறீரு?சரி இந்த பாரதியாரை யானையை விட்டு பார்ப்பாங்கள் கொன்ன கதையை படிச்சுட்டு சிரிப்பே நிக்க மாட்டேன் எங்கிறது.இதுக்கும் ஏதாச்சும் ஆதாரம் உண்டா,இல்லையா?

இலங்கையின் சுப்பிரமணியசாமி நீரா?

/ஆனால் திராவிடன் என்றால் சூத்திரன் தான் நம்பவிட்டால், காஞ்சி காமகேடியிடம் கேளுமையா விளக்கமாகச் சொல்வார், அந்தக் கருத்துப்படத் தான் ,தன்னை ஆரியன் என்றழைத்த ஆதிசங்கரன் என்ற பார்ப்பான், தமிழைப் புகழ்ந்த ஞான்சம்பந்தரைத் திராவிட சிசு அதாவது திராவிடக் குழந்தை என அழைத்தார்/

அவர் திராவிடன் என்றால் சூத்திரன் என ஒரு இடத்தில் சொன்னதா ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா?அவர் 'கருத்துபட' அப்படின்னா அவர் மனசில் அந்தமாதிரி நினைத்து அது உங்களுக்கு மட்டும் தெரிந்ததா,இல்லை எங்கேயாவது அந்தமாதிரி எழுதி வைத்திருக்கிறாரா?திராவிட சிசு என்றல் சூத்திரன் என்று அர்த்தம் என ஒரு இடத்தில் அவர் சொன்னதா ஆதாரம் காட்டுங்களேன் பார்க்கலாம்.

/ராஜ கோபால தீட்சிதர் என்ன சொன்னார் என்பதை விபரமாகத் தருகிறேன் படியுங்கள், இது ஒன்றும் புனைகதையல்ல உண்மைச் சம்பவம்....
அக்னிகோத்திரம் ராமனுஜதாத்தாச்சாரியார் எழுதும் 'இந்து மதம் எங்கே போகிறது/

உங்க உளறலுக்கெல்லாம் ஆதாரம் இதுவா?நக்கிரனில் வருவது புனைகதையை மிஞ்சிய கப்சா.தாத்தாச்சாரி நக்கிரனில் எந்த ஆதாரமில்லாமல் எதையாவது எழுதினால் அது உண்மையா?சும்மா 'ஒருத்தர் இந்த மாதிரி சொன்னார்' என எதையாவது நக்கீரனில் எழுதினால் உண்மையா?நக்கிரனில் எத்தனை ஆயிரம் கட்டுரைகள் இந்த மாதிரி ஆதாரமே இல்லாமல் எழுதப்பட்டிருக்கு தெரியுமா?ஜெயலலிதா பாண்டிச்சேரி முதல்வராகிறார் என்றெல்லாம் எழுதினார்கள்.

ஏதாவது வலுவான ஆதாரம் இருந்தால் தாரும்.

//பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்தச் சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா? '(இந்துமதம் எங்கே போகிறது?"- அதிகாரம் 27) //

இதுவும் நக்கீரன் குப்பை.சரி அதை விடும் ஓய்.இதுல சங்கராச்சாரியார் சொல்லித்தான் ஆண்டாள் சிலையை சூத்திரர் மாணிக்கவாசகர் சிலை அருகே வைத்ததாக சொல்லியிருக்கே.இதுக்கு என்ன சொல்லுறீரு?

இலங்கை சுப்பிரமணிய சாமி.நல்லா சரடு திரிக்கறீரு ஐயா நீர்:-)))
 



//உண்மை, கற்பனை பண்ணக் கூடமுடியாத கொடுமை, பிராமணராகப் பிறந்து தமிழில் பற்று வைத்த ஒரே காரணத்துக்காக பதினாறு வயதில் உயிரோடு கொளுத்தப்பட்டது கொடுமை. //

'ஆரூரன்',

மதுரையில் அந்தக் குழந்தை தங்கியிருந்த மடத்திற்கு சமணர்களால் தீ வைக்கப்பட்டது. அதற்கு பாண்டிய மன்னனே பொறுப்பேற்க வேண்டும் என்று பையவே சென்று பாண்டியற்காகவே! என்று பாடி அந்த நெருப்புக்கே கட்டளையிட்டு அனுப்பி வைக்கிறார் ஞானசம்பந்தர். மன்னனை வெப்புநோய் சூழ்கிறது. அப்படிப்பட்ட அவரைத் தீ வைத்து எரித்து விட்டார்கள் என்று புதிதாய்க் கதை கண்டுபிடித்துச் சொன்னால், ஒன்று வக்கரித்த மடையனாய் இருக்க வேண்டும் அல்லது மாற்று மத அயோக்கியனாய் இருக்க வேண்டும்.

மேலும் அவர் வரலாற்றைப் பின்னால் வந்த சுந்தரர், நம்பியாண்டார்நம்பி, கூத்தர், சேக்கிழார், வள்ளலார், அருணகிரிநாதர் முதலிய பலர் பாடியிருக்கிறார்கள். இவர்களில் பலர் பிராமணர் அல்லாதவர். இவர்கள் யாருக்குமே தெரியாத ஒரு புதுக்கதையை வெறும் பிராமணத் துவேஷத்தால் (அதுவும் ஈழத்தமிழரிடையே கிடையாது) இட்டுக்கட்டி எழுதுவது என்பது தமிழ்நாட்டில் சில 'சைவப்பூனைகள்' செய்வது. உற்றுப்பார்த்தால்தான் அக்கமாலையில் சிலுவை தொங்குவது தெரியும்.

:-)

- வன்றொண்டன்
 



////இதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்கா இல்லை சும்மா அடிச்சு விடுவதா?உண்மை,உண்மைன்னு இத்தனை உறுதியா சொல்லுகிறீரே அதனால் கேட்டேன்.///

What do you want me to give you, the Coroner's report? திருஞானசம்பந்தர் சிவபெருமான் அருளால் சைவமும் தமிழும் தழைக்க வந்த தெய்வக்குழந்தை என்றே வைத்துக் கொள்வோம், பதினாறு வயதில், திருமணமுடித்த கையுடன், அவர் வந்த வேலை பாதியில் முடிய முன்பு, சோதியில் கலந்ததன் மர்மமென்ன? பிராமணர்களின் சாதி வெறியும், தமிழெதிர்ப்பும் தான் காரணம். பிராமணர் குலத்தில் பிறந்தாலும், சம்பந்தர் தன்னைத் தமிழனாகக் கருதினார், தமிழைப் போற்றினார், பிராமணரல்லாத் திருநாவுக்கரசரைத் தன்னுடைய தந்தை போன்றவர் எனக் கருதி அப்பர் என அழைத்தார். சாதி வேறுபாடில்லாமல் சைவத்தையும் தமிழையும் காக்கத் திருநாவுக்கரசருடன் கூட்டுச் சேர்ந்தார். 21 வது நூற்றாண்டிலேயே சாதி வெறி பிடித்த பார்ப்பான்களும், தமிழை வெறுக்கும் தீட்சிதர்களும், தமிழர்களைத் தீண்டத்தகாதவர்களாகக் கருதும் சங்கராச்சாரிகளும், மாணிக்கவாசகரைச் சூத்திரன் என இகழும் ராஜகோபால பார்ப்பான்களும், ஈழத்தமிழர்களை எதிரிகளாகக் கருதும் சோ ராமசாமிகளும், ராம்களும், தமிழர்களை அகதிகள் என எள்ளி நகையாடும் Anonymous பார்ப்பானும், தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் மத்தியிலுள்ள போது, அக்காலத்துப் பார்ப்பான்கள் நாளும் தமிழ் வளர்த்த, நற்றமிழன் ஞானசம்ப்பந்தரை உயிரோடு கொளுத்தியதென்பது நம்ப முடியாததொன்றல்ல.


////இந்த கப்சாக்கெல்லாம் ஆதாரம் இருக்கா இல்லை சும்மா வெறும் கையிலேயே "உண்மை,உண்மை"ன்னுமுழம் போடப்போகிறீரா?1000 வருஷத்துக்கு முந்தி நடந்தது உண்மை,உண்மைன்னு முழங்கறீரு.எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்லுறீரு?சரி இந்த பாரதியாரை யானையை விட்டு பார்ப்பாங்கள் கொன்ன கதையை படிச்சுட்டு சிரிப்பே நிக்க மாட்டேன் எங்கிறது.இதுக்கும் ஏதாச்சும் ஆதாரம் உண்டா,இல்லையா?////


ஆதாரம் வைத்து விட்டுக் கொலை செய்வதற்குப் பார்ப்பனர்கள் என்ன இழிச்ச வாயர்களா? யானையை ஏவி விட்டு மதம்பிடித்த யானை முட்டி விட்டதாகக் காட்டுவது தான் புத்திசாலித்தனம். மதம்பிடித்த யானையைக் கட்டித்தான் போடுவார்கள், முட்டவா விடுவார்கள். திருவல்லிக்கேணியில் வாழ்ந்து கோயில் யானையுடன் பழக்கப்பட்ட பாரதியாருக்குத் தெரியாதா, மதம் பிடித்த யானைக்குப் பக்கத்தில் போகக் கூடாதென்பது, அவர் என்ன குழந்தையா, குழந்தைகளுக்கே புத்தி சொன்ன கவிஞரல்லவா, பிராமணனாகப் பிறந்தும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் பள்ளியெழுச்சி பாடியதால் பாரதியாரும் கொல்லப்பட்டார். "வாழ்க நீ எம்மான் இந்த வையத்தில் தமிழைப் போலே"

///இலங்கையின் சுப்பிரமணியசாமி நீரா?///
நான்

நான் சுப்பிரமணியசாமியென்றால், எடுத்ததுக்கெல்லாம் விதண்டாவாதம் பண்ணிக் கொண்டு, நான் சொன்னதைத் திருப்பி எனக்கே பதிலாகத் தந்து கொண்டு, சிலேடை பேசிக் கொண்டு, பார்ப்பனத் தமிழெதிரிகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிக் கொண்டு, ஈழத்தமிழர்களை அகதிகள், பயங்கரவாதிகளென வசை பாடிக்கொண்டு, நாசூக்காக தமிழர்களை நக்கல் விட்டுக் கொண்டிருக்கும், இன்னொரு மொட்டைத்தலைப் பார்ப்பான் சோ ராமசாமியா நீர்?


////அவர் திராவிடன் என்றால் சூத்திரன் என ஒரு இடத்தில் சொன்னதா ஏதாவது ஆதாரம் காட்ட முடியுமா?அவர் 'கருத்துபட' அப்படின்னா அவர் மனசில் அந்தமாதிரி நினைத்து அது உங்களுக்கு மட்டும் தெரிந்ததா,இல்லை எங்கேயாவது அந்தமாதிரி எழுதி வைத்திருக்கிறாரா?திராவிட சிசு என்றல் சூத்திரன் என்று அர்த்தம் என ஒரு இடத்தில் அவர் சொன்னதா ஆதாரம் காட்டுங்களேன் பார்க்கலாம்.///


அவர் திராவிடன் என்றால் சூத்திரன் இல்லை, ஆரியனும், திராவிடனும் ஒன்று தான் என்று சொன்னதற்கு ஆதாரம் காட்ட முடியுமா? எந்தப் பிராமணத்தலைவராவது தம்மைத் திராவிடன் அல்லது தமிழன் என்று அடையாளம் காட்டியதை நிரூபிக்க முடியுமா? திராவிடன் சூத்திரன் இல்லையென்றால், எதற்காக எல்லாச் சாதியினரும் தமிழில் அர்ச்சனை செய்வதை பார்ப்பான்கள் எதிர்க்கிறார்கள். எதற்காகத் தமிழன் ஆறுமுக சாமி, சிற்றம்பலத்தில், தமிழனின் கோயிலில் தமிழில் பாட முடியாது. ஆதிசங்கரர் அமைத்த சங்கர மடங்களெதிலும் திராவிடர்களை உட்புறத்தில் அனுமதிப்பதில்லையே எதற்காக? சங்கர மடங்களில் எதற்காகப் பூணூல் பரிசோதனை செய்கிறார்கள். எந்தச் சங்கராச்சாரியாவது தம்மைத் திராவிடன் என்று கூறியதை நிரூபியுங்கள் பார்க்கலாம்.



//உங்க உளறலுக்கெல்லாம் ஆதாரம் இதுவா?நக்கிரனில் வருவது புனைகதையை மிஞ்சிய கப்சா.தாத்தாச்சாரி நக்கிரனில் எந்த ஆதாரமில்லாமல் எதையாவது எழுதினால் அது உண்மையா?சும்மா 'ஒருத்தர் இந்த மாதிரி சொன்னார்' என எதையாவது நக்கீரனில் எழுதினால் உண்மையா?நக்கிரனில் எத்தனை ஆயிரம் கட்டுரைகள் இந்த மாதிரி ஆதாரமே இல்லாமல் எழுதப்பட்டிருக்கு தெரியுமா?ஜெயலலிதா பாண்டிச்சேரி முதல்வராகிறார் என்றெல்லாம் எழுதினார்கள்.//


ராமானுஜாதாத்தாச்சாரி, ஒன்றும் வெறும் Anonymous பார்ப்பான் அல்ல, அவர் ஒரு பிராமணர், தமிழையும், சமஸ்கிருதத்தையும் கரைத்துக் குடித்தவர், வேத விற்பன்னர். சங்கராச்சாரிகளுடன் நெருங்கிப் பழகியவர், சங்கர மடங்களின் திருகுதாளங்களை நன்கறிந்தவர். அரசியல் அரங்கிலும், பெரிய அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகியவர், இந்தியச் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டவர், இந்தத் தள்ளாத வயதில் பொய் சொல்ல வேண்டிய தேவை அவருக்குக் கிடையாது, அவர் பொய்யன் என்று சொன்ன Anonymous இன் வாய்க்குப் பொரியும் கிடையாமல் தான் போகப் போகிறது.
அவர் தன்னுடைய போகிற காலத்துக்குப் புண்ணியம் தேடுவதற்காகத் தான், தமிழ் பேசும் பார்ப்பான்கள் எப்படியெல்லாம், தமிழர்களினதும், தமிழினதும் முதுகில் குத்தினார்கள், குத்துகிறார்கள் என்பதைத் தன்னுடைய இந்துமதம் எங்கே போகிறது என்ற தொடரில் புட்டுப் புட்டு வைக்கிறார். ஏனென்றால் அவருக்குத் தெரியும், செத்துப் போனபின்பு, தமிழை எதிர்க்கும் இந்தச் சிவத்துரோகத்துக்குப் பிராயச்சித்தம் செய்யாமல் போனால், நரகத்தில் தான் உழல வேண்டுமென்று.

//பகவானுக்கே அபச்சாரம் பண்றேளே... ஆண்டாள் யாரு? மாணிக்கவாசகர் யாரு? ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்தச் சூத்திரன் மாணிக்கவாசகன் இருக்கலாமா? இது பகவானுக்கே பாவம் பண்ற மாதிரி ஆகாதா? அந்தச் சங்கராச்சாரி சொன்னா நீர் கேக்கணுமா? '(இந்துமதம் எங்கே போகிறது?"- அதிகாரம் 27) // இதுல சங்கராச்சாரியார் சொல்லித்தான் ஆண்டாள் சிலையை சூத்திரர் மாணிக்கவாசகர் சிலை அருகே வைத்ததாக சொல்லியிருக்கே.இதுக்கு என்ன சொல்லுறீரு?//

ஓமோம் சும்மாவா செய்தார் எல்லாம் காரணத்தோட தான், பிழைப்பு நடக்க வேணாமோ, சங்கராச்சாரியார்களுக்கு வைணவத்தைப் பற்றிப் பேச பாத்தியதை கிடையாது என்று வரிந்து கட்டிக் கொண்டு நிற்கிறார்கள் வைணவப் பெரியார்கள், அதனால், சைவச் சூத்திரன் மாணிக்கவாசகன் பின்னால் ஒழியாமல் விட்டால், சங்கராச்சாரிக்கு அந்தக் கூட்டத்தில் பேசுவதற்கு உரிமை கிடையாமல் போயிருக்கும், அதனால் அவர் சூத்திரன் மாணிக்கவாசகனுக்காகப் பேச வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு, எல்லாம் சந்தர்ப்பவாதம் தான், நிச்சயமாக சூத்திரன் மாணிக்கவாசகனைத் தொட்ட தீட்டுப் போக நிச்சயமாகக் குளித்திருப்பார் இல்லையா?



