<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அத்து மீறு


img crtsy: dinamani, tamilmurasu
img crtsy: tamilmurasu



š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நாளை பத்திரிக்கையில் இப்படி ஒரு செய்தி வந்தாலும் வரும்...

கருணாநிதி சந்திப்பில் வைகோ பார்க்கும் திசையையும், ஜெயலலிதா ச்ந்திப்பில் வைகோ பார்க்கும் திசையையும் கவனித்தவர்களுக்கு வைகோவின் முடிவு முன்பே எடுக்கப்பட்டது என்பது தெளிவாகும். சரி நம்ம கவிதைய போட்றுவோம்.

கடமை முடித்து
கை கழுவ முனையும்
சில அரசியல் தலைமையிடம் கூடத் தான்
அடங்க மறு
அத்து மீறு
திமிறி எழு
திருப்பி அடி.
 



தி.மு.க.வில் நேர்ந்த அவமானம்: வைகோ பேட்டி

சென்னை, மார்ச் 4: அ.தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இணைந்த பின்பு வைகோ நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

ம.தி.மு.க. அ.தி.மு.க.வுடன் தேர்தலில் கூட்டணி அமைத்திருக்கிறது. இன்று காலை 11.45 மணியளவில் நானும், தலைமைக்கழக நிர்வாகிகளும் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து கையெழுத்திட்டிருக்கிறோம். 35 தொகுதிகள் எங்களுக்கு தரப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.வுடன் நாங்கள் கூட்டணி அமைத்ததற்கு பின்னால் இருக்கும் பின்னணி காரணங்களை விளக்க விரும்புகிறேன்.


தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. இடம்பெற்றிருந்தது. கடந்த ஜனவரி 26ம் தேதி அண்ணன் டாக்டர் கலைஞரை சந்தித்தேன். 1 1/2 மணி நேரத்திற்கு மேல் அண்ணனுடன் உரையாடினேன். இந்த சந்திப்பு பத்திரிகைகளில் செய்தியாக வெளிவந்திருக்கிறது. அண்ணனோடு தேர்தல் குறித்தும் கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினேன். ம.தி.மு.க. கட்சியின் அடிப்படையில் 35 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. 35 மாவட்டங்களுக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும். அதனால் 35 இடங்கள் வரை தாருங்கள் என்று அப்போது அண்ணனிடம் கோரினேன். அண்ணன் கலைஞர் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். கட்சியின் 5 மாநகர் மாவட்டங்கள் 30 மாவட்டங்கள் என 35 இடங்களில் போட்டியிட ம.தி.மு.க. விரும்புகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கட்சி நன்றாக வளர்ந்திருக்கிறது. நடைபயணம், பாசறைக் கூட்டம், செயல்வீரர்கள் ஆய்வுக்கூட்டம், ரத்த தானக்கழகம் என்று மக்களிடம் ம.தி.மு.க. வளர்ந்திருக்கிறது. குறைந்தபட்சம் 30 இடங்களாவது போட்டியிட வேண்டுமென்பது எங்களுடைய விருப்பம் என்று கலைஞரிடம் சொன்னேன். ஆனால், அவர் ஒன்றுமே சொல்லவில்லை. 2, 3 நிமிடம் கழித்து மிக அதிக இடங்களை கேட்டு நான் உங்களை சங்கடப்படுத்த விரும்பவில்லை. உங்களுக்கு சிரமம் இல்லாமல் எங்களுக்கு தொகுதி கிடைக்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன் என்றேன். 25 இடம் ஒதுக்கினால் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம் என்றேன். அதற்கு கருணாநிதி ஒன்றிரண்டு இடங்களை குறைத்துக் கொள்ளலாம் என்று சொன்னார். நான் உடனே அவர் கரங்களை பற்றிக்கொண்டு ம.தி.மு.க. 234 தொகுதிகளிலும் பலம் உள்ள கட்சி. வாக்கு வங்கி அதிகமாக இருக்கிறது. 2, 3 தொகுதிகளை குறைக்க வேண்டாம். 25 தொகுதிகளே தந்துவிடுங்கள் என்று அவரிடம் சொன்னேன்.


அவருடைய மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக பல வாதங்களை அவர் முன் வைத்தேன். சரியென்று சொல்லிவிட்டு அறிவிப்பு வெளியிடும்போது பேசிக்கொள்ளலாம் என்றார். அதனால் நானும் அதை பத்திரிகையாளரிடம் வெளிப்படுத்திக்கொள்ளவில்லை. இதுதான் அன்று நடந்தது. கட்சியின் முக்கிய தள கர்த்தாக்களுக்கு சீட் ஒதுக்க வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறோம். நானும் நம்பிக்கையோடு இருந்தேன். இந்நிலையில் 8ம் தேதி கூட்டணிக் கட்சிக்கூட்டம் அறிவாலயத்தில் நடந்தது. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். பிப்ரவரி 14ம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் கூட்டம் தில்லியில் சோனியா தலைமையில் நடந்தது. அங்கே என்னை சந்தித்த நிருபர்களிடம் 8ம் தேதி நடந்த கூட்டணிக் கட்சிகள் கூட்டத்தில் நான் கலந்துகொண்டேன் என்பதை குறிப்பிட்டேன். அதோடு தி.மு.க. கூட்டணியில்தான் இருக்கிறேன். கூட்டணி தொடரும் என்றுதான் அறிவித்தேன். அதுவும் பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கிறது. 17ம் தேதி கலிங்கப்பட்டியில் நான் படித்த பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்துகொண்டேன். உயர்நிலைப்பள்ளியாக இருந்த இந்த பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக உயர்த்தியது கலைஞர்தான் என்று குறிப்பிட்டு அவருக்கு நன்றி சொன்னேன். இதுவும் அடுத்த நாள் பத்திரிகைகளில் செய்தியாக வந்திருக்கிறது. இந்த கூட்டணியில் எந்த நெருடலும் ஏற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எனக்கு துளியும் இல்லை.


நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சு தொடர்பாக கலைஞர் ஒரு கருத்தை சொன்னார். தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. நீடிக்கிறதா இல்லையா என்ற சந்தேகத்தை எழுப்பினார். அவர்கள் ஒரு திட்டம் வைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். கூட்டணி தொடர வேண்டுமா என்பது அவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்று கலைஞர் 18ம் தேதி பேட்டி கொடுத்தார். கூட்டணியில் ம.தி.மு.க. இல்லை என்கிற எண்ணத்தை முதன்முதலில் கலைஞர்தான் ஏற்படுத்தினார். பந்து எங்கள் மைதானத்தில் இல்லை என்று கலைஞர் சொன்னார். ஆனால் அப்போதும் ம.தி.மு.க. பந்து தி.மு.க. மைதானத்தில்தான் இருந்தது. நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சுக்கு நான் வருத்தம் தெரிவித்தேன். சில நாட்கள் கழித்து ஆற்காடு வீராசாமி அறிக்கை விட்டார். எங்கள் அவைத் தலைவர் எல்.கணேசன் ம.தி.மு.க. 3வது சக்தி என்று சொன்னதை ஆற்காடு வீராசாமி குறிப்பிட்டு இந்த பேச்சு ஆட்சேபத்திற்குரியது என்றார். அதோடு ம.தி.மு.க. பேரம் பேசுகிறது, நாடகமாடுகிறது என்ற குற்றச்சாட்டையும் வைத்தார்.


ஆற்காடு வீராசாமியின் அறிக்கைக்கு நாங்கள் பதில் அறிக்கை தருவதற்கு முன்பு கலைஞரிடம் பேசினேன். எங்கள் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் பேசிய பேச்சு தவறு. அதற்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று சொன்னேன். ஆனால் ஆற்காடு வீராசாமி அறிக்கை எங்களை தாக்கும் விதத்தில் இருக்கிறதே என்று சொன்னேன். பதிலுக்கு நீங்களும் அறிக்கை கொடுங்கள் என்றார். அப்படி கொடுக்க முடியுமா? ஆற்காடு வீராசாமியின் அறிக்கைக்கு பதில் அறிக்கை கொடுத்தோம். இதன் பிறகு 22ம் தேதி கருணாநிதியை சந்தித்தேன். அப்போது 1, 2 தொகுதிகளை குறைத்துக் கொள்ளுங்கள் என்று சொன்னீர்களே என்று நான் கேட்டேன். நான் அப்படி சொல்லவில்லை என்றார். அண்ணே, 1, 2 குறைத்துக் கொண்டதாக நீங்கள் என்னிடம் முன்பு சொன்னீர்கள் என்று அவருக்கு நான் நினைவு படுத்தினேன். கடைசியில் 20 சீட் தருவதாக சொன்னார். இந்தச் சூழ்நிலையில் 27ம் தேதி மாலை தொலைபேசியில் கலைஞரிடம் பேசினேன். எப்பண்ணே பார்க்க வரலாம் என்று கேட்டேன். நாளை சொல்கிறேன் என்று கலைஞர் சொன்னார். அன்றைக்கு இரவே ஆற்காடு வீராசாமி என்னிடம் தொலைபேசியில் பேசி நாளைக்கு வீட்டுக்கு வருகிறேன் பேசிக்கொள்ளலாம் என்றார். இதன்படி அடுத்த நாள் 28ம் தேதி காலையில் என் வீட்டுக்கு ஆற்காடு வீராசாமி வந்தார். அவரிடம் கலைஞர் 25 சீட் தருவதாக சொன்னார் என்று சொன்னேன். அப்படி கொடுக்க வாய்ப்பில்லை என்று ஆற்காடு வீராசாமி சொன்னார். 21 சீட் வேண்டுமானால் தருகிறோம் என்றார் ஆற்காடு வீராசாமி. எங்கள் கட்சி இப்போது நன்றாக வளர்ந்திருக்கிறது. கிளைக்கழகமே இல்லாத ஊரே இல்லை. ஒன்றிரண்டு குறைத்துக் கொண்டு 22 சீட் கொடுத்தால் ஒப்புக்கொள்கிறீர்களா? என்று கேட்டார் ஆற்காடு வீராசாமி. அது கஷ்டம். 25 என்றால் ஒப்புக்கொள்கிறோம் என்றேன். அடுத்த நாள் மாலைவரை எந்த அழைப்புமே இல்லை. பிப்ரவரி 1ம் தேதி நான் மதுரை செல்வதாக இருந்தது. எந்நேரமும் தி.மு.க.விடம் இருந்து அழைப்பு வரலாம் என்பதால் மதுரை விமானப் பயணத்தை ரத்து செய்தேன். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து என்னிடம் பேசினார். அப்போதும் அதே எண்ணிக்கையை சொன்னேன். அவரும் 22 இடம் தி.மு.க. தலைமை தரத் தயாராக இருப்பதாக சொன்னார். பிப்ரவரி 28ம் தேதியில் இருந்து மார்ச் 1ம் தேதி வரை தி.மு.க. தலைமையிடம் இருந்து அழைப்பு வரும் என்று காத்திருந்தேன். கட்சியில் முன்னணித் தலைவர்கள், கட்சிக்காக பாடுபட்ட முக்கியமானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு சீட் கொடுக்க வேண்டும் அதனால் 25 தொகுதிகள் வேண்டும் என்பதில் நான் பிடிவாதமாக இருந்தேன். 22க்கு மேல் வாய்ப்பே இல்லை என்று தி.மு.க. தலைமை சொல்லியது. 23 சீட்டாவது கொடுங்கள் என்று கெஞ்சி மன்றாடி கேட்டேன். யோசனை செய்வதாக சொன்னார்கள். தி.மு.க. மாநில மாநாட்டில் பேசுவதற்காக பேச்சை எல்லாம் தயார் செய்யும் வேலையில் இருந்தேன். மாநாட்டில் கலந்துகொள்ள ரயிலில் டிக்கெட் எல்லாம் ரிசர்வ் செய்து வைத்திருந்தேன். இந்த சந்தர்ப்பத்தில் தான் தி.மு.க. மாநாட்டில் 22 சீட்டுகள் மட்டும்தான் ம.தி.மு.க.வுக்கு ஒதுக்க முடியும் என்று கலைஞர் பத்திரிகையாளர்களிடம் சொன்னார். தி.மு.க., கூட்டணியில் பல கட்சிகள் அங்கம் வகித்த போதிலும் ம.தி.மு.க.வுக்கு மட்டும் இத்தனை சீட்கள் என்று வெளிப்படையாக கலைஞர் அறிவித்தார். ம.தி.மு.க.வை மட்டும் வித்தியாசமாக பார்த்து இப்படி பேட்டி கொடுத்தது ஏன்? எங்களுக்கு தரக் கூடாது என்று யாராலோ கலைஞருக்கு நிர்ப்பந்தம் வந்தது. 22 சீட் மட்டும்தான் எங்களுக்கு தருவார்கள் என்று கலைஞர் சொன்னது எங்கள் தொண்டர்களை களங்கப்படுத்தியது.


2004 நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சி அதிக சீட் தருகிறதோ அவர்களுடன்தான் கூட்டணி என்று பா.ம.க. அறிவித்தது. அந்தக் கட்சிக்கு தி.மு.க. விரும்பிய சீட்டை கொடுக்கவில்லையா? தி.மு.க. பொதுக்குழுவில் எங்களைப் பற்றி நிறைய செய்திகள் பேசப்பட்டன. ம.தி.மு.க. இனி இருக்க தேவையில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. 22 சீட் கொடுத்தாலும் நாங்கள் விரும்பிக் கேட்கும் தொகுதிகளை தி.மு.க. தலைமை தருமா? தேர்தலில் வேலை செய்யும் மனநிலை அங்கு இருக்குமா? என்பதையெல்லாம் நாங்கள் யோசனை செய்து பார்த்தோம். இரண்டு சட்டசபை தேர்தல்களில் நாங்கள் தனியாக நின்று மிகுந்த சோதனைகளை சந்தித்து கட்சியை நடத்தி வந்த நிலையில் இந்த செய்திகள் எல்லாம் எங்களுக்கு மனக்காயத்தை ஏற்படுத்தியது.


நடைபயணம் மேற்கொண்டு முடிந்த பின்பு நடந்த கூட்டத்தில் நான் பேசினேன். இதற்கு அடுத்த நாள் முரசொலியில் கலைஞர் கடிதம் எழுதினார். தி.மு.க.வை நான் கைப்பற்ற நினைக்கிறேன் என்பதுபோல் அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. அது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. 25 சீட் வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். 25 சீட் கொடுத்தால் சந்தோஷப்படுவோம் என்று தி.மு.க. தரப்பிடம் சொன்னேன். அவர்கள் பிடிவாதமாக இருந்தார்கள். அப்படியென்றால் மாநாட்டுக்கு நாங்கள் வருவது கஷ்டம் என்றேன். மாநாட்டுக்கு பிறகு பேசி முடிவெடுக்கலாம் என்று சொன்னவர், அதற்கு முன்பே 22 சீட் தான் என்று அறிவித்தார். இனிமேல் வேறு வழியில்லை என்று எங்கள் நிர்வாகிகளிடம் பேசி அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்தோம்.


கேள்வி: பொடா வழக்கில் கைது செய்யப்பட்ட நீங்கள் அ.தி.மு.க.வுடன் இணைந்திருக்கிறீர்களே?


பதில்: பொடா சட்டத்தை கொண்டு வந்தது மத்திய அரசுதான். மாநில அரசுக்கு அதில் சம்பந்தமில்லை. பாஸ்ட் ஈஸ் பாஸ்ட். தேர்தலில் கட்சிகள் அணி மாறுவது சகஜம்தான். பண்டாரம் பரதேசி என்று பி.ஜே.பி.யை திட்டிவிட்டு கலைஞர் கூட்டணி அமைக்கவில்லையா? முரசொலி மாறன் மறைந்து அவர் தகனம் நடைபெறும் வரையில் வாஜ்பாய் வந்து பங்கேற்று முடியும் வரையில் அந்த கூட்டணியில் தி.மு.க. நீடிக்கவில்லையா? அடுத்த நாளே காங்கிரசோடு கூட்டணி என்று அறிவிக்கவில்லையா? மிசா கொடுமையில் 2 பேர் இறந்தும் பலர் சிறையில் வாடியும் கொடுமைகள் நடந்த பின்பும் காங்கிரசோடு கூட்டணி வைத்து தி.மு.க. போட்டியிடவில்லையா? நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று சொல்லவில்லையா?


இவ்வாறு வைகோ கூறினார்.

நன்றி: விகடன்
 



முகமூடி

உங்களுக்கு என் கவிதையில் என்ன புரிந்ததோ புரியவில்லையோ எனக்குத் தெரியாது - ஆனால், என் கவிதை எல்லா நேரத்திற்கும்
பொருந்துமாறு எழுதப்பட்டுள்ளது என்பது மட்டும் தெளிவு - நீங்கள் எடுத்துக் கையாண்டமையே அதற்கு சாட்சி.

முழுமையான தகவலுக்கு நண்பன் தளத்தைப் பார்க்கவும்.

அன்புடன்
நண்பன்
 



காப்டன் + BJP + ஸ்வாமி - யின் மூன்றாவது கூட்டணியை ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்!

இந்த கேலிக்கூத்துக் கோமாளிகளிடமிருந்து விடுதலையடைய, இந்தப் பச்சோந்திக் கூட்டங்களுக்குப் பாடம் புகட்டவாவது அந்தக் கூட்டணி வர வேண்டும் என வேன்டுகிறேன்!

இதை விட வேறு நல்ல சந்தர்ப்பம் தமிழக மக்களுக்கும் சரி, அவர்களுக்கும் சரி, கிடைக்காது!

செய்வார்களா?
செய்யவேண்டும்!

ஊர் ரெண்டு பட்டால்,.........!!!

"நண்பன்" அவர்களே!
உங்கள் கவிதை இதற்கும் பொருந்தும்!!

" ஏ தமிழகமே !
அடங்க மறு!
அத்து மீறு!
திமிரி எழு !
திருப்பி அடி!
இதை விட்டால்..
வேறு சமயம்
வாய்க்காது! "
 



BTW, 'திமிர்' என்பதுதான் 'திமிரி' என்றாவதால், 'திமிறி' என்று வல்லினம் இடுவது சரியில்லை என எண்ணுகிறேன். நன்றி!
 



முகமூடி, இட்லி வடை, குசும்பன் போன்றோர் தமிழகச் சட்டசபை தேர்தல் முடியும்வரை வலைப்பதிவு செய்யாமல் இருந்தாலும் பாதகமில்லை என்கிறேன்.. இவர்கள் எழுதி யார் லாஜிக்கை உடைக்க நினைத்தார்களோ, யாருக்குப் பதில் சொல்ல நினைத்தார்களோ அவர்களை எல்லாம் இப்போதைக்கு திருமாவும் வை.கோ.வும் விக்கித்துப் போய் திகைத்து நிற்கும்படி செய்து விட்டிருக்கிறார்கள். எனவே, சட்டசபை தேர்தல் முடியும்வரை வலைப்பதிவில் கனத்த மௌனம் நிலவுமோ என்ற கேள்வி நிலவுகிறது. இனி "உளறுவாயர்களின்" வாயை அடைக்கும்வேலையைத் தங்கள் செயல்கள் மூலம் வை.கோ.வும் திருமாவும் பார்த்துக் கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

Take a vacation Mugamoodi, idly vadai, kusumban et all!

வலைப்பதிவின் நசிவுச் சக்திகளுக்குத் தற்காலிக ஆப்பு வைத்த வை.கோ.வும் திருமாவும் வாழ்க! (அவர்கள் தி.மு.க கூட்டணியைவிட்டு விலகியது பாதகமான ஒன்று என்று நினைக்கிற போதிலும் இந்தச் சாதகம் இருப்பதையும் பதிவு செய்து வைக்கிறேன்!)

பி.கு: ஐயன்மீர், இதை இட்லிவடை, குசும்பன் பதிவிலும் நான் எழுதியதாக நினைத்துக் கொள்ளவும். அங்கே ஏன் எழுதவில்லை என்று கேட்காதீர்கள் :-)

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



// உங்களுக்கு என் கவிதையில் //
உங்கள் கவிதையா அது?? நான் இதை பார்த்து அது திருமாவின் கவிதை என்று நினைத்திருந்தேன். உங்களுடையது எனில் கவிதைக்கு நன்றி.
 



தமிழ்சசியின் திமுகவிற்கு தோல்வியா? பதிவில் நான் எழுதியது ::

நல்ல அலசல். ஆனால் உங்கள் கணக்கில் சில ப்ரச்னைகள் இருந்தன.

பாமகவுக்கும்ம் மதிமுகவுக்கும் (26 அ 30) சரிசமமாக தொகுதிகள் வழங்குவதை பாமக விரும்பவில்லை. அதன் மூலம் மூன்றாமிடம் என்ற தனது இமேஜுக்கு பங்கம் வரும் என்றே கருதியது. சில நாட்களுக்கு முன் திருச்சி மாநாட்டில் தான் கலந்து கொள்ள விதிக்கும் நிபந்தனை என்று மதிமுகவை விட இரு சீட்களாவது வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்ததாக வந்த செய்தியை கவனிக்கவும்.

பாமக விடுதலை சிறுத்தை உள் ஒதுக்கீடு கூட்டணி (30) திருமா விரும்பவில்லை. தன்னை நேரில் அழைத்து கருணாநிதி பேச வேண்டும் என்பதையே ஆரம்பத்தில் இருந்து கேட்டு வருகிறார். நேரில் அழைகப்பட்டால் ஏற்படும் தர்மசங்கடங்களை தவிர்க்கவே கருணாநிதி உள் ஒதுக்கீடு கோஷத்தை முன்னெடுத்தார். அதிமுகவில் கொடுத்த இடத்துக்கு ஓகே சொன்ன திருமா திமுக என்றால் கொஞ்சம் முரண்டு பிடித்திருக்கலாம்.

மற்றபடி மதிமுக வெளியேறியது திமுக எதிர்பார்த்தே செய்த மூவ்தான். இன்றைக்கில்லாவிட்டாலும் நாளை திமுக பதவியில் இருந்து கருணாநிதி ஓய்வு பெறும் நிலை வந்தால் ஸ்டாலினின் எழுச்சிக்கு திமுகவிற்குள் எழும் எதிர்ப்பை வைகோ சுலபமாக அறுவடை செய்வார். அதை கண்டிப்பாக கருணாநிதியோ முக்கியமாக ஸ்டாலினோ விரும்ப முடியாது.

எல்லாவற்றையும் விட திமுக 130 தொகுதிகள் என்பது அதற்கு பாதகமே. அதிமுகவுக்கு பெரிய அளவில் எதிர்ப்பலை இல்லாத இந்த நேரத்தில் 130 தொகுதிகள் என்பது அறுதிப்பெரும்பான்மை எடுப்பதற்கு கொஞ்சம் சவால்தான். மெகா கூட்டணி என்பது மத்திய அரசியலுக்கு நன்றாக இருந்தது. ஆனால் மாநில அரசுக்கு? எங்கே இவ்வளவு கட்சியோடு போட்டியிடும் திமுக அறுதி பெரும்பான்மை எடுக்காமல் போனால் கூட்டணி அரசாக ஆகலாம் என்ற எண்ணம் மக்களை அதிமுகவிற்கே ஓட்டு விழ செய்யும். மாநில அரசில் கூட்டணி ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஏகப்பட்ட ப்ளாக்மெயிலுக்கு உட்படும் மெகா கூட்டணியா அல்லது நிலையான ஆட்சியா என்பதாக ஒரு மனநிலை வரும், அது திமுக மெகா கூட்டணிக்கு எதிர்ப்பாகவே அமையும்.

