<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

தமிழ் வலைப்பூ சர்க்கஸ் லிமிடெட்


ஒரு ட்ரைலர்.

ரோட்டில் மனித நடமாட்டமாக உள்ளது.. அப்போது "அட நாய்களா" என்று சத்தம் கேட்கிறது. சத்தம் வந்த திசையை நோக்கி சம்பந்தமேயில்லாமல் ஒருவர் ஓடி "ஏண்டா என்னை நாய்னு சொன்ன" என்று கேட்டால் அந்த (அப்)பிராணியை என்னவென்று சொல்வதென்று குழப்பமாக உள்ளதா? இனி கவலை வேண்டாம். அவரை சோழநாடன் என்று தைரியமாக கூப்பிடலாம். எனது நாய்க்கவிதையை படித்துவிட்டு பின்னூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தவர் திடீரென குடுகுடுவென நாலு கால் பாய்ச்சலில் ஓடிப்போய் "நம்மள எல்லாம் நாய்னு சொல்றான் இளவஞ்சி" என்று காது விடைக்கிறார்... ஹய்யோ ஹய்யோ... இது ரொம்ப பொமரேனியத்தனமால்ல இருக்கு...

*

ஒரு கவிதை

அம்மா படிப்பு ஜாஸ்தி
காரியங்களிலும் கன கச்சிதம்
அப்பா படிப்பு குறைவுதான்.
எப்போதாவது தாங்க முடியாதபோதுதான் சொல்வாள்,
நாளைக்கு பத்து தடவையாவது முட்டாள் பட்டம் அவரிடம் என்று
"உன்ன பத்தி பயங்கர பயம்" இது நான்.
அவள் உடன் சுதாரித்து அப்பாவின் பெருமையில் எதாவது
ஒன்றை சொல்லி அவரை புனிதமாக்க
பிற பெண்களைப் போலவே அம்மாவும் அச்சுப் பிசகாமல்
ஒரே மாதிரியான ஓட்டம்
இந்த விளையாட்டின் நுட்பம் புரிந்து வெகுநாளாயிற்று எனக்கு.
இருந்தாலும் வரவர தூக்கத்தில் அப்பாவின்
அவஸ்தை புலம்பல் சகிக்க முடியவில்லை.

- சஃபி, விருட்சம் கவிதைகள்

*

ஒரு துணுக்குக்கான முன்னுரை

தமிழ்மண உரிமையாளர் காசி மீது அபரிமிதமான அன்பும் நேசமும் கொண்டு, "ஏய்யா, எம்புட்டு பெரிய மனுசன் அவரு.. சராசரி மனுசங்க எல்லாம் அவர பத்தி நாக்கு மேல பல்லு போட்டு எளுதினா அப்புறம் எப்படிய்யா மழை பெய்யும்" என்றெல்லாம் மன உளைச்சல் கொள்ளும் அபாய சுபாவம் உடையவர்கள் இந்த இடத்தில் எஸ்கேப் ஆகி "ஒரு காமெடி" என்ற பகுதியில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இந்த இடத்தில் ஒரு சுயதம்பட்டம் :: என் நினைவு தெரிந்து இதுவரை தமிழ்ச்சேவைக்காக செலவு செய்த கைக்காசு எவ்வளவு என்று குத்து மதிப்பாக கணக்கு போட்டு பார்த்தேன். இந்திய ரூபாய் 16,57,000 என்று வருகிறது. ஆம் பதினாறு லட்சத்தி ஐம்பத்தி ஏழாயிரம். இது தமிழ் வளர்ச்சிக்காக எங்கள் குடும்பம் / நான் செய்த நேரடி கணக்கு மட்டுமே. இதில் தமிழ் தவிர்த்து இதர பிரிவுகளில் அளித்த நிதி, தமிழின் பெயரால் கட்சிகளுக்கு அளித்த கட்டாய நிதி, முக்கியமாக தமிழின் பெயரில் நண்பர்களுக்கு டீ பால் காப்பி போண்டா வடை முறுக்ஸ் வாங்கிக்கொடுத்த பிசாத்து நிதி எதுவும் சேர்க்கப்படவில்லை. இவை அனைத்தும் என்/ங்களின் விருப்பத்தின் ஆர்வத்தின் காரணமாக நடைபெற்ற நிகழ்வென்பதால் இதுவரை யாரிடமும் எந்த சந்தர்ப்பத்திலும் சிறிதும் முனகியதில்லை... தவிர கோயிலுக்கு ட்யூப் லைட் தானம் செய்துவிட்டு அது வெளிச்சமே தர இயலாத அளவு உபயம் :: இன்னார், இன்னார் மனைவி, இன்னாரின் சின்னவீடு, அவர்களின் ஊர் பின்கோடோடு என்று அந்த ட்யூபில் கொட்டை எழுத்தில் சிகப்பு பெயிண்ட் அடித்திருந்ததை தானம் தந்த பெரிய மனுசன் காது படவே ஆறாம் வகுப்பு படித்த போது கிண்டல் அடித்தது மனதில் தங்கிவிட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

அறிவுப்பசி அண்ணாசாமி :: சென்ற முறை இந்தியா வந்திருந்த போது வலைப்பதிவாளர் சந்திப்புக்கு செல்லும் கடைசி நேரத்தில் குளுகுளு வாகனம் சதி செய்ய நண்பரின் இரு சக்கர வாகனத்தை இரவல் வாங்கி முகமெல்லாம் புகை படிய வண்டி ஓட்டி, சந்திப்பு நடந்த இடத்திலும் செயற்கை மற்றும் இயற்கை குளுகுளு வசதி இல்லாமல் புழுக்கம், வெப்பம் எல்லாம் தாங்கி வியர்க்க வியர்க்க தமிழில் பேசியதால் அதுவும் தமிழுக்க நான் ஆற்றிய தொண்டில் அடங்குமா? இது போன்ற கலந்துரையாடல்களில் கலந்து கொள்ள சென்று வர செலவு செய்த சுத்தகரிக்கப்பட்ட கச்சா எண்ணெய்க்கு ஆன தொகை எல்லாம் தமிழ் வளர்ச்சி நிதியில் சேருமா?

*

ஒரு துணுக்கு

குசும்பன் பதிவில் காசி ஒரு பின்னூட்டம் விட்டுருக்கிறார். அதை ஒரு தனிப்பதிவாக போட்டிருக்கலாம். யாரும் கேட்காமலேயே கைக்காசு செலவு செய்து தமிழுக்கு அவர் ஆற்றும் சேவையை பாராட்டியும் ; குடும்பம், தொழில், சுயவிருப்பம் என்று பல்வேறு அற்ப காரணங்களால் புலம் பெயரும் சராசரி மக்களின் இடையில் தேச நலனே முக்கியம் என்று புலம் பெயர்ந்த அவரின் தேசபக்தியை பாராட்டியும் ஆயிரக்கணக்கில் இல்லாவிடினும் நூற்றுக்கணக்கில் பாராட்டு பின்னூட்டங்கள் குவிந்திருக்கும்... (நான் மட்டும் நடிக்க வராவிட்டால் இந்நேரம் ஹார்வார்டில் எம்.பி.ஏ முடித்து டாக்டராகவோ, பைலட்டாகவோ ஆகியிருப்பேன், கலைத்தாய்க்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே தாகத்தில்... என்ற பேட்டியெல்லாம் மனசுகுள்ள வந்து இம்சை பண்ணுது. ) அட மனித இயல்பு தன்னைப்பத்தி நாலு வார்த்தை பெருமையா பேசத்தான் செய்யும்... அதெல்லாம் எனக்கெதுக்கு... நான் என் சம்பந்தப்பட்ட இரு குறிப்புகளை மட்டும் பேசிகிட்டு எஸ்கேப் ஆகிக்கிறேன்..

ஒன்று :: "அதில் அவர்கள் கொடுத்த விருது பதாகையை சிலர் பெருமையாக வேறு போட்டுக்கொண்டார்கள்" என்று நான் இண்டிப்ளாக்கீஸ் அவார்டு லோகோவை சைடிலே போட்டுக்கொள்வதை விமர்சனம் செய்திருக்கிறார். நான் பெருமையாக போட்டுக்கொள்வதற்கு இது மட்டுமல்ல எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. இதுவரை எதையும் நான் சுயதம்பட்டம் அடித்ததில்லை.. சான்ஸ் கிடைத்தும் நூறு நூறு நூறு என்று சொல்லவில்லை, ஐம்பது பதிவு என்று வாண வேடிக்கை விடவில்லை, தினமலர், கல்கி, இந்தியா டுடே, திசைகள் பத்திரிக்கைகளுக்கு நன்றி சொல்லவில்லை, கவுண்டர் ஒரு லட்சம் ஆனதை பற்றி சுய தம்பட்டம் அடித்துக்கொள்ளவில்லை. ஆனால் இந்த விருதை போட்டுக்கொள்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. இண்டிப்ளாக்ஸுக்கு போட்டி போட்ட போது நாமினேட் ஆனதோடு சரி, எனக்கு ஓட்டு போடுங்கள் என்று கூட நான் கேட்கவில்லை. என் கணிப்பையெல்லாம் மீறி எனக்கு கிடைத்த வெற்றி என்பது நான் எதிர்பாராததுதான். அப்போது கூட "ஏதோ ஒரு காரணத்தினால்" எனது பதிவுக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் முகமாக எழுதிய பதிவில் லோகோ போட்டதோடு சரி. ஆனால் அப்புறம் ஒரு அறிவுஜீவி இப்போது காசி கேட்பது போன்ற அதே நக்கல் தொனியில் "தமிழ்மண நடசத்திர தேர்வு முறையை விமர்சித்தவர்கள் இண்டிப்ளாக்கீஸ் வெற்றியை கொண்டாடுகிறார்கள்" என்று ஒரு நபர் விருப்பத் தேர்வு முரைக்கும் ஓட்டெடுப்பு தேர்வு முறைக்கும் உள்ள வித்தியாசம் புரியாமல் உளறியபோது அட ஏன் ஒரு பதிவோட நிறுத்த வேண்டும் என்று நிரந்தரமாகவே லோகோவை போட்டுக்கொண்டேன். கண்டிப்பாக பெருமையாகத்தான் போட்டுக்கொண்டேன். அதில் காசிக்கு என்ன ப்ரச்னை இருக்க முடியும் என்பது எனக்கு புரியவில்லை. ஒரு குழு மட்டும் ஜல்லியடிக்காத ஒரு போட்டியில் போட்டியிட்டு ஜெயித்து வாங்கிய அந்த லோகோ இனி எப்பொழுதும் இப்பதிவில் இருக்கும் என்பதை பெருமையாகவே சொல்லிக்கொள்கிறேன்.. ஒரு வேளை தமிழ்மணம் ஏதாவது அவார்டு தந்து அதை யாராவது போட்டுக்கொண்டால் அதிபர் காசி கேட்கட்டும்..

சிரிக்க சிந்திக்க சில துளிகள் ::

அ)ஏதோ பேரு தெரியாத சைட்டு தமிழ்மணத்துக்கு கொடுத்த ரேட்டிங்கை பெருமையாக ஒரு பதிவாக போட்டு எல்லாருக்கும் நன்றி தெரிவித்தது, காசி.

ஆ) இதெல்லாம் ஒரு அவார்டா எனும் தொனியில் காசி பேசுகிறார். சரிதான்... இதே அவார்டுக்காகத்தான் தமிழ்மணம் வெற்றி பெற வேண்டும் என்று ஒருவருக்கு மேற்பட்டவர்களால் பிரச்சாரம் செய்யப்பட்டது. (நான் எனக்காக பிரச்சாரம் கூட செய்துகொள்ளவில்லை) நானும் தமிழ்மண வாசகன் என்ற முறையில் ஓட்டு போட்டேன். (சும்மா தகவலுக்காக சாமி. இந்த ஓட்டுக்காக எந்த தானியமும் கேட்கவில்லை...)

இ) தமிழ்மணம் ஜெயிக்கவில்லை என்றதும் தமிழ்மண பயன்பாட்டாளர்களை நோக்கி "வாட் த ஃபக்" என்று ஒரு சிந்தனைவாதி பச்சையாக திட்டினார்... அப்போது கூட எத்தனையோ காரணங்களுக்காக ஓட்டு போட முடியாமல் இருந்திருக்கலாம், அதற்காக உங்கள் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்த தமிழ்மண பயன்பாட்டாளர்களை பார்த்து வாட் த ஃபக் என்றெல்லாம் கேட்கலாமா என்று சூடு சுரணையோடு பல குரல்கள் எழுந்திருக்க வேண்டும், வில்லை... அதை விட சூப்பர் டாப்பாக வயது முதிர்ந்த வலைப்பதிவர் ஒருவர் அங்கு சென்று வருந்துகிறேன், வெட்கப்படுகிறேன் - வாட் த என்று சொல்லப்பட்டதற்காக அல்ல, ஓட்டு போட முடியாததற்காக - என்கிறார். அரசியல்வாதிகளுக்கு சற்றும் சளைக்காமல் சுயமரியாதை போராட்டக்காரர்களின் சுயரூபம் சந்தி சிரிப்பதை அப்போது(ம்) பார்த்தேன்...

ரெண்டு :: என்னை வேலியில் போகிற ஒணானுடன் ஒப்பிடுகிறார். எப்போதும் அரோகரா சத்தம் மட்டுமே கேட்கும் நிலையில் கேள்வி ரூபத்தில் கூட அபசுரமாக வேறு ஒரு சத்தம் எழுந்தால் அது ஓணானின் சத்தமாகத்தான் தெரியும்... ஓணான்களை அடையாளம் காணும் அளவுக்காவது வெளியுலகம் தெரிகிறதே என்று சந்தோஷப்பட்டுக்கொள்ள வேண்டியதுதான். (அறிந்தோ அறியாமலோ வேட்டிக்குள்ளும் சட்டைக்குள்ளும் ஒட்டிக்கொண்டிருக்கும் ஒட்டுண்ணிகளை விட வேலியில் தன் பாட்டுக்கு தன் வழியில் போகும், தனி மடல்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாத, ஆனால் யாராவது பொதுவில் வாலை பிடித்து இழுத்தால் மட்டும் அபசுரமாக சத்தம் எழுப்பும் ஓணான் எவ்வளவோ மேல் என்பது சிலருக்கு புரியாமலே இருப்பதை குறித்து எனக்கு எந்த ஆட்சேபமுமில்லை)

*

ஒரு காமெடி.

நான் எழுத்தாளன், நான் கவிஞன் :: இப்படியெல்லாம் தன்னைத்தானே விளம்பிக்கொண்டு ஆடம்பரமாக எழுதுபவர்களை பற்றி என் இலக்கிய சந்திப்பு பேசுகிறது... அல்லது கிண்டலடிக்கிறது. இதை பார்த்துவிட்டு "ஏன் ஒருவருக்கு எழுத்தாளனாகும் ஆசை வரக்கூடாதா, கவிஞனாகும் ஆசை வரக்கூடாதா" என்று கேட்கிறார் நமது செலக்டிவ் கேள்வியாளர். இது போன்ற தர்க்கக்கேள்விகள் க்ரீமி லேயர் சோதாத்தனம் என்ற வகைப்பாடலில் வரும்.

சம்பவம் 1) சில வருடங்கள் முன்பு ஆந்திராவில் ஒரு கிராமத்தில் ஒரு பெரியவர் திடீரென ஒரு வழக்கு போட்டார். இந்தி திரைப்பட நடிகை ஸ்ரீதேவி மீது. அதாவது ஸ்ரீதேவி தன்னுடைய மனைவி என்றும் தன்னோடு வாழ அவரை பணித்து சேர்ந்து வைக்குமாறும்...

சம்பவம் 2) நேரு பிரதமராயிருந்த சமயம் ஒரு முறை மனநல மருத்துவமனைக்கு சென்றிருந்தார். அங்கே மருத்துவர் தாதியர் என்று பலரிடம் பேசிய பின்பு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்த ஒருவரிடம் பேச சென்றார்... சிகிச்சையாளி நேருவை பார்த்து "நீங்கள் யார்" என்று கேட்க, நேரு அவரிடம் "நான்தான் ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் பிரதமர்" என்றார். உடனே அவர் நேருவை நெருக்கத்தில் அழைத்து கிசுகிசுப்பாக சொன்னார் "சத்தமா சொல்லிராதீங்க... இதயேத்தான் நானும் சொன்னேன், என்னய கொண்டு வந்து இங்க அடச்சிட்டாங்க..."

இளநீதி :: உண்மை சம்பவம் நம்பர் ஒன்றையும் உண்மையா எனத்தெரியாத சம்பவம் இரண்டையும் பற்றி படிக்க நேர்ந்தால் அவர்கள் இந்த நிலையில் இருப்பதற்கான குமுகாய இச்சாதாரங்களை சாடி தார்மீக கோபத்தை தட்டச்சு பலகையை தட்டி அடிச்சி பதிவெழுதுவதை விடுத்து கிண்டலாக சிரிப்பவன், முக்க்கியமாக சத்தமாக சிரிப்பவன் மனித தன்மையற்றவன்..

*

ஒரு கிச் கிச்

வலையுலகில் முதல் முதலில் ஆரம்பிக்கப்பட்ட கட்சி நான் நிறுவன தலைவராக இருக்கும் பமகதான்... நல்ல வேளையாக எனக்கும் கட்சியில் இருப்பவர்களுக்கும் பமக என்பது ஜாலி விஷயம்தான், இதன் மூலம்தான் உலகம் தலைகீழாக மாறப்போகிறது என்ற சாளேஸ்வரம் எல்லாம் எப்பொழுதும் வராத காரணத்தினால் அதற்கு பிற்பாடு வலையுலகில் உதயமான எந்த கட்சிகளையும் ஜாலியாகவே பார்த்தோம்..

கிச் அ) புதிதாக துவங்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட கட்சி அடையும் பிரபலத்தை கண்டு பொறுக்க முடியாமல் முகமூடிக்கு பொறாமை - புது கட்சியின் அன் அஃபிஷியல் ஸ்டாப் ரிப்பர்

கிச் ஆ) ஹாலண்டில் சிவாஜி படப்பிடிப்பில் ஷ்ரேயாவுடன் உல்லாசமாக டூயட்டில் இருந்த ரஜினி திடீரென டான்ஸ் மூவ்மெண்ட் சரிவர வராமல் கஷ்டப்பட்டார்.. இம்சை அரசன் படத்தில் வடிவேலுவுக்கு கதாநாயகன் சான்ஸ் கிடைத்ததை அறிந்தவுடன் ரஜினிக்கு வடிவேலு மேல் ஏற்பட்ட பொறாமையே மூவ்மெண்ட் கோளாறுக்கு காரணம் என்று கோடம்பாக்கம் பட்சிகள் கூவுகின்றன - தினமுயக்கம் ஸ்டாஃப் ரிப்போர்ட்டர்.

*

ஒரு வாய்ஸுக்கு முந்தைய முன்னூட்டம்

தேர்தலுக்கு முன்பே நான் வெளியிட்ட கருத்து கணிப்பு திமுக 163, அதிமுக 69, விஜயகாந்த் 1, சுயேட்சை 1 ஜெயிக்கும் என்பதாகும். என்ன எளவு, இதை வழக்கம் போலவே என் வீட்டு பாத்ரூமில் எழுதி வைத்தேன். அது பாத்ரூமில் மூச்சா போன நண்பர்களை கேட்டால் தெளிவாக தெரியும். சின்ன வயதில் இருந்தே பாத்ரூமில் கருத்து கணிப்பு எழுதுவதுதான் எனக்கு பழக்கம். ரொம்பவும் அக்யூரேட்டாக இருப்பதால் தமிழகத்தில் தலையெழுத்து மாறிவிடக்கூடாதே என்று பாத்ரூமில் மட்டும் எழுதுவது பழக்கம்.

*

ஒரு வாய்ஸ்

முதல் முறையாக ஒருவர் சுயதம்பட்டம் அடிக்கிறோம் என்ற சுயநினைவோடு வாய்ஸ் கொடுத்திருக்கிறார்... (ஆனா எதிர்பார்த்த பலன் கிடைக்கல போலிருக்கே.. ஸ்டாண்டர்டு பின்னூட்ட செட்லயே நாலு பேர் குறையுது?)

குழலி எந்த கூட்டணிக்கு எத்தனை இடங்கள்? என்ற முதல் கேள்விக்கான பதிலில் விஜயகாந்த் கட்சிக்கு 0 என்று குறிப்பிடுகிறார்.

நாலாவது கேள்வியில் விஜயகாந்த் எத்தனை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் (அல்லது தோற்பார்) என்ற கேள்விக்கு 2000 - 3000 என்று பதில் எழுதியிருக்கிறார். இப்போது வசதியாக அவர் 2000-3000 வாக்கு வித்தியாசத்தில் தோற்பார் என்றுதான் சொன்னேன் என்று சொல்லலாம்.

உண்மையான முடிவு திமுக 163, அதிமுக 69, விஜயகாந்த் 1, சுயேட்சை 1

குழலியின் கணிப்பான திமுக 197, அதிமுக 36, விஜயகாந்த் 0, மற்றவர்கள் 1 என்பது தேர்தல் முடிவுகளோடு மிகவும் நெருங்கி வந்ததாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். குமுதத்தின் கணிப்பான திமுக 145, அதிமுக 80 என்பது உண்மையான தேர்தல் முடிவுகளிலிருந்து மிகமிக விலகியது. ஏனெனில் "குமுதமெல்லாம் ஒரு பத்திரிக்கை, அது கணிப்பு போடுது.. ஊர் ஊராக பிரயாணம் செய்து அதை போட்டோ போட்டு எழுகிறார்களே தவிர அதுல அறிவியல் பூர்வம்னு ஏதாச்சும் இருக்கா... குமுதத்தின் கணிப்பு உள்நோக்கம் கொண்டு, காசு வாங்கிக்கொண்டு, பொறுப்பாசிரியரின் ஜாதி பற்றில் தன் கருத்தை வாசகர் கருத்தாக எழுதப்பட்ட கருத்து திணிப்பு..." என்று இவர்கள் குமுதத்தை பற்றி எழுதுவது அறிவார்ந்த நையாண்டி எனப்படும்.

ஏனெனில் அறிவுபூர்வமான சிந்தனையை தன் வசப்படுத்திய இவர்களால் எழுதப்படும் நகைச்சுவைக்கு நையாண்டி அல்லது தமாசு என்று பெயர். ஆனால் ஊர் ஊராக போகாதது மட்டுமல்ல, நாட்டிலேயே இல்லாமல் வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு ஆராய்ச்சி செய்து அரசியல் அலசலை வெளியிடும் - அதுவும் கடந்த தேர்தல் முடிவுகளை extrapolation முறையில் எல்லாம் துவைத்து கணிப்பு வெளியிட்ட - இவர்களை பார்த்து இவர்கள் குமுதத்தை பார்த்து சொல்வதில் கொஞ்சமே கொஞ்சத்தை, அதாவது தமது மன ஆசையை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை மட்டும், யாராவது சொல்லிவிட்டால் அது அங்கதம் என்ற கேவலமான ஜோக்கு பட்டியலில் வரும். (நெருப்பாற்றில் நீந்தி கொள்ளிக்கட்டையால் துவட்டிக்கொண்டே எழுதும் நக்கீரனின் கணிப்பான திமுக 207 அதிமுக 26 என்பது அறிவியல் பூர்வ நடுநிலை கணிப்பு... ஏனேனில் சமூக கோமியம் அப்படி...)

இந்த லட்சணத்தில் இலவச அறிவுரை வேற... கிண்டல் செய்பவர்கள் எல்லாம் அதில் இருந்து விடுபட்டு உருப்படியாக எழுத வேண்டுமாம். கிண்டலாக எழுதப்படுபவை எல்லாம் உருப்படி இல்லாத ஐட்டம் என்று யார் வரைமுறை செய்கிறார்களோ தெரியவில்லை. அட இதிலாவது கிண்டல் மிச்சம் இருக்கிறது. அவர்கள் உருப்படியாக எழுதுவதாக நினைத்து எழுதுவதில் மிச்சம் என்று பார்த்தால் ஒன்றுமேயில்லை. தமிழ் வலைப்பதிவு அத்தாரிட்டி ஆப் இண்டியா என்ற கற்பனை போஸ்டில் நமக்கு நாமே திட்டத்தில் நியமித்துக்கொண்டவர்கள் பாடும் பல்லவி இது. யப்பா என்ன கருத்து சுதந்திரமடா? ஒருவரது ரசனைக்கு ஒத்து வரும் பதிவுகள் எல்லாம் உயர்தரமானது, மற்றவை குப்பை அல்லது உருப்படி இல்லாதவை.... ஸ்ப்ப்பாஆஆ எக்கச்சக்கமா கண்ண கட்டுதுடா சாமி...

*

இன்னொரு கவிதை

பூனை
குறுக்கே
வரவே செய்யும்
வரும் போதும்
போகும் போதும்
அது சாலையை
கடந்தே ஆக வேண்டும்
அவர் சொன்னார்
சாலையின் ஓரத்தில் நடக்க
பூனையை பழக்க வேண்டும்
சரிதான்
............
ஆனால்.......

- இரா.நரசிம்மன், விருட்சம் கவிதைகள்

*

ஏன்?

இதை நண்பர் ராசா கேட்டிருந்தார். அவ்வளவுதான் கேள்வியே... ஆனால் விடை அறியும் ஆர்வத்தில் என்னிடம் கேட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்... ஏனெனில் என்னிடம் இருக்கும் ஏகப்பட்ட "ஏன்"களுக்கே இன்னமும் பதில் கண்டுபிடித்த பாடில்லை.. இதில் இவர் ஏனுக்கு நான் எங்கே போவது?

கக்கூஸ் க்ளீனர் என்ற வார்த்தை பிரயோகத்தை என் பதிவில் படித்ததை மட்டும் நினைவுக்கு கொண்டு வந்து அவ்வார்த்தை ஏன் எழுதப்பட்டது, எதற்கு எழுதப்பட்டது என்பதெல்லாம் எதுவும் தெரியாமலேயே அவ்வார்த்தையின் பொலிடிக்கலி கரெக்ட்னஸ் பயன்பாட்டை ஆராய்ந்து தானே ஒரு முடிவுக்கு வந்து வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் பட தலைப்புக்கு டாக்டர்கள் கோபப்பட்ட ரேஞ்சுக்கு முந்தி கோபப்பட்ட இளவஞ்சி அது எனக்கு இன்னமும் ஏன் என்பது புரிவதற்கு முன்பே இன்னமொரு முறை கேள்வி கேட்டிருக்கிறார். இன்னமும் பல முறை கேள்வி கேட்பார். ஆனால் மனதில் இருப்பதையெல்லாம் கொட்டிவிட்டு - break even point என்றால் இப்போதாவது என்னவென்று புரிகிறதா? - சிம்பிளாக பாடம் கற்பிப்பதற்காக என்று இமேஜ் பில்டிங் செய்வது ஏன்?

பொதுவாழ்க்கைக்கு வந்தவர்களை விமர்சிக்கலாம்தான். ஆனால் பொதுவாழ்வுக்கு வந்தவர்களின் போலித்தனங்களை விமர்சனம் செய்வதையே தாங்க முடியாதவர்கள் பலர் இங்கு உண்டு. ஒரே ஒரு முறை ராமதாஸ் கடிதத்தை படிக்க முடியாமல் திணறினார் என்று எழுதியதற்கு ராம்தாஸ் தண்ணி அடிப்பார் என்று கீழ்த்தரமாக எழுதுகிறாயா என்று நெஞ்சு துடித்தவர்கள் உண்டு. ஆனால் ஜெயகாந்தன் முடி மழிப்பதையும், சாயிபாபா தலையை வைத்து பரட்டையன் என்றும் இன்னும் பல பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கி எழுதும் சிலருக்கு பொதுவாழ்வில் இருக்கும் கவிஞர் அறிவுமதியின் - அவர் தொழிலை கூட இல்லை - சூழ்நிலை வயப்பட்ட அரசியல் நிலைப்பாட்டை விமர்சனம் செய்ததால் கோபம் தலைக்கேறி சக வலைப்பதிவரை மரியாதை குறைவாக தனிப்பட தாக்கி விமர்சனமும் கவிதையும் எழுதிய ஒரு பதிவரை பதில் மரியாதைக்காக வெறுமே கவிஞர் காத்துவாயன் என்று சொல்வது கூட இங்கு நடுநிலைகளுக்கு நெஞ்சு பொறுக்குதில்லையே அது ஏன்? (த.தா.பா.வ)

தாம் வசதியாக வேண்டிய கல்வியை படித்து பட்டம் பெற்று அயல்நாட்டுக்கு வந்து அன்னிய மொழியில் கம்ப்யூட்டர் தட்டி சம்பாதித்து ஊருக்கு காசு அனுப்பிவிட்டு பொழுது போகாத நேரத்தில் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டே போலித்தனமாக தமிழ்நாட்டின் எல்லாப்பயலும் தமிழைத்தான் கல்லூரியில் படிக்கவேண்டும் என்று இடும் முழக்கத்தை கேள்வி கேட்டால் அதை தரங்கெட்ட நகைச்சுவை என்று பிரச்சாரிப்பது ஏன்? (த.தா.பா.வ)

அனுமதிப்பதா இல்லையா என்ற உளத்தத்தளிப்பிற்கு கூட தேவையில்லாமல் எனக்கு நேரடியாக தோன்றிய, அமெரிக்காவில் இருக்கும் அனைவருக்கும் ஒரே அர்த்தம் தோன்றிய ஒரு பின்னூட்டத்தை கருத்துச்சுதந்திரம் காரணமாக அனுமதித்த பின்னாலே அதில் இரட்டை அர்த்தம் தோன்றிய காரணத்தால் ஏதேதோ கற்பனையில் நினைத்துக்கொண்டு தேவையில்லாமல் என்னை ஏகவசனத்திலே திட்டி வழக்கு என்றெல்லாம் வந்த பதிவுக்கப்பாலே என்ன ப்ரச்னை எதற்கு ப்ரச்னை என்றெல்லாம் ஒன்றுமே அறியாமல் "இவனுங்களை பற்றி தெரியாதா என்ன" என்று ஒரு ஆட்டு மந்தை கூட்டம் கனைக்கும் நிலை உருவானதே அது ஏன்? (த.தா.பா.வ)

ஒரு சிலர் வெளிப்படையாகவே ஜிமெயில் டாக்கில் பேசினோம், தனிமெயில் பரிமாறிக்கொண்டோம் என்றெல்லாம் சொல்லிக்கொள்வார்கள். ஆனால் மற்றவர்கள் கூட்டணியாக இருப்பதாக இவர்களே உருவகப்படுத்திக்கொண்டு அதை என்னவோ கொலைக்குற்றம் மாதிரி ப்ரொப்பகாண்டா செய்வார்கள். அப்படியே கூட்டணியாக இருந்தால் இப்போது என்ன ப்ரச்னை என்பது ஒரு புறம் இருக்கட்டும், செய்கிறார்கள் செய்கிறார்கள் என்று ஊகங்கள் அடிப்படையிலேயே புலம்பிக்கொண்டிருப்பது ஏன்? அய்யோ அவர் பதிவில் எல்லாம் பின்னூட்டம் போட்டுவிடாதே, அவருக்கு பதில் சொல்லாதே என்றெல்லாம் அறிவுஜீவிகள் காபந்து செய்ததை நினைத்து உண்மையிலேயே சிரிப்புதான் வந்தது... இருக்கும் குண்டு சட்டிக்குள் இத்தனை விதமான குதிரை ஓட்டல்கள் ஏன்?

இன்று பெண்கள் நிலை பற்றியெல்லாம் அக்கரையுடன் பேசப்படுவது சந்தோஷமான விஷயம்தான். ஆனால் தங்கமணியின் இந்து மத ஒழிப்பு பதிவில் விவாதம் செய்துகொண்டிருந்த ஜெயஸ்ரீயை அனாதை ஆனந்தன் என்ற *** மிகவும் கீழ்த்தரமாக தனிப்பட்ட முறையில் - அது ஜெயஸ்ரீ என்பதாக இல்லாமல் வேறு சில பெண்களாக இருந்திருந்தால் அப்படி எழுதிய அனாதை ***க்கு என்ன கதி ஏற்பட்டிருக்கும் என்று ஒரு கணம் நினைத்து பார்க்கிறேன் - தாக்கி எழுதிய பின்னர் எட்டு மணி நேரம் கழித்துதான் "தொழில் நுட்ப கோளாறால்" அடுத்த பின்னூட்டம் வெளியானது. இடைப்பட்ட காலத்தில், அட அதற்கு அப்புறம் கூட ஒருவர் கூட அதை குறித்து முனக கூட இல்லையே அது ஏன்?

எவனாவது கருத்து முரணான கேள்வி ஒன்றை கேட்டால், உடனே அவர்களை எப்படியாவது மடக்கி விட வேண்டும் என்று ஏதாவது சொல்வது ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது... குமரனை பார்த்து முத்து தமிழினி "விடாது சிகப்பு" நீதானே என்கிறார். - முத்து தமிழினி போலியுடன் சமரசம் பேசுகிறார். நக்கீரன் கோபாலுடன் தம்மை ஒப்பிட்டுக்கொள்கிறார். நக்கீரன் கோபால் சந்தன வீரப்பனுடன் கயவாளிக்கூட்டு வைத்திருந்தவர் என்பது எனக்கும் வேறு பலருக்கும் நீண்ட நாள் சந்தேகம். அது போலவே முத்து தமிழினி கேட்டவுடன் போலி சமரசத்துக்கு வருகிறார் என்பதால் முத்துதான் போலியாக இருக்கக்கூடும் என்று ஒருவேளை குமரன் எழுதினால் அவருக்கும் நடுநிலையாளர்கள் "பாடம்" கற்பிக்கும் பதிவு போட முயல்வார்களோ? - குமரன் விடாது சிகப்பு இல்லையென்றால் அதை குமரனே நிரூபிக்கவும் வேண்டுமாம். ஆப்சென்ட் ஆனவங்க எல்லாம் கைதூக்குங்க என்று பேசுவதெல்லாம் "எழுத்து" என்று நிறுவப்படுவது ஏன்?

என்னை பார்த்து முகத்தை மூடிக்கொண்டிருப்பதால்தான் "தரம்" என்று இன்னும் எவ்வளவு ஜல்லி வருமோ தெரியவில்லை... சொந்தமாக போட்டோவும் பெயரும் இல்லாமல் பதிவு எழுதுபவர்களை குறித்து இப்படி சொல்வது சிலருக்கு பொழுதுபோக்காகவே இருக்கிறது - பேராசிரியர் தருமி இந்த கேள்விக்கு ஆயுட் கால உறுப்பினர். அவர் நிறைய பதிவுகள் முகம் மறைத்து பெயர் மறைத்து எழுதியவர்தான். பிறகு ஒரு நாள் திடீரென வெளிப்பட்டார். உடனே ஓவர் நைட்டில் அவரின் தொனி மாறி முகம் மறைத்து எழுதுபவர்களை விமர்சனம் செய்வதாக மாறிவிட்டது - அப்படி செய்யும் ஒருவரான முத்துவின் கட்சியில் கொ.ப.செவாக இருக்கும் நியோவின் பூர்வீகம் என்ன? என்னையாவது சிலர் பார்த்திருக்கிறார்கள். என் பெயர் நிறைய பேருக்கு தெரியும். நியோ யார்? காலையில் எழுந்து கரண்ட் கட் என்றால் கூட பார்ப்பானின் சதி என்று திட்டுகிறார் இவர். ஜாதி சொல்லி திட்டாத ஒரு பதிவோ சக வலைப்பதிவர்களுக்கு பொச்சரிப்பு போன்ற தரமான வார்த்தைகளோ இல்லாமல் இவரின் ஒரு பதிவும் இருக்காது. இப்பேற்பட்ட அறிவுக்கொழுந்து பற்றி கேள்வி கேட்காமல் கூட்டு வலைப்பதிவு நடத்துவார்கள். அதோடு இல்லாமல் அதற்கு சப்பைகட்டு கட்டி இது போன்றவை மேல்தரம், எதிரித்து எழுதுவது **** எதிர்ப்பு என்று மட்டையடி செய்யப்படுவது ஏன்?

எப்படி ஜாதி தாண்டி பார்ப்பவர்கள் - அல்லது அப்படி உதட்டளவில் கூறிக்கொள்பவர்கள் - தான் இன்ன ஜாதியில் பிறந்ததற்காக பெருமைப்படுகிறேன் என்று சொல்பவர்களை இழிவாக பார்க்கிறார்களோ, அதே போல இனம் தாண்டி, மொழி தாண்டி பார்ப்பவர்கள் தன் இனத்தை பற்றி தன் மொழியை பற்றி பெருமைப்படுபவர்களை மட்டமாக பார்க்கும் வாய்ப்பு உள்ளது என்பதை சிலர் உணருவதேயில்லை என்பது மட்டுமல்ல எதிர்கருத்து கூறினால் உடனே இவன் அங்கிருந்து வந்தவன், நம்மாளு இல்லை என்றெல்லாம் பேசப்படுகிறதே, அது ஏன்?