@ July 26, 2006 5:18 AM க்கு நம்ம Anonymous சொல்றது என்னன்னா:
///'ஆரூரன்',

மதுரையில் அந்தக் குழந்தை தங்கியிருந்த மடத்திற்கு சமணர்களால் தீ வைக்கப்பட்டது. அதற்கு பாண்டிய மன்னனே பொறுப்பேற்க வேண்டும் என்று பையவே சென்று பாண்டியற்காகவே! என்று பாடி அந்த நெருப்புக்கே கட்டளையிட்டு அனுப்பி வைக்கிறார் ஞானசம்பந்தர். மன்னனை வெப்புநோய் சூழ்கிறது. அப்படிப்பட்ட அவரைத் தீ வைத்து எரித்து விட்டார்கள் என்று புதிதாய்க் கதை கண்டுபிடித்துச் சொன்னால், ஒன்று வக்கரித்த மடையனாய் இருக்க வேண்டும் அல்லது மாற்று மத அயோக்கியனாய் இருக்க வேண்டும்.///
அண்ணா Anonymous,


நான் வக்கரித்த மடையனுமல்ல. மாற்று மத அயோக்கியனுமல்ல,. சுத்தத் தமிழன், அதிலும் சைவத்தமிழன், சைவமும் தமிழும் பிரிக்கமுடியாதவை, சைவமில்லாமல் தமிழில்லை, தமிழில்லாமல் சைவமில்லை என்று நம்புபவன் அதனால் தான், தமிழெதிரிப் பார்ப்பான்களை மட்டும் எதிர்க்கிறேன், தனிப்பட்ட முறையில் எனக்குப் பிராமணர்களிடம் எந்த வித மனத்தாபமும் கிடையாது.
நீங்கள் சொல்வது உண்மை, தன்னுடைய நாட்டில் தமிழன் ஞானசம்பந்தனுக்குப் பாதுகாப்பில்லாமல் போனதற்கு எப்படி ஆட்சி செய்யும் பாண்டியன் பொறுப்பேற்க வேண்டுமென்று, ஞானசம்பந்தர் அக்காலத்திலேயே அரசியல் நாகரீகத்தைக் கற்பித்தாரோ, அதே போன்று இன்று, தமிழர்களின் மெக்காவான சிதம்பரத்தில், தமிழர்களின் தாய்க்கோயிலில்,தமிழ்நாட்டில், திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழுக்குத் தடை போடப்பட்டதற்கு கருணாநிதி பொறுப்பேற்க வேண்டும். தமிழ், தமிழ் என்று பம்மாத்து விட்டு தமிழ்நாட்டு ஆட்சியைக் கைப்பற்றிக் கோடீஸ்வரனான கருணாநிதி, தன்னுடைய ஆட்சியில் தமிழுக்கேற்பட்ட இழிநிலைக்குப் பொறுப்பேற்க வேண்டும்.

ஆரூரன்
www.unarvukal.com
 



வாருமய்யா ஆருரனாரே

பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதா?ஆக உம்மிடம் திருஞான சம்பந்தர் கொல்லப்பட்டார் என்பதற்கோ,பாரதியார் கொல்லப்பட்டார் என்பதற்கோ உமது பாஷையில் சொல்லுவதானால்

/ஆதாரம் வைத்து விட்டுக் கொலை செய்வதற்குப் பார்ப்பனர்கள் என்ன இழிச்ச வாயர்களா? /

ஆதாரம் இல்லை.
ஆதாரம் நஹி ஹை
ஆதாரம் லேதண்டி
நோ ப்ரூப்.
ஆதாரம் இல்லா.
ஆதாரம் இல்லைங்காணும்
ஆதாரம் இல்லை ஓய்

ஒம்ம வாதமே 'பாப்பான் மோசம்.அவன் தான் கொன்னிருப்பான்' - இதுதான்.இது மட்டுமே தான்.ஆக இது ஒம்ம மனப்பிராந்தி தவிர வேறொண்ணுமில்லை.ஒண்ணுமே இல்லை.

ஒம்ம மனப்பிராந்தியைத்தான் நீட்டி முழக்கி பிரசங்கம் பண்ணி கொலையை நேரில் பார்த்தவர் போல் பேசிக் கொண்டிருந்தீரோ?

எந்த ஆதாரமும் இல்லாமல் ஒம்ம காழ்ப்புணர்வை ஒரு சாதிமேல் கொலைப்பழி சுமத்தும் அளவுக்கு போய் ஆதாரம் கேட்டபின் திரு,திரு என விழித்து என் மேல் எரிந்து விழுகிறீரே?நல்ல ஆளய்யா நீரு.ஒம்ம வண்டவாளம் வெளில வந்துருச்சு ஓய்.சபையில் அம்பலப்பட்டு நிக்கறீரு.பொய் சொன்னா மூக்கு ஒரு அங்குலம் வளரும்ணு ஒரு பழமொழி உண்டு.ஒம்ம மூக்கு இப்ப கணிணித்திரையை தொடும் அளவு வளர்ந்திருக்கணுமே ஓய்.சோதிச்சு பாரும்.

/நான் சுப்பிரமணியசாமியென்றால், எடுத்ததுக்கெல்லாம் விதண்டாவாதம் பண்ணிக் கொண்டு, நான் சொன்னதைத் திருப்பி எனக்கே பதிலாகத் தந்து கொண்டு, சிலேடை பேசிக் கொண்டு, பார்ப்பனத் தமிழெதிரிகளுக்கெல்லாம் வக்காலத்து வாங்கிக் கொண்டு, ஈழத்தமிழர்களை அகதிகள், பயங்கரவாதிகளென வசை பாடிக்கொண்டு, நாசூக்காக தமிழர்களை நக்கல் விட்டுக் கொண்டிருக்கும், இன்னொரு மொட்டைத்தலைப் பார்ப்பான் சோ ராமசாமியா நீர்?/

நான் யாருன்னு சொன்னா நீர் நம்பவா போறீரு?சரி அதைவிடும் சுப்ரமணியசாமி.ஒம்ம அடுத்த புளுகுக்கு போவோமா?

//அவர் திராவிடன் என்றால் சூத்திரன் இல்லை, ஆரியனும், திராவிடனும் ஒன்று தான் என்று சொன்னதற்கு ஆதாரம் காட்ட முடியுமா?//

ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ

ஒம்ம வண்டவாளம் மெதுமெதுவா தண்டவாளத்தில் ஏறுதய்யா..

இங்கேயும் அதே கதைதான்.

ஆதாரம் இல்லை.
ஆதாரம் நஹி ஹை
ஆதாரம் லேதண்டி
நோ ப்ரூப்.
ஆதாரம் இல்லா.
ஆதாரம் இல்லைங்காணும்
ஆதாரம் இல்லை ஓய்

அவர் அந்த அர்த்ததில் சொன்னார் என்று நீங்களே கற்பனை செய்துகொண்டு தாம் தூம் என ஆட்டம் போட்டு ஆதாரம் கேட்டதும் மாட்டிகொண்டு திரு,திரு என விழிக்கிறீரு.எரிஞ்சு விழறீரு.என் கிட்ட ஆதாரம் கேக்கறீரு.நீர் சொன்னதுக்கு நீர்தான ஓய் ஆதாரம் தரணும்.

மூக்கு மறுபடி ஒரு ஏழெட்டு அங்குலம் வளர்ந்திருக்கணுமே?ஏன் ஓய் முகம் கோபத்தில் இப்படி சிவக்குது?நற,நற என பல்லை கடிக்கறீரு?பொய் சொல்லி மாட்டிகிட்டா அப்படித தான் கோபம் வரும்.

//ராமானுஜாதாத்தாச்சாரி, ஒன்றும் வெறும் ஆனொன்ய்மொஉச் பார்ப்பான் அல்ல, அவர் ஒரு பிராமணர், தமிழையும், சமஸ்கிருதத்தையும் கரைத்துக் குடித்தவர், வேத விற்பன்னர். சங்கராச்சாரிகளுடன் நெருங்கிப் பழகியவர், சங்கர மடங்களின் திருகுதாளங்களை நன்கறிந்தவர். அரசியல் அரங்கிலும், பெரிய அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகியவர், இந்தியச் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டவர், இந்தத் தள்ளாத வயதில் பொய் சொல்ல வேண்டிய தேவை அவருக்குக் கிடையாது, அவர் பொய்யன் என்று சொன்ன ஆனொன்ய்மொஉச் இன் வாய்க்குப் பொரியும் கிடையாமல் தான் போகப் போகிறது.//

ஆகா.காதுகுளிருதய்யா.பாப்பானான தாத்தச்சாரியின் புகழை எப்படி பாடறீரு?நீரா ஒரு பார்ப்பான் புகழை இப்படி பாடறது?எல்லாம் காலத்தின் கட்டளை போலும்.

சரி.ஒம்ம தாத்தாச்சாரி புராணம் இருக்கட்டும்.விஷயத்துக்கு வரலாமா?

தாத்தச்சாரி சொன்னதுக்கு ஒம்மகிட்டயோ,அவர் கிட்டயோ

ஆதாரம் இல்லை.
ஆதாரம் நஹி ஹை
ஆதாரம் லேதண்டி
நோ ப்ரூப்.
ஆதாரம் இல்லா.
ஆதாரம் இல்லைங்காணும்
ஆதாரம் இல்லை ஓய்

ஒம்மை பார்த்தால் நிஜமாவே பாவமா இருக்குங்காணும்.ஏன் ஓய் முகத்தில் வழியும் அசடை இப்படி வேகவேகமா துடைக்கறேள்?

ஆனா நீர் இத்தனை கேவலப்பட்டும் அடங்குவதா தெரியலை ஓய்.முகமூடி பதிவு கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவங்க வரும் இடம்.இங்க ஒம்ம பப்பு வேகாது ஓய்.வேற இடம் பாரும்.

இப்படிக்கு
நானே..நான்
 



///பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டதா?ஆக உம்மிடம் திருஞான சம்பந்தர் கொல்லப்பட்டார் என்பதற்கோ,பாரதியார் கொல்லப்பட்டார் என்பதற்கோ உமது பாஷையில் சொல்லுவதானால்எந்த ஆதாரமும் இல்லாமல் ஒம்ம காழ்ப்புணர்வை ஒரு சாதிமேல் கொலைப்பழி சுமத்தும் அளவுக்கு போய் ஆதாரம் கேட்டபின் திரு,திரு என விழித்து என் மேல் எரிந்து விழுகிறீரே?நல்ல ஆளய்யா நீரு.ஒம்ம வண்டவாளம் வெளில வந்துருச்சு ஓய்.சபையில் அம்பலப்பட்டு நிக்கறீரு.பொய் சொன்னா மூக்கு ஒரு அங்குலம் வளரும்ணு ஒரு பழமொழி உண்டு.ஒம்ம மூக்கு இப்ப கணிணித்திரையை தொடும் அளவு வளர்ந்திருக்கணுமே ஓய்.சோதிச்சு பாரும்.
ஆதாரம் இல்லை. ஆதாரம் நஹி ஹை ஆதாரம் லேதண்டி நோ ப்ரூப். ஆதாரம் இல்லா. ஆதாரம் இல்லைங்காணும்ஆதாரம் இல்லை ஓய்///


அனானிமஸ் அண்ணாச்சியால் உருப்படியாக ஒரு உரையாடலைத் தொடர முடியாமல், பெரிய புத்திசாலித்தனமாக வாதாடுவதாக நினைத்துக் கொண்டு, தன்னைச் சோ ராமசாமி போன்றதொரு கோமாளியாக்கிக் கொள்கிறார்.
ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நடந்த சதிக்கு இறப்புச் சான்றிதழ் கேட்டுக் கதையைத் திசை திருப்பலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. பழங்காலத்தில் நடந்த பலசம்பவங்கள் பேச்சு வழக்கிலும், கிராம மக்களால் வாழையடி வாழையாகப் பேசப்பட்டும் தான் வந்துள்ளன. யாரும் எழுதி வைப்பதில்லை.
அப்படி எழுதி வைப்பதற்கும், பார்ப்பான்கள் அறிமுகப் படுத்திய சாதி முறையால், தமிழர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டது, பெரும்பாலான தமிழர்கள் தாழ்த்தப்பட்டவ்ர்களாக ஊருக்கு வெளியில் வாழ, வந்தேறிய பார்ப்பான்கள் எழுதுவதெல்லாம் உண்மையாகியது. பிராமண ஆதிக்கத்துக்குப் பயந்ததால், பிராமணர்கள் தமிழர்களின் முதுகில் குத்திய சம்பவங்கள், சதிகள் எல்லாம் மறைக்கப்பட்டன. ஆனால் கிராமிய மக்கள் மத்தியில், இவை, கதை வடிவில், நாட்டுப்பாடல்கள் வடிவில், பழமொழி வடிவில் தலைமுறை, தலைமுறையாகக் பேசப்பட்டு வந்துள்ளன. அப்படி வழி வழியாக வந்த கதைகளில் ஒன்று தான், பார்ப்பான்கள் ஞானசம்பந்தரை உயிரோடெரித்தது, நந்தனாரை உயிரோடெரித்தது எல்லாம், இப்படி எழுதப்படாத வழி முறை ஆதாரங்கள் பொய்யென்றால், பார்ப்பான்களால் போற்றப்படும் நான்கு வேதங்களும் கூடப் பொய்யென்று தான் சொல்ல வேண்டும், ஏனென்றால் வேதங்களும், பல புராணக்கதைகளும் எழுதப்பட்டவையல்ல, வாய் மொழியாக ஒவ்வொரு தலைமுறைக்கும் கடத்தப்பட்டவை.
நந்தனார் எரிக்கப்பட்டதும் உண்மையில்லை எனப் போகிறார் அனானிமஸ். இன்றும் 21ம் நூற்றாண்டில், நவீன இந்தியாவில், தமிழர்களின் தமிழ்நாட்டில், தாழ்த்தப்பட்ட தமிழன் நந்தனார், ஆடவல்லானைத் தரிசித்த ஒன்பதாவது கதவைத் திறக்காமல் பூட்டி வைத்திருக்கிறார்கள் தில்லையின் சாதிவெறித் தீட்சிதர்கள். அத்தனை பேரையும் தீண்டாமை எதிர்ப்புச் சட்டத்தின் கீழ்ப் பதிவு செய்து உள்ளே தள்ளி விட்டு அந்தக் கதவைத் திறக்க வேண்டுமா இல்லையா? ஐயாமாரே, அம்மாமாரே, உங்களின் மனதைத் தொட்டுச் சொல்லுங்கள்.
அப்பனே அனானிமஸ், என்னிடம் 1000 ஆண்டுக்கு முன்பு நடந்த சதிக்கு ஆதாரம் கேட்கும், பொலீஸ் றிப்போட் கேட்கும் அறிவாளியே, பார்ப்பான்கள், தமிழ்நாட்டில் தமிழர்களின் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு இடத்துக்கும், ஒவ்வொரு புனைகதையை, புராணங்களை இயற்றிப் பார்ப்பான்களைத் தொடர்பு படுத்தி, உங்களிடமிருந்து தான் தமிழ்நாட்டினதும் தமிழர்களினதும் வரலாறே தொடங்கியது உங்களிடமிருந்து தான் என்பது போல் கதை விட்டுத் தமிழர்களின் காதில் பூச்சுற்றி வைத்திருக்கிறீர்களே அதற்கெல்லாம் ஆதாரம் உண்டா?
தமிழர்களது பெயர், ஊர்ப்பெயர், கடவுள் பெயரைக் கூட வடமொழிப்படுத்தி ஒவ்வொரு புராணக்கதை புனைந்து, எல்லாவற்றுக்குக் உங்களைத் தொடர்பு படுத்தி புருடா விட்டிருக்கிறீர்களே அதற்கெல்லாம் ஆதாரமுண்டா?
எல்லாப் பம்மாத்துக் கதைகளும் இருக்கட்டும், இந்த சிதம்பரத்தும் தமிழெதிரித் தீட்சிதன்களை, சிவபெருமான் சிதம்பரத்துக்கு ஆட வரும்போது, தமிழகத்தில் தண்டச்சோறுண்ணுவதற்காகக் கூட்டி வந்ததாக சில பார்ப்பான்கள் கதை விடுகிறார்களே அதற்கு ஆதாரம் காட்டும்,
அதை உண்மையென்று நிரூபியும், நானும் பார்ப்பான்கள், ஞானசம்பந்தர் தமிழில் கொண்ட காதலினால், தமிழை மேன்மைப்படுத்தியதால் பார்ப்பான்களால் உயிரோடு எரிக்கப்பட்டார் என்பதை நிரூபிக்கிறேன். (தில்லைப் பார்ப்பான்கள் இயற்றிய கதைகளை ஆதாரம் காட்டி உம்முடைய கோமாளித்தனத்தைக் காட்ட மாட்டீரென நம்புகிறேன்).
உம்மால், தில்லைத் தமிழெதிரித் தீட்சிதன்களை சிவபெருமான் தண்டச்சோறு தின்ன தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார் என்பதை நிரூபிக்க முடியுமா? Can you prove that? können Sie, das beweisen?


///நான் யாருன்னு சொன்னா நீர் நம்பவா போறீரு?சரி அதைவிடும் சுப்ரமணியசாமி.ஒம்ம அடுத்த புளுகுக்கு போவோமா?///

நீர் எந்தக் கொம்பனா இருந்தாலும் எனக்குக் கவலையில்லை, என்னைப் பொறுத்தவரையில் நீர் சோ ராமசாமி போலொரு Anti Tamil பார்ப்பான் அவ்வளவு தான்.


//அவர் திராவிடன் என்றால் சூத்திரன் இல்லை, ஆரியனும், திராவிடனும் ஒன்று தான் என்று சொன்னதற்கு ஆதாரம் காட்ட முடியுமா?//


நானும் தான், மீண்டும், மீண்டும் இந்தக் கேள்வியைக் கேட்கிறேன், நீரும் பதில் சொல்லாமல் சமாளிக்கிறீரே ஓய், இப்பவாவது பதில் சொல்லும், எந்தப் பார்ப்பனத் தலைவனாவது தன்னைத் தமிழனாக, திராவிடனாக அடையாளப்படுத்தி உள்ளார்களா? அவர்கள் தம்மை ஆரியனாகத் தானே கருதுகிறார்கள், ஆரிய சமாஜம், விஸ்வ இந்து பரிசத் போன்ற இயக்கங்களுடன் தானே இணைகிறார்கள். திராவிடர்களும், ஆரியர்கள் போல் உயர்ந்தவர்கள் என்று பார்ப்பான்கள் நினைத்தால், எதற்காக திராவிட சூத்திரன் ஆறுமுகசாமி திராவிட வேதத்தைத் தில்லையில் பாட, வந்தேறு குடி( நான் சொல்லவில்லை, தாம் எங்கிருந்தோ வந்ததாக அவர்களே சொல்கிறார்கள்) சிதம்பரத்து ஆரியத் தீட்சிதன்கள் தடுக்கிறார்கள். திராவிடன் ஆறுமுகசாமி, சிற்றம்பலத்தில் ஏறி நின்று தமிழில், தமிழ்நாட்டில் சிவனைப் பாட ஏன் தடை போட்டார்கள்?
திராவிடர்கள் சூத்திரர் இல்லையென்றால், திராவிடர்கள் அனைவரும் அர்ச்சகர்களாவதைப் பார்ப்பான்கள் எதற்காக எதிர்க்கிறார்கள், தாம் ஆதி சங்கரரின், பிரதிநிதிகளென்று தான் ஆதிசங்கராரால் "தாபிக்கப்பட்டதாகச் சொல்லப்படும்" காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதிகளாகிய காமகேடி சங்கராச்சாரிகள் சொல்கிறார்கள், அவர்களில் ஒரு சங்கராச்சாரி தானே, காசியில் போல் எல்லாத் தமிழர்களும் அர்ச்சனை செய்யவும், அதுவும் தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு 'சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது" என்று சொன்ன "மகாப்பெரியவா", காஞ்சி சங்கர மடத்து மடாதிபதி தானே?
காஞ்சி சங்கராச்சாரி தமிழர்களைச் சூத்திரர்கள் என்று தானே சொல்கிறார், நீர் மட்டும் என்ன முழுப்பூசணிக்காயை ஒரு பிடி சோற்றுக்குள் மறைக்க முயற்சிக்கிறீர், உம்மை நீரே சிரிப்புக்கிடமாக்கதேயும் ஓய்!.