எல்லாமே எதிர்பார்த்ததுதான். எதிர்பாராத ஆண்டி-க்ளைமேக்ஸ், திருமாவளவன் மட்டுமே. வைகோ முன்பே பிரிந்து சென்றிருந்தால் திருமா திமுக கூட்டணியில் சேர்ந்திருக்கலாம். அப்படியில்லாமல் முன்பே அதிமுக விசியை வளைத்ததுதான் அதன் புத்திசாலித்தனம்.
 



சிவகுமார் அவர்களுக்கு

உங்களுக்குச் சாதகமில்லாத களத்தில் வீசப்பட்டும் கத்திகளுக்குப் பயந்து கொஞ்ச நாள் காணாமற் போவதும் பின்னர் சாதகமான காற்று வீசும் களத்தில் அட்டைப் பட்டாக்கத்தியைச் சுழற்றி வீசி அவர்கள் வெட்டுப்பட்டார்கள் இவர்கள் ஓடிவிட்டார்கள் என்று காற்றிலே கணக்குக் காட்டுவதுமான உங்கள் வீரத்திற்கு முன் இந்த அரசியல்வாதிகள் எம்மாத்திரம்.
தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ என்று சொல்கிறீர்களா அதுவும் சரிதான்.
 



தல, எக்ஸ்ட்ரா லக்கேசு இடுப்புவலியா மாறிப்போச்சு!

அடுத்த பதிவுக்கு ஐடியா: தமிழகத்தின் ஒரே அரசியல் சாணக்கியரிடம்(?) ஒரு தேர்தலுக்கு ஒட்டி உறவாடுபவர்கள் அடுத்த தேர்தலில் எதிரணியினரிடம்(அது கழி தின்ன வைத்த கட்சியாக இருந்தாலும்) போய் தஞ்சமடைவதை பார்த்தால்... சாணக்கியர்கிட்ட ஏதோ சக்தி(?) இருக்கிற மாதிரி இல்ல?

எ.கா: எம்.ஜி.ஆர்., வைகோ,மூப்பனார்,ரஜினி,திருமா.

-- அதே அனானி!
 



தம்பி ஈழநாதனுக்கு,

நான் எங்கும் காணாமல் போவதில்லை. இங்கேதான் இருக்கிறேன் தம்பி! :-) புத்தகம்கூட வந்ததே தம்பி. இன்னும் படிக்கவில்லையா? என்
செலவில் வேண்டுமானால் ஒரு காப்பி அனுப்பி வைக்கட்டுமா? முகவரி தாருங்கள். செய்கிறேன். (இது கிண்டல் இல்லை. நமக்கிடையேயான
வேறுபாடுகளைத் தாண்டி புத்தகங்கள் மீது உங்களுக்கு இருக்கிற அபிமானத்தால் உங்கள்மீது எனக்கும் வேறுபாடுகளை மீறிய வாஞ்சை உண்டு
என்று பதிவு செய்கிறேன்.)

நான் இருப்பதும் என் களம் மற்றும் தரம் சார்ந்த இடங்களில் செயல்படுவதும், கண்ட இடங்களில் காலைத் தூக்குபவர்களுக்கு உறுத்திக்
கொண்டே இருக்கிறது என்பதை நான் அறிந்துதானே வைத்திருக்கிறேன். வலைப்பதிவுகளில் வார்த்தைகளைக் கொட்டி, உங்கள் தரத்திற்கு
இறங்க விரும்பாமல் எதிராளி புறக்கணித்தால் அதற்குப் பெயர் உங்கள் ஊரில் பயந்து போவதா ஈழநாதன். விடுதலைப் புலிகள் கொலைசெய்து
தமிழ்ச்சக எதிர்க்கருத்துடையோரை காலிசெய்வதுபோல, வலைப்பதிவில் எதிர்க்கருத்து எழுதுவோரை எல்லாம் சாம,தான, பேத, தண்ட மற்றும்
பல அநாமதேயப் பெயர்களில் தாக்குவதையே தவமாய்ச் செய்யும்போது, அப்படிச் செய்ய விரும்பாமல், உள்ளுக்குள் சிரித்துவிட்டுத் தன்
காரியத்தில் தொடர்ந்து ஈடுபட்டால், அதற்குப் பெயர் பயமா? அப்புறம் நீங்களும் உங்கள் கும்பலும் ஏன் வலைப்பதிவுகளுக்குள் மட்டுமே
ஜல்லியடித்துக் கொண்டிருக்கிறீர்கள். பிறர் நடத்துகிற பல மேலான ஊடகங்கள் இருக்கின்றனவே. சுந்தர மூர்த்தி போன்றோர் திண்ணையைத்
திட்டிக் கொண்டே திண்ணையில் எழுதுகின்றனர். :-) அந்த மாதிரிகூட வேண்டாம். நீங்கள் பெரிதும் மதிக்கும் பத்மநாப ஐயர் ஆலோசனைக்
குழுவில் அங்கம் வகிக்கும் காலச்சுவடு, மற்றும் மதச்சார்பின்மைக்காகத் தொடர்ந்து குரல் கொடுக்கும் மனுஷ்ய புத்திரன் நடத்தும் உயிர்மை
என்று பத்திரிகைகள் இருக்கின்றனவே. தைரியம் இருந்தால் உங்கள் கும்பல் உங்களின் இந்திய எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, பெரியார் ஆதரவு
கருத்தாக்கங்களை அங்கேயெல்லாம் எழுதலாமே. அங்கே எழுதினால், அநாகரீகமான தரம் தாழ்ந்த வசவுகள் அனுமதிக்கப்பட மாட்டா.
உங்களின் ஆழமற்ற வாதங்களை வெளிச்சம்போட்டுக் காட்ட யாரும் பதில் எழுதிவிடக் கூடும். அப்போது பதில் சொல்பவரை உங்கள்
விருப்பப்படித் தாக்க முடியாது என்றுதானே குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவதுபோல வலைப்பதிவுகளைப் பிடித்துத் தொங்கிக்
கொண்டிருக்கிறீர்கள். தம்பி, நானாவது வலைப்பதிவுகளைத் தாண்டி மாற்றுக் கருத்துடையோரும் எழுதுகிற ஊடகமான திண்ணை போன்றவற்றில்
எழுதுகிற தைரியம் பெற்றிருக்கிறேன். அங்கே எனக்கு வருகிற பொருட்படுத்தத்தக்க எதிர்வினைகளுக்குப் பொறுப்பாக பதில் சொல்கிறேன்.
மரத்தடி போன்ற பல கருத்துடையோரும் பங்குபெறுகிற இணையக் குழுக்களில் எழுதுகிறேன். அங்கே வரும் பொறுப்பான எதிர்வினைகளுக்குப்
பதில் சொல்கிறேன். வலைப்பதிவில் மட்டும் ஜாகையைக் குறுக்கிக் கொண்டு, பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டுவிட்டது என்று
நினைத்துக் கொண்டு இல்லையே.

அடியாட்களுக்கும் இரவல் சிந்தனையாளர்களுக்கும் பயங்கரவாதத்தினை எழுத்தில் கொண்டுவந்து அநாதமதேயமாகக் கழிவு செய்துவிட்டுப்
போகும் கழிசடைகளுக்கும், ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டுகிற அபத்தத்தனங்களுக்கும், தனக்குச் சாதகமான சண்டை எப்போது வரும் அல்லது
பிடிக்காதவரிடத்து எப்போது எதைவைத்துச் சண்டையை ஆரம்பிக்கலாம் என்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலையும்
பெயரற்றவர்களுக்கும் - இவர்கள் எழுத்தில் எல்லாம் காணப்படும் தர்க்கமின்மைக்கும் என்னைவிட நன்றாகப் பதில் சொல்ல இப்போதைக்கு
இங்கே பலர் வந்துவிட்டார்கள் என்பதால் ஓய்வாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன் தம்பி. என் இருப்பே மற்றவர்களுக்கு உறுத்தும்
என்பதை நன்கு அறிந்து வைத்திருக்கிறேன் தம்பி. அதனால், இறையருளால் அவ்வளவு சீக்கிரம் காணாமல் போய்விட மாட்டேன்.
கவலைப்படாதீர்கள்.

ஒரு கதை சொல்கிறேன் கேளுங்கள். பெரியார் தொடர்புடைய கதைதான். பாருங்கள். உங்களுக்குச் சொல்ல வேண்டியே இவ்வளவு நாள்
இந்தக் கதை காத்திருந்திருக்கிறது. பெரியார் பித்தர்களான உங்கள் blogbuddies உங்களுக்கு இதைச் சொன்னார்களா என்று தெரியவில்லை.
:-) கதை என்றாலும் இது உண்மைச் சம்பவம்தான்.

"ஒரு காலகட்டத்திற்குப் பிறகு பெரியாரின் பகுத்தறிவுப் பிரசாரமும் நாத்திகப் பிரசாரமும் வேறுவழியில் தடம்புரள ஆரம்பித்தன. ராமர் பட எரிப்பு,
பிள்ளையார் சிலை உடைப்பு, என்ற பாதையிலும், பிராமணர்கள் மீது, அவர்கள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைந்து தாக்குதல் தொடுப்பது,
காவேரி ஆற்றில் குளித்துவிட்டு நெற்றியில் நாமத்துடன் திரும்பும் வைஷ்ணவர்களை (அய்யங்கார்களை) பலவந்தமாக இழுத்து நாமத்தை நாவால்
நக்கி அழிப்பது, அதன் மூலம் அவர்களை மீண்டும் ஆற்றில் குளிக்கும்படிச் செய்வது போன்ற அற்பத்தனமான காரியங்களில் பெரியாரின்
ஆதரவாளர்களான திராவிடர் கழகத்தினர் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் வைணவர்கள் ஒன்று சேர்ந்து திருப்பி அடிகொடுத்த பின்புதான் இந்தப் போக்குகள் நின்றன."

தம்பி, இதை எழுதியவர் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா (மார்க்ஸிஸ்ட்) சார்புடைய ஒருவர். யாரென்று உங்களிடையே இருக்கிற
பெரியாரிய அறிவுஜீவிகளைக் கேளுங்கள். சொல்வார்கள்.

"ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் வைணவர்கள் ஒன்றுசேர்ந்து திருப்பி அடிகொடுத்த பின்புதான் இந்தப் போக்குகள் நின்றன" என்ற வரியிலேயே
நான் சொல்லவந்த விஷயம் இருக்கிறது. வலைப்பதிவில் என்னைப் போன்றோர் சொந்தப் பெயரில் மட்டுமே எழுதிக் கொண்டு, கருத்து
வேறுபாடுகளைக் கருத்து வேறுபாடுகளாக மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தப்போது, கும்பல் சேர்த்துக் கொண்டு, ஒருவரே பல பெயர்களில்
எழுதுகிற தகிடுதத்தங்கள் செய்துகொண்டு, எதிரிக்கு எதிரி நண்பன் என்ற சாக்கில் தாங்கள் உடன்படாத கருத்துடையோரும் சிவகுமாரைத்
தாக்கினால் அவரை ஆதரிப்பது தர்மம் என்று கச்சைக் கட்டிக் கொண்டு, பலர் நின்றபோதும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் என்
போக்கில் எழுதியே வந்திருக்கிறேன். சொல்லப்போனால், ஒரு அளவுக்குமேல் இப்படிப்பட்ட polemics-ல் எனக்கு ஆர்வம் போய்விட்டு,
உருப்படியான விஷயங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வந்திருக்கிறேன். பத்துவருடங்களாக இணையத்தில் சண்டை மட்டுமே போட்டு
வருகிறவர்களுக்கும் அவர்களின் சிஷ்யப் பிள்ளைகளூக்கும் அது பயந்து பின்வாங்கியதாகத் தோன்றினால் அதுவும் நன்றே.

இன்றைக்கு இணையத்தில் - உங்கள் பாஷையில் உங்களுக்குப் புரியும்படி பேசவும் உங்கள் டெக்னிக்குகளைப் பயன்படுத்தி உங்களுக்குப் பதில்
சொல்லவும், ஸ்ரீரங்கத்தில் வைணவர்கள் ஒன்றுசேர்ந்து திருப்பி அடித்தார்களே - அப்படித் திருப்பி அடிக்கவும் பலர் வந்துவிட்டனர். முகமூடி,
குசும்பன், இட்லி வடை, ரஜினி ராம்கி, ஞானபீடம் உள்ளிட்ட மிகப் பலர். அவர்கள் உங்களைப் போன்ற கருத்துடையோரை வறுத்தெடுப்பதை
நானும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் தம்பி. அப்படிப் பலரும் இப்போது உங்களையெல்லாம் போட்டு உடைக்க
ஆரம்பித்திருப்பது உங்களைப் போன்றவர்களுக்குப் பொருமுகிறது. எனக்கோ, வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்ற இயற்கையின்
நியதையைச் சொல்கிறது.

அது மட்டுமா? விடுதலைப் புலிகளைப் பற்றி நாங்கள் பேசினால் மட்டும்தான் அது இந்திய மேலாதிக்கவாதம். ஆனால், திருவாளர்கள் இரயாகரன்,
ப.வி.ஸ்ரீ, ஜனநாயகம், பரமுவேலன் போன்றவர்கள் அதைப் பற்றி விவரமாகவும், உங்களுக்கு இணையாகவும் எழுத வந்துவிட்டார்களே. அதையும்
பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் தம்பி.

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும் தர்மம் மறுபடியும் வெல்லும் என்ற நம்பிக்கையுடைய யாரும் ஓடுவதில்லை தம்பி. கருமத்தில் கண்ணை
வைத்துக் கொண்டு, காலத்திற்காய்க் காத்திருப்பார்கள். நீங்களும் நீங்கள் கடைபிடிக்கிற தர்மமும் எப்படி என்று தெரியவில்லை.

உங்களுக்கு ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள ஆசை. உங்களின் வழிகள் எனக்கு உவப்பில்லை என்றாலும், உங்கள் நாடு பற்றியும் அங்கே
உங்களுக்குத் தேவைப்படும் உரிமைகள் பற்றியும் உங்களுக்கு உள்ள உணர்வுகளை மதிக்கிறேன். என்னைப் போன்றவர்களிடம் போரிடுவதைவிட
அது மிகப்பெரிய போராட்டம். ஈழநாதன் என்ன விமர்சித்தாலும் இந்தியா இருக்கும், சிவகுமார் இருப்பான். இல்லை எனக்கு இந்தியாவும்,
இந்தியாவின் சாதிகளும், சிவகுமாரும் அவரின் நண்பர்களும்தான் முக்கியம் என்று சொல்வீர்களேயானால், அது உங்கள் பிரச்னையைத் தீர்த்துக்
கொள்வதைவிடப் பக்கத்துவீட்டுக்காரன் பிரச்னையைத் தீர்க்கிற உங்கள் ஆர்வத்தைக் காட்டுகிறது என்று எடுத்துக் கொள்கிறேன். :-)

ரொம்ப நாள் கழித்து உங்களுடன் உரையாடியதில் மகிழ்ச்சி. உங்களுக்கான இந்தப் பதிலில் பலருக்கும் பல பதில்கள் பொதிந்துள்ளன. இனி
இதைத் தொடர விருப்பமில்லை. முடிந்தால் இணையத்தில் உங்கள் அளவுக்கு, உங்கள் லெவலுக்கு இறங்கி உங்களுடன்
விளையாடுகிறவர்களுக்குப் பதில் சொல்லுங்கள். உங்கள் லெவலுக்கு இறங்கவோ விளையாடவோ எனக்கு விருப்பமில்லை.

இல்லை, பார்ப்பனிய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, பெரியாரியம் குறித்த உங்கள் குருநாதர்களின் கருத்தாக்கங்களுக்கு நான் பதில் சொல்ல
வேண்டுமென்றால், அதற்கும் தயாராக இருக்கிறேன். பொதுவான ஊடகங்களான திண்ணை, காலச்சுவடு அல்லது உயிர்மை பொன்ற
பத்திரிகைகளில் உங்கள் குருநாதர்களை எழுதச் சொல்லுங்கள். அவை பிரசுரிக்கப்பட்டால் (பிரசுரிக்கப்படுகிற தகுதி அவற்றுக்கு இருந்தால்!),
நானும் பதில் எழுதுகிறேன். அது ஆரோக்கியமான விவாதமாக இருக்கும். அப்போது அநாமதேயப் பெயரில் யாரும் காலைத் தூக்கிக் கண்ட
இடத்தில் கழிந்து உங்களைப் போன்றவர்களுக்கு ஆதரவு தர முடியாது.

அன்புடன், பி.கே. சிவகுமார்

PS: mugamoodi, sorry for using your blog to post this.
 



முகமூடி, சம்பந்தமில்லாத பின்னூட்டத்துக்கு மன்னிக்க:

PKS - உங்கள் பின்னூட்டத்தினுள் இருப்பதாக நான் உணரும் தொனி குறித்து: சரித்திரம் திரும்புகிறது என்று தேய்ந்துபோன ஒரு சொலவடை இருக்கிறதே - நீங்கள் எழுதியுள்ள தொனியைப் பார்த்தால் அது நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை. முகமூடி, குசும்பன், ஞானபீடம் போன்றவர்கள் எந்த எளக்கியவாதிகளை வறுத்தெடுக்கிறார்களென்பது ஒருபுறம் இருக்கட்டும், ஆனால் உங்கள் பின்னூட்டத்திலுள்ள "நான் யார் தெரியுமா" தொனியை பல நிஜ எளக்கியவாதிகளிடம் நேரடியாகப் பார்த்திருப்பதால், இங்கேயும் அதைப் பார்க்கையில் பீறிட்டு வரும் சிரிப்பை அடக்கமுடியவில்லை.

//வலைப்பதிவில் மட்டும் ஜாகையைக் குறுக்கிக் கொண்டு,//
பி.கே.சிவக்குமார் - நீங்கள் யார்? ஈழநாதனுக்கும் பிறருக்கும் ஜிங்சக் தட்டுவதுதான் என் வேலை, அதற்காகத்தான் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு வருகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் விருப்பம், நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஒன்றுந்தெரியாத அறிவிலியான என் போன்றவர்களுக்கு விளக்கவும் - பி.கே.சிவக்குமார் யார்? சிலபல மாதங்களுக்குமுன் ஜெயமோகன் இலவச அறிவுரைத் திட்டத்தில் வந்து விழுந்த ரேஷன்கடை அறிவுரைகள் போல வலைப்பதிவுகளைப் பொதுப்படைப்படுத்த உங்களுக்கு என்ன முகாந்திரம் உள்ளது? நீங்கள் இயங்கும் தளம் வேறு, கீழே இறங்கி வந்து உங்களுக்குப் பதில் சொல்கிறேன் என்ற ரீதியில் எழுதுவது எதற்காக? முகமூடி போன்றவர்களுடனுமே பல வேறுபாடுகள் இருப்பினும், "வலைப்பதிவில் மட்டும் லொடுக்கிக்கொண்டு என்ன ராமாயணம் இது" என்ற ரீதியில் நானோ, அல்லது வேறு யாரோ கூட மேதாவிச் சகதியை வீசினால் அது வெறும் கிறுக்குத்தனம் என்றே சொல்வேன். எழுதுவதைக்குறித்து விமர்சிப்பது தவறில்லை, ஆனால் "இங்கே மட்டும் எழுதும் உனக்கெல்லாம் என்ன பெரிய பேச்சு" என்ற ரீதியில் விமர்சிப்பதுதான் தமிழ்நாட்டு அசல் "எளக்கியவாதிகளின்" தோரணை என்பது நான் சொல்லாமலே விளங்கும் உண்மை - அந்தத் தளத்தில்தான் நீங்கள் இயங்குகிறீர்கள் எனில் - மிக்க சந்தோஷம்.
 



இருந்தால் உங்கள் கும்பல் உங்களின் இந்திய எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, பெரியார் ஆதரவு
கருத்தாக்கங்களை அங்கேயெல்லாம் எழுதலாமே. அங்கே எழுதினால், அநாகரீகமான தரம் தாழ்ந்த வசவுகள் அனுமதிக்கப்பட மாட்டா.

http://www.thinnai.com/pl0106063.html

thinnayil vandha communal go katturayai meendum oru murai padithu paarthu vittu sollungal. enakku adhai padikum pozudhu nan padipadhu 'thinnai'ya saroja deviya endru sandhegam vandhadhu.
 



சன்னாசி,

உங்கள் தொல்லை தாங்க முடியவில்லை. :-) யார் யாரைப் பற்றி எழுதினாலும் தன்னைப் பற்றியோ என்று ஒரு தொப்பியை எடுத்து மாட்டிக் கொண்டு வந்துவிடுகிறீர்கள். பெயரிலியாக (anonymous)
எழுதுவது அந்த அளவுக்கு உங்களை உறுத்துவது ஒரு காரணமோ என்னவோ தெரியவில்லை. யாரும் கேட்டால் என்னைப் பற்றி உனக்குத் தெரிய வேண்டியதில்லை என்று ஒரு டயலாக் வரும்.
ஆனால் நீங்கள் மட்டும் மற்றவரை யார் நீங்கள் என்று கேட்கலாம். மனித உரிமைகளை மதிப்பவர்களே மனித உரிமைகளைப் பற்றிப் பேசும் தகுதி பெற்றவர்கள் என்பதுபோல, தங்களைப் பற்றிய
அடையாளங்களைப் பொதுவில் வைக்கத் தயங்காதவர்களே மற்றவர்களை யார் நீங்கள் என்று கேட்கத் தகுதியானவர்கள் என்று உங்கள் வாதத்தைப் புறந்தள்ளுகிறேன். நான் யாரா?
பரதேசியிடமிருந்தும் கற்றுக் கொள்ள விஷயம் இருக்கிறது என்றுணர்ந்து ஒழுகிய சங்கரரின் மரபும், சங்கரருக்கே சொல்லித் தந்த அந்தப் பரதேசியின் மரபும் ஒருங்கிணைந்தவன். இந்த இடத்தில்
கொஞ்சம் ஜெயமோகனையும் சேர்த்துக் கொள்கிறேன். அப்போதாவது இந்தப் பின்னூட்டத்துக்கு உங்களைப் போன்ற பெயரையும் அடையாளங்களையும் வெளியிட்டுக் கொள்வதை வெட்கமாக
பாவிக்கிறவர்களிடம் இலக்கிய அந்தஸ்து கிடைக்கும் என்பதால் இல்லை. ஜெயமோகன் என்ற பெயர் உங்களை எரிச்சல்படுத்தினால் அதில் வருகிற சந்தோஷத்தை அனுபவிக்க.

"காந்தியின் வெளிப்படைத் தன்மையை அவருக்கு எதிரான ஒழுக்கவியல் ஆயுதமாகக் கையாள்வது எந்த வகையில் நியாயம் என்பதே என் கேள்வி. நேரு சிரத்தா மாதாவைச் சுரண்டினார். மௌண்ட்
பாட்டன் நேருவைக் கையாள அவருக்கு லேடி மௌண்ட் பாட்டனின் உறவு உதவியது. காந்தியின் பலவீனங்களும் அற்பத்தனங்களும் அவரது வெளிப்படைத் தன்மையாலேயே மன்னிக்கப்படுவது
மட்டுமல்ல மகத்துவப்படவும் செய்கின்றன என்றேன்." (மகாத்மா காந்தி பற்றி சு.ரா.விடம் சொன்னதாக ஜெயமோகன் தன்னுடைய நினைவின் நதியில் நூலில்.)"