இதெல்லாம் சும்மா இப்போதைக்கு ஞாபகம் வந்த சாம்பிள் "ஏன்"கள் தான்... கேட்கப்படாத அலுப்பூட்டும் ஏகப்பட்ட ஏன்கள் மிச்சம் இருக்கின்றன.. அவ்வப்போது தோன்றினால், ஓவர் போலியாக தோன்றும் பில்டப் விஷயங்களை சம்பந்தப்பட்டவருக்கு மட்டும் - கொஞ்சம் முயற்சி செய்தால் அடுத்தவருக்கும் - புரியும் வண்ணம் கிண்டல் அடிப்பது தவறு என்று உங்களுக்கு தோன்றினால் தாராளமாக உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள். அதற்குத்தானே பதிவு வைத்திருக்கிறீர்கள்... என்னை பற்றி விமர்சனம் செய்யுங்கள். திட்டி எழுதுங்கள். உங்களால் முடிந்த அளவு புழு பூச்சி என்றெல்லாம் உருவகம் செய்து கவிதை புனையுங்கள். ஆனால் அதன் மூலம் எனக்கு அறிவுரை சொல்லிவிட்டோம் என்று தலை ஃபிகரும் நல்ல பாடம் கற்பித்துவிட்டீர்கள் தல என்று அடிப்பொடிகளும் பரஸ்பரம் முதுகு சொறிந்து கொள்ளாதீர்கள். சுற்றி முற்றும் பாருங்கள். ரசனைகள் வேறுபடும் என்ற அடிப்படை ஞானம் கூட இல்லாமல் பதிவுகளின் தரத்தை அளவீடு செய்யும் அளவுக்கெல்லாம் அதிகாரமும் தகுதியும் நமக்கு கொடுத்தது யார் என்பதை சற்று அமைதியாக சிந்தித்து பாருங்கள்... அதோடு சேர்ந்து என் சகிப்புத்தன்மை பற்றி வேறு கேள்வி.. சகிப்புத்தன்மை இல்லையின்னா தமிழ் பதிவுகள படிக்கறத மொத்தமா நிறுத்தி இல்ல இருக்கோணும். முழுசா இருக்கு சாமிகளா சகிப்புத்தன்மை... அடுத்தவங்க இப்படித்தான் நினைத்திருக்க வேண்டும் என்று உங்களுக்கு நீங்களே கற்பனை குதிரைய தட்டிவிட்டுகிட்டு எழுதறத கொஞ்சம் மட்டுப்படுத்தி ஓவர் பில்டப் இல்லாம சாதா ரணமா எழுத முயற்சி பண்ணுங்க ராசாங்களா....

*

கருத்து அல்லது நீதி :: ச(கு)முகாயம் என்று ஒன்று இருந்தால் பொழுதுபோக்க சர்க்கஸ் போன்ற சமாச்சாரங்களும் இருக்கும். சர்க்கஸ் என்ற ஒன்று இருந்தால் கோமாளிகள் என்று சிலரும் இருப்பர். கோமாளிகள் என்று இருந்தால் கோணங்கித்தனத்திற்கும் பஞ்சமிருக்காது. கோணங்கித்தனத்தை கண்டால் சிரிப்பு என்பது இயல்பிலேயே வருமளவு மக்கள் படைக்கப்பட்டிருக்கின்றனர். பெரும்பாலானோருக்கு அமைதியாக மனதிற்குள்ளாகவே சிரிக்கும் வாய்ப்பு வெகுமதியாக இருக்கிறது. என்னை போன்ற சிலர் சத்தம் போட்டு சிரித்து விடுகின்றனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் சிலர் மட்டுமே சத்தம் போட்டு சிரிப்பதால் அவர்களால்தான் தம் செயல்களுக்கு கோமாளித்தனம் கிடைக்கிறது என்று கோமாளிகள் நினைப்பது குமுகாயத்தின் துரதிர்ஷ்டமே. கூட்டம் சிரிக்கக்கூடாது என்று கோமாளிகள் எண்ணுவார்களேயானால் ஒன்று கோணங்கித்தனம் விடுத்து நல்வித்தை பழகட்டும். அல்லது சிரிப்பை கண்டுகொள்ளாத மனமாவது வாய்க்கும் பாக்கியம் கிடைக்கட்டும்.




š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


அது சரி.... மொத்தமா படிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்துடுச்சிப்பா.... உங்களுக்கு எதுக்கு அவார்டு எல்லாம் கொடுத்தாங்க.... அடுத்தவங்களையெல்லாம் சிறப்பா திட்டறீங்கன்னா?
 



//விடை அறியும் ஆர்வத்தில் என்னிடம் கேட்டிருக்க மாட்டார் என்று நம்புகிறேன்//

ஆமென்..! (கேள்வி கேட்டாக்க அறிவு வளரும்னு சொல்லி வளத்திட்டாங்க.. அதுனால கேட்டுற்றது... பதிலெல்லாம் எதிர்பார்க்கிறது இல்லைங்க.. )

//ஓவர் பில்டப் இல்லாம சாதா ரணமா எழுத முயற்சி பண்ணுங்க ராசாக்ககளா....//

'சாதா ரணமா'ன்னு கேப் விட்டு எழுதுனது, தட்டச்சு பிழையா ? இல்ல ?
 



Good One. :)

Madie
 



முதல் பாதி வாசிக்கையில் மனதில் தோன்றிய ஒற்றை வரிப் பின்னூட்டம்: மிக மிக தரங்கெட்ட பதிவு.

ஆனால் அதன் பின் என் பெயரைக் குறிப்பிட்ட பகுதி பார்த்த பின், என் பெயரைக் குறிப்பிட்டதாலேயே நான் அவ்வாறு பின்னூட்டம் இட்டேன் என்று நினைக்க வாய்ப்பிருப்பதால் அவ்வாறு பின்னூட்டமிடுவதைத் தவிர்க்கவேண்டியதாயிற்று.
 



இன்னா நைனா..செம்ம பார்ம்லே இருக்குறா மாதிரி தெர்யுது?!
 



என் 'ஏன்'களோட உங்க 'ஏன்'ஐயும் சேத்துக்கிட்டேன்.. கண்டுக்காதீங்க ராசா..

'சாதா ரணமா' என்பதில் எந்த எழுத்துப்பிழையும் இல்லைங்கோ.

*

தருமி, "கெரகம்" நடந்த போது எழுத ஆரம்பித்து சொந்த வேலை காரணமாக காலங்கடக்க, பின் வெட்டி வேலை என்று நானே தலை முழுகிய பதிவுதான். ஆனால் இன்னமும் கெரகம் முடியவில்லை என்பதை உணர்ந்த போது தூசி தட்டி மொத்தமாகவே போட்டேன்.

எனினும் எனக்கு தோன்றிய நான் பார்த்த சில விஷயங்களை கேட்டிருக்கிறேன்/எழுதியிருக்கிறேன். உங்களுக்கு தரமாக தோன்றினால் வேண்டுமானால் நான் ஆச்சரியப்பட்டிருப்பேன். ஏனெனில் உங்கள் பத்து கட்டளைகளுக்கும் ஒன்றாக இது கண்டிப்பாக இருக்கும், எழுதியது வேறு யாராகவிருந்திருந்தால் என்பதை உணர்ந்திருந்ததால்... (உண்மையாக இளவஞ்சி பதிவு எழுதியதும் நான் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரே ஒரு விசயம், உங்கள் ஒருவரின் பின்னூட்டம் எப்படி இருக்கும் என்பதைத்தான். அதை வெளிப்படையாகவே சிலரிடம் சொல்லியிருந்தேன்)

சொல்லப்பட்ட விஷயத்தில் சிறிதாவது நியாயம் உண்டு, விதம்தான் தரமில்லை என்ரு சொல்கிறீர்களா? அல்லது விஷயமே தரங்கெட்டது என்று சொல்கிறீர்களா தெரியவில்லை... ஏன் தரமானதாக உங்களுக்கு தோன்றவில்லை என்று இதுவே ஒரு காலமாக இருந்திருத்நால் கேட்டிருப்பேன். இப்போது அவசியப்படவில்லை.. பல இடங்களில் உங்கள் அனுபவத்துக்கு சற்றும் பொருந்தாமல் எழுதப்பட்ட (may I add, போலித்தனமான?) உங்கள் எழுத்துக்களை கண்ட போதெல்லாம் (ஒரு முறை கேட்டேன் என்று நினைக்கிறேன், நீங்கள் கடைசி வரை பதில் சொல்லவில்லை) எங்கே நீங்கள் கவனமாக கட்டிக்காத்து வரும் இமேஜுக்கு நம்மால் பங்கம் வந்துவிடப்போகிறதே என்று அமைதியாக கடந்து போவது போலவே இதையும் கடக்கிறேன்.

பதிவுலகில் எழுத்தை விட அதிகமாக வயதுக்குத்தான் மரியாதை தரவேண்டும் என்பது நியதியானால் தெரிவியுங்கள், நீங்கள் எப்போதும் சொல்வீர்களே, முகத்தை மூடியிருக்கும் காரணத்தால் அல்லது தைரியத்தால்தான் என்று, அது போல உங்களை பற்றி இந்த பின்னூட்டத்தில் 'தரங்கெட்டு' எழுதியதற்கு மன்னிப்பு கோருகிறேன்.
 



முகமூடி,
இன்னும் பல பல அசிங்கள் அரங்கேறிட்டு இருக்கிங்க வெளியில பெண்ணுரிமைவாதிகளாகவும், சீர்திருத்தவாதிகளாகவும் சீன் போட்டுட்டு இருக்கின்ற பல பேரின் உண்மையான முகம் தமிழ்மணத்தில் எழுதுகிற சில பெண்களிடம் கேட்டுப்பாருங்க தெரியும்.
 



//பல இடங்களில் உங்கள் அனுபவத்துக்கு சற்றும் பொருந்தாமல் எழுதப்பட்ட (may I add, போலித்தனமான?) உங்கள் எழுத்துக்களை கண்ட போதெல்லாம் (ஒரு முறை கேட்டேன் என்று நினைக்கிறேன், நீங்கள் கடைசி வரை பதில் சொல்லவில்லை)//

ஐயோ ஐயோ தருமிய ஒரு கிருமி ரேஞ்சுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டீங்க முகமூடி...

தோல் உரித்தல்கள் தொடருமா?
 



ஒட்டு மொத்தப் பதிவையும் படிச்சேண்ணா... தோராயாமப் புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு...

ஆனாக் கருத்துப் பகுதியிலே நீங்கப் போட்டிருக்கும் விஷ்யங்கள் வாழ்க்கையின் பலச் சூழல்களுக்கும் பொருந்தும்.
 



//தமிழ்ச்சேவைக்காக செலவு செய்த கைக்காசு எவ்வளவு என்று குத்து மதிப்பாக கணக்கு போட்டு பார்த்தேன். இந்திய ரூபாய் 16,57,000 என்று வருகிறது. //

Hats off to you!!!

எனக்கே எக்கசக்கமான "ஏன்" இருக்கு... முழுவதும் படிக்க முடியலை.
 



As usual, Your post rocks!!!!
 



ஹூம்.. நீங்களுமா..
 



லக்கி லுக் :: சம்சாரம் அது மின்சாரம் படத்துல கடேசில லஷ்மி வசனம் வரும் கேட்ருக்கீங்களா... அதுல அப்பாவி காஜா ஷெரீஃப் வந்து லஷ்மிகிட்ட ஒரு டயலாக் சொல்வாரு.. லஷ்மி அதுக்கு ஒரு பதில் வசனத்த சொல்லி "ச்சீ போடா"ன்னு மென்மையா சொல்வாங்க... உங்களுக்கு பதில் சொல்ல என்னாலாகாது, ஒரு வேளை லஷ்மியால் முடியலாம்... ஆனா எதுக்கு அவார்டு கொடுத்தாங்கன்னு லஷ்மிய விட விசுவோட விளக்கம்தான் உங்களுக்கு பிடிச்சதா இருக்கும், கேட்டு தெரிஞ்சுக்கோங்க...

*

நன்றி மாயவரத்தார் (ன் போட்டா தரக்குறைவா இருக்காது)

*

சந்தோஷ், அதான் எல்லாம் வெளிப்படையா தெரியுதே... இதுல கேட்டு வேற தெரிஞ்சுக்குற நிலைமையா இருக்குது... அப்படி இருந்தாலும் அதையெல்லாம் கேட்காம இருக்கறதே தரங்கெட்டு போகாம இருக்க சிறந்த வழி

*

தேவ், இந்த மாதிரி விஷயம் எல்லாம், கவுண்டமணி நக்மாகிட்ட சொல்ற மாதிரி "புரியாமலே போகட்டும் விட்று"ன்னு இருக்கறதுதான் மனதுக்கு நிம்மதி தரும் விஷயம். புரியலைன்னு சொல்ற அளவு இருக்கிறது பாக்கியம்னு நினைச்சுக்கோங்க...

*

// எனக்கே எக்கசக்கமான "ஏன்" இருக்கு... // கேளுங்க உதயகுமார்... ஆனால் கேட்டாலும் கொடுக்கப்படாது என்பது neo testament...
*
நன்றி வாக்கிங்ஸ்டிக்

*

வெங்கட்ரமணி, உங்க வாக்கியம் பல அர்த்தம் கொடுக்குது.. இப்போதைக்கு புரிஞ்ச ஒரே அர்த்ததுக்கு மட்டும் சொல்லிக்கிறது என்னன்னா :: புலி வால பிடிச்சா...
 



"தோல் உரித்தல்கள் தொடருமா?" என்று நேற்று வந்த அநாமதேயரின் பின்னூட்டத்தை எனக்குள் எழுந்த மச்சிக்கலின் காரணமாக வெளியிட விரும்பாமல் நிறுத்தி வைத்து பின் மூத்தோரின் வழிகாட்டுதல் தந்த, எதேச்சையாக பெற்ற தெளிவின் காரணமாய் வெளியிடுகிறேன்...
 



அண்ணாத்தே,
2 பின்னூட்டத்துக்கே இப்படியா
:-)))))))))))))))))))))))))))))))))

பின்னூட்டம் போடும்போதே எனக்கு இந்த முகத்தை கொடுப்பீர்கள் என்று நன்றாகவே தெரியும். இது முதல் முறையா என்ன? ஏற்கனவே பலருக்கு கொடுத்தது இன்று எனக்கு. நாளை வேறு யாரேனும் உங்களை எதிர்த்தால் அவர்களுக்கும் இதுவே கிடைக்கும். :-)))))))
என்ன.. கொஞ்சம் நாள்கழித்து எதிர்பார்த்தேன். வேறு ஒரு சமயத்தில் வேறு யாருடனாவது விவாதிக்கையில் வந்து எனக்கு இதை மாட்டுவீர்கள் என்று எதிர்பார்த்தேன். பெரும்பாலும் அதுதானே உங்கள் வழக்கம்.துப்பியது சரியாக முகத்தில் பட்டுவிட்டதோ?. இல்ல இவ்வளவு சீக்கிரமே பதில் வந்ததே அதற்காக கேட்டேன்.
"மஞ்ச மாக்கன்லேந்து" படிக்கிறதாலே நமக்கும் ஏகப்பட்ட "ஏன்"கள் உள்ளது. தனிப்பதிவாகவே போட்டு தாக்கலாம் தான். ஆனால் "அவுங்களுக்கு" சுட்டி கொடுத்து விட்டதால் அவுங்களைப் பற்றி மட்டுமே பதிவு போட வேண்டிய இக்கட்டில் இருக்கிறேன்:-)))))). மீண்டு வர சில மாசமாகும். சரி...சரி இப்போதானே டிரெய்லரில் வந்துருக்கேன். அடுத்த வாட்டி மெயின் பிக்சருக்கே வந்துடுவோம்.

வரட்டா...
 



Mr.Walker (Real life name of Phantom)

எனக்கு தெரிந்த வரையில் Phantom மின் உண்மையான பெயர் Mr.Walker தான்.

நீங்கள் வக்கீலாக வேலைப் பார்க்கீறீர்களா? அவ்வளவு லிங்கையும் பிடிச்சிட்டு போய் திரும்பி வந்த தலைசுத்தி Mr.Walker தான் கண்ணில் தெரிகிறார். இப்ப என்ன பண்ணனும் அதை சொல்லுங்க?
 



வாய்யா சோழநாடரு... போன பதிவுல என்கிட்ட ஒழுங்காத்தான் பேசிக்கிட்டு இருந்தவரு சைக்கிள் கேப்புல அங்கன ஓடிப்போயி "நம்மள எல்லாம் நாய்னு சொல்றான்"னு ஆரம்பிச்சி ஏக வசனத்துல உணர்ச்சி வசப்பட்டத பாக்கையில உண்மையிலேயே பரிதாமாத்தான் இருந்திச்சு... (அது என்ன இங்க பேசறப்ப ஒரு தொனி, அங்க பேசுறப்ப வேற தொனின்னு ஒரே வால் மாறாட்டமா இருக்கு?)

நீரெல்லாம் பிக்சர்லயே இல்ல.. திடீர்னு எங்கிருந்தோ வந்து ஜோதியில ஐக்கியம் ஆக ஆசைப்படறீரு... அட, பத்து பேரு இருக்கிற இடத்துல ஒருத்தர் வந்து இங்க இருக்கறவங்கள்ல ரெண்டு பேரு நாயின்னே சொல்றாருன்னு வச்சிக்கிட்டாலும், பொதுவா மனுசப்பயன்னா தான் யாருன்னு தன் மேல இருக்கிற நம்பிக்கைல அமைதியா இருப்பான்.. என்ன தைரியம் இருந்தா என்ன நாயின்னு சொன்னேன்னு சண்டைக்கு போறவங்களோட நம்பிக்கை சிதையாம இருக்கணுமின்னா அவங்கள நாயின்னு சொல்லாம வேறென்ன சொல்ல... (நம்மூர்ல "ஏ பாவிகளே, உங்கள ரட்சிக்க...."ன்னு ஏகப்பட்ட இடத்துல எழுதியிருக்குமே, அதையெல்லாம் படிச்சிட்டு "நம்மளயெல்லாம் பாவின்னு சொல்றாங்க இளவஞ்சி"ன்னு கோன்னு அழுவீறா?)

ஏகப்பட்ட ஏன்கள் பாக்கி இருக்கா? கேளுங்க சாமி... நல்லா கேளுங்க... சிரிச்சிகிட்டே போறதோ, இன்னொரு கவிதை எழுதறதோ மூடுக்கு தகுந்தபடி பாத்துக்கலாம்... அறிந்தோ அறியாமலோ உங்களை நாய்னு சொன்னதற்காக அந்த மரியாதைக்குரிய ஜீவன்களிடம் இந்த சந்தர்ப்பத்திலே மன்னிப்பு கோருகிறேன்...
 



கால்கரி சிவா, மெரீனா பீச் ரங்கராட்னத்துக்கே தலை சுத்துதுன்றீங்களே... இன்னும் படா பேஜாரான ஜெயிண்ட் வீல்ல எல்லாம் ஏறினா என்னாவீங்களோ தெரியலையே...

// இப்ப என்ன பண்ணனும் அதை சொல்லுங்க? // அறியாமையே பேரின்பம் என்று ஆனந்தம் கொள்ளுங்கள்...
 



தனக்கென்றால் ஒரு ரசனை;
அடுத்தவன் பேசினால் வேறு பொருள் என
மனக்கவலையே இல்லாமல்
தடுமாறும் கூட்டத்திடம்
எதற்காக உங்கள் நேரத்தையும்
எங்கள் நேரத்தையும்
செலவிடச் செய்கிறீர்கள்!??

ஆயினும், இது.....
உசுப்பி விடும் வேலையல்ல.--உணர்வுகளை
எழுப்பிவிடும் வேலையென அறிந்து
வெல்க என வாழ்த்தி விடை பெறுகிறேன்.
 



பதிவுக்கு சம்பந்தமில்லாத (?!) அலெக்ஸா குறித்து ஒரு சிறு குறிப்பு :

அலெக்ஸாவில் உங்கள் வலைப்பூவிற்கோ, வலை தளத்துக்கோ நல்லதொரு இடம் வேண்டுமா? ஆரம்பத்தில் போய் பார்த்தால் கிட்டத்தட்ட 4 அல்லது 5 மில்லியன் சொச்சத்தில் இருக்கும். இன்றைய தேதியில் 'மாயவரத்தானுடையது' நாலரை லட்சம் சொச்சத்தில் இருக்கிறது.

என்னுடைய கணினியில் அலெக்ஸாவின் டூல் பாரை (இதுக்கெல்லாம் தமிழ்லே என்னன்னு தெரியல!) நிறுவிவிட்டு, என்னுடைய home page -ஆக என்னுடைய வலைப்பூவை ஆக்கிவிட்டால் போதும். எப்போது Internet Explorer-ஐ திறந்தாலும் மாயவரத்தானின் வலைப்பூ தான் பல்லிளிக்கும். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 100 தடவையாவது பல்லிளிக்குமா இல்லையா? இப்படி எனது கணினி, எனது நண்பர்களுடையது, என்னுடைய அலுவலகத்திலுள்ளவர்களுடையது என்று ஒரு ஏழெட்டு பேருடையதில் டூல் பார், ஹோம் பேஜ் சமாச்சாரங்களை சரி படுத்தி விட்டால் போதும், மூன்றே வாரங்களில் 4 மில்லியனில் இருப்பவர் நாற்பதாயிரத்தில் வந்து நிற்பார்.

இதனால் என்ன பிரயோசனம் என்கிறீர்களா? கூகுளில் முதல் பக்கத்தில் வந்து தொலைத்தாலாவது ஓரிரண்டு பேர் வந்து எட்டி பார்த்து செல்வார்கள். அலெக்ஸாவில் வந்ததை வேண்டுமானால் நாம் நமது வலைப்பூவில் பெரிதாக எடுத்து போட்டுக் கொண்டால், பிறகு கூட்டம் எக்கச்சக்கமாகிவிடும் - அலெக்ஸாவிற்கு.

பின்குறிப்பு : மீண்டும் சொல்கிறேன்.. இது இந்தப் பதிவுக்கு சம்பந்தமில்லாதது....
 



சுவாரசியமா ரசமா (சாம்பார் எங்கேன்னு யாரோ குரல் உடுராங்கோ)
இருக்குங்கோ.

என்ன மாதிரி ஆளுகளுக்கெல்லாம் எழுத தூண்டுனதே உங்க வலைக்
கட்சி பமக தான். ஆனா நான் கைப்புவோட கலாய்க்கற வ.வா.ச வில்
ஐக்கியம் ஆனாலும், மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமும்
மனமும் உண்டு என்பதில் மாற்று கருத்து இல்லாதவன்.

என்னிடம் சொல்லாற்றல் இல்லாமல் இருக்கலாம். ஆனால்
பலருடைய எழுத்துக்களையும் ரசிக்கும் மனப்பான்மை இருக்கிறது.

போற்றுவார் போற்றட்டும், புழுதி வாரி தூற்றூவார் தூற்றட்டும்.

போகட்டும், யாருக்கோ ன்னு சொல்லுவாங்க.

நீங்க தொடருங்க உங்க கடனை , கடைமையை.

இதுக்கு மேலே ஒண்ணும் சொல்ல தோணல.
 



³Â¡ ¾ÕÁ¢, ÒÄŧÃ

Å¡ÕÁö¡, ±ôÀ×õ Áñ¼Àò¾¢§Ä ¡§Ã¡ ±Ø¾¢ì ¦¸¡Îò¾¾¡§É ÅóÐ Å¡ó¾¢ ±ÎòÐðÎô §À¡Å£Õ, þôÀ Â¡Õ ¦º¡øÄ¢ þí¸ ÅóÐ ¾ÃýÈ¢¾ú ¾Õ¸¢È£÷ ³Â¡ ? ¡Õ측¸, þР¡Õ측¸, þó¾ ¾Ãí¦¸ð¼ò ¾ÃýÈ¢¾ú? ¯ÁìÌ þÇÅﺢ, À£, ÌÍ, ã¾¢ ±ýÚ ±Ø¾¢Â¦¾øÄ¡õ ¾ÃÁ¡¸ò ¦¾Ã¢óÐ «Ð §À¡Ä ¿¡ý ±Ø¾ Å¢ø¨Ä§Â ±ýÚ º¢Å¡ƒ¢ źÉõ §Àº¢ÂÅ÷¾¡§É ¿£÷? «¨¾ Å¢¼ Ó¸ãÊ À¾¢Å¢ø ±ýÉ ¾Ãõ ¦¸ðΠŢð¼Ð ? ´Õ §Å¨Ç "«ó¾" «Ç×ìÌò ¾ÃÁ¡¸ þø¨Ä ±ýÚ ¦º¡øÖ¸¢È£Ã¡? «Ð ºÃ¢¾¡ý, Ó¸ãÊ¡ø ¿£í¸ À¡Ã¡ðÎÈ «Ç×ìÌò "¾ÃÁ¡¸" ±Ø¾ ÓÊ¡о¡ý, ¾÷õ ÌÈ¢òР¡÷ §ÀÍÅÐ ±ýÚ ´Õ ¾Ã§Á þøÄ¡Áø ¾Ã¡¾Ãõ þøÄ¡¾Å÷ ±øÄ¡õ ¾Ãò¨¾ô ÀüÈ¢ §ÀÍõ «Ç×ìÌò ¾Ãõ ¦¸ð¼ ¾÷Á¡¸ þÕ츢ÈÐ.

±í§¸ µÎ¸¢È£÷, ¿¢øÖí¸û, ³Â¡, ÒÄŧÃ, ¾ÕÁ¢, «¼, ¿¢øÖõ ³Â¡, µ¼¡¾£÷ ¿¢ýÚ À¾¢ø ¦º¡øÄ¢ Å¢ðÎô §À¡õ ³Â¡, Áñ¼Àò¾¢ø ¡÷.............

(º¨À ¦¸¡ø¦ÄýÚ º¢Ã¢ì¸¢ÈÐ)

¦ºñÀ¸ô À¡ñÊÂý
 



//இன்னும் படா பேஜாரான ஜெயிண்ட் வீல்ல //


கொஞ்சம் சீக்கிரமா அந்த ஜெயிண்ட் வீல் சுத்திக் காட்டுனா, நல்லாருக்கும்! எனக்கு பொழுது போக மாட்டேங்குது!! சீக்கிரம் please!!!

 



மேலே டிஸ்கியில் வந்த பின்னூட்டம் யூனிகோடில்:
ஐயா தருமி, புலவரே

வாருமய்யா, எப்பவும் மண்டபத்திலே யாரோ எழுதிக் கொடுத்ததானே வந்து வாந்தி எடுத்துட்டுப் போவீரு, இப்ப யாரு சொல்லி இங்க வந்து தரச்சான்றிதழ் தருகிறீர் ஐயா ? யாருக்காக, இது யாருக்காக, இந்த தரங்கெட்டத் தரச்சான்றிதழ்? உமக்கு இளவஞ்சி, பீ, குசு, மூதி என்று எழுதியதெல்லாம் தரமாகத் தெரிந்து அது போல நான் எழுத வில்லையே என்று சிவாஜி வசனம் பேசியவர்தானே நீர்? அதை விட முகமூடி பதிவில் என்ன தரம் கெட்டு விட்டது ? ஒரு வேளை "அந்த" அளவுக்குத் தரமாக இல்லை என்று சொல்லுகிறீரா? அது சரிதான், முகமூடியால் நீங்க பாராட்டுற அளவுக்குத் "தரமாக" எழுத முடியாதுதான், தர்ம் குறித்து யார் பேசுவது என்று ஒரு தரமே இல்லாமல் தராதரம் இல்லாதவர் எல்லாம் தரத்தைப் பற்றி பேசும் அளவுக்குத் தரம் கெட்ட தர்மாக இருக்கிறது.

எங்கே ஓடுகிறீர், நில்லுங்கள், ஐயா, புலவரே, தருமி, அட, நில்லும் ஐயா, ஓடாதீர் நின்று பதில் சொல்லி விட்டுப் போம் ஐயா, மண்டபத்தில் யார்.............

(சபை கொல்லென்று சிரிக்கிறது)

செண்பகப் பாண்டியன்
 



உங்கள் உள்குத்து அரசியல்/அலசல் முழுவதாகப் புரியவில்லை, நிறைய மேற்கோளிட்ட பதிவுகள் வாசிக்காததால். ஆனால் பெயரிட்டு அழைத்து கிண்டலடிக்கும் தன்மை மெச்சத் தகுந்ததே!
 



முகமூடி


தமிழ் மண நிரிவாகிகளால் உங்கள் மீது வீசப் பட்ட அவதூறுகளையும், தொடர்ந்த உங்கள் பதிவுகளையும் படித்து வருகிறேன். ஆனால் பழய பிரச்சினைகளுக்குள் போகவில்லை. நான் இன்று தமிழ் மணத்தில் கண்ட ஒரு ஆபாசத்தை குறித்து மட்டும் சில கேள்விகள் எழுப்ப விரும்புகிறேன்.


தமிழ்மண முகப்பில் குறிச்சொற்கள் என்ற தலைப்பில் பல் வேறு குறிச்சொற்கள் வருகின்றன. அதில் போய் "மேலும்" என்பதை அழுத்தினால் அது மேலும் பல குறிச்சொற்களைக் காட்டுகிறது. நன்று. அதில் 'பாப்பார நாய்கள்' என்று ஒரு குறிச்சொல் காணப் படுகிறது. அதைத் தொடர்ந்தால் அது பொட்டீக் கடை என்பவரது பதிவிற்குப் போகிறது அது முகமூடியாக உங்களை ஆபாசமான முறையில் தாக்குகிறது. இந்த பொட்டீக் கடை என்பவரும் தமிழ் மணத்தில் வெகுமானத்துக்குரிய நட்சத்திரப் பதவியை அலங்கரித்தவர். ஆக தமிழ் மணத்தால் கொண்டாடப் படும் ஒருவரால் 'பாப்பார நாய்கள்' என்று ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைத் தாக்கும் ஒரு குறிச்சொல்லுக்கு, தமிழ் மணம் அங்கீகாரம் அளித்து கவுரவிக்கப் பட்டு அது தமிழ் மண நிர்வாகிகளால் குறிச்சொல்லில் சேர்க்கப் படுகிறது.


இப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதியை ஆபாசமாக எழுதும் ஒரு பதிவை எப்படி காசியும் தமிழ் மண நிர்வாகிகளும் அனுமதிக்கின்றனர் ? இதில் காசிக்கும், பிராகாஷ¤க்கும் இன்னும் பிற நிர்வாகிகளுக்கும் உடன் பாடு உண்டா? அவர்களில் கண்களில் படவில்லையா அல்லது வேண்டுமென்றே கண்டு கொள்ளாமல் இருக்கிறார்களா? குறிச்சொல்லில் வருவதற்கு எல்லாம் நாங்கள் பொறுப்பேற்க இயலாது என்று சொல்வார்களாயின், இப்பொழுது நான் சுட்டிக் காட்டிய பின்னராவது காசியும் பிற நிர்வாகிகளும் அப்படி ஒரு பதிவை நீக்க முன் வருவார்களா? முகமூடியின் பதிவை தரக்குறைவானதொரு பதிவு என்று கூறிய காசி இதற்கு என்ன சொல்லுகிறார் ?


இதுவே "வன்னிய நாய்கள்" என்றோ, "முதலியார் நாய்கள்" என்றோ குறிச்சொல்லுடன் ஒரு பதிவு வந்திருக்குமானால் இதே தமிழ் மண நிர்வாகிகள் எப்படி கொதித்துப் போய் உடனடி நடவடிக்கை எடுத்திருப்பார்கள் ? ஒரு பூகம்பமே வெடித்திருக்காதா அங்கு? ஆக தமிழ் மண அகராதியின் படி யார் வேண்டுமானாலும் பார்ப்பனர்களை மட்டும் தாக்கி எவ்வளவு அசிங்கமான தலைப்பு வேண்டுமானாலும் வைக்கலாம் அப்படி வைப்பவர்களுக்கு நட்சத்திர அந்தஸ்து கொடுத்து கவுரவிக்கப் படும், அவர்கள் வைக்கும் தலைப்புகள் குறிச்சொல்லாக தேர்ந்தெடுத்து முக்கியத்துவம் கொடுக்கப் படும். அப்படித்தானே? முகமூடி எழுதிய பதிவைப் படித்து விட்டு கொதித்தெழுந்து அவரைத் திட்டிய இளவஞ்சியின் தலைமியிலான ஒரு கும்பல் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறது ? இதை ஏன் கண்டித்து எழுதவில்லை ? அது போன்ற ஜாதிப் பெயர் சொல்லி தாக்குவதில் அவர்கள் அனைவருக்கும் உடன் பாடு உண்டா ? ஏன் வெகுண்டெழுந்து கண்டனப் பதிவு எழுதவில்லை ?


பேராசிரியர் தருமி முகமூடி எழுதிய பதிவு தரமில்லாதது என்று சொல்லியிருக்கிறார். அது அவரது பார்வை. அதில் எனக்கு எவ்வித கருத்தும் இல்லை. ஆனால் அதே தருமி இந்தப் பதிவில் சென்று ஏன் அப்படியொரு ஜாதியை திட்டும் குறிச்சொல் வைப்பது தவறு என்று கண்டித்திருக்கிறாரா? ஏன் செய்யவில்லை ? அந்தத் தலைப்புடன் அவருக்கு உடன் பாடு உண்டா? ஏன் இதைக் கண்டித்து அவரும் எங்கும் பின்னூட்டம் இடவில்லை அல்லது தரம் இழப்பு முகமூடி பதிவில் இருந்தால் மட்டும்தான் கண்டிப்பாரா? "பார்ப்பன நாய்கள்" என்று இருந்தால் அவருக்கு மகிழ்ச்சியா ? அவரது அகராதிப் படி அது தரமானதொரு பதிவா? ஏன் இந்த இரட்டை வேடம் ? இதை தருமி மட்டும் அல்ல முகமூடி பதிவுகளை கண்டித்த அனைவருமே விளக்கக் கடமைப் பட்டுள்ளனர்.


முகமூடியைக் கண்டித்த அனைவரையும் நான் கேட்கிறேன், உங்கள் அனைவருக்கும் 'பாப்பார நாய்கள்' என்ற குறிச்சொல் தமிழ் மணத்தால் அங்கீகரிக்கப் பட்டு, இன்று வரை நீக்கப் படாமால் இருப்பதில் உங்கள் அத்தனை பேருக்கும் உடன்பாடுதானா? மகிழ்ச்சிதானா? மறைக்காமல் கூறவும்.


முகமூடி, உங்கள் பதிவுகளைப் படித்த பின்னால், இன்றைக்கு வந்த அந்த ஆபாச தலைப்பையும் படித்த பின்னால் இந்தப் பிரச்சினையில் தமிழ் மண நிர்வாகிகளும், அவர்களின் ஆதரவாளர்களும் கடைப்பிடிக்கும் இரட்டை வேடம் கண்டு பொறுக்காமல் இதை எழுதியிருக்கிறேன், இதை வெளியிடுவதும் வெளியிடாததும் உங்கள் விருப்பம்.


இந்த குறிச்சொல் உள்ள பதிவை அனுமதித்தன் மூலம் தமிழ் மண நிர்வாகிகளுக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மீதுள்ள அளவு கடந்த வெறுப்பும் காழ்ப்புணர்வும் இருப்பதான எனது சந்தேகம் மேலும் உறுதி படுகிறது. காசியிடமிருந்து உடனடி நடவடிக்கையை எதிர்பார்க்கிறேன்.


அன்புடன்
ச.திருமலை
 



திருமலை ராஜனின் பின்னூட்டம் மிக நியாமானது.
 



திருமலை: தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஜாதியைத் திட்டுவதிலும் எனக்கு உவப்பில்லை. தமிழ்மணத்தில் குறிச்சொல் திரட்டல் தானியங்கியாக நடக்கிறதென்று - எத்தனை பேர் அந்த வார்த்தையைக்கொண்டு தேடுகிறார்களோ அதைப்பொறுத்து குறிச்சொற்கள் தானியங்கியாகத் திரட்டப்படுகின்றன என்று நினைக்கிறேன். இதை வைத்துக்கொண்டு ஏதோ தமிழ்மணம் முகமூடியைத் தாக்குகிறது என்பது மாதிரிச் சொல்கிறீர்கள், ஆனால் நீங்கள் குறிப்பிட்டமாதிரி முதலியார் நாய்கள் என்றும் வன்னிய நாய்கள் என்றும் கூகிளில் தேடினால் முதலில் வருவது முகமூடியின் பதிவும் டோண்டுவின் பதிவும். உள்ளே போய்ப் பார்த்தால் முதலியாரை நாய்கள் என்று முகமூடியும் திட்டவில்லை, வன்னியர்களை நாய்கள் என்று டோண்டுவும் திட்டவில்லை - தேடுபொறிகளின் அமைப்பில் தற்செயலாக வந்து விழுபவை அவை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை வேண்டுமென்றே முகமூடியும் டோண்டுவும் செய்கிறார்கள் அல்லது கூகிளில் இருக்கும் உயர்ஜாதியினர் செய்கிறார்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதேயளவு நீங்கள் சொல்வதுமாதிரி தமிழ்மண நிர்வாகிகள் பிராமணர்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள் என்பதும் அபத்தம் என்பது என் அபிப்ராயம்.
 