///ராமானுஜாதாத்தாச்சாரி, ஒன்றும் வெறும் ஆனொன்ய்மொஉச் பார்ப்பான் அல்ல, அவர் ஒரு பிராமணர், தமிழையும், சமஸ்கிருதத்தையும் கரைத்துக் குடித்தவர், வேத விற்பன்னர். சங்கராச்சாரிகளுடன் நெருங்கிப் பழகியவர், சங்கர மடங்களின் திருகுதாளங்களை நன்கறிந்தவர். அரசியல் அரங்கிலும், பெரிய அரசியல்வாதிகளுடன் நெருங்கிப் பழகியவர், இந்தியச் சுதந்திரப் போராட்டத்திலும் ஈடுபட்டவர், இந்தத் தள்ளாத வயதில் பொய் சொல்ல வேண்டிய தேவை அவருக்குக் கிடையாது, அவர் பொய்யன் என்று சொன்ன ஆனொன்ய்மொஉச் இன் வாய்க்குப் பொரியும் கிடையாமல் தான் போகப் போகிறது.//

///ஆகா.காதுகுளிருதய்யா.பாப்பானான தாத்தச்சாரியின் புகழை எப்படி பாடறீரு?நீரா ஒரு பார்ப்பான் புகழை இப்படி பாடறது?எல்லாம் காலத்தின் கட்டளை போலும்.///


உம்முடைய புரிந்துணர்வு இந்தளவு தான், பாரதியாரும் ஒரு பார்ப்பான் தான், பாரதியார் போலொரு தமிழன் பாரினிலில்லை, ஞானசம்பந்தர் போல தமிழனாக, பெருமையுடன் தமிழைத் தனக்கு அடைமொழியாக இணைத்த தமிழன கிடையாது என்பது என்னுடைய கருத்து. நான் முழுப் பார்ப்பன சமூகத்தையும் எதிர்க்கவில்லை, தமிழ்நாட்டில், தமிழைப் பேசிக் கொண்டு, தமிழர்களின் நல்லெண்ணத்தாலும், பரந்த மனப்பான்மையினாலும் தமிழர்களை விட வளமாக வாழ்ந்து கொண்டே தமிழர்களின் முதுகில் குத்தும் Anti Tamil பார்ப்பான்களை மட்டும் தான் எதிர்க்கிறேன்.
சைவம் பார்ப்பான்களுடையது மட்டுமல்ல, அது தமிழர்களின் வாழ்வுடன் பின்னிப்பிணைந்துள்ளது, அதைத் தமிழாக்க வேண்டியது நமது கடமை, எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு விட்டுப் போன ஆலயங்களைத் தமிழெதிரிப் பார்ப்பான்களில் கரங்களிலிருந்து விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டின் கோயில்கள் வெறும் இந்து மத வழிபாட்டுத் தலங்களல்ல, தமிழர்களின், எமது முன்னோர்களின் கலை, கட்டிட, தொழில்நுட்ப, விஞ்ஞான அறிவையும், ஆற்றலை உலகுக்கு எடுத்துக் காட்டும் எமது சொத்துக்கள், அதைப் பேணிப்பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் கடமை, எகிப்தியர்கள் உருவ வழிபாட்டை வெறுக்கும் முஸ்லீம்களாக் இன்றிருந்தாலும் அவர்களது முன்னோர்களின் பிரமிட்டுக்களையும், உருவச்சிலைகளையும், பெருமையுடன் பேணிப்பாதுகாக்கத் தவறுவதில்லை, அது போல், தமிழர்கள் அனைவரும் சாதி, மதவேறுபாடின்றி தமிழர்களின் பழமையான சின்னங்களைப் பாதுகாக்க வேண்டும்.
.

//ஒம்மை பார்த்தால் நிஜமாவே பாவமா இருக்குங்காணும்.ஏன் ஓய் முகத்தில் வழியும் அசடை இப்படி வேகவேகமா துடைக்கறேள்?
ஆனா நீர் இத்தனை கேவலப்பட்டும் அடங்குவதா தெரியலை ஓய்.முகமூடி பதிவு கொஞ்சம் விஷயம் தெரிஞ்சவங்க வரும் இடம்.இங்க ஒம்ம பப்பு வேகாது ஓய்.வேற இடம் பாரும்.//


ஓய்! அனானிமஸ், உம்மை விடப் பெரிய மலைவிழுங்கி மகாதேவன் பார்ப்பான்களையும் பார்த்திருக்கிறேனாக்கும் ஓய், இது தான் பார்ப்பனக் குணம் என்பது தன்னால், ஒழுங்காகப் பதில் சொல்ல முடியாத போது, ஏதாவது சதி செய்து தமிழர்களை அழிப்பது, அல்லது உரிமையாளர்களிடம் சொல்லித் தடை செய்வது, ஏதோ நான் பயத்தில் நடுங்குவது போலவும், எனக்குப் போக வேறிடம் கிடையாது போலவும் , இவருக்கொரு நினைப்பு,
இனிமேலும் என்னுடன் பேச விரும்பினால், ஒரு வரி எழுதும் ஓய்! I am sure, you know where to find me.:) :)


ஆரூரன்
www.unarvukal.com
 



திரு. முகமூடி அவர்களே,

என்னுடைய பதிலை முற்றாக இருட்டடிப்புச் செய்த காரணத்தை அறியலாமா?

ஆரூரன்
 



ஆருரன், சில நாட்களாக என் வீட்டு அடுப்பில் பூனைக்குட்டி தூங்குவதால், நேற்று மாலையில் இருந்து நான் கணிணி முன் அமரவில்லை. இப்பொழுதுதான் (என் நேரம் காலை 9:50 PDT) உங்கள் இரு பின்னூட்டங்களையும் கண்டேன்.

*

BBC Tamil தளத்தை மேற்கோள் காட்டி பாஸ்டன் பாலா எழுதியிருப்பது ::

தமிழ் நாட்டில் புகழ் பெற்ற சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் பொற்சபையிலிருந்து தமிழ் பக்தி பாடல்களான, தேவாரம் , திருவாசகம் போன்றவற்றை பக்தர்கள் பாட, கோவிலை நிர்வகித்து வரும் பொது தீட்சிதர்கள் அனுமதிக்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து எழுந்துள்ள சர்ச்சைக்கு, இரு தரப்புகளும் கலந்தோலோசித்து ஒரு தீர்வு காண்பதே சரியானதாக இருக்கும் என்று பொது தீட்சிதர்கள் சங்கத்தின் சட்ட ஆலோசகரும் வழக்குரைஞருமான ஏ.சம்பந்தம் தெரிவித்துள்ளார்.

தமிழோசைக்கு அளித்த ஒரு பேட்டியில், சம்பந்தம் அவர்கள் இந்த கோவிலில் 1987ம் ஆண்டில், தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கையை ஏற்று, தீட்சிதர்களே ஆறு கால பூஜைகளின் போது , வேத மந்திரங்களுடன் தேவார திருவாசகப் பாடல்களை பாடிவருவதாகக் கூறினார். ஆனால் இந்த முறை , பக்தர்களும் ஓதுவார்களும் பொற்சபையிலிருந்து தாங்களே இந்த பாடல்களை பாடி இறைவனை வழிபட அனுமதிக்கப்படவேண்டும் என்று கோருவதாலேயே, இந்தப் பிரச்சினை எழுந்துள்ளதாக அவர் கூறினார்.

இது குறித்து தமிழக அரசின் இந்து அறநிலையத் துறை அதிகாரி இரண்டாண்டுகளுக்கு முன்னரே அளித்த உத்தரவில், தீட்சிதர்கள் பொற்சபையிலிருந்து தேவார, திருவாசகப் பாடல்களைப் பாடலாம் என்றும் மற்றவர்கள் பொற்சபையின் முன்னுள்ள பிரகாரத்திலிருந்து அந்த பாடல்களை பாடலாம் என்றும் கூறப்பட்டிருப்பதாகவும் கூறிய சம்பந்தம், இந்த உத்தரவைத் தாண்டி புதிய முடிவு எடுக்கப்படுமானால் அதன் சட்டபூர்வ தன்மை குறித்து நீதி மன்றங்கள்தான் முடிவு எடுக்க முடியும் என்றார்.
 



With the above BB's post you are vindicated, mugamuudi!
Not that you need any!
Especially from these haters!

Thank you!
 



/ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நடந்த சதிக்கு இறப்புச் சான்றிதழ் கேட்டுக் கதையைத் திசை திருப்பலாம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது. /

நான் இறப்பு சான்றிதழ் கேட்கவில்லை.எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொல்லுகிறீர் எனத்தான் கேட்டேன்.

/அப்படி வழி வழியாக வந்த கதைகளில் ஒன்று தான், பார்ப்பான்கள் ஞானசம்பந்தரை உயிரோடெரித்தது, நந்தனாரை உயிரோடெரித்தது எல்லாம், /

ஆக இது 'கதை'.:-))

பூனைக்குட்டி வெளியே வந்தது மட்டும் இன்றி அப்பாவி போல் முகத்தை வைத்துக்கொண்டு முழிக்கவும் செய்கிறது பாரும்:-))

திருநீறணிந்த ஆஷாடபூதிப் பூனை அப்போவ்.பாலே குடிக்காத அப்பாவிப்பூனை இது.:-))


/அப்பனே அனானிமஸ், என்னிடம் 1000 ஆண்டுக்கு முன்பு நடந்த சதிக்கு ஆதாரம் கேட்கும், பொலீஸ் றிப்போட் கேட்கும் அறிவாளியே, பார்ப்பான்கள், தமிழ்நாட்டில் தமிழர்களின் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு இடத்துக்கும், ஒவ்வொரு புனைகதையை, புராணங்களை இயற்றிப் பார்ப்பான்களைத் தொடர்பு படுத்தி, உங்களிடமிருந்து தான் தமிழ்நாட்டினதும் தமிழர்களினதும் வரலாறே தொடங்கியது உங்களிடமிருந்து தான் என்பது போல் கதை விட்டுத் தமிழர்களின் காதில் பூச்சுற்றி வைத்திருக்கிறீர்களே அதற்கெல்லாம் ஆதாரம் உண்டா? /

ஸ்தலபுராணங்கள் வேதம் ஆகியவை உண்மை,உண்மை என நான் எங்கு உங்களைபோல் முழங்கினேன்?அவை உண்மையா,பொய்யா என எனக்கு தெரியாது.அவை உண்மை என சொல்லுவார் யாரோ அவரிடம் ஆதாரங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.

மறுபடி கேட்கிறேன்.உங்கள் 'கதைக்கு' என்ன ஆதாரம்?

ஆதாரம் இல்லை அது வழியாக வந்த 'கதை' என்றால் அந்த கதையின் தொன்மைக்கும்,அதன் சரித்திர மூலகங்களைப்பற்றியும் ஒரு ஆதாரமாவது தாரும்.எந்த புத்தகத்தில் அம்மாதிரி எழுதப்பட்டுள்ளது?இதுநாள்வரை எந்த புத்தகங்களிலும் எழுதப்படாமல் வழிவழியாக வந்து இப்போது ஆரூரானால் முதல் முதலாக முகமூடியின் பதிவில் 2006ல் அச்சேற்றப்பட்டுள்ளதா?

/உம்மால், தில்லைத் தமிழெதிரித் தீட்சிதன்களை சிவபெருமான் தண்டச்சோறு தின்ன தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார் என்பதை நிரூபிக்க முடியுமா? Can you prove that? können Sie, das beweisen?
/

நான் சிவபெருமான் தீட்சிதர்களை அழைத்துவந்தார் என எங்கு சொன்னேன்?அப்படிப்பட்ட கதைகளைக் கேட்டால் எனக்கு சிரிப்பே நிற்காது.உலகில் பல வகை ஸ்தலபுராணங்கள்.அதில் இதுவும் ஒன்று.அதற்கு நான் தரும் மதிப்பு அவ்வளவுதான்.

நான் சொல்லாத ஒன்றுக்கு என்னிடம் ஆதாரம் கேட்டால் எப்படி ஆருரான்?

/இப்பவாவது பதில் சொல்லும், எந்தப் பார்ப்பனத் தலைவனாவது தன்னைத் தமிழனாக, திராவிடனாக அடையாளப்படுத்தி உள்ளார்களா?/

'திராவிட சிசு என்றால் சூத்திரன் என்ற பொருளில் தான் சங்கரர் பாடினார்'

இப்படி குண்டுப்புளுகு ஒன்றை அடித்து விட்டீர்கள்.

'சங்கராச்சாரியார் தமிழை நீஷபாசை என சொன்னார்'

இப்படியும் ஒரு குண்டுப்புளுகை நக்கீரனின் கட்டுரையை வைத்து அடித்து ஆடினீர்கள்.

ஆதாரம் கேட்டவுடன் தராமல் என்னை ஆதாரம் தர சொல்கிறீர்கள்.

மறுபடி கேட்கிறேன்.

நீங்கள் சொன்னதற்கு உங்களிடம் ஆதாரம் உள்ளதா?

இருக்கா,இல்லையா?

//தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு 'சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது" என்று சொன்ன "மகாப்பெரியவா", காஞ்சி சங்கர மடத்து மடாதிபதி தானே? //

இதுக்கும் ஆதாரம் உண்டா?இல்லை 'அவர் அப்படி சொல்லவில்லை என நான் நிருபிக்க முடியாதது தான் ஆதாரமா?":-)))

நெஞ்சில் உரமுமுன்றி
நேர்மை திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடி
கிளியே,வாய் சொல்லில் வீரரடி.
 



சிதம்பரத்தில் பார்ப்பனர்கள் அர்ச்சித்தால் கலைஞர் கருணாநிதிக்குப் பொல்லா நோய் ஏற்படும்?


சித்தர்களின் தீர்க்கதரிசனத்தையும், தவ வலிமையயும், அவர்களின் அபாரசக்தியையும் யாவரும் அறிவர். கன்னடர்களின் வீரசைவம், காஸ்மீர சைவம் போன்று, தமிழர்களின் சைவம் சித்தாந்த சைவம். சித்தர்களால் வளர்க்கப்பட்ட சைவம். சித்தர்களின் முதன்மையானவர் திருமூலர். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். சிவபெருமானே திருமூலநாயனாராக அவதரித்தார் என்பது சைவர்களின் நம்பிக்கை, திருமூலநாயனாரின் சித்து வல்லமையையும், சக்தியையும் சைவத்தை ஒழுகுபவர்கள் யாவரும் அறிவர். நம்பிக்கையில் தான் இந்த உலகமே இயங்கிக் கொண்டிருக்கிறது.

திருமூலநாயனார் இயற்றிய திருமந்திரம் பத்தாம் திருமுறையாக வகுக்கப்பட்டுள்ளது, பன்னிரண்டு திருமுறைகளும் மிகவும் சக்தி வாய்ந்தவை, உலகில் சில மொழிகளின் வார்த்தைகள் தான் சிறப்பான சக்தி வாய்ந்தவை. தமிழ் அப்படியான மொழிகளில் ஒன்று. கலம்பகம் பாடி, எதிரிகளை அழித்ததும், பாம்பு கடியுண்டிறந்த பூம்பாவையை மயிலாப்பூர்க் கபாலீஸ்வரர் கோயிலில் உயிர்த்தெழச் செய்ததும், கல்லை மிதக்கச் செய்ததும், முதலையிடமிருந்து பாலகனை மீட்டதும், பெருநோய்களைத் தீர்த்ததும், போன்ற பல அற்புதங்களைச் செய்தது தமிழ்த் தேவாரங்கள் தானே தவிர சமஸ்கிருதமல்ல, அப்படியான சக்தி வாய்ந்த தமிழில் திருமூலநாயனாரின் திருமந்திரத்தில் அவர் என்ன சொல்கிறார் பாருங்கள்.

"பேர்கொண்ட பார்ப்பான் பிரான்தன்னை அர்ச்சித்தால்
போர்கொண்ட வேந்தர்க்குப் பொல்லா வியாதியாம்
பார்கொண்ட நாட்டுக்குப் பஞ்சமு மாம்என்றே
சீர்க்கொண்ட நந்தி தெரிந்துரைத் தானே."
~திருமந்திரம் 519~

பார்ப்பனர்கள் சிவபிரானை அர்ச்சித்தால், வெற்றி கொண்ட மன்னர்களுக்குப் பொல்லாத வியாதி ஏற்படும், ( அதாவது இப்பொழுது வெற்றி கொண்ட ஆட்சியாளர் - கலைஞர் கருணாநிதி) அத்துடன் அந்த நாட்டுக்குப் பஞ்சமும் ஏற்படுமென்று நந்திதேவர், திருமூலநாயனாருக்கு எடுத்துரைக்கிறார். இப்பொழுது சிதம்பரத்தைப் பற்றிய நிகழ்வு உலகச்சைவர்களின் மனதிலுள்ளதாலும், சிதம்பரத்து ஆடவல்லான் தான், தமிழ்நாட்டினதும், தமிழர்களினதும் முழுமுதல் கடவுள், திருச்சிற்றம்பலம் என்று சொல்லி விட்டுத் தான் இலங்கையில் நல்ல காரியத்தைத் தொடங்குவார்கள், அதனால் திருமூலரின் கருத்துப்படி, சிதம்பரத்தில் பார்ப்பான்கள் அர்ச்சித்தால், முதல்வர் கருணாநிதிக்கு பொல்லா வியாதி ஏற்படுமென்று கருத்துக் கொள்ளலாமல்லவா?