எனவே, பல பெயர்களில் உங்களைச் சார்ந்தவர்கள் (நீங்கள் அல்ல!) அநாமதேயமாக உதிர்க்கிற எரிச்சலூட்டும் வரிகளும் பாவனைகளும் உங்களை எரிச்சலூட்டவில்லை. என்னைப் போன்றோர்
சொந்தப் பெயரில் அதற்குப் பதிலாக எழுதும்போது மட்டுமே உங்களுக்கு அதன் தொனி உங்களுக்குச் சங்கடம் தருகிறது என்றால் என்னைத் தயவுசெய்து படிக்காதீர்கள். பொதுவில்
எழுதவந்துவிட்டபிறகு, ஆபாசமாக இல்லாத எதையும், தொனி சரியில்லை என்றும் எரிச்சலூட்டுகிறது என்றும் புலம்புகிறவர்கள் பேசாமல் லாலி பாப் சாப்பிட்டுக் கொண்டு பார்க்கில் விளையாடலாம்.
எரிச்சலூட்டுகிற வரிகளைப் படிக்கிற நான் அதற்குப் பின்னே இருக்கிற விஷயத்துக்கு (விஷயம் இருந்தால்) முடிந்தால் பதில் சொல்வேன். இல்லையென்றால், இதற்குப் பதில் சொல்வது வேஸ்ட்
என்று போய்க் கொண்டிருப்பேன். எரிச்சலூட்டும் தொனி என்று எப்படி எழுதலாம் என்று வகுப்பெடுக்கிற பொடிமட்டையை எதிரணித் தரப்பாக நின்று பிரிக்க மாட்டேன். அதிலும் பாருங்கள். என்
பதிலுக்கு முன்வந்த ஈழநாதனின் கமெண்ட் உங்களுக்கு நிரம்பவே பிடித்திருக்கிறது போல. அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. என் தொனி யாருக்கும் பிடிக்காவிட்டால், யாரையும் சீண்டினால்,
எனக்கு மிகவும் சந்தோஷம். அவர்களை என் எழுத்து அந்த அளவு பாதிக்கிறது என்று. உங்கள் கமெண்ட்டிலிருந்து உங்களை என் எழுத்து பாதித்திருக்கிறது என்று தெரிகிறது. நிறையவே மகிழ்ச்சி.

உங்களை எரிச்சலூட்டுவது என் முந்தைய பின்னூட்டத்தின் நோக்கம் இல்லை. ஆனால், வலைப்பதிவுகளில் முன்னர் என்ன நடந்தது என்று எதுவும் தெரிந்து கொள்ளாமலேயே (அல்லது தெரிந்தும்
தெரியாததுபோல) cross-fireகளில் மாட்டிக் கொள்கிறீர்களோ அல்லது தெரிந்தே வருகிறீர்களோ என்று தெரியவில்லை. ஈழநாதனைத் தம்பி என்று அழைத்ததற்குக் காரணம், கடந்த வருடங்களில்
ஒன்றிரண்டு முறை அவர் என்னை அண்ணா என்று அழைத்து எழுதியிருக்கிறார். அதனால் அவரைத் தம்பி என்று அழைத்திருக்கிறேன். அப்புறம் வலைப்பதிவுகளைவிடப் பிற ஊடகங்கள் மேலானவை
என்று நான் சொன்னதாக நீங்கள் சொல்வது அப்பட்டமான திரித்தல். ராக்கெட் சயன்ஸைக் கொடுத்தாலும் கூட அதை டாய்லெட்டாகப் பயன்படுத்துகிற சிலர் இருக்கிற சூழலில், அவர்களுடன்
செய்ய முயன்ற எந்த வாதமும் உருப்படியான பலனைத் தராமல், தனிமனித, அநாமதேயத் தாக்குதல்களாக ஆனதைப் பார்த்தபின்னரும், அவர்கள் நான் பயந்து ஓடிவிட்டேன் என்று சொல்லும்போது,
"பயந்து ஓடவில்லை அம்பி. இருவருக்கும் பொதுவான இடத்தில் வேண்டுமானால் கச்சேரியை வைத்துக் கொள்ளலாம்" என்று சொல்வது உங்களுக்கு இப்படிப் புரிந்திருந்தால் என்ன செய்ய?
சன்னாசியின் அறிவுச்சாயங்கள் வெளுக்கின்றன என்று சந்தோஷப்படுவதைத் தவிர.

என்றைக்கு உங்களைப் பற்றி வேறு யாரோ எங்கேயோ எழுதியதற்கு, அதற்கும் முகமூடிக்கும் என்ன சம்பந்தம் என்று முகமூடி வெளிப்படையாகக் கேட்டபின்னும், அதே பொடிமட்டையைத் திருப்பித்
திருப்பி முகமூடியின் பதிவில் பிரித்துக் கொண்டிருந்தீர்களோ அன்றைக்கே எனக்குக் கொஞ்சம் சந்தேகம்தான். சன்னாசிக்கு ஏதோ பிரச்னை இருக்கிறதென்று :-). அது மட்டுமா, மரணச்
செய்தியை அறிவிப்பது என்பது சீரியஸான விஷயம். அந்தப் பதிவில் கூட, "பதிவுக்கு நன்றி" என்று முதுகு சொறிய வேண்டாம் என்ற பொருளில் குசும்பன் எழுதியதை, அவர் மரணச் செய்தியைக்
கிண்டல் செய்கிறார் என்று ஒரு அதிஅற்புதக் கண்டுபிடிப்பு செய்து உங்கள் பதிவில் விளக்கினீர்களே, அன்றைக்கு ஆரம்பித்தது இந்தச் சந்தேகம் என்றும் சொல்லி வைக்கிறேன். அறிவுஜீவி என்பவர்
படிப்பவர் இல்லை, சிந்திக்கிறவர் என்று ஜெயகாந்தன் சும்மாவா நச்சென்று சொன்னார். பாருங்கள் ஜெயமோகன், ஜெயகாந்தன் என்று இரண்டுபேரையும் கொண்டு வந்துவிட்டேன் பின்னூட்டத்தில்.
உங்களை எரிச்சல்படுத்தத்தான். :-)

ஈழநாதன் மற்றும் அவர் கும்பலுடனான சண்டையில், அவர்களைவிட நான் மேலானவன் என்று சொல்லிக் கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்று தெரிய
வேண்டுமானால், கடைசி மூன்று நான்கு வருட இணைய விவாதங்கள் குறித்த முழுமையான சித்திரத்தை இரண்டு பக்கமும் சாராத யாரிடமிருந்தாவது கேட்டு முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.

என்னைப் பார்த்து பயந்து ஓடிவிட்டார் என்று ஒருவர் சொல்லும்போது, ஓடவில்லை அம்பி. இருக்கிறேன். வலைப்பதிவில் மட்டுமில்லை. பிற ஊடகங்களிலும் இருக்கிறேன் என்பதையும் (ஆனால்
அவர்கள் வலைப்பதிவு தவிர வேறு எங்கும் எழுதும் தைரியம் அற்றவர்கள் என்பதையும் சுட்டி), வலைப்பதிவில் உங்களுடனான விவாதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை என்பதற்கானக் காரணத்தைச்
சொல்லிவிட்டுப் பொதுவான பிற ஊடகங்களில் விவாதத்துக்குத் தயார் என்று சொல்வதை, வலைப்பதிவுகள் குறித்த விமர்சனமாகத் தப்பும்தவறுமாகப் புரிந்து கொள்ளும் சன்னாசியே,
வலைப்பதிவுகளைப் பற்றிய என் விமர்சனம் அது என்று கற்பனை செய்து கொண்டாலும், வலைப்பதிவுகளைப் பற்றிய விமர்சனத்தை நான் வைக்கக் கூடாது என்று சொல்வதற்கு நீங்கள் யார்? என்
வலைப்பதிவில் நான் தொடர்ந்து எழுதி வந்திருக்கிறேன். உங்களைப் போன்ற புதியவர்கள் வலைப்பதிவில் எழுத வந்தபோது ஈழநாதன் கும்பலைச் சார்ந்தோர் உங்களைக் கண்டுபிடிக்கும்முன்னேயே,,
"நன்றாக எழுதுகிறார். இவர் கருத்துகளுடன் ஒத்துப் போகவில்லை என்றாலும் இவரைப் படியுங்கள்" என்று முதலில் மரத்தடி இணையக் குழுவில் எழுதியவன் நான். எனவே, வலைப்பதிவுகளில்
வருகிற நல்ல விஷயங்களை யார் எழுதினாலும் பாராட்டுகிற என்மீது வேண்டுமென்றே திரிக்கிற நோக்கத்தில் குற்றச்சாட்டுகள் வைக்கிறீர்கள் என்று நான் குற்றம்சாட்டுகிறேன்.

என் எழுத்து மற்றவரை எரிச்சல் படுத்தவும் சீண்டவும் செய்து,. அதன்மூலமாவது அவர்கள் சிந்தித்தால் மகிழ்ச்சியே. ஐம்பதுவருட காலப் பெரியார் பேச்சும் எழுத்தும் நீங்கள் பேசுகிற
தொனியிலக்கணத்தின் முன்னே நிற்க இயலாது என்பதை உணராமல் உளறிக் கொண்டிருக்கிறீர்களே சன்னாசி? ஒருவேளை, இலக்கணம் எல்லாம் சிவகுமார்களுக்கு மட்டும்தானா (உங்கள்
அகராதியில்)

இதற்குமேல் உங்களிடம் விவாதிக்க விருப்பம் இல்லை. விஷயம் இதுதான். திருமா மற்றும் வை.கோ.வைப் பற்றிய முகமூடியின் பதிவு இது. முடிந்தால் உங்கள் விமர்சனங்களை அதுகுறித்து
வையுங்கள். நானும் படிக்கிறேன். திருமாவையும் வை.கோ.வையும் தலையில் கொள்கை வீரர்களாகத் தூக்கி வைத்து ஆடிக் கொண்டிருந்தவர்கள், எதிர்க்கருத்து உடையோரை பார்ப்பனியத்துக்கு
விலைபோய் விட்டதாகக் குற்றம் சாட்டியவர்கள், திருமாவும் வை.கோ.வும் பிராமணரான அம்மாவிடம் இன்று சரணாகதி அடைந்ததை ராஜதந்திரம் என்று ஏன் பம்மாத்து செய்து
கொண்டிருக்கிறார்கள்? ஆளுக்கு ஒரு நியாயமா? பேச வேண்டிய விஷயம் இதுதான். ஓட்டுப் பொறுக்குகிற, பதவியை, அதிகாரத்தை எதிர்பார்க்கிற அரசியல் சமரசங்கள் - ராஜதந்திரங்கள். ஆனால்,
ஒரு விஷயத்தில் எந்தப் பலனையும் எதிர்பாராமல் யாரும் கருத்துச் சொன்னால், அவர்கள் விலைபோனவர்களா?

அதைவிட்டுவிட்டு இந்த இடத்தில் பி.கே. சிவகுமாரைப் பற்றிப் பேசுவது, வேறு ஒருவர் செய்துவந்த பதிவைத் திசைதிருப்பும் வேலையை நீங்களும் ஈழநாதனும் தற்போது ஏற்றுக்
கொண்டிருக்கிறீர்களோ என்ற சந்தேகத்தையே விளைவிக்கும்.

இனி உங்களுடன் பேச ஒன்றுமில்லை. பொடிமட்டையைத் தொடர்ந்து பிரியுங்கள். பொடியின் காரம், மணம், குணத்தை மற்றவர்களும் அறிய அது உதவும்.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



நான் உங்களை Tag செய்துளேன். இங்கே பார்க்கவும்

[இது கட்டாயம் இல்லை. தொடர்ந்தால் மகிழ்வேன்]
 



Another related OR unrelated (as the case may be :-)

http://kusumban.blogspot.com/2006/03/blog-post_05.html
 



Another related OR unrelated link (as the case may be :-)
 



அன்பின் நண்பர் சிவகுமார் அவர்களுக்கு
முதலில் உங்கள் புத்தகம் பற்றி.
அதை இன்னமும்படிக்கவில்லை ஆனால் கட்டாயம் படிக்க எண்ணியிருக்கிறேன் விவாதங்களுக்கு அப்பாற்பட்டு புத்தகங்களை எனக்குப் பிடிக்கும் அதைச் சுட்டியதற்கு நன்றி வாசிப்பில் நான் எதிரி நண்பன் பார்ப்பதில்லை எல்லோரிடமும் சொல்வதற்கு ஏதோ ஒன்று இருக்கிறது அது அட்லாண்டிசுக்கு அப்பால் நூலிலும் இருக்கும் அதை நீங்கள் எப்படிச் சொல்லியிருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அதை அளவிடுவேனே ஒழிய கொள்கைகளை வைத்து எழுத்தை அளப்பதில்லை.எனக்குப் புத்தகம் அனுப்பும் வீண் சிரமம் வேண்டாம் ஒருவேளை ஒரு பொழுதில் அதனை விமர்சிக்கவேண்டி வந்தாலும் நீங்கள் அனுப்பியதான நினைவு நேர்மையான விமர்சனத்தை வரவிடாது.திலீப்குமார் இருக்க என்ன கவலை அவரிடம் சொல்லி வாங்கிக்கொள்கிறேன்

உங்களின் அட்டைப்பட்டாக்கத்தி வீச்சுக்கு தலையைக் கொடுக்கும் போதே வெட்டுப்படும் இல்லாவிட்டாலும் வெட்டியதாய்ப் பீற்றுவீர்கள் என்று தெரிந்தே தலையைக் கொடுத்தேன் ஆனால் இந்தளவு கீழிறங்கி உன் லெவல் என்ன என் லெவல் என்னவென்றெல்லாம் பேசுவீர்கள் என எதிர்பார்க்கவில்லை.

தமிழ்நாட்டின் அரசியல் பற்றி நான் பெரிதாகக் கவலைப்படுவதுமில்லை மதிப்பதுமில்லை படித்துத் தெரிந்துகொண்ட அளவில் நல்லகண்ணு அவர்களைப் பிடிக்கும் அவ்வளவுதான்.ஆக வைகோ கட்சி மாறியதிலோ திருமா கட்சி மாறியதிலோ அவர்களைச் சார்ந்திருக்கும் மக்களுக்கு நன்மையேதும் கிடைத்தால் சரி என்றளவில் எனது ஆர்வம் நின்றுவிடுகிறது அதற்காக நான் படும் கவலை அவர்களுக்கு ஒரு வாக்கைத்தானும் கூட்ட முடியாத நிலையில் நான் கவலைப்பட்டு என்ன பிரயோசனம்.

அதை முகமூடி கிண்டலடிப்பதைக் கூட வழமையான புன்னகையுடன் கடந்துபோய்விட்டிருப்பேன் ஆனால் அண்மைக்கால முகமூடியின் பதிவுகளில் நீங்கள் இடும் பின்னூட்டங்கள் ஏற்படுத்திய எரிச்சல் நாலு வரியாவது எழுதத் தூண்டியது.தமிழ் வலைப்பதிவுகளின் நாட்டாமையாகவோ ஞானபீடாதிபதியாகவோ உங்களைக் கருதிக்கொள்ள உங்களுக்கு உரிமை உண்டு ஆனால் அதை வைத்து ஏ தமிழ் வலைப்பதிவாளர்களே முகமூடி எழுதுவதுதான் நேர்மை நியாம் அப்படியெல்லாம் உங்களால் எழுத முடியுமா முகமூடியைப் பாற்றுக் கற்றுக்கொள்ளுங்கள் என்று வெறுங்காற்றில் நீங்கள் வாளைச் சுழற்றுவதைப் பார்க்கும்போது இவ்வளவு காலமும் நீங்கள் என்ன செய்துகொண்டிருந்த கேள்வியும் அதனுடன் உங்கள் அரசியல் மீதான எரிச்சலும் மிகுகின்றன.

உங்கள் மொழியில் சொல்வதாகவிருந்தால் காற்றடிக்கும் திசையில் நீங்கள் காலைத் தூக்கும்போது வாரித்தூற்றும் நீர் என் முகத்திலும் படுவதாக உணர்ந்ததாலேயே அப்படி எழுதினேன்.நாய் தனது இருப்பையும் இருப்பிடத்தையும் காலைத் தூக்குவதன் மூலம் தான் நிறணயித்துக்கொள்கிறது அதையே நீங்களும் செய்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது ஏனென்றால் பீடத்தில் இருப்பவர்கள் அவ்வப்போது சவுண்டு விட்டு இருப்பை நிச்சயப்படுத்திக் கொள்ளவேண்டும் இல்லாவிட்டால் அடுத்த நாளே ஊர் உலகம் மறந்துவிடும்.இதனை உங்கள் குருநாதர்கள் செயகாந்தனிடமிருந்தும் சோவிடமிருந்தும் சரியாகக் ஐயந்திரிபறக் கற்றுத் தேர்ந்துள்ளீர்கள் என நினைக்கிறேன் உங்கள் பீடத்தைச் சுற்றி நீங்கள் காலைத் தூக்கிக்கொள்ளுங்கள் எங்களுக்கு அறிவுரை சொல்வதெல்லாம் வேண்டாம் என்பதுதான் எனது குரலின் மொத்தச் சாராம்சம்.

வலைப்பதிவுக்குள் குண்டுச்சட்டி ஓட்டிக்கொண்டிருப்பது பற்றியான உங்கள் விளக்கம் அருமை.இங்கே வலைப்பதியும் அனேகமானோருக்கு திண்ணையிலும் மரத்தடியிலும் நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள் என்று தெரியும் அங்க்கெல்லாம் மாற்றுக்கருத்தாளர்களுடன் நீங்கள் கருத்தாடும் விதம் ஊரறிந்த ரகசியம் புதிதாக ஏதாவது சொல்லுங்கள் அல்லது காலச்சுவட்டிலோ உயிர்மையிலோ எதையாவது எழுத முயற்சி பண்ணுங்கள் வலைப்பதிவில் அவ்வப்போது காட்சி கொடுத்து அறிவுரை சொல்வதைவிட உங்கள் பீடத்தை அலங்கரிக்க அதுதான் சரியான வழி நானும் என்னால் முடிந்தவரை அடுத்த முறை காலச்சுவடு கண்ணன் சிங்கப்பூர் வரும்பொழுது காலைக் கையைப் பிடித்தாவது என்னுடைய கட்டுரையொன்றைக் காலச்சுவட்டில் ஒப்பேற்றி விடுகிறேன் அதன் பின்னராவது உங்களை நிமிர்ந்து பார்த்து உரையாடும் இலக்கியத் தகுதி எனக்குக் கிடைக்கிறதா பார்ப்போம்.

இன்றுவரை வலைப்பதிவுகளில் பார்ப்பனியம்,இந்திய தேசியம்,தலித்,பெண்ணியம் என்று பல விவாதங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன தங்கமணி எந்தவித காழ்ப்புணர்ச்சியும் அற்றவகையில் அழகாக எழுதுகிறார் எப்போதாவது நின்று நிதானமாக நீங்கள் வாதிட்டிருக்கிறீர்களா?நீங்கள் சொல்லும் சீடப்பிள்ளைகளும் சரி எப்போதாவது நேர்மையாக விவாதத்தை எதிர்கொண்டிருக்கிறார்களா அவர்களால் முடிந்ததெல்லாம் பதிவரைக் கிண்டலடிப்பதுதான் அதை வறுத்தெடுப்பதாகப் பீற்றிக்கொள்வதை சொறிந்துபோய்ப் புன்னான முதுகுடன் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்

இப்படியான வேளைகளில் காணாமற் போய்விட்டு காற்றடிக்கும் நேரத்தில் அட்டைப் பட்டாக்கத்தியைச் சுழற்றிக்கொண்டு வாருங்கள் வந்து மூன்றுதரம் சுழற்றிவிட்டு இந்தக் களம் எனக்கு ஏற்றதில்லை அங்கே வா இங்கே வாவென்ற அறைகூவல்கள் விடுங்கள் அதை யாரும் கேட்டால் முழ நீளத்துக்கிற்கு உங்கள் சாதனைகளைப் பட்டியலிட்டு உங்களை நீங்களே நக்கிக்கொள்ளுங்கள்(நன்றி குருநாதர்) யாரு தடுத்தா?இனியும் கேக்குறதுக்கு எனக்கென்ன விசரே?
 



சிவகுமார்; என்னுடைய "அறிவுஜீவிச்" சாயம் வெளுத்தால் வெளுத்துவிட்டுப் போகிறது, அதுபற்றிக் கவலையில்லை - சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும் என்பதை பிறர் சொல்லித் தெரிந்துகொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலையில் நான் இல்லை. யார் என்ன எழுதினாலும் என்னைப்பற்றி என்று ஏன் நான் நினைக்கவேண்டுமென்று தெரியவில்லை. ஏதோ தனிமனிதத் தாக்குதல் என்று நினைத்து டென்ஷனாகிவிட்டீர்களென்று நினைக்கிறேன். உங்கள் "தொனி" குறித்து எழுதியது, உங்கள் பதிவுகளைத் தொடர்ந்து படித்து வருவதில் உங்கள் சிந்தனையோட்டம் குறித்துத் தெரிந்துகொண்டதற்கும், அந்தப் பின்னூட்டத்திலுள்ள சிந்தனையோட்டத்திற்குமுள்ள வேறுபாடாக நான் கருதியது குறித்து. இதோ வாய்த்தது பார் சந்தர்ப்பம் என்று காத்திருந்ததுபோல் என்னைக்குறித்து நீங்கள் அடுக்கியுள்ள profile உண்மையில் என்னை ஆச்சரியமடையவைக்கிறதென்பதுதான் நிஜம். முகமூடியின் பதிவில் பொடிமட்டை பிரித்ததற்கு அவரைவிட நீங்கள்தான் அதிக எரிச்சலடைந்திருக்கிறீர்கள் போல!! குஷ்பூ விவகாரம் குறித்த முகமூடியின் பதிவுகளை நான் ஆதரித்ததும் உண்டு, பல்வேறு இடங்களில் ஜெயமோகனின் சிறுகதைகளை நான் சிலாகித்ததும் உண்டு. பெயரைச் சொன்னாலே எரிச்சலடையுமளவு வைச்சால் குடுமி சிரைச்சால் மொட்டை என்ற ரீதியில் ஒரு தரப்பினை ஆதரிக்கவோ எதிர்க்கவோ மட்டுமே செய்யவேண்டுமென்ற நோக்கத்துக்காக மட்டுமே "கடந்தகால வரலாற்றைப் படித்து என் அறிவை விருத்தி செய்துகொள்ளவேண்டிய" அவசியம் இருப்பதாகத் தெரியவில்லை.

//இனி உங்களுடன் பேச ஒன்றுமில்லை.//
Nothing to lose here, too. பதிலுக்கு நன்றி.
 



