<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

சுதந்திர தினம்

img crtsy: betternaturalvisionwithindays.com
ஆலையில்லா ஊருக்கு
இலுப்பை சர்க்கரை

அரசியல் வியாதிகளிடமிருந்தும்
அதிகார வர்க்கத்திடமிருந்தும்
நிஜ சுதந்திரம் கிடைக்கும் வரை
ஆங்கிலேயரிடமிருந்து கிடைத்ததை
அனுபவித்து கொண்டாடுவோம்

ஜெய் ஹிந்த்

****

குண்டு துளைக்காத காரில் வந்து
குண்டு துளைக்காத கூண்டில் நின்று
கறுப்பு பூனையினர் பாதுகாப்பு அரணில்
பிரதமர் செங்கோட்டையில் கொடி ஏற்றுவார்.
பொதுமக்களிடம் பேச இவ்வருடமும் அனுமதி இல்லை...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


ஜெயலலிதா காலை 8.30 மணிக்கு சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார். அசம்பாவித சம்பவங்கள் நிகழாமல் தடுக்க சென்னை நகரில் மட்டும் நேற்று முன்தினம் இரவு 800 பேர் போலீசாரிடம் சிக்கினர் என்கிறது தினம்லர் செய்தி.

சுதந்திர தின கொண்டாட்டங்கள் முடிந்ததும் இவர்களுக்கு சுதந்திரம் கிடைக்கலாம்... கிடைக்கும். அவர்களுக்கும் நமது அட்வான்ஸ் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்.
 



தனியொருவனுக் கிங்குணவில்லையேல்
இச் சகத்தினை அழித்திடுவோமென்றனர் அன்று

தனியொருவளின் சுதந்திரதினக் கூத்திற்கு
இச் சகத்தினை சிறை பிடித்தனர் இன்று :)
 



நாடு தன் சுதந்திரத்தை
நினைவுகூர
தம் சுதந்திரத்தைப்
பணயம் வைத்தத்
தியாகிகள் வாழ்க!

இப்பொ இங்கிருந்து ஜூட் :)
 



அனைத்து கொரிய நண்பர்களுக்கும் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்.
 



வாய்ஸ் ஆன் விங்க்ஸ், கவித போட்டு தாக்கறீங்க... கலக்கல்.

நன்றி சிறுசு ( நீங்க சின்னஞ்சிறுசா )
 



சரி, உங்க கருத்து ??