"ஈசன் அடியார் இதயம் கலங்கிடத்
தேசமும் நாடும் சிறப்பும் அழிந்திடும்
வாசவன் பீடமும் மாமன்னர் பீடமும்
நாசமது ஆகுமே நம்நந்தி ஆணையே"

"என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறே" என்பதற்கிணங்க அம்மையப்பனைப் பாடிப்பணிதலையே தன் பணியாகக் கொண்ட சிவனடியாராகிய ஆறுமுகசாமியின் மனங்குளிர தமிழில் பாடுவதைத் தடை செய்து, அவரது இதயத்தைக் கலங்கச் செய்தமைக்குக் ஆள்பவர்கள் உரிய நடவடிக்கை எடுக்காது விட்டால், நாடு சிறப்பழியும், ஆட்சியும் நாசமாகும் இது நந்திதேவரின் மேல் ஆணை என்கிறார் திருமூலநாயனார், சித்தர்களிலெல்லாம் முதன்மையான சித்தராகிய திருமூலரின் வாக்குப் பொய்யாகுமா?

http://www.tamilnation.org/sathyam/east/th...hiram/mp004.htm


http://www.unarvukal.com/ipb/index.php?act=ST&f=43&t=2017&st=0#entry13453
 



///July 28, 2006 12:04 PM க்கு நம்ம Anonymous சொல்றது என்னன்னா:
///மறுபடி கேட்கிறேன்.உங்கள் 'கதைக்கு' என்ன ஆதாரம்? ஆதாரம் இல்லை அது வழியாக வந்த 'கதை' என்றால் அந்த கதையின் தொன்மைக்கும்,அதன் சரித்திர மூலகங்களைப்பற்றியும் ஒரு ஆதாரமாவது தாரும்.எந்த புத்தகத்தில் அம்மாதிரி எழுதப்பட்டுள்ளது?இதுநாள்வரை எந்த புத்தகங்களிலும் எழுதப்படாமல் வழிவழியாக வந்து இப்போது ஆரூரானால் முதல் முதலாக முகமூடியின் பதிவில் 2006ல் அச்சேற்றப்பட்டுள்ளதா?///


கனடாவிலிருந்து வெளிவரும் ஈழநாதம் பத்திரிகையில் திருமகள் என்ற புனைபெயரில் எழுதும் சைவப்பெரியாரால் எழுதப்பட்டது ஞானசம்பந்தரின் படுகொலை, இந்த விடயத்தில் சங்கர மடத்துடன் கூட அவர் வாதிட்டுள்ளார், அதை ஆதாரங்களுடன் புத்தக வடிவத்திலும்
வெளியிட்டுள்ளார். அதை விடச் சங்கர மடத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட "தமிழ்நாட்டுப் பிராமணர்களின் வரலாறு" என்ற புத்தகத்தில், தமிழர்களைக் குரங்குகளாகவும், பார்ப்பனர்களைத் தமிழ்நாட்டின் பூர்வீக குடிகளாகவும், தமிழர்களுக்கு நாகரீகத்தைக் கற்பித்தவர்களெனவும் வர்ணிக்கப்பட்டுள்ளதை அறிவீர்களா, அந்த விடய்த்திலும், திரு, திருமகளும், கனடாவின் ஈழநாதம் பத்திரிகையும், தமது எதிர்ப்ப்பைக் காண்பித்தார்கள். , வந்தான், வரத்தான் எல்லாம் பூச்சுற்றுவதற்கு இலங்கைத் தமிழர்கள் வெறும் சோற்றுத் தமிழர்களல்ல.
ஈழநாதத்தைத் தொடர்பு கொண்டால், அவரது மின்னஞ்சலும், கட்டுரைகளின் இணைப்பும் கிடைக்கும், அவரிடமே நீங்கள் ஆதாரம் கேட்கலாம். பல ஆராய்ச்சிகளும், தமிழ்நாட்டுக் கிராமப்புற நாட்டுக்கதைகள், பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் பழமொழிகள் என்பவற்றின் வேர்கள், காரணங்களை ஆராய்ச்சி செய்து தான், பிற்கால நந்தனாரைப் போல், சம்பந்தரும் பார்ப்பானார்களால் உயிரோடு கொளுத்தப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தார்கள்.
நந்தனார் துணிந்து சிதம்பரத்துக்குள் நுழைந்து தீட்டுப்படுத்தி விட்டார் என்பதற்காக தில்லைப் பார்ப்பான்களால் உயிரோடு எரிக்கப்பட்டார், ஞானசம்பந்தர் தமிழைக் காதலித்ததால் திருவெண்ணெய் நல்லூர்ப் பார்ப்பான்களால் உயிரோடு எரிக்கப்பட்டார், நல்லகாலம் தமிழ் பாடிய ஆறுமுகசுவாமியை எரிக்காமல் நையப்புடைத்ததுடன் நிறுத்தி விட்டார்கள் சிதம்பரத்து Anti Tamil தீட்சிதர்கள்.

//இப்பவாவது பதில் சொல்லும், எந்தப் பார்ப்பனத் தலைவனாவது தன்னைத் தமிழனாக, திராவிடனாக அடையாளப்படுத்தி உள்ளார்களா?/
இதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவுமில்லை, ஆதாரம் தரவுமில்லை, கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமோ?
///திராவிட சிசு என்றால் சூத்திரன் என்ற பொருளில் தான் சங்கரர் பாடினார்','சங்கராச்சாரியார் தமிழை நீஷபாசை என சொன்னார்'////


.சங்கராச்சாரியார் தமிழை நீசபாசை என்று சொன்னது மட்டுமல்ல, அவரது மெளனவிரதத்துக்குப் பின்பு தமிழில் பேசமாட்டார், அப்படிப் பேசினாலும் உடனடியாகத் தீட்டுப் போகக் குளித்து விடுவார் உலகத்திலுள்ள தமிழ் பேசும் மக்களனைவருக்கும் தெரிந்த *விடயமிது, உங்களுக்கு மட்டும் தான் தெரியவில்லை. தமிழர்கள் சூத்திரர்கள், அதனால் தான் கருவறைக்குள் நுழைந்து பூசை செய்ய அனுமதிக்கக் கூடாது என்கிறார்கள் பார்ப்பான்கள்.
சூத்திரர்கள்= தமிழர்= திராவிடர் (*விடயம்= Topic)

//தமிழ்நாட்டில் தமிழில் அர்ச்சனை செய்ய அனுமதிக்க வேண்டுமென்ற மதுரை ஆதீனத்தின் கருத்துக்கு 'சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது" என்று சொன்ன "மகாப்பெரியவா", காஞ்சி சங்கர மடத்து மடாதிபதி தானே? //


சும்மா தெரியாத மாதிரி பம்மாத்து விடாதீங்க அண்ணாச்சி, காஞ்சி சங்கராச்சாரி மட்டுமல்ல பெரும்பாலான பிராமணர்கள், சூத்திராள் தமிழில் பூசை பண்றதை ஏத்துக்க முடியாது என்று தான் சொல்கிறார்கள், சோ ராமசாமி கூட, ஆகம விதிக்கமைந்த கோயில்களில் சூத்திராள் பூசை பண்ணுறது ஏத்துக்க முடியாதென ஆகமத்தைத் தன்னுடைய தமிழின வெறிக்குத் துணைக்கழைக்கிறார். தமக்கு லாப ஏற்படுமாயிருந்தால் வேதங்கள், ஆகமங்கள் எல்லாவறையும் வளைப்பார்கள் பார்ப்பான்கள்.
காடன், மாடன், மதுரைவீரன், சுடலை மாடன், முனியாண்டி, ஐயப்பன் போன்ற சிறு தெய்வ வழிபாடு ஆகமத்தில் தடை செய்யப்பட்டுள்ளது, ஈழத்தில் தன்னந்தனியாக ஆங்கிலேயர்களை எதிர்த்துச் சைவத்தைக் காத்த ஆறுமுகநாவலர், ஈழத்தமிழர்களுக்கிடையில் தொன்று தொட்டு வழக்கத்திலிருந்து வரும் தமிழ்ப்பெண் கண்ணகியைத் தெய்வமாக வழிபடுவதை, ஆகமத்துக்கெதிரானதென்பதால் எதிர்த்தார், ஆனால் பார்ப்பனர்கள், ஆகமத்திலேயோ, வேதங்களிலோ சொல்லப்படாத சிறு தெய்வ வழிபாட்டு முறையிலான ஐயப்பனை இந்து மதத்தின் பிரதான தெய்வங்களிலொன்றாக மாற்றி விட்டார்கள், ஏனென்றால் தாழ்த்தப்பட்ட மக்களின் சிறு தெய்வமாகிய ஐயப்பன், பிரபலமடைந்து பணம் காய்க்கும் மரமாகி விட்டார் அதனால், பார்ப்பான்கள் ஆகம விதிகளை வளைத்து விட்டார்கள், எல்லாமே பணத்துக்குத் தாண்டா!
காஞ்சிப் பெரியவா மட்டுமல்ல, இந்து முன்னணி இராம கோபாலன் கூடத் தமிழில், தமிழர்கள் பூசை பண்ணுவற்கு எதிர்ப்பவர் தான்.
சில இணையத்தளங்களில் இருந்து சில இணைப்புக்களைத் தருகிறேன், அந்தப் பிரபல இணையத் தளங்களைத் தொடர்பு கொண்டு ஆதாரம் கேட்க மறந்து விடாதீர்கள் அனானிமஸ் அண்ணா.


("Neither do I agree with the nomination of) Sankarachariar. Sankarachariar is the one who does not speak Tamil immediately after his silent prayer (Mavuna Viratham) because he considers same as 'Neeshapashai'! To him only Sanskrit is 'Thevapashai' and he will speak only in that language. He is also the same individual who wants to perpetuate the Varnachratharmam and the attendant caste system laid down in the ‘holy’ Vedas. In the third volume of "Voice Divine" authored by him this is what he says-
"Therefore, the different duties ordained for each of the four varnas and Ashramams such as the Brahmin, Kshatriya, Vysya and Sudra should be strictly followed ad that they should not perform the duty ordained for another. Our shastras are firm in laying down that law is not the same for all."
His counter-part Puri Jaganatham Sankarachariar Jagatguru is still worse. He openly advocates the continuity of the caste system and has said that there is not enough soap in the world to wash the ‘theeddu’ out of low caste people. If this is Hinduism I will have none of it though I am born in it...)

("The story about Nanthanaar, an untouchable, who went to Thillai to witness the Blissful dance of Siva was supposed to have entered the flame praising the Holiest of the holy things, His graceful feet amidst the shower of flowers by the Devaas. This is a myth. The reality is the Thillai Moovayiravar burnt him to ashes for daring to pollute the sanctum sanctorum! The door (9th) through which Nanthanaar gained entry into the temple is still kept locked because of the "pollution" caused by an untouchable! I am narrating all these to establish the connection between Hinduism/Saivaism and caste system".)

http://www.tamilnation.org/forum/aryan/index.htm

http://www.tamilnaatham.com/page20060726.htm

"அருவண்ணத் தமிழ் மண்ணில்
ஆரியனை முன்போர் நாள்
வருக என அழைத்திங்கே
வாழ்வித்த முதுதமிழன்
சுருள்குடுமி ஆரியனின்
சூழ்ச்சிக்கே பலியானான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!


திருவோங்கு பாரதம்
தெய்வமென்றும் சிங்களம்
தருசுகமே சுகமென்றும்
தனை மறந்த பெருந்தமிழன்
ஒருநாடு தனக்கின்றி
ஊர் ஊராய் உதைபட்டான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர் தமிழன்!

அருளாளன் எந்தமிழன்
அனைத்தூரும் ஊரென்றான்.....
எருமை இவனை ஒருவன்
ஏ! கள்ளத் தோணி|| என்றான்!
பொருமி எழா இழிதமிழன்
பொறுத்திருப்போம் என்றானே....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்"

ஆரூரன்
 



it is to simplistic to say that dikshithar families have come down in no because they are living off the temple's properties.in that case lot dharmakarthas who are finishing off temple properties families should also be in sad state... anyway that is not what i want to say.
scientifically if dikshithars are marrying within these 360 families the chances for their genes to be not so strong is very high. infact eversince this awareness came lot of families have avoided the muraimappillai -muraipenn arrangements.heart dissease, low IQ , mental illness, diabetes are some of the conditions related to genes.
 



பிராமணர்களின் தமிழ்த் தொண்டு- சில தமிழெதிரிகளுக்காக முழுச்சமூகத்தையும் வெறுப்பது முறையா?

தமிழ்த்தொண்டிலும், தமிழ்ப்பற்றிலும் பிராமணர்கள் எவருக்கும் சளைத்தவர்களல்ல. ஒரு சில அழுகிய பழங்களுக்காக, பழக் கூடை முழுவதையும் எறிவது சரியா? ஒரு சிலதமிழெதிரிப் பார்ப்பனர்களுக்காக நாம் முழுப்பிராமண சமூகத்தையும் வெறுப்பது முறையா? பெரியாருடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த பிராமண எதிர்ப்பு அலையை எப்படி நிறுத்துவது, ஈழத்தில் இந்தப் பிராமண எதிர்ப்பு இல்லாது விட்டாலும் கூட, இணையத் தளங்களுக்கு அறிமுகமாகும் ஈழத்தமிழர்களும் இந்த அலையில் அடிபட்டுப் போகிறார்கள், அதற்கு நானே நல்ல உதாரணம், இதற்கு எங்களையும் குறை சொல்ல முடியாது, இணையத்தளங்களில் பல தமிழெதிரிப் பார்ப்பனர்கள் தமிழெதிர்ப்பு வெறியுடன், பெரியாரைப் பழிவாங்குவதற்காக உலகத்தமிழர்களனைவருக்கும் குழி பறிப்பதற்காக உலாவருகிறார்கள், அதற்கு அவர்கள் எடுத்துக் கொண்டுள்ள ஆயுதம், ஈழவிடுதலை எதிர்ப்பு.

உலகத்தமிழர்களுக்கு முன்னாலுள்ள பொறுப்பு என்னவென்றால், முழுப்பிராமண சமூகத்தையும் எதிரிகளாக்காமல், தமிழெதிரிகளை எந்தச் சாதியிலிருந்தாலும் எதிர்ப்பது தான், அதை எப்படிச் செய்வது? தமிழைத் தமிழர்களை, ஈழவிடுதலையை எதிர்ப்பவர்கள் பிராமணர்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழ் பேசும் முஸ்லீம்களிடையிலுமுண்டு, அவர்களை நாங்கள் ஓருவரும் கண்டிப்பதில்லை, ஈழத்தில் குழந்தைகள் தூக்கிலிடப்பட்டுக் கொடூரமாகக் கொல்லப்பட்டாலும், மூச்சு விடாதவர்கள் பலஸ்தீனத்திலுள்ள குழந்தைக்குக் காயப்பட்டால் மட்டும் குய்யோ, முறையோ என ஒப்பாரி வைக்கவும், ஊரைக் கூட்டவும் இவர்கள் தயங்குவதில்லை, அது தான் அவர்களின் தமிழுணர்வு.

தமிழ்ச் சமூகத்தின் 3% பிராமணர்கள் செய்திலுள்ள தமிழ்த் தொண்டைப் பாருங்கள், சாதியடிப்படையில் தமிழர்களுக்குக் கல்வி மறுக்கப்பட்டதால், கல்வியில் முன்னணி வகித்த அவர்கள் இவ்வாறு செய்தார்கள் என வாதாடினாலும், அவர்களில் பலர் தமிழை இழித்து, சமஸ்கிருதத்தை மேம்படுத்தினாலும், அக்காலத்துப் பிராமணர்கள் அனைவரும் தமிழை வெறுத்தார்களெனக் கூற முடியாது, பிராமணர்கள் தமிழில் பலநூல்களை ஆக்கியது மட்டுமல்ல. பல மொழிகளிலிருந்து பல்வேறு நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துமுள்ளார்கள்.



QUOTE
1. சமஸ்கிருதக் கலப்பற்ற தூய்மையான தமிழில் எழுதியவர்கள் நாயன்மார்களும், தேவாரபதிகங்களுக்கு உரை எழுதிய பிராமணர்களும் தான். உதாரணமாகப் பரிமேலழகரின் தூயதமிழுரையை யாராலும் இலகுவாகப் புரிந்து கொள்ளமுடியாது.