//சுந்தர மூர்த்தி போன்றோர் திண்ணையைத் திட்டிக் கொண்டே திண்ணையில் எழுதுகின்றனர். :-)//

PKS,
:-)))
திண்ணையின் சார்பாக நீங்கள் ('எழுதவேண்டாம்' என்று) ஒரு வார்த்தை சொன்னால் திண்ணையில் எழுதுவதை நிறுத்திவிடுகிறேன். நான் எழுதாவிட்டால் திண்ணைக்கோ, நான் எழுதியதை திண்ணை வெளியிடாவிட்டால் எனக்கோ நஷ்டம் எதுவுமில்லை. எல்லோருக்குமே நேரம் மிச்சம். ஞாநியையே விரட்டி அடித்த திண்ணையின் சாகசத்துக்கு நானெல்லாம் எம்மாத்திரம்? :-)

ஒரு தகவலுக்காக: ஆரம்பப் பள்ளியில் படிக்கும்போதே என்பெயரை அச்சில் பார்த்துவிட்டேன் :-) குடியாத்தத்தில் தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்த 'செட்டியார் பீடி' உறையில் 'உரிமை: K.M. சுந்தரமூர்த்தி' என்று இனிஷியலோடு பொருந்தி வந்த பெயரைக் கத்தரித்து நண்பர்கள் பொறாமைப்படும்படி பாடப்புத்தகங்களில் ஒட்டி அழகு பார்த்தாகிவிட்டது. செட்டியார் பீடி உள்ளளவும் என் பெயர் நிலைத்திருக்கும் :-)))
 



சுந்தரமூர்த்தி,

நம்ம சண்டையைத் திண்ணையில் வைத்துக் கொள்வோம். உங்கள் கடிதத்துக்குத் திண்ணையிலேயே பதில் சொல்லவிருக்கிறேன். :-) அசோகமித்ரனும், ஜெயகாந்தனும் இன்னபிறரும் பார்ப்பனியத்துக்கு விலைபோனதாக "குத்தாட்டம்" போட்டுக் கொண்டிருந்த உங்களைப் போன்றவர்கள் திருமா, வை.கோ.வின் "அம்மா காலில் விழுந்தது" பற்றி "அம்மா காலே தெரியவில்லையே, எப்படி அப்படிச் சொல்லலாம்" என்று அவிழ்த்து விடுகிற நகைச்சுவைகளை இப்போது ரசித்துக் கொண்டிருக்கிறேன். அதை முழுமையாக அனுபவிக்க விடுங்கள்!

திண்ணையில் எழுதக்கூடாது என்று சொல்ல எனக்கு உரிமையில்லை. திண்ணையில் அனைவரும் எழுத வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால், திண்ணையைப் படிப்பதேயில்லை என்று பாஷன் மாதிரித் தங்கமணிகள் எழுதிக்கொண்டும், திண்ணையைச் சுந்தரமூர்த்திகள் தொடர்ந்து திட்டிக் கொண்டும், திண்ணையை விடமுடியாமல் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பதைப் பகிடி செய்து எழுதப்பட்ட வரிகளைப் பகிடியாகவே எடுத்துக் கொள்க.

பீடி குடித்தால் புற்றுநோய், எலும்புருக்கி நோய் எல்லாம் வருமாம். அதனால், அந்த நோய்கள் உள்ளவரை நீங்கள் இருப்பீர்கள் என்று சொல்கிறீர்களா? :-)))) (நானும் மூன்று ஸ்மைலிகள் போட்டிருக்கிறேன்.)

தம்பி, ஈழநாதனுக்கு மட்டும் சிலவரி. நான் எங்கு எழுதினாலும் என் பெயரில் எழுதுகிறேன். உங்களைப் போன்று பிற பெயர்களில் ஒளிந்துகொண்டு சாணி அடிப்பதில்லை. நீங்கள் பிறபெயர்களில் பிற இடங்களில் எழுதியதற்கு ஆதாரம் வேண்டுமா? தருகிறேன்.

அதற்கப்புறம், மரத்தடி, திண்ணை, வலைப்பதிவு எதுவானாலும் சரி, என்னை நோக்கிக் கேள்விகள் கேட்கப்பட்டால், குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால் கேட்கிறவரின் கேள்விக்கு ஏற்ப என் சொந்தப்பெயரில் பதில் சொல்கிறேன். விவாதம் என்று வந்துவிட்டால் என் கருத்துகளால் நையப்புடைப்பதே நான் நம்புவது. ஆனால், வம்புச் சண்டையை எதிர்பார்த்தோ வளர்க்கவோ அனானிமஸ் பெயர்களில் நான் அலைவதில்லை. ஆனால், இதைவிட மோசமாக சுந்தரமூர்த்தி போன்றவர்கள், வலிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும் என்றால் உங்களுக்கு உவப்பாக இருக்கும்.

நான், உங்கள் குருநாதரைப் போல, பள்ளிக்கூட வாத்தியாரிலிருந்து பி.எச்.டி கைடு வரைக்கும் சண்டை வளர்த்துக் கொண்டில்லை. இதற்கு ஆதாரம் கேட்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன். :-) ஹிந்து ராமாவது புலிகளைப் பற்றிச் சொந்தப் பெயரில் எழுதுகிறார் தன் கருத்துகளை. அவரை வெளிச்சம் போட்டுக் காட்ட வந்த உங்கள் குரு ராம்வோச்சர், ஒளிந்துகொண்டு தேவையில்லாமல் அடுத்தவர்மீது சாணியடித்துக் கையும் களவுமாகப் பிடிபட்டுச் சபையில் நின்றதைப் பார்த்துக் கொண்டுதானே இருந்தீர்கள். அப்போதுதான் வலைப்பதிவு ஆரம்பித்த மனுஷ்ய புத்திரனைத் துரத்தி அடித்து, மனுஷ்ய புத்திரன் எழுதினதுபோல "சண்டையின் நடுவே துணியைத் தூக்கிக் காட்டுகிற" காரியத்தைச் செய்தது நான் அல்ல தம்பி. பெயரிலி என்கிற ரமணீதரன் கந்தையா.

எனவே, எந்த இடத்தில் எழுதினாலும் என் பலங்களையும் பலவீனங்களையும் சொந்தப் பெயரிலேயேச் சொல்கிற தைரியம் எனக்கு இருக்கிறது. அது உங்கள் கும்பலுக்கு நிச்சயமாக இல்லை.

திண்ணையிலோ, மரத்தடியிலோ அல்லது எந்த ஊடகத்திலும் எந்த ஜாட்டானும் தனக்குப் பிடித்த தொனியில் என்னிடம் பேசலாம் என்று வரும்போது அந்த ஜாட்டானிடம் எனக்குப் பிடித்த தொனியில் பேசுகிற உரிமை எனக்கு இருக்கிறது

எனவே, என்னுடைய தற்காப்புக்கு நான் செய்வதை உங்கள் கும்பல் செய்துவருகிற ரௌடித்தனத்துடன் ஒப்பிட முடியாது தம்பி.

கடைசியாக ஒரு ஜோக் சொல்லி இருந்தீர்கள். பெரியாரியம் பற்றித் தங்கமணி விரிவாக எழுதுகிறார் என்று. KGB என்பதைக் KGP என்று எழுதியத் தங்கமணியைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன். :-) (இது ஜோக்தான். எல்லாருக்கும் இத்தகைய சறுக்கல்கள் வரும் என்று ஒத்துக் கொள்கிறேன். எனவே லைட்டாக எடுத்துக்கொண்டு சிரிக்கவும்.) சரி, இனி வருகிற நாள்களில் என் பதிவுகளில் தங்கமணியின் பெரியாரியக் கருத்துகளை நேரம் கிடைக்கும்போதெல்லாம் உரசிப் பார்க்க முயல்கிறேன். என்ன தங்கமணி அவர் பதிவில் அவருக்கு நான் என் பெயரில் பதில் எழுதியபோதுகூட பதில் சொல்லாமல் ஒதுங்கியவர். அவர் என்னுடனான விவாதத்துக்கு வருவார் என்கிறீர்களா? சரி, பார்ப்போம்.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



My sincere reply to PKS
http://karthikraamas.net/pathivu/?p=126
 



முகமூடி,
இது போல பதிவுக்கு சம்பந்தம் இல்லாத பின்னூட்டங்களை மட்டறுத்தலாமே. இவர்கள் சண்டையை வேறு இடத்தில் வச்சிக்கட்டும். உங்க பதிவையும் கருத்தையும் படிக்க வந்த என் போன்றோர்க்கு இது நேர விரயம் மட்டுமே.
 



// முகமூடி “சம்பந்தப்பட்ட கமண்ட் பகுதிய மட்டும் எடிட் பண்றதுல” கெட்டிகாரராமே?
அண்ணரோட கமண்ட்க்கு எவ்வளவு சம்பந்தம் இருக்குன்னு யாருக்கு வெளிச்சமோ?
அங்க எழுதுனா வருமோ வராதோன்னுதான் இப்படி ஒரு கழிவுப்பதிவு எழுதவேண்டிய நிலைமை வந்துடுச்சு. //

கார்த்திக்ராமாஸ் என்பவர் விளக்கு பிடிப்பதில் கெட்டிக்காரராமே? மாமா வேலை பார்ப்பதில் கெட்டிக்காரராமே? கூஜா தூக்குவதில் கெட்டிக்காரராமே? ஜால்ரா அடிப்பதில் கெட்டிக்காரராமே? என்றெல்லாம் எழுத எனக்கும் ஆசைதான்.... அப்புறம் எஜமானுக்கு ஆபத்து என்றவுடன் சிலிர்த்துகிட்டு முட்ட ஓடும் கிடாவுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் வேணுமில்ல, அதனால எழுதல..

அப்பிடியே ஒரு ப்ளாஷ்பேக் உடலாம் ராமரு... உணர்ச்சி வசப்பட்டு கண்டபடி சவடால் விட்டுகிட்டு கிடந்தா அதுக்கு பேரு தில்லாம்... அந்த தில்லோட சில பேரு இருண்டதெல்லாம் அரண்டவனுக்கு பேயின்னு கூச்சல் போட்டுகிட்டு கிடந்த நேரம்... பதிவு போட்டு, தனி மெயிலு அனுப்பின்னு ஆளு சேத்துகினு புகை மூட்டத்துக்கு நடுவில ஜால்ரா சத்தம் மட்டும் கேக்குது, என்னதாண்டா கெரகம் நடக்குதுன்னே புரிய மாட்டேங்குது... அய்யா ராசாங்களே, உங்க கற்பனை குதிரைய கொஞ்சம் அடக்கி வையுங்க, போன்ல சிலரு சொல்றதெல்லாம் உண்மையின்னு "நியூஸ கேள்விப்பட்டவுடனே வீச்சரிவாள தூக்கிகிட்டு அலையுற தொண்டன் மாதிரி" வராதீங்க. உங்க நினைப்பு தப்பான புரிதல்யான்னு என் தரப்பு சண்டைய போட்டுகிட்டு இருக்கிற இடத்துக்கு வந்து எட்டி பாக்குறாரு சன்னாசி...

அட, இப்படித்தான் பாரு ஒரு காலத்துல என்ன ஆச்சின்னான்னு அவரோட சொந்த கதை சோக கதைய ஆரம்பிக்கிறாரு... ஏற்கனவே உம்மை மாதிரி அறிவாளிகள் ஒருசில ஆளுங்க வெள்ள காக்கா பறக்குதுன்னாலும் போதும், அதை படிக்கிறீங்களோ இல்லையோ உடனடியா வரிக்கு வரி உடன்பட்டு இம்சை படுத்துவீர்கள். இந்த லட்சணத்தில் சன்னாசியின் தமிழ் வேறு கொஞ்சம் புரிதலுக்கு கஷ்டமானது... வர்ற ஆளுங்க எசகு பிசகா புரிஞ்சிக்க வாய்ப்பு இருக்கய்யா... வேற நேரமின்னா ஒரு ப்ரச்னையும் இல்ல, இப்ப என் தற்காப்பு சண்டையில நீங்க வந்து உங்க ப்ரச்னைய ஏன் ஆரம்பிக்கிறீங்க சன்னாசின்னு கேட்டேன்.

விபரமா இங்க இருக்கு, முடிஞ்சா மூளைய தக்கிணியூண்டு காலி பண்ணிகிட்டு வந்து படிச்சி பாரும்

சன்னாசியின் பின்னூட்டமோ :: ஒரு பதிவு, அதுக்கு வந்த அத்தனை பின்னூட்டங்கள், அதுக்கு சன்னாசி புதுசா கொடுத்திருக்கிற பொழிப்புரைன்னு மொத்தம் 3350 வார்த்தைகள்.

ஆகையால சன்னாசிகிட்ட நான் கேட்டது இது :: சன்னாசி அவர்களே, உங்க பின்னூட்டத்த நசுக்க எண்ணம் இல்ல... வேற சந்தர்ப்பம்னா இத வெளியிட ஒரு ப்ரச்னையும் இருக்காது. இப்ப அரைகுறை அறிவாளிகள் கூச்சல் போட்டுகிட்டு இருக்கிற நேரத்துல, சம்பந்தமே இல்லாம என்ன சொல்ல வர்றீங்கன்னே புரியாத ஒரு பெரிய பின்னூட்டத்த இங்க போட்டா என்ன அர்த்தம்னு கொஞ்சம் விளக்கினீங்கன்னா போடறேன், அது வரிக்கும் வெயிட் பண்ணிகிறேன்னு..

அவ்ளோ பெரிய பின்னூட்டத்துல நான் என் பெயரில் எழுதியிருந்த ஒரு 4 வரி தவிர வேறு ஒருவகையிலயும் நான் அந்த இடத்துல சம்பந்தப்படல... அவ்ளோ பெரிய விவாதத்ததுல நான் எழுதியிருந்தது மொத்தமே அந்த 4 வரிதான்.. அதுவும், என்ன குற்றச்சாட்டு என் மீது சுமத்தப்பட்டுச்சோ, அத மறுதலிப்பதற்கான கருத்து மாதிரி தெரிஞ்சுதால அத மட்டும் எடுத்தாண்டேன்.

இல்லப்பா இத நீ வெளியிட்டே இருக்கணும்னு சன்னாசி சொல்லியிருந்தா வெளியிட்டுறுப்பேன்.. ஆனா சன்னாசி மட்டுறுடுறுடுறுத்தல்னு ஒரு பதிவா அத போட்டுட்டாரு... அங்கியும் போயி முகமூடியோட நேர்மைய கேள்வி கேட்ட ஆளுதானே நீர்... உமக்கு புரியாததா... அப்படியும் அந்த பின்னூட்டத்த பப்ளிஷ் பண்ணேன்... ஆனா அவ்ளோ பெரிய பின்னூட்டத்தோட (ஏற்கனவே என் பதிவு பெருசு) என் பதிவு hanga ஆரம்பிச்சிட்டுது.. அதனால அத வேற இடத்தில் வைத்திருந்துவிட்டு, அதான் சன்னாசிகிட்ட இருக்கே இங்க வேறயான்னு அழித்துவிட்டேன்...

இந்த ஒரே ஒரு பின்னூட்டம்தான் இது வரை நான் கை வைத்த பின்னூட்டம்... அதுவும் அசந்தர்ப்பமான நேரத்தில் வந்தது, மிகப்பெரியதாக இருந்தது என்று சரியான காரணங்கள் இருந்தாலேயே... வேறு என்ன பின்னூட்டத்தை எடிட் செய்வதை நீர் கண்டீரோ தெரியவில்லை (இதற்கு முன்பு இரண்டு பின்னூட்டங்கள் தவறுதலாக reject செய்யப்பட்டிருக்கின்றன... அதுவும் நீ என்ன பெரிய புடுங்கியா, உருப்படவே மாட்டே என்ற ரேஞ்சில் அநானிமஸாக கேட்கப்பட்டதுதான்.. அதை மறைத்து இமேஜ் பில்ட்-அப் செய்யும் நிலையிலா நான் இருக்கிறேன்...)

இதற்கு முன்பு இப்படித்தான் பெயரிலி வேறு யாரையோ குற்றம் சாட்டுமிடத்து சம்பந்தமேயில்லாமல் என் ஐ.பியை எடுத்து வெளியிட்டு "சந்தேகத்தின் பலனை அளிக்கிறேன், அள்ளிப்பருகு" என்று கூவினார்... "என்னய்யா இப்படி செய்கிறீர், உம்ம கயவாணித்தளத்துக்கு அடிப்படையில ஏதாவது அர்த்தம் இருக்கா"ன்னு கேட்ட என் கேள்விக்கு இன்று வரைக்கும் அவரிடம் பதிலில்லை...

இப்போது "சந்தேகத்தின் பலனை தரும்" வேலையை நீர் ஆரம்பித்திருக்கிறீர்... இனி உம்மாதிரி அடியாட்களோடு பேசுவதே அவமானம் என்றுதானே நான் சமீப காலமாக உம்மோடு பேசுவது கூட இல்லை.. இருந்தாலும் சந்தேகத்த்தின் பலன் தராசு ஓவரா டகால்ட்டி அடிக்கும் போது நம்மலும் பேசலைன்னா நல்லாருக்காது இல்ல... எவனா எதுனா சொன்னா பேசாம இருப்போம்னு இருந்தா கூட எதுனா புதுசு புதுசா கண்டுபிடிக்கிறீங்கய்யா... ஒரு பதிவு போட்டு, அதில் “சம்பந்தப்பட்ட கமண்ட் பகுதிய மட்டும் எடிட் பண்றதுல” முகமூடி கெட்டிகாரராமே? என்று எனக்கும் ஒரு சைடு கிக்கு... என்ன .யித்துக்குடா இப்படியெல்லாம் சம்பந்தா சம்பந்தம் இல்லாம எழுதறீங்க, இதுக்கு எதுவும் அர்த்தம் இருக்கா என்று கேட்டால் ஒருத்தனும் பதில் சொல்ல போவதில்லை... ஆனா, கேட்ட கேள்விக்கு வழக்கம் போலவே வழக்கமான அதே கூட்டம் வந்து அறிவுரையும் ஆலோசனைகளையும் அங்கலாய்ப்புகளையும் அள்ளி வீசி ஒரே கொண்டாட்டம்தான்... நடத்துங்க ராசா நடத்துங்க...
 



PKS,
//நம்ம சண்டையைத் திண்ணையில் வைத்துக் கொள்வோம். உங்கள் கடிதத்துக்குத் திண்ணையிலேயே பதில் சொல்லவிருக்கிறேன். :-)//
உங்களுடன் மல்லுக்கு நிற்கும் எண்ணமெல்லாம் இல்லை நான் கேட்டது ஒரு கேள்வி. பதிலைப் படிக்க ஆவலாகவே உள்ளேன். பிறகு மேலும் சொல்ல ஏதெனுமிருந்தால் சொல்கிறேன்.

//அசோகமித்ரனும், ஜெயகாந்தனும் இன்னபிறரும் பார்ப்பனியத்துக்கு விலைபோனதாக "குத்தாட்டம்"//
அவர்களே விற்பவர்களாக இருந்தாலும் சரி, விலைபோனவர்களாக இருந்தாலும் சரி எனக்கு அக்கறையில்லை. இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும் புனிதச் சரக்குகளாக நினைத்த காலத்தைக் கடந்து அவர்களுடைய, அவர்களை தூக்கி நிறுத்துகிறவர்களின் நுண்ணரசியலையும் சேர்த்தே பார்க்கப் பழகி பல ஆண்டுகள் ஆகின்றன.

அமி, ஜெயகாந்தன் சர்ச்சைகளைப் பற்றிய அப்போதே பிறர் (அருள், தங்கமணி) பதிவுகளில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் பின்னூட்டங்களும் என் பதிவிலே ஓரிரு பதிவுகளும் எழுதியிருக்கிறேன். உருப்படியில்லாத விஷயங்களைப் பற்றி, அதுவும் தனி மனிதர்களைப் பற்றி, சலிப்பூட்டும் வகையில் திருப்பித் திருப்பி பேசிக்கொண்டிருப்பது எனக்கு வழக்கமில்லை. அதனால் இங்கே அவற்றை விளக்கப்போவதில்லை. ஆர்வமிருப்பவர்கள் நான் எழுதியவற்றை தேடிப்படித்து தெரிந்துகொள்ளலாம்.

//போட்டுக் கொண்டிருந்த உங்களைப் போன்றவர்கள்//
இதில் யாரெல்லாம் அடங்குவார்கள் என்று தயவு செய்து ஒரு பட்டியல் போட்டுவிடுங்களேன்.

//திருமா, வை.கோ.வின் "அம்மா காலில் விழுந்தது" பற்றி "அம்மா காலே தெரியவில்லையே, எப்படி அப்படிச் சொல்லலாம்" என்று அவிழ்த்து விடுகிற நகைச்சுவைகளை இப்போது ரசித்துக் கொண்டிருக்கிறேன். அதை முழுமையாக அனுபவிக்க விடுங்கள்!//

வைகோவைப் பற்றி என்பதிவிலேயே ஒரு கட்டுரை எழுதி இருக்கிறேன். தமிழ் சசி, ஜோ ஆகியோர் பதிவுகளிலும் எழுதியிருக்கிறேன். காலில் என்ன அவர் அம்மா கட்சியோடு ஐக்கியமே ஆகலாம் என்று சொல்லியிருக்கிறேன்.

ராம்கி "அம்மா காலில் விழு" என்று சொன்னதற்கு ""அம்மா காலே தெரியவில்லையே, எப்படி அப்படிச் சொல்லலாம்" என்று கேட்கவில்லை. "பிறருக்கு தெரியாத அம்மாவின் கால்கள் பாபாவின் பக்தருக்கு மட்டும் தெரிந்து விடுவதில் ஆச்சரியமென்ன" என்று எழுதியிருந்தேன். உங்கள் ரசனைக்கேற்றபடி எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களைத் தவிர பிறரிடம் சீரியசாக தான் பேசுவீர்கள் என்று நினைத்தேன். என்னாலும் உங்களை சிரிக்கவைக்க முடியுமென்றால் சந்தோஷமே. எவ்வளவு நாளானுலும் விடாமல் முழுமையாக அனுபவித்து விடுங்கள்.

கைகுலுக்கினாரோ, காலில் விழுந்தாரோ, அம்மா பக்தர்கள் வந்தவரை நாகரிகமாக நடத்தக் கற்றுக்கொள்ளுங்கள். கூடவே துரோகமிழைக்காமல் கூட்டணி தர்மத்தின்படி பிரச்சாரம் செய்து, ஓட்டும் போடுங்கள் :). அக்கிரகாரத்து அம்மா பக்தர்கள் திருமாவுக்கு ஓட்டு போடப்போகிறார்கள் என்றால் சந்தோஷம் தானே.

//ஆனால், திண்ணையைப் படிப்பதேயில்லை என்று பாஷன் மாதிரித் தங்கமணிகள் எழுதிக்கொண்டும்//
அது அவருடைய விருப்பம். அதில் உங்களுக்கு பிரச்சினை என்றால் அவரிடம் விளக்கம் கேளுங்கள்.

//திண்ணையைச் சுந்தரமூர்த்திகள் தொடர்ந்து திட்டிக் கொண்டும், திண்ணையை விடமுடியாமல் படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் இருப்பதைப் பகிடி செய்து எழுதப்பட்ட வரிகளைப் பகிடியாகவே எடுத்துக் கொள்க.//

நான் திண்ணையைத் "திட்டி" எழுதியது இரண்டு முறை. மூன்று வருடங்களுக்கு முன்னால் முதல் முறையாக, ராஜாராம் பழக்கமான நண்பர் என்ற உரிமையோடு எழுதியது (நீங்களும் ஆசிரியர் குழுவிலிருந்தால் படித்திருக்கக்கூடும்). அதை வெளியிட மறுத்துவிட்டார்கள். இரண்டாவது, நடப்பு இதழில் வெளிவந்துள்ள கடிதம். இடையில் நான் 'திட்டியது' சின்னக்கருப்பன் மாதிரி சில எழுத்தாளர்களை. நீங்கள் "தொடர்ந்து" என்று சொல்வதைப் பார்த்தால் சின்னக்கருப்பன், மஞ்சுளா நவநீதன் போன்ற அனாமதேயங்கள் உள்வட்டத்து ஆசாமிகள் தான் என்ற எண்ணத்தை (என்னுடையது மட்டுமல்ல, பெங்களூரில் பழகிய சில பொது நண்பர்களினதும்) நீங்களும் உறுதி செய்கிறீர்களோ? :-))

திண்ணையைப் படிப்பதும், அதில் எழுதுவதும் பெரும்பாக்கியம் தான். அதை எப்படி விடமுடியும்? :-)விட முயற்சிக்கிறேன். என்னால் முடியாவிட்டால் பகிடி செய்து மகிழ்க.