இந்த பின்னூட்டங்கள் கவிதைகள் பதிவிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டவை ::

June 14, 2006 9:24 PM க்கு நம்ம SK சொல்றது என்னன்னா:

நாயை நாயெனச் சொல்லாமல் வேறு என்னவென்று கூப்பிடுவது??

since i am unable o replyn in an another Blog, I am copying my reply here.

Tjhat blog is reserved for only their own members, it seemsZ!!

*

June 15, 2006 3:03 PM க்கு நம்ம Anonymous சொல்றது என்னன்னா:

திருமலை ராஜன்

முகமூடியிடம் இதை சொல்லி என்ன பயன்?அந்த பதிவு உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அந்த குறிச்சொல் பக்கத்திலேயே முக்கோண வடிவில் ஒரு ஆட்சேபம் தெரிவிக்கும் இடம் இருக்கிறதே?அதை அழுத்தினால் அந்த பதிவை பற்றி புகார் அனுப்ப வழி உண்டே?அதை செய்யாமல் முகமூடி பதிவில் புகார் சொன்னால் என்ன செய்வது?

*

June 15, 2006 3:59 PM க்கு நம்ம KARTHIKRAMAS சொல்றது என்னன்னா:

திருமலை, நான் பார்ப்பனியத்துக்கு (பார்ப்பனர்களுக்கு அல்ல என்பது முக்கியம்) பரம் எதிரிதான். ஆனாலும், இப்படி தரக்குறைவாக எழுதுவதை கடுமையாக கண்டிக்கிறேன். நீங்கள் சொல்வதை பெரும் பாலும் ஏற்றுக்கொண்டாலும், தமிழ்மணத்தை தொடர்பு பண்ணி பேசாமலாவது இருங்களேன். கொஞ்சம் யோசிங்க சார்.. யாராவது இப்படி உள்நோக்கத்தோடு செய்வார்களா? அவசர அவசரமாக தமிழ்மணத்தை அவதூறாக பேசாமலாவது கண்டிக்கலாமே.

இப்போது உங்கள் கமண்டை படித்தவுடன் "மேலும்" என்ற குறிச்சொல் பகுதிக்கு சென்று பார்த்தேன். நீங்கள் சொல்வது போல் எதுவும் இல்லை.

இப்படி தரங்கெட்டி எழுதுவதை வன்மையாக கணிட்க்கிறேன். இந்த போலிகளின் வேலையாக இருக்கும் என்றும் சந்தேகப்படுகிறேன்.

முகமூடி , நீங்கள் தட்டச்சியதில் சில கவிதைகள் பிடித்திருந்தன. நன்றி.

*

June 15, 2006 5:52 PM க்கு நம்ம SK சொல்றது என்னன்னா:

கார்த்திக்ராமாஸ் அவர்களே!

அந்தப் பதிவு இன்னமும் அந்த 'மேலும்' எனும் பெட்டியில் இருக்கிறது!
இல்லையென்று சொல்லாதீர்கள்!
அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இட முடியாமல்தான், நான் இந்தப் பதிவில் ஒரு பின்னூட்டம் இட்டிருக்கிறேன்!
அது 'அங்கத்தினர்களுக்கு மட்டும்' என மற்றவரைத் தடுக்கிறது!

நாய்களை நாய்கள் எனச் சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது என அங்கு போட வேண்டிய மறுமொழியை இங்கே போட்டிருக்கிறேன்!

நாய் வாலை எப்படி நிமிர்த்த முடியும்??
 



இந்த பின்னூட்டங்களும் ::


June 15, 2006 6:08 PM க்கு நம்ம Anonymous சொல்றது என்னன்னா:

அனானிமஸ்

நான் முகமூடி பதிவில் புகார் செய்வதுதான் உங்களுக்கு பிரச்சினை அப்படித்தானே ? ஆக நான் சொன்ன விஷயத்தில் தவறில்லை என்று ஒத்துக் கொள்கிறீர்கள் அப்படித்தானே? நன்றி. ஆனால் சொன்ன இடத்தில்தான் பிரச்சினை என்கிறீர்கள்.

கொஞ்சம் நன்றாக உற்றுப் படித்திருந்தால் இப்படி அவசரகதியில் ஓடி வந்து எனக்கு அறிவுரை சொல்லியிருக்க மாட்டீர்கள். இங்கு பிரச்சினை தமிழ் மணம் பிராமணர்களை 'பாப்பார நாய்கள்" என்று திட்டுவது பற்றி மட்டுமே அல்ல, முகமூடி பதிவை திட்டியவர்களின் இரட்டை வேடம் பற்றியதும் கூட. ஆகவே இந்த இடம் எனக்குத் தகுந்த இடமாகத் தெரிந்தது. முகமூடிப் பதிவுகளைத் தரம் இல்லை என்ற பெரிய மனிதர்கள் எல்லோரும் இந்த 'பாப்பார நாய்கள்' விஷயத்தில் அமைதி காத்து இரட்டை வேடம் போடுகிறார்கள் என்ற விஷயத்தை நான் எப்படிப் போய் தமிழ் மணத்தில் சொல்ல முடியும் என்று நினைக்கிறீர்கள் ? ஆகவே இதுவே நல்ல இடம், நான் வந்த இடம் என்று தேர்வு செய்ததில் எவ்விதத் தவறு இல்லை. சரியான இடத்தில்தான் இரட்டை வேடம் போடுபவர்களிடம் கேள்வி கேட்டிடுக்கிறேன். நீங்கள் சொல்லுமிடத்தில் முக்கோண பட்டனைத் தட்டி ஆட்சேபணை எழுப்புவதில் எனக்கு எவ்வித ஆட்சேணையும் இல்லைதான், ஆனால் அங்கு போய் இந்த இரட்டை வேடப் பிரச்சினையை பேசுவது நியாயமாக இருக்காது அல்லவா? ஆகையால் தான் நான் இங்கு சொன்னேன். ஆகவே நான் முகமூடி பதிவை தேர்ந்தெடுத்தேன்.

ஆனால் அப்படி அங்கே போய் ஆட்சேபணை செய்தாலும் கூட நடவடிக்கை ஏதேனும் எடுப்பார்களா என்ற நம்பிக்கைதான் எனக்கு இல்லை. ஏற்கனவே பி கே எஸ் பேரில் ஒரு போலி தமிழ் மணம் பதிவில் பின்னூட்டம் போட்டிருந்த பொழுது அதை நீக்க பி கே எஸ் மீண்டும் மிண்டும் கேட்டுக் கொண்ட பின்பும் கூட அது நீக்கப் படாமலேயே இருந்தது. ஆகையால் நீங்கள் சொல்லும் ஆட்சேப பட்டன்கள் எல்லாம் வேலை செய்யுமா என்ற நம்பிக்கை இல்லை, இருந்தாலும் நீங்கள் நல்ல எண்ணத்தில் சொல்லுவதால் முயற்சி செய்து பார்க்கிறேன்.

எதற்கும் உங்களது மேலான ஆலோசனைகளுக்கு மிக்க நன்றி.

அன்புடன்
ச.திருமலை

*

June 15, 2006 6:35 PM க்கு நம்ம Boston Bala சொல்றது என்னன்னா:

I presume Thamizmanam needs an Ombudsman (to take care of reader grievances)

----"மேலும்" என்ற குறிச்சொல் பகுதிக்கு சென்று பார்த்தேன். நீங்கள் சொல்வது போல் எதுவும் இல்லை.----


thamizmaNam.com -- search for பாப்பார நாய்கள்

----அந்த குறிச்சொல் பக்கத்திலேயே முக்கோண வடிவில் ஒரு ஆட்சேபம் தெரிவிக்கும் இடம் இருக்கிறதே----

thamizmaNam.com :: தமிழ்மணம்.காம்

I have sent a request now. But these kind of things can be easily avoided by putting the technology to use. Derogatory terms could be stopped from classification (and those derogatory words should be part of the blog's post contents; if so they could be categorized...)

Somebody writing on DMK-ADMK, should not be able to classify it as 'Agent 8860336 ஞான்ஸ்' :-)

Here ismy initial take on the Thamizhmanam Tags: Snap Judgement - Blogdesam Tagging Feedback

BTW, I am all for a post which is titled as 'Paappaara naayey ulla varaathey' :-) and clasifying it as 'Paappaara Naai'
 



பாபா, நான் எழுதியதில் நீங்கள் வருந்தும்படி எதுவும் எழுதவில்லை என்று நம்புகிறேன். அப்படி நீங்கள் வருந்தினால் அதற்கு மன்னிக்கவும். நான் அப்படி ஒன்று நடக்கவே இல்லை என்று எங்கும் சொல்லவில்லை, திருமலையின் பின்னூட்டத்தை பார்த்தவுடன் அதைப்பார்க்கச் சென்றேன் அப்பொது அப்படி எதுவும் இல்லை என்றுதான் சொன்னேன். மேலும் முக்கியமான ஒன்றை இங்கு அனைவரும் நினைவில் கொள்வது நலம். பயனரே குறிச்சொல்லை உருவாக்கும் வசதி, பயனர்நட்பை குறித்து வைக்கப்பட்டுள்ளது அதை யாராவது மிஸ்யூஸ் பண்ணினால் எல்லோரும் கண்டிக்கலாம். அவசியம் தடுக்கலாம்/தடுக்க வேண்டும். ஆனால் அதற்கு "தமிழ்மணத்திற்கு இதில் உடன்பாடா" என்று ...தனமாக கேள்வி கேட்டால் அதை எப்படி எதிர்கொள்வது? இல்லை இல்லை என்று காலில் விழுந்தா? ;-)

ஒரு ஸ்பாமுக்கு கொடுக்கும் மரியதையைதான் இதற்கும் அனைவரும் கொடுக்கவேண்டும், உங்கள் நுட்ப வழிகளை/யோசனைகளை தமிழ்மணம் மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.

மேற்கொண்டு வாய்ப்பு கிடைத்ததே என்று திருமலையை போட்டுப்பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை. கப் சிப் :-)
 



'கா.ரா.' சொல்வது சரிதான்!
தமிழ்மணம் கேட்கிறது நீங்கள் ஒரு பதிவு போடும் போது, என்ன தலைப்பு என்று.
அப்போது சில ......கள் திருமலை குறிப்பிட்டது போல ஒரு தலைப்பு கொடுத்தால், அதை அப்படியே வாங்கி பதிவு செய்து கொள்கிறது!
அதை நீக்க ஒரே வழி.. புத்ப் பதிவுகள் போட்டு கவுண்டை அதிகப்படுத்துவதுதான்!

முன்பு ஒருமுறை, ஞானவெட்டியான் ஏதொ செய்யப்போய், சொதப்பியது நினைவிருக்கும் என நம்புகிறேன்!
 



மிஸ்டர் கார்த்திக்

<<<
திருமலை, நான் பார்ப்பனியத்துக்கு (பார்ப்பனர்களுக்கு அல்ல என்பது முக்கியம்) பரம் எதிரிதான்.
>>>

அப்படியா? ஆமா பேப்பர்ல எல்லாம் போட்டுருந்தாங்க நீங்க இந்த பாப்பன ஈயம், பார்ப்பன பித்தள , பார்ப்பன பேரிச்சம்பளம் எல்லாத்துக்கும் மட்டும்தான் எதிரி ஆனா பார்ப்பனர்களுக்கு எதிரி இல்ல அப்டின்னு. போங்க, போய் எவனாவது தமிழ் மணத்துல காதுல கலர் பூவ சுத்திக்கிட்டு பராக்கு பாத்துக்கிட்டு முந்தா நாள் இண்டர் நெட்டுக்கு வந்தவன் இருப்பான் அவன் கிட்ட போய் சொல்லுங்க ஒரு வேள நம்புனாலும் நம்புவான். உங்கப் பத்தியும், உங்க உள் நோக்கம் பத்தியும், உங்க மனசுல புரையோடிக்கிடக்கிற பார்ப்பன வெறி பற்றியும், குரோத உணர்வுகள் பற்றியும் எனக்கு நல்லாவே தெரியும் ஐயா. கட்டுவிரியனாவது கடித்தால்தான் விஷம்,கார்த்திக் மூச்சு விட்டாலே விஷம் என்பது எனக்கு எனறைக்கோ தெரிந்த உண்மை, நீங்க ப்ளாக்ல எழுத ஆரம்பித்தாலே பார்ப்பன வெறுப்பு விஷம் தானே பீறிட்டு ஓடுகிறது. உங்கள் மனதில் மண்டிக் கிடக்கும் வெறியும், காழ்ப்புணர்வும் , குரோத உணர்ச்சியும் நான் அறியாதவன் அல்ல, இந்த வசனத்தையெல்லாம் வேற யாராவது கேழ்வரகில் நெய் வடியுது என்று சொன்னால் நம்புபவனிடம் போய் முயற்சிக்கவும். ஆனால் அளவு மீறிய இந்த வெறுப்பு உங்களையே ஒரு நாள் தாக்கும், அது காலம் வரும் பொழுது புரியும். வெறுப்பு என்னும் விஷம் தலைக்கேறி திரியும் உமக்கு நான் சொல்வதெல்லாம் ஏறப் போவதில்லை. என்று அருண் வைத்தியநாதனின் ஐயப்பன் பதிவில் ஒரு பேட்டை ரவுடியை விட கேவலமாக வந்து சலம்பல் பண்ணிய பொழுதே நான் கார்த்திக் என்ற மூர்க்க வெறி பிடித்தவரை எனக்கு நன்றாகவே தெரியும். வீச்சறுவாள் என்ற பெயரில் வந்து ரத்த வெறி பிடித்து அலைந்த பொழுதே உமது யோக்கியதை எனக்கும் முழுக்கவே தெரியும். போதுமா ?

<<

ஆனாலும், இப்படி தரக்குறைவாக எழுதுவதை கடுமையாக கண்டிக்கிறேன்.

>>

யார் தரைக்குறைவாக எழுதியது இங்கே ? பாப்பார நாய் என்று எழுதியது நானா இல்லை உங்கள் கூட்டாளியா ? அதை தமிழ்மணத்தில் வைத்து அழகு பார்ப்பது நானால் அல்லது தமிழ் மணமா? எது தரக் குறைவ்? ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் மீது அளவற்ற வன்முறையையும் வெறியையும் குரூரமாக வெளிப்படுத்தும் உங்களையும் உங்கள் கும்பலையும் தட்டிக் கேட்டால் தரக் குறைவா ? தரத்தைப் பற்றிப் பேச உமக்கு என்னையா அருகதை இருக்கிறது ? உமது தரம் பற்றி நான் இங்கு பேசலாமா ? முகமூடி பதிவு நாறி விடும். தரம் பற்றிப் பேசு முன் உமது மூஞ்சிய கொஞ்சம் கண்னாடியில் பார்த்துக் கொள்ளவும். டோண்டு விஷயத்தில் உமது தராதரம் சந்தி சிரித்ததே. கடுமையாகக் கண்டிக்கிறாராம் புண்ணாக்கு.


<<
நீங்கள் சொல்வதை பெரும் பாலும் ஏற்றுக்கொண்டாலும், தமிழ்மணத்தை தொடர்பு பண்ணி பேசாமலாவது இருங்களேன். கொஞ்சம் யோசிங்க சார்.. யாராவது இப்படி உள்நோக்கத்தோடு செய்வார்களா? அவசர அவசரமாக தமிழ்மணத்தை அவதூறாக பேசாமலாவது கண்டிக்கலாமே.
>>




ஐயா உமது உள்நோக்கம் ஊரறிந்ததாயிற்றே, வேண்டுமானால் கனடா வெங்கட்டிடம் கேட்கலாமா ? அவர் சமீபத்தில்தானே உமது தரத்தையும், உங்கள் வார்த்தையின் ஒவ்வொரு துளியிலும் தெளித்த விஷத்தையும் கிழி கிழி என்று கிழித்திருந்தார். உள்நோக்கம் இல்லாமல்தான் அசோக மித்திரன் விஷயத்தில் அது வரை எட்டிப் பார்த்திராத ராயர் காப்பி கிளப்பில் வந்து அவரை நாயடி அடித்தீர்களோ ? உமது உள்நோக்கம் மட்டுமல்ல தமிழ் மணத்தில் எழுதும் ஒரு பெரிய கும்பலின் உள்நோக்கம் அனைத்தையுமே நான் நன்கு அறிவேன். அதனால் தான் நான் உள்நோக்கம் கற்பிக்கிறேன். பிராமன வெறுப்பும் துவேஷமும் மட்டும் உங்கள் பிரதான உள்நோக்கம். தமிழ் மணத்தை இரண்டு நாள் படிக்கும் எந்தவொரு தமிழ் படிக்கத் தெரிந்தவனும் சொல்லுவான். யோசித்துதான் சொல்கிறேன் உள்நோக்கோடுதான் 'பாப்பார நாய்கள்' என்று தலைப்புப் போட்டிருக்கிறீர்கள் என்று. தமிழ் மணத்தில் 'பாப்பார நாய்க்ள்' என்று வந்தால் தமிழ் மணைத்தை குற்றம் சாட்டமல் நான் போய் தேசி பண்டிட்டையா குற்றம் சாட்ட முடியும் ? தமிழ் மணத்தில் வந்தால் அதற்கு தமிழ் மணம்தான் பொறுப்பு ? நீங்கள் யார் அதற்கு வக்காலத்து ? காசி வந்து பதில் சொல்லட்டும் என் குற்ரசாட்டுக்கு. உங்களை போன்ற ஒரு வெறி பிடித்தவரிடம் நான் இவ்வளவு தூரம் பேசியதே அதிகம்.


<
இப்போது உங்கள் கமண்டை படித்தவுடன் "மேலும்" என்ற குறிச்சொல் பகுதிக்கு சென்று பார்த்தேன். நீங்கள் சொல்வது போல் எதுவும் இல்லை.
>>


பொய், பச்சைப் புளுகு, அண்டப் புளுகு ஆகாசப் புளுகு என்பார்கள் அதையெல்லாம் தூக்கி சாப்பிட்டு விட்டீர்கள். நீங்கள் சொன்ன பிறகும் கூட நான் அங்கு சென்று பார்த்தேன், பாப்பார நாய் என்ற குறிச்சொல் அங்கே இருந்தது. ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்திருக்கிறேன் ஆதாரம் வேண்டுமா ? ஒரு வேளை பார்ப்பனர் மீதான அளவு கடந்த வெறியும், குரோதமும் கண்ணை மறைத்து விட்டதோ ? எங்கள் பார்வைக்குத் தெரியும் அதே எழுத்துக்கள் உங்களது வெறி பிடித்த கண்களுக்கு மட்டும் தெரியாமல் போவதேன் ? கொஞ்சம் வேற மாதிரி புளுக உங்கள் குருநாதர்களிடம் கற்றுக் கொண்டு வாங்க போங்க. அடுத்த முறை வேற ஏதாவது சாக்கு சொல்லுங்க.


இதை நான் மட்டும் பார்க்கவில்லை. உங்களைப் போன்ற 420 கேஸ் வந்து அப்பட் எதுவுமே இல்லையென்று அண்டப் புளுகு புளுக முயலலாம் என்று எதிர்பார்த்து குறைந்தது ஒரு ஐந்து பேரிடம் காண்பித்திருக்கிறேன் அனைவரும் ஸ்கீரீன் ஷாட் எடுத்து வைத்துள்ளோம், பார்க்கிறீர்களா மிஸ்ட கார்த்திக்? பொய், ·பிராடுத்தனம், பித்தலட்டம், வெறுப்பு, காழ்ப்பு இது அத்தனையும் சேர்ந்த பிறவிதான் கார்த்திக் ரமாஸ் என்று இன்னுமொரு முறை நிரூபித்தமைக்கு நன்றி.


<
இப்படி தரங்கெட்டி எழுதுவதை வன்மையாக கணிட்க்கிறேன். இந்த போலிகளின் வேலையாக இருக்கும் என்றும் சந்தேகப்படுகிறேன்.
>

தாராளமாகக் கண்டித்துக் கொள்ளுங்கள். உங்களைப் போன்ற ஆசாமிகள் என்னை பாராட்டினால்தான் எனக்கு அசிங்கம். எது போலிகளின் வேலை ? போலிகளை இயக்குவதே நீங்கள்தானே ? இதில் தனியாக எங்கே போலிகள் வருகிறார்கள் ?

<<
ஒரு ஸ்பாமுக்கு கொடுக்கும் மரியதையைதான் இதற்கும் அனைவரும் கொடுக்கவேண்டும், உங்கள் நுட்ப வழிகளை/யோசனைகளை தமிழ்மணம் மேற்கொள்ளும் என்று நம்புகிறேன்.

>>

ஆக நீங்கள் பாப்பார நாயே என்று எழுதி விட்டுப் போவீர்கள் நாங்கள் அதை கேள்வி கேட்காமல் ஒரு ஸ்பாமுக்குக் கொடுக்கும் மரியாதையை கொடுக்க வேண்டுமாம்? நான் நாளைக்கே 'கார்த்திக்ராமஸ் ஒரு *** $$$$$$' என்று உமது ஜாதியைச் சொல்லி எழுதினால் அதை தமிழ் மணத்தில் தலைப்பு குறிச்சொல்லாகப் போட்டு அழகு பார்ப்பீர்களா ? ஒரு அசோகமித்திரன் சொன்னறதிற்கு ஊர் விட்டு ஊர் வந்து பாய்ந்து நாய் மாதிரி குதறியது நீங்களா நானா ? ஏன் அப்பொழுதும் இப்படியே இக்னோர் செய்து விட்டு விட்டுப் போயிருக்க வேண்டியதுதானே ? கனடா வெங்க்ட்டுக்கு உள்சோக்கம் கற்பித்து எழுதியது யார் ? அப்பவு ஒரு ஸ்பாமுக்கு கொடுக்கும் மரியாதையைக் கொடுத்து விட்டுப் போக வேண்டியதுதானே ? டோண்டு மேல் ஆபாசப் பதிவு வந்த பொழுது ஒரு ஸ்பாம் மாதிரி நினைக்க வேண்டும் என்றும் டோண்டுவுக்கு இது வேண்டும் என்று வெறி பிடித்த மிருகம் போல் எழுதிய நீர் அதே பதிவு காசி குறித்து வந்த பொழுது பதறியது ஏன் ? ஏன் ஒரு ஸ்பாம் என்று நினைத்து ஒதுக்கி விட வில்லை ?

மீண்டும் சொல்கிறேன், தமிழ் மணம் இது போன்ற பார்ப்பன எதிர்ப்பு, வெறி போன்ற செயல்களை நிறுத்தாதவரை அதைச் சுட்டிக் காட்டிக் கொண்டுதான் இருப்பேன்.

<<
மேற்கொண்டு வாய்ப்பு கிடைத்ததே என்று திருமலையை போட்டுப்பார்க்கும் எண்ணம் எதுவும் இல்லை. கப் சிப் :-)
>>

யார் யாரை போட்டுத்தாக்குவது என்று விவஸ்தையில்லை ? தாரளமாக போட்டுப் பார்க்க வரலாம், நான் தயார். ஏற்கனவே வெறி நாய் கடிக்கு வயிற்றை சுற்றி பத்து ஊசி போட்டுத் தயாராகவே இருக்கிறேன். இப்பொழுது திருப்பி எனக்கும் அதே விஷத்துடன் கடிக்க முடியும், தெரியும்.
 



சன்னாசி

<<
திருமலை: தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஜாதியைத் திட்டுவதிலும் எனக்கு உவப்பில்லை.
>>

அப்ப கும்பலாய் 'பாப்பார நாய்' என்பதற்குப் பதிலாக 'பாப்பார நாய்கள்" என்று திட்டுவதில் உவப்பு உண்டோ? அப்படித்தான் இருக்கிறது உங்கள் பதில் அதனால் தான் குதர்க்கமாகக் கேட்க்க வேண்டியதாயிற்று.

<<
தமிழ்மணத்தில் குறிச்சொல் திரட்டல் தானியங்கியாக நடக்கிறதென்று - எத்தனை பேர் அந்த வார்த்தையைக்கொண்டு தேடுகிறார்களோ அதைப்பொறுத்து குறிச்சொற்கள் தானியங்கியாகத் திரட்டப்படுகின்றன என்று நினைக்கிறேன்.
>>>

ஏன் ஊருக்கு முன்னால் நீங்கள் வக்கால்த்து வாங்குகிறீர்கள் இதை தமிழ் மண நிர்வாகிகளில் யாரவதோ காசியோ வந்து சொல்லட்டும். குறிச்சொல்லை தானியங்கி திரட்டட்டுமே, அதிலிருந்து ஆட்சேபகரமான வார்த்தைகளை நீக்க ஒரு ·பில்டர் வைக்கலாம் அல்லவா ? ஒரு திரட்டி என்று வந்து விட்டால் அதையும் பிரைவேட் லிமிடட் மாதிரி என் சொந்த விருப்பம் என்று அறிவித்து விட்டால் அதில் வரும் அனைத்துக்கும் தமிழ் மணம்தானே பொறுப்பு. தமிழ் மணத்தில் பாப்பார நாய்கள் என்று வருகிரது என்று சொன்னால், அது என்னை பாதிக்கிறது என்று சொன்னால் முறையானவர்கள் வந்து அதற்கு வருத்தம் தெரிவித்து, பதில் சொல்லட்ட்டும், அது வரை உங்கள் நினைப்புகளையும் ஊகங்களையும் உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். இங்கு பாதிக்கப் பட்டவர் நீங்கள் அல்லர். இது எனக்கும் தமிழ் மணத்துக்கும் உள்ள பிரச்சினை.

<<
இதை வைத்துக்கொண்டு ஏதோ தமிழ்மணம் முகமூடியைத் தாக்குகிறது என்பது மாதிரிச் சொல்கிறீர்கள், ஆனால் நீங்கள் குறிப்பிட்டமாதிரி முதலியார் நாய்கள் என்றும் வன்னிய நாய்கள் என்றும் கூகிளில் தேடினால் முதலில் வருவது முகமூடியின் பதிவும் டோண்டுவின் பதிவும். உள்ளே போய்ப் பார்த்தால் முதலியாரை நாய்கள் என்று முகமூடியும் திட்டவில்லை, வன்னியர்களை நாய்கள் என்று டோண்டுவும் திட்டவில்லை - தேடுபொறிகளின் அமைப்பில் தற்செயலாக வந்து விழுபவை அவை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும். இதை வேண்டுமென்றே முகமூடியும் டோண்டுவும் செய்கிறார்கள் அல்லது கூகிளில் இருக்கும் உயர்ஜாதியினர் செய்கிறார்கள் என்று சொல்வது எவ்வளவு அபத்தமோ, அதேயளவு நீங்கள் சொல்வதுமாதிரி தமிழ்மண நிர்வாகிகள் பிராமணர்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள் என்பதும் அபத்தம் என்பது என் அபிப்ராயம்.
>>

உங்கள் அபிப்பிராயமே அபத்தம் என்பது என்னுடைய அபிப்பிராயம். நீங்களாகக் கூகுளில் போய் " வன்னிய நாய்கள் " என்று தேடினால்தான் முகமூடி பதிவு வருகிரது ? நீங்கள் தேடாமலேயே கூகுளுக்குச் சென்றவுடனேயே தலைப்புச் செய்தியாக வன்னிய நாய்கள் என்று வந்ததா ? அப்படி கூகுளில் தேடாமலேயே எடுதவுடனேயே வன்னிய நாய்கள் என்ற தலைப்பு வருகிறது என்று, கார்த்திக்ராமாஸ் பொய் சொன்ன மாதிரி நீங்களும் கூசாமல் புளுக மாட்டீர்கள். அவரை விட கொஞ்சம் நாகரீகம் தெரிந்தவர் என்று உங்களைப் பற்றி என்னிடம் அபத்தமானதொரு அபிப்பிராயம் இருக்கிறது. சொல்லுங்கள். அப்படி கூகுளில் தேடாமலேயே வருகிறதா ? அப்படி வருமானால் உங்கள் லாஜிக்கை நான் ஏற்ற்குக் கொண்டு போய்க் கொண்டே இருப்பேன். ஆனால் தமிழ் மணத்தில் அப்படி வரவில்லையே ஐயா ? தமிழ் மணத்தில் நுழைந்தவுடனேயே யாரும் கேட்க்காமலேயே 'பாப்பார நாய்கள்" என்ற தலைப்பு அல்லவா வருகிறது ? அதற்கு என்ன சொல்கிறீர்கள் ? நான் உள்ளே போய் மெனக்கெட்டு "பாப்பார நாய்கள்" என்று தேடிய பின் எனக்கு அந்த இணைப்பு வந்தால் நீங்கள் சொல்லுவதை ஏற்றுக் கொள்ளலாம். தமிழ் மணைத்தில் நுழைந்தவுடன் அப்படி ஒரு வார்த்தை வரும் விதமாக அவர்கள் அமைத்திருப்ப்தால்தான் நான் குற்றம் சாட்டுகிறேன் புரிகிறதா ?

இந்த 'பிராமண நாய்கள்" தலைப்பைத் தவிர என்னிடம் இன்னும் ஆயிரம் உதாரனங்கள் உள்ளன, தமிழ் மணம் அளவு கடந்த பிராமண எதிர்ப்பை ஊக்குவிக்கிறது என்று சந்தேகம் கொள்ள. ஒரு மாத தமிழ்மணப் பதிவுகளை படித்துப் பார்க்கும் யாருக்குமே அது எளிதாகப் புரியும். இன்று நான் கண்டது அதில் உச்சக் கட்டம் அவ்வளவுதான். உங்கள் ஜாதி என்ன என்று எனக்குத் தெரியாது, அதைப் பற்றிய அக்கறையும் எனக்குக் கிடையாது, ஆனால் தமிழ் மணத்தில் ஒரு குறிப்பிட்ட ஜாதி மட்டும் குறி வைத்துத் தாக்கப் படுகிறது என்பது என்னிடம் மட்டுமல்ல தமிழ் மணத்தைப் படிக்கும் எண்ணற்ற பேர்க்களின் ஆழமான உணர்வு. அவர்கள் நாகரீகம் கருதி வெளியில் சொல்வதில்லை நான் சொல்லி விட்டேன் அவ்வளவுதான். அப்படி நம்ப எனக்குத் த்க்க காரணங்கள் உள்ளன என்று நான் சொன்னால் அதை அபத்தம் என்று நீங்கள் புறம் தள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு உணர்வுகள் இருப்பது போல எனக்கும் இருக்கலாம் அல்லவா ? உங்களை தப்பாக எழுதி விட்டார்கள் என்று நீங்கள் முகமூடியிடம், குசும்பனிடம் சண்டை பிடித்தீர்கள் இல்லையா ? அப்பொழுது நான் வந்து சன்னாசி அபத்தமாக உளறுகிறார் என்று என்றைக்காவது முந்திரிக் கொட்டை மாதிரி வந்து உளறியிருக்கிறேனா ? அப்படி நான் உள்ளே நுழைந்து நாட்டாமை பண்ணிணால், குசும்பன் சொன்னது சரி நீர் சொல்லுவது அபத்தம் என்று நான் சொல்லியிருந்தால் 'சும்மா உன் சோலியப் பாத்துகிட்டுப் பொத்திக்க கிட்டுப் போய்யா " என்று என்னைப் பார்த்து நீங்கள் சொல்லியிருந்திருப்பீர்களா இல்லையா ? நீங்கள் உபுப்பு போட்டு சாபிடுவது போலத்தான் நானும் சாப்பிடுகிறேன். அவரவர் பாதிப்புக்கு அவரவர் போராடுகிறோம், உணர்வுகள் உங்களுக்கு மட்டும் தான் அல்ல எனக்கும் கூட இருக்கலாம் அல்ல்வா?

விளக்கம் போதுமா இன்னும் வேணூமா ?




ச.திருமலை
 



சன்னாசி, வாங்க பாஸு... எங்க போயிட்டீங்க ரொம்ப நாளா? ஆளயே காணோம்.. மத்தவங்களுக்கு எப்படியோ, I really missed you. (இதயும் கிண்டல்னு நினைச்சிக்கிறாதீங்க, நிஜமாத்தான் சொல்றேன்) அப்பப்போ - பதிவுக்கு சம்பந்தம் இருக்கணும்னு இல்ல - ஒரு ஹாயாவது சொல்லிட்டு போங்க...

// முதலியார் நாய்கள் என்றும் கூகிளில் தேடினால் முதலில் வருவது முகமூடியின் பதிவும் // :))) இது சன்னாசி டச்.

"முதலியாரை நாய்கள் என்று முகமூடியும் திட்டவில்லை - தேடுபொறிகளின் அமைப்பில் தற்செயலாக வந்து விழுபவை அவை என்றுதான் எடுத்துக்கொள்ளவேண்டும்" ஆனால் இங்கு ஒரு வித்தியாசம் இருக்கிறது. பொட்டீக்கடை பதிவை எழுதிவிட்டு அதை தமிழ்மணத்தில் சேர்த்து TAG கட்டும்போது "பாப்பார நாய்கள்" என்று கட்டுகிறார். [நான் இந்த பதிவை சேர்த்தபோது "விதி" (as in தலைவிதி) என்பதாக சேர்த்தேன்...] ஆக குறிப்பாக பொட்டீக்கடை தனது பதிவையே பாப்பார நாய்கள் என்று tag செய்வதற்கும், கூகிள் ஒரு கட்டுரையில் இருக்கும் சில வார்த்தைகளை பிடித்து போட்டு தற்செயலாக விழவைப்பதற்கும் சிறு வித்தியாசம் இருக்கிறது.. இதை உங்கள் கருத்து குறித்த விமர்சனமாவோ குற்றச்சாட்டாவோ இல்லாம ஒரு சிறு விளக்கமாக மட்டும் எடுத்துக்கொள்ள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

*

கார்த்திக், நீங்கள் சொன்ன பிறகும் நான்கு மணி நேரங்களுக்கு - பாபா பின்னூட்டம் எழுதிய வரைக்கும் - அந்த tag இருந்தது.. இதுவும் உங்களுக்கு ஒரு தகவல் மட்டுமே. அந்த tagஆல் எனக்கு எந்த ப்ரச்னையும் இல்லை.. seriously, ஒரு வருடமாக கேட்கும் வார்த்தைதான் அது, சோ (so) No Big Deal... ஆனால் (மேலே குறிப்பிட்டது போல) பொட்டீக்கடை tag கட்டாமல் எப்படி அந்த tag சாத்தியப்படும் என்பதும், இதுவும் போலியின் வேலையாக இருக்குமோ என்று நீங்கள் அவசரமாக யோசிப்பதும் எனக்கு ஏன் என்று புரியவில்லை... புரிய வேண்டிய அவசியமுமில்லை (போலியும் இப்படித்தான் திட்டுவான் என்பதை தவிர இதற்கும் போலிக்கும் சம்பந்தம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.. இல்லை பொட்டீக்கடைதான் போலியா என்றால் no comments)

*

குறிப்பிட்ட அந்த tag தமிழ்மண நிர்வாகத்தாரால் நீக்கப்பட்டிருக்கிறது... இதற்கு நான் எந்த விதமான எதிர்வினையாற்ற வேண்டும் என்று தெரியவில்லை... வரவேற்கிறேன், நன்றி என்றெல்லாம் சொன்னால் (*அந்த tagஆல் எனக்கு எந்த ப்ரச்னையும் இல்லை*) எனக்கு கிடைக்கும் எதிர்வினைகளை மனதில் கொண்டால் நியூட்ரல் ஜல்லி அடிப்பதே சிறந்தது என்று தோன்றுகிறது... ஆனால் எப்படி என்று புரியாமல் எஸ்கேப் ஆகிக்கொள்கிறேன் (இந்த இடத்தில் ஒரு ஸ்மைலி கட்டாயம் போடணுமோ)

*

பொட்டீக்கடை என்னை பாப்பார நாய் என்பதாலோ அல்லது தேவ நாய், நாடார் நாய், சக்கிலிய நாய், கவுண்ட நாய், பர நாய் என்பதாலோ என் மனநிலையில் எந்த மாறுதலும் இருக்கப்போவதில்லை... இதுவரை சாதியை மறுதலித்து வந்திருக்கும் நான் ஒரு வேளை என் சாதீய அடையாளங்களை எங்காவது வெளிப்படுத்தி அதன் மூலம் அப்படி ஒரு பூச்சை - அப்படி வெளிப்படுத்துபவர்களைக்கூட விமர்சிக்க இவர்களுக்கு என்ன உரிமை என்பது ஒருபுறமிருக்க - பூசினால் எனக்கு சொரணை வந்து "உன் உடம்பில் ஓடும் பல சாதிகளில்" என்று ஆரம்பித்து அவரை குறித்து ஏதும் "partial தரக்குறைவாக" பேசியிருப்பேனோ என்னவோ? அப்படி இல்லாமல், கருணாநிதியை விமர்சிப்பவன் பார்ப்பனன், திராவிட இனக்கும்பலில் சேராதவன் ஆரியன், தமிழ் பாதுகாப்பு என்று கோமாளித்தனங்கள் செய்பவர்களை கண்டு சிரிப்பவன் மேட்டுக்குடி, பார்ப்பன பதிவருக்கு பின்னூட்டம் போட்டால் வந்தேறி என்ற கற்பிதங்களின் பால் கட்டமைக்கப்பட்ட நியூரான் குளறுபடிகளால் உளறப்படும் உளறல்களுக்கு, உபயோகப்படுத்தப்பட்ட பாத்ரூம் டிஷ்யூ அளவு கூட மதிப்பு தர தேவையில்லை என்பது MHO.