2.உண்மை, பிராமணர்களும் தம்முடைய குறுகிய நோக்கங்களும், சுயநலமும், அரசியல் தந்திரமும் உடையவர்களாக இருந்தார்கள், பல சமூக அநீதிகளுக்கு அவர்களும் பொறுப்பாயிருந்தார்கள். ஆனால் தமிழர்களிடையிலுள்ள வேறு உயர்சாதியினர்களை விட எவ்வாறு அவர்கள் வேறுபட்டுள்ளார்கள்? பிராமணரல்லாத, உயர் சாதித்தமிழர்கள், தாழ்த்தப்பட்டவர்களைக் கொல்லுவதை நான் கேள்விப்பட்டேன். உண்மையிலேயே, மிக மிகக் கொடுமையான சாதிப்பாகுபாடு இருந்தது இலங்கையின் தமிழ்ப்பகுதிகளில் தான், அங்கு பிராமண ஆதிக்கம் என்பது கிடையவே கிடையாது,

3.தமிழைச் சமஸ்கிருதப்படுத்தியதற்காக பிராமணர்களைக் குற்றவாளியாக்குவது தவறு. தென்கலை அய்யங்கார்கள் சுத்த தமிழ் வார்த்தையைப் பாவிக்கும் போது பிராமணரல்லாத தமிழர்கள் சமஸ்கிருதச் சொல்லைப் பாவிப்பது வழக்கம். தமிழரான இராமலிங்க அடிகளாரின் பாடல்கள் பெருமளவு சமஸ்கிருதமயமாக்கப் பட்ட தமிழிலுள்ளன.

4. சமஸ்கிருதமும் தமிழும் ஒரே இலக்கிய, இலக்கண மரபைக் கொண்டவை. உண்மை என்னவென்றால் , சமஸ்கிருத இலக்கியங்கள் எல்லாம் பெருமளவில், தமிழ், திராவிட இலக்கிய மரபிடம் கடன் பட்டுள்ளன, பெருமளவில் இரவல் வாங்கியுள்ளன. உதாரணமாக சிறப்பான காளிதாசின் சமஸ்கிருதக் காவியங்களை எடுத்துக் கொண்டால், நிச்சயமாக அவை தமிழிலக்கிய மரபை ஒத்தவை என்பது தெளிவாகும்.

5.தமிழ் வளமானது, ஏனென்றால் தமிழில் பல நடைமுறைகளும், மரபுகளுமுண்டு. இந்திய மொழிகளிலேயே தமிழில் மட்டும் தான் சமஸ்கிருதமயமாக்கப் படாத, மரபுத் தமிழுண்டு.(தெலுங்கில் அச்சு தெலுங்கு, என சுத்த தெலுங்கு மரபிருந்தாலும், அதுவும் பிராமணர்கள் உருவாக்கியது தான். ஆனால் தமிழில் பல்வேறு நடைமுறைகளுண்டு. பல பேச்சு வழக்குகள், அதிகளவு சமஸ்கிருதமயமாக்கப் பட்ட தமிழ், ஆங்கிலம் கலந்த தமிழ், இவையெல்லாம் தமிழுக்கு அழகு சேர்ப்பவை, இவற்றை நீக்கி வளமான ஒரு மொழியை எதற்காக வறுமைப்படுத்த வேண்டும்.

6. ஒரு தமிழரல்லாத, அன்னியனாகிய என்னுடைய தனிப்பட்ட வேண்டுகோள் என்னவென்றால், தமிழ்க்கலாச்சாரம் அழிவதற்குக் காரணம் ஒரு சாதி அல்லது ஒரு பிரிவு மக்களல்ல, தமிழ்ப்பண்பாடு பாழ்பட்டதற்குக் காரணம் தமிழர்களுக்கிடையிலுள்ள சாதிப்பிரிவும், பெண்ணுரிமை மறுக்கப் படுவதும் தான்,( ஈழத்தில் காலத்தின் கட்டாயத்தால் நிலைமை மாறுகிறது). சாதிக் கலப்பு மணங்களை ஊக்குவியுங்கள், சீதனத்தை இல்லாதொழியுங்கள், பெண்களுக்குச் சுயமரியாதையையும், சுதந்திரத்தையும் அளியுங்கள், எல்லாவற்றுக்கும் மேலாக பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள் என்ற பச்சாத்தாபத்தையும், சுயவிரக்கத்தையும் விட்டொழியுங்கள், இது சில குறுகிய நோக்கம் கொண்டவர்கள், தமது அரசியல், பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காகத் தமிழர்களுக்கிடையிலுள்ள பிரிவுகளைத் தூண்டி விட்டு அதில் இலாபமடைவதற்கு இடமளிப்பதாகத் தான் முடியும்.

7. தயவு செய்து குறித்துக் கொள்ளுங்கள். நான் பிராமண ஆதரவோ அல்லது பிராமண எதிர்ப்பாளரோ அல்ல, சமஸ்கிருத மொழி எப்படியான எதிர்மறையான விளைவுகளை இந்தியாவில் மாநில மொழிகளின் வளச்சியில் ஏற்படுத்தியது என்பதை நான் நன்கறிவேன். உண்மையில், தென்னிந்தியாவுக்கு நடந்த மிகவும் விரும்பத்தகாத இரண்டு சம்பவங்கள் சமஸ்கிருதமும் ஆங்கிலமும் தானென A. K ராமானுஜன் என்னிடம் கூறினார், அவர் ஒரு பிராமணர். சமஸ்கிருதத்தின் மேல் கொண்ட அடிமைத் தனமான பக்தி எதிர்மறையான விரும்பத்தகாத விளைவை தமிழில் மட்டுமல்ல, தமிழை விட மேலாகப் பல தென்னிந்திய மொழிகளில் ஏற்படுத்தி விட்டதென்பது உண்மை. ஆனால் நாம் வரலாற்றை மாற்ற முடியாது. வேற்று மொழிச்சொல் ஏற்றுக் கொள்ளப்பட்டு குறிப்பிட்ட மொழியின் வளக்கத்தில் வந்த பின்பு, எந்த மொழிச் சொல்லிலும், நல்லது, கெட்டதென்பது இயற்கையில் கிடையாது.

8. உண்மையில் எது கொடுமை என்றால், எந்தக் கருத்தை நான் அருவருப்புடன் பார்க்கிறேனென்றால், சிலர் , கொஞ்சமும் சிந்திக்காமல் சமஸ்கிருதத்தை உயர்ந்த மொழியாக நினைப்பது தான். சமஸ்கிருதம் உயர்வான மொழியல்ல, உண்மையில் சமஸ்கிருதம் மட்டுப்பட்ட மொழி, ஏனென்றால் சமஸ்கிருதத்தில் பேச்சு வழக்குக் கிடையாது. ஆனால் சமஸ்கிருதச் சொற்கள், தென்னிந்திய மொழிகளின் பொதுப் பேச்சு வழக்கில் கலந்ததால், சமஸ்கிருதச் சொற்கள் வளம் பெற்று, சமஸ்கிருதச் சொற்களைக் கலந்த மொழியையும் வளமாக்கியது (ஆங்கிலத்தில் லத்தீன், ப்ரெஞ்ச் சொற்கள் கலந்திருப்பது போன்றது தான் இதுவும்.)


A Harvard B.A., M.A. and Ph.D., Professor Hart is a graduate of the Department of Sanskrit and Indian Studies, where his studies included both Tamil and Sanskrit. At Berkeley Professor Hart has developed the Tamil program of language, literature and cultural studies to be the most important of its kind in North America. Professor Hart is the author of textbooks for both Tamil and Sanskrit, and of translations of classical Tamil poetry, and the Tamil Ramayana of Kampan. .

இவை தமிழறிஞரும், கலிபோர்ணியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப்பீடத்தின் தலைவர், பேராசிரியர் ஜோர்ஜ் ஹாட் (Prof. George Hart) அவர்களின் கருத்தின் தமிழாக்கம்.

http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=2025

அரூர்ன்
www.unarvukal.com
 



//கனடாவிலிருந்து வெளிவரும் ஈழநாதம் பத்திரிகையில் திருமகள் என்ற புனைபெயரில் எழுதும் சைவப்பெரியாரால் எழுதப்பட்டது ஞானசம்பந்தரின் படுகொலை, இந்த விடயத்தில் சங்கர மடத்துடன் கூட அவர் வாதிட்டுள்ளார், அதை ஆதாரங்களுடன் புத்தக வடிவத்திலும்
வெளியிட்டுள்ளார். அதை விடச் சங்கர மடத்தால் அண்மையில் வெளியிடப்பட்ட "தமிழ்நாட்டுப் பிராமணர்களின் வரலாறு" என்ற புத்தகத்தில், தமிழர்களைக் குரங்குகளாகவும், பார்ப்பனர்களைத் தமிழ்நாட்டின் பூர்வீக குடிகளாகவும், தமிழர்களுக்கு நாகரீகத்தைக் கற்பித்தவர்களெனவும் வர்ணிக்கப்பட்டுள்ளதை அறிவீர்களா, அந்த விடய்த்திலும், திரு, திருமகளும், கனடாவின் ஈழநாதம் பத்திரிகையும், தமது எதிர்ப்ப்பைக் காண்பித்தார்கள். , வந்தான், வரத்தான் எல்லாம் பூச்சுற்றுவதற்கு இலங்கைத் தமிழர்கள் வெறும் சோற்றுத் தமிழர்களல்ல.//

விடுதலைப்புலிகள் ஈழப்பத்திரிக்கைகளில் எழுதிகிட்டா உண்மையாகிடுமா?நானும் பார்ப்பன முரசு எனும் பத்திரிக்கையில் ஈழத்தமிழர் தான் சம்பந்தரை கொளுத்தினர் என எழுதினால் அது உண்மையாகிவிடுமா?வழி,வழியாக வந்த புராண (புருடாக்கள்) கடைசிக்கு தொன்மையானவை என்பதற்காவது ஆதாரம் இருக்கு.நீங்கள் அடித்து விடும் கதை ஒரு 10 வருஷத்துக்குள் எழுதப்பட்டிருக்குமா?அப்போது அதற்கு எந்த மதிப்பும்,நம்பகமும் கிடையாது.

கடந்த 10 வருடங்களில் எழுதப்பட்ட கதை என ஒத்துக்கொள்கிறேன்.:-)

//ஈழநாதத்தைத் தொடர்பு கொண்டால், அவரது மின்னஞ்சலும், கட்டுரைகளின் இணைப்பும் கிடைக்கும், அவரிடமே நீங்கள் ஆதாரம் கேட்கலாம். பல ஆராய்ச்சிகளும், தமிழ்நாட்டுக் கிராமப்புற நாட்டுக்கதைகள், பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படும் பழமொழிகள் என்பவற்றின் வேர்கள், காரணங்களை ஆராய்ச்சி செய்து தான், பிற்கால நந்தனாரைப் போல், சம்பந்தரும் பார்ப்பானார்களால் உயிரோடு கொளுத்தப்பட்டார் என்ற முடிவுக்கு வந்தார்கள்.//

கதை சொன்னது நீர்.நீர் தான் தொடர்பு கொண்டு ஆதாரத்தை தெரிவிக்கணும்.பேச்சுவாக்கில்,காத்துவாக்கில் வந்தது என்று சொல்லிக்கொண்டு கனடாவில்,இலங்கை தமிழர்கள் படிக்கும் பத்திரிக்கையில் எழுதினால் அது ஆதாரமா?

ஒரு கதைக்கு அது எத்தனை தொன்மையாக வழங்கப்பட்டுக்கொண்டு வருகிறது என்பதைப் பொறுத்துதான் மதிப்பு.10 வருடத்துக்குள் எழுதப்பட்ட கதைக்கு எந்த மதிப்பும் கிடையாது.

//சங்கராச்சாரியார் தமிழை நீசபாசை என்று சொன்னது மட்டுமல்ல, அவரது மெளனவிரதத்துக்குப் பின்பு தமிழில் பேசமாட்டார், அப்படிப் பேசினாலும் உடனடியாகத் தீட்டுப் போகக் குளித்து விடுவார் உலகத்திலுள்ள தமிழ் பேசும் மக்களனைவருக்கும் தெரிந்த *விடயமிது, உங்களுக்கு மட்டும் தான் தெரியவில்லை.//

நான் இந்த மடலைப் பார்த்ததும் உடனடியாக உலகிலுள்ள தமிழ்பேசும் மக்கள் அனைவரையும் தொடர்புகொண்டு கேட்டேன்.யாரும் இப்படி ஒரு விஷயம் தங்களுக்கு தெரியாது என சொல்லிவிட்டார்கள்.அது மட்டுமில்லாமல் இப்படி கேனத்தனமாக ஏதாவது உளறுமுன் அதற்கு ஆதாரம் தரவேண்டாமா,உலகம் பூரா தெரியும் என உளறுவதுதான் ஆதாரமா என என்னைப் பிடித்து உலுக்கி எடுத்துவிட்டார்கள்.

//சும்மா தெரியாத மாதிரி பம்மாத்து விடாதீங்க அண்ணாச்சி, காஞ்சி சங்கராச்சாரி மட்டுமல்ல பெரும்பாலான பிராமணர்கள், சூத்திராள் தமிழில் பூசை பண்றதை ஏத்துக்க முடியாது என்று தான் சொல்கிறார்கள், சோ ராமசாமி கூட, ஆகம விதிக்கமைந்த கோயில்களில் சூத்திராள் பூசை பண்ணுறது ஏத்துக்க முடியாதென ஆகமத்தைத் தன்னுடைய தமிழின வெறிக்குத் துணைக்கழைக்கிறார். தமக்கு லாப ஏற்படுமாயிருந்தால் வேதங்கள், ஆகமங்கள் எல்லாவறையும் வளைப்பார்கள் பார்ப்பான்கள்.//

ஆதாரம் பிளிஸ்.

//இப்பவாவது பதில் சொல்லும், எந்தப் பார்ப்பனத் தலைவனாவது தன்னைத் தமிழனாக, திராவிடனாக அடையாளப்படுத்தி உள்ளார்களா?
இதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவுமில்லை, ஆதாரம் தரவுமில்லை, கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமோ?//

சங்கராச்சாரியார் தமிழை நீசபாஷை என சொன்னார் என குண்டுப்புளுகு அடித்தீர்கள்.அதற்கு ஆதாரம் கேட்டால் 'எந்தப் பார்ப்பனத் தலைவனாவது தன்னைத் தமிழனாக, திராவிடனாக அடையாளப்படுத்தி உள்ளார்களா?' என என்னை கேள்வி கேட்கிறீர்கள்.

உம்ம புரட்டுகளை அம்பலப் படுத்தவே 'சங்கராச்சாரியார் தமிழை நீசபாஷை என சொன்னார்' என்று சொன்னதற்கு உங்களிடம் எந்த ஆதாரமும் இல்லாததை நிருபிக்கவே நான் அதை திருப்பி,திருப்பி கேட்கிறேன்.

நீங்கள் கேட்கும் 'பார்ப்பான் தன்னை தமிழன் என அடையாளம் காட்டினானா?' எனும் பதில் கேள்வி நீங்கள் சொன்ன பொய்யை மறக்கடிக்க நீங்கள் செய்யும் தந்திரம்.இதற்கு பதில் சொல்லப்போக நீங்கள் ஒரிஜினல் கேள்வியை விட்டுவிட்டு இதை பிடித்து கொள்வீர்கள்.நீங்கள் சொன்னதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை என்பதை ஒத்துக்கொண்டால் இதற்கு பதில் தரத்தயார்.

அதனால் மீண்டும் கேட்கிறேன்.

'சங்கராச்சாரியார் தமிழை நீசபாஷை என சொன்னார்' என்று சொன்னதற்கு உங்களிடம் ஆதாரம் இருக்கா?

இருக்கா,இல்லையா?

Yes or no type பதில் ப்ளீஸ்.

//சில இணையத்தளங்களில் இருந்து சில இணைப்புக்களைத் தருகிறேன், அந்தப் பிரபல இணையத் தளங்களைத் தொடர்பு கொண்டு ஆதாரம் கேட்க மறந்து விடாதீர்கள் அனானிமஸ் அண்ணா.//

இது எல்லாம் ஆதாரம் கிடையாது.நீங்கள் சொன்ன தளங்களில்(அவை எந்தெந்த கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்குபவை என்பது தெரியும்) அதே கதையை சொல்லி எந்த ஆதாரமும் தராமல் இருக்கு.அவற்றின் இந்து விரோதமும்,இந்திய விரோதமும் படித்தாலே தெரிகிறது.

நான் ஏன் அவர்களை தொடர்பு கொண்டு ஆதாரம் கேட்கவேண்டும்?சொன்னவர் நீங்கள்.நீங்கள் தான் தரணும்.

அருவண்ணத் தமிழ் மண்ணில்
அகதியை முன்போர் நாள்
வருக என அழைத்திங்கே
வாழ்வித்த முதுதமிழன்
சுருள்குடுமி அகதியின்
சூழ்ச்சிக்கே பலியானான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்!


திருவோங்கு பாரதம்
தெய்வமென்றும் தமிழகம்
தருசுகமே சுகமென்றும்
தனை மறந்த பெருந்தமிழன்
தன்நாடு தனக்கிருந்தும்
அகதியால் உதைபட்டான்....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர் தமிழன்!

அருளாளன் எந்தமிழன்
அனைத்தூரும் ஊரென்றான்.....
ஒன்றே குலமென்றான்
எருமை இவனை ஒருவன்
பார்ப்பனா நீ தமிழன் இல்லை என்றான்!
பொருமி எழா இழிதமிழன்
பொறுத்திருப்போம் என்றானே....
பெருமனத்தால் கெட்ட
பேயனுக்குப் பேர்தமிழன்"
 



/பிராமணர்களின் தமிழ்த் தொண்டு- சில தமிழெதிரிகளுக்காக முழுச்சமூகத்தையும் வெறுப்பது முறையா?/

/தமிழ்த்தொண்டிலும், தமிழ்ப்பற்றிலும் பிராமணர்கள் எவருக்கும் சளைத்தவர்களல்ல. ஒரு சில அழுகிய பழங்களுக்காக, பழக் கூடை முழுவதையும் எறிவது சரியா? ஒரு சிலதமிழெதிரிப் பார்ப்பனர்களுக்காக நாம் முழுப்பிராமண சமூகத்தையும் வெறுப்பது முறையா? /

நேர்மையான வாதம்.இப்படி முதலிலேயே சொல்லியிருந்தால் நான் ஏன் சண்டைக்கு வரப்போகிறேன்?