எழுத்துப்பிழைகளுக்கு மன்னிக்க. வீட்டுக்குப் போகும் அவசரத்தில் சுரதாவில் தட்டிப் போட்டது. இதற்கு மேல் தொடரும் எண்ணமில்லை (2-3 எதிர்வினகளோடு முடித்துக்கொள்வது என் வழக்கம். இதை வெற்றியாக நினைத்து கொண்டாடினாலும் பரவாயில்லை :-)) )
 



சிவகுமார் அவர்களே போகிறபோக்கில் காலைத் தூக்காதீர்கள் என்று தமிழில் தானே சொன்னேன் சமஸ்கிருதத்தில் சொன்னால் தான் உங்களுக்குப் புரியுமோ எனது கும்பலோ நண்பரோ யார் வேறு பெயரில் எழுதுவதற்கும் நான் பொறுப்பாளி ஆக முடியாது நான் வேறு பெயர்களில் ஒளிந்துகொண்டு உங்களைப் போல வித்தையெல்லாம் காட்டுவதில்லை உங்களின் சீடப்பிள்ளைகளின் பித்தலாட்டங்களைச் சன்னாசி படம்பிடித்துப் போட்டிருக்கிறார் அதற்கு முன்பே அரிசிமா வறுப்பவர்களில் ஒருவரின் சொந்தப்பெயரை பரிமேலழகர் படம்பிடித்துப் போட்டிருக்கிறார் உங்கள் கும்பலின் இந்தச் செயல்களுக்கு நீங்கள் பொறுப்பாளி ஆகமுடியுமா?

அதென்ன இந்திய தேசியத்திற்கும்,பார்ப்பனியத்துக்கும்,இந்துத்துவத்துக்கும் எழுதும் உங்கள் கும்பல் எல்லோரும் முகமூடி தேவைப்படுகிறது?இந்த முகமூடி பதிவிலேயே எடுத்துப் பாருங்கள் ஒவ்வொரு பதிவிற்கும் ஆதரவாக எவ்வளவு முகமூடிகள்

சுச்சூ என்ற பெயர் ஞாபகமிருக்கிறதா?எப்படி மறக்கும்.
எங்கேயாவது எனது சொந்தப் பெயரை விடுத்து நான் வேறு பெயரில் பின்னூட்டமிட்டதை உங்களால் நிரூபித்துக் காட்டமுடியுமா வழக்கம்போல கேள்வி கேட்கும்போது காணாமற் போய் காற்றடிக்கும்போது காலைத் தூக்கிக்கொண்டு வராதீர்கள் வேண்டுமானால் என்னுடைய இணைய முகவரியை பகிரங்கப்படுத்தத் தயார்
 



எளக்கியவாதிக கூட்டத்துல ஐக்கியமாக ஒரே தகுதி முகமூடிய கண்டபடி போட்டுத்தாக்கணுமாமே... உம்மையா தல?
 



//
திண்ணையைப் படிப்பதும், அதில் எழுதுவதும் பெரும்பாக்கியம் தான். அதை எப்படி விடமுடியும்? :-)விட முயற்சிக்கிறேன். என்னால் முடியாவிட்டால் பகிடி செய்து மகிழ்க.
//

:-))))))))))
 



"aththu miiRu"!

I think people mistook this title [or not??!!]!

Look at the posts here! Nothing related to the original topic and may be this is the "diversion tactics' to stray from the topic instead of answering to it!!
vaazhga 'elakkiyavaadhikaL'!
 



தம்பி ஈழநாதன், செக்குக்கும் சிவலிங்கத்துக்கும் வித்தியாசம் தெரியாமல் காலைத் தூக்கிக் கொண்டிருக்கிற உங்களுக்கும் உங்கள் கும்பலுக்கும்
தமிழ்கூடப் புரிவதில்லை என்பது உங்கள் பின்னூட்டங்களில் இருந்தே தெரிந்துதானே வருகிறது.

பயந்தாங்கொள்ளி, அட்டைக்கத்தி என்பீர்கள். இல்லையப்பு இருக்கிறேன் பார், உங்களைவிட அதிகத் தளங்களில் பணியாற்றிக் கொண்டுதான்
இருக்கிறேன் என்று பதில்சொன்னால், அதை உடனடியாக, அச்சில் பெயர் பார்க்க ஆசை என்று திர்ப்பதுதானே உங்கள் வேலை. என்றைக்காவது
பிடித்த இழையைத் தொடர்ந்து பேசியிருக்கிறீர்களா? உங்கள் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் வரவர உங்கள் கும்பல் இழைகளின் போக்கை திரித்துக்
கொண்டுதான் போகும் என்பது எல்லாரும் அறிந்ததுதானே.

எனக்குக் கும்பலா?யாரப்பா அது? எனக்கென்று எந்தக் கும்பலும் இல்லை. வேறு இடங்களில் யாரும் வேறு பெயர்களில் எழுதியிருந்தால், அதை
நீங்கள் ஆதாரத்துடன் வெளியிடுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. எதற்கு இந்தக் கிசுகிசு விளையாட்டு. உண்மையில் நம்பிக்கை
இல்லாதவர்கள்தான் கிசுகிசுவில் தொங்கிக் கொண்டிருப்பார்கள். ஆதாரமில்லாமல் குற்றம் சாட்டிக்கொண்டிருப்பார்கள். பரிமேலழகர் பதிவில் யார்
அவரை அல்லது மற்றவர்களைத் தரக்குறைவாக என்னச் சொல்லியிருந்தாலும், அப்படிச் சொன்னவர் யாரென்று பரிமேலழகர் ஆதாரத்துடன்
நிரூபிப்பதை நான் வரவேற்கிறேன். பரிமேலழகரே, தயவுசெய்து அதை உடனடியாகச் செய்யுங்கள் என்றும் வேண்டுகிறேன். போலிப் பெயர்களில்
அவதாரமெடுத்து எதிர்க்கருத்துடையோரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குகிறவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை அம்பலப்படுத்த அவர்களின்
நிஜப் பெயர்களைச் சொல்லும் ஆதாரங்களை எவர் எடுத்துப் போடுவதையும் நான் வரவேற்கிறேன்.

புனைப்பெயரில் எழுதுவதோ அடையாளத்தை மறைத்துக் கொண்டு எழுதுவது எனக்குப் பிரச்னையில்லை மூடரே. அதை அடுத்தவர்மீது
சாணியடிக்கப் பயன்படுத்துவதுதான் பிரச்னை. முகமூடி யார்மீதாவது எங்காவது அவராக முன்வந்து சாணி அடித்திருந்தால் எடுத்துக் காட்டுங்கள்.
நானும் முகமூடியைக் கண்டிக்கிறேன்.

இப்போது உங்கள் கும்பல் செய்த பித்தலாட்ட ஆள் மாறாட்ட அடியாள் வேலைகளை வெளிப்படையாக இங்கே பெயர் சொல்லி வைக்கிறேன்.

பெயரிலிபோல இவற்றையெல்லாம் கிராபிக்ஸாக மாற்றிப் படம் காட்டினால்தான் நம்புவேன் என்றால் சொல்லுங்கள். அதையும் தயாராக
வைத்திருக்கிறேன்.

1. வீச்சறுவா என்ற பெயரில் வந்து என் பதிவில் எழுதி அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டபின் பெயரை வெளியே அப்போது சொல்லாததற்கு நன்றி
என்று வழிந்தவர் அடியாள் கார்த்திக்ராமாஸ். அதற்கான ஆதாரம் இங்கே
இருக்க்கிறது.http://pksivakumar.blogspot.com/2005/01/blog-post_110565207676624503.html அவர் பெயரை இப்போது வெளியே சொல்வதற்குக்
காரணம், சும்மா வெற்றுச்சவடால் அடித்துக் கொண்டிருக்கும் அந்த அடியாளின் யோக்கியதையை அம்பலப்படுத்தவே.

2. காசியின் பதிவில் promise-this-is-not-a-spam என்ற பெயரில் எனக்கு எதிராக எழுதிக் கையும் களவுமாகப் பிடிபட்டு தான் அந்தப் பெயரில்
எழுதியதை ஒத்துக் கொண்டவர் ராம்வோச்சர். ராம்வோச்சர்தான் promise-this-is-not-a-spam என்ற பெயரில் எழுதியவர் என்பதற்கான ஆதாரம்
http://pksivakumar.blogspot.com/2005/10/blog-post_20.html. ராம்வோச்சர் யாரென்பதுதான் ஊரறிந்த ரகசியம் ஆயிற்றே. :-)

3. சென்ற பின்னூட்டத்தில் ஈழநாதன் எழுதியது: "எங்கேயாவது எனது சொந்தப் பெயரை விடுத்து நான் வேறு பெயரில் பின்னூட்டமிட்டதை
உங்களால் நிரூபித்துக் காட்டமுடியுமா வழக்கம்போல கேள்வி கேட்கும்போது காணாமற் போய் காற்றடிக்கும்போது காலைத் தூக்கிக்கொண்டு
வராதீர்கள் வேண்டுமானால் என்னுடைய இணைய முகவரியை பகிரங்கப்படுத்தத் தயார்" என்று எழுதியிருக்கிறீர்கள். இதைத்தான் எதிர்பார்த்தேன்.
ஏனென்றால், பெயரிலிபோல சும்மா நானாக எல்லா ஐ.பி.ஐயும் எடுத்துப் போடுவதில் எனக்குச் சம்மதமில்லை. இப்போதுகூட நீங்கள் நிரூபித்துக்
காட்ட முடியுமா என்று கேட்டிருப்பதாலேயே கொடுக்கிறேன்.

From: மலரவன் 203.163.97.113
ஆக இப்போ புரிஞ்சாச்சு
சின்னவனைத் தூக்கினால் முகமூடியைத் தூக்கின மாதிரி குசும்பனைத் தூக்கினாலும் அதே அதே.
வந்தியத் தேவனுக்கு ஒரு பெயர் போதுமே எதற்கு நாலைந்து?

அட பின்னூட்டம் கூட நாலைந்து பேரிலா அதையாது சொந்தப் பேரில் போட்டுத் தொலைங்கடா மாங்கா மடையங்களா உருப்படியா எதுவுமே
எழுத வக்கில்லை எவனையாவது நக்கலடிப்பதே தொழிலென்றாம் போட்டிக்கு தமிழ் நாற்றம் என்று ஒண்ணு ஆரம்பிச்சுடவேண்டியதுதானே
ஈழத்துக்காரங்களைப் பார்த்துக் கத்துங்குங்க

Thursday, 20.10.05, 21:44:24

***** ****** *****

From: ஈழநாதன் 203.163.97.113
காசி சொல்வதோடு நின்றுவிடாமல் செய்தும் காட்டிவிட்டீர்கள் வாழ்த்துக்கள்.

Monday, 13.06.05, 06:03:11

தம்பி, இரண்டு பின்னூட்டங்களுக்கும் இடையேயுள்ள நாட்களுக்கான இடைவெளி, ப்ராக்ஸி சர்வர் பற்றிய தொழில்நுட்பம் இவற்றையெல்லாம்
ஆராய்ந்து பார்த்த பின்னும், அவற்றுக்கான சந்தேகத்தின் பலன்களை உங்களுக்கு அளித்தபின்னரும், மலரவன் என்ற பெயரில் எழுதியது நீங்கள்
என்றே சொல்கிறேன். உதாரணமாக, இந்த ஐ.பி. அட்ரஸ் ஈழநாதன் என்பவரால் மொத்தம் பதினோருமுறை பல்வேறு இடங்களில்
பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே ஐ.பி. அட்ரஸை மலரவன் என்பவரும் பயன்படுத்தியிருக்கிறார். இப்படியெல்லாம் சொன்னால் நம்ப மாட்டேன்.
படம் காட்டினால்தான் நம்புவேன் என்று விரும்பினால் சொல்லுங்கள், எல்லாவற்றையும் படமாகவும் எடுத்துப் போடுகிறேன். இது இல்லாமல்,
ஈழவன் என்ற பெயரில் சென்ற வருடங்களில் எழுதியது நீங்கள் என்று ஒருமுறை நான் எழுதியபோது ஆமென்று நீங்கள் பொதுவில் ஒத்துக்
கொண்டது நினைவில் இருக்கிறதா? இப்போது, வேறு பெயர்களில் எழுதுவதே இல்லை என்ற அட்டைக்கத்தியை அப்புறம் ஏன் சுழற்றுகிறீர்கள்.

கையும் களவுமாக மாட்டிக்கொண்ட மூன்று பேருமே, தங்கள் கருத்தைச் சொல்ல முகமூடியாய் வந்தவர்கள் அல்ல. பிடிக்காதவர்களைத் தாக்க
முகமூடி மாட்டிக் கொண்டு வந்த காழ்ப்புணர்வு கொண்டவர்கள்.

ஈழநாதன், இது ஒரு தொடக்கம்தான். மீண்டும் படியுங்கள். இது ஒரு தொடக்கம்தான். இன்னும் நிறைய இருக்கிறது. அதை மட்டும் நினைவில்
வைத்துக் கொள்ளுங்கள்.

சூச்சூ நான் என்று எழுதியவர் அதை நிரூபிக்க முடியாமல் என்னிடம் மன்னிப்பு கேட்டது பகிரங்கமாக நடந்த விஷயம். சும்மா ஹேஷ்யங்களை
வைத்து வாய்ச்சவடால் அடிக்காமல், நான் வேறு எங்கும் வேறு பெயர்களில் எழுதியிருப்பதாக நம்பினால் அதை ஆதாரபூர்வமாக நிரூபியுங்கள்.
நான் பலமுறை சொல்லியாகிவிட்டது. எங்கு எழுதினாலும் என் சொந்தப் பெயரில் எழுதுகிறேன் என்று. அப்புறமும் புரியாவிட்டால் நீங்கள் பேசுகிற
மொழி என்ன சிங்களமா? வெற்று வாய்ச்சவடால்களும் அவதூறு செய்யும் குற்றச்சாட்டுகளுமே அட்டைக்கத்திகள் என்று என்றைக்கு உணரப்
போகிறீர்கள்? இந்தச் சண்டையை இதற்குமேல் தொடர்வதும் தொடராததும் என் புத்திசாலித்தனத்தைப் பொருத்தது அல்ல.

இப்படிக்கு, பி.கே. சிவகுமார்
 



சொந்த பேரில் குறைத்தது போததென்று பெயரிலியின் நண்பன் என்ற பூனைப் பேரிலும் விசுவாச ஜால்ராவை தட்டிக்கொண்டு இருக்கும் கார்த்திக் இராம்ஸ் உம் பணி வளர்க ! வேறு ஏதாவது பூனைப் பேரும் உண்டோ உமக்கு ??


வெங்காய சாம்பார்.
 



கார்த்திக் ராமாஸ் என்கிற வீச்சறுவா என்கிற பெயரிலியின் நண்பன் என்கிற , கூலிக்கு மாரடிக்கும் அடியாளின் வேற பெயர்களும் விரைவில் வெளிவரும் என்றே எதிர்பார்க்களாமா ?


ஆமாம், இவ்வளவு பெயரில் எப்படி அய்யா பொறுமையாய்,

மஞ்சகலரு ஜிங்குச்சா,
பச்சை கலரு ஜிங்குச்சா


என்று தாளம் தப்பாமல் அடிக்க முடிகிறது.

ஆனாலும் உம் பொறுமை Fullலரிக்க வைக்கிறது
 



வழக்கம்போல சம்பந்தே இல்லாமல் இன்னுமொரு பின்னூட்டம்

பாடலும், பட லிங்கும் உடைய பின்னூட்டம் எதுவும் இந்த பதிவில் இல்லாததால், இதோ ஒரு பாடல் .



கேசரா கேசரா
க்யூசரா,க்யூசரா




படத்துக்கான லிங்க்


You stay CLASSY san Diego !!!

 



ஹா,ஹா,ஹா நீங்கள் நான் போலிப்பெயரில் பின்னூட்டமிட்டதற்கு ஆதாரம் உண்டு என்று சொல்லும்போதே நினைத்தேன் பிடி இல்லாமல் பேசமாட்டீர்கள் என்று.ப்ரொக்சி மீது எனக்கு நம்பிக்கையில்லாததால் அதனைப் பயன்படுத்துவதில்லை கடந்த ஆறுமாதமாக வீட்டில் இணைய இணைப்பு இல்லாததால் இணைய உலாவு மையத்தை தான் பயன்படுத்தி வந்தேன்.இன்னும் கொஞ்சம் குடைந்து பார்த்தீர்கள் என்றால் என்னுடைய பின்னூட்டங்கள் இன்னும் பல ஐபி களில் இருக்கும் கொஞ்சம் மூளையையும் உபயோகப்படுத்திப் பாருங்கள்.இப்போது வேலைக்கு நேரமாச்சு அப்புறம் வருகிறேன்.வேறு ஏதாவது பெயர்கள் இருந்தாலும் தேடி வையுங்கள்.உங்கள் கும்பலையும் தேடச்சொல்லுங்கள்.எனக்கு கும்பல் இருக்கும்போது உங்களுக்கு கும்பல் இருக்கக்கூடாதா போனில் பேசலாம்,மயில் அனுப்பலாம்,கொன்பரன் கோல் கூடப் பண்ணலாம்

try,try, try oneday you can fly
 



சிவகுமார்,

//KGB என்பதைக் KGP என்று எழுதியத் தங்கமணியைக் குறிப்பிடுகிறீர்கள் என்று நம்புகிறேன். :-) (இது ஜோக்தான். எல்லாருக்கும் இத்தகைய சறுக்கல்கள் வரும் என்று ஒத்துக் கொள்கிறேன். எனவே லைட்டாக எடுத்துக்கொண்டு சிரிக்கவும்.) //

இதைத் தங்கமணியின் பதிவில் படிக்கையில் "ஜோக்காக" /சறுக்கலாக சிரிக்கலாம். ஆனால், அதை நீங்கள் இங்கு "அந்தத் தங்கமணி" தானே என்று எடுத்து எழுதுவது என்னைப் பொறுத்தவரையில் ஜோக்கோ, சறுக்கலோ அல்ல. சிறுபிள்ளைத்தனம். அதுவும் குரூரத்தில் தோய்த்த சிறுபிள்ளைத்தனம். மற்றவர்களை எப்படி அறிந்து கொள்கிறீர்கள் அல்லது எப்படி அறிய விரும்புகிறீர்கள் என்பதனைக் காட்டுகிறது. நீங்கள் உங்களை எவ்வளவு பெரியவராகவும் நினைத்துக்கொள்ளலாம், மெச்சிக்கொள்ளலாம். ஆனால் எப்பொழுதும் தெரியும் இந்தத் தருணங்கள் எனக்கு உங்களைக் காட்டுகிறது. அதற்கு நன்றி.

நீங்கள் எந்தத் தளத்தில் இயங்கினாலும், கால் தரையிலிருந்து இயங்குவது நல்லதல்லவா.

இதற்குமேல் இதைப்பற்றி எழுதவோ, பேசவோ விருப்பமில்லை.
 



ஈழநாதன் அவர்களுக்கு,

ஹா ஹா ஹா என்று நீங்கள் சிரிப்பது நல்லதுதான். கஷ்டம் வரும்போது சிரிப்பது நல்லகுணம். ஐயன் வள்ளுவர் அதைச் சொல்லியிருக்கிறார்
என்று உங்களுக்குத் தெரியுமே. "பிடி இல்லாமல் பேச மாட்டேன்" என்று என் கருத்துகளின்மீதும் நான் வைக்கிற ஆதாரங்களின்மீதும் தாங்கள்
வைத்திருக்கிற நம்பிக்கைக்கு நன்றி. நானும் பொடிவைத்து "இது தொடக்கம் மட்டும்தான். இன்னும் நிறைய இருக்கிறது" என்றும், "இந்தச் சண்டையை
இனித் தொடர்வதும் தொடராததும் என் புத்திசாலித்தனத்தைப் பொருத்தது அல்ல" என்றும் பூடகமாக (உங்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்துடன்)
சொல்லிப் பார்த்தேன். புத்திசாலியாயிருந்தால் தொடர்ந்திருக்க மாட்டார். ஆனால், அண்ணன் பெயரிலிமாதிரித் தம்பிகளும் கீழே விழுந்தும்
மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்பவர்களாகவும், மாட்டிக்கொண்ட பின்னும் எழுந்துநின்று தவறை ஒத்துக்கொள்ள தைரியம் இல்லாமல்
அதற்கான ஓராயிரத்து ஓட்டை விளக்கங்களை அளிப்பவர்களாகவும் இருக்கிறார்கள் என்று இப்போது நிரூபணமாகியுள்ளது. அதுவும் நல்லதே.
ஆனாலும் பாருங்கள். I stop here என்று புத்திசாலித்தனமாக நிறுத்திக் கொண்டவர்கள், உங்களை "நீ போய் அடிவாங்கு, credibility-ஐ இன்னும்
மோசமாகக் கெடுத்துக் கொள்" என்று ஒன்று சும்மா இருப்பதோ அல்லது அனுப்பி வைப்பதோதான் இதில் நான்கூட வேதனைப்படுகிற விஷயம்.
ஈழவன் என்ற பெயரில் நீங்கள் எழுதியதை ஒத்துக்கொண்டதைப் பற்றி நீங்கள் பதிலே சொல்லாமல் தவிர்ப்பதையும் இங்கே வாசகர்கள்
கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். அது ஒன்று மட்டுமே, "நான் வேறு பெயரில் எழுதியதே இல்லை" என்று நீங்கள் சொன்னது பொய் என்று
நிரூபிக்கப் போதும்தான்.

ஆனால், என் மூளையை உபயோகப்படுத்திப் பார்க்கச் சொல்லியுள்ளீர்கள். இதோ செய்துவிடுவொம். அதற்கு முன்னால், நான் இங்கே உட்கார்ந்து
இப்படி என் நேரத்தை வீணடித்து உங்களைப் போன்றோரின் முகத்திரைகளைக் கிழித்துக் கொண்டிருப்பது எதற்குத் தெரியுமா? நீங்களும் உங்கள்
கும்பலும் செய்கிற திருட்டுகளைப் பிடிபட்டபின்னாவது நேர்மையுடன் ஒத்துக்கொண்டு மன்னிப்பு கேட்கிற மானிடர்கள் என்ற எதிர்பார்ப்பினால்
அல்ல. இதைப் படிக்கிற பொதுஜனங்களின் மூளைகளின்மேல் இருக்கிற நம்பிக்கையால். அதனால், இதுவரை நான் எடுத்துக் கொடுத்திருக்கிற
ஆதாரங்களையும் தகவல்களையும் வைத்து இதைப் படிக்கிற வலைப்பதிவுப் பொதுஜனங்கள் (அவர்களில் பாதிக்குமேல் கணினிப் பொறியாளர்கள்.
கோடு போட்டால் ரோடு போடுகிற தொழில்நுட்பத் திறமை வாய்ந்தவர்கள். ஐ.பி. எண்ணைக் கொடுத்தால் அது உலாவி மையமா அல்லது ஏதும்
manufacturing கொம்பனியா :-) என்று கண்டுபிடிக்கிற திறமையாளர்கள்) அவர்களுக்கேற்ற முடிவை எடுத்துக் கொள்வார்கள் என்ற
நம்பிக்கையிலேயே நான் எழுதி வருகிறேன். இதைப் படிக்கிற பொதுஜனம் நான் வைக்கிற ஆதாரங்களைப் பார்த்து, எனக்கு மூளையே இல்லை
என்று முடிவு செய்துகொண்டாலும் எனக்குச் சம்மதமே.