இது போன்ற விஷயங்களை ஒரு சிலர் கண்டிப்பார்களா என்ற திருமலையின் கேள்வியும் என்னை பொறுத்த வரை சிறுபிள்ளைத்தனமாகவே (as in குழந்தைத்தனம்) தோன்றுகிறது... இதெல்லாம் அரசியலில் pre-kg ல் கற்றுக்கொள்ளும்/தரப்படும் விஷயங்கள்... இதில் தருமியை வேறு பஞ்சாயத்துக்கு தலைமை வகிக்க கூப்பிடுகிறீர்கள்.. ஒரு வேளை நீங்களும் அவரை "மதம் மறுப்பு கட்டுரைகள்" காலகட்ட தருமியாகவே பார்த்துக்கொண்டிருக்கிறீர்களோ என்னவோ? நானும் அப்படித்தான் நினைத்திருந்தேன், தங்கமணியின் இந்த மத ஒழிப்பு கட்டுரையில் அவரது பின்னூட்டத்தை பார்க்கும் வரை ::

தருமி :: அந்த ஒரே உயர் சாதியினரைத்தவிர மற்றவர்களில் ஓரளவேனும் கணிசமானவர்கள் தலித்துகளின் இன்றைய சமூக, வாழ்வியலை ஒரு கரிசனத்தோடு பார்க்கும்போது எப்படி அவர்கள் ( எல்லோரும் (exceptions cannot be rules) அதைப் புரிந்துகொள்ளவும் மறுப்பது ஏன்?

முகமூடி :: சூப்பர் கண்டுபிடிப்பு தருமி... ஆனா பாருங்க இந்த முடிவுக்கு எப்படி வந்தீங்கன்னுதான் தெரியல. கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்.. ஏன் கேட்கிறேன்னா, நிறைய பேரோட சாதி கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். இல்லைன்னா பெரியவங்க நீங்க, கரிசனத்தோட பார்க்கிறவர்கள் அனைவரும் "அந்த ஒரே உயர்சாதி இல்லாதவர்கள்" அப்படீன்னு குத்துமதிப்பா சொல்வீங்களா? மதம், ஜோசியம் என்று பல விஷயங்களில் உங்களின் அலசலை பாராட்டி வியந்த என் போன்றவர்களுக்கு புரியும் படி உங்களின் இந்த அலசலையும் தயவு செய்து வெளியிடுங்கள்.


இதற்கு இன்று வரை பதிலில்லை... இங்கு இருக்கும் முக்கால்வாசி பேரை விட இரண்டு மடங்கு அனுபவத்தில் மூத்தவர், பல எதிர்கால தூண்களை உருவாக்கிய ஒரு பேராசிரியரின் சாதி குறித்த கண்ணோட்டம் இது.. இந்த லட்சணத்தில் பொட்டீக்கடை போன்ற ***களின் கருத்தையெல்லாம்... விட்டுத்தள்ளுங்க... முடிஞ்சா நீங்களும் ஊரோட ஒத்து வாழுங்க.. பொட்டிக்கடை எடுத்துக்கொடுத்திருக்கார்... இனிமே நீங்களும் பதிவு எழுதினா அத tag பண்ணும்போது எழுதப்படுபவரின் ஜாதி தெரிஞ்சா அவரோட ஜாதியோட மிருகமோ, கெட்ட வார்த்தையோ ஏதோ ஒண்ண சேர்த்து எழுதி பழகுங்க.. நீங்களும் செம தில் பார்ட்டின்னு நடுநிலயாளர்கள் பாராட்டுவர்...
 



மேற்கண்ட பின்னூட்டத்தில் "அந்த tagஆல் எனக்கு எந்த ப்ரச்னையும் இல்லை" என்று நான் கூறியிருப்பது, அந்த tagன் மூலம் பொட்டீக்கடை என்னை குறிப்பிடுவது எனக்கு ஒரு ப்ரச்னையும் இல்லை என்ற அர்த்தத்திலேயே... மற்றபடி ஒருவரை திட்டுவதற்காக (கூட) சாதியை உபயோகப்படுத்துவது என்னை பொருத்த வரை அருவருப்பானது...
 



பிரச்சினை பெருசாகிட்டுது போல...அப்பீட்டாகிக்கறது பெஸ்ட்....படிச்சி முடிக்கறதுக்குள்ள போதும் போதும் என்றாகிடுத்து...பாதி மேட்டர் புரியல...இது எழுதி முடிக்க எவ்வளவு நேரம் ஆச்சி...அல்லது எதாவது மென்பொருள் பயன்படுத்தறீஙகளா ??

:))
 



முகமூடி ,

// ஆனால் எப்படி என்று புரியாமல் எஸ்கேப் ஆகிக்கொள்கிறேன் (இந்த இடத்தில் ஒரு ஸ்மைலி கட்டாயம் போடணுமோ) //

பாஸ்டன் பாலா : // I have sent a request now. //

நீக்கப்பட்டது பாலாவின் இந்த மெயிலுக்கான நடவடிக்கையாக இருக்கலாம்.

பொதுவாழ்வில் உமக்கு இதெல்லாம் புதிதா என்ன? போய் நிம்மதியாக தூங்குமைய்யா! :)))

// மற்றபடி ஒருவரை திட்டுவதற்காக (கூட) சாதியை உபயோகப்படுத்துவது என்னை பொருத்த வரை அருவருப்பானது... //

வரவேற்கிறேன்... வழிமொழிகிறேன்...

சதீஷ்
 



திருமலை எழுதியதை வாசித்தேன். பதில் சொல்ல ஒன்றுமில்லை, அப்படின்னா அப்படித்தான் ;-) முகமூடி புரிந்து கொண்டமைக்கு நன்றி.
 



// பொட்டீக்கடை டக் கட்டாமல் எப்படி அந்த டக் சாத்தியப்படும் என்பதும், இதுவும் போலியின் வேலையாக இருக்குமோ என்று நீங்கள் அவசரமாக யோசிப்பதும் எனக்கு ஏன் என்று புரியவில்லை...//
முகமூடி, சந்தடி சாக்கிலே இப்படி சம்மர்சால்ட்டா? தமிழ்மணத்திலே பதிவுகளை சேர்க்கும்போது "பதிவரே நீங்க வகைப்படுத்தலேன்னா வேறு யாராவது வகைபடுத்தி கலாய்ச்சிருவாங்கன்னு" ஒரு மெசேஜு வருது பார்த்ததில்லையா? சரி விடுங்க அவங்க அவுங்க அவசரம் அவங்க அவங்களுக்கு ;-)
 



//அப்ப கும்பலாய் 'பாப்பார நாய்' என்பதற்குப் பதிலாக 'பாப்பார நாய்கள்" என்று திட்டுவதில் உவப்பு உண்டோ? அப்படித்தான் இருக்கிறது உங்கள் பதில் அதனால் தான் குதர்க்கமாகக் கேட்க்க வேண்டியதாயிற்று.//

திருமலை, வார்த்தை வார்த்தையாக எடுத்துப் போட்டு திருகுதாளம் போடுவதுதான் உங்களுக்குப் பொழுதுபோக்கென்றால் தாராளமாகச் செய்துகொள்ளவும். இன்னும் தெளிவாக, குழப்பமின்றிச் சொல்லவேண்டுமென்றால், 'பாப்பார நாய்கள் என்று திட்டுவதை நானும் எதிர்க்கிறேன். அதேபோல எந்த ஜாதியினரையும் நாய்கள் என்று திட்டுவதையும் எதிர்க்கிறேன்.' இதற்கு மேல் தெளிவாக எப்படிச் சொல்வதென்று நீங்கள் பாடம் எடுங்கள், கற்றுக்கொள்கிறேன்.

//ஏன் ஊருக்கு முன்னால் நீங்கள் வக்கால்த்து வாங்குகிறீர்கள் இதை தமிழ் மண நிர்வாகிகளில் யாரவதோ காசியோ வந்து சொல்லட்டும்.//

ஊருக்கும் முன்னால் ஏன் நீ வருகிறாய், நீ என்ன கைத்தடியா என்ற மாதிரி சும்மா இந்த லேபிள் குத்துவதெல்லாம் இருக்கட்டும்; காசி என்ன மாதாமாதம் படியளக்கிறாரா எனக்கு அவருக்குப்பின்னால் சப்ளாக்கட்டை அடித்துக்கொண்டு அலைவதற்கு? காசிக்கு, முகமூடிக்குத் தனி மெயில் அனுப்பியிருந்தால் நான் ஏன் இங்கே வந்து சொல்லியிருக்கப்போகிறேன் - பொதுவில் வைக்கப்பட்ட பின்னூட்டத்துக்கு யார் வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். சும்மா உணர்ச்சிவசப்படாமல், சொன்னதில் ஏதாவது விஷயம் இருக்கிறதா என்று மட்டும் பார்க்கவும்.

எந்தவொரு ஜாதியையும் நாய்கள் என்று சொல்லுவதை எதிர்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன், அந்த வாக்கியத்தை மறுபடி படித்துப் பார்க்கவும். //தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஜாதியைத் திட்டுவதிலும் எனக்கு உவப்பில்லை// - தனிப்பட்ட முறையில் என்பது, 'என் பார்வையில் எந்த ஜாதியைத் திட்டுவதிலும் எனக்கு உவப்பில்லை' என்பதைக் குறிக்கிறது. ஒரு பிராமணனைத் திட்டுவதற்குப்பதில் பத்து பிராமணர்களைத் திட்டினால் அது உவப்பாக இருக்கிறதா என்று குதர்க்கமாகக் கேட்கிறீர்கள் - இந்தளவு ஒரு வார்த்தையைத் தோண்டுவீர்கள் என்று நான் எதிர்பார்த்திருக்க என்ன முகாந்திரம் இருக்கிறது? இதை நீங்கள் நம்பலாம், நம்பாமல் போகலாம் - நான் சொல்லவந்தது அந்த அர்த்தத்தில் - அவ்வளவுதான்.

//உங்களை தப்பாக எழுதி விட்டார்கள் என்று நீங்கள் முகமூடியிடம், குசும்பனிடம் சண்டை பிடித்தீர்கள் இல்லையா ? அப்பொழுது நான் வந்து சன்னாசி அபத்தமாக உளறுகிறார் என்று என்றைக்காவது முந்திரிக் கொட்டை மாதிரி வந்து உளறியிருக்கிறேனா ? அப்படி நான் உள்ளே நுழைந்து நாட்டாமை பண்ணிணால், குசும்பன் சொன்னது சரி நீர் சொல்லுவது அபத்தம் என்று நான் சொல்லியிருந்தால் 'சும்மா உன் சோலியப் பாத்துகிட்டுப் பொத்திக்க கிட்டுப் போய்யா " என்று என்னைப் பார்த்து நீங்கள் சொல்லியிருந்திருப்பீர்களா இல்லையா ?//

நேரடியாக என் பெயரைச் சொல்லி, நான் சொல்வது தவறு, பிறர் சொல்வது சரி என்று வாதிட்டிருந்தால், ஏதும் ஆபாசம் இல்லையென்றால் என்னால் இயன்றவரை பதிலுக்கு விளக்கம் கொடுக்கவோ திருத்திக்கொள்ளவோ முயற்சித்திருப்பேனே தவிர, பொத்திக்கிட்டுப் போய்யா என்று நிச்சயம் சொல்லியிருக்கமாட்டேன். மேலும், நான் நாட்டாமை செய்வதாக ஏதும் எனக்குத் தோன்றவில்லை. பொதுவில் வைக்கப்பட்ட ஒரு பின்னூட்டம் குறித்த என் கருத்து. அவ்வளவே.

//நீங்கள் உபுப்பு போட்டு சாபிடுவது போலத்தான் நானும் சாப்பிடுகிறேன். அவரவர் பாதிப்புக்கு அவரவர் போராடுகிறோம், உணர்வுகள் உங்களுக்கு மட்டும் தான் அல்ல எனக்கும் கூட இருக்கலாம் அல்ல்வா?//

உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன். இங்கே ஏதும் பின்னூட்டம் இடாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து தலையிடி ஏதும் இல்லாமலிருக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? உங்கள் உணர்வுகளை மதித்துச் சொன்னதையும்தான் திரிக்கிறீர்கள் - முதலில் 'சொல்லவந்த கருத்தைப் பார்க்காமல் சொன்னவனின் பின்புலத்தைப் பார்க்காதே' என்று உங்களைக்குறித்து நீங்கள் உணர்த்த விரும்பும் கருத்தை உங்களைக் குறித்துக் கருத்துக் கூறுபவர்களுக்கும் பிரயோகியுங்கள், மிச்சத்தை அப்புறம் பார்க்கலாம். இந்த tag விஷயம் குறித்து உங்கள் பின்னூட்டம் மூலம்தான் முதலில் அறிந்தேன், என் எதிர்ப்பைப் பதிவு செய்தேன் - அவ்வளவுதான்.

இந்த விஷயத்தில் கூறப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, ஆபாச மறுமொழிகளைத் தவிர்க்க மட்டுறுத்தல் செய்ய தமிழ்மணம் நிர்ப்பந்தித்தபோது, டோண்டு போன்றவர்கள் தாக்கப்பட்டபோது மட்டுறுத்தல் நிர்ப்பந்திக்கப்படவில்லை, ஆனால் காசி தாக்கப்பட்டபோது மட்டும் மறுமொழி மட்டுறுத்தல் நிர்ப்பந்திக்கப்பட்டது என்பது. பிராமணர்கள் மீதான தாக்குதல் என்பதில் இது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறதென்று நினைக்கிறேன். போலியாக ஆபாசப் பின்னூட்டமிடுபவர்களுக்கு நாகரீக உலகில் இடமில்லை என்பதுதான் என் கருத்தும். டோண்டு ஆபாசமாகத் தாக்கப்படுமுன் அதுபோன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்துகொண்டிருந்ததே தவிர, தொடர்ச்சியாக ஆபாசப் பின்னூட்டங்களால் யாரும் தாக்கப்பட்டிருக்கவில்லை. அது நிகழ்ந்துகொண்டிருந்தபோது டோண்டுவும் காசியும் சென்னையில் சந்தித்ததாக காசியின் (அல்லது டோண்டுவின் - நினைவில்லை) வலைப்பதிவில் படித்திருக்கிறேன். அதன்பிறகுதான் காசி மீதான போலி டோண்டுவின் தாக்குதல்கள் தொடங்கின என்று நினைக்கிறேன். பல இடங்களில் கண்ணில் பட்ட காசி மீதான் போலி டோண்டுவின் தாக்குதல்களில் 'என்ன தைரியமிருந்தால் டோண்டுவுடன் காப்பி வடை சாப்பிடுவே, நீ என்ன பாப்பார அடிவருடியா' என்ற ரீதியில் கழிசடையான தாக்குதல்கள் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து/அதே காலகட்டத்தில் பெண் பதிவர்களின் வலைப்பதிவுகளில், முகமூடி போன்றவர்களின் வலைப்பதிவுகளிலும் தாக்குதல்கள் வரத்தொடங்கியதை தொடர்ந்து வலைப்பதிவுகளைப் படித்து வரும் அனைவரும் அறிவார்கள். ஆக, இது அனைத்தும் நிகழ்ந்த ஒரு கட்டத்தில் தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை நிர்ப்பந்தித்ததென்று நினைக்கிறேன். ஆக, பிராமணர்களுடன் பேசிப் பழகியதற்காக பாப்பார அடிவருடி என்று போலி டோண்டுவால் கழிசடை மொழியில் காசியின் குடும்பத்தினரைக் குறித்து கேவலமான மொழியில் தாக்கப்பட்ட காசியை அல்லது தமிழ்மண நிர்வாகத்தை இன்றைக்குப் பிராமண எதிர்ப்பாளர்(கள்) என்று வெகு நாசூக்காகக் கட்டம்கட்ட முயலுவது சமீபத்தில் நான் கண்ட பெரும் நகைமுரண். அதை எதிர்த்து என் குரலைப் பதிவுசெய்யவேண்டுமென்று நினைக்கிறேன், செய்கிறேன் - அவ்வளவுதான்.
 



சன்னாசி,
திருமலைக்கு இவ்வளவு சீரியஸாக பதில் கொடுப்பது "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது". திருமலை எழுதியதில் ஏதாவது சம்பந்தப்பட்டது இருக்கா என்ன?
ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பழசைக் கிளறுகிறார்? அதிர்ஷ்டவசமாக எனக்கு வரிக்கு வரி பதில் எழுத தேவையில்லை என்ற மன நிலை இருக்கிறது.. மீண்டும் சுழலுக்குள் போகாதீர்கள் என்று வேண்டிக்கொள்கிறேன். இனி நிச்சயமாக எதுவும் எழுத உத்தேசமில்லை. :-(
 



// தமிழ்மணத்திலே பதிவுகளை சேர்க்கும்போது "பதிவரே நீங்க வகைப்படுத்தலேன்னா வேறு யாராவது வகைபடுத்தி கலாய்ச்சிருவாங்கன்னு" ஒரு மெசேஜு வருது //

அது வகைப்படுத்தாத பதிவுகளுக்கு மட்டும்தான் பொருந்தும் என்று நினைத்திருந்தேன்... பொட்டீக்கடை அவருக்கே உரிய மொழியில் என்னை அன்பாக புகழ்ந்துவிட்டு பிறகு சொல்வது "வகைப்படுத்தாதவை என்ற பகுதியில் வகைப்படுத்தியிருந்தேன்"... ஆக ஏதோ ஒரு பகுதியில் பதிவரால் வகைப்படுத்தப்பட்ட ஒரு பதிவின் tagஐ மட்டும் மற்றவர்களால் மாற்ற முடியாது என்பதே எனது எண்ணம்... இல்லை பொட்டீக்கடை பற்றி எனக்கு நன்றாக தெரியும் அவர் அப்படி செய்பவர் அல்ல இது (பொட்டீக்கடை தவிர்த்த) போலியின் வேலைதான் என்று நீங்கள் சர்டிபிகேட் கொடுக்கிறீர்கள் என்றால் அதையும் மனமகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன்.

*

// சன்னாசி, திருமலைக்கு இவ்வளவு சீரியஸாக பதில் கொடுப்பது "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. மீண்டும் சுழலுக்குள் போகாதீர்கள் என்று வேண்டிக்கொள்கிறேன் //

சன்னாசி ஒரு அப்பாவி, வலையுலகுக்கு புதியவர். தான் என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் சுழலுக்குள் மாட்டிக்கொள்ளப்போகிறார் என்ற உங்களின் நட்பு வயப்பட்ட நல்லெண்ணம் புரிகிறது... ஆனா, பல இடங்களிலும் இந்த பதிவிலும் நான் எழுதிய "அவருக்கு பதில் சொல்லாதே என்றெல்லாம் அறிவுஜீவிகள் காபந்து செய்ததை நினைத்து உண்மையிலேயே சிரிப்புதான் வந்தது..."வோட ஒத்து வந்த மாதிரி எனக்கு மட்டும் (குயுக்தி) தோன்றியதால சும்மா quote செய்யணும் போல தோணிச்சி... சொன்னேன். (வழக்கம் போலவே இதையும்) கண்டுக்காதீங்க :-)
 



முகமூடி,

//ஆக ஏதோ ஒரு பகுதியில் பதிவரால் வகைப்படுத்தப்பட்ட ஒரு பதிவின் டக்ஐ மட்டும் மற்றவர்களால் மாற்ற முடியாது என்பதே எனது எண்ணம்//

நீங்களும் ஒரு "நுட்ப அறிவிலி" என்றறிவதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இன்னா பாஸூ பன்றது, நைட்டு ஏத்தன வகைப்படுத்தாதவை என்று வகைப்படுத்திய, ஆனால் குறியீடு இட விரும்பாத அந்த பதிவை கூட ஒருத்தர் "போடாப் புண்ணாக்கு" என்று குறியீடு இட்டிருந்தார்.என்னா பன்றது அதையும் பாத்துட்டு வழக்கம் போல சிரிச்சிட்டு வந்துட்டேன்.

அப்றம் எல்லாருக்கும் எல்லாத்தையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லாததால் மாட்சிமை பொருந்திய பெருந்தலைகள்?! செய்யக் கூடிய "ஸ்க்ரீன் ஷாட்ஸ்"லாம் நான் எடுப்பதில்லை.

இதைக் கூட உங்களிடம் தெரிவிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லையென்றாலும் சில விடயங்களை நீங்கள் அறிந்து கொள்ளும் பட்சத்தில் உங்களது மனம் அமைதியடையும் என நினைக்கிறேன்.:-)
 



//பொட்டீக்கடை அவருக்கே உரிய மொழியில் என்னை அன்பாக புகழ்ந்துவிட்டு பிறகு சொல்வது "வகைப்படுத்தாதவை என்ற பகுதியில் வகைப்படுத்தியிருந்தேன்"... ஆக ஏதோ ஒரு பகுதியில் பதிவரால் வகைப்படுத்தப்பட்ட ஒரு பதிவின் டக்ஐ மட்டும் மற்றவர்களால் மாற்ற முடியாது என்பதே எனது எண்ணம்..//

அப்படியே பார்த்தால் கூட எப்படி //"பொட்டீக்கடை டக் கட்டாமல் எப்படி அந்த டக் சாத்தியப்படும் என்பதும்" // யோசிப்படவேண்டியதுதானே, சரி விடுங்க இதெல்லாம் அரசியல்ல சகஜமப்பா ;-)

//ஏதோ ஒரு பகுதியில் பதிவரால் வகைப்படுத்தப்பட்ட ஒரு பதிவின் டக்ஐ மட்டும் மற்றவர்களால் மாற்ற முடியாது என்பதே எனது எண்ணம்..//
//
அப்படித்தான் நானும் நினைக்கிறேன்.


//"அவருக்கு பதில் சொல்லாதே என்றெல்லாம் அறிவுஜீவிகள் காபந்து செய்ததை நினைத்து உண்மையிலேயே சிரிப்புதான் வந்தது..."வோட ஒத்து வந்த மாதிரி எனக்கு மட்டும் (குயுக்தி) //

குயுக்தி இல்லாம , ஒன்னும் தெரியாத வலைப்பதிவுக்கு புதியவரான சன்னாசியையே இவ்வளவு எழுதவச்சிட்டாரே திருமலைன்னும் பாக்கலாமே(நான்).

முகமூடி இனி நிச்சயமா நான் ஜூட்டு.. ப்ளீஸ் நன்றி.!!!
 



//சன்னாசி,
திருமலைக்கு இவ்வளவு சீரியஸாக பதில் கொடுப்பது "எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது". திருமலை எழுதியதில் ஏதாவது சம்பந்தப்பட்டது இருக்கா என்ன?//

கார்த்திக்: இந்த விஷயம் குறித்து எனக்குப் படுவதை நான் சொல்கிறேன் - தயவுசெய்து எனக்கு அட்வைஸ் செய்கிறேன் பேர்வழி என்று யாரும் என்னைத் தர்மசங்கடப்படுத்தாதீர்கள். இந்த 'உனக்கு நேரம் வேஸ்ட்' 'இவருடன் பேசிப் பிரயோஜனமில்லை, அவருடன் பேசிப் பிரயோஜனமில்லை' என்றெல்லாம் அலுப்பு வருமளவு நொந்துபோகுமளவு நான் நைந்து போகவேண்டுமென்றால் அது தானாக நடந்துவிட்டுப் போகிறது. நேரம் வேஸ்ட்டுதான் ஐயா, எனக்கும் இதில் பங்குகொள்ளும் அனைவருக்கும்தான் - மற்றபடி இதில் தனியொருவனாக எனக்குத் தோன்றியதென்று எதைச் செய்யவேண்டுமென்று எனக்குத் தெளிவாகத்தான் தெரிகிறது. மிக்க நன்றி.
 



// நீங்களும் ஒரு "நுட்ப அறிவிலி" என்றறிவதில் மகிழ்ச்சியடைகிறேன் //
நன்றி... என்னங்க பண்றது... எல்லாருக்குமா "அறிவு" வாய்க்குது? நீங்கள்லாம் (அறிவுல) க்ரீமி லேயர் கேட்டகரில இருக்கீங்க... கொஞ்சம் உதவி செஞ்சீங்கன்னா, என்ன மாதிரி ஆட்களும் கொஞ்ச கொஞ்சம் கத்துக்குவோம்...

// பட்சத்தில் உங்களது மனம் அமைதியடையும் என நினைக்கிறேன் // எப்போதிருந்து இப்படி :)) சுயத்த தொலைச்சிராதீங்க பாஸு... அது ரொம்ப முக்கியம்.

*

// ஒன்னும் தெரியாத வலைப்பதிவுக்கு புதியவரான சன்னாசியையே // எனக்கென்னவோ மிச்சமிருக்கும் ஒரே ஒரு "ஒன்னுமே தெரியாத வலைப்பதிவுக்கு புதிய அப்பாவி" நீங்கதான்னு தோணுது... (ஸ்மைலி போடணுமா இல்லையான்னு தெரியாததால சாய்ஸ்ல விடறேன்)
 



// நீக்கப்பட்டது பாலாவின் இந்த மெயிலுக்கான நடவடிக்கையாக இருக்கலாம் //

சதீஷ், "எப்படி என்று புரியாமல்" என்று நான் சொன்னது, tag நீக்கப்பட்டது எப்படி என்பதற்காக அல்ல.... நியூட்ரல் ஜல்லி அடிப்பது எப்படி என்று புரியாமல் என்ற அர்த்ததில்...

மத்தபடி "அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பாத்தான்" நன்றி :))
 



//குயுக்தி இல்லாம , ஒன்னும் தெரியாத வலைப்பதிவுக்கு புதியவரான சன்னாசியையே இவ்வளவு எழுதவச்சிட்டாரே திருமலைன்னும் பாக்கலாமே//

கார்த்திக் - இதுகுறித்து முன்பும் ஒரு பின்னூட்டம் இட்டிருந்தேன். 'ஒண்ணும் தெரியாத'வர்கள் எவரும் இல்லை இங்கே. இந்த விஷயத்தை இத்தோடு விடுங்கள், இந்த விஷயத்தை இத்தோடு விடுங்கள், தயவுசெய்து எனக்குப் பரிந்துகொண்டு வரவேண்டாம் - அதுவும் ஒரு திரிப்பாகத்தான் படும் - நான் சொல்ல நினைப்பதைச் சொல்லிவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறேன்.
 



சன்னாசி

<<
திருமலை, வார்த்தை வார்த்தையாக எடுத்துப் போட்டு திருகுதாளம் போடுவதுதான் உங்களுக்குப் பொழுதுபோக்கென்றால் தாராளமாகச் செய்துகொள்ளவும். இன்னும் தெளிவாக, குழப்பமின்றிச் சொல்லவேண்டுமென்றால், 'பாப்பார நாய்கள் என்று திட்டுவதை நானும் எதிர்க்கிறேன். அதேபோல எந்த ஜாதியினரையும் நாய்கள் என்று திட்டுவதையும் எதிர்க்கிறேன்.' இதற்கு மேல் தெளிவாக எப்படிச் சொல்வதென்று நீங்கள் பாடம் எடுங்கள், கற்றுக்கொள்கிறேன்.
>>


நான் தான் வெளிப்படையாகவே சொன்னேனே அது வேண்டும் என்றே குதர்க்கமாக எழுப்பப்பட்ட ஒரு கேள்வி என்று அப்புறம் என்ன இவ்வளவு ஆர்ப்பாட்டம் ? உங்களுக்கு நான் குதர்க்கமாகக் கேட்டது வலித்ததல்லவா ? அது தான் அந்தக் கேள்வியின் நோக்கமே. அது போல் தான் ஒரு முக்கியமான ஒரு பிரச்சினையை நான் எழுப்பிய பொழுதும் அது குறித்து ஒரு முழுமையான புரிதல் இல்லாத பொழுதும் மூக்கை நுழைத்து எனது உணர்வு பூர்வமானதொரு கேள்வியைக் கொச்சைப் படுத்தி 'அபத்தமான அபிப்பிராயம்' என்று நீங்கள் சொன்ன பதிலும் எனக்கு எரிச்சல் மூட்டியது. எனக்கு ஏற்பட்ட எரிச்சலில் ஒரு சாம்பிள் உங்களுக்கும் காண்பிக்க நினைத்தேன். அவ்வளவுதான். அதைத் தவிர I did not mean it on you. எப்படி நான் எழுப்பிய ஒரு கேள்வியை உங்களால் திரிக்க முடிகிறதோ அதே போல நீங்கள் உண்மையிலேயே சொன்ன ஒரு வார்த்தையையும் என்னால் திரிக்க முடியும் என்று ஒரு உதாரணம் காண்பித்தேன். இப்ப புரியுதா அடுத்தவனுக்கும் இப்படித்தான் வலிக்கும் என்பதும் ?


<<
ஊருக்கும் முன்னால் ஏன் நீ வருகிறாய், நீ என்ன கைத்தடியா என்ற மாதிரி சும்மா இந்த லேபிள் குத்துவதெல்லாம் இருக்கட்டும்; காசி என்ன மாதாமாதம் படியளக்கிறாரா எனக்கு அவருக்குப்பின்னால் சப்ளாக்கட்டை அடித்துக்கொண்டு அலைவதற்கு? காசிக்கு, முகமூடிக்குத் தனி மெயில் அனுப்பியிருந்தால் நான் ஏன் இங்கே வந்து சொல்லியிருக்கப்போகிறேன் - பொதுவில் வைக்கப்பட்ட பின்னூட்டத்துக்கு யார் வேண்டுமானாலும் பதிலளிக்கலாம். சும்மா உணர்ச்சிவசப்படாமல், சொன்னதில் ஏதாவது விஷயம் இருக்கிறதா என்று மட்டும் பார்க்கவும்.
>>


நீங்கள் கைத்தடியோ கால்தடியோ சம்பளம் வாங்குகிறீர்களோ இல்லையோ எனக்கு அவை பற்றி அக்கறையில்லை. நீங்கள் காசிக்கு எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போங்கள். I simply dont give a damn about that. ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் எழுத்தில், வக்காலத்துக்களில் சப்ளாக் கட்டையின் சத்தம் தான் அதிகமாக கேட்கிறது. என்ன செய்வது ஒரு வேளை எங்களுக்கு காது கோளாறாக இருக்கலாம். எப்பொழுது யார் தமிழ் மணத்தைப் பற்றி கேள்வி எழுப்பினாலும் ஒரு சில அடிப்பொடிகள் மட்டுமே முந்திக் கொண்டு பதில் கூறுவதால் அவர்களை கைத்தடிகள் என்று நினைக்க வேண்டி வருகிறது. அதில் நீங்கள் கொஞ்சம் விவரமான கைத்தடி என்ற (தப்பான) அபிப்பிராயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லைதான். இந்த விஷயத்திலும் கூட நீங்கள் நிதானம் காண்பிக்காமல் உடனடியாக துள்ளிக் குதித்து முந்திரிக் கொட்டையாக பதில் கூறியதும் அப்படிப் பட்ட அபிப்பிராயத்தை உறுதி படுத்துகிறது. என்ன செய்யச் சொல்லுகிறீர்கள் சன்னாசி ?


பொதுவில் வைக்கப் பட்ட பின்னூட்டத்துக்கு யார் வேண்டுமானாலும் பதில் சொல்லலாம்தான் அதை நான் மறுக்க வில்லை. உங்களுக்கு எல்லா உரிமையும் உள்ளது. ஆனால் அந்த வக்காலத்துப் பதிவில் ஜால்ரா சத்தம் ஜாஸ்தியாக இருக்கிறது என்று சொல்லும் உரிமை எனக்கு இருக்கிறது அல்லவா ? அந்தப் பதில் அபத்தமாக முந்திரிக் கொட்டைத் தனமாக இருக்கிறது என்பதை சுட்டிக் காட்டும் உரிமை எனக்கிருக்கிருக்கிறது அல்லவா? அதைத்தான் நான் செய்தேன். நான் உணர்ச்சி வசப்படத்தான் படுவேன். அது என் உரிமை. உங்கள் பதிலில் விஷயம் இருக்கிறதா என்று பார்த்து அது அபத்தமாகத் தெரிந்ததால்தான் நானும் பதிலடி கொடுத்தேன். உங்களுக்கு பதில் போட உரிமை உள்ளது போலவே உங்கள் பதில் அபத்தம் என்று சொல்லும் உரிமையும், தேவையில்லாமல் மூக்கை நுழைக்காதீர்கள் என்று சொல்லும் உரிமையும் எனக்கும் உண்டு. அதைப் பொருட்படுத்துவதும், படுத்தாததும் உங்கள் இஷ்டம்.


<<
எந்தவொரு ஜாதியையும் நாய்கள் என்று சொல்லுவதை எதிர்க்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன், அந்த வாக்கியத்தை மறுபடி படித்துப் பார்க்கவும். //தனிப்பட்ட முறையில் எந்தவொரு ஜாதியைத் திட்டுவதிலும் எனக்கு உவப்பில்லை// - தனிப்பட்ட முறையில் என்பது, 'என் பார்வையில் எந்த ஜாதியைத் திட்டுவதிலும் எனக்கு உவப்பில்லை' என்பதைக் குறிக்கிறது. ஒரு பிராமணனைத் திட்டுவதற்குப்பதில் பத்து பிராமணர்களைத் திட்டினால் அது உவப்பாக இருக்கிறதா என்று குதர்க்கமாகக் கேட்கிறீர்கள் - இந்தளவு ஒரு வார்த்தையைத் தோண்டுவீர்கள் என்று நான் எதிர்பார்த்திருக்க என்ன முகாந்திரம் இருக்கிறது? இதை நீங்கள் நம்பலாம், நம்பாமல் போகலாம் - நான் சொல்லவந்தது அந்த அர்த்தத்தில் - அவ்வளவுதான்.
>>

நம்புகிறேன். முழுமையாக நம்புகிறேன். நான் ஏன் குதர்க்கமாக கேள்வி எழுப்பினேன் என்று ஏற்கனவே முதல் பாராவிலேயே சொல்லி விட்டேன் அடுத்த விஷயத்துக்குப் போகலாமா ?

<<
நேரடியாக என் பெயரைச் சொல்லி, நான் சொல்வது தவறு, பிறர் சொல்வது சரி என்று வாதிட்டிருந்தால், ஏதும் ஆபாசம் இல்லையென்றால் என்னால் இயன்றவரை பதிலுக்கு விளக்கம் கொடுக்கவோ திருத்திக்கொள்ளவோ முயற்சித்திருப்பேனே தவிர, பொத்திக்கிட்டுப் போய்யா என்று நிச்சயம் சொல்லியிருக்கமாட்டேன். மேலும், நான் நாட்டாமை செய்வதாக ஏதும் எனக்குத் தோன்றவில்லை. பொதுவில் வைக்கப்பட்ட ஒரு பின்னூட்டம் குறித்த என் கருத்து. அவ்வளவே.
>>


விளக்கத்துக்கு மிக்க நன்றி. உங்கள் பெருந்தன்மை மெச்சத் தகுந்தது. எனது கருத்தை அபத்தம் என்று குறிப்பிட்டதால் நீங்கள் நாட்டாண்மை செய்வதாக நான் கருதினேன். அப்படி எதுவும் செய்யவில்லையென்றால் மகிழ்ச்சியே.