போனது போகட்டும்.ஈழத்தமிழரும் பார்ப்பனரும் இனியாவது தமிழர் என்ற முறையில் ஒன்றுபட்டால் மகிழ்ச்சி.இருவரும் ஒருவரை ஒருவர் எதிரிகளாய் பார்க்காமல் சகோதரர்களாய் பார்த்தால் மகிழ்ச்சி.இணையத்திலும் ஊடகத்திலும் இலங்கை தமிழருக்கு எதிராய் எழுதும் சோ,இந்து ராம் போன்றோரை பிராமண ஜாதியின் பிரதிநிதிகள் என கருதி பிராமண ஜாதி முழுவதையும் எதிர்ப்பது சரியல்ல.

ஈழபோரை எதிர்க்க வேண்டிய எந்த அவசியமும் பிராமணருக்கு இல்லை.தமிழன் என்ற முறையில் இருவரும் ஒருவரை ஒருவர் மதித்து நடத்தலே நன்று

இந்த விவாதத்தை இத்துடன் முடித்து கொள்கிறேன்.

நல்லதொரு பதிவை எழுதிய முகமூடிக்கு நன்றி.
 



//சும்மா தெரியாத மாதிரி பம்மாத்து விடாதீங்க அண்ணாச்சி, காஞ்சி சங்கராச்சாரி மட்டுமல்ல பெரும்பாலான பிராமணர்கள், சூத்திராள் தமிழில் பூசை பண்றதை ஏத்துக்க முடியாது என்று தான் சொல்கிறார்கள், சோ ராமசாமி கூட, ஆகம விதிக்கமைந்த கோயில்களில் சூத்திராள் பூசை பண்ணுறது ஏத்துக்க முடியாதென ஆகமத்தைத் தன்னுடைய தமிழின வெறிக்குத் துணைக்கழைக்கிறார். தமக்கு லாப ஏற்படுமாயிருந்தால் வேதங்கள், ஆகமங்கள் எல்லாவறையும் வளைப்பார்கள் பார்ப்பான்கள்.//

இந்த அனானிமஸ் பார்ப்பான் சும்மா இப்படி ஆதாரம் கேட்டு விதண்டாவாதம் பண்ணினால், காஞ்சி காமகேடிகளின் தமிழ்திர்ப்பும், தமிழின வெறுப்பும் மறைந்து போய் விடுமெனக் கனவு காண்கிறார், அந்த ஒட்டுண்ணிப்ப பார்ப்பான்களின் தமிழெதிர்ப்பும், கூட இருந்தே குழி பறிக்கும் தன்மையும், இவர் இப்படி இங்கு உளறிக் கொட்டியவுடன் போய்விடுமா? காஞ்சி காமகேடி பீடம் அண்மையில் வெளியிட்ட தமிழ்நாடு பிராமணர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் தமிழர்களை இழிவு படுத்துவதைப் பற்றிக் கூறினேன், ஆனால் இந்த அனானிமஸ் பார்ப்பான் அதைப் பற்றி மூச்சு விடவில்லை. இன்று கூட அந்தப் சிதம்பரத்துப் பரதேசித் தீட்சிதன்கள் தமிழ்த் தேவாரம் திருவாசகம், தமிழர்களின் கோயிலுக்குள் பாட விட முடியாது என்று மறுத்து, அடம்பிடிக்கிறார்கள், 65 மில்லியன் சோற்றுத் தமிழர்கள் இந்தப் பார்ப்பனத் திமிரைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் தான் கேணையன்கள் நாங்களல்ல, சங்கராச்சாரி இலங்கையில் வந்து தமிழை நீச பாசை என்று சொல்லியிருந்தால் அந்தியேட்டிக்கு எலும்பும் மிஞ்சியிருக்காது ஓய்.
ஆதாரம் வேண்டுமா, ஆதாரம், அந்த உம்மாள் தாத்தாச்சாரியார், காஞ்சி கேடியோடும் கூடப்பழகி, உங்களின் திருகு தாளமெல்லாம் அறிந்த பார்ப்பான் தான், ஊரறிய, உலகறிய புத்தகமாய் அடிச்சு வெளியிட்டான் ஓய்,

உமக்கு சங்கராச்சாரி தமிழை நீசபாசை எனச் சொல்லவில்லையென்பதில் நம்பிக்கையிருந்தால் மானநஸ்ட வழக்குத் தொடரும் ஒய்., இருக்கிற வழக்கோட இன்னொன்றாக காமகேடி மடம் எதற்காக, அந்த உண்மைச் சம்பவத்தை எழுதிய ராமனுஜம் தாத்தாச்சாரியார் மீதும், நக்கீரன் பத்திரிகை மீதும் வழக்குத் தொடரவில்லை, இப்பொழுது மட்டும் காலம் கடந்து விடவில்லை . துணிவிருந்தால் நீர் வழக்குப் போடும். அது மட்டுமல்ல, அதை வெளியிட்ட வலைப்பதிவாளர்களிடமெல்லாம் வழக்குப் போடும் பார்க்கலாம். உம்மைப் போன்ற பார்ப்பான்கள் தான் தமிழினத்தின் சாபக்கேடு, கூடவிருந்தே குழி பறிக்கும் ஜென்மங்கள், தமிழர்களின் சரித்திரம் முழுவதும் உம்மைப் போன்ற தமிழெதிரிப் பார்ப்பான்களின் back stabbing நிறையவுள்ளது.
தமிழர்களுக்கு மட்டுமல்ல, திராவிடர்கள் அனைவருக்கும் உம்மைப் போன்ற தமிழெதிரிப் பார்ப்பன ஜென்மங்கள் தான் சாபக்கேடு. திருமலைநாயக்கனுடைய ஆட்சியும், அரசும் வீழ்வதற்குக் காரணமானதும், திருமலை நாயக்கரின் பெருந்தன்மையினால் வயிறு வளர்த்த பார்ப்பான தான் என்ற சரித்திரம் தெரியுமா, அல்லது அதற்கும் ஆதாரம், ஆதாரம் என்று, ஏதோ பெரிய கெட்டித்தனமாக வாதம் பண்ணுவதாக நினைத்து விதண்டாவாதம் பண்ணுவீரோ, உம்மைப் போன்றது, சிதம்பரத்துத் தீட்சிதன்கள் போன்ற தமிழெதிரிகள் தான் தமிழர்களின் சாபக்கேடு, உடனிருந்தே கொல்லும் நோய், அதைத் தீர்த்தால் தமிழினத்துக்கு விடிவு உண்டாகும்.

///ஆதாரம் பிளிஸ்//

இது தான் ஆதாரம், இன்ன்மொரு பார்ப்பான் தான் வெறும் வாயால் மட்டும் சொல்லவில்லை, புத்தகமடித்தும் விட்டிருக்கிறான் ஓய், வக்கிருந்தால் அந்தப் பார்ப்பானுக்கெதிராக மான நஸ்ட வழக்குப் போட்டு, நிரூபியும் ஒய், அல்லது வாயை மூடிக் கொண்டு போம், ஒரு உருப்படியாக வாதாடத் தெரியாமல், நான் சொல்வதை மாற்றி ஒரு அர்த்தமுமில்லாமல் உளறும் உம்முடன் பேச எனக்கு நேரமில்லை, வாதாட வேண்டுமானால், என்னை எங்கு காணலாமென்று, அந்த இணையத்தளத்தில் இப்படித்தான் நீர் விதண்டாவாதம் பண்ணுவதும் எனக்குத் தெரியும், அங்கு நீர் பார்ப்பானில்லை எனச் சத்தியம் பண்ணுவீர் அவ்வளவு தான்.


-ராமனுஜ தாத்தாச்சாரியார் என்பவரால் எழுதப்பட்ட "இந்து மதம் எங்கே போகிறது" என்ற புத்தகத்திலிருந்து சிலபகுதிகள்-

""அழைத்து வந்த அக்கூட்டங்களில் பேச வைத்தோம்.
இந்த இறை இயக்கம் 15 ஆண்டுகளாய் வெற்றிகரமாக நடந்தது.
சனாதன தர்மசபையில் ஆரம்பித்து... வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை, ஆஹம சிற்ப சதஸ் என வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தாலும் மகாபெரியவருக்கு ஒரு மனக்குறை.

திருவிடைமருதூர் சத்திரத்தில் நானும், அவரும் ஒரு நாள் தங்கியிருந்தபோது அந்த மனக்குறையை என்னிடம் எடுத்து வைத்தார். “ஏன் தாத்தாச்சாரியாரே - நாம எவ்வளவோ சபை நடத்துகிறோம். உபன்யாஸம் பண்றோம். ஹோமம் பண்றோம். ஆனா... பிராமணாளுக்கும், மத்தவாளுக்கும் இதனால நெருக்கம் உண்டாகியிருக்கோ? இல்லியே... அப்படியானா நம்மகிட்டதான் ஏதோ தப்பு இருக்கு. இவா ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கிறா மாதிரி ஏதாவது பண்ணணுமே...” என்ற மகாபெரியவரிடம் நான் கொஞ்சம் ஆலோசனைகளைத் தந்தேன்.

நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்தோம். இவா ரெண்டு பேரையும் இணைக்க கடவுள்தான் பாலம். கடவுளை மட்டும் வச்சிண்டு சேர்க்கறது எப்படி? ரெண்டு பேருக்கும் தெரியக்கூடிய பாஷையை எடுத்துப்போம்.
தமிழ்தானே!
ஆழ்வார்களோ பாசுரம், நாயன்மார்களோட பாடல்கள். இன்னும் சுலபமா திருப்பாவை, திருவெம்பாவை இது ரெண்டையும் வச்சே சேர்க்க முடியாதோ?”
திருவிடைமருதூர் சத்திரத்தில் மகாபெரியவர் என்னிடம் இந்த திட்டத்தை தெரிவித்தபோது அவருடைய கண்களில் ஞானத்தோடு நம்பிக்கையும் மின்னியது.

“இதப்பாரும் எல்லா கோயில்கள்லயும் திருப்பாவை திருவெம்பாவை உற்சவம் நடத்துவோம். இதுக்கு முன்னாடி நாம நடத்தின உபன்யாஸங்களைவிட இது இன்னும் நன்னா போய்ச் சேரும். ஏன்னா - நாம எடுத்துண்டதும் தமிழ். சொல்றதும் தமிழ் என்ன சொல்றீர்?”
என மகாபெரியவர் கேட்டபோது, சகல ஜனங்கள்மீதும் அவருக்கு இருக்கும் ஈர்ப்பு எனக்குப் புலப்பட்டது.
நாங்கள் இப்படி பெரிய திட்டம்பற்றி சத்தமாக சிரித்துப் பேசிக் கொண்டிருந்தபோதும்... சத்திரத்தில் இருந்த மேலும் சிலருக்கு அது புரியவில்லை. ஏன் அவர்கள் செவிடா என்று கேட்காதீர்கள்.
அவர்கள் செவிடல்ல. நாங்கள் பேசிக்கொள்வது சுத்த சமஸ்கிருதத்தில்தான். அதனால் பல பிராமணர்களுக்குக்கூட நாங்கள் பேசிக் கொள்வது புரியாது.
“ரகசியமா பேசுகிறீர்கள்? தமிழில் பேசினால் என்ன?” என்று மகாபெரியவர் நகர்ந்த பிறகு சிலர் என்னிடம் கேள்வி கேட்டார்கள். அதற்கு நான் சொன்னேன்.
“உனக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை என்றால் கற்றுக்கொள். உனக்காக அவர் ஒரு நாளைக்கு எத்தனை தடவை ஸ்நானம் பண்ணுவார்? புரிந்து நடந்துகொள்...” என்றேன். அப்போதும் அந்த கேள்வியைக் கேட்டவர்களுக்குப் புரியவில்லை.
உங்களுக்கு...?
நீங்களும் மகா பெரியவரும் ஏன் சமஸ்கிருத்திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்... ஸ்நானத்தை முடிச்சுப் போடுகிறீர்கள். பேசிக் கொண்டிருப்பதற்கும் குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்...?”
...மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள். சத்திரத்தில் இருந்த சிலர் அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன். அந்த பதிலை உங்களுக்குச் சொல்வதற்கு முன்... மகாபெரியவர் திருப்பாவை ...திருவெம்பாவை என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்ட வழியில் சொல்கிறேன்.
தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்குப் பொருள். (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்.!
தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.
தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாகவும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும். உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல் பொழுது விஸ்தாரமாகும்.
இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடிகாலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிலுசிலு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு ‘பாவை தெய்வம்’ பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.
இப்பண்பாடு நீட்சியாகி... தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள்.
இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து... ‘நமது கோரிக்கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம். நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ அவரை முதலில் எழுப்ப வேண்டும்’ என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.
கடவுளை மனித வழியில் அணுகுவது என்ற கலாச்சாரம் இது. பிற்பாடு... கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற ‘நாயக’ நாயகி பாவம்’ வரை வளர்ந்தது இந்தப் பண்பாடு.
தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி... கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு, அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு, ஆதலால் ‘பாவை நோன்பு’ ஆயிற்று.

இத்தகைய தூய தமிழ் கலாச்சாரத்தைத் தான் சைவத்தின் மாணிக்கவாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள்.
திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள். இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத்துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.
தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக்கியத்தை ‘பாவைமாநாடு’ என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகா பெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்திருக்கும்.

இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடை மருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன ‘ஸ்நான’ பதில் அவர்களுக்கு புரியவில்லை.
அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக... மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன். அது...
கும்பகோண மடம்... சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிறக் கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.
அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட ‘மடி’ அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளிக்கவேண்டும். அந்த வகையில் குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.
அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்... நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.
அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்... ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்..’ என்றேன்.

‘இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்’ என்றார் பக்தர்.
எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார்.
போனேன். கேட்டார் சொன்னேன். ‘இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...” என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். நான் சொன்னதுதானப்பா... சுவாமிகள் மௌனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்.. என்றேன்.
‘அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’ என தாய்மொழியாம் தமிழில்’ மகாபெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம்.
(தொடரும்)


//இப்பவாவது பதில் சொல்லும், எந்தப் பார்ப்பனத் தலைவனாவது தன்னைத் தமிழனாக, திராவிடனாக அடையாளப்படுத்தி உள்ளார்களா?
இதற்கு நீங்கள் இன்னும் பதில் சொல்லவுமில்லை, ஆதாரம் தரவுமில்லை, கேள்வி கேட்க மட்டும் தான் தெரியுமோ?//

உமக்குத் துணிவிருந்தால் இந்த வலைப்பதிவாளர் மீதும் மானநஸ்ட வழக்குப் போடும் பார்ப்போம்.

http://balasthoguppu.blogspot.com/2005/07/26.html

உம்மைப் போன்ற ஒரு சில Anti Tamil பார்ப்பான்களால், இத்தனை நூற்றாண்டுகளாகியும் நீங்கள்தமிழர்கள்ல்ல் எனவும், எங்கிருந்து வந்தீர்களென்பதைத் தமிழர்கள் விவாதிக்கிறார்கள். சங்கராச்சாரி தமிழை நீசபாசை என்று சொல்லித் தமிழ்பேசினால் தீட்டுப் போகக் குளித்ததை, திருமாவளவன் கனடாவிலும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், வைகோ அமெரிக்காவிலும், கூட்டங்களில் பேசி பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது, அந்த ஆதாரத்தை வைத்து, வைகோவும் திருமாவளவனும், சங்கராச்சாரி சொல்லாததைச் சொல்லி விட்டார்கள் என வழக்குப் போட்டு நிரூபியும் பார்க்கலா, இனியும் ஆதாரம் கேட்டீரானால் அது உம்முடைய கையாலாகாத் தனத்தையும், விதண்டாவாதத்தையும் தான் காட்டுகிறது.

ஆரூர்ன்
 



ஆரூரன்

நீர் திருந்தி விட்டீரென ஒரு வினாடி நினைத்தேன்.அது தப்பு என நிருபித்து விட்டீர்கள்.

/இந்த அனானிமஸ் பார்ப்பான் சும்மா இப்படி ஆதாரம் கேட்டு விதண்டாவாதம் பண்ணினால், காஞ்சி காமகேடிகளின் தமிழ்திர்ப்பும், தமிழின வெறுப்பும் மறைந்து போய் விடுமெனக் கனவு காண்கிறார், அந்த ஒட்டுண்ணிப்ப பார்ப்பான்களின் தமிழெதிர்ப்பும், கூட இருந்தே குழி பறிக்கும் தன்மையும், இவர் இப்படி இங்கு உளறிக் கொட்டியவுடன் போய்விடுமா?/

நீர் சொன்னதற்கு தானே ஓய் ஆதாரம் கேட்டேன்.நீர் எதை வேண்டுமானாலும் ஒளருவீர்.அதற்கு ஆதாரம் கேட்டால் அது விதண்டாவாதமா?நீர் அடித்து விட்ட பொய்கள் சுப்பிரமணிய சுவாமியையே வெட்கித்தலை குனிய வைக்கும் வகையறாவை சேர்ந்தவை.

*பார்ப்பனர்கள் சம்பந்தரை எரித்து கொன்றனர்
*திராவிட சிசு என்றால் சூத்திர சிசு என்று அர்த்தம்
*சங்கராச்சாரியார் தமிழில் பேசினால் தீட்டு போக குளிப்பார்

இப்படி வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு ஆதாரம் கேட்டவுடன் திரு,திரு என்று முளித்து ஆதாரம் கேட்டதற்கு என் மேல் பாய்ந்து பிராண்டுகிறீரே?

மறுபடி,மறுபடி அம்பலப்பட்டு நிற்கிறீர்.நீங்கள் என்ன புலம்பினாலும் நீங்கள் சொன்னதற்கு ஆதாரம் தரும் வரை அல்லது நீங்கள் சொன்னது ஆதாரம் இல்லாத பொய் என ஒத்துக்கொள்ளும்வரை விடமாட்டேன்.