சரி, இப்போது நீங்கள் சொல்கிற கதை என்ன? அதைக் கொஞ்சம் கட்டுடைப்போம். "கடந்த ஆறு மாதகாலத்தில் வீட்டில் இணைய இணைப்பு
இல்லாததால் இணைய உலாவு மையத்தைத்தான் பயன்படுத்தி வந்தேன்" என்று எழுதியுள்ளீர்கள். ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல்
போனாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதில் மிகுந்த நம்பிக்கையுள்ளவன் நான். அதனால் நீங்கள் சொல்வதை அப்படியே நம்பி,
அதில் ஏதும் சந்தேகங்கள் இருந்தாலும் அந்தச் சந்தேகங்களின் பலனை (இலக்கிய ரீதியாகச் சொல்வதென்றால், நிகழ்தகவுகளின் பலனை :-) )
உங்களுக்கு முழுமையாகத் தந்து, ஆறுமாதங்களாக மட்டுமே உங்கள் வீட்டில் இணைய இணைப்பு இல்லை என்று எடுத்துக் கொண்டு, அதற்கு
முன்னர் வீட்டிலிருந்தே எழுதியிருக்கிறீர்கள் என்றும் ஒப்புதம் வாக்குமூலம் தந்திருப்பதை முதலில் உறுதி செய்து கொள்கிறேன்.

நான் முந்தையப் பின்னூட்டத்தில் எடுத்துப் போட்ட ஐ.பி. எண்: 203.163.97.113. ஆறுமாதமாக இணைய உலாவி மையத்தைப் பயன்படுத்துவதாக
நீங்கள் எழுதிய தேதி. மார்ச் 7, 2006. ஆறுமாதங்களைப் பின்னோக்கிப் போட்டால். ஆறுமாதம் செப்டம்பர் 7, 2005 ஆகும். சரி, செப்டம்பர் 7,
2005-க்கு முன்னால் எப்போதெல்லாம் (அதாவது வீட்டில் இணைய இணைப்பு இருந்தபோதும் அதைத் தாங்கள் பயன்படுத்தி வந்தபோதும்) இதே
ஐ.பி. எண்ணைப் பயன்படுத்தி நீங்கள் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என்பதை எடுத்துப் போட்டுப் படம் காட்டலாமா? காட்டிவிடுவோம்.
(பின்வருவனவற்றுக்கெல்லாம் படம்போட்டு விளக்கி, எந்தப் பதிவுக்கு எழுதப்பட்டப் பின்னூட்டம் என்பதுபோன்ற விவரங்கள் தந்து
விளக்கினால்தான் நம்புவேன் என்று சொல்வீர்களேயானால், அதையும் செய்கிறேன்.)

Sunday, 27.03.05, 16:38:44
From: ஈழநாதன் 203.163.97.113
இடைவெளி நிரப்புவதற்காய்க் கூப்பிடப்பட்ட நிலையக் கலைஞராக இல்லாமல் நிலையத்தின் பெருமையைப் பறைசாற்ற வந்த கலைஞராய் இருந்தது
உங்கள் பதிவு.கடைசிப் பதிவு மிக்க பயனுள்ளது நன்றி காசி

Thursday, 24.03.05, 18:53:26
From: Eelanathan 203.163.97.113
காசிநல்லதொரு வேலை செய்திருக்கிறீர்கள்.இதையும் ஒரு மூலையில் தொடுப்பாகக் கொடுத்துவிடலாம்.

Monday, 21.03.05, 23:54:41
From: ஈழநாதன் 203.163.97.113
காசி பொதுவில் வாக்கெடுப்பு நடத்தி தீர்மானிக்க விரும்பியதற்கு நன்றி.இப்படியான பதிவுகளை தமிழ்மணத்தில் சேர்க்கவேண்டாம்.கறுப்பிக்கு
தமிழ்மணத்தின் நிர்வாகி Blogspot இன் நிர்வாகியல்ல என்று புரியவில்லைப் போலிருக்கிறது அடிக்கடி சந்தேகப் படுகிறார்

Monday, 21.03.05, 00:07:01
From: Eelanathan 203.163.97.113
காசி என்னங்க இப்படிச் சொல்லிப்பூட்டிங்க எங்களைப் போன்ற ஏழைங்களுக்கு(சமைக்க ஆளில்லாதவங்களுக்கு) உப்புமாதானே உயிர்காக்கும்
உணவு

Monday, 21.03.05, 01:02:03
From: Eelanathan 203.163.97.113
எழுதியவர் வேண்டுகோளுக்கிணங்க நீக்கப் பட்டது.

Monday, 21.03.05, 01:05:49
From: Eelanathan 203.163.97.113
மன்னிக்கவும் காசி ரோசாவுக்கு எழுதியது மாறி வந்துவிட்டது அழித்துவிடவும்.நன்றி

Tuesday, 07.12.04, 00:25:04
From: Eelanathan 203.163.97.113
நன்றி காசி நான் செய்யவேண்டியது சிலதை நினைவூட்டியதற்கு.பதிலை இத்துடன் நிறுத்திக்கொண்டு செயலில் இறங்குகிறேன்

Tuesday, 30.11.04, 23:16:17
From: ஈழநாதன் 203.163.97.113
அன்பின் காசி அவர்களுக்கு.உங்கள் பொன்னான நேரத்தை உண்டு வளர்கிறது தமிழ்மணம்,நாளுக்கு நாள் புதுப்பொலிவுடன் மிளிரும்
தமிழ்மணத்தையும் உங்களையும் பாராட்டுகிறேன்.

Wednesday, 01.12.04, 04:04:22
From: Eelanathan 203.163.97.113
அப்படியே அப்பால் தமிழையும் சேர்த்துக் கொள்ளுங்களேன் செய்தியோடையை கீழே தந்துள்ளேன்.
http://www.appaal-tamil.com...

Tuesday, 14.09.04, 07:54:39
From: ஈழநாதன் 203.163.97.113
தளங்களை இனைப்பதற்குச் சிறப்பான முறை.அப்படியே எனது பதிவின் பெயரை அகவிதைகள் என்று மாற்றி விடுகிறீர்களா?

மேலே இருக்கிற பின்னூட்டங்களின் தேதிகளைப் பார்த்தீர்களா? ஒரு பொய்யை மறைக்க எத்தனைப் பொய்கள் ஈழநாதன். ஒரு நாளா இரண்டு
நாளா ஆறு மாதங்களா? ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாக (செப்டம்பர் 14, 2004ல் இருந்து), இதே ஐ.பி. அட்ரஸைப் பயன்படுத்தி நீங்கள்
பின்னூட்டம் விட்டு வந்திருப்பது இப்போது தெரிகிறதே. ஆறு மாதங்களாகத்தான் வீட்டில் இணைய இணைப்பு இல்லையா? ஹா ஹா ஹா! நான்
சிரிக்கவில்லை ஈழநாதன். இதைப் படிக்கிறவர்கள் சிரிக்கிற சத்தம் அது. கடைசியில் காற்றில் காலைத் தூக்கியது யார் ஈழநாதன்? இணைய உலாவி
மையத்தை ஆறுமாதமாகப் பயன்படுத்துகிறவர், முந்தைய பின்னூட்டம் ஒன்றில், "என்னுடைய இணைய முகவரியைப் பயங்கரப்படுத்தத் தயார்"
என்றது காற்றில் காலைத் தூக்கி ஆடியபடி சுழற்றியது அட்டைக் கத்தியா? ஏன் இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாகப் பேசி மாட்டிக் கொண்டு
முழி பிதுங்குகிறீர்கள்?

புத்திசாலித்தனம் உங்களிடம் நிச்சயமாக இல்லை என்றாகிவிட்டது. எனவே, நீங்கள் இந்தப் பதிலுக்கும் ஏதேனும் அட்டைக் கத்திகளைச் சுழற்றியபடி
திரும்ப வரத்தான் போகிறீர்கள்.

நீங்கள் எழுதப் போகிற பதிலுக்குப் பின்வரும் காரணங்களில் ஒன்றைப் பயன்படுத்திக் கொள்ளலாமா என்று பாருங்கள். சும்மா ஜாலியா யூஸ்
பண்ணிக்கோங்க. கொப்பிரைட் எதுவும் இல்லை. :-)

1. என்னுடைய வீடும் இணைய உலாவி மையமும் ஒன்றே. நான் இணைய உலாவி மையத்தை நடத்தி வருகிறேன்.

2. நீங்கள் சொன்ன தேதிகளில் எல்லாம் என் வீட்டில் இணைய இணைப்புப் பழுதாகி இருந்ததால், இணைய உலாவி மையத்துக்குச் சென்றிருந்தேன்.

3. வேலைக்குப் போகிற அவசரத்தில், இரண்டரை வருடமாக என்று எழுதுவதற்குப் பதிலாக ஆறுமாதமாக என்று எழுதிவிட்டேன். அதை வைத்து
நீங்கள் இப்படி அட்டைக் கத்தியைச் சுழற்றுகிறீர்களே.

3. என்ன காரணத்தினாலோ இணைய உலாவி மையத்துக்கும் என்னைப் போலவே ப்ராக்ஸியைப் பயன்படுத்துவதில் நம்பிக்கை இல்லாமல்
இருந்திருக்கலாம். எனவே, டைனமிக் ஐ.பி.யாக வராமல் ஸ்டேடிக் ஐ.பி.யாக ஒரே ஐ.பி. எல்லாப் பின்னூட்டங்களிலும் வந்திருக்கலாம்.

4. ஈழநாதன் என்ற பெயரில் நீங்கள் மேலே சொன்ன அனைத்துப் பின்னூட்டங்களையும் நான் எழுதவே இல்லை. (இதை நீங்கள் ஹா ஹா ஹா
என்ற சிரிப்புடன் ஆரம்பித்தால், ஆடியன்சுக்கு நம்பிக்கை வராவிட்டாலும், பரிதாபம் வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். :-) )

5. மலரவன் என்ற பெயர் தவிர ஈழநாதன் என்ற பெயரில் எழுதியது நான்தான். மலரவனும் அதே இணைய உலாவு மையத்தை உபயோகித்து
இருக்கலாம். அந்த மலரவனுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக என்னைப் போலவே வலைப்பதிவுகளிலும், மடலாடற்குழுக்களிலும், தமிழ்மணம்
வலைவாசல் குறித்தும், வலைப்பதிவர்கள் குறிப்பாக அநாநிமஸ்கள் பற்றியும், அனைத்திற்கும் மேலாக இவ்விடங்களில் நிகழும் உள்குத்து
அரசியலிலும் நன்கு பரிச்சயம் இருக்கலாம். (இதை ஆடியன்ஸ் நம்புவது கஷ்டம்தான். ஆனால் நீங்கள் முயற்சித்துப் பார்த்து உங்கள் கும்பல்
பின்பாட்டு பாடினால் ஒப்பேற்றலாம். :-) ) மேலும் என்னைப் போலவே ஈழத்தமிழில் பரிச்சயம் அடைந்தவராய் அல்லது தாய் மொழியாகக்
கொண்டிருக்கலாம். அதனால் நானும் மலரவனும் ஒன்றுதான் என்ற உங்களது கண்டுபிடிப்பிற்கு நோபல் பரிசுதான் தர வேண்டும். இருக்கும் கொஞ்ச
மூளையையும் நன்கு பயன்படுத்திப் பாருங்கள்.

6. மலரவன் என்ற பெயரில் விடப்பட்டிருக்கிற பின்னூட்டத்தைப் பாருங்கள். என் பெயரில் வந்திருக்கிற பின்னூட்டங்களைப் பாருங்கள். அதில்
வருகிற வார்த்தைகள் எதுவும் ஈழநாதன் என்ற பெயரில் எழுதப்பட்ட பின்னூட்டங்களில் இல்லை. உதாரணமாக, இரண்டுபேர் எழுதிய
பின்னூட்டத்திலும், "பத்து மைல்", "பச்சைப் புடவை" என்று இப்படிப்பட்ட பொதுவான - நுணுக்கமான வார்த்தைகள் இருந்தால் மட்டுமே, இரண்டு
பேரும் ஒன்று என்று எங்கள் அண்ணன் பெயரிலி சொல்லித் தந்திருப்பதை இங்கே வாசகர்களுக்கு நானும் நினைவுபடுத்துகிறேன்.

வாசகர்களே, ஈழநாதனின் அடுத்த பதிலில் மேலே இருக்கிற கருத்துகளில் ஒன்றோ, அல்லது மாட்டிக் கொள்ளும்போதெல்லாம் தலையும் புரியாத
வாலும் புரியாத ஓர் ஆயிரம் விஷயங்கள், சண்டைக்கு வெளியே இருக்கிற நபர்கள் மீதான உள்குத்துகள், எதிராளி நடத்தும் பிஸினஸ்,
எதிராளியின் சொந்த வாழ்க்கை, எதிராளியின் வலைப்பதிவுக்கு அப்பாற்பட்ட நண்பர்கள், எதிராளி எழுதுகிற பத்திரிகைகள் ஆகியவற்றைக்
பிசைந்து கலந்தடித்து வறட்டி ஒட்டிப் பின் வறட்டிக் காய்ந்துபோனதும் (சிலமணி நேரங்களில் அல்லது சில நாட்களில் என்று வறட்டி காய்வது
பாஸ்டனின் அன்றைய தட்பவெப்பத்தைப் பொருத்தது. :-) ), நீக்கிவிட்டு அதன்மூலம் வாசகரைத் தன்வயப்படுத்தி விட்டோ ம் என்று நம்பிவிடுகிற
அண்ணன் பெயரிலியின் டெக்னிக்குடனோ ஈழநாதன் எழுதினால், நம் அனைவரையும் அந்த இறைவன் காப்பாற்றட்டும்!

ஈழநாதன், இன்றுபோய் நாளை வாருங்கள்!

இப்படிக்கு, பி.கே. சிவகுமார்
 



அண்ணன் சிவகுமாருக்கு எங்கே நான் வேறு வேறு பெயர்களில் எழுதியதையெல்லாம் கண்டுபிடித்து என் முகத்திரையைக் கிழித்துவிடுவீர்களோ என்று பயந்துகொண்டிருந்தேன்.ஆனால் என்னைக் காப்பாற்றிவிட்டீர்கள் அந்த மலரவன் என்ற பின்னூட்டம் தவிர எல்லாப் பின்னூட்டமும் என் பெயரிலேயே இருக்கின்றன.இந்த பிராக்சி,பின்னூட்டங்களைப் பிய்த்தெடுத்தல் எல்லாவற்றையும் உங்களுக்கும் உங்கள் அடிப்பொடிகளுக்கும் முன்னரேயே அறிந்துகொண்டிருப்பதால் நீங்கள் சொன்ன ஆறு பதில்களில் ஒன்றையே நீங்கள் எனது பதிலாகவும் கொள்ளலாம் எனக்கு ஆட்சேபனை இல்லை.ஏனென்றால் தன்னெஞ்சறிய பொய்யற்க என்ற ஐயன் வள்ளுவன் குறளும் எனக்குத் தெரியும்.இதற்குப் பதிலாக உங்கள் ஐபியெல்லாம் கிளறிக்கொண்டிருக்கும் வேலையை நான் செய்யப்போவதில்லை அந்த நேரத்திற்குப் பிரயோசனமாக ஏதாவது பண்ணலாம்

ஈழவன் என்ற பெயர் எனது புனைபெயர்தான்.தமிழ் வலைப்பதிவுகளிற்கு வந்த ஆரம்ப காலத்தில் அதனைத் தான் பயன்படுத்திக்கொண்டிருந்தேன்.சந்திரவதனா,சுரதா போன்றவர்களுக்கு அது தெரியும்.வலைப்பூவில் நான் ஆசிரியராக இருந்தபோது இளைஞன்,அஜீவன்,சந்திரவதனா,சோழியன் எல்லோருமே என்னை ஈழவன் என்றே விளைத்ததற்கு வலைப்பூவில் இருக்கும் பின்னூட்டங்களே சாட்சி ஆக நான் அதனை மறைக்கவில்லை மறுக்கவில்லை அதனையும் நீங்கள் செய்யும் பித்தலாட்டங்களையும் ஒப்பிட்டாள் பாவம் இன்னும் வளரவேண்டி இருக்கிறது.

இந்தப் பிரச்சனை ஆரம்பித்தது உங்களுக்கும் எனக்கும் இடையில்.ஆனால் வழக்கம்போல உங்கள் அட்டைக்கத்தி இடைவெளி கிடைத்த இடத்திலெல்லாம் புகுந்து பார்க்கிறது என்னுடன் பேசவேண்டிய நேரத்தில் என்னுடன் பேசுங்கள் .பெயரிலியுடனும் மற்ற நண்பர்களுடனும் உங்களுக்குத் தீர்க்கவேண்டிய பிரச்சனைகளை அங்கே தீர்த்துக்கொள்ளுங்கள் அவற்றை ஈழநாதன் கும்பல் என்று தலைப்பிட்டு என்மீது கேட்டால் என்பதில் அட்டைக்கத்திப் பயில்வானே நீங்கள் இன்னமும் வளரவேண்டி இருக்கிறது.உங்கள் கத்தி அட்டைக்கத்தியாக இருப்பதுகூடப் பரவாயில்லை அது காற்றடிக்கும் திசையில்தான் பாயும் என்கிறபோது உங்களின் தரம் பற்றி முதற் பின்னூட்டத்தில் குறிப்பிட்டவற்றை நீங்களே மறந்துவிட்டீர்களோ என்று தோன்றுகிறது.

சரி ஈழவன் என்ற பெயரை நான் பத்ரியின் பதிவில் பயன்படுத்தியிருந்தேன் நீங்களும் அது நானா என்று கேட்டு சில கேள்விகளையும் கேட்டிருந்தீர்கள் பதில்கொடுத்துவிட்டு நானும் உங்களிடம் சிலவற்றைக் கேட்டிருந்தேன் பதிலே இல்லை மறந்துவிட்டீர்கள் என்று நினைத்தேன் இப்போது நீங்கள் பெயர் பற்றிய விடயத்தை மட்டும் ஞாபகத்தில் வைத்திருப்பதைப் பார்த்தால் மறக்கவில்லை உங்கள் வழக்கப்படி காணமற் போய்விட்டீர்கள் என்று நம்பவேண்டி இருக்கிறது.இதுமட்டுமல்ல நீங்கள் காணாமற் போன சம்பவங்கள் ஏராளம்.சொல்லவேண்டியவற்றைச் சொல்லியாகிவிட்டது.

இனியும் அட்டைக் கத்தியைச் சுழற்றிக்கொண்டிருப்பதும் வெட்டுப்பட்டவர்களுக்குக் கணக்குக் காட்டுவதும் உங்கள் இஷ்டம்.உங்கள் அட்டைக்கத்தி வீரம் யாருக்கெல்லாம் தெரியவேண்டுமென்று நான் நினைத்தேனோ அந்த நோக்கம் நிறைவேறிவிட்டது.இந்தப் பின்னூட்டங்களை வாசிக்கும் ஒருவருக்கு உங்களின் தரம் என்ன களம் என்ன அட்டைக்கத்தி வீரம் என்ன அதை நீங்கள் சுழற்றும் நேரம் என்ன,நீங்கள் எப்போது சாணி அடிப்பீர்கள் எப்போது காலைத்தூக்குவீர்கள் என்பதெல்லாம் புரிந்திருக்கும்.நீங்கள் வழக்கம்போலவே பயன்மிகுபல விவாதங்களை திண்ணையிலும் மரத்தடியிலும் நடத்தி வலைப்பதிவுவாழ் மக்களுக்கு அறிவுரைகளும் ஆசீர்வாதங்களும் வழங்க உங்களுக்கு என் எல்லாம் வல்ல குருநாதன் பெயரிலி அருள்புரிவாராக

முகமூடி இந்தச் சண்டை நீண்டுவிட்டது மன்னிக்க இது பற்றி இங்கே இடும் கடைசிப் பின்னூட்டம் இதுதான்.வேண்டுமானால் பிறிதொருநாளில் என்பதிவில் தொடரலாம் கடன்பட்டோர் நெஞ்சம் போல கலக்கத்துடன் வீடு புகுகிறான் இந்த இராவணன் இன்றுபோய் நாளை வாவென்று விடைகொடுத்த ராமனோ கோதண்டத்திற்குப் பதிலாய் அட்டை வில்லும் அம்புறாத் தூணியுமாய் கூனி முதுகிலன்றிக் கூப்பிட்டவர் முதுகிலெல்லாம் சாணியடிக்கக் காத்துக்கொண்டிருக்கையில் எனக்கென்ன விசரே
 



ஐயா ஈழநாதரே

நான் ஒரு பார்வையாளன் மட்டுமே. உங்களுக்கும் பி கே எஸ்ஸ¤க்கும் நடக்கும் பரிவர்த்தனைகளை தொடர்ந்து அமைதியாக அவதானித்து வருகிறேன். எனது பார்வையில் கீழ்க்கண்ட விடயங்கள் நடந்தேறின:

1. முகமூடி வை கோவின் அணித் தாவல்களைக் கிண்டலடித்து வை கோ ஒரு சாதாரண அரசியல்வாதிதான் இலட்சியவாதியெல்லாம் அல்லர் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக ஒரு பதிவு போடுகிறார். வை கோ என்ற அரசியல்வாதியை இங்கு பலரும் ஒரு பீடத்தில் வைத்திருந்து பூஜித்துக் கொண்டிருந்த வேளையிலே வை கோ என்பவரும் பதவி, கட்சி, அதிகார வேட்கையுள்ள ஒரு நாலம் தர அரசியல்வாதிதான் என்பதை குறிப்பால் உணர்த்தினார்.

2. அதைப் பாராட்டிய பி கே எஸ் வை கோ, திருமா போன்ற அரசியல்வாதிகளின் யோக்கிதையை அவர்கள் நடவடிக்கைகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன, அவர்களது நடவடிக்கைகள் மட்டுமே அவர்களின் மீது கட்டி எழுப்பப் பட்டிருக்கும் பொய்யான பிம்பத்தை உடைக்கப் போதுமானவை என்று சொல்லி முகமூடியின் பதிவுகளுக்கு இனி அவசியமில்லை என்று ஒரு அங்கதத் தொனியில் பின்னூட்டம் போடுகிறார்.

3. அதற்கு பிறகு நீங்கள் உள்ளே வருகிறீர்கள். வை கோ செய்தது சரி, அல்லது தவறு என்று பதிவுக்குச் சம்பந்தமாக பின்னூட்டம் இடுவதற்குப் பதிலாக தேவையே இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் பி கே எஸ்ஸை வம்புக்கு இழுத்தீர்கள். உங்களுக்கும் அவருக்கும் ஏதேனும் பிரச்சினை என்றால் அதை உங்கள் பதிவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து பேசப் படும் விஷயத்திற்கு சம்பந்தமில்லாமல் ஒரு தனி நபர் தாக்குதலில் இறங்கினீர்கள். அதாவது வை கோ உடைத்த பிம்பத்தினால் ஏற்பட்ட அவமானம் பொறுக்காமல் அதைப் பற்றிய பேச்சில் இருந்து திசை திருப்ப நீங்கள் பி கே எஸ்ஸை வம்புக்கு இழுத்தீர்கள். உங்களுடைய நோக்கம் திசை திருப்புதல்தான். அது சரியாகவே நடை பெற்றது.