<<
உங்கள் உணர்வுகளை மதிக்கிறேன்.
>>

நன்றி

<<
இங்கே ஏதும் பின்னூட்டம் இடாமல் வெறுமனே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்து தலையிடி ஏதும் இல்லாமலிருக்க எனக்கு எவ்வளவு நேரம் ஆகும்? உங்கள் உணர்வுகளை மதித்துச் சொன்னதையும்தான் திரிக்கிறீர்கள் - முதலில் 'சொல்லவந்த கருத்தைப் பார்க்காமல் சொன்னவனின் பின்புலத்தைப் பார்க்காதே' என்று உங்களைக்குறித்து நீங்கள் உணர்த்த விரும்பும் கருத்தை உங்களைக் குறித்துக் கருத்துக் கூறுபவர்களுக்கும் பிரயோகியுங்கள், மிச்சத்தை அப்புறம் பார்க்கலாம். இந்த tag விஷயம் குறித்து உங்கள் பின்னூட்டம் மூலம்தான் முதலில் அறிந்தேன், என் எதிர்ப்பைப் பதிவு செய்தேன் - அவ்வளவுதான்.
>>

ஏன் குதர்க்கமாகக் கேட்டேன் என்று ஏற்கனவே பதில் சொல்லி விட்டேன். எனது கேள்வி உங்களை மிகவும் பாதித்து விட்டது போலும் மீண்டும் மீண்டும் அந்த ஒரு விஷயத்தையே சுத்தி சுத்தி வருகிறீர்கள். சமீபத்தில் செக்கு மாடு எதற்கும் வைத்தியம் பார்த்தீர்களோ ? :))


<<
இந்த விஷயத்தில் கூறப்படும் இன்னொரு குற்றச்சாட்டு, ஆபாச மறுமொழிகளைத் தவிர்க்க மட்டுறுத்தல் செய்ய தமிழ்மணம் நிர்ப்பந்தித்தபோது, டோண்டு போன்றவர்கள் தாக்கப்பட்டபோது மட்டுறுத்தல் நிர்ப்பந்திக்கப்படவில்லை, ஆனால் காசி தாக்கப்பட்டபோது மட்டும் மறுமொழி மட்டுறுத்தல் நிர்ப்பந்திக்கப்பட்டது என்பது. பிராமணர்கள் மீதான தாக்குதல் என்பதில் இது திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறதென்று நினைக்கிறேன். போலியாக ஆபாசப் பின்னூட்டமிடுபவர்களுக்கு நாகரீக உலகில் இடமில்லை என்பதுதான் என் கருத்தும். டோண்டு ஆபாசமாகத் தாக்கப்படுமுன் அதுபோன்று அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்துகொண்டிருந்ததே தவிர, தொடர்ச்சியாக ஆபாசப் பின்னூட்டங்களால் யாரும் தாக்கப்பட்டிருக்கவில்லை. அது நிகழ்ந்துகொண்டிருந்தபோது டோண்டுவும் காசியும் சென்னையில் சந்தித்ததாக காசியின் (அல்லது டோண்டுவின் - நினைவில்லை) வலைப்பதிவில் படித்திருக்கிறேன். அதன்பிறகுதான் காசி மீதான போலி டோண்டுவின் தாக்குதல்கள் தொடங்கின என்று நினைக்கிறேன். பல இடங்களில் கண்ணில் பட்ட காசி மீதான் போலி டோண்டுவின் தாக்குதல்களில் 'என்ன தைரியமிருந்தால் டோண்டுவுடன் காப்பி வடை சாப்பிடுவே, நீ என்ன பாப்பார அடிவருடியா' என்ற ரீதியில் கழிசடையான தாக்குதல்கள் வரத்தொடங்கின. அதைத்தொடர்ந்து/அதே காலகட்டத்தில் பெண் பதிவர்களின் வலைப்பதிவுகளில், முகமூடி போன்றவர்களின் வலைப்பதிவுகளிலும் தாக்குதல்கள் வரத்தொடங்கியதை தொடர்ந்து வலைப்பதிவுகளைப் படித்து வரும் அனைவரும் அறிவார்கள். ஆக, இது அனைத்தும் நிகழ்ந்த ஒரு கட்டத்தில் தமிழ்மணம் பின்னூட்ட மட்டுறுத்தலை நிர்ப்பந்தித்ததென்று நினைக்கிறேன். ஆக, பிராமணர்களுடன் பேசிப் பழகியதற்காக பாப்பார அடிவருடி என்று போலி டோண்டுவால் கழிசடை மொழியில் காசியின் குடும்பத்தினரைக் குறித்து கேவலமான மொழியில் தாக்கப்பட்ட காசியை அல்லது தமிழ்மண நிர்வாகத்தை இன்றைக்குப் பிராமண எதிர்ப்பாளர்(கள்) என்று வெகு நாசூக்காகக் கட்டம்கட்ட முயலுவது சமீபத்தில் நான் கண்ட பெரும் நகைமுரண். அதை எதிர்த்து என் குரலைப் பதிவுசெய்யவேண்டுமென்று நினைக்கிறேன், செய்கிறேன் - அவ்வளவுதான்
>>

சன்னாசி இந்த விஷயம் குறித்து சற்று நான் நிதானமாகப் பேச வேண்டும். நிறைய நேரம் எடுக்கும் உங்களுக்குப் புரிந்து கொள்ள. இந்த விஷயத்தில் ஆரம்பம் முதலே பாதிக்கப் பட்டவர்களில் நானும் ஒருவன். இந்த பிரச்சினையின் முடி முதல் அடி வரை எனக்குத் தெரியும். உங்களுக்கு இது குறித்து அதிகம் தெரியாது என்பது உங்கள் பதிலைப் படிக்கும் பொழுதே தெரிகிறது. நான் நேரடியாக சம்பந்தப் பட்டவன். பாதிக்கப் பட்டவன். நீங்கள் பாதசாரி, ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்தவர். நாம் இருவருக்கும் நிறைய வேறு பாடு உண்டு இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரை. நான் மேலே போனால் உங்களுக்கும் உங்கள் ஆப்த நண்பர்களுக்கும் கசப்பாக இருக்கும், இருந்தாலும் உண்மை கசக்கத்தானே செய்யும் ? தொடரவா?


1. முதலில் டோண்டு மட்டும் அல்ல, நான் உட்பட மாயவரத்தானும், எஸ் கேயும் இன்னும் ஒரு சில பிராமண பதிவர்களும் அந்த கபோதியால் கடுமையாகத் தாக்கப் பட்டோம். டோண்டு பல முறை காசியிடமும், தனது பதிவிலும் தொடர்ந்து முறையிட்டார். எஸ் கே போன்றவர்கள் மனம் நொந்து போயினர். அது எல்லாம் காசிக்கு நன்றாகவே தெரியும், இருப்பினும் காசி அமைதி காத்தார். ஏன், எரியும் கொள்ளியில் எண்ணெயைக் கொட்டியது போல் எந்த ஆபாச நாய் டோண்டுவைத் தாக்கியதோ அதே ஆபாச் நாயையை, அவன் தான் அதைச் செய்கிறான் என்று டோண்டு போன்றவர்கள் குறிப்பிட்ட பின்னரும் கூட, கொஞ்சம் கூட கூசாமல் தமிழ் வலையுலகின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவராக அறிவித்தார். அப்படி அறிவித்த பல பிற நட்சத்திரங்களும் வெளிப்படையான பிராமண வெறுப்பாளர்களே. இது நகை முரணா? சொல்லுங்கள் சன்னாசி உங்கள் மனசாட்சியைக் கேட்டுச் சொல்லுங்கள். என்னைப் போன்றவர்களுக்கு தமிழ் மணத்தின் உள் நோக்கத்தின் மீது சந்தேகம் வருமா வராதா? அப்படி ஒரு சந்தேகம் வந்தால் அதில் நியாயம் இருக்குமா இருக்காதா ?


2. டோண்டு கரடியாகக் கத்திய பின்னும் ஒவ்வொரு கூட்டத்திலும் கெஞ்சிக் கேட்டக் கொண்ட பொழுதும் மட்டுறத்தல் காசியால் அறிவிக்கப் படவில்லை. ஆனால் காரணமே சொல்லாமல் குசும்பன், சின்னவன் போன்றோர் நீக்கப் பட்டனர். ஆபாசப் பேர்வழி மட்டும் தமிழ் மணத்தில் தொடர்ந்து வந்தான். அவன் போக இன்னும் பல பதிவர்களால் கடுமையான பார்ப்பன எதிர்ப்பு மிக மிகக் வேவலமான முறையில் தமிழ் மணத்தில் தொடர்ந்தன. நீங்கள் கூறலாம் அது எழுத்துச் சுதந்திரம் அதனால் காசி அவற்றை நீக்க வில்லை என்று. ஒத்துக் கொள்கிறேன், ஏன் அதே எழுத்துச் சுதந்திரம் குசும்பனுக்கும், சின்னவனுக்கும், அரவிந்தன் நீலகண்டனுக்கும் வழங்கப் படவில்லை ? ஏன் நீக்கப் பட்டார்கள் ? பார்ப்பன வெறுப்பை உமிழ்வதையே தொழிலாகச் செய்த பதிவர்கள் நம்பிக்கை நட்சத்திரமாகத் தெரிந்தார்கள், வளர்க்கப் பட்டார்கள். ஆனால் இன்னும் ஒரு சிலரோ காரணமே சொல்லாமல் நீககப் பட்டனர். இன்று வரை பி எஸ்ஸ¤ம், குசும்பனும் கேட்டும் பதில் வரவில்லை. உங்களைப் போன்ற கைத்தடிகளும் அர்த்தமுள்ள அமைதி காக்கின்றீர்கள். ஆக உண்மையிலேயே தமிழ் மணத்திற்கு பிராமணத் துவேஷம் கிஞ்சித்தும் இல்லையென்றால், நீங்கள் கூறுவது போல அப்படி எவ்வித உள்நோக்கமும் கிடையாது என்றால், டோண்டு போன்றவர்கள் முதன் முதலில் கோரிக்கை வைத்த பொழுதே அந்த ஆபாசப் பேர்வழியை நீக்கியிருக்கலாமே, ஏன் செய்யவில்லை ? அதற்கு நான் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாதா ? அது தவறா ? கூறுங்கள் சன்னாசி, உங்களுக்கெல்லாம் மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அதனிடம் கேட்டுக் கூறுங்கள்.


3. உங்களது மேலான, நியாயவான் கருத்துப் படி டோண்டுவும் இன்னும் ஒரு சிலரும் (அவர்களும் பிராமணர்களாக இருந்த படியால்) மட்டுமே தாக்கப் பட்டதால் காசி நடவடிக்கை எடுக்க வில்லை அப்படித்தானே ? தாக்கப் பட்டது ஒருவராக இருந்தால் கூட முறையிட்ட வுடன் நடவடிக்கை எடுத்திருந்தால் அல்லவா அவர் நடுநிலைவாதி ? நியாயவான் ? ஏன் காலம் தாழ்த்தினார் ? அதற்குப் பதிலும் உங்கள் நண்பர் கார்த்திக் ரமாஸே சொல்லுகிறார். டோண்டுவுக்கு நன்றாக வேண்டும் என்றும் டோண்டுவை ஆபாசமாகத் தாக்குவது தேவைதான் என்றும் கூறுகிறார். அப்படியானால் டோண்டுவைத் தாக்கினால் சரி, அவருக்கு வேண்டும் ஏனென்றால் அவர் ஒரு பார்ப்பனர். அவர் எப்படிக் கெஞ்சினாலும் கண்டு கொள்ள மாட்டோம். இந்த வக்கிர புத்திக்கு உங்களைப் போன்றவர்களின் வக்காலத்து வேற வெட்கமாக இல்லை ? கேவலமாக இல்லை ?


4. அடுத்து அதே ஆசாமி காசியின் மீதும் தன் பார்வையைத் திருப்புகிறான். சிஙகப்பூர் வாழ் கண்ணியமான பெண் எழுத்தாளர்களை மிக மிகக் கேவலமாக தன் பதிவிலேயே எழுதுகிறான், அப்பொழுதுதான் காசி அவனை நீக்குகிறார். நன்றாக கவனிக்கவும் டோண்டு கேட்டுக் கொண்டதால் செய்யவில்லை. தான் பாதிக்கப் பட்டதும் இன்னும் ஒரு நபர் காசியிடம் கேட்டக் கொண்டதும் செய்கிறார். மறுக்கிறீர்களா? நான் உங்களுக்கு சவால் விடுகிறேன், மறுக்க முடியுமா ? நான் இதைச் சொல்லவில்லை, காசியே டோண்டுவின் பதிவில் ஒத்துக் கொள்கிறார். 'எங்களுக்கெல்லாம் சுய புத்தியே கிடையாதா, நீங்கள் சொல்லிதான் நாங்கள் எடுக்க வேண்டுமா, நாங்களாகத்தான் எடுத்தோம்' என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார். ஆக டோண்டு கேட்டுக் கொண்டதாலோ, பிராமணர்கள் அசிங்கமாகத் தாக்கப் படக்கூடாது என்ற அக்கறையினாலோ நடவடிக்கை எடுக்க வில்லை என்று அவரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த பின்னர் நீர் யாரைய்யா அண்ணாவி ? ஆக டோண்டு தாக்கப் பட்டால் கண்டு ரசிப்பார்கள், எஸ் கே தாக்கப் பட்டால் ஆனந்தம் அடைவார்கள், நன்றாக வேண்டும் என்று கார்த்திக் போன்ற வக்கிரம் பிடித்த பிறவிகள் கெக்கலிக் கொட்டிக் சிரிப்பார்கள், மாயவரத்தான் தாக்கப் பட்டால் ஸ்வீட் சாப்பிடுவார்கள், ஆனால் இறுதியாக காசியே தாக்கப் பட்டால் அவனை நீக்கினார்கள், மட்டுறுத்தம் கொண்டு வந்தார்கள். நீங்கள் சொல்வது போல் டோண்டுவின் வேண்டுகோள் படி நடவடிக்கை எடுத்திருந்தாலோ, மாயவரத்தான் வேண்டுகோள் படி நடவடிக்கை எடுத்திருந்தாலோ, அல்லது எஸ் கே யின் வருத்தத்தின் படி நடவடிக்கை எடுத்திருந்தாலோ நான் இன்று உங்களுடன் சேர்ந்து வரவேற்றிருப்பேன். உள்நோக்கம் கற்பித்திருக்க மாட்டேன். இதை நான் மட்டும் சொல்லவில்லை, கல்வெட்டும் நேரடியாகவே கேட்டார். இன்று வரை பதில் வரவில்லை. போதுமா இன்னும் வேண்டுமா ?


5. எனக்கு காசி மீதும் அவர் குடும்பத்தின் மீதும் ஆபாச தாக்குதல் நடத்தியது குறித்து கடும் கோபமும், ஆத்திரமும் உண்டு. நெஞ்சில் எனக்குத் தோன்றும் கடுமையான கோபத்தையும் வார்த்தைகளால் என்னால் விவரிக்க இயலாது. எனக்கு கருத்து வேறு பாடுகள் இருப்பினும் காசியை ஒரு கண்ணியம் மிகுந்த நண்பராகத்தான் கருதுகிறேன். காசியின் குடும்பம் மீது தாக்கப் பட்டதன் வலி நானும் அறிவேன், நானும் அதே விதத்தில் தாக்கப் பட்டுள்ளேன். காசியின் மீதான பதிவுகள் குறித்து இன்றும் நான் கடும் வேதனையும் ஆத்திரமும் அடைந்து வருகிறேன். எனக்கும் ஒரு பெண் குழந்தை உண்டு. அதற்காக அவனை தண்டிப்பதற்காக காசியுடனோ வேறு யாருடன் வேண்டுமானாலும் போராடத் தயாராக இருக்கிறேன். இதை நான் பிரகாஷ் போன்றவர்களிடம் சொல்லியும் இருக்கிறேன். மேலும் இது குறித்து என்னால் பொதுவில் பேச முடியாது. காசி காலம் தாழ்ந்து நடவடிக்கை எடுத்தாலும், முந்தைய தவறுகளை மறந்து அவரை நான் வரவேற்கிறேன். ஆனால் ஒரு ஆபாச ஆசாமி மட்டுமே அகற்றப் பட்டுள்ளான், அவனுக்கே வேறு பெயரிலும், அவனைப் போன்ற பிற வக்கிர மிருகங்களுக்கு தமிழ் மணம் இன்று வரை இடம் அளித்து வருகிறது. அங்குதான் நான் தமிழ் மணத்தின் நோக்கங்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது என்று குற்றம் சாட்டுகிறேன். ஒரு குசும்பனை நீக்கியவரால், ஒரு சின்னவனை நீக்கியவரால், ஒரு ஜாதியை மட்டுமே அசிங்கமாக விவரித்து எழுதும் பதிவர்களை காசியால் நீக்க முடியாதா? ஏன் செய்ய வில்லை ? ஆக அவருக்கோ பிற நிர்வாகிகளுக்கோ இதில் வஞ்சகமான எண்ணம் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். என்னைப் போன்றவர்களின் அச்சத்தை, சந்தேகத்தைப் போக்க தமிழ் மணம் என்ன செய்யப் போகிறது ? அதனால்தான் குறிச்சொல்லில் 'பாப்பார நாய்கள்' என்று பார்க்கும் பொழுது என்னைப் போன்றவர்களின் அச்சம் மேலும் வலுப் பெறுகிறது. இது குறித்து நீங்கள் யாரேனும் வெளிப்படையாகப் பேசத் தயாரா ? தமிழ் மணத்தில் ஒரு நாளில் வரும் பதிவுகளைப் படித்துப் பாருங்கள், எத்தனை இடங்களில், எத்தனைப் பதிவுகளில், எத்தனை பின்னூட்டங்களில் ஒரு ஜாதியினர் மட்டுமே மீண்டும் மீண்டும் கேவலப் படுத்தப் படுகின்றனர், அச்சுறுத்தப் படுகின்றனர் என்பதை நீங்களே படித்துப் பாருங்கள். இதையெல்லாம் தமிழ மணம் ஓரளவுக்கு கட்டுப் படுத்த இயலாதா, முடியும் ஆனால் மனம்தான் இல்லை.


நாசூக்காக எல்லாம் கட்டம் கட்டவில்லை இப்பொழுது நேரிடையாகவே கட்டம் கட்டிச் சொல்லுகிறேன். எனது குற்றசாட்டுகள் உங்களுக்கு அபத்தமாகத் தோன்றலாம் ஏனென்றால் பாதிக்கப் படுபவர் நீங்கள் அல்ல. தலை வலியிம் திருகு வலியும் தனக்கு வந்தால்தான் தெரியும். என் உணர்வுகள் உங்களுக்குப் புரியப் போவதேயில்லை. வேறு வேறு காரணங்கள் சொல்லி பதிவை இழுத்து மூடி விட்டுச் சென்றவர்கள் நீங்கள் அல்ல. அருண் வைத்தியநாதனிடமும், பா ராகவனிடமும், வெங்கடேஷிடமும் தனியாகப் பேசிப் பாருங்கள் அவர்களின் காயப் பட்ட உணர்வுகள் புரியும். இனிமேலாவது இது போன்ற உணர்வு சார்ந்த பிரச்சினைகளுக்கு வக்காலத்து வாங்க வருமுன் ஒரு முறைக்கு இரு முறை ஆழ்ந்து சிந்தித்து விட்டு , பாதிக்கப் பட்டவர்களின் மன நிலை அறிந்த பின் வாருங்கள். நான் இவ்வளவு எழுதியும் உங்களுக்கு என் காயப் பட்ட உணர்வுகள் புரியவில்லை என்றால் என்னால் இதற்கு மேல் விளக்க முடியாது. நான் இது நாள் வரை வெளியில் சொல்லாமல் வைத்திருந்த குமுறல்களை சொல்ல வைத்து விட்டீர்கள். இதற்கு மேல் உங்கள் மனசாட்சியுடன் பேசிக் கொள்ளுங்கள்


எனது பதிலுக்கு வரிக்கு வரி பதில் சொன்ன நீங்கள் ஒரு முக்கியமான கேள்விக்கு மட்டும் பதில் சொல்லாமல் விட்டது ஏன்? அதை மட்டும் வசதியாக மறந்தது ஏன்? ஏன், அதற்கு உங்களிடம் வசதியான மறு மொழி ஏதும் இல்லையா ? ஒரு வேளை அவசரத்தில் மறந்து விட்டீர்களா ? அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக நம்பி மீண்டும் கேட்கிறேன்.


நான் உங்கள் கூகுள் உதாரணத்துக்கும் தமிழ் மண குறிச்சொல் நிலமைக்கும் உள்ள வேறு பாட்டைச் சுட்டிக் காட்டி உங்களிடம் கேட்டிருந்தேன். எனக்கு பின்னால் எழுதிய முகமூடியும் அதே கேள்வியை எழுப்பி இருந்தால் உங்களிடமிருந்து பதிலே இல்லையே ஏன்? கூகுளில் நீங்களாகச் சென்று தேடாமல் தானாகவே தலைப்பிலேயே, முகப்பிலேயே ' பாப்பார நாய்கள் ' என்ற ஏச்சு வராது, ஆனால் தமிழ் மணத்தில் நான் தேடாமலேயே, நான் கேட்க்காமலேயே என்னைத் திட்டுவது போல் அசிங்கமாக வருகிறது அதைத்தான் நான் ஆட்சேபித்தேன். ஆனால் நீங்கள் மேதாவி போல வந்து கூகுளில் வரவில்லையா என்று அபத்தமாக சம்பந்தேமே இல்லாமல் உளறலான ஒரு சால்ஜாப்பை ரொம்ப சாமர்த்தியமாகக் கேட்பதாக நினைத்துக் கொண்டு முட்டாள்த்தனமாகக் கேட்டிருந்தீர்கள். இல்லை ஐயா இரண்டும் வேறு வேறு என்று நான் விவரித்த பின்னும், முகமூடி தெளிவாக்கிய பின்னும் உங்களிடமிருந்து அதற்கு மட்டும் ஒரு அர்த்தமுள்ள மொளனம் ஏன் ? நான் குதர்க்கமாக கேட்ட ஒரு கேள்வியை ஒவ்வொரு பாராவிலும் பிடித்துத் தொங்கிய உங்களால் நான் எழுப்பிய ஒரு நியாயமான கேள்விக்கு மட்டும் வசதியாக எப்படி பதில் கொடுக்க மறக்கிறது. அதைத்தான் செலக்டிவ் அம்னீஷியா என்று சொல்லுகிறார்களோ ? சொல்லுங்கள் சன்னாசி.

நீங்கள் ஒரு அனானி. நீங்கள் யாராலும் தாக்க படுவது கிடையாது. உங்கள் அடையாளங்களைத் தெரிவித்திராத நிலையில், நீங்கள் இங்கு வந்து தேவையில்லாமல் ஆஜர் ஆகி தமிழ் மணத்துக்கு சப்போர் செய்து எனது உணர்வுகளை கொச்சைப் படுத்துவதை பார்க்கும் பொழுது நீங்களும் மனதுக்குள் ஒரு பார்ப்பன வெறுப்பாளாராக இருப்பீர்களோ என்றவொரு சந்தேகம் எனக்கேற்பட்டதன் காரணமாகவே எனது பதிலும் கடுமையான தொரு தொனியில் அமைந்திருக்கிறது. எப்படி, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பாதிக்கப் பட்ட தலித்துக்களுக்கு வேறு ஜாதிக்காரர்கள் அனைவரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் உரிமை உள்ளது என்று திலகவதி கூறுகிறாரோ அது போல, தமிழ் மணத்தில் தொடர்ந்து ஆபாசமான முறையில் தாக்கப் பட்டவர்களுக்கு உங்களைப் போன்றவர்களின் சாதாரணக் கேள்விகள் கூட சந்தேகத்தையும், கடுப்பையும் கிளப்பக் கூடும் என்பதில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு எனது பதிலை எடுத்துக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.


மற்றவர்களின் பதில்களுக்கும், முகமூடி தருமி குறித்துக் கேட்டிருந்த கேள்விக்கும் அடுத்த பதிலில் வருகிறேன், என்னிடம் இன்னும் கேட்கப் பட வேண்டிய பல கேள்விகள் மிச்சம் உள்ளன. அனைவரும் Please Stay Tuned.



அன்புடன்
ச.திருமலை
 



'thamizmanam cannot take action against comments, it can act upon blogs only' was discussed in July 2005. Because, at that time there is no way comments can be moderated.

see: http://buzz.blogger.com/2005/11/comment-moderation.html
Blogger introduces comment moderation in November 2005, several months later. In fact, after all that darma adi on Kasi was served in October.

Thamizmanam was revamped and rereleased in Jan 2006, and in the new version, comment moderation could be enforced, not as a rule, but as a requirement for 'comment status update display' only. Still there are 400 odd blogs that do not moderate comments.

-An observer who has not lost his objectivity yet:-), but fear of losing it given the kind of people wandering in this post.
 



//ஒரு வேளை அவசரத்தில் மறந்து விட்டீர்களா ? அப்படித்தான் இருக்க வேண்டும் என்று நான் மனப்பூர்வமாக நம்பி மீண்டும் கேட்கிறேன்.//

திருமலை, முகமூடி அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததால் அதைப்பற்றி மேலும் ஏதும் சொல்லவில்லை. தானாக இட்டுத் தேடுவது என்பது நீங்கள் குறிப்பிட்டதைவிட வித்தியாசமானதுதான் என்பதை ஒத்துக்கொள்கிறேன் - ஆனால், அது இட்டுச்செல்லும் பதிவு என்று நீங்கள் குறிப்பிட்ட பொட்டீக்கடை அம்மாதிரி கீழ்த்தரமான வார்த்தையைக்கொண்டு அப்பதிவை tag செய்திருக்க மாட்டார் என்று நானும் நம்புகிறேன். குறிப்பிட்ட பதிவுக்கு இட்டுச்செல்லும் வார்த்தைகள் பதிவின் context உடன் தொடர்பில்லாமலும் இருக்கலாம் என்றுதான் நான் உணர்த்த விரும்பியது. ஏதோ சிண்டு முடியும் நோக்கமுள்ள போலிகள் செய்த வேலை இது என்பதுதான் என் அபிப்ராயம். இதில் முகமூடியின் பதிவும் டோண்டுவின் பதிவும் வந்து விழுந்தது தற்செயலான ஒன்று. இதில் செலக்டிவ் அம்னீஷியா என்று எதுவும் இல்லை. மேலும், இப்போது அந்த ஆட்சேபகரமான வார்த்தைகள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.

உங்களது விரிவான பதிலுக்கு நன்றி. இந்தமாதிரிச் சிக்கலான விஷயத்தில் நீங்களோ நானோ வேறு யாரோ கூறும் கருத்துக்களின் அனைத்துக் கோணங்களையும் அனைவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது என்ற அடிப்படையில்தான் நான் உங்களுக்குப் பதிலளிக்க முயன்றது. குறிப்பிட்ட ஜாதியை நாய்கள் என்று திட்டுவது கண்டிக்கப்படவேண்டியது என்ற உங்கள் வாதத்தை முழுதாக ஒத்துக்கொள்கிறேன் என்று பலமுறை சொல்லியாகிவிட்டது, இப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிவைத்துத் தமிழ்மணம் தாக்குகிறது என்ற உங்கள் வாதத்தை ஒத்துக்கொள்ளமுடியவில்லை. இதேபோன்று நான் சொல்லும் அனைத்திலும் உங்களுக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம் - ஒப்புதல் இல்லாததைக் குறித்து என்னாலியன்ற அளவு விளக்க முடிகிறேன் - அவ்வளவுதான் முடியும். என்னைத் தாக்கியிருந்தால் தெரியும் என்கிறீர்கள் - என் wordpress வலைப்பதிவில் blacklisted ஐ.பி நம்பர்கள் குறிக்கப்பட்டு, 'முகமூடி, திருமலைராஜன் போன்ற' என்று தொடங்கும் வழக்கமான தாக்குதல் பின்னூட்டங்கள் (மஞ்சமாக்கான், வெங்காயம் வேர்க்கடலை சுண்டைக்காய் வெண்டைக்காய் என்று உங்களுக்குத் தெரியாததா இந்தப் பெயர்கள்?) பல முடக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கின்றன. அதை அவ்வப்போது பொதுஜனத்துக்கு எடுத்துச்சொல்லி எடுத்துச்சொல்லி என்னையும் 'நடுநிலைமைவியாதி' என்று காட்டிக்கொள்ள வேண்டுமா என்ன? இங்கே திருமலைக்கு 'எதிர்த்து'க் கருத்து சொல்கிறேன், அங்கே அவரைத் தாக்கி வரும் பின்னூட்டங்களை அடக்குகிறேன் - இப்படித்தான் இருக்கவேண்டும் நாட்டுல என்று சிந்து பாடவேண்டுமா என்ன?

என்னை யாரும் ஏன் தாக்கவில்லை என்று எனக்கும்தான் தெரியவில்லை. தே மா புளி மா, உன் பெண்டாட்டியை, உன் மம்மியை ........... என்று இவனையும் நாலு பொளி பொளித்தால்தான் 'மப்பு' தெளியும் என்ற நோக்கத்துடன் போலிகள் யாருக்காவது எனக்கு விளக்கப்பாடம் எடுக்கும் நோக்கம் இருப்பின் என் பின்னூட்டப் பெட்டியில் வந்து, அங்கே இருக்கும் என் வேண்டுகோளையும் படித்துவிட்டு, விருப்பமிருப்பின் என்னைக்குறித்து வண்டி வண்டியாகத் தங்கள் மூளை நரகலைக் கழிந்துவிட்டுப் போகலாம், அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கையில் நீக்கிக்கொள்கிறேன். எத்தனையோ வேலை பார்த்தாயிற்று, தோட்டி வேலையும் சேர்த்துப் பார்த்துவிடுகிறேன். இதில் பிற பதிவர்களை இழுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளத்தான் முடியும்.

அப்புறம் கடைசியாக இந்த செக்குமாட்டு வைத்தியம் குறித்து ;-). இது மாதிரி பல பிட்டுகளைப் போடலாம், ரொம்ப சுலபம் - வெறிநோய்க்குத் தடுப்பூசி போடுவது, கம்பவுண்டர் ஸ்டைலில் டோப்பாஸ் பிளேடு ரெண்டு மில்லி டிஞ்சர் அயோடின் ஊசிநூல் வைத்துக்கொண்டு நாய்க்கு விரைநீக்கம் செய்வது என்று அங்கதப் பசுவில் லோட்டா லோட்டாவாகப் பால் கறந்து ஊருக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுக்கலாம். இங்கே விவாதிக்கப்படும் விஷயம் குறித்த நியாயமான அக்கறை இருப்பதால்தான் எனக்குப் பட்டதையும் சொல்கிறேன், ஏதோ தமாஷுக்கோ தடபுடலுக்கோ இல்லை - குறைந்தபட்சம் இதையாவது உணர்ந்தீர்களெனில் நல்லது.

மற்றபடி, உங்களது, இதுபோன்று ஆபாசத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிறரது மனக்குமுறல்கள் மீது மரியாதையின்றி ஏதோ வறட்டு வாதம் பேசுபவனாக மட்டும் உங்களுக்கு நான் பட்டால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஜாதி, மதம் குறித்த என் பார்வை வேறானதென்று இதுவரை நான் சம்பாதித்துள்ள நட்புகளைவிடப் பெருமளவு மனத்தாங்கல்கள், எதிரிகள் மூலமே அறிந்து வந்திருக்கிறேன் - மேலும் சிலரை சம்பாதித்துக்கொள்வதில் எனக்குப் பெரிய வருத்தம் ஏதும் இருக்கப்போவதில்லை. நான் 'பிராமண ஜாதிக்கு எதிரியோ' என்று தாராளமாகச் சந்தேகம் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு - ஆம் இல்லை என்ற இரண்டில் ஒரு பதிலை நீங்கள் என்னிடமிருந்து எதிர்பார்த்தீர்களானால் - இல்லை என்பதுதான் பதில். அதுவேதான் எந்தவொரு ஜாதிக்கும்.
 



"என்னை யாரும் ஏன் தாக்கவில்லை என்று எனக்கும்தான் தெரியவில்லை. தே மா புளி மா, உன் பெண்டாட்டியை, உன் மம்மியை ........... என்று இவனையும் நாலு பொளி பொளித்தால்தான் 'மப்பு' தெளியும் என்ற நோக்கத்துடன் போலிகள் யாருக்காவது எனக்கு விளக்கப்பாடம் எடுக்கும் நோக்கம் இருப்பின் என் பின்னூட்டப் பெட்டியில் வந்து, அங்கே இருக்கும் என் வேண்டுகோளையும் படித்துவிட்டு, விருப்பமிருப்பின் என்னைக்குறித்து வண்டி வண்டியாகத் தங்கள் மூளை நரகலைக் கழிந்துவிட்டுப் போகலாம், அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கையில் நீக்கிக்கொள்கிறேன். எத்தனையோ வேலை பார்த்தாயிற்று, தோட்டி வேலையும் சேர்த்துப் பார்த்துவிடுகிறேன். இதில் பிற பதிவர்களை இழுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளத்தான் முடியும்."
போலி பிரச்சினையை பற்றி நீங்கள் புரிந்து கொண்டது இவ்வளவுதானா? அவன் உங்கள் பெட்டிக்கு வந்து உங்களைத் திட்டுவது ஜுஜுபி. அவன் செய்வது என்னவென்றால் உங்களைப் போலவே ஐ.டி. உருவாக்கி, மற்றவர் பதிவுகளில் போய் உங்கள் பெயரில் மற்றவர்களைத் திட்டுவான். போய் போலி காசி, போலி டோண்டு, போலி மாயவரத்தான் (எல்லோரும் ஒருவரே, அவரும் யார் என்பது எல்லோருக்கும் தெரியும்) ஆகியோரது பதிவுகளில் போய்ப் பாருங்கள், விஷயம் புரியும்.

உங்கள் போட்டோ, உங்கள் குடும்பத்தார் போட்டோ எல்லாவற்றையும் போட்டு சந்திக்கு இழுப்பான். திருமலை அவர்கள் கூறியது முக்கியமாக அதைப் பற்றி.

பொட்டீக்கடையின் அந்தப் பதிவுக்கு அவ்வாறு லிங்க் எப்படி வந்திருக்க முடியும் என்று யோசித்தால் ஒரு விஷயம் புலப்படுகிறது. அதை பொட்டீக்கடை செய்யவில்லை என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டால், ஒன்று நிச்சயமாகிறது. அவர் அப்பதிவை வகைப்படுத்தாது விட்டிருக்க வேண்டும், அம்மாதிரி நிலையில் வேறு யார் வேண்டுமானாலும் வகைப் படுத்த முடியும், அச்சமயத்தில் இணைப்புச் சொற்களையும் உருவாக்கியிருக்க முடியும். அவ்வாறு வக்கிரமாகச் செய்யக் கூடியவர் தமிழ்மணத்தில் ஒருவரே, அதுதான் போலி டோண்டு. குறைந்த பட்சம் வகைபடுத்தாது தன் பதிவை விடுவது carelessness தான்.

இப்பின்னூட்டத்தை உண்மையான டோண்டுதான் இட்டான் என்பதைக் காண்பிக்கும் வகையில் அதன் நகலை என்னுடைய "முரட்டு வைத்தியம்-4" என்ற பதிவிலும் பின்னூட்டமாக இடுவேன், பார்க்க: http://dondu.blogspot.com/2006/05/4.html

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



mugamoodi,

thalaippu SUPER ;-)
 



//போலி பிரச்சினையை பற்றி நீங்கள் புரிந்து கொண்டது இவ்வளவுதானா? //

டோண்டு ஐயா: புரிந்துகொள்வது இவ்வளவா அவ்வளவா என்பது முக்கியமில்லை - மேலும் எந்தெந்த முறைகளில் இப்படித் தாக்குதல் நடக்கிறதென்பதும், நீங்கள் குறிப்பிட்ட சாத்தியங்கள் அனைத்தும் தொடர்ந்து வலைப்பதிவைப் படித்து வருபவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றே - இவ்வளவு சிறிதுதான் என்றாலும் எவ்வளவு பெரிது என்றாலும் அப்படிப்பட்ட குதர்க்க, ஆபாச வழிமுறைகள் அனைத்தும் கண்டிக்கப்படவேண்டியது, ஒழிக்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்பதை நான் உட்பட, சுயபுத்தியுள்ள அனைவரும் ஒத்துக்கொள்வார்கள் என்பதைத் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன் - இங்கே நான் சொல்லவந்தது அதுதான். போலி டோண்டுவாக உங்களை ஆபாச மொழியில் தாக்கியது யார் எவர் என்று உங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருந்து, ஆதாரபூர்வமாக, சட்டபூர்வமாக நிரூபிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசாமி அல்லது ஆசாமிகள் தண்டிக்கப்பட்டால் எனக்கும் மகிழ்ச்சிதான். புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கு இது குறித்து எத்தனை எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டாலும் தவறில்லை. 'ஒருவரே என்பது அனைவருக்கும் தெரியும்' போன்ற ஹேஷ்யங்களை விடுத்து, பெயர் தெரிந்தால் பொதுவில் சொல்வது அனைவருக்கும் நல்லது. பொதுவில் சொல்ல இயலவில்லை என்றால், அதுவும் தேவையில்லை - நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைத்தும் வெளியில் வருகையில் தெரிந்துகொள்ளலாம், ஏதும் அவசரமில்லை.

நான் இங்கே கூற வந்த விஷயம், 'தமிழ்மணம் வேண்டுமென்றே பிராமண எதிர்ப்பாளர்களை ஊக்குவிக்கிறது, நட்சத்திரப் பதிவாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அப்படிப்பட்டவர்களே' என்ற தவறான கருத்தை எதிர்த்துக் கருத்துக் கூறவே. அது உண்மையென்றால், உங்களை எப்படி இருமுறை நட்சத்திரப் பதிவாளர் ஆக்கியிருக்க முடியும் என்றும் எனக்கு விளங்கவில்லை!! எனக்குத் தெரிந்து, வேறு யாரும் இருமுறை நட்சத்திரப் பதிவாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக நினைவில்லை - அப்படிப் பார்த்தால், உங்களை இரண்டு முறை நட்சத்திரப் பதிவாளராகத் தேர்ந்தெடுத்ததால் தமிழ்மணம் பிராமண ஆதரவு தருகிறது என்று கூறமுடியுமா? நட்சத்திரப் பட்டியலில் போய்ப் பாருங்கள் டோண்டு சார் - வெளிகண்ட நாதர் இந்த வார நட்சத்திரம் - பெரும்பாலும் சினிமா தொடர்பான சுவாரஸ்யமான பதிவுகளாக எழுதிக்கொண்டிருக்கிறார் - அவரது பதிவுகளில் துவேஷம் எங்கே இருக்கிறது? 'வாட்டர்' திரைப்படம் குறித்த பதிவில்கூட 'இந்த விதவைகளை ஒதுக்கிவைப்பதெல்லாம் பிராமண சமுதாயத்தில் மட்டுமா நடக்கிறது?' என்று கேட்டிருக்கிறார் - அவரும் பிராமண எதிர்ப்பாளரா அப்போது? பத்ரி, வெங்கட் போன்றவர்களும்தான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் - அவர்களும் பிராமண எதிர்ப்பாளர்களா அப்போது? செல்வன், ரோசாவசந்த், மணியன், நந்தன், இட்லிவடை, முத்து, பாலு மணிமாறன், வன்னியன், ஆசீப் மீரான், மரபூர் ஜெய சந்திரசேகரன், சுகா, பொட்டீ கடை, 'அங்குமிங்கும்' சித்தார்த், ஸ்ருசல் இவர்கள் சமீபத்தைய நட்சத்திரங்கள் என்று பட்டியல் சொல்கிறது - இவர்கள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட ஜாதியை எதிர்ப்பவர்களா என்ன? இந்த விஷயத்தில் ஆபாசப் பின்னூட்டமிடும் போலி ஆசாமிகள் குறித்த எதிர்ப்புக்கான எனது ஆதரவு எவ்வளவு நியாயமானதோ, அதேயளவு இந்தத் தவறான கருத்து குறித்தான எனது எதிர்ப்பும் நியாயமானதென்று நினைக்கிறேன். அவ்வளவுதான்.
 