நீங்கள் சொன்ன இதற்கெல்லாம் ஆதாரம் இருக்கா?

இருக்கா இல்லையா?

/காஞ்சி காமகேடி பீடம் அண்மையில் வெளியிட்ட தமிழ்நாடு பிராமணர்களின் வரலாறு என்ற புத்தகத்தில் தமிழர்களை இழிவு படுத்துவதைப் பற்றிக் கூறினேன், ஆனால் இந்த அனானிமஸ் பார்ப்பான் அதைப் பற்றி மூச்சு விடவில்லை. /

சும்மா அந்த புத்தகத்தில் இருக்கு என்றால் ஆச்சா ஓய்?அதில் என்ன இருக்கு என நீர் சொல்லுவதை எப்படி நம்புவது?அந்த புத்தகத்தின் பக்கங்களை ஸ்கேன் செய்து போடும்,அதில் என்ன உள்ளது நீங்கள் எப்படி திரித்து கூறுகிறீர்கள் என பார்க்கலாம்.திராவிட சிசு என்பதையே சூத்திர சிசு என சரடு விட்டவர் தானே நீர்?ஒம்ம வார்த்தையை அணுவளவேனும் நம்ப முடியாது ஓய்.

/ஆதாரம் வேண்டுமா, ஆதாரம், அந்த உம்மாள் தாத்தாச்சாரியார், காஞ்சி கேடியோடும் கூடப்பழகி, உங்களின் திருகு தாளமெல்லாம் அறிந்த பார்ப்பான் தான், ஊரறிய, உலகறிய புத்தகமாய் அடிச்சு வெளியிட்டான் ஓய், /

கருணா பிரபாகரன் கூடவே பழகி அவர் திருதாளம் எல்லாம் அறிந்தவர் தானே?அவர் சொல்வது எல்லாம் உண்மையா ஓய்?

//உமக்கு சங்கராச்சாரி தமிழை நீசபாசை எனச் சொல்லவில்லையென்பதில் நம்பிக்கையிருந்தால் மானநஸ்ட வழக்குத் தொடரும் ஒய்., இருக்கிற வழக்கோட இன்னொன்றாக காமகேடி மடம் எதற்காக, அந்த உண்மைச் சம்பவத்தை எழுதிய ராமனுஜம் தாத்தாச்சாரியார் மீதும், நக்கீரன் பத்திரிகை மீதும் வழக்குத் தொடரவில்லை, இப்பொழுது மட்டும் காலம் கடந்து விடவில்லை . துணிவிருந்தால் நீர் வழக்குப் போடும்//

"ஆம்பளையாக இருந்தால் வழக்கு போடு" என வைகோ சவால் விட்டது போல் பேசுகிறீர் ஓய்.சிரிப்பு நல்லாவே வருது.

பேசினதுக்கு ஆதாரம் உண்டா இல்லையா என கேட்டால் வழக்கு போட சொல்லுகிறீரே?நக்கீரனில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருவரை பற்றியும் அசிங்கமாக எழுதிக்கொண்டிருப்பான்.எல்லாரும் வழக்கா போட்டுக் கொண்டிருக்கிறர்கள்?அதை சீரியசாக எடுக்கும் உம்மைப்போன்ற ஆசாமிகள் தான் அதை காட்டி உளறிக்கொண்டிருப்பார்கள்.

உம்ம பாணியிலேயே இதற்கு பதில் சொல்ல வேண்டுமென்றால்

"தமிழை சூத்திர பாஷை என்று சங்கராச்சாரியார் சொன்னது உண்மை என்றால் அவர் மீது ஒம்ம தமிழ் பாதுகப்பு இயக்கம் இன்னும் வழக்கு தொடராதது ஏன்?"

தைரியமிருந்தால் வழக்கு தொடர சொல்லும் ஓய்.

//இன்ன்மொரு பார்ப்பான் தான் வெறும் வாயால் மட்டும் சொல்லவில்லை, புத்தகமடித்தும் விட்டிருக்கிறான் ஓய், வக்கிருந்தால் அந்தப் பார்ப்பானுக்கெதிராக மான நஸ்ட வழக்குப் போட்டு, நிரூபியும் ஒய், அல்லது வாயை மூடிக் கொண்டு போம்,//

கருணா என்ற பச்சை தமிழனும் பிரபாகரனைப்பற்றி நிறைய சொல்லியிருக்கிறான் ஓய்.நீர் ஏனும் ஓய் அது பொய் என அவர் மீது மான நஷ்ட வழக்கு தொடர்ந்து நிருபிக்கவில்லை?வக்கிருந்தால் அந்தப் தமிழனுக்கெதிராய் மானநஷ்ட வழக்கு
போட்டு, நிரூபியும் ஒய், அல்லது வாயை மூடிக் கொண்டு போம்

//உமக்கு துணிவிருந்தால் இந்த வலைப்பதிவாளர் மீதும் மானநஸ்ட வழக்குப் போடும் பார்ப்போம்.

http://balasthoguppu.blogspot.com/2005/07/26.html
//

உமக்கும் துணிவிருந்தால் சோ மீது மானநஷ்ட வழக்கு போடும் ஓய்
 



இந்த ஊர்ப்பேரையே தன் பேரா வச்சிருக்க மந்திரி இதப்பத்தி வாயே திறக்கல்லியேன்னு ஆச்சரியமா இருந்தது. இப்பத்தான் புரியிது இவுக கூட ஆரியமாருங்கன்னு. செய்தி பாத்தியளா?

http://timesofindia.indiatimes.com/articleshow/1823598.cms

A Chettiyar problem

In several hospitals of Tamil Nadu, before administering anaesthesia, doctors ask patients for their caste. All for a good cause.

It has been discovered that members of the Arya Vaisya Chettiyar clan, one of the 24 sects of Chettiyars, are fatally allergic to some anaesthetic administrations like the muscle relaxant, Suxamethonium, also known in a more friendly way as Scoline.

Arya Vaisyas are primarily a trading community, and believed to be so since the time of Rig Veda. They are spread throughout the country and have surnames like Setty, Chetty, Chetti, Chettiar, Gupta, Rao and Sreshty.

Long before Hitler said gloriously that Germans belonged to the Aryan race, the Arya Vaisyas have been claiming through folklore that they are in fact the original descendants.

Now, their mysterious allergy to Scoline has also become their most exciting affliction. For, it has been discovered that communities in various parts of the world, believed to be in the path of the rumoured Aryan exodus or migration, exhibit the same condition.

Multanis in Pakistan, certain tribes of Afghanistan, Iran, Iraq and Egypt, and many sections of Europeans carry this defect. What’s more striking is the fact that it is widespread in Germany too.

That is making several Indian researchers believe that the link between Aryans and Arya Vaisyas is beginning to become clear.

Dr J Balavenkatasubramanian is a practising anaesthesiologist in Coimbatore, and from the Arya Vaisya community. He explains the character of what has turned out to be Aryans' bitter foe — Scoline.

When you administer anaesthesia, it should lose its effect after a while and the patient should be able to contract the joints. Certain enzymes make this possible.

But, in case of Arya Vaisyas, these enzymes are absent either fully or partially, which can prove fatal in the absence of appropriate intervention.

The effect of Scoline is the same on people belonging to the Aryan race. Whether they're residents of India or Germany. In fact, medically, it is called a racial defect. Both the father and the mother can pass on the defect to the progeny.

Anthropologists and historians have always debated on the theories of Aryan migration. Some argue that Aryans didn't originate from India. Others claim that the Aryan race was born in India.

It is hard to confirm through the cursed allergy of the Chettiyars whether Aryans emerged from India or if they migrated to India. But the Arya Vaisyas' allergy to Scoline is providing one interesting argument in the favour of Aryan birth in this country.

If it were true that Aryans had migrated to India and carried the genetic defect that causes the allergy to Scoline with them, then the unfortunate medical condition should have been observed in several Indian communities.

But so far, the overwhelming evidence in India is that only the Arya Vaisya community, whose members historically married only among themselves to hold on to their immense wealth, has shown this affliction.

This leads many to believe that it was the Arya Vaisyas who went to other places. They were not the receivers of alien genes. Being wealthy traders they were known to travel to other lands.

Brahmins were prohibited by their faith to cross the sea. (The Sankaracharyas have never left the Indian landmass. At the most, they have travelled to Nepal by road.)

Kshatriyas historically had a duty to stay here and defend the land. That left only the traders with the spiritual freedom to travel. And the wealthy Arya Vaisyas may have spread their defect in other places.

That these places where allergy to Scoline has been observed are in the historical path of Aryan migration makes one believe that there is circumstantial evidence suggesting Arya Vaisyas' Aryan link.

Needless to say, this is just a hypothesis and scientific confirmations may probably never come our way. There is an emotional compulsion among Indian researchers and scientists to prove that India spawned world cultures and languages.

Bhagwan Gidwani claims in his book Return of the Aryans, "Aryans of 5000 BC were born, grew up and died as Hindus and they were anchored in the timeless foundation of the Hindu tradition."

Readers, however, have often found it difficult to stomach how Aryans would've arrived on the world stage without precedents or ancestors. But Bhagwan deflects the criticism by saying, "There's no such thing as a spontaneous generation.

History is rooted in continuity and advance." The Arya Vaisya community also has an infertility problem. In fact, most infertility clinics in Tamil Nadu are flocked by more members from this community, going by the affirmation given by infertility experts.

Geneticists are particularly fond of communities like Arya Vaisya because their traditional way of life attempts to guard the relative purity of their race, and that makes them somewhat easier to study.

Arya Vaisyas are such staunch inter-breeders that they even sanction menarikam, which permits consanguineous marriages. It means a boy can marry his mother's brother's daughter or father's sister's daughter or even sister's daughter.

That of course leads to the sustenance of genetic defects that have today become faint clues of our undocumented past.
 



இந்த 'ஆரூரன்' என்ற போலி பேசுவதை வைத்து நம் உயிரினும் இனிய இலங்கைத் தமிழ் உறவுகளை அகதி என்ற பேரில் யாரும் காயப்படுத்த வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன். இந்த ஆள் ஒரு வெட்டி. ஆதாரம் எதுவும் இல்லாமல் பிராமணர்களில் ஆரம்பித்து கமலகாசன், கலைஞர் என்று தொடர்ந்து அவதூறை அள்ளிவீசும் 'ஆரூரா' அது உன் ஊரா? இனியாவது அடங்கு!
 



//இந்த ஊர்ப்பேரையே தன் பேரா வச்சிருக்க மந்திரி இதப்பத்தி வாயே திறக்கல்லியேன்னு ஆச்சரியமா இருந்தது. இப்பத்தான் புரியிது இவுக கூட ஆரியமாருங்கன்னு. செய்தி பாத்தியளா?///


இந்த உளறலை நினைத்தால் அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை, இப்படியான நடைமுறைகளையும், கண்டுபிடிப்புகளையும் தான், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதற்குக் காலங்காலமாக பார்ப்பான்கள் பயன்ப்டுத்தி வந்துள்ளார்கள். பணவசதியுள்ள சிலரை, தமக்கு இலாபம் தரக்கூடியவர்களை உயர்த்தி, அவர்களுக்கு ஒரு புராணக்கதையைப் புனைந்து, அவர்களை மற்றத் தமிழர்களை விட உயர்ந்தவர்களாகக் காட்டி, ஒரு கோத்திரத்தையும் சேர்த்து விட்டதால், அந்தத் தமிழர்களும், தம்மை பிற தமிழர்களை விடச் சிறந்தவ்ர்களாக நினைத்துப், பார்ப்பான்களுக்குப் பல வசதிகளைச் செய்து கொடுத்து, தானம் என்ற பெயரில் பல கிராமங்களை எழுதி வைத்தார்கள், வசதியான தமிழர்களை ஆரியர்களாகக் காட்டித் தமிழர்களைப் பார்ப்பான்கள் ஏமாற்றிய கதை அனைவ்ருக்கும் தெரியும், அதனால் தான் தமிழர்களில் வசதியான சமூகமான செட்டியார்களை ஆரியர்களாக்கத் துடிக்கிறார்கள் பார்ப்பான்கள்.

சொல்லிலக்கணத்தின் (Etymology) படி தமிழிலுள்ள சொல் "செட்டியார்" சுத்தமான தமிழ்ச் சொல். அதாவது செட்டு என்ற சொல்லுக்குத் தமிழில் கருத்து சிக்கனம், வர்த்தகம் அல்லது கஞ்சத்தனம் என்றும் பொருள். செட்டியார்கள் சிக்கனத்துக்குப் பேர் போனவர்கள் என்பதை யாவரும் அறிவர். தமிழிலுள்ள பழமொழிகளான "அறச் செட்டு முழு நட்டம்" என்பதன் கருத்து அளவுக்கு மீறிச் சிக்கனமாக இருந்தால் அதிக நட்டம் என்று பொருள் படும். "எண்ணிச்செய்வது செட்டு, எண்ணாமல் செய்வது வேளாண்மை" என்ற பழமொழியின் கருத்து வர்த்தகத்தில் இறங்கும் போது சிந்தித்து முடிவெடுக்க வேண்டும், வேளாண்மை செய்வதற்கு அந்தளவுக்கு சிந்திக்கத் தேவையில்லை என்பதாகும்.
உதாரணமாக, கலப்பில்லாத தமிழ்ச்சாதியும், சிலப்பதிகாரத்துக்கும், காவிரிப்பூம் பட்டினத்தின் காலத்துக்கு முன்பிருந்தும் தம்முடைய தமிழ் வேர்களை அடையாளம் காணும் நாட்டுக்கோட்டைச் செட்டியார்களைத் தெலுங்குச் செட்டி என்ற சாதியுடனும், வட இந்தியாவின் ஷெட்டியுடனும், Setty, Chetty, Chetti, Gupta, Rao and Sreshty. இணைத்து, தமிழர்களைப் பிரித்துத் தமிழர்களை ஒரு தனித்துவமில்லாத, கலப்பினமாகக் கிட்டத்தட்ட அமெரிக்காவின் கறுப்பின மக்கள் போல, இரண்டும் கெட்டான் நிலைக்குக் கொண்டு வருவதற்குச் சிலர் முனைவதையும் இங்கு காணலாம்

சிதம்பரத்தைப் பற்றிக் கருத்துத் தெரிவிக்கவில்லையென்பதால் பழனியப்பன் செட்டியார், தமிழனல்ல ஆரியன் என்றால், பார்ப்பான்களை முழுவதும் எதிர்த்து திராவிட இயக்கங்களைக் கட்டியெழுப்ப நிதியளித்தவர்களும் செட்டியார்கள் தானே, தெலுங்கு, சமஸ்கிருதக் கீர்த்தனங்கள் பாடும் பார்ப்பான்கள், தமிழைத் தமிழிசையை கேவலப்படுத்துவதைப் பொறுக்க முடியாமல், தமிழிசைச் சங்கம் அமைத்து, தன்னுடைய பொருள் முழுவதையும் கொடுத்துத் தமிழிசையை வளர்த்த சேர் முத்தையா செட்டியாரும் ஆரியனா? Allergy பரம்பரையாகக் கடத்தப்படுவதில்லை, எந்த வயதிலும், எந்த நாட்டிலும் சூழல் மாறுபாட்டைப் பொறுத்து Allegy ஏற்படலாம், கனடாவில் இலங்கைத் தமிழர்கள் பலருக்கு கடலுணவுக்கு Allergy ஏற்பட்டுள்ளது, இலங்கையில் இதைச் சொன்னால் சிரிப்பார்கள்,

இந்த தமிழர்களை ஆரியமயமாக்கல் (Sanskritization of Tamils) யாழ்ப்பாணத்திலும் நடந்தது, சைவத்தில் ஊறித்திளைத்த யாழ்ப்பாணத்து வெள்ளாள நிலச்சுவாந்தார்கள், தம்மை ஆரிய வைசியர்களாக்கி, வில்லூன்றி மயானத்தில் கூடத் தமக்கென்று தனி இடமும், கிழக்கு வாசலையும் வைத்திருந்தார்களாம்.
தமிழர்களை ஆரியமயமாக்குதல் (Sanskritization) பல நூற்றாண்டுகளாக நடந்து வருகிறது. இணையக களங்களில் கூட, சுத்தமான தமிழ்ச்சாதியான செட்டியார்கள் போன்றவர்களை, வேறு மாநிலங்களில் உள்ள தமிழரல்லாத சாதிக்குழுக்களில் ஒரே மாதிரியான பெயர்களைக் கொண்ட சாதிக்குழுவினருடன் ஒன்றாக்கித், தமிழர்களைச் சாதியடிப்படையில் பிரிப்பதன் மூலம் தமிழர்களின் தனித்துவத்தைக் குலைக்க முயல்வதை நாம் அவதானிக்கலாம்.

,இப்படி எல்லாத் தமிழ்க்குழுக்களுக்கும், சாதியை அறிமுகப் படுத்திய ஆரியப் பார்ப்பான்கள், தமிழர்களை ஆரியமயமாக்கல் மூலமும், புராணத்துப் புனைகதைகளை இணைத்தும், தமிழர்களைப் பிரிப்பதை, இன்றும் செய்து கொண்டிருப்பதை நாம் காணலாம்.