4. பி கே எஸ் உங்களுக்குப் பதில் கூறினார். பதிலுக்கு நீங்கள் உங்கள் பெயரில் அன்று வேறு பெயரில் எழுதியதே அல்ல என்று சத்தியம் செய்து, முடிந்தால் நீருபியுங்கள் என்று பி கே எஸ்ஸ¤க்கு சவால் விட்டீர்கள். வேறு பெயரில் எழுதியதை இல்லை என்று முழு பொய்யை அவிழ்த்து விட்டதும் அல்லாமல் சவால் வேறு விட்டீர்கள்.

5. பி கே எஸ் நீங்கள் எப்பொழுதெல்லாம் வேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டீர்கள் என்று தெளிவாக நிரூபித்தார். அப்பொழுதும் கூட உண்மையை ஒத்துக் கொள்ளாமல் ப்ரொள்சிங் செண்டரில் இருந்து பின்னூட்டம் இட்டதாகப் பொய் சொன்னீர்கள். அதையும் பொய் என்று நீங்கள் சொன்ன காலகட்டத்துக்கும் முன்பாக உள்ள பின்னூட்டத்தில் இருந்து நீரூபித்தார். அப்பொழுதும் கண்ணியமாக ஆமாம் நான் வேறு பெயரில் பின்னூட்டம் இட்டேன் என்று ஒத்துக் கொள்ளாமல் காலைத் தூக்குகிறார் கையைத் தூக்குகிறார் என்று தொடர்ந்து ஆபாசமாகவும், அடாவடித்தனமாகவுமே எழுதி கொண்டு செல்கிறீர்கள். முதலில் நான் பிற பெயர்களில் எழுதவே இல்லை என்று சொன்ன நீங்கள் இப்படி கையும் களவுமாகப் பிடிபட்ட பின்னர் அந்தப் பெயர்களில் எழுதினேன் என்கிறீர்கள். அப்ப முன்பு சொன்னது என்னவாயிற்று? அதை நாங்கள் எல்லாம் மறந்து விட வேண்டுமா என்ன? முதலில் சொன்னது உண்மையா, இப்பொழுது சொல்வது உண்மையா? எது உண்மை? நீங்கள் முதலில் சவால் விட்ட பொழுது சொன்னது அப்பட்டமான பொய் என்பதையும் ஏற்க மறுக்கிறீர்கள். நீங்கள் முதலில் சொன்னதும் இங்கு பின்னூட்டப் பெட்டியில் அப்படியே இருக்கிறது. இப்பொழுது சொல்வதும் அப்படியே இருக்கிறது. ஏன் இந்த ஏமாற்று வேலை? ஏன் இந்த மோசடி?

ஆக என்னைப் போன்ற ஒரு வழிப்போக்கர்களுக்கு நீங்கள் ஒரு பொய்யர், பித்தலாட்டக்காரர், நாணயம் இல்லாதவர்,நேர்மையற்றவர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகிறது. இனி நீங்கள் எங்கு எதை எழுதினாலும் எங்களுக்கு ஒரு நேர்மையற்றவரின் சவடால்களாக மட்டுமே தோன்றும். ஆரம்பத்திலேயே நீங்கள் உண்மையை ஒத்துக் கொண்டிருந்து காற்றில் அட்டைக் கத்தியை சுத்தாமல் இருந்திருந்தாலவது உங்கள் மீது உள்ள கொஞ்சம் நஞ்சம் மரியாதையும் மிச்சமிருந்திருக்கும். வை கோ பதிவை திசை திருப்புகிறேன் பேர்வழி என்று வந்து உங்களைப் பொய்யர் என்று நிரூபித்துக் கொண்டதுதான் மிச்சம். அது சரி, வை கோ, திருமாவை பின்பற்றும் உங்களைப் போன்றவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது எங்கள் பிழைதான்.

இப்படிக்கு
ஒரு வழிப்போக்கன்
 



எல்லாஞ்சரி!

நீங்க ஒரு "வழிபோக்கனா" இல்ல "ஒருவழி" போக்கனா?
 



அடியாள் கார்த்திக் அண்ணே, வெளிவராத உம்ம மூனு பதிவுகள், 7 புணைபெயரில் பெண்கள் பெயரும் உண்டா ?


மாடர்னாய் மதிமயக்குவர் நீங்கத்தான் என்று மண்டபத்தில் பேசிக்கிறாஙகளே உண்மையா ?

அதுதான் உம்மை முழுசா முங்க வெச்சிட்டாங்களே, இன்னும் ஏன் முக்காடு போட்டுக்கிட்டு இருக்கீங்க ?

இதுக்காக Victoria Secret ல வாங்கின பில்லு Ann Tylor கடைக்கும் உம்ம அபார்மெண்டுக்கும் உள்ள தூரம் இதை போட்டு கிழிஞ்ச டவுசர் என்று ஒரு பதிவு போட்டுங்க. படிக்க டமாஸா இருக்கும் .

-------------

இராமாஸின் நண்பன்
 



இந்த விவாதத்தை ஓரமாய் நின்று ஓரளவு கவனித்தவன் என்ற முறையில் வழிப்போக்கன் அவர்களுக்கு சில குறிப்புகள்,

ஈழநாதன், பெயரிலி சில விளக்கங்கள் தர தேவையுள்ளதாக, சில விஷயங்கள் நெருடலாக உள்ளதாகவும் நினைக்கும் நான், அது குறித்து (எனக்கான சில காரணக்களினால்) என் பதிவில் பிறகு எழுதும் நோக்கம் உள்ளது. இந்த குறிப்புகள், ஈழநாதன் மீது (வாய்ப்பை பயன்படுத்தி) அதிகப்படியாய் வரும் குற்றச்சாட்டுகள் பற்றி மட்டுமே.


//1. முகமூடி வை கோவின் அணித் தாவல்களைக் கிண்டலடித்து வை கோ ஒரு சாதாரண அரசியல்வாதிதான் இலட்சியவாதியெல்லாம் அல்லர் என்பதை சுட்டிக் காட்டும் விதமாக ஒரு பதிவு போடுகிறார். வை கோ என்ற அரசியல்வாதியை இங்கு பலரும் ஒரு பீடத்தில் வைத்திருந்து பூஜித்துக் கொண்டிருந்த வேளையிலே வை கோ என்பவரும் பதவி, கட்சி, அதிகார வேட்கையுள்ள ஒரு நாலம் தர அரசியல்வாதிதான் என்பதை குறிப்பால் உணர்த்தினார். //

வைகோவை யாரும் பூஜித்ததாக தெரியவில்லை. யாரும் அவரை கொள்கைவீரராக அரசியலில் சமரசம் செய்பவராக சொல்லியதாக தெரியவில்லை. வைகோ அரசியலில் எல்லோரையும் போல ஒரு சந்தர்ப்பவாதி என்றுதான், அவரை வேறு காரணங்களுக்காக ஆதரிப்பவர்களும் கூறியிருக்கிறார்கள். வலைப்பதிவை ஒழுங்காய் படிக்கும் எவரும் இதை உணரமுடியும். தேவையானால் உதாரணங்களை வரைசைப்படுத்த முடியும். வைகோவிற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்து எழுதிய சுமு பதிவில் கூட அவரை நம்பமுடியாதவராகவே குறிப்பிடப்பட்டுள்ளது.


//2. அதைப் பாராட்டிய பி கே எஸ் வை கோ, திருமா போன்ற அரசியல்வாதிகளின் யோக்கிதையை அவர்கள் நடவடிக்கைகளே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன, அவர்களது நடவடிக்கைகள் மட்டுமே அவர்களின் மீது கட்டி எழுப்பப் பட்டிருக்கும் பொய்யான பிம்பத்தை உடைக்கப் போதுமானவை என்று சொல்லி முகமூடியின் பதிவுகளுக்கு இனி அவசியமில்லை என்று ஒரு அங்கதத் தொனியில் பின்னூட்டம் போடுகிறார்.//

வழிபோக்கன் பாதியை மட்டும் தேர்ந்தெடுத்து கூறியுள்ளார். சிவக்குமார் கூறியது அதுவல்ல. வலைப்பதிவுகளில் ஒரு சிலரை(பெயர்களை சொல்லாமல், பெயரிலி தவிர வேறு யாரையும் சூசகமாவும் குறிப்பிடாமல, அதே நேரம் வாசிப்பவர்களுக்கு (நான் உட்பட) பலர் அதில் இடம்பெறும்படி எல்லோரையும்) 'நசிவு சக்திகள்' என்று குறிப்பிட்டு, அவர்கள் எல்லாம் இதனால் வாயடைத்து போவார்கள் என்றார். திருமா, வைகோ அதிமுக பக்கம் சென்ற, ஏற்கனவே வாய்ப்பு மிகவும் இருப்பதாக எதிர்பார்த்திருக்க கூடிய ஒரு நிகழ்வு, வலைப்பதிவுகளின் 'நசிவு சக்திகளை' வாயடைக்க வைக்கும் என்ற அற்புத லாஜிக் ஒருபுறமிருக்க, சிவக்குமாரால் அதிகம் குறிப்பிடப்பட்ட, ரொம்ப நாடகளாகவே காணாமல் போய் போய் படம் மட்டும் போடும், தமிழக அரசியலில் பெரிதாக ஆர்வம் காட்டாத, அதுகுறித்து எதுவும் எழுதாமல் ஏற்கனவே மௌனமாய் இருக்கும் பெயரிலியை இது எப்படி வாயடைக்க வைக்கும் என்பது தலைகால் புரியவில்லை. ராம்வாட்சர் என்பது பத்திரிகைகள் எப்படி ஈழபிரச்சனை தொடர்பாக செய்திகளை திரிக்கின்றன, தங்கள் அரசியல் நலங்களை முன்வைத்து அதற்கு சாதகமாய் முன்வைக்கிறது என்பதை பற்றிய ஒரு விமர்சனம். திருமா வைகோ அதிமுக பக்கம் செல்வது, ஒரு அரசியல்ரீதியான சந்தர்பவாதம். மேலும் தேர்தல் முடிந்தவுடன் அவர்கள் பழையபடி ஈழபிரச்சனை பற்றி பேசுவார்கள். ஒருவேளை மீண்டும் ஜெயா உள்ளே போட்டாலும் போடலாம். வைகோ, திருமா நடவடிக்கை தந்த தலைகால் புரியாத சந்தோஷத்தில் சம்பந்தமில்லாமல் லாஜிக்குகளை பிகேஎஸ் அள்ளிவிட்டதாக மட்டுமே தெரிகிறது.

//3. அதற்கு பிறகு நீங்கள் உள்ளே வருகிறீர்கள். வை கோ செய்தது சரி, அல்லது தவறு என்று பதிவுக்குச் சம்பந்தமாக பின்னூட்டம் இடுவதற்குப் பதிலாக தேவையே இல்லாமல், சம்பந்தமே இல்லாமல் பி கே எஸ்ஸை வம்புக்கு இழுத்தீர்கள். உங்களுக்கும் அவருக்கும் ஏதேனும் பிரச்சினை என்றால் அதை உங்கள் பதிவில் வைத்துக் கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து பேசப் படும் விஷயத்திற்கு சம்பந்தமில்லாமல் ஒரு தனி நபர் தாக்குதலில் இறங்கினீர்கள். அதாவது வை கோ உடைத்த பிம்பத்தினால் ஏற்பட்ட அவமானம் பொறுக்காமல் அதைப் பற்றிய பேச்சில் இருந்து திசை திருப்ப நீங்கள் பி கே எஸ்ஸை வம்புக்கு இழுத்தீர்கள். உங்களுடைய நோக்கம் திசை திருப்புதல்தான். அது சரியாகவே நடை பெற்றது.//

ஏறகனவே சொன்னது போல் இது வழைப்போக்கனால் முற்றிலும் தேர்ந்தெடுக்கப் பட்டு முன்வைக்கும் திரித்தல். வலைப்பதிவுகளின் 'நசிவு சக்திகள்' என்று தொடங்கி பலர் மீது வைத்த பிகேஎஸின் தாக்குதலால் உந்தப்பட்டே ஈழநாதன் பேசினார். அதை ஒட்டியே அவரது மறுமொழியும் உள்ளது. அதை அப்படியே இங்கே வழிபோக்கன் திரிக்கிறார்.

//4. பி கே எஸ் உங்களுக்குப் பதில் கூறினார். பதிலுக்கு நீங்கள் உங்கள் பெயரில் அன்று வேறு பெயரில் எழுதியதே அல்ல என்று சத்தியம் செய்து, முடிந்தால் நீருபியுங்கள் என்று பி கே எஸ்ஸ¤க்கு சவால் விட்டீர்கள். வேறு பெயரில் எழுதியதை இல்லை என்று முழு பொய்யை அவிழ்த்து விட்டதும் அல்லாமல் சவால் வேறு விட்டீர்கள்.//


பிகேஎஸ் முதலில் ('நசிவு சக்திகள்' என்றெல்லாம் திட்டி) சொன்னது, வேறு பெயர்களில் ஒளிந்துகொண்டு *தன் அடையாளத்தை மறைத்துகொண்டு* மற்றவர்களை திட்டுவது பற்றி. ஈழவன் என்ற பெயரில் ஈழநாதன் தன் அடையாளத்தை மறைத்துகொண்டு எழுதவில்லை. எல்லோருக்கும் தெரியும் வண்ணம் ஒரு புனை பெயரில்தான் எழுதினார். ஏற்கனவே பாலாஜி-பாரி போன்றவர்கள் இப்படி (வழிப்போக்கன் என்ற பெயரில்) எழுதுவதும், அதை அவரே ஒப்புக்கொண்டது எல்லோருக்கும் தெரியும். 'ஈழவன் நீங்கள்தானா?' என்று சிவக்குமார் கேட்டபோது, 'ஆமாம் நான்தான்' என்று ஈழநாதன் சொன்னார். (அதை நானும் அந்த சந்தர்ப்பத்தில் படித்தேன்.) 'நான் வேறு பெயரில் எழுதவில்லை' என்று சொன்னது தன் அடையாளத்தை மறைத்து எழுதுவதை பற்றி என்பது புரிவதில் சிரமம் இல்லை என்றே தோன்றுகிறது. ஆனால் பிகேஎஸ் ஒரு வாக்கியத்தை தனக்கு சாதகமாக வைத்து விளையாடுகிறார். ஆக ஈழநாதன் 'ஈழவன்' விவகாரத்தில் போய் சொல்வதாக சொல்வது வழபோக்கன் சிவக்குமாரை போலவே செய்யும் விளையாட்டு மட்டுமே. மற்றபடி 'மலரவன்' விஷயம் வேறு அதற்கு அடுத்த பத்தியில் வருகிறேன்.


//5. பி கே எஸ் நீங்கள் எப்பொழுதெல்லாம் வேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டீர்கள் என்று தெளிவாக நிரூபித்தார். அப்பொழுதும் கூட உண்மையை ஒத்துக் கொள்ளாமல் ப்ரொள்சிங் செண்டரில் இருந்து பின்னூட்டம் இட்டதாகப் பொய் சொன்னீர்கள். அதையும் பொய் என்று நீங்கள் சொன்ன காலகட்டத்துக்கும் முன்பாக உள்ள பின்னூட்டத்தில் இருந்து நீரூபித்தார். அப்பொழுதும் கண்ணியமாக ஆமாம் நான் வேறு பெயரில் பின்னூட்டம் இட்டேன் என்று ஒத்துக் கொள்ளாமல் காலைத் தூக்குகிறார் கையைத் தூக்குகிறார் என்று தொடர்ந்து ஆபாசமாகவும், அடாவடித்தனமாகவுமே எழுதி கொண்டு செல்கிறீர்கள். முதலில் நான் பிற பெயர்களில் எழுதவே இல்லை என்று சொன்ன நீங்கள் இப்படி கையும் களவுமாகப் பிடிபட்ட பின்னர் அந்தப் பெயர்களில் எழுதினேன் என்கிறீர்கள். அப்ப முன்பு சொன்னது என்னவாயிற்று? அதை நாங்கள் எல்லாம் மறந்து விட வேண்டுமா என்ன? முதலில் சொன்னது உண்மையா, இப்பொழுது சொல்வது உண்மையா? எது உண்மை? நீங்கள் முதலில் சவால் விட்ட பொழுது சொன்னது அப்பட்டமான பொய் என்பதையும் ஏற்க மறுக்கிறீர்கள். நீங்கள் முதலில் சொன்னதும் இங்கு பின்னூட்டப் பெட்டியில் அப்படியே இருக்கிறது. இப்பொழுது சொல்வதும் அப்படியே இருக்கிறது. ஏன் இந்த ஏமாற்று வேலை? ஏன் இந்த மோசடி? //

'ஈழவன்' விவகாரம் பற்றி ஏற்கனாவே சொன்னதுபோல், அது வாக்கியத்தை தனக்கு சாதகமாக்கி பிகேஎஸ் வழிபோக்கன் செய்யும் விளையாட்டு மட்டுமே. ஆனால் பிகேஎஸ் ஐபிக்களை 'எடுத்து போட்டு' மலரவன் என்ற 'பெயரில் ஈழநாதன் எழுதியது' பற்றி பிகேஸ் சொல்வது வேறு விஷயம். மற்ற வெற்று சவடால்கள், திரித்தல்கள் தர்க்க சாமர்த்தியங்களை விட்டுவிட்டு, பிகேஎஸ் (ஈழநாதன் பற்றி) எழுதியதில் சீரியசாய் எடுக்க இந்த ஒருவிஷயம் மட்டுமே எனக்கு உள்ளது. ஐபிக்கள் எங்கிருந்து பெறப்பட்டன, அதன் நம்பகத்தன்மை என்ன, என்பதை அறிந்துகொள்ள எனக்கு போதுமான அறிவு இல்லை. அதானால் நிறைவாக என்னால் மிக நிச்சயமாக எதுவும் சொல்ல முடியவில்லை. மலரவன் என்ற பெயரில் ஈழநாதன் எழுதினாரா இல்லையா என்று என்னால் நிச்சயமாய் சொல்ல முடியாது. ஆனால் ஏற்கனவே கார்திக் விஷயத்தில் (அது குறித்து முடிந்தால் பிறகு எழுதலாம்) சரியாகவே ஒரு துப்பறியும் வேலையை செய்திருக்கும் சிவக்குமாரின் ஆதாரம், சரியாக இருப்பதாக நம்பவே எனக்கு தோன்றுகிறது. அது குறித்த ஈழநாதனின் விளக்கம் நிறைவாக இல்லை என்பதும் தெரிகிறது. அவர்தான் விளக்க வேண்டும்.

ஆனால் மலரவன் என்ற பெயரில் மறைந்துகொண்டு யாரையும் ஈழநாதன் தாக்கியதாக (எனக்கு) தெரியவில்லை. அப்படி எழுதியதன் மூலம் என்ன பெரிய பாதகத்தை செய்கிறார் என்றும் புரியவில்லை. (ஈழநாதன் பெயரில் எழுதாமல் மலரவன் பெயரில் மற்றவர்களை திட்டும் வசதிக்காகவோ, அல்லது கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலோ எழுதியதாகவோ தெரியவில்லை- அதாவது எல்லா ஆதாரமும் சரியாக இருந்து அவர் எழுதியிருக்கும் படச்சத்தில்.)

சண்டையின் போக்கில், தர்க்கச்சிக்கலில் மாட்டிகொண்டு ஈழநாதன் தான் எழுதவில்லை என்று சாதிப்பதாக கூட இருக்கலாம். இதை முன்வைத்து (வறலாற்றில் பலமுறை நடக்கும்) தர்ம அடிபோட எல்லோரும் முயலலாம். அதைதான் வழிப்போக்கன் கீழே செய்கிறார்.

//ஆக என்னைப் போன்ற ஒரு வழிப்போக்கர்களுக்கு நீங்கள் ஒரு பொய்யர், பித்தலாட்டக்காரர், நாணயம் இல்லாதவர்,நேர்மையற்றவர் என்பது சந்தேகத்துக்கு இடமில்லாமல் தெளிவாகிறது. இனி நீங்கள் எங்கு எதை எழுதினாலும் எங்களுக்கு ஒரு நேர்மையற்றவரின் சவடால்களாக மட்டுமே தோன்றும். ஆரம்பத்திலேயே நீங்கள் உண்மையை ஒத்துக் கொண்டிருந்து காற்றில் அட்டைக் கத்தியை சுத்தாமல் இருந்திருந்தாலவது உங்கள் மீது உள்ள கொஞ்சம் நஞ்சம் மரியாதையும் மிச்சமிருந்திருக்கும். வை கோ பதிவை திசை திருப்புகிறேன் பேர்வழி என்று வந்து உங்களைப் பொய்யர் என்று நிரூபித்துக் கொண்டதுதான் மிச்சம். அது சரி, வை கோ, திருமாவை பின்பற்றும் உங்களைப் போன்றவர்களிடம் நேர்மையை எதிர்பார்ப்பது எங்கள் பிழைதான்.//

இது குறித்த அதிகப்படியான கருத்துக்கள் முடிந்தால் என் பதிவில் பிறகு.
 



//திருமா, வைகோ அதிமுக பக்கம் சென்ற, ஏற்கனவே வாய்ப்பு மிகவும் இருப்பதாக எதிர்பார்த்திருக்க கூடிய ஒரு நிகழ்வு, வலைப்பதிவுகளின் 'நசிவு சக்திகளை' வாயடைக்க வைக்கும் என்ற அற்புத லாஜிக் ஒருபுறமிருக்க//

ஓய் ரோசா..ஒரு பதிவையே ஒரு வாக்கியத்தில் நொறுக்கற இந்த தெறமைய தான்யா நான் பாராட்டறேன்.

மத்தபடி....அப்புறம் எழுதறேன்..பிறிதொரு சமயத்தில் எழுத எண்ணம் உள்ளது.....பின்னாடி விளக்கமாக எழுதறேன்...என்றெல்லாம எவ்வளவு முறை சொல்லுவ நீ?

( நீ விகுதி நெருக்கம் சார்ந்தது.உரிமையை தானாக எடுக்கறதுதானே தமிழ் பண்பாடு)

//ஒருவேளை மீண்டும் ஜெயா உள்ளே போட்டாலும் போடலாம். //

ஹி ஹி...பொடா பி.ஜே.பி கொண்டுவந்தது...அதை அமல்படுத்தியது மட்டும்தான் அம்மா.....
 



//ஆனால் மலரவன் என்ற பெயரில் மறைந்துகொண்டு யாரையும் ஈழநாதன் தாக்கியதாக (எனக்கு) தெரியவில்லை. அப்படி எழுதியதன் மூலம் என்ன பெரிய பாதகத்தை செய்கிறார் என்றும் புரியவில்லை. (ஈழநாதன் பெயரில் எழுதாமல் மலரவன் பெயரில் மற்றவர்களை திட்டும் வசதிக்காகவோ, அல்லது கருத்துக் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலோ எழுதியதாகவோ தெரியவில்லை- அதாவது எல்லா ஆதாரமும் சரியாக இருந்து அவர் எழுதியிருக்கும் படச்சத்தில்.) //


ஈழநாதன் புலியெதிர்ப்பு மாற்றுக் கருத்தாளர்களை அநாமதேயமாகவந்து"நக்கிற நாய்க்கு செக்கென்ன சிவலிகமென்ன"என்று கேவலமாகக் கருத்திட்டவர்.பெயரிலியோ இத்தகைய மாற்றுக்கருத்தாளர்களை "பாட்டாளியின் கூட்டாளி"என்ற புனைபெயருடன் கருத்தற்ற"வழவழா கொழ கொழா"என்றெழுதியவர்.வலைப்பதிவில் இப்படியொரு வார்த்தையை பெயரிலி மட்டுமே எழுதுகிறார்.