சன்னாசி

<<
திருமலை, முகமூடி அளித்த விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்ததால் அதைப்பற்றி மேலும் ஏதும் சொல்லவில்லை. தானாக இட்டுத் தேடுவது என்பது நீங்கள் குறிப்பிட்டதைவிட வித்தியாசமானதுதான் என்பதை ஒத்துக்கொள்கிறேன் - ஆனால், அது இட்டுச்செல்லும் பதிவு என்று நீங்கள் குறிப்பிட்ட பொட்டீக்கடை அம்மாதிரி கீழ்த்தரமான வார்த்தையைக்கொண்டு அப்பதிவை tag செய்திருக்க மாட்டார் என்று நானும் நம்புகிறேன். குறிப்பிட்ட பதிவுக்கு இட்டுச்செல்லும் வார்த்தைகள் பதிவின் context உடன் தொடர்பில்லாமலும் இருக்கலாம் என்றுதான் நான் உணர்த்த விரும்பியது. ஏதோ சிண்டு முடியும் நோக்கமுள்ள போலிகள் செய்த வேலை இது என்பதுதான் என் அபிப்ராயம். இதில் முகமூடியின் பதிவும் டோண்டுவின் பதிவும் வந்து விழுந்தது தற்செயலான ஒன்று. இதில் செலக்டிவ் அம்னீஷியா என்று எதுவும் இல்லை. மேலும், இப்போது அந்த ஆட்சேபகரமான வார்த்தைகள், பட்டியலிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறது.
>>


எங்கள் விளக்கத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி. இதை சென்ற பதிலிலேயே சொல்லியிருந்தால் நான் உங்களிடம் அவ்வளவு தூரம் செலக்டிவ் அம்னீஷியாவையெல்லாம் துணைக்கழைத்து கேள்விகள் எழுப்பியிருக்க நேர்ந்திருக்காது. உங்களுக்கு பொட்டீக்கடை நெருக்கமான நண்பர் போலிருக்கிறது. அவர் சொல்லியிருக்க மாட்டார் என்று உறுதியாக அவருக்காக உங்களால் வக்காலத்து வாங்க முடிகிறது. நான் இவ்வளவு சொன்ன பொழுதும் இது வரை தமிழ் மணத்தில் இருந்து முறையாக யாரும் வந்து, அது தவறுதான் அல்லது தவறு இல்லை, எப்படி அது நடந்தது, இனி நடக்காமல் இருக்க என்ன செய்துள்ளோம் என்றெல்லாம் எதுவும் சொல்லவில்லை. நீங்கள் ஒருவர் மட்டும் மீண்டும் மீண்டும் வந்து அவர் அப்படி செய்திருக்க மாட்டார், இவர் இப்படி நினைத்திருக்க மாட்டார் என்று எல்லோருக்கும் ஸ்போக்ஸ்பெர்ஸன் போல் வந்து வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அவரது பதிவுகளையும் பின்னூட்டங்களையும் படித்த என்னைப் போன்ற பாதிக்கப் பட்டவர்களுக்கு அவ்வாறு நிச்சயமாக நினைக்க முடியவில்லை. அதனால்தான் சொன்னேன் இந்த விஷயத்தில் பாதிக்கப் பட்டவர்களின் என்னைப் போன்ற பார்வையும் வேடிக்கைப் பார்க்கும் உங்கள் பார்வையும் வேறு வேறு என்று. நான் ஆயிரம் தரம் சொன்னாலும் உங்களால் என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது என்பது உங்களின் பதிலிலில் இருந்து மீண்டும் ஒரு முறை தெரிகிறது. நீங்கள் போலியின் வேலை என்று அபிப்பிராயப் படுகிறீர்கள். ஆனால் இன்று தமிழ் வலையுலகில் எழுதும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் அந்த போலிக்கும் நெருங்கிய தொடர்பு
உண்டும் என்றும் அவர்களால் அவனை யாரை வேண்டுமானாலும் தாக்கச் செய்ய முடிகிறது அல்லது அவர்கள் சொன்னால் அவனை நிறுத்த வைக்க முடிகிறது என்பது எனது சந்தேகம். சந்தேகம் என்ன புடலங்காய் சந்தேகம் ? எனது அசைக்க முடியாத குற்றசாட்டு.


<<
உங்களது விரிவான பதிலுக்கு நன்றி. இந்தமாதிரிச் சிக்கலான விஷயத்தில் நீங்களோ நானோ வேறு யாரோ கூறும் கருத்துக்களின் அனைத்துக் கோணங்களையும் அனைவராலும் ஏற்றுக்கொள்ள இயலாது என்ற அடிப்படையில்தான் நான் உங்களுக்குப் பதிலளிக்க முயன்றது. குறிப்பிட்ட ஜாதியை நாய்கள் என்று திட்டுவது கண்டிக்கப்படவேண்டியது என்ற உங்கள் வாதத்தை முழுதாக ஒத்துக்கொள்கிறேன் என்று பலமுறை சொல்லியாகிவிட்டது, இப்படி ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிவைத்துத் தமிழ்மணம் தாக்குகிறது என்ற உங்கள் வாதத்தை ஒத்துக்கொள்ளமுடியவில்லை. இதேபோன்று நான் சொல்லும் அனைத்திலும் உங்களுக்கு ஒப்புதல் இல்லாமல் இருக்கலாம் - ஒப்புதல் இல்லாததைக் குறித்து என்னாலியன்ற அளவு விளக்க முடிகிறேன் - அவ்வளவுதான் முடியும். என்னைத் தாக்கியிருந்தால் தெரியும் என்கிறீர்கள் - என் wordpress வலைப்பதிவில் blacklisted ஐ.பி நம்பர்கள் குறிக்கப்பட்டு, 'முகமூடி, திருமலைராஜன் போன்ற' என்று தொடங்கும் வழக்கமான தாக்குதல் பின்னூட்டங்கள் (மஞ்சமாக்கான், வெங்காயம் வேர்க்கடலை சுண்டைக்காய் வெண்டைக்காய் என்று உங்களுக்குத் தெரியாததா இந்தப் பெயர்கள்?) பல முடக்கப்பட்டு நீக்கப்பட்டிருக்கின்றன. அதை அவ்வப்போது பொதுஜனத்துக்கு எடுத்துச்சொல்லி எடுத்துச்சொல்லி என்னையும் 'நடுநிலைமைவியாதி' என்று காட்டிக்கொள்ள வேண்டுமா என்ன? இங்கே திருமலைக்கு 'எதிர்த்து'க் கருத்து சொல்கிறேன், அங்கே அவரைத் தாக்கி வரும் பின்னூட்டங்களை அடக்குகிறேன் - இப்படித்தான் இருக்கவேண்டும் நாட்டுல என்று சிந்து பாடவே
டுமா என்ன?
>>

என்னைப் பற்றி உங்கள் பதிவுக்கு வரும் அவதூறுகளை அவ்வப் பொழுது நீக்குகிறேன் என்று சொல்லியுள்ளீர்கள். உங்களுக்கு எப்படி நன்றி கூறுவது என்றே தெரியவில்லை ? உங்கள் காலுக்கு செருப்பாக மாறினாலும் என்னால் அந்த நன்றிக் கடன்களை திருப்பி அடைக்க முடியாது. ஏனோ உங்களைப் போல கண்ணியமான அணுகுமுறையும், பெரிய மனசும் தமிழ் மணத்தில் தங்கமான மணி தர்கள் பலருக்கு இல்லை. அது போன்ற ஈனத் தனமான வசவுகளை சிறிது நேரமாவது வைத்து அழகு பார்க்கும் ஈனப் பிறவிகளும், அவன் இவன் என்ற ஏக வசனத்தை மட்டும் மாற்றி அதே வசவுகளை திருத்தி பதிக்கும் இழி பிறப்புகளும் உங்கள் நண்பர்களில் இருக்கிறார்கள். கேட்டால் வால் மார்ட் போனேன், காஸ்ட்கோ போனேன் என்று ஆதாரம் காட்டுவார்கள் அந்த வக்கிரம் பிடித்த ஜென்மங்கள். இப்பொழுது கூட என்னை நாய் என்று அழைக்கும் ஒரு பின்னூட்டத்தை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறார் ஒரு பெருந்தகை.

<<
என்னை யாரும் ஏன் தாக்கவில்லை என்று எனக்கும்தான் தெரியவில்லை. தே மா புளி மா, உன் பெண்டாட்டியை, உன் மம்மியை ........... என்று இவனையும் நாலு பொளி பொளித்தால்தான் 'மப்பு' தெளியும் என்ற நோக்கத்துடன் போலிகள் யாருக்காவது எனக்கு விளக்கப்பாடம் எடுக்கும் நோக்கம் இருப்பின் என் பின்னூட்டப் பெட்டியில் வந்து, அங்கே இருக்கும் என் வேண்டுகோளையும் படித்துவிட்டு, விருப்பமிருப்பின் என்னைக்குறித்து வண்டி வண்டியாகத் தங்கள் மூளை நரகலைக் கழிந்துவிட்டுப் போகலாம், அதைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கையில் நீக்கிக்கொள்கிறேன். எத்தனையோ வேலை பார்த்தாயிற்று, தோட்டி வேலையும் சேர்த்துப் பார்த்துவிடுகிறேன். இதில் பிற பதிவர்களை இழுக்கவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளத்தான் முடியும்.
>>

உங்களை அவன் தாக்கவும் மாட்டான். உங்களை ஏன் சார் அவன் அசிங்கமா எழுதப் போறான் ? நீங்க பார்ப்பனரா ? இல்லை அவர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டிப்பவரா? அல்லது இந்திய தேசியத்தை ஆதரித்து எழுதுபவரா? யார் நீங்கள்? அப்படியே உங்களுக்கு ஆசை என்றால் அவனை நிறுத்தச் செய்யவும், அவனது செயல்களுக்கு நியாயம் கற்பித்து அவனை மீண்டும் ஆரம்பிக்கச் சொல்லவும், போலியை ரிமோட் கண்ட்ரோல் செய்ய்யும் அளவுக்கு சர்வ வல்லமை படைத்த அதிகாரிகளைக் கேட்டால் உங்களையும் செல்லமாக திட்ட வைக்கும் ஒரு நாடகத்திற்கு ஏற்பாடு பண்ணித் தருவார்கள். ஆகவே உங்கள் வேண்டுகோளுக்கு அப்ளிகேஷன் போட வேண்டிய இடம் இதுவல்ல, மத்தியஸ்தம் பண்ணும் ஆட்களிடம் போய் கேளுங்கள் ஏற்பாடு செய்வார்கள். அப்புறமாக நீங்களும், "பார்த்தீர்களா என்னையும் திட்டினான்" என்று சொல்லிக் கொள்ளலாம். உங்கள் நண்பர்களை அவன் தாக்காததும் மட்டுமல்லாமல் அவர்களைப் புகழ்வதையும் படித்தாலே யார் யார் கூட்டுக் களவாணிகள் என்பது தெரிகிறதே. அவன் யாரை யாரைத் தாக்க வேண்டும் என்று பட்டியல் போட்டுக் கொடுத்துத் தாக்க வைக்கிறார்கள் என்பதையும் நான் அறிவேன். ஆகவே கவலைப் படாதீர்கள் நீங்கள் பார்ப்பனராகவோ அல்லது அவர்கள் மீது நடக்கும் ஆபாசத் தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து கண்டிக்காதை வரையிலும் அல்லது அப்படி ஒன்றுமே நடக்கவில்லையென்று (உங்களது பதிலைப் போல) சாதிக்கும் வரையிலும் உங்களை யாரும் தாக்க மாட்டார்கள். தி க காரர்கள் எலக்ஷன் நேரங்களில் அக்ரகாரங்களில் சென்று பாம்பை விட்டும், சோடா பாட்டில் அடித்து அவர்களை ஓட்டுச் சாவடி பக்கம் போகாதவாறு மிரட்டுவார்கள், பூணூல் அறுப்பது போன்ற பல ரவுடித்தனங்களை நடத்தி மிரட்டுவதும் அவர்களுக்கு பொழுது போக்கு. அது போல இன்று தமிழ் இணையத்தில் யா
¡வது எழுத முயன்றாலே அவர்களை ஆபாசமாக மிரட்டும் உத்திகளும் பதிவுகளும்தான் நடந்து வருகின்றன. அதை என்னைப் போன்றவர்கள் சுட்டிக் காட்டிக் கண்டிக்கும் பொழுதெல்லாம் உங்களைப் போன்றவர்கள் வந்து ஒன்றுமே நடக்கவில்லையென சாதிப்பதும் அதைத் தொடர்ந்து கடுமையான ஆபாசத் தாக்குதல் தொடர்வதும் இன்று நேற்றா நடக்கிறது ? என்னை அழிவு சக்தி என்று வசை பாடவும், சாபம் இடவும் ஒரு பெரிய கும்பலே திரிகிறதே. என் பெயரை வைத்து ஒரு நாடகம் இனி அரங்கேறும். நடக்கட்டும், நடக்கட்டும். உங்கள் பதில் எதிர்பார்த்ததுதான்.


<<
அப்புறம் கடைசியாக இந்த செக்குமாட்டு வைத்தியம் குறித்து ;-). இது மாதிரி பல பிட்டுகளைப் போடலாம், ரொம்ப சுலபம் - வெறிநோய்க்குத் தடுப்பூசி போடுவது, கம்பவுண்டர் ஸ்டைலில் டோப்பாஸ் பிளேடு ரெண்டு மில்லி டிஞ்சர் அயோடின் ஊசிநூல் வைத்துக்கொண்டு நாய்க்கு விரைநீக்கம் செய்வது என்று அங்கதப் பசுவில் லோட்டா லோட்டாவாகப் பால் கறந்து ஊருக்கெல்லாம் காப்பி போட்டுக் கொடுக்கலாம். இங்கே விவாதிக்கப்படும் விஷயம் குறித்த நியாயமான அக்கறை இருப்பதால்தான் எனக்குப் பட்டதையும் சொல்கிறேன், ஏதோ தமாஷ¤க்கோ தடபுடலுக்கோ இல்லை - குறைந்தபட்சம் இதையாவது உணர்ந்தீர்களெனில் நல்லது.
>>

நீங்கள் எனது குதர்க்கக் கேள்வியையே திருப்பி திருப்பி ஒரு பெரிய பிரச்சினையாக்கிக் கேட்டுக் கொண்டே இருந்ததனால் நான் விளையாட்டாக உங்கள் பணியுடன் தொடர்புடைய ஒரு உதாரணத்தைக் காட்டி லைட்டர் சென்ஸில் கேட்ட கேள்வியையை இப்படி சீரியசாக எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள், பரவாயில்லை, நான் சொல்லிய உதாரணம் குறித்து எனக்கு ஏதும் வருத்தம் கிடையாது, நான் தவறாக எதையும் சொல்லவும் இல்லை.. மற்றபடி டிஞ்சர், அயோடின், விரை நீக்கம் இதிலெல்லாம் எதுவும் உள்குத்து இருக்கிறதா என்பது தெரியவில்லை, இருந்தாலும் அவை பற்றியெல்லாம் எனக்கு கவலையுமில்லை. இதை விட பல மடங்கு வெளிக்குத்துக்களையே நான் அன்றாடன் சந்தித்து வருபவன்.

<<
மற்றபடி, உங்களது, இதுபோன்று ஆபாசத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட பிறரது மனக்குமுறல்கள் மீது மரியாதையின்றி ஏதோ வறட்டு வாதம் பேசுபவனாக மட்டும் உங்களுக்கு நான் பட்டால் அதற்கு என்னால் ஒன்றும் செய்ய இயலாது. ஜாதி, மதம் குறித்த என் பார்வை வேறானதென்று இதுவரை நான் சம்பாதித்துள்ள நட்புகளைவிடப் பெருமளவு மனத்தாங்கல்கள், எதிரிகள் மூலமே அறிந்து வந்திருக்கிறேன் - மேலும் சிலரை சம்பாதித்துக்கொள்வதில் எனக்குப் பெரிய வருத்தம் ஏதும் இருக்கப்போவதில்லை. நான் 'பிராமண ஜாதிக்கு எதிரியோ' என்று தாராளமாகச் சந்தேகம் கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு - ஆம் இல்லை என்ற இரண்டில் ஒரு பதிலை நீங்கள் என்னிடமிருந்து எதிர்பார்த்தீர்களானால் - இல்லை என்பதுதான் பதில். அதுவேதான் எந்தவொரு ஜாதிக்கும்.
>>

எனக்கு அப்படிதான் படுகிறது சன்னாசி. ஏதோ ஒரு முறை சொன்னால் இரு முறை சொன்னால் இப்பொழுது டோண்டுவுக்கும் வந்து பதில் சொன்னதைப் பார்க்கும் பொழுது எங்கள் உணர்வுகள் ஒரு பொருட்டே இல்லாதது போல, தமிழ் மணத்தில் அப்படி எதுவுமே நடப்பது இல்லை என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சாதிப்பதைப் பார்க்கும் பொழுது, உங்கள் உள்நோக்கத்திலும் எனக்கு சந்தேகமே உள்ளது. நான் அவ்வளவு உதாரணங்களைத் தந்த பொழுதும் (இன்னும் கூட ஒரு வண்டி தர இயலும்) அது ஒன்றுக்காவது ஒரு குறைந்தபட்ச அனுசரணையுடன் தவறுதான் என்று ஒத்துக் கொள்ளும் மனப்பாங்கு கூட உங்களுக்கு இல்லை என்பதைப் பார்க்கும் பொழுது உங்கள் மனசாட்சியையும் பிராமண எதிர்ப்பு என்று வெறி பிடித்து அலையும் ஒரு கும்பலுக்கு அடமானம் வைத்து விட்டீர்களோ என்றுதான் தோன்றுகிறது. எனக்கு ஒரு குறிப்பிட்ட ஜாதியின் மீதான ஆபாசத் தாக்குதலை விட அதை ஆதரிக்கும் கும்பலின் சீழ் பிடித்த மனநிலையையும், ஆட்டிடியூடும்தான் மிகுந்த வேதனை அளிக்கிறது. அதைத்தான் நான் மீண்டும் மீண்டும் கண்டிக்கிறேன். இந்த உண்மையைச் சொல்லுவதால் நான் தீய சக்தியாகத் தெரிந்தால் அப்படியே இருந்து விட்டுப் போகிறேன். எனது குற்ற சாட்டுக்களைத் திசை திருப்பும் நாடகங்களும், என் மீது தாக்குதல்களும் அரங்கேறும் என்பதை அறிந்தேதான் சொல்லுகிறேன். இப்பொழுது தேவை இது போன்ற காயப் பட்ட உணர்வுகளை எப்படி ஆற்றுவது என்பதுதான், ஆனால் நடப்பவையோ அதற்கு எதிர்மறையாக நடக்கின்றன. எதிர்ப்பார்த்தவைதான் அதற்காக என் மனக் காயங்களை அதிக நாட்கள் பூட்டி வைத்திருக்க இயலாது.


நான் தமிழ் மணத்தை அபவாதமாகச் சொல்லி விட்டேன் என்று நியாய உணர்வு கொண்டு பொங்கி, வெகுண்டு உங்களது தார்மீக எதிர்ப்பை இங்கே காட்டுகிறீர்கள். தர்ம, நியாயம் குறித்த உங்கள் உணர்வு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது. என்ன ஒரு நியாயவான் என்னே ஒரு நீதிபதி. அது சரி, என்றைக்காவது ஒரு நாள் தமிழ் மணத்தில் அன்றாடம் பிராமணர்களை எதிர்த்தும் ஆபாசமாக திட்டியும், கடுமையாக நிந்தித்தும் வரும் ஏதாவதொரு பதிவில் என்றாவது ஒரு நாள் போய் உங்கள் நியாய உணர்வுகளைக் காண்பித்தது உண்டா? ஒரு உதாரணம் கொடுக்க இயலுமா ? அப்புறம் என்ன இங்க மட்டும் வந்து நியாய அநியாயம் பேசுகிறீர்கள் ? அப்படி என்றைக்காவது அது போன்ற வக்கிரங்களையெல்லாம் அவர்கள் பதிவிலும் போய் கண்டித்து விட்டு இங்கு வந்து என்னிடம் நியாய அநியாயங்கள் குறித்துப் பேசுங்கள், நானும் காது கொடுத்துக் கேட்கிறேன். அது வரை காழ்ப்புணர்வையை உயிர் விஷ மூச்சாக விட்டு வாழும் மிருகங்களுக்கு வாக்காலத்து வாங்கு ஒரு வறட்டு வாதம் பேசும் ஒரு அடியாளாகத்தான் என்னால் உங்களைக் கருத முடியும், அப்படிச் சொல்ல எனக்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது, என்ன செய்வது உண்மை அப்படித்தானே இருக்கிறது ?


மற்றொன்று,டோண்டுவுக்கான உங்கள் பதில் குறித்து. நீங்கள் அவருக்குத்தான் கேள்வி எழுப்பியுள்ளீர்கள் என்றாலும் எனது குற்றசாட்டின் அடிப்படையில் அந்தக் கேள்விகள் அமைந்துள்ளதால் நானும் பதில் சொல்ல வேண்டியது அவசியம் என்று நினைக்கிறேன்.


முதலில் நீங்கள் ஏதோ சாமர்த்தியமாக மடக்குவதாக நினைத்துக் கொண்டு டோண்டு இரண்டு முறை நட்சத்திரமாக இருந்தாரே என்றெல்லாம் புள்ளி விபரம் அடுக்கி அந்த நட்சத்திரங்களா பிராமண விரோதிகள் என்றெல்லாம் கேள்வி கேட்டுள்ளீர்கள். உங்கள் தர்க்கங்களைப் பார்க்கும் பொழுது ஒன்று விளங்குகிறது, நீங்க்ள் எதையுமே அரைகுறையாகப் புரிந்து கொண்டு, அரை வேக்காட்டுத்தனமாக விவாதம் செய்கிறீர்கள் என்பது. கூகுள் உதாரணம் ஒன்று இப்பொழுது நட்சத்திர உதாரணம். முதலில் நான் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று காசி குறிப்பிட்டதாகக் கூறியது, இந்த வாரா வார நட்சத்திரங்களை அல்ல. நான் சொன்னதை நன்கு படித்துப் பாருங்கள். முன்பு ஒரு முறை ஏதோ டைம்ஸ் மாகசின் டாப் 100 லிஸ்டு போல இவர்கள் எல்லோரும் வருங்காலத்தில் தமிழ் வலை உலகின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று அறிவித்திருந்தார். நான் குறிப்பிட்டது அந்த நம்பிக்கை நட்சத்திரங்களை, நீங்கள் குறிப்பிடுவது வாரா வார நட்சத்திரங்களை, கேள்வியில் என்ன இருக்கிறது என்பதை நன்கு படித்து விட்டு பதில் அளிக்க வரவும். அவசரம் ஒன்றும் இல்லை. தமிழ் உலகில் பிராமண வெறுப்பு என்பது இன்று நேற்று நடப்பது அல்ல. அது நீங்களோ நானோ அவசரமாகப் பேசித் தீர்த்தவுடன் முடியப் போவதும் அல்ல. இந்த உலகம் உள்ள வரை தொடரப் போகும் ஒரு மன நோய் அது. ஆகவே நிதானமாக தர்க்கம் செய்யுங்கள் என்கிறேன். மற்றபடி வாரா வார நட்சத்திரங்களில் எல்லோரும் அல்ல என்றாலும் பலரும் கடுமையான வெளிப்படையான வெ
ப்பாளர்கள்தான் அதில் எனக்கு எந்த சந்தேகமும் கிடையாது, ஏன் அவர்களே ஒத்துக் கொள்வார்கள், இதில் நீங்கள் என்ன சால்ஜாப்பு சொல்வது ?


மற்றொன்று டோண்டுவிடம் அந்தப் போலி டோண்டுவின் உண்மையான பெயரை ஏன் எழுதவில்லை என்கிறீர்கள். என்னவோ விரலைக் கொடுத்தால் கடிக்கும் பச்சப் பிள்ளை போல ஏதோ இன்றைக்குதான் தமிழ் மணத்துக்கே புதுசா வந்தவர் போலக் கேட்டிருக்கிறீர்கள். நானோ, டோண்டுவோ தாராளமாகச் சொல்லலாம்தான், ஏற்கனவே பெயரைச் சொல்லியுள்ளோம்தான், பெயரைச் சொல்லுவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. இங்கு முகமூடி அனுமதித்தால் நான் தாராளமாகச் சொல்லுகிறேன். சந்தேகம் இருந்தால் மத்தியஸ்தம் செய்த ஆட்களிடமோ, அவனிடம் லிஸ்டைக் கொடுத்து அடி என்று ஏவி விடும் உங்கள் நண்பர்களிடமோ, காசியிடமோ, பிரகாஷிடமோ தாராளமாகக் கேட்டு உறுதி படுத்திக் கொள்ளலாம். அவன் தான் போலி டோண்டு, வெங்காயம், மஞ்சமாக்கான்,கருப்பு, கசுமாலம் என்று இன்னும் எத்தனையோ இழிபெயர்களில் எழுதிக் கொண்டிருக்கிறான். இதை எங்கு வேண்டுமானாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் நான் சொல்லத் தயார். ஆனால் சொன்னவுடன் ஆதாரம் கேட்பீர்கள், அதையெல்லாம் போலீஸிடம் கொடுக்கிறோம் உங்களிடம் கொடுக்க முடியாது என்று சொன்னால், உடனே அப்ப அது நீதான் என்று என் மீதே குற்றசாட்டைத் திருப்புவீர்கள். நீங்கள் என்றால் சன்னாசி அல்ல. தமிழ் மணத்தில் பார்ப்பன வெறுப்பு என்ற வெறியையையே சுவாசக் காற்றாக சுவாசித்துக் கொண்டிருக்கும் வெறி பிடித்த கேடு கெட்ட மிருகங்களைச் சொல்லுகிறேன். இதற்கு முன்பு இதே கூத்து நடந்துள்ளது. ஒருவர் டோண்டுவிடம் அவருக்கும் ப்ளாகருக்கும் நடந்த
மின்னஞ்சல் தொடர்புகளைக் கேட்டு அதைத் தர அவர் மறுத்ததால் அவர் தான் போலி டோண்டு என்று அபாண்டமாக அவர் மீதே பழியைத் திருப்பும் முயற்சியும் நடந்தது. அவருக்கே இதைச் செய்வது யார் என்று தெரியும் அல்லது காசியிடமோ, பிரகாஷிடமோ கேட்டு உறுதி படுத்திக் கொண்டிருக்கலாம், அதையெல்லாம் விட்டு விட்டு டோண்டுவின் மீதே திசை திருப்ப முயன்றதைதான் நான் பார்ப்பன வெறுப்பு என்று நான் குறிப்பிட்டேன். இன்னும் தீரா விடக் கருங்காலிகள், கருப்பு , சிவப்பு என்று எத்தனையோ தமிழ் மணப் பதிவுகள் இதையே முழு நேரத் தொழிலாகச் செய்து வருகின்றன. அதையெல்லாம் தடுக்க தமிழ் மணம் எவ்வித முயற்சிகளும் எடுத்தது இல்லை. அதையெல்லாம் எடுத்து விட்டு இங்கு வந்து தர்ம நியாயம் குறித்து உபன்யாசம் செய்ய வாருங்கள்.


சன்னாசி நான் எத்தனைதான் சொன்னாலும் நீங்கள் மீண்டும் மீண்டும் நீங்கள் சொல்ல வந்ததைதான் சொல்லப் போகிறீர்கள். பாதிக்கப் பட்டவர் நீங்கள் அல்லர். நீங்கள் எதுவேண்டுமானாலும் பேசலாம். நடப்பதையெல்லாம் முழுக்க அறிந்த எனக்கு தான் உண்மை தெரியும். நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் வக்காலத்து வாங்கிக் கொள்ளுங்கள். கவலையில்லை. நான் எடுத்து வைத்த குற்றசாட்டுக்களை வெளிப்படையாக விவாதிக்கத் தயாரா என்று கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லை. அதில் உள்ள நியாயங்களை ஒத்துக் கொள்ளும் குறைந்த பட்ச நேர்மை கூட உங்களிடம் இல்லை. இதற்கு மேலும் நாம் இருவரும் இப்படியே பேசிக் கொண்டிருப்பது இருவரின் மற்றும் படிப்பவரின் நேர விரயமே.
நியாயம் பேசவும் ஒரு யோக்கியதை வேண்டும், முதலில் அதை சம்பாதித்துக் கொண்டு வாருங்கள், காத்திருக்கிறேன்.


ச.திருமலை
 



/////அதுல அப்பாவி காஜா ஷெரீஃப் வந்து லஷ்மிகிட்ட ஒரு டயலாக் சொல்வாரு.. லஷ்மி அதுக்கு ஒரு பதில் வசனத்த சொல்லி "ச்சீ போடா"ன்னு மென்மையா சொல்வாங்க... ////

சூப்பர் முகமூடி.... நாம் ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை தான் திங்க் பண்ணி இருக்கோம்..... நானும் உங்கள் பதிவைப் படிச்சிட்டு லஷ்மி சொன்ன வசனத்தை தான் உடனடியா சொன்னேன்.... ஆனா பன்மையிலே..... :-)
 



திருமலை: இவ்வளவு நேரம் செலவழித்து நீங்கள் எழுதும்போது, பதிலுக்கு ஒன்றிரண்டு வரி எழுதாமல் விட்டால் சரியாக இருக்காது. இதுவரை பேசப்படாத, ஆனால் என்னால் பதிலளிக்கவேண்டியதென்று எனக்குத் தோன்றும் சில விஷயங்களுக்குப் பதிலளிக்கிறேன். இதில் நீங்கள் பதிலை எதிர்பார்த்திருக்கக்கூடிய சிலவற்றுக்குப் பதில் இங்கே இல்லையெனில், 'நழுவல்' என்று கூறாமல், தயவுசெய்து சுட்டிக்காட்டவும், அதற்கும் பதிலளிக்க முயல்கிறேன்.

//ஆனால் இன்று தமிழ் வலையுலகில் எழுதும் பல முக்கிய பிரமுகர்களுக்கும் அந்த போலிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டும் என்றும் அவர்களால் அவனை யாரை வேண்டுமானாலும் தாக்கச் செய்ய முடிகிறது அல்லது அவர்கள் சொன்னால் அவனை நிறுத்த வைக்க முடிகிறது என்பது எனது சந்தேகம். சந்தேகம் என்ன புடலங்காய் சந்தேகம் ? எனது அசைக்க முடியாத குற்றசாட்டு.//

'வலையுலகில்' என்ற உங்கள் பதம் உங்களது இந்த வாதத்துக்கு நன்றாகப் பொருந்துகிறது - அதன் அடிப்படையில் உங்கள் வாதத்தில் உண்மையிருக்கலாம் என்று ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை. 'வலையுலகில்' என்பதை எடுத்துவிட்டு 'தமிழ்மணத்தில்' 'தேன்கூட்டில்' 'bloglines'ல் என்று திரட்டிகளின் பெயரைப் போடும்போது வேறு அர்த்தம் வருகிறது என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். வலையுலகில் (web, not Thamizmanam) யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் - அவற்றில் துவேஷம் இருக்கையில் அது தவறென்று கருதும் உங்களைப் போன்றவர்களுக்கு அதைக் கண்டிக்க முழு உரிமையும் உண்டு. இதன் தொடர்ச்சியாக, பிராமணர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்திருக்கிறேனா என்று கேட்டு என் 'அருகதை'யைக் கேள்வி கேட்கிறீர்கள். இருக்கும் நூற்றுக்கணக்கான ஜாதிகளில் பிராமண ஜாதியும் ஏதோவொரு ஜாதி என்ற அடிப்படையில், பிறப்பாலான அடையாளத்தைக்கொண்டு ஜாதி பற்றி எழுதாதபோது அந்த வலைப்பதிவர் மீது அப்படியொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதென்று உணர்ந்த ஒன்றிரண்டு தருணங்களில் 'பிராமண ஜாதி'யைத் தாக்குவது கூடாதென்று சொல்லியிருக்கிறேன். என் பழைய பதிவுகளில் ராமதாஸையும்தான் தாக்கியிருக்கிறேன், இன்றுவரை குழலி போன்றவர்கள் ஏன் என்னை 'வன்னிய ஜாதிக்கு விரோதி' என்று சொல்லவில்லை என்று தெரியவில்லை. கருணாநிதியின் ஜாதீய அரசியல் எனக்கும் உவக்காத விஷயம்தான் - அதையும்தான் என் பழைய பதிவுகளில் விமர்சித்திருக்கிறேன் - இன்னும் ஏன் யாரும் என்னை 'ஊதுவார் ஜாதி விரோதி' என்று சொல்லவில்லை என்றுதான் தெரியவில்லை. கிருஷ்ணசாமி 'சண்டியர்' பெயரை எதிர்த்து சண்டியர்த்தனம் செய்தபோது அதையும் சேர்த்து விமர்சித்திருக்கிறேன் - தலித் விரோதியா நான் அப்போது? உண்மையில் பார்த்தால், இதுவரை நான் என் பதிவுகளில் வெளிப்படையாக விமர்சனம் செய்யாததில் பிராமண ஜாதியும் ஒன்று - இதற்கு உங்கள் பதில் என்ன? ஜாதி பிற இழவு என்று எதையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல் தனிமனிதப் பார்வையில் சரி தவறு என்று ஒவ்வொரு விஷயத்தையும் அதனளவில் ஆராய்ந்து, படுவதைச் செய்வதுதான் என்னால் ஆனது. என் விருப்பமின்றி birth-packageல் வரும் இலவச இணைப்பான என் ஜாதியும்தான் பல முறை பல்வேறு இடங்களில் (வலைப்பதிவுகள் உட்பட) விமர்சிக்கப்பட்டிருக்கிறது, நானேகூட அதன் அனைத்துக் கூறுகளையும் வெறுப்பவனே - இதன் அடிப்படையில்தான் எந்தவொரு ஜாதி மீதான எனது விமர்சனமும் அமையமுடியும் - இதில் நீங்கள் உங்கள் ஜாதியைக் குறித்துக் கேட்கிறீர்கள், நாளைக்கு ஒரு தேவரோ கவுண்டரோ இதே மாதிரி விலாவாரியாக எழுதி 'ஏன் நீ தேவர்கள்/கவுண்டர்கள் மீதான தாக்குதலை எதிர்க்கவில்லை' என்றால் அப்போதும் வலைப்பதிந்து கொண்டிருந்தால் இதேதான் என் பதிலாக இருக்கும்.

//அவன் இவன் என்ற ஏக வசனத்தை மட்டும் மாற்றி அதே வசவுகளை திருத்தி பதிக்கும் இழி பிறப்புகளும் உங்கள் நண்பர்களில் இருக்கிறார்கள்.//

அதுகுறித்து 'அவர்களிடம்' கேளுங்கள். பிறகு, இந்த 'நண்பர்கள்' என்ற பதம் குறித்து: முகமூடி, இதைப்போன்று தன்னைநோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒரு பதிலைச் சொல்வார் - அதையே இங்கே கேட்கிறேன்: என் நண்பர்கள் யார் என்று எப்படி என் பக்கத்திலிருந்து பார்த்த மாதிரிச் சொல்கிறீர்கள்? என் நண்பர்கள் யார் என்று எனக்குச் சுட்டிக்காட்டமுடியுமா? நானும் தெரிந்துகொள்கிறேன். 'திருமலையின் நண்பர்கள்' என்று நானும் கைவீசிய திசையில் சிக்கியவர்களையெல்லாம் போட்டு சந்தேகக் கேஸில் அரஸ்ட் பண்ணி ஒரு கூட்டத்தைக் காட்டி ஹேஷ்யங்களால் பாத்திரத்தை வழிய வழிய நிரப்பவா?