அண்மைக் காலம் வரையில் தமிழர்களில் எல்லாச்சாதியினரும் போட்டி போட்டுக் கொண்டு தங்களின் சாதிக்கு ஆரிய சாயம் பூசுவதற்கும், ஆரிய வேர் கண்டு பிடித்து, ஒரு புராணக்கதையை அதனுடன் இணைத்து விட்டுத் தம்மை உயர்வாகவும் காட்ட முனைந்தார்கள். ஏனென்றால் ஆரியத் தொடர்பு உயர்ந்ததாகக் கருதப்பட்டது. இப்படி இடையில் வந்த பச்சைப் புளுகுக் கதைகளிலொன்று தான், உண்மையில் தமிழர்களான, சேரநாட்டுத் தமிழர்களை, மலை சார்ந்த பகுதியில் வாழ்ந்ததால் மலையாளிகளென அழைக்கப்பட்ட தமிழர்களை, அவர்கள் பரசுராம கோத்திரத்தில் வந்ததாக புழுகுக் கதையைப் புனைந்து தமிழர்களைப் பிரித்தார்கள் நம்பூதிரிப் பார்ப்பான்கள், சேர நாட்டுத் தமிழர்களின் காதில் பார்ப்பான்கள் சுற்றிய பூத் தான் இந்தப் பரசுராம கோத்திரக் கதை.

என்ன தான், தனிப்பட்ட முறையில் நான் பிராமணர்களைத் தாக்கக் கூடாது என்று நினைத்தாலும், தமிழர்களின் சரித்திரத்தை நாம் உற்று நோக்கும் போது பாரதியார் போன்ற சில பிராமணர்கள் இருந்தாலும், பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம், இணையக் களங்களிலுள்ள பார்ப்பனர்கள் விரும்பாது விட்டாலும் அதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும், இன்று இஸ்ரேலும், ஜேர்மனியும் நட்பு நாடுகள், அதற்காக, ஹிட்லரையும், 6 மில்லியன் யூதர்களின் இறப்பையும் யூதர்கள் யாரும் மறந்து விடுவதில்லை, அது போல் தான் பார்ப்பானர்கள் இந்த தமிழ்ச்சாதிக்குச் செய்த துரோகங்களை மன்னிக்கலாம், ஆனால் மறந்து விடக் கூடாது.

இந்த தமிழ்ச்சாதியினரை அல்லது தமிழர்களின் தொழில் அடிப்படையிலான, கிராமக் குழுக்களை ஆரியமயமாக்கும் முயற்சியின் முதல் படி தான், மனுசாத்திரத்தைப் பாவித்து, தமிழர்களை வடமொழிப் பெயர் கொண்ட, சத்திரியம் வைசியர், சூத்திரர் என்று பிரித்தது, இதே பிரிவினையைத் தமிழர்கள் மத்தியில் மட்டுமல்லாமல், வேறு மாநிலத் திராவிடர்களிடமும் செய்ததால், ஒரே மாதிரியான சாதிப்பெயர்கள், பல மொழி மக்களிடம் பாவனைக்கு வந்தன.

அந்த அடிப்படையில், உதாரணமாக, தமிழ்நாட்டின் மண்ணின் மைந்தர்களான , சுத்தமான தமிழர்களான செட்டியார்களும், வெள்ளாளரும், பறையரும் ஆளுக்காள் பகைத்துக் கொண்டு, வேற்று மொழி, வேற்று மாநில அதே சாதிப்பெயர் கொண்ட மக்களிடம் தமக்கு நெருங்கிய தொடர்பிருப்பதாக உணர்ந்தார்கள் என்பதை விடத் திட்டமிட்ட ஆரியமயமாக்கலாலும், புராணக்கதைகளாலும் உணர வைக்கப்பட்டார்கள்.
அதனால் தான் தமிழர்களான தேவர்கள் தம்மைச் சத்திரியர்களென்று சொல்லிக் கொண்டு, மகாபாரதத்துப் புளுகுகளுடன் தம்மை இணைத்துக் கொண்டு தாம் சத்திரியர்கள் என்று பொய்யான பெருமையளக்கிறார்கள். இப்படிச் செய்வதால், தம்முடைய தனித்துவமான, தமிழ்ப்பண்பாட்டை இழந்து, ஒரு கலப்புச் சாதியாகத் தம்மை ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

இதற்கெல்லாம் காரணம் தமிழர்களின் தாழ்வு மனப்பான்மையும், யாராவது கலப்பில்லாத தமிழாக, தமிழராக இருந்தால் குறைவானவர்கள், தமிழர்கள் என்றால் கூலிகள் என்ற நிலை ஏற்பட்டதால் தான், சோழர்களின் வீழ்ச்சியின் பின்பு, தமிழர்கள் தமது படைப்பலத்தை இழந்ததால், தமிழ்நாட்டை ஆண்ட தமிழரல்லாத பிற மாநிலத்தினரால், தமிழினம் சிறுமைப் படுத்தப் பட்டது, சொந்தமண்ணில் அதிகாரத்தை இழந்து கூலிகளாக்கப் பட்டனர். இன்று கூடத் திராவிடர்கள் என்றால், பெரும்பாலும் அது தமிழர்களைத் தான் குறிக்கும், தமிழர்கள் என்றால் பல வடநாட்டவரின் மனதில் கூலிகள் என்ற நினைப்பு.

ஒவ்வொரு தமிழ்ச்சாதிப் பிரிவும், ஆரியமயமாக்கப் பட்டது. தமிழர்களும் ஆரியத் தொடர்பையும், அதனுடன் சம்பந்தப்பட்ட புளுகு மூட்டைப் புராணக்கதைகளையும், அதன் மூலம் தமக்கு மற்றவர்களை விடச் சிறப்பு வந்ததாக நினைந்து, அவற்றை உண்மையாக நம்பியதும் தான், தமிழ்மண்ணுக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்களால் தமிழர்களைப் பிரித்தாள முடிந்தது மட்டுமல்ல, அன்னியப் படையெடுப்புகளின் போது, அவர்களுக்கு உளவு பார்த்துத் தமிழரசர்களைக் கவிழ்க்கவும் முடிந்தது.
உதாரணமாக, வெள்ளாளர் அல்லது வேளாளர் கலப்பில்லாத தமிழ்ச்சாதி, வேளாண்மை - அதாவது விவசாயம் செய்பவர்கள் அல்லது நிலவுடமைக்காரர், இலங்கையில் இன்றும் வெள்ளாளர்கள் நிலச் சொந்தக்காரர்கள். வெள்ளாளர்- வெள்ளம் - தண்ணீர்- அதாவது குளங்களைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த விவசாயிகள். இப்படியான தமிழ்ச்சாதியான வெள்ளாளர்களுக்கும், ஆரியப் புராணத்துக்கும் என்ன சம்பந்தம் இருக்க முடியும்.

இந்த பொய்யான ஆரியத்தொடர்பில் இருந்த மாயையில் தான் யாழ்ப்பாண இராச்சியத்தின் மன்னர்கள் கூடத் தம்முடைய பட்டப் பெயராக ஆரியச் சக்கரவர்த்திகள் என்று வைத்துக் கொண்டார்கள், ஆனால் அவர்கள் உண்மையில் பாண்டி நாட்டின் தமிழர்கள்.

இந்த தமிழர்களை ஆரியமயமாக்கலும்,( Sanskritization process) தமிழர்களின் ஆரிய மோகமும், ஏதாவது புராணத்தை தமது தமிழ்ச்சாதிக்கு இணைத்து வீரம் பேசுவது தொடரும் வரை தமிழினம் உருப்படாது, சாதிப்பிரிவே தமிழர்களின் சாபம், அதற்கும் புராணக்கதையை இயற்றி, நான் உயர்ந்தவன் என்னுடைய வேர்கள் மகாபாரத்ததில் பாண்டவ்ர்களிடம் இருந்து வந்தது அல்லது வடக்கிலிருந்து வந்த முனிவரிலிருந்து வந்தது என்று கதை விட்டு, நாங்கள் தமிழர்கள் வெறும் கலப்பினம் தான், எங்களிடம் எந்த விதமான தனித்துவமும் கிடையாது , நாங்கள், பண்பாட்டையும் நாகரீகத்தையும் வடக்கில் இருந்து வந்த முனிவர்களிடமும், வட மொழியிலிருந்தும் பெற்றுக் கொண்டோம் என்று தமிழெதிரிகள் சொல்வதை, கிளிப்பிள்ளை போல் ஒப்பிப்பது அதை விடக் கேவலம், நெஞ்சு பொறுக்குதில்லையே!


தமிழர்களின் ஆரிய மோகம் - தொடரும் தமிழ்ச்சாதிகளின் ஆரியமயமாக்கல் - Sanskritization of Tamil Castes.

http://www.unarvukal.com/ipb/index.php?showtopic=1759

ஆரூரன்
 



வன்றொண்டன் அவர்கள் பல அருமையான ஆதாரங்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார். என் பங்கிற்கு நானும் தேடிப் பார்த்தேன்.

சேக்கிழாரும் இப்படிச் சொல்லவில்லை;
வள்ளலாரும் இப்படிச் சொல்லவில்லை.

(பெருமண நல்லூர்த் திருமணங் காணப் பெற்றவர் தமையெலாம் ஞான (39)
உருவடைந் தோங்கக் கருணைசெய் தளித்த உயர்தனிக் கவுணிய மணியே (40) )

இதை ஆங்கிலத்திலும் படிக்கவும்.

ஆக இந்த மகான்கள் சொல்வதையெல்லாம் பொய் என்று ஒதுக்கிவிட்டு, நக்கீரன் போன்ற மஞ்சள் பத்திரிகைகளில் சில லோலாக்குலோல்டப்பிமாக்கள் எழுதுவதை உண்மை என்று 'பரப்புரை' செய்யும் இந்த ஆரூரன் 'அக்கமாலை சிலுவை' (நன்றி - வன்றொண்டன்) கேஸ்தான் என்பது நிரூபணம் ஆகிறது. ஈழத்துச்சைவன் என்பதெல்லாம் வெறும் கப்ஸா.
-சுப்ரா, புதரகம்
 



அடப்பாவி! இந்த நபர் கிறுத்துவரா? இவர் போடற பதிவெல்லாம் இப்ப புரியிது.
 



அட, சிதம்பர ரகசியம் இவ்வளவுதானா? இன்னும் இருக்கா?
 



பெரியார் - கன்னடம் பேசும் 'தமிழர்'
கருணாநிதி - தெலுங்கு 'தமிழர்'
வைகோ - தெலுங்கு பேசும் 'தமிழர்'
OBC பட்டியல்ல 10 இந்தி பேசும் 'தமிழர்' இருக்காங்க...
இப்ப சாலைப்பணிக்கு வந்திட்டாங்க இந்தி பேசும் பீஹாரிக...Madras airportல எல்லாமே இந்திக்காரங்க... நாளைக்கு OBC பட்டியல்ல சேருவாங்க இந்தி பேசும் தமிழ் தெரியாத 'தமிழர்'களா...

பார்ப்பான் தமிழ் பேசும் 'அன்னியன்'.

ஏன் இந்த வலைப்பதிவு ல இடுகை இடும் 'தமிழர்கள்'ல எத்தனை பேர் தெலுங்கு...

பாப்பான் பாப்பான் பார்ப்பான் ன்னு சொல்லுது எல்லா உண்மைய மூடி மறைக்க ...வேறன்ன?

இப்ப குஜராத்துல குஜ்ஜார்...தமிழ் நாட்டுல 3% பேர் தான் பார்ப்பனர்க...நாளைக்கு தமிழ் நாட்டுல பெரிசு இருக்க...பார்ப்பான் இல்ல....OBCக்குள்ளையே பெரிசு காத்திருக்கு...உத்தப்புரம் வெறும் உதயம்...

அப்ப உத்தப்புரத்துல நடந்துதே எப்படி...யார்யா அங்க பார்ப்பான்?

இந்திக்கார அர்ஜுன் ஸிங்குக்கு இந்தி தெலுங்கு பேசும் 'தமிழ்' அடியாட்கள் நிறைய போல....ஹீ ஹீ!!!
 



வீட்டில் பேசும் மொழி :

ராமதாஸ் - தெலுங்கு
கருணாநிதி - தெலுங்கு
வைகோ - தெலுங்கு
பெரியார் - கன்னடம்

ஆனால்
பாப்பான்/ அந்தணன்/ பார்ப்பனர்/ - தமிழ்

அதான் தமிழ்நாட்டிலேயே தமிழ் எதிர்ப்பு தமிழ்நாட்டுத் தெலுங்கு அரசியால்வாதிகள் நடத்தும் சூழ்ச்சி


Sir

I wish to also let you know that many 'Tamil' politicians do not speak Tamil at home.

It is also well known that one of the fathers of Tamil who we know as Thandhai Periyar was a Kannadiga and openly insulted Tamil language

"எத்தனை எழுத்துக்கள், எத்தனை மேல் இழுப்பு, எத்தனை கீழ் இழுப்பு". These are insulting the very Tamil script. Periyar never noted that Chinese has far more lettersm, but virtual little English borrowings.

The "guardians of Tamil" presently referred to as DMK, AIADMK, PMK etc say that these are not insults but suggestion to improve Tamil language. These parties have contributed to Tamil with excessive use of English in formal Tamil in their TV channels. It should be noted that Chun (Sun) TV, Chun (Sun) News are tranliteration of English words.

Makkal Tholaikaatchi run by PMK also prefers English when referring basic words of fruits, vegetables etc.

It also may be noted that reason Karunanidhi and his gang prefer several MBCs, BCs etc who do not even speak Tamil (some of these are Hindi/Urdu speaking), is because many of Karunanidhi's allies do not speak Tamil at home and also they have lot to gain from Hindi politicians by preferring non-Tamil backward castes over Tamil speaking forward castes.

PMK is known to have demanded till recently bifurcation of the Tamil state, "TAMIL NADU" into two pieces.

It should also be noted that PMK (who is a members of the misnomer movement Tamil Protection Movement) along with TMMK uses Hindi slogans and banners in Bangalore and Delhi for demanding reservation in Thamizhagam which benifits several non-Tamil OBCs.

DMK prefers north Indian votes over Tamil votes (from the condemned forward castes) by printing of Hindi election manifestos in last election.

DMK has ignored Tamils are not preferred to be hired in TN airports and ports, Hindians prefered.

Highway minister Baalu is reponsible for laying of Hindi only milesstones in TN a few years back (so he will maintain central position).

Karunanidhi is now in warfront against supreme court juddgement of reservation stay (where several non-Tamil OBC will benifit).

One would also note that Tamil has been opposed as TN official language by many OBCs.
 



//பெரும்பாலான பிராமணர்கள், தமிழினத்தின் முதுகில் குத்தியுள்ளார்கள் என்பதை அறியலாம்,//

ஒட்டு மொத்த ஈழ தமிழினம் கொலையுண்டு அழிவதற்கு காரணமான கலைஞரை எப்படி புரிந்து கொள்வது

அவர்தம் தமிழின பற்றை எப்படி பாராட்டுவது
 



Доброе утро! команда SEO для продвижения и раскрутки online-проектов в поисковых серверах и дополнительно соц сетях. Меня зовут Антон, я создатель компании оптимизаторов, link builders, специалистов, линкбилдеров, маркетологов, копирайтеров, рерайтеров/копирайтеров, разработчиков, профессионалов. Мы - команда высококлассных фрилансеров. Созданная нами команда квалифицированных специалистов вам подняться в ТОП 10 в выдаче поисковой машины различной системе. Мы предлагаем лучшую раскрутку онлайн-проектов в поисковых серверах! SEO-специалисты что задействованы в команде прошли громадный высокопрофессиональный путь, нам известно, как грамотно создавать ваш онлайн-сервис, выдвигать его на 1 место, преобразовывать веб-трафик в заказы. У нашей фирмы имеется в наличии для Вас абсолютно бесплатное предложение по раскрутке ваших интернет-проектов. С нетерпением ждем Вас.

яндекс продвижение сайта бесплатно [url=https://seoturbina.ru]сео сайта бесплатно онлайн[/url]
 











திருமுறைகள் பாடியவர்கள் அனைவரும் (நால்வர்) தோன்றியது சற்றேறக்குறைய கி.பி. 2ம் நூற்றாண்டிற்கு பிறகு தான். எனவே அவர்கள் காலத்திற்கு முன்பு கண்டிப்பாக திருமுறைகள் இல்லை, பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழை கருவரைக்குள் விடவில்லை என்ற சொல்ல முடியாது. ஒருவேளை வேறு ஏதேனும் இருந்ததா என்று தெரியவில்லை. இராஜராஜ சோழன் காலத்தில் தான் காணாமல் போன திருமுறைகள் நம்பியாண்டார் நம்பி மூலம் சிதம்பரம் கோவிலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
திருமுறைகள் கண்டெடுக்கப்பட்டபின் அதை ஓதும் உரிமை ஓதுவார் என்னும் சமூகத்தினரூக்கு வழங்கப்பட்டது. திருமுறைகள் ஓதும் உரிமை தரப்பட்டதால் இவர்கள் ஓதுவார்கள் என்று அழைக்கப்பட்டனரா? இல்லை அதற்கு முன்பு இருந்தே இவர்கள் ஓதுவார்கள் சமூகம் தானா என்று தெரியவில்லை. முதலில் இருந்தே ஓதினார்கள் என்றால் எ தை ஓதினார்கள் என்று கேள்வி எழுகிறது.

திருமுறைகள் பாடும் உரிமை ஓதுவார்களுக்கு தரப்பட்டதால் அவர்கள் மட்டுமே பூஜை வேளையில் பாடும் அதிகாரம் பெற்றவர்கள். ஆகம விதிப்படி தீட்சை பெற்ற பார்ப்பணர்கள் தான் கருவரைக்குள் நுழைந்து பூஜை செய்ய முடியும் என்பதால் திருமுறைகள் பாடும் உரிமை பெற்ற ஓதுவார்கள் உள்ளே செல்லாது வெளியில் இருந்து பாடியிருக்க வேண்டும். நான் பார்த்த வரையில் பல கோவில்களில் அர்ச்சகர்களும் திருமுறைகள் பாடுகிறார்கள். என்ன மெல்லிய தொனியில் பாடுகிறார்கள். ஒருவேளை இந்த திருமுறைகளையும் அர்ச்சகர்களே பாடினால் போராளிகள் என்னவென்று போராடியிருப்பார்கள் என்று தெரியவில்லை.
 



சரி, உங்க கருத்து ??