<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

மாதொருபாகன் - செலக்டிவ் அறச்சீற்றம்


திராவிட திம்மி யுவகிருஷ்ணா 247வது தடவையாக பெருமாள் முருகனின் மாதொருபாகன் நாவலை முன்னிட்டு செலக்டிவ் அறச்சீற்றம் கொஞ்ச நேரம் கொண்டு பின்பு தனது அந்த அறச்சீற்றத்துக்கு எதிராகவே மீண்டும் ஒரு அறச்சீற்றம் அடைந்திருக்கிறார். 

"இன்னமும் ‘மாதொருபாகன்’ வாசிக்கவில்லை" என்ற முன்னறிவிப்போடு ஆரம்பிக்கிறது அவரது கட்டு உரை. இருந்தாலும் காலையில் எழுந்து வேறு கடமை செய்கிறோமோ இல்லையோ அறச்சீற்ற‌ கடமையை நிறைவேற்றியாக வேண்டிய கட்டாயத்தில் தனது கட்டுக்கு உரை கழட்டுகிறார்.

முதலில் அந்த நூல் மதவெறியர்களால் எரிக்கப்பட்டது என்று கேள்விப்பட்டபோது கோபம் வருகிறது . என்ன புத்தகம், எதற்கு எரிக்கிறார்கள் என்பதெல்லாம் தெரியாது... ம.க.இ.க, திராவிடர் கழக தோழர்களோ, இஸ்லாமிய நண்பர்களோ எரித்திருந்தால் கோபம் வந்திருக்காது, ஆனால் மதவெறியர்கள் எனும்போது கோபம் ஆட்டோமேட்டிக்காக குபீரென்று  கொப்பளித்துக்கொண்டு வருவது பழக்கமாகிவிட்டதால், ‘மாதொருபாகன்’ நாவலுக்கும், எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கும் ஆதரவான இயக்கங்களில் பங்குகொள்ள தயாராக இருப்பதாக சில நண்பர்களிடம் கிருஷ்ன நாயக்கர்  வாக்கு வேறு கொடுத்து விடுகிறார்.

போராட்டத்துக்கு போவதற்காக கருப்பு சிவப்பு சட்டை அயர்ன் செய்ய கொடுக்கிறார். அயர்ன் வண்டிக்காரர் லேட் செய்துவிட அந்த கேப்பில் அந்நாவலின் 'objectionable content' என்னவென்பதை ஒரு நண்பர் முகநூலில் இட்டுவிடுகிறார். அதாவது மொத்த நாவலில் ஒரே ஒரு பக்கம் ஸ்கேன் செய்யப்பட்டு வலையேற்றப்படுகிறது. புதிய தலைமுறையில் பக்கம் பக்கமாக "ஆராய்ச்சி" கட்டுரை எழுதும் பழக்கம் கொண்ட கட்டுரையாளருக்கு இந்த ஒரு பக்கமே போதுமானதாக இருக்கிறது, தனது ஆதரவை முற்றிலுமாக ‘வாபஸ்’ வாங்கிக்கொள்ள... இனி அவர் வார்த்தைகளில் -

அறச்சீற்றம் ஏன் வாபஸ் - "அந்த இரு பக்கங்களையும் வாசித்தபோது திருச்செங்கோடுவாழ் நண்பர்களுக்கு எவ்வளவு கோபமும், வன்மமும் ஏற்படும் என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது" (2024 வாக்கில் எதாவது விஷயத்துக்கு என்னவாவது ஆதாயம் கிடைக்கலாம் என்பதால் அவர்களது உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டியது முக்கியம்)

செலக்டிவ் கருத்து சுதந்திரம்  -
"ஆதாரமில்லாமல் வாய்வழியாக சொல்லப்படுகிற ஒரு கதையை, இலக்கியத்தின் ஏதோ ஒரு வடிவில் பதிவு செய்யப்படும்போது அது வரலாறாக நம்பப்பட்டு விடுகிற ஆபத்து இருக்கிறது." (ஆனால் திராவிட இயக்க 'தலைவர்கள்' சொல்லும் கட்டு கதையெல்லாம் வரலாறாக நம்பி பரப்புவது அன்னாரது வாழ்க்கையில் முக்கிய கடமை)

புனைவு குறித்து  -
"ஆதாரமற்ற அவதூறுகளை முற்போக்கின் பெயரால் ஆதரிக்க முடியாது. ‘தேவடியா பையா’ என்று திட்டினால் முற்போக்காளனாக இருந்தாலும், அவனுக்கும் கோபம் வருவதுதானே யதார்த்தம்?" (பார்ப்பான், பாப்பாத்திகளுக்கு இது பொருந்தாது என்பதை திரா விட‌ அடி மட்ட‌ உறுப்பு இனர் சொல்ல மறந்துவிட்டதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்)

மாதொருபாகன் நாவலில் சித்தரிக்கப்படும் தேர் மயிலாப்பூர் தேர் என்றும் இதில் வரும் இனக்குழு பார்ப்பனர்கள் என்று மட்டும் சித்தரித்திருக்கப் பட்டிருந்தால் யுவகிருஷ்ணாக்கள், "நண்பர்களுக்கு" ஏற்படும் உணர்வுகளை பற்றியோ, நாவல் பேசும் "அவதூறு" பற்றியோ கவலைப்படாமல் இலக்கியத்தின் மொழி சுதந்திரத்துக்காகவும் கட்டற்ற கருத்து சுதந்திரத்துக்காகவும் நிபந்தனையற்ற அறச்சீற்றம் கொள்வார்கள். வேறு எந்த ஜாதி உணர்வு புண்பட்டாலும் செலக்டிவ் அறச்சீற்றம்தான்...

தொடர்புடைய வார்த்தைகள் தொட்டி - http://www.luckylookonline.com/2014/12/blog-post_29.html

 

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


உங்க “குசும்பு” ஸ்டைலு மாறவே இல்லை :-)
 



Welcome back thala

முகமூடி ரசிகர் மன்றம்
சிலுக்குவார்பட்டி
 



சரி, உங்க கருத்து ??