//உங்களை அவன் தாக்கவும் மாட்டான். உங்களை ஏன் சார் அவன் அசிங்கமா எழுதப் போறான் ? நீங்க பார்ப்பனரா ? இல்லை அவர்களுக்கு எதிரான தாக்குதலை கண்டிப்பவரா? அல்லது இந்திய தேசியத்தை ஆதரித்து எழுதுபவரா?//

இந்த 'தாக்குதலை கண்டிப்பவரா' என்பதற்கு என் பதில் - போலி டோண்டுவின் ஆபாசத் தாக்குதல்களைக் கண்டிப்பவனே - ஆம். நான் கேட்டதால்தான் இப்போது ஆம் என்கிறாய், இதற்கு முன் சொன்னதில்லை என்று அடுத்து நீங்கள் சொல்ல முயலுமுன், ஒருமுறைக்கு இருமுறை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து சொல்லவும். இன்னும் தேவையென்றால் சொல்லுங்கள், அங்கங்கே சொல்லியிருப்பதைத் தேடி எடுத்துப் போடமுயல்கிறேன். அதற்குப் பிறகும் 'இவ்வளவுதான் சொல்லியிருக்கிறாய், போலியின் தாக்குதல் எவ்வளவு இருந்தது, அதற்கேற்றமாதிரி இவ்வளவு எதிர்ப்புத் தெரிவித்திருக்கவேண்டாமோ' என்று கேட்க ஆரம்பிக்குமுன், அதில் ஏதும் நியாயம் இருக்கிறதா என்றும் கேட்கவும்.

இந்திய தேசியத்தை ஆதரித்து எழுதுபவரா? - இது சிக்கலான கேள்வி. விரிவாகத்தான் சொல்லவேண்டும். இந்திய தேசியம் என்பது குறித்து உங்களுக்கு இருக்கும் கண்ணோட்டங்களும் எனக்கு இருக்கும் கண்ணோட்டங்களும் வேறுபடலாம். ஒன்றுபட்ட இந்தியா என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு, அதற்காக ஒரே மொழி, ஒரே மத ஆதிக்கம், ஒரே கலாச்சாரம் என்ற காலாவதியாகிப்போன ஐரோப்பிய nation-state கருத்தாக்கத்தின் வழி வரும் சொம்படிகளிலெல்லாம் உடன்பாடில்லை என்ற என் கருத்தை இதற்கு மேல் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் பிறிதோர் தருணத்தில் சொல்கிறேன். ஆக, மேற்கண்ட கேள்விகளில் பின்னிரண்டுக்குப் பதில் சொல்லியாயிற்று. நீங்க பார்ப்பனரா என்ற கேள்வி இங்கே அர்த்தமற்றது என்பதை இப்பின்னூட்டத்தின் தொடக்கத்தில் சொல்லியிருக்கிறேன்.

//ஏதோ ஒரு முறை சொன்னால் இரு முறை சொன்னால் இப்பொழுது டோண்டுவுக்கும் வந்து பதில் சொன்னதைப் பார்க்கும் பொழுது எங்கள் உணர்வுகள் ஒரு பொருட்டே இல்லாதது போல,//

உங்களுக்கு நான் இட்ட பின்னூட்டத்தில் ஒரு மேற்கோளை எடுத்துப் போட்டு, போலி டோண்டு பற்றி உங்களுக்குத் தெரிந்தது இவ்வளவுதானா என்று கேள்வியை என்னைநோக்கி எழுப்பியது டோண்டு. அவருக்கு நான் அளித்த பதில் பின்னூட்டம் அது - அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமலிருப்பதுதான் உங்கள் உணர்வுகளை மதிப்பது என்ற உங்கள் வாதம் எனக்குப் பிடிபடவில்லை - மன்னிக்கவும்.

//தமிழ் மணத்தில் அப்படி எதுவுமே நடப்பது இல்லை என்று நீங்கள் மீண்டும் மீண்டும் சாதிப்பதைப் பார்க்கும் பொழுது, உங்கள் உள்நோக்கத்திலும் எனக்கு சந்தேகமே உள்ளது.//

மேற்கண்டதன் தொடர்ச்சியாக நீங்கள் எழுதியுள்ள இவ்வாக்கியங்களில் 'தமிழ்மணத்தில்' என்பதற்குப் பதில் 'வலையுலகில்' என்று எழுதியிருந்தால் அதில் ஆட்சேபிக்க எதுவும் இல்லை. தமிழ்மணம் என்பது தேன்கூடு போல, bloglines போல ஒரு திரட்டி என்பதைப் பலர் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். புகார் அளிக்கப்பட்டு, இந்த விஷயம் தொடங்கக் காரணமான வார்த்தையை அவர்களது பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் - இதற்குமேல் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது? ஆனானப்பட்ட கூகிளிலேயே tiananmen square என்று போட்டு அதன் அமெரிக்க வலைத்தளத்திலும் சீன வலைத்தளத்திலும் image searchல் எப்படித் தகவல்கள் திரிக்கப்படுகிறதென்று பார்க்கவும் - ஆஃப்டர் ஆல் ஆயிரம் பேர் தமிழில் எழுதும் ஒரு சாதாரணத் திரட்டியை நிர்வகிக்கும் நாலைந்து மனிதர்கள், புகார் வந்தபின் ஆட்சேபகரமான அந்த வார்த்தைகளை நீக்கியபின்னரும் குற்றம் சொல்லிக்கொண்டுஇருந்தால் எப்படி. என் உள்நோக்கத்தில் சந்தேகம் இருக்கிறது இருக்கிறது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்வதன்மூலம்தான் உங்களது கருத்தை நிலைநிறுத்திக்கொள்ளமுடியுமென்று நீங்கள் நம்புவீர்களாயின் - அப்படியே ஆகட்டும். You're trying to reinforce a preconceived notion of yours, and I can do little to help in this regard. Suit yourself.

//முதலில் நான் நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று காசி குறிப்பிட்டதாகக் கூறியது, இந்த வாரா வார நட்சத்திரங்களை அல்ல. நான் சொன்னதை நன்கு படித்துப் பாருங்கள். முன்பு ஒரு முறை ஏதோ டைம்ஸ் மாகசின் டாப் 100 லிஸ்டு போல இவர்கள் எல்லோரும் வருங்காலத்தில் தமிழ் வலை உலகின் வருங்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் என்று அறிவித்திருந்தார். நான் குறிப்பிட்டது அந்த நம்பிக்கை நட்சத்திரங்களை, நீங்கள் குறிப்பிடுவது வாரா வார நட்சத்திரங்களை, கேள்வியில் என்ன இருக்கிறது என்பதை நன்கு படித்து விட்டு பதில் அளிக்க வரவும்.//

உங்களது இந்த வாதத்துக்கும் பதிலளித்துவிடலாம். முதலில், சம்பந்தப்பட்ட காசியின் பதிவுக்கான சுட்டியைக் கொடுப்பதிலிருந்து தொடங்கலாம்.. தனிப்பட்ட அடிப்படையில் அவர் கொடுத்திருக்கும் பட்டியல் இது - இதிலே தெரிந்தோ தெரியாமலோ என் பெயர் முதலில் வந்துவிட்டிருக்கிறது - இதுகுறித்துப் பின்னாலே சொல்கிறேன். ஆக, உங்கள் வாதப்படி இதில் இருப்பவர்கள் அனைவரும் பிராமண துவேஷிகளாக இருக்கக்கூடும். உங்கள் சந்தேகத்துக்கு ஆட்பட்டவன் என்ற முறையில் என்னை ஒதுக்கிவிடுங்கள் - அதுகுறித்து அடுத்து விளக்குகிறேன். அடுத்து நம்பர் 2.வாக இருப்பது துளசி கோபால், அடுத்து தமிழ்சசி, பெட்டை, ந.உதயகுமார், அலெக்ஸ் பாண்டியன், ரோசாவசந்த், டிசே தமிழன், சுரேஷ் கண்ணன், தாரா, அல்வாசிட்டி விஜய், நாராயணன், மூர்த்தி, கறுப்பி, நாலாவது கண், மன்னை மாதேவன், பாலு மணிமாறன், ஸ்ரீகாந்த், தீபக் வெங்கடேசன், பத்மா அர்விந்த். இவர்கள் அனைவரும் பிராமண துவேஷிகளா? டைம்ஸ் மாகசின் டாப் 100 லிஸ்ட் என்றால்? ஆனானப்பட்டதாகச் சிலர் கருதும் Times Literary Supplementஐயே மலந்துடைக்கும் தாளாகக்கூட உபயோகிக்கக் கூசுவேன் என்று சாமுவேல் பெக்கெட் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள் - அதனால், இந்த 'பெரிய டைம்ஸ் 100 பட்டியல்' போன்ற மேலோட்டமான விஷயங்களை இந்த விவாதத்திலிருந்து ஒதுக்கிவிடலாம். இவர்கள் அனைவரும் பிராமண துவேஷிகளா? அப்பதிவு வெளியிடப்பட்டது மார்ச் 23, 2005ல். அதன்பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கடந்துவிட்டது - இதற்குப்பிறகான பிராமணர்கள் மீதான ஆபாசத் தாக்குதல்கள் அனைத்தும் இந்த பட்டியலினால் வந்ததென்றால், இவர்களெல்லாம் பிராமணர்களைத் தாக்கினார்களா? உதாரணம் கொடுங்கள்.

இப்போது, 2006ல் இப்படி நடக்குமென்று தெரியாமல் 2005ல் பட்டியலின் தொடக்கத்தில் என்னைப் போட்டுவிட்ட காசி மீது பரிதாபப்பட்டுக்கொண்டு, இதை விளக்க முயல்கிறேன். அதையும் தெளிவாக தொடங்கிய தேதியின் வரிசையில் உள்ளது, வேறு எந்த விதத்திலும் வரிசைப்படுத்தவில்லை என்று அவரே சொல்லிவிட்டிருக்கிறார், எனவே என்னை நம்பர் ஒன் என்று அவர் அழைத்தால் பெற்றிருக்கக்கூடிய புளகாங்கிதத்தை இழந்ததை நினைத்து வேறு இப்போது வருந்திக்கொண்டிருக்கிறேன் ;-). இலக்கிய விஷயங்களில் தனக்கு ஆர்வமில்லை என்று காசியே ஒத்துக்கொண்டிருக்கிறார். வலைப்பதிவுகளைப் படித்தவரையில் தனக்குப் பிடித்த என்று ஒரு பட்டியலைப் போட்டிருக்கிறார். இதில் நான் சொல்லவந்தது எப்படிப் பொருந்துகிறது? ஏதோ என்னாலான சிலதைப் படித்துப் பிடித்ததை முன்பு புத்தக ஓடை என்று ஒரு இழை ஓடிக்கொண்டிருக்கையில் நானும் ஒரு பட்டியல் போட்டேன்.

என்ன ஆச்சரியம் பாருங்கள் - முதலில் இருக்கும் எம்.வி.வெங்கட்ராம் பிறப்பால் ஒரு சௌராஷ்டிரர், அடுத்து இருக்கும் தி.ஜானகிராமன் பிறப்பால் ஒரு பிராமணர். அடுத்து இருக்கும் எஸ்.சம்பத்தும் பிராமணர் (என்று நினைக்கிறேன்), அடுத்து வரும் நகுலன் - கிழிஞ்சது போ, ஐயங்கார், அடுத்து வரும் கிருத்திகா (தெரியவில்லை ஐயா), கீழே பட்டியலிலிருக்கும் மௌனி - ஐயகோ - இன்னொரு பார்ப்பனர். இது தவிர ஊடகங்கள் மூலமாகத் தெரியவந்த பிறரது ஜாதிகளைச் சொல்வது தேவையா இங்கே? இதை வைத்துக்கொண்டு யாராவது 'வரிசையாகப் பார்ப்பன எழுத்தாளர்களை அடுக்கும் பிராமண அடிவருடி சன்னாசி' என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்குமோ அதேயளவு உண்மைதான் அப் பட்டியல் மூலமாக காசி பிராமண துவேஷத்தை வளர்க்கிறார் என்பதும்.

//நானோ, டோண்டுவோ தாராளமாகச் சொல்லலாம்தான், ஏற்கனவே பெயரைச் சொல்லியுள்ளோம்தான், பெயரைச் சொல்லுவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபணையுமில்லை. இங்கு முகமூடி அனுமதித்தால் நான் தாராளமாகச் சொல்லுகிறேன்.//

இந்த விஷயம் குறித்து நான் அனாமதேயங்கள் குறிப்பிட்ட ஒரு பெயரைப் பல முறை படித்திருக்கிறேன். தொடர்ந்து வலைப்பதிபவர்கள் இதுகுறித்து நேரடியாகப் பெயர் குறிப்பிட்டதாகப் படித்த நினைவில்லை - தவறெனில் மன்னிக்க, சுட்டிக் காட்டுக, பிழையைத் திருத்திக்கொள்கிறேன். முகமூடியின் அனுமதி வேண்டுமாயின் அவரைக் கேட்கவும், அனுமதி அளித்தபின், குடும்பத்தினரை இழுத்துக் கேவலமான முறையில் ஆபாசப் பின்னூட்டங்கள் மூலம் டோண்டுவை, பிறரைத் தாக்கியது யார் என்று இங்கேயே சொல்லுங்கள், எனக்கு ஆட்சேபணை என்ன இருக்கப்போகிறது இதில்?

//நான் எடுத்து வைத்த குற்றசாட்டுக்களை வெளிப்படையாக விவாதிக்கத் தயாரா என்று கேட்டதற்கு உங்களிடம் பதில் இல்லை.//

blogs and aggregators are different என்ற புரிதலின் அடிப்படையில் பெரும்பாலான விஷயங்களை என்னாலியன்ற அளவு விளக்கிவிட்டதாகவே நினைக்கிறேன்.

//நியாயம் பேசவும் ஒரு யோக்கியதை வேண்டும், முதலில் அதை சம்பாதித்துக் கொண்டு வாருங்கள், காத்திருக்கிறேன்.//

ஒரு ஊருக்கு யோக்கியன் மறு ஊருக்கு அயோக்கியன் என்ற வாதத்தை வைத்துப் பார்த்தால் நீங்கள், நான் உட்பட எவரும் யோக்கியமில்லை இங்கே. சர்டிஃபிகேட்டுகளைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. வேறு ஏதாவது இருந்தால் சொல்லவும்.
 



//அதற்குப் பிறகும் \'இவ்வளவுதான் சொல்லியிருக்கிறாய், போலியின் தாக்குதல் எவ்வளவு இருந்தது, அதற்கேற்றமாதிரி இவ்வளவு எதிர்ப்புத் தெரிவித்திருக்கவேண்டாமோ\' என்று கேட்க ஆரம்பிக்குமுன், அதில் ஏதும் நியாயம் இருக்கிறதா என்றும் கேட்கவும்.//

சிறு விளக்கம் - //\'இவ்வளவு எதிர்ப்புத் தெரிவித்திருக்கவேண்டாமோ\' என்று கேட்பது சரியா என்று யோசித்துப் பார்க்கவும்// என்பதே நான் உணர்த்த விரும்பியது - தவறாகப் புரிந்துகொள்ளப்படும் வாய்ப்பிருப்பதால் இதைச் சொல்கிறேன்.
 



// பாய் (சுவரை பிடித்தபடி வானத்தை கைகாட்டி) :: ஏஏஏய். ஷாமர்செட் மாம்.. எளுத்தாளனுக்கு பொழுப்புணர்ச்சி வெய்ணுமா வெய்ணாமா.. ஒனிக்கி இ-மெயில் போட்டனே, ஏன் இன்னும் ரீப்ளை சொல்லாம டீலே பண்ற.. பயந்தாங்கொள்ளி... //

======

முகமூடி :: சூப்பர் கண்டுபிடிப்பு தருமி... ஆனா பாருங்க இந்த முடிவுக்கு எப்படி வந்தீங்கன்னுதான் தெரியல. கொஞ்சம் விபரமா சொல்லுங்களேன்.. ஏன் கேட்கிறேன்னா, நிறைய பேரோட சாதி கண்டிப்பா உங்களுக்கு தெரிஞ்சிருக்கணும். இல்லைன்னா பெரியவங்க நீங்க, கரிசனத்தோட பார்க்கிறவர்கள் அனைவரும் "அந்த ஒரே உயர்சாதி இல்லாதவர்கள்" அப்படீன்னு குத்துமதிப்பா சொல்வீங்களா? மதம், ஜோசியம் என்று பல விஷயங்களில் உங்களின் அலசலை பாராட்டி வியந்த என் போன்றவர்களுக்கு புரியும் படி உங்களின் இந்த அலசலையும் தயவு செய்து வெளியிடுங்கள்.

இதற்கு இன்று வரை பதிலில்லை...

=====

முகமூடியாரே, "என் எழுத்தே என் வாழ்வு" எனும் உங்களை நினைத்தால் புல்லரிப்பு தாங்கமுடியவில்லை :))))))))))
 



திருமலை, சன்னாசி,

இந்த நீண்ட விவாதத்தை இத்துடன் விட்டு விடும்படி, சக வலைப்பதிவர் என்ற முறையில், உங்கள் இருவரையும் நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்றென்றும் அன்புடன்
பாலா
 



Dear Bala

I understand your concerns in this regard and I respect your suggestion.

Please bear with me for one more reply as Sannasi has asked me some serious questions. With that summary reply I will close my arguments. As I am busy, I will try to finish mine by this week end. I also do have more personal things to attend than writing lengthy replies here. Still, having started this argument, I have a self responsibility in finishing that too (atleast from my side). So once again I request you to tolerate for one more reply. Thanks.


Regards
Sa.Thirumalai
 



திருமலை,

என் வேண்டுகோளை நேர்மறையாக எடுத்துக் கொண்டதற்கு நன்றி !
இந்த நீண்ட விவாதத்தினால் ஏற்பட்டிருக்கக் கூடிய மனக்களைப்பை நீங்கி, nostalgic intoxication வாயிலாக உற்சாகம் பிறக்க வாய்ப்பளிக்கக் கூடிய
இதை (நான்கு பாகங்கள்!) தொடக்கத்திலிருந்து வாசிக்கவும்
(சன்னாசி, நீங்களும் தான் !) !!!

சந்தடி சாக்கில் சுய விளம்பரம் தேடியதற்கு மன்னிக்கவும் :)

என்றென்றும் அன்புடன்
பாலா
 



சன்னாசி

கொஞ்சம் வேலை காரணமாக பதில் தாமதாமாகி விட்டது.

>> 'வலையுலகில்' என்ற உங்கள் பதம் உங்களது இந்த வாதத்துக்கு நன்றாகப் பொருந்துகிறது - அதன் அடிப்படையில் உங்கள் வாதத்தில் உண்மையிருக்கலாம் என்று ஏற்றுக்கொள்வதில் எனக்கு எந்தப் பிரச்னையுமில்லை. 'வலையுலகில்' என்பதை எடுத்துவிட்டு 'தமிழ்மணத்தில்' 'தேன்கூட்டில்' 'bloglines'ல் என்று திரட்டிகளின் பெயரைப் போடும்போது வேறு அர்த்தம் வருகிறது என்பதை ஒத்துக்கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். வலையுலகில் (web, not Thamizmanam) யார் என்ன வேண்டுமானாலும் எழுதலாம் <<

நான் வலையுலகு என்று பொதுவாகக் குறிப்பிடாமல் தமிழ் மணம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் உண்டு. எனது காரணங்கள் 3, 4 படிக்கவும். ஏன் நான் தமிழ் மணத்தை மட்டும் குறிப்பிட்டுக் கேட்கிறேன் என்பதற்கான விளக்கத்தை நான் ஏற்கனவே அளித்து விட்டேன். தேன் கூட்டு நிர்வாகிகள் யார் என்பதே யாருக்கும் தெரியாது. மேலும் அவர்கள் நான் தான் இங்கு எல்லாம் பதிவுகளை சேர்ப்பதும் நீக்குவதும் எனது தனி உரிமை என்றெல்லாம் அறிக்கை விடவில்லை. அப்படி விட்டார்கள் எனில் அவர்களுக்கும் எனது குற்றசாட்டுப் பொருந்தும்.

>> வற்றில் துவேஷம் இருக்கையில் அது தவறென்று கருதும் உங்களைப் போன்றவர்களுக்கு அதைக் கண்டிக்க முழு உரிமையும் உண்டு. இதன் தொடர்ச்சியாக, பிராமணர்களுக்கு எதிரான தாக்குதல்களைக் கண்டித்திருக்கிறேனா என்று கேட்டு என் 'அருகதை'யைக் கேள்வி கேட்கிறீர்கள். இருக்கும் நூற்றுக்கணக்கான ஜாதிகளில் பிராமண ஜாதியும் ஏதோவொரு ஜாதி என்ற அடிப்படையில், பிறப்பாலான அடையாளத்தைக்கொண்டு ஜாதி பற்றி எழுதாதபோது அந்த வலைப்பதிவர் மீது அப்படியொரு குற்றச்சாட்டு வைக்கப்படுகிறதென்று உணர்ந்த ஒன்றிரண்டு தருணங்களில் 'பிராமண ஜாதி'யைத் தாக்குவது கூடாதென்று சொல்லியிருக்கிறேன். என் பழைய பதிவுகளில் ராமதாஸையும்தான் தாக்கியிருக்கிறேன், இன்றுவரை குழலி போன்றவர்கள் ஏன் என்னை 'வன்னிய ஜாதிக்கு விரோதி' என்று சொல்லவில்லை என்று தெரியவில்லை. கருணாநிதியின் ஜாதீய அரசியல் எனக்கும் உவக்காத விஷயம்தான் <<

அப்படியா, நான் எங்கும் படித்ததில்லை. கடந்த ஒரு வாரத்தில் பல பதிவுகளிலும் கூட உங்கள் ஆட்சேபங்கள் எதையும் நான் படித்தறியவில்லை. இருந்தாலும் நீங்கள் சொல்லுவதால் நம்பிக் கொள்கிறேன். பிராமணர்களை கேவலமாகத் தாக்குவதற்கென்றே பல பதிவுகள் இயங்குகின்றன. அவற்றில் எதிலும் உங்களது கண்டனங்களை இது வரை நான் படித்தது இல்லை. இனிமேலும் நான் கூர்ந்து கவனிக்கிறேன். எத்தனை இடங்களில் உங்கள் கண்டனங்களைப் பதிவு செய்கிறீர்கள் என்பதை அவதானிக்கிறேன்.

>> அதையும்தான் என் பழைய பதிவுகளில் விமர்சித்திருக்கிறேன் - இன்னும் ஏன் யாரும் என்னை 'ஊதுவார் ஜாதி விரோதி' என்று சொல்லவில்லை என்றுதான் தெரியவில்லை. கிருஷ்ணசாமி 'சண்டியர்' பெயரை எதிர்த்து சண்டியர்த்தனம் செய்தபோது அதையும் சேர்த்து விமர்சித்திருக்கிறேன் - தலித் விரோதியா நான் அப்போது? உண்மையில் பார்த்தால், இதுவரை நான் என் பதிவுகளில் வெளிப்படையாக விமர்சனம் செய்யாததில் பிராமண ஜாதியும் ஒன்று - இதற்கு உங்கள் பதில் என்ன? ஜாதி பிற இழவு என்று எதையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல் தனிமனிதப் பார்வையில் சரி தவறு என்று ஒவ்வொரு விஷயத்தையும் அதனளவில் ஆராய்ந்து, படுவதைச் செய்வதுதான் என்னால் ஆனது. என் விருப்பமின்றி birth-packageல் வரும் இலவச இணைப்பான என் ஜாதியும்தான் பல முறை பல்வேறு இடங்களில் (வலைப்பதிவுகள் உட்பட) விமர்சிக்கப்பட்டிருக்கிறது, நானேகூட அதன் அனைத்துக் கூறுகளையும் வெறுப்பவனே - இதன் அடிப்படையில்தான் எந்தவொரு ஜாதி மீதான எனது விமர்சனமும் அமையமுடியும் - இதில் நீங்கள் உங்கள் ஜாதியைக் குறித்துக் கேட்கிறீர்கள், நாளைக்கு ஒரு தேவரோ கவுண்டரோ இதே மாதிரி விலாவாரியாக எழுதி 'ஏன் நீ தேவர்கள்/கவுண்டர்கள் மீதான தாக்குதலை எதிர்க்கவில்லை' என்றால் அப்போதும் வலைப்பதிந்து கொண்டிருந்தால் இதேதான் என் பதிலாக இருக்கும். <<

பிராமணர்களைப் போல் வேறு எந்த ஜாதியினரும் தமிழ் மணத்தில் ஆபாசமாக, கேவலமாகத் தாக்கப் படுவது இல்லை. ராமதாஸ் மேலோ, கருணாநிதி மேலோ அவர்களது நடவடிக்கையின் பாற்பட்டே விமர்சனம் வைக்கப் படுகின்றன ஒழிய ஒட்டு மொத்தமக ஒரு ஜாதியினரையே எங்கும் யாரும் கேவலமாக எழுதுவதில்லை. பிற ஜாதிகளின் மேல் வைக்கப் படும் விமர்சனங்களையும், பிராமண ஜாதியினரின் மேல் சாத்தப் படும் ஆபாச வசவுகளையும் நிச்சயம் ஒரே தட்டில் வைக்க முடியாது. நீங்கள் அப்படி வைப்பீர்களாயின் அது உங்கள் நேர்மையைக் காட்டுகிறது. ஒரு தேவரின், கவுண்டரின் ஒரு குறிப்பிட்ட நடவடிக்கைகளை எதிர்ப்பது வேறு ஒட்டு மொத்தமாக ஒரு இனத்தையே துவேஷிப்பது வேறு, வேறு, தமிழ் மணம் படிக்கும் அனைவருக்கும் இது நன்கு புரியும்.

அது சரி சந்தடி சாக்கில் உங்கள் ஜாதியும் தாக்கப் படுவதாகப் புலம்பியுள்ளீர்கள் அதற்கு ஏதேனும் சுட்டி தர இயலுமா ? விமர்சிக்கப் படுவது வேறு ஆபாசத் தாக்குதலுக்கு உள்ளாவது வேறு. நான் என்ன சொல்ல வருகிறேன் என்ற அடிப்படையைக் கூடப் புரிந்து கொள்ளாமல் ஆரம்பம் முதலே அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறீர்கள். (செக்கு மாட்டு உதாரணம் சொன்னால் உங்களுக்குப் கோபம் வருவதால் உதாரணத்தை மாற்றியுள்ளேன் :))


>> அதுகுறித்து 'அவர்களிடம்' கேளுங்கள். பிறகு, இந்த 'நண்பர்கள்' என்ற பதம் குறித்து: முகமூடி, இதைப்போன்று தன்னைநோக்கி எழுப்பப்படும் கேள்விகளுக்கு ஒரு பதிலைச் சொல்வார் - அதையே இங்கே கேட்கிறேன்: என் நண்பர்கள் யார் என்று எப்படி என் பக்கத்திலிருந்து பார்த்த மாதிரிச் சொல்கிறீர்கள்? என் நண்பர்கள் யார் என்று எனக்குச் சுட்டிக்காட்டமுடியுமா? நானும் தெரிந்துகொள்கிறேன். 'திருமலையின் நண்பர்கள்' என்று நானும் கைவீசிய திசையில் சிக்கியவர்களையெல்லாம் போட்டு சந்தேகக் கேஸில் அரஸ்ட் பண்ணி ஒரு கூட்டத்தைக் காட்டி §?ஷ்யங்களால் பாத்திரத்தை வழிய வழிய நிரப்பவா? <<

நண்பர்கள் என்று நான் பொதுவாகக் குறிப்பிட்டது நீங்கள் அவர்கள் தோள் மேல் கை போட்டுக் கொண்டு நீங்கள் ஊர் சுற்றுகிறீர்கள் என்ற அர்த்ததில் அல்ல. அவர்களுடைய பதிவுகளுடன் உங்களுக்கு எப்பொழுது ஒத்த கருத்து நிலவுகிறது அதைப் பதிவு செய்கிறீர்கள். என்னுடன் விவாதத்திற்கு நீங்கள் வரும் பொழுது உங்களை உரிமையுடன் திருமலைக்கெல்லாம் ஏன் பதில் சொல்லி நேரத்தை விரயமாக்குகிறீர்கள் என்று உரிமையாக, அக்கறையுடன் உங்களிடம் அவர்களால் அறிவுரை கூற முடிகிறது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஒரே கருத்து உடையவர்கள் என்ற அடிப்படையில் நான் அவர்களை உங்கள் நண்பர்கள் என்று அழைத்து விட்டேன். அதற்காக நீங்கள் வெட்கப் படுகிறீர்கள் என்று புரிகீறது. அவர்களை உங்கள் நண்பர்கள் என்று நான் கருதுவதைக் கூட நீங்கள் கேவலமாக நினைக்கிறீர்கள் என்று படுகிறது. ஆகவே உங்கள் நண்பர்கள் என்ற எனது விளிப்பை நான் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன். போதுமா. என் நண்பர்கள் என்று நீங்கள் தாராளமாக யாரை வேண்டுமானாலும் கை காட்டிக் கொள்ளலாம்.

>> இந்த 'தாக்குதலை கண்டிப்பவரா' என்பதற்கு என் பதில் - போலி டோண்டுவின் ஆபாசத் தாக்குதல்களைக் கண்டிப்பவனே - ஆம். நான் கேட்டதால்தான் இப்போது ஆம் என்கிறாய், இதற்கு முன் சொன்னதில்லை என்று அடுத்து நீங்கள் சொல்ல முயலுமுன், ஒருமுறைக்கு இருமுறை உறுதிப்படுத்திக்கொண்டு வந்து சொல்லவும். இன்னும் தேவையென்றால் சொல்லுங்கள், அங்கங்கே சொல்லியிருப்பதைத் தேடி எடுத்துப் போடமுயல்கிறேன். அதற்குப் பிறகும் 'இவ்வளவுதான் சொல்லியிருக்கிறாய், போலியின் தாக்குதல் எவ்வளவு இருந்தது, அதற்கேற்றமாதிரி இவ்வளவு எதிர்ப்புத் தெரிவித்திருக்கவேண்டாமோ' என்று கேட்க ஆரம்பிக்குமுன், அதில் ஏதும் நியாயம் இருக்கிறதா என்றும் கேட்கவும். <<

நீங்கள் சொல்லியிருக்கலாம் நான் படித்ததில்லை அவ்வளவுதான். இனிமேல் கவனிக்கிறேன்.

>>இந்திய தேசியத்தை ஆதரித்து எழுதுபவரா? - இது சிக்கலான கேள்வி. விரிவாகத்தான் சொல்லவேண்டும். இந்திய தேசியம் என்பது குறித்து உங்களுக்கு இருக்கும் கண்ணோட்டங்களும் எனக்கு இருக்கும் கண்ணோட்டங்களும் வேறுபடலாம். ஒன்றுபட்ட இந்தியா என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு, அதற்காக ஒரே மொழி, ஒரே மத ஆதிக்கம், ஒரே கலாச்சாரம் என்ற காலாவதியாகிப்போன ஐரோப்பிய nation-state கருத்தாக்கத்தின் வழி வரும் சொம்படிகளிலெல்லாம் உடன்பாடில்லை என்ற என் கருத்தை இதற்கு மேல் விளக்கமாகச் சொல்லவேண்டுமென்றால் பிறிதோர் தருணத்தில் சொல்கிறேன். ஆக, மேற்கண்ட கேள்விகளில் பின்னிரண்டுக்குப் பதில் சொல்லியாயிற்று. நீங்க பார்ப்பனரா என்ற கேள்வி இங்கே அர்த்தமற்றது என்பதை இப்பின்னூட்டத்தின் தொடக்கத்தில் சொல்லியிருக்கிறேன். <<

ஐயா சாமி, நான் கேட்டது ஒரு உதாரணத்துக்கு. இதையெல்லாம் செய்பவர்களை ஒரு கும்பல் ஒரு அடியாளை வைத்துத் திட்டமிட்டு ஆபாசமிட்டுத் தாக்குகிறது என்கிறேன். உடனே உங்கள் வியாக்கியானத்தை எடுத்து விட ஆரம்பித்து விடாதீர்கள். நாம் இப்ப பேசிக் கொண்டிருப்பதற்கும் இந்திய தேசியத்துக்கும் சம்பந்தமும் இல்லை, அது பற்றி உங்களுடைய கருத்தை நான் கேட்கவும் இல்லை. உங்களுக்கு எவ்விதமான கருத்து இருக்க முடியும் என்பது குறித்து எனக்கும் ஒரு அபிப்பிராயம் உண்டு, வேண்டுமானால் முகமூடியின் இன்னொரு எதிர்காலப் பதிவில் நாம் அது குறித்து விவாதிக்கலாம். தயவு செய்து நான் எந்த அர்த்தத்தில் சொல்லியிருக்கிறேன் என்று புரிந்து கொண்டு பதில் சொல்ல முயலுங்கள், அவசரம் வேண்டாம். நான் சொல்ல வந்தது, நீங்கள் பார்ப்பனராக இருந்தாலோ, இந்திய தேசியத்தை தீவீரமாக ஆதரித்தாலோ, நியாயத்தைப் பற்றிப் பேசினாலோ தாக்கப் படுகிறீர்கள் என்பது. அதில் எந்த வகைக்குள்ளும் நீங்கள் வராததால் நீங்கள் தாக்கப் படுவதில்லை என்பதற்காக நான் அந்த செக் லிஸ்ட் கேள்விகளைக் கேட்டிருந்தேன். புரிகிறதா? உடனே நீங்கள் ஐரோப்பா, கலாச்சாரம் கண்றாவி என்று உங்கள் அறிவு ஜீவித்தனத்தைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டீர்கள்,. உங்களை மாதிரி நபர்களுக்கெல்லாம் தேசியம் என்பது அருவருக்கத்தக்கதொரு வார்த்தை என்பதை நான் நன்கு அறிவேன். விளக்கம் நான் கேட்கவுமில்லை, தேவையுமில்லை.

>> மேற்கண்டதன் தொடர்ச்சியாக நீங்கள் எழுதியுள்ள இவ்வாக்கியங்களில் 'தமிழ்மணத்தில்' என்பதற்குப் பதில் 'வலையுலகில்' என்று எழுதியிருந்தால் அதில் ஆட்சேபிக்க எதுவும் இல்லை. தமிழ்மணம் என்பது தேன்கூடு போல, bloglines போல ஒரு திரட்டி என்பதைப் பலர் பலமுறை சொல்லியிருக்கிறார்கள். புகார் அளிக்கப்பட்டு, இந்த விஷயம் தொடங்கக் காரணமான வார்த்தையை அவர்களது பட்டியலிலிருந்து நீக்கியிருக்கிறார்கள் - இதற்குமேல் இந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது? ஆனானப்பட்ட கூகிளிலேயே tiananmen square என்று போட்டு அதன் அமெரிக்க வலைத்தளத்திலும் சீன வலைத்தளத்திலும் image searchல் எப்படித் தகவல்கள் திரிக்கப்படுகிறதென்று பார்க்கவும் - ஆ·ப்டர் ஆல் ஆயிரம் பேர் தமிழில் எழுதும் ஒரு சாதாரணத் திரட்டியை நிர்வகிக்கும் நாலைந்து மனிதர்கள், புகார் வந்தபின் ஆட்சேபகரமான அந்த வார்த்தைகளை நீக்கியபின்னரும் குற்றம் சொல்லிக்கொண்டுஇருந்தால் எப்படி. என் உள்நோக்கத்தில் சந்தேகம் இருக்கிறது இருக்கிறது என்று திரும்பத் திரும்பச் சொல்லிக்கொள்வதன்மூலம்தான் உங்களது கருத்தை நிலைநிறுத்திக்கொள்ளமுடியுமென்று நீங்கள் நம்புவீர்களாயின் - அப்படியே ஆகட்டும். You're trying to reinforce a preconceived notion of yours, and I can do little to help in this regard. Suit yourself. <<

நான் முதலில் எழுதிய காரணங்களையும், நான் ஏன் தமிழ் மணத்தைக் குறிப்பாக கேள்வி கேட்கிறேன் என்பதையும் மீண்டும் படிக்கவும். எனக்கு சொன்னதையே மீண்டும் மீண்டும் சொல்ல அலுப்பாக இருக்கிறது. எனக்கு திரட்டிக்கும் வலைப்பதிவுக்கும் உள்ள வித்தியாசம் நன்றாகவே தெரியும். உங்களிடம் பாடம் எடுக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு திரட்டியின் உரிமையாளர் என் தனிப்பட்ட விருப்பு வெறுப்பின் பேரில் வலைப் பதிவுகளை சேர்ப்பதோ எடுக்கவோ செய்வேன் என்று சொல்வாராயின் அவரிடம் நீ எந்த காரணத்தினால் சேர்த்தாய் அல்லது இன்னொன்றை ஏன் நீக்கவில்லை என்பது போன்ற கேள்விகள் கட்டாயம் எழவே செய்யும் அதைத்தான் நான் செய்திருக்கிறேன். பாரபட்சம் இருக்கிறது என்று சுட்டிக் காட்டியுள்ளேன். ஆம், உள்நோக்கத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது, அப்படித்தான் நம்புகிறேன். ஆமாம்.