இவர்கள் பல புனைபெயர்களில் வருகிறார்கள்.

இந்த ஆள்மாறாட்ட இவர்களது கணினித் திறமையை அறியாத அப்பாவிகளான புலிக்கு எதிரான மாற்றுக் கருத்தாளர்களை இவர்கள் கடிப்பதால் அவர்களும் நேரத்தை இவர்களுக்காக ஒதுக்கி விவாதிப்பதை நான் பல தளங்களில் பார்த்துள்ளேன்.


பாட்டாளியின் கூட்டாளி,

ஜெகன்,

என்றெல்லாமும் வருவது இவர்களே!

ஆனால் இவர்களால் மாற்றுக் கருத்தாளர்களை ஒருபோதும் அழித்துவிட முடியாது.

முகமூடி,சிவகுமார் அவர்களின் வாதங்களிலுள்ள தர்க்கத்துக்கு இவர்களால் குதர்க்கமே செய்யமுடியும்!காரணம் அவர்களுக்கே தெரியும் "தமது சட்டியில் ஒரு பருக்கையும் இல்லை"என்பது.இதனால் கருத்துக்களைத் திசை திருப்புவதில் ஈழநாதன் முன்னணியிலிருக்கிறார்.இது புலிகளால் வளர்த்தெடுத்து அனுப்பப்பட்டவொரு வால்.ஈழநாதனிடம் மிகவும் யாக்கிருதையாக இருப்பது நல்லது.

அன்புடன்

நிர்மாணம் சார்பாக

கதிர்.
 



//பெயரிலியோ இத்தகைய மாற்றுக்கருத்தாளர்களை "பாட்டாளியின் கூட்டாளி"என்ற புனைபெயருடன் கருத்தற்ற"வழவழா கொழ கொழா"என்றெழுதியவர்.வலைப்பதிவில் இப்படியொரு வார்த்தையை பெயரிலி மட்டுமே எழுதுகிறார்.//

அண்ணே நிர்மாணம். நீங்கள் சொன்ன மற்ற விசயங்களை விட்டு ஒரு விசயத்தை மட்டும் சொல்கிறேன். ஒரு வலைப்பதிவனாகவும் வாசகனாகவும் இதைச் சொல்ல முடியும். நீங்கள் எவ்வளவு காலமாக வலைப்பதிவுகள் வாசிக்கிறீர்கள் என்று தெரியாது. ஆகவே தான் இப்படியான கதைகளை உங்களாற் சொல்ல முடிகிறது. வழவழா கொழகொழா என்ற சொல் பயன்படுத்தப்பட்டது மூக்கு சுந்தரினால் ரவி சிறினிவாசின் பதிவில். அதிலிருந்து அச்சொல்லை இருதரப்புமே மாறிமாறிப் பயன்படுத்தி வருகின்றனர். விட்டால் மூக்கு சுந்தரும் பெயரிலியும் ஒருவரே என்றுகூட நீங்கள் சொல்வீர்கள் போலுள்ளதே?
 



ரோஸா,

வணக்கம். வாங்க. இனி இந்த விவாதத்தை இங்கு தொடர விருப்பமில்லை என்று ஈழநாதன் எழுதிய பின்னர், அதைப் பற்றி நானும் எழுதுவது
நாகரீகமில்லை என்று சும்மா இருந்தேன். அது விவாதத்தை திசை திருப்புகிற வேலையாகவும் இருக்கும். ஆனால், அந்த வேலையைச் செய்யப்
பலரும் இருக்கிறார்கள் என்பது வழிப்போக்கன், நீங்கள் மற்றும் பலரின் வளர்கிற பின்னூட்டங்களைப் பார்க்கும்போது தெரிகிறது. இனி வரப்போகும்
அனானிமஸ் பின்னூட்டங்கள் பற்றிச் சொல்வதற்கு இது என் பதிவில்லை என்பதால் நீங்கள் ( நீங்கள் அனானிமஸ் இல்லை என்பதாலும், நீங்கள்
திசைதிருப்ப வரவில்லை என்று நம்புவதாலும்) எழுதியிருப்பதற்கு மட்டும் பதில்.

பொதுவாக யாரைப் பற்றி எழுதினாலும், அது உங்களைப் பற்றித்தானோ என்று நினைத்துக் கொள்கிற மாதிரி (ஒரு ஸ்மைலி போட்டுக் கொள்கிறேன்
:-) ) நசிவு சக்திகள் என்று நான் சொன்னவர்களில் நீங்களும் இருப்பதாக நீங்கள் கற்பனை செய்து கொண்டிருப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை.
இதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது என்றபோதினும் நசிவு சக்திகள் என்று அந்த வார்த்தையை நான் எழுதியபோது, உங்கள் பெயரோ பிம்பமோ
என் மனதில் தோன்றவில்லை என்பதை மட்டும் சொல்வது என் கடமை. நம்புவதும் நம்பாததும் உங்கள் விருப்பம். நீங்கள் ரோஸா வஸந்த் என்ற
பெயரில் எழுதினாலும் நீங்கள் யாரென்று எனக்குத் தெரியும். உங்களைப் பற்றிய விவரங்களை நண்பர் ராஜன்குறை மூலம் அறிந்திருக்கிறேன்.
ரோஸா என்ற பெயர் தவிர வேறு பெயர்களில் நீங்கள் எழுத மாட்டீர்கள் என்ற ஒரு நம்பிக்கை இருக்கிறது. அதுவுமில்லாமல், நாம் எவ்வளவோ
சண்டைகள் போட்டிருக்கிற போதினும், அதற்குப் பிறகு நீங்கள் கூட்டு வலைப்பதிவு மற்றும் தனிவலைப்பதிவு என்று எழுத ஆரம்பித்தபின்
வேறுபாடுகளை மீறி நீங்கள் எழுதுகிறவற்றுள் எனக்குப் பிடித்ததைப் பாராட்டுகிறேன். நீங்களும் அத்தகைய பாராட்டுகளைச் சில நேரங்களில்
(சிவகுமாரின் பிறச் செயல்பாடுகளைப் பற்றிய விமர்சனத்துடன் :-)) பாராட்டியிருக்கிறீர்கள். பிடிக்காததைப் பற்றிப் பொதுவாக நான் அதிகம் உங்கள்
பதிவில் மட்டுமில்லை - வேறு எங்குமே எழுதுவதில்லை - என்பதால், அந்தக் கருத்தைச் சொல்ல அவருக்கு உரிமை உண்டு என்று இருக்கிறேன்.
என் கருத்துடன் ஒத்துப் போகவில்லை என்றால், அவர் என்ன எழுதினாலும் பின்தொடர்ந்து தாக்குவதில்லை - சில நேரங்களில் என்னையும் மீறிப்
பின்னூட்டமோ எதிர்ப்பதிவோ போடுவதைத் தவிர.

சமீபத்தில் எங்கேயோ பெரியார் தன் கருத்துகளை எல்லாம் மிகவும் வெளிப்படையாக வைத்ததாலேயே அவரைத் தாக்குவது தவறு என்ற பெயரில்
நீங்கள் எழுதிப் படித்த ஞாபகம். அல்லது இந்தப் பொருளில் எழுதியிருந்தீர்கள். அந்த மாதிரி ஆரம்பம் முதலே வலைப்பதிவுகளிலும் பிற இணைய
ஊடகங்களிலும் நான் சொந்தப் பெயரில் மட்டுமே வெளிப்படையாக எழுதி வருகிறேன். பெரியாருக்கு ஒரு நியாயம் எனக்கு ஒரு நியாயம் என்று
என் கருத்துகளைச் சொல்லும்போதெல்லாம் நான் எல்லைகளை மீறித் தாக்கப்படுவது ரொம்ப நாட்களாக நடந்துதான் வருகிறது. (அந்தக்
கருத்துகளில் தவறு இருக்கலாம் சரி இருக்கலாம். அதை விவாதபூர்வமாக எதிர்கொள்ள வேண்டும். என்னுடம் பேசுகிறவரின் மொழியிலும்
தொனியிலும் பேச எனக்கும் உரிமை இருக்கிறது. ) அப்படி எழுதுகிற என்னைக் கருத்தால் எதிர்கொள்ள இயலாமல் பேடிகள் மாதிரி ஒளிந்து
கொண்டு வந்து தாக்குவதும், தெலுங்கு டப்பிங் பட வில்லன் பேசுகிற வசனம் மாதிரி, "வலிக்கிற இடத்தில் அடிக்க வேண்டும்" என்று எழுதுவதும்,
ஆதாரமே இல்லாமல், "சூச்சூ நான் என்றும்", நான் வேறு பெயர்களில் எழுதுவதாக என் நண்பர்களே சொல்வதாகவும் சங்கரபாண்டிகள்
சுயமைதுனம் செய்து கொள்வதும், நான் காங்கிரஸ் கட்சியிலோ பா.ஜ.க.விலோ மெம்பர்ஷிப் கார்டை வைத்திருப்பதைப் பார்த்த உத்தமபுத்திரர்கள்
மாதிரி சின்ன வயதில் பீடி அட்டையில் பெயர் பொறித்துப் பார்த்து மகிழ்ந்துவிட்டபின், லோகாயுத சுகங்களைத் துறந்துவிட்ட முனிவர்களான
சுந்தரமூர்த்திகளும், பயந்து கொண்டு ஓடிவிட்டதாக இன்னும் சிலரும் எழுதியும் பேசியும் வருவதை நான் மட்டுமில்லாமல் நீங்களும்
கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஓர் அளவுக்கு மேல் என் மீது அபாண்டமான, ஆதாரமற்ற, நாகரீகமற்றத் தாக்குதல்கள் நடக்கின்றன என்று
நான் உணரும்போது (இந்த breaking points உங்களுக்கு instant ஆக வந்துவிடும். நான் அதில் கொஞ்சம் பரவாயில்லை என்று சொல்ல முடியும்
என்று நம்புகிறேன் :-)), பதிலுக்கு நான் சீண்டவோ, ஆதாரம் கேட்கவோ, அவர்களின் முகத்திரைகளைக் கிழிக்கவோ, அல்லது சட்டம் எனக்கு
அளித்திருக்கிற எல்லா உரிமைகளையும் பயன்படுத்தி என்னைத் தற்காத்துக் கொள்ளவோ எனக்கு உரிமையிருக்கிறது.

உதாரணமாக, தன் சொந்தப் பெயர் தவிர வேறு பெயர்களில் தான் எங்கும் எழுதியதில்லை என்று ஈழநாதன் சொல்லும்போது, ஈழவன் என்ற
பெயரில் எழுதியதை மறந்துவிட்டார். அதை நான் சுட்டினேன். அப்போதும்கூட, மறந்துவிட்டது என்று அந்த விஷயத்தைச் சாதாரணமாக ஒத்துக்
கொள்கிற நேர்மைகூட அவரிடமோ அந்தக் கும்பலிடமோ இல்லை. ஆனால், தங்கமணி KGB-ஐ KGP என்று எழுதியதை ஜோக்கென்ற
அடைமொழியுடனும், இது அனைவருக்கும் நேரக்கூடியது என்றும் ஒத்துக் கொண்டு நான் சுட்டும்போது, விழுமியக் காவலர்கள் (நீங்கள் இல்லை),
பெயரிலி ஐ.பி.களை எடுத்துப் போட்டு (சம்பந்தமே இல்லாமல்) படம் காட்டியபோது, பெயரிலி பழைய பூதங்களைத் தோண்டியெடுத்திருக்கிறார்
என்று புளகாங்கிதமடைந்தவர்கள் மீண்டு வருகிறார்கள். :-) உங்களுக்கும்கூட ஈழவன் என்ற பெயரில் ஈழநாதன் எழுதினார் என்பதை அவர்
முதலில் ஒத்துக் கொள்ளவில்லை என்பதை நான் சுட்டும்போது திரிப்பாக இருக்கிறது. பிரச்னையில்லை. அப்படி நினைக்க உங்களுக்கு உரிமை
இருக்கிறது. எனக்கு அது திரிப்பாகத் தோன்றவில்லை.

ஆனால், ஆதாரமே இல்லாமல், சிவகுமாரைப் பற்றிச் சங்கரபாண்டிகளும் ஈழநாதன்களும் பெயரிலிகளும் சுந்தரமூர்த்திகளும் வரம்புமீறி
எழுதுவதைப் பற்றியெல்லாம் "திரிக்காதீர்கள்" என்று நீங்கள் எங்கும் எழுதியிருந்தால் தயவுசெய்து என் கவனத்துக்குக் கொண்டு வாருங்கள்.
தனிமனிதத் தாக்குதல்கள் வேண்டாமென்றும், பெரியார் அரசியல் எதிரிகளை எப்படி நாகரீகத்துடனும் கண்ணியத்துடனும் நடத்தினார் என்று
பாருங்கள் என்றும் நீங்கள் எங்கேனும் பொதுவில் சொல்லியிருந்தாலும் மகிழ்ச்சியே.

மற்றபடி, இதை ஆரம்பித்தது நான் இல்லை. இதில் நான் ****இப்போது*** இறங்கியிருப்பது, பொறுத்துப் பொறுத்துப் பார்த்து பொறுமை தீர்ந்தபின் -
என்னைக் காத்துக் கொள்ள. அதை என் பெயரிலும் சட்டத்துக்குட்பட்டும் ஆதாரபூர்வமாகவும் நான் செய்துவருகிற வரையில் - இடையில் சன்னாசி
அல்லது ரோஸா போன்ற - கருத்துகளில் உடன்படாவிட்டாலும் நான் மதிக்கிறவர்கள் - கேடயங்களாகவோ மாரல் சப்போர்ட்டாகவோ
மற்றவர்களுக்காக வந்தால், அதைப் பொருட்படுத்தாமல் (அவர்களுக்கு இனிமேல் பதில்கூடச் சொல்லாமல். இப்படி இருந்தால், ரோஸாவுக்குச்
சிவகுமார் பயந்துவிட்டார் என்று ஒரு பெயர் வரும். அது எனக்குப் பிரச்னையில்லை) முகமூடிகளைத் தொடர்ந்து கிழிப்பதை மட்டுமே நான் செய்யப்
போகிறேன்.

நான் ஏற்கனவே சொன்னதுபோல, இப்போது அந்தக் கும்பலுக்கு மாரல் சப்போர்ட் செய்கிறவர்களேகூட ஒத்துக் கொள்ள இயலாத அளவுக்கு
அந்தக் கும்பல் பல பெயர்களில் பல இடங்களில் எதிர்க் கருத்துடையோருக்குப் பதில் சொல்லாமல் அவர்களின் வாயை அடைக்கிற வேலையைச்
செய்திருக்கிறது. நான் பயந்து ஓடிவிட்டேன் என்றும் இன்னமும் அட்டைக் கத்திகளைத்தான் சுழற்றுகிறேன் என்றும் பெயர்கள் வரும்போது,
அட்டைக் கத்திகளின் ரீச் என்ன என்பதையும் காட்டலாமே என்றுதான் யோசித்து வருகிறேன்.

எனவே, இதை நான் ஆரம்பிக்கவில்லை. இதை நிறுத்துவதும் என் கையில் இல்லை. இரண்டு பக்கமும் சாராத - இரண்டு பக்கத்தின் மதிப்புக்குமுரிய
வலைப்பதிவர்களான பத்ரி போன்றோர் இந்த மாதிரி விஷயங்களில் சமாதானம் நிலவ வேண்டும் என்று எந்த யோசனையைச் சொன்னாலும் அதற்கு
நான் செவிமடுப்பேன். மற்றபடி - இதை ஆரம்பித்து வைத்தவர்களே இதை முடித்து வைப்பதுதான் நாணயமும் நேர்மையுமான செயலாக இருக்கும்.
சமாதானமென்றாலும் போரென்றாலும் நான் நம்புகிற கருத்தாக்கங்களைத் தொடர்ந்து இணையத்தில் வைத்துக் கொண்டே இருப்பேன். பொதுவாக
நான் எழுதுவது யாருக்கும் எரிச்சலூட்டுகிறது என்றால் அது என் பிரச்னை இல்லை. மற்றவர்கள் எழுதும்போது எனக்கும்தான் எரிச்சல் வருகிறது.
எழுதுபவர்க்கு அந்த உரிமை இருக்கிறது என்று நான் புத்திசாலித்தனமாகப் போய்விடுகிறேன்.

திராவிட இயக்கம், பெரியாரியம், விடுதலைப் புலிகள் ஆகியோரை ஆதரித்துப் பகிரங்கமாக இணையத்தில் எழுதுகிற பல நண்பர்களைப் பெயர்
சுட்ட முடியும். அவர்களுடன் எல்லாம் எனக்கு இருக்கிற கருத்துகளுக்கு அப்பாற்பட்ட நல்லுறவை எடுத்துக் காட்ட முடியும். ஆனால், இந்தக்
கும்பலைப் போல அந்த நண்பர்கள் எல்லாம் என் குரல்வளையை நெறித்து என் கருத்தை நிறுத்தப் பார்க்கவில்லை. அதனால், நான் ஒரு
இயக்கத்துக்கோ, தனிமனிதனுக்கோ எதிரி என்று முத்துதிர்ப்பவர்கள் உதிர்த்துக் கொண்டு இருக்கட்டும். அதேபோல, இனிமேல் உங்களைக் குறித்து
நான் எதுவும் எழுத வேண்டும் என்றால், ரோஸா என்று பெயரிட்டு அழைத்துச் சொல்கிற தைரியம் எனக்கு இருக்கிறது. அதனால், பொதுவில்
எழுதுவதை எல்லாம் உங்களைப் பற்றி என்று நினைக்க வேண்டாம் என்று மட்டும் வேண்டிக் கொள்கிறேன். இன்னொன்றையும் ஞாபகத்திற்குக்
கொண்டு வருகிறேன். திருமாவும் வை.கோ.வும் அணி மாறியதற்குக் கூட நான் திரு. மு.க.வையே அதிகமாகக் குறை சொல்வேன். அதை
இட்லிவடைப் பதிவிலும் எழுதியிருக்கிறேன். எனவே, என்னை உடனடியாகத் தலித் எதிரியாகவும், அம்மாவுக்கு ஓட்டுப் போடுகிறவராகவும் திரிக்கிற
யோக்கியவான்களின் முகமூடிகளை நான் கிழிப்பதைப் பற்றி யார் கவலைப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை.

நான் உங்களிடம் வேண்டிக் கொள்ள விரும்புவது ஒன்று உண்டு. வழிப்போக்கன் அவர் இவரென்ற பெயர்களில் வருகிற அனானி பினாமிகளுக்கு
பதில் சொல்லிக் கொண்டிருக்காமல், (நீங்கள் அத்தகைய காரியங்களையே மிக உவப்பாகச் செய்கிறீர்கள் என்று எனக்குள் ஒரு பிம்பம் இருக்கிறது.
இது தவறாக இருக்கலாம்.) நீங்கள் "அதைப் பற்றிய விமர்சனம் உண்டு" என்று சொல்கிற விடுதலைப் புலிகளைப் பற்றியும், இஸ்லாமிய தீவிரவாதம்
பற்றியும் சீரியஸாக உங்கள் வலைப்பதிவில் எழுதலாமே. மற்றவர்கள் திரிக்கிறார்கள் என்று அவர்கள்மீது காய்வதைவிடச் சீரியசாக உங்களைப்
போன்றோர் அதை வெளிச்சம் போட்டுக் காட்டத் தொடங்கினால் (உங்கள் நண்பர்கள் சுகன், ஷோபா சக்தி ஆகியோர் செய்வது மாதிரி (wrt ltte).
உடனடியாக சுகனும் ஷோபா சக்தியும் இந்திய மேலாதிக்கவாதத்தையும் வெளிச்சம்போட்டுக் காட்டுகிறார்கள் என்ற பதில் வேண்டாம். தனக்குப்
பிடிக்காதவற்றை எவரும் வெளிச்சம்போட்டுக் காட்டுவதன் மூலமே பொதுக்கருத்து உருவாக முடியும் என்று நான் நம்புகிறேன்.) திரிக்கிற
மற்றவர்கள் விடுதலைப் புலிகளைப் பற்றியோ, இஸ்லாமிய தீவிரவாதம் பற்றியோ தங்களின் லாப நோக்கங்களுக்கு ஏற்ப எழுத வேண்டியிருக்காதே.
:-) இதை மட்டும் யோசிக்க வேண்டுகிறேன். இல்லை, வழிப்போக்கர்களைக் கிழிப்பதும் முக்கியம் என்றால், அவர்களையும் கிழியுங்கள். அதைவிட
முக்கியமானவற்றுக்கும் நேரம் ஒதுக்குங்கள். (இதை எழுதியவுடன் நான் வழிப்போக்கனைக் காப்பாற்ற முயல்கிறேன் என்று எண்ணிவிட மாட்டீர்கள்
என்று நம்புகிறேன்.)

கடைசியாக உங்களுக்கு இல்லை, பொதுமக்களுக்கு. இது ஒரு தொடக்கம்தான். இன்னும் நிறைய ஆதாரங்கள் உள்ளன. நானும் என் கருத்துகளும்
எப்படித் தாக்கப்படுகின்றன என்பதை முன்வைத்து அந்த ஆதாரங்கள் வெளிவருவதோ, சட்டத்தின் துணையை நான் நாடுவதோ நடக்கும். என்னைப்
போன்ற எதிலும் சட்டத்துக்குட்பட்டு நடக்க விரும்புகிறவர்களுக்கு ஆபத்து என்று வரும்போது சட்டத்தின் துணையை நாடுவதைத் தவிர வேறு
வழியில்லை. அதைப் பற்றி விமர்சிக்கிற வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கட்டும்.

இந்த சண்டையை இத்துடன் இங்கு முடித்துக் கொள்கிறேன். ரோஸாவோ மற்றவர்களோ இதில் இருந்து எடுத்து எழுதப் போகும் வாதங்களுக்கு
நான் பதில் சொல்லப் போவதில்லை. நான் பயந்து ஓடிவிட்டேன் என்று நினைப்பவர்கள் அப்படியே நினைத்துப் பீற்றிக் கொள்ளலாம்.

அன்புடன், பி.கே. சிவகுமார்
 



நேரப்பற்றாக்குறையில் எழுதுகிறேன்:

ணிர்மானம் சைட்://முகமூடி,சிவகுமார் அவர்களின் வாதங்களிலுள்ள தர்க்கத்துக்கு இவர்களால் குதர்க்கமே செய்யமுடியும்!காரணம் அவர்களுக்கே தெரியும் "தமது சட்டியில் ஒரு பருக்கையும் இல்லை"என்பது.***இதனால் கருத்துக்களைத் திசை திருப்புவதில் ஈழநாதன் முன்னணியிலிருக்கிறார்.இது புலிகளால் வளர்த்தெடுத்து அனுப்பப்பட்டவொரு வால்.***ஈழநாதனிடம் மிகவும் யாக்கிருதையாக இருப்பது நல்லது.
//

+

PKஸ் ஸைட்: //இனி இந்த விவாதத்தை இங்கு தொடர விருப்பமில்லை என்று ஈழநாதன் எழுதிய பின்னர், அதைப் பற்றி நானும் எழுதுவது
நாகரீகமில்லை என்று சும்மா இருந்தேன். அது விவாதத்தை திசை திருப்புகிற வேலையாகவும் இருக்கும். ஆனால், **அந்த வேலையைச் செய்யப்
பலரும் இருக்கிறார்கள் என்பது வழிப்போக்கன், நீங