>> உங்களது இந்த வாதத்துக்கும் பதிலளித்துவிடலாம். முதலில், சம்பந்தப்பட்ட காசியின் பதிவுக்கான சுட்டியைக் கொடுப்பதிலிருந்து தொடங்கலாம்.. தனிப்பட்ட அடிப்படையில் அவர் கொடுத்திருக்கும் பட்டியல் இது - இதிலே தெரிந்தோ தெரியாமலோ என் பெயர் முதலில் வந்துவிட்டிருக்கிறது - இதுகுறித்துப் பின்னாலே சொல்கிறேன். ஆக, உங்கள் வாதப்படி இதில் இருப்பவர்கள் அனைவரும் பிராமண துவேஷிகளாக இருக்கக்கூடும். உங்கள் சந்தேகத்துக்கு ஆட்பட்டவன் என்ற முறையில் என்னை ஒதுக்கிவிடுங்கள் - அதுகுறித்து அடுத்து விளக்குகிறேன். அடுத்து நம்பர் 2.வாக இருப்பது துளசி கோபால், அடுத்து தமிழ்சசி, பெட்டை, ந.உதயகுமார், அலெக்ஸ் பாண்டியன், ரோசாவசந்த், டிசே தமிழன், சுரேஷ் கண்ணன், தாரா, அல்வாசிட்டி விஜய், நாராயணன், மூர்த்தி, கறுப்பி, நாலாவது கண், மன்னை மாதேவன், பாலு மணிமாறன், ஸ்ரீகாந்த், தீபக் வெங்கடேசன், பத்மா அர்விந்த். இவர்கள் அனைவரும் பிராமண துவேஷிகளா? டைம்ஸ் மாகசின் டாப் 100 லிஸ்ட் என்றால்? ஆனானப்பட்டதாகச் சிலர் கருதும் Times Literary Supplementஐயே மலந்துடைக்கும் தாளாகக்கூட உபயோகிக்கக் கூசுவேன் என்று சாமுவேல் பெக்கெட் போன்றவர்கள் சொல்லியிருக்கிறார்கள் - அதனால், இந்த 'பெரிய டைம்ஸ் 100 பட்டியல்' போன்ற மேலோட்டமான விஷயங்களை இந்த விவாதத்திலிருந்து ஒதுக்கிவிடலாம். இவர்கள் அனைவரும் பிராமண துவேஷிகளா? அப்பதிவு வெளியிடப்பட்டது மார்ச் 23, 2005ல். அதன்பிறகு கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் கடந்துவிட்டது - இதற்குப்பிறகான பிராமணர்கள் மீதான ஆபாசத் தாக்குதல்கள் அனைத்தும் இந்த பட்டியலினால் வந்ததென்றால், இவர்களெல்லாம் பிராமணர்களைத் தாக்கினார்களா? உதாரணம் கொடுங்கள். <<

நான் எங்கு லிஸ்டில் உள்ள அனைத்து பதிவர்களும் துவேஷக்காரர்கள் என்று சொன்னேன் ? பலரும் என்று குறிப்பிட்டிருக்கிறேன். பலரும் என்றால் பலரும்தான். நான் இங்கு உதாரணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பட்டியலில் இருப்பவர்கள் இணையத்தில் பதிந்த அனைத்துக் கருத்துக்களையும், ஒருவர் படித்தாலே போதும் ஒரு முடிவுக்கு வர முடியும். அதை நான் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன். சுய சிந்தனை உள்ள, தமிழ் படிக்கத் தெரிந்த , அனைவருக்குமே யார் யார் என்னென்ன கருத்துக்கள் கொண்டிருக்கின்றனர், எவை எவை துவேஷமான கருத்துக்கள் என்பதை தாராளமாகப் புரிந்து கொள்ள முடியும். நான் அப்படித்தான் நம்புகிறேன், புரிந்து கொண்டிருக்கிறேன், அதன் அடிப்படையில் நான் கொண்டுள்ள சந்தேகத்தை தெரிவித்துள்ளேன்.

சாமுவேல் பெக்கட் உதாரணத்தை இந்த பத்து பேர் பட்டியலுடன் ஒப்பிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? :))


>> என்ன ஆச்சரியம் பாருங்கள் - முதலில் இருக்கும் எம்.வி.வெங்கட்ராம் பிறப்பால் ஒரு சௌராஷ்டிரர், அடுத்து இருக்கும் தி.ஜானகிராமன் பிறப்பால் ஒரு பிராமணர். அடுத்து இருக்கும் எஸ்.சம்பத்தும் பிராமணர் (என்று நினைக்கிறேன்), அடுத்து வரும் நகுலன் - கிழிஞ்சது போ, ஐயங்கார், அடுத்து வரும் கிருத்திகா (தெரியவில்லை ஐயா), கீழே பட்டியலிலிருக்கும் மௌனி - ஐயகோ - இன்னொரு பார்ப்பனர். இது தவிர ஊடகங்கள் மூலமாகத் தெரியவந்த பிறரது ஜாதிகளைச் சொல்வது தேவையா இங்கே? இதை வைத்துக்கொண்டு யாராவது 'வரிசையாகப் பார்ப்பன எழுத்தாளர்களை அடுக்கும் பிராமண அடிவருடி சன்னாசி' என்று சொல்வது எவ்வளவு தூரம் உண்மையாய் இருக்குமோ அதேயளவு உண்மைதான் அப் பட்டியல் மூலமாக காசி பிராமண துவேஷத்தை வளர்க்கிறார் என்பதும். <<

உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் விஷயத்திலாவது நாம் இருவரும் ஒத்துப் போவது கண்டு மகிழ்ச்சி. நாங்கள் எல்லாம் எழுத்தைத்தான் படிக்கிறோம். எழுத்தாளர்கள் என்ன ஜாதி, என்ன கோத்திரம் என்று ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை, அவர்கள் எழுத்தில் தானாக வெளிப்பட்டால் சரி, எனக்கு இன்று வரை நான் படிக்கும் எஸ் ராமகிருஷ்ணனோ, இரா.முருகனோ, ஜி. நாகராஜனோ எந்த ஜாதி என்று தெரியாது. எழுத்தாளர்களின் மூலத்தை நான் அறிய ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் ஜாதி இல்லை இல்லை என்று சொல்லும் உங்களைப் போன்றவர்கள் எழுத்தாளர்கள் ஐயரா, ஐயங்காரா, வடகலையா, தென்கலையா என்று உட்பிரிவு வரை நுணுக்கமான விபரங்கள் வரை சேகரித்து வைக்கிறீர்கள். உங்களது சாதீயப் பார்வைக்கு ஒரு சபாஷ்.

நீங்கள் இந்த இடத்தில் ஆப்பிளையும் ஆரஞ்சையும் ஒப்பிடுகிறீர்கள். பிடித்த எழுத்தாளர்களையோ, பிடித்த பிண்ணனி பாடகர்களையோ நாவல்களையோ, பட்டியலிடுவதும் பிடித்த அரசியல் கட்சித் தலைவர்களையும், பிடித்த சித்தாந்தவாதிகளையும் பட்டியலிட்டுத் தன் விருப்பத்தைத் தெரிவிப்பதும் வேறு வேறு. பதிவர்கள் என்று வரும் பொழுது அவர்களின் இலக்கியப் பங்களிப்பிற்காகவோ, நாவல்களுக்காகவோ பட்டியல் இடுவதில்லை. அவர்களின் கருத்தாக்கங்களைப் பொருத்துதான் பட்டியல் இடுகிறார்கள். ஒரு உதாரணத்துக்கு நான் நாகூர் ரூமியின் படைப்புகளைப் பிடித்த எழுத்தாளர்கள் வரிசையில் பட்டியலிடுவேன் அதுவே வலைப் பதிவர் என்று வரும் பொழுது அடிப்படைவாதக் கருத்துக்களை முன் வைக்கும் ஒரு பதிவராக அவரை எனது பிடித்த லிஸ்டில் வைக்க மாட்டேன். ஒரு உதாரணத்திற்கு நான் எனக்குப் பிடித்த வலைப்பதிவர்கள் என்று வரிசையாக ஆரோக்கியம், நேச குமார், அரவிந்தன் நீலகண்டன், ஷங்கர், மலர் மன்னன், கால்கரி சிவா, டோண்டு என்று ஒரு எட்டு பேர் போட்டு விட்டு போனால் போகிறது என்று குமரன், தேசிகன், சிவமுருகன் என்று ஒரு சில உபத்திரவமில்லாத ஆன்மீக வலைப்பதிவர்களையும் சேர்த்துக் கொள்கிறேன் என்று வையுங்கள். அப்பொழுது என்னை எவ்வாறு முத்திரை குத்துவீர்கள் ? நீங்களே உங்களுக்குப் பிடித்த தலைவர்கள் என்று ஒரு பட்டியல் போட்டு அதில் ஈ வெ ரா, அண்ணத்துரை, கருணாநிதி, அன்பழகன், வீரமணி, ஸ்டாலின் என்று ஒரு வரிசையாக சொல்லி விட்டு போகிற போக்கில் ஒரு ஜீவாவையும், நல்லகண்னுவையும் சேர்த்துக் கொள்ளுகிறீர்கள் என்று வைத்துக் கொள்ளுவோம் அப்பொழுது உங்களை நான் ஒரு திராவிட இன விரோதக் கட்சியின் அடிவருடி என்றுதான் கருதிக் கொள்ளுவேன். ஆனால் எழுத்தாளர்களைப் பட்டியலிட்டால் அப்படி எடுத்துக் கொள்ள முடியாது. அது உங்கள் ரசனை குறித்த விஷயம். ரசனை சார்ந்த பட்டியலுக்கும் கருத்து சார்ந்த பட்டியலுக்கும் நிச்சயம் வேறுபாடு உண்டு.

>> இந்த விஷயம் குறித்து நான் அனாமதேயங்கள் குறிப்பிட்ட ஒரு பெயரைப் பல முறை படித்திருக்கிறேன். தொடர்ந்து வலைப்பதிபவர்கள் இதுகுறித்து நேரடியாகப் பெயர் குறிப்பிட்டதாகப் படித்த நினைவில்லை - தவறெனில் மன்னிக்க, சுட்டிக் காட்டுக, பிழையைத் திருத்திக்கொள்கிறேன். முகமூடியின் அனுமதி வேண்டுமாயின் அவரைக் கேட்கவும், அனுமதி அளித்தபின், குடும்பத்தினரை இழுத்துக் கேவலமான முறையில் ஆபாசப் பின்னூட்டங்கள் மூலம் டோண்டுவை, பிறரைத் தாக்கியது யார் என்று இங்கேயே சொல்லுங்கள், எனக்கு ஆட்சேபணை என்ன இருக்கப்போகிறது இதில்? <<

நான் இங்கு பெயரைக் குறிப்பிடுவது குறித்து எனக்கு எவ்வித அச்சமோ தயக்கமோ கிடையாது. நீங்கள் எனது பழைய பின்னூட்டங்களைப் படித்ததில்லை என்று அறிகிறேன். நான் இதே முகமூடிப் பதிவில் அவனது பெயரைக் குறிப்பிட்டுள்ளேன். ஆர் வெங்கடேஷ் ராயர் காப்பி கிளப்பில் தெளிவாகவே அவன் பெயரைக் குறிப்பிட்டு அவன் எப்படி ஒரு ஆபத்தான மன நோயாளி என்பதையும் கூறியுள்ளார். ஆக நீங்கள் கண்களை மூடிக் கொண்டால் நாங்கள் யாருமே இது குறித்து வெளிப்படையாக பேசியதில்லை என்று அர்த்தம் அல்ல. நான் அவனது பெயரை முகமூடி பதிவில் குறிப்பிட்டால் தினமும் காலையில் நூற்றுக்கணக்கான ஆபாசக் கழிவுகள் முகமூடியின் பெட்டியில் வந்து விழும், பின்னர் முகமூடிக்கு அதை துப்புரவு செய்வதே முழு நேரப் பணியாக இருக்கும். ஒரு வேளை அப்படி நடக்க வேண்டும் என்பது உங்கள் கேள்வியின் உள்நோக்கமாகவும் கூட இருக்கலாம் என்று எனக்கு சந்தேகிக்கத் தோன்றுவதால், உங்களுக்குத் தனி மடலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விபரங்களை அனுப்பி வைக்கிறேன்.

>> ஒரு ஊருக்கு யோக்கியன் மறு ஊருக்கு அயோக்கியன் என்ற வாதத்தை வைத்துப் பார்த்தால் நீங்கள், நான் உட்பட எவரும் யோக்கியமில்லை இங்கே. சர்டி·பிகேட்டுகளைக் குறித்து எனக்கு அக்கறையில்லை. வேறு ஏதாவது இருந்தால் சொல்லவும். <<

அப்படியே இருக்கட்டும். எனது மனசாட்சிப் படி எனக்குச் சரியென்று தோன்றும் கருத்துக்களையும் சந்தேகங்களையும் நான் வைக்கிறேன். நான் இவ்வளவு எடுத்துக் கூறியும் அரைத்த மாவையே அரைக்கும் உங்களிடம் பேசுவதற்கு எனக்கு இதற்கு மேல் எனக்கு எதுவும் இல்லை. இனிமேலும் எதுவும் இருக்கும் என்றும் தோன்றவில்லை. மேலும் இதற்கு நீங்கள் பதில் அளித்தாலும் அதில் ஏதாவது உருப்படியான விஷயங்கள் இருப்பின் நான் பதில் அளிக்கலாம், இல்லை வழக்கமான உங்களது வக்காலத்துக்கள் என்றால் நான் கொண்டு கொள்ளாமலும் போகலாம், என் அப்பொழுதைய மன நிலையைப் பொருத்து.

ச.திருமலை
 



திருமலை: அரைத்த மாவை திரும்பத் திரும்ப நான் அரைப்பதாக நீங்கள் நினைத்துக்கொண்டால் நான் என்ன செய்யமுடியும்? படிப்பவர்களுக்கு உண்மை தெரியும் என்கிறீர்கள் - எனது நம்பிக்கையும் அதேதான் - படிப்பவர்களுக்கு உண்மை தெரியும் - அவ்வளவுதான்.

//நான் வலையுலகு என்று பொதுவாகக் குறிப்பிடாமல் தமிழ் மணம் என்று குறிப்பிட்டதற்கு காரணம் உண்டு. //
இதற்கு மேல் திரும்பவும் இதை விளக்கவேண்டுமென்று அவசியமில்லை என்று நினைக்கிறேன். என் முந்தைய பின்னூட்டங்களை நிதானமாகப் படித்துப் பார்க்கவும். திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தைச் சொன்னால் அது உண்மையாகிவிடாது என்பது உங்களுக்குப் பொருந்துவது போலவே எனக்கும் பொருந்தும் என்பதை அறிவேன். நான் சொல்ல நினைப்பதைத் தெளிவாகச் சொல்லியுள்ளேன். உங்களுக்கும் புரியவேண்டுமென்பதுதான் என் எண்ணம்; படிக்கும் பிறருக்குத் தெரிந்தால் அது போதுமானது.

//அப்படியா, நான் எங்கும் படித்ததில்லை. கடந்த ஒரு வாரத்தில் பல பதிவுகளிலும் கூட உங்கள் ஆட்சேபங்கள் எதையும் நான் படித்தறியவில்லை. இருந்தாலும் நீங்கள் சொல்லுவதால் நம்பிக் கொள்கிறேன். பிராமணர்களை கேவலமாகத் தாக்குவதற்கென்றே பல பதிவுகள் இயங்குகின்றன. அவற்றில் எதிலும் உங்களது கண்டனங்களை இது வரை நான் படித்தது இல்லை. இனிமேலும் நான் கூர்ந்து கவனிக்கிறேன். எத்தனை இடங்களில் உங்கள் கண்டனங்களைப் பதிவு செய்கிறீர்கள் என்பதை அவதானிக்கிறேன்.//

திருமலை: யாரைச் சுற்றியும் என் உலகம் சுழல்வதில்லை. நீங்கள் அவதானிக்கிறீர்கள் என்பதற்காக உடனடியாக நாளைக்குப் போய் நாலு இடங்களின் என் 'எதிர்ப்பைப் பதிவு செய்து' 'விரிவாகப் பேசி' என் நடுநிலைமையை நிரூபணம் செய்துகொள்ள முயல்வேனென்று நினைத்தீர்களானால் அது உங்கள் விருப்பம். நாளைக்கு வேறோர் இடத்தில் வந்து 'கடந்த ஆறு மாதமாக உன் பின்னூட்டங்களைக் கண்காணித்து வருகிறேன், அன்றைக்கு முகமூடி பதிவின் பின்னூட்டத்தில் நடந்த விவாதங்களில் இப்படிச் சொன்னபிறகு ஒரு இடத்திலும் எதிர்ப்பைப் பதிவுசெய்யவில்லை, அதனால் நான் அன்றைக்குச் சொன்னதுதான் சரி - நீ ஒரு பிராமண துவேஷி' அது இது என்று தாராளமாக எங்கு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளலாம், எழுதி உங்கள் விருப்பத்தைத் திருப்திப்படுத்திக்கொள்ளலாம். மடியில் கனமில்லாதவனுக்கு வழியில் பயமில்லை, இதுமாதிரி கிடுக்கிப்பிடியெல்லாம் போடுவதுகுறித்து அலட்டிக்கொள்வது எனக்கு அவசியமில்லாத விஷயம்.

//அது சரி சந்தடி சாக்கில் உங்கள் ஜாதியும் தாக்கப் படுவதாகப் புலம்பியுள்ளீர்கள் அதற்கு ஏதேனும் சுட்டி தர இயலுமா ? விமர்சிக்கப் படுவது வேறு ஆபாசத் தாக்குதலுக்கு உள்ளாவது வேறு.//

சென்ற என் பின்னூட்டத்திலுள்ள வரிகளை அப்படியே எடுத்து தடித்த எழுத்தில் தருகிறேன். //ஜாதி பிற இழவு என்று எதையும் பிடித்துத் தொங்கிக்கொண்டிருக்காமல் தனிமனிதப் பார்வையில் சரி தவறு என்று ஒவ்வொரு விஷயத்தையும் அதனளவில் ஆராய்ந்து, படுவதைச் செய்வதுதான் என்னால் ஆனது. என் விருப்பமின்றி birth-packageல் வரும் இலவச இணைப்பான என் ஜாதியும்தான் பல முறை பல்வேறு இடங்களில் (வலைப்பதிவுகள் உட்பட) விமர்சிக்கப்பட்டிருக்கிறது, நானேகூட அதன் அனைத்துக் கூறுகளையும் வெறுப்பவனே - இதன் அடிப்படையில்தான் எந்தவொரு ஜாதி மீதான எனது விமர்சனமும் அமையமுடியும்//. இதில் புலம்பியது எங்கே என்று குறிப்பிடவும். இதில் சந்தடி சாக்கில் என்று ஒரு முன்னடை வேறு ;-). அது என்ன ரொட்டியா கடித்துத் தின்பதற்கும் இன்னொருவன் அதை நாசமாக்கிவிட்டான் என்று ஒப்பாரி வைப்பதற்கும்!

//அவர்களுடைய பதிவுகளுடன் உங்களுக்கு எப்பொழுது ஒத்த கருத்து நிலவுகிறது அதைப் பதிவு செய்கிறீர்கள்.//

எவரது நல்ல பதிவு இருந்தாலும் நல்ல பதிவு என்று சொல்வதில் தவறொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. இதுவரை எவரெவர் பதிவுகளிலெல்லாம் போய் நன்றாய் எழுதியிருக்கிறீர்கள் என்று சொல்லியிருக்கிறேனென்று அடுத்து ஒரு பட்டியல் வேண்டுமானாலும் தந்துவிடலாம் - பிரச்னையேயில்லை.

//என்னுடன் விவாதத்திற்கு நீங்கள் வரும் பொழுது உங்களை உரிமையுடன் திருமலைக்கெல்லாம் ஏன் பதில் சொல்லி நேரத்தை விரயமாக்குகிறீர்கள் என்று உரிமையாக, அக்கறையுடன் உங்களிடம் அவர்களால் அறிவுரை கூற முடிகிறது.//

சொன்ன ஆளிடம் போய்க் கேட்கவும்.

//இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஒரே கருத்து உடையவர்கள் என்ற அடிப்படையில் நான் அவர்களை உங்கள் நண்பர்கள் என்று அழைத்து விட்டேன். அதற்காக நீங்கள் வெட்கப் படுகிறீர்கள் என்று புரிகீறது. அவர்களை உங்கள் நண்பர்கள் என்று நான் கருதுவதைக் கூட நீங்கள் கேவலமாக நினைக்கிறீர்கள் என்று படுகிறது.//

திருமலை, என் 'நண்பர்களை' ஒருவேளை சந்திக்க நேர்ந்தால், பப்ளிக்கில் இமேஜ் டேமேஜ் பண்ணுகிறீர்களே என்றும் 'பார்த்தீர்களா, உன்னையெல்லாம் 'நண்பனாக' வைத்திருக்க எவ்வளவு அசிங்கமாக இருக்கிற'தென்றும் எடுத்துச் சொல்லிவிட்டால் போகிறது. இல்லை, இந்த நுணுக்கமான வாக்கியம் மூலம், 'பாரு, உன்னை நண்பனா வைத்திருப்பது அசிங்கமாயிருக்கிறதென்று சன்னாசி நினைக்கிறார்' என்று திருமலை சொல்வதை எதிர்த்து நான் எதுவும் சொல்லாததால் 'நட்பு' முறிந்துவிடவேண்டுமென்ற உள்ளக்கிடக்கையா? இப்படி நான் எழுதினால் அடுத்து, 'அப்போ நிஜமாகவே இருந்ததா' என்று பதிலுக்கு நீங்கள் கேட்டு ஒரே மடக்காக மடக்கிவிடலாம் பாருங்கள். இருந்தால் என்ன, முறிந்தால் என்ன? Seriously, I pity you. எதை நிரூபிக்க இப்படிச் சுற்றி வளைத்தெல்லாம் கஷ்டப்படுகிறீர்களென்றுதான் விளங்கவில்லை.

//உடனே நீங்கள் ஐரோப்பா, கலாச்சாரம் கண்றாவி என்று உங்கள் அறிவு ஜீவித்தனத்தைக் காண்பிக்க ஆரம்பித்து விட்டீர்கள்,. உங்களை மாதிரி நபர்களுக்கெல்லாம் தேசியம் என்பது அருவருக்கத்தக்கதொரு வார்த்தை என்பதை நான் நன்கு அறிவேன். விளக்கம் நான் கேட்கவுமில்லை, தேவையுமில்லை.//

விளக்கம் கேட்கவில்லையென்றால், கேட்கவந்ததைத் தெளிவாகக் கேட்கவும். உங்கள் கேள்விக்கு என் பதில் தெளிவாகவே உள்ளது - ஒரே விஷயத்தைப்பற்றி உங்கள் பார்வை வேறு, என் பார்வை வேறு என்று. அதுவேதான் 'தேசியம்' போன்றவைக்கும். 'ஐரோப்பா, கலாச்சாரம் கண்றாவி என்று அறிவுஜீவித்தனத்தைக் காட்ட ஆரம்பித்துவிட்டீர்கள்' என்று அடுத்து 'அறிவுஜீவி' முத்திரை குத்தவேண்டுமென்று நினைத்தால் தாராளமாகக் குத்திக்கொள்ளலாம் - என் தலை என் தோளில்தான் இருக்கிறது என்பது எனக்குத் தெரியும்.

//நான் எங்கு லிஸ்டில் உள்ள அனைத்து பதிவர்களும் துவேஷக்காரர்கள் என்று சொன்னேன் ? பலரும் என்று குறிப்பிட்டிருக்கிறேன். பலரும் என்றால் பலரும்தான். நான் இங்கு உதாரணம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. பட்டியலில் இருப்பவர்கள் இணையத்தில் பதிந்த அனைத்துக் கருத்துக்களையும், ஒருவர் படித்தாலே போதும் ஒரு முடிவுக்கு வர முடியும். அதை நான் படிப்பவர்களின் முடிவுக்கே விட்டு விடுகிறேன்.//

நீங்கள் சொன்ன அனைத்தையும் ஒத்துக்கொள்கிறேன் இதில். பலரும் என்றால் பலரும்தான் என்றால், அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும், சுட்டிகளும் உள்ளன, படிப்பவர்கள் தெரிந்துகொள்ளட்டுமே, இதிலென்ன பெரிய பிரச்னை இருக்கிறது?

//உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர்கள் விஷயத்திலாவது நாம் இருவரும் ஒத்துப் போவது கண்டு மகிழ்ச்சி. நாங்கள் எல்லாம் எழுத்தைத்தான் படிக்கிறோம். எழுத்தாளர்கள் என்ன ஜாதி, என்ன கோத்திரம் என்று ஆராய்ச்சியெல்லாம் செய்வதில்லை, அவர்கள் எழுத்தில் தானாக வெளிப்பட்டால் சரி, எனக்கு இன்று வரை நான் படிக்கும் எஸ் ராமகிருஷ்ணனோ, இரா.முருகனோ, ஜி. நாகராஜனோ எந்த ஜாதி என்று தெரியாது. எழுத்தாளர்களின் மூலத்தை நான் அறிய ஆர்வம் காட்டுவதில்லை. ஆனால் ஜாதி இல்லை இல்லை என்று சொல்லும் உங்களைப் போன்றவர்கள் எழுத்தாளர்கள் ஐயரா, ஐயங்காரா, வடகலையா, தென்கலையா என்று உட்பிரிவு வரை நுணுக்கமான விபரங்கள் வரை சேகரித்து வைக்கிறீர்கள். உங்களது சாதீயப் பார்வைக்கு ஒரு சபாஷ்.//

ஒருவேளை நீங்கள் படிக்கத் தவறியிருக்கலாம் - என்னுடைய சென்ற பின்னூட்டத்திலிருந்து மறுபடி வெட்டி ஒட்டுகிறேன் //என்ன ஆச்சரியம் பாருங்கள் - முதலில் இருக்கும் எம்.வி.வெங்கட்ராம் பிறப்பால் ஒரு சௌராஷ்டிரர், அடுத்து இருக்கும் தி.ஜானகிராமன் பிறப்பால் ஒரு பிராமணர். அடுத்து இருக்கும் எஸ்.சம்பத்தும் பிராமணர் (என்று நினைக்கிறேன்), அடுத்து வரும் நகுலன் - கிழிஞ்சது போ, ஐயங்கார், அடுத்து வரும் கிருத்திகா (தெரியவில்லை ஐயா), கீழே பட்டியலிலிருக்கும் மௌனி - ஐயகோ - இன்னொரு பார்ப்பனர். இது தவிர ஊடகங்கள் மூலமாகத் தெரியவந்த பிறரது ஜாதிகளைச் சொல்வது தேவையா இங்கே?//

தெளிவாகச் சொல்லியிருக்கிறதே அங்கே, ஊடகங்கள் மூலமாகத் தெரியவந்ததென்று. தி.ஜானகிராமன் வீட்டுக்கும் மௌனி வீட்டுக்கும் போய் geneology ஆராய்ச்சி பண்ணிக் கண்டுபிடித்திருந்தால் நீங்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளலாம். அவர்கள் எழுத்தில் தானாக வெளிப்பட்டால் சரி, என்று உங்கள் தராசைச் சுட்டிக்காட்டுகிறீர்கள் - அதையே நான் சொன்னால், அதெல்லாம் கிடையாது, எப்படியோ ஜாதியின் நுணுக்கங்களையெல்லாம் சேகரித்து வைக்கிறீர்கள் என்பீர்கள், இல்லையெனில், புத்தகத்தில் ஜாதி சம்பந்தமான சொற்கள் வரும்போது கண்ணை மூடிக்கொள்ளவேண்டுமென்று அறிவுரை செய்வீர்களா? பிறகு ஜாதி இல்லை இல்லை என்று சொல்கிறோம் என்கிறீர்கள். அதுதான் கண்ணுக்கெதிரே இருக்கிறதே ஜாதி - அதில் நம்பிக்கை இல்லை என்று சொல்வதையும், அக் கருத்தாக்கம் மறுக்கப்படவேண்டியதென்பதைச் சொல்வதையும் இப்படித் திரிப்பதுதான் உங்கள் நோக்கமெனில், திரித்துக்கொள்ளவும்.

//சாமுவேல் பெக்கட் உதாரணத்தை இந்த பத்து பேர் பட்டியலுடன் ஒப்பிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? :))//

காசியின் பட்டியலை ஒரு மலந்துடைக்கும் தாள் என்று வைத்துக்கொண்டால், அந்த மலந்துடைக்கும் தாளையும் ஒரு ஆதாரமாக/குற்றச்சாட்டாக வைத்து இங்கே இவ்வளவு விலாவாரியாக பக்கம் பக்கமாக எழுதிக்கொண்டிருக்கிறீர்களே திருமலை, இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்கவேண்டுமென்று நினைக்கிறீர்களா, கேட்டுவிட்டால் போகிறது - பதில் சொல்லித்தானாகவேண்டுமென்று ஏதும் அவசியமில்லை, ஒரு தகவலுக்குத்தான்.

//நான் அவனது பெயரை முகமூடி பதிவில் குறிப்பிட்டால் தினமும் காலையில் நூற்றுக்கணக்கான ஆபாசக் கழிவுகள் முகமூடியின் பெட்டியில் வந்து விழும், பின்னர் முகமூடிக்கு அதை துப்புரவு செய்வதே முழு நேரப் பணியாக இருக்கும். ஒரு வேளை அப்படி நடக்க வேண்டும் என்பது உங்கள் கேள்வியின் உள்நோக்கமாகவும் கூட இருக்கலாம் என்று எனக்கு சந்தேகிக்கத் தோன்றுவதால், உங்களுக்குத் தனி மடலில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விபரங்களை அனுப்பி வைக்கிறேன்.//

அப்படியா, முகமூடிக்கு இதுவரை வந்த ஆபாசத் தாக்குதல்களும் என்னால்தான் வந்தன என்று ஒரு குற்றச்சாட்டை வைத்தால் போயிற்று. உங்கள் கருத்துக்கு ஒத்துவராத யாரொருவரையும் போலி ஆசாமிகளோடு ஒட்டவைத்துவிடவேண்டியது, தாறுமாறாகப் பழி போடவேண்டியது, உங்களுக்கும் போலிக்கும் தொடர்பிருக்குமோ என்று சந்தேகிக்கிறேன் என்று திரும்பத் திரும்பச் சொல்லி, நடக்காத ஒன்றை நடந்ததாகப் பலரை நம்பவைத்துவிடவேண்டியது - திருமலை - உங்கள் கருத்தாக்கங்களின் இருப்பே இம்மாதிரி திரிப்புக்களின் அடிப்படையில்தான் என்றால், அதற்கு முட்டுக்கட்டை போட்டு நான் ஏன் பாவத்தைத் தேடிக்கொள்ளவேண்டும்? நடத்துங்கள், நடத்துங்கள்.

//அப்படியே இருக்கட்டும். எனது மனசாட்சிப் படி எனக்குச் சரியென்று தோன்றும் கருத்துக்களையும் சந்தேகங்களையும் நான் வைக்கிறேன். நான் இவ்வளவு எடுத்துக் கூறியும் அரைத்த மாவையே அரைக்கும் உங்களிடம் பேசுவதற்கு எனக்கு இதற்கு மேல் எனக்கு எதுவும் இல்லை. இனிமேலும் எதுவும் இருக்கும் என்றும் தோன்றவில்லை. மேலும் இதற்கு நீங்கள் பதில் அளித்தாலும் அதில் ஏதாவது உருப்படியான விஷயங்கள் இருப்பின் நான் பதில் அளிக்கலாம், இல்லை வழக்கமான உங்களது வக்காலத்துக்கள் என்றால் நான் கொண்டு கொள்ளாமலும் போகலாம், என் அப்பொழுதைய மன நிலையைப் பொருத்து.//

எனக்குச் சரியென்று பட்டதைத்தான் நானும் சொல்கிறேன். உங்களது கேள்விகளுக்கான பதில்கள் எனது முந்தைய பின்னூட்டங்களில் உள்ளன என்பதைப் பொறுமையாகப் படித்துப் பார்க்கவும்.
 



எனது இனிய தமிழ் அன்பர்களே.. வலைப்பதிவிற்கு நான் புதியவன்; மாணவன். ஆயிரக்கணக்கான வலைப்பதிவுகளில் பல லட்சக்கணக்கான தமிழ் பேசும் மக்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி தங்களுக்குள் ஒரு இணைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள் என்று ஒரு பத்திரிகையில் படித்து அதன் பயனாய் நானும் இந்த வலைப்பதிவில் பதிவு செய்யும் அளவிற்கு வந்துள்ளேன். வணக்கம்.

இந்த வலைப்பதிவை படிக்கத் துவங்கியது முதல் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிக்கு அளவே இல்லை. பொதுவாக வலைப்பதிவு ஏற்படுத்தும் அளவுக்கு திறமைசாலிகள் கண்டிப்பாக பட்டறிவும், எழுத்தறிவும் படைத்தவர்களாகத்தான் இருக்க வேண்டும். நீங்கள் அனைவரும் அப்படியே. அப்படியொரு அறிவாளிகளின் சபையை நானும் பார்க்கப் போகிறேன் என்ற ஆனந்தத்தில் உள்ளே நுழைந்த எனக்கு இங்கே படித்த விஷயங்கள் தொண்டைக்குழியில் சிக்கிக் கொண்ட முள் மாதிரியிருக்கிறது.

அன்பர்களே.. நண்பர்களே.. சகோதரர்களே.. சகோதரிகளே.. நாம் அனைவரும் முதலில் மனிதர்கள். பின்பு நாட்டால் இந்தியர்கள். பேசுகின்ற மொழியால் தமிழர்கள். அவ்வளவே.. நமக்குள் வேறு எந்தப் பேதமும் இல்லை. பேதம் பார்ப்பவர்கள் மனிதர்களாகவே இருக்க முடியாது. எப்போதோ ஏதோ ஒரு காரணத்துக்காக யாரோ ஒருவர் சொன்னதை இப்போதும் நினைத்துக் கொண்டு அடுத்தவர், பக்கத்து வீட்டுக்காரர், சக தோழர்களை பேதம் பார்த்து பேசுவது எந்த விதத்திலும் பகுத்தறிவுக்கு ஒவ்வாதது.

பிராமணர், பிராமணல்லாதார் என்று வலைப்பதிவிலேயே பிரச்சினைகள் வந்துவிட்டது எந்த அளவிற்கு இந்த நாசமாகப் போகிற அரசியல்வாதிகள் நம் இளைஞர்களை கெடுத்துக் குட்டிச் சுவராக்கி வைத்திருக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

உலகத்தில் நீ என்ன ஜாதி என்று கேட்டு பேசத் தொடங்குகிற பழக்கம் அநேகமாக இந்தியாவில், நம் தமிழ்நாட்டில்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் பொழுது விடிந்து பொழுது போனால் இங்கேதான் கேடு கெட்ட அரசியல்வாதிகள், கடைந்தெடுத்த அரசியல் பொறுக்கிகள் ஜாதி, ஜாதி என்று சொல்லி நம் மூளையை சலவை செய்து வைத்திருக்கிறார்கள்.

இந்த நாசமாப் போகின்ற பண்டார, பரதேசி திராவிட அரசியல்வாதிகளால்தான் தமிழ்நாட்டில் ஜாதி என்கிற வார்த்தையே அழிக்க முடியாத ஒரு அங்கமாகப் போய்விட்டது. சகோதரர்களே.. நாம் 2007ம் ஆண்டில் இருக்கிறோம். இனி வரும் காலங்களிலாவது நம் இளைய தலைமுறை அதாவது நம்முடைய பிள்ளைகள், பேரன்களாவது ஜாதி என்ற அரக்கன் இல்லாத சூழ்நிலையில் வாழ வேண்டும் என்ற கொள்கையோடு நாம் செயல்படுவோம்.

அப்போதுதான் நம் பிள்ளைகளை நாம் இந்த இருபத்தொண்ணாம் நூற்றாண்டிற்கு தயார் செய்ததாக ஒரு அர்த்தம் இருக்கு. தயவு செய்து வலைப்பதிவுகளில் ஜாதி மோதல் வேண்டாம். நாம் அனைவரும் பேசுகின்ற தமிழ் மொழியால் தமிழர்கள். உலகில் நிகழும் நிகழ்வுகளை நமக்குள் கருத்து பேதமில்லாமல் பகிர்ந்து கொள்வோம். சாதி, சமய, சடங்குகளற்ற புதிய தமிழகத்தை படைக்க இந்த நேரத்தில் உறுதி காண்போம்.

திரு.டோண்டு அவர்களாக இருந்தாலும் சரி.. இந்த முகமூடி என்பவராக இருந்தாலும் சரி.. அனைவரும் தமிழர்கள்.. பட்டறிவு படைத்த மூத்தோர்கள். நமக்குள் கோபம் வேண்டாம். குரோதம் வேண்டாம். பகை வேண்டாம். முட்டல், மோதல்கள் வேண்டாம்.. விட்டுவிடுங்கள். வாருங்கள். புதிய உலகை காண்போம். நண்பர்களே இந்த வலைப்பதிவிற்கு நான் வருவது இதுதான் முதல் முறை. எனது கருத்துக்களை தயவு செய்து உள்ளீடு செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். எனது பெயர் எஸ்.சரவணன். சொந்த ஊர் திண்டுக்கல். இப்போது பணி செய்யும் பொருட்டு சென்னையில் உள்ளேன். எனது இ-மெயில் முகவரி tamilsaran2002@gmail.com.

அன்புடன்
தமிழ்சரண்
 



சரி, உங்க கருத்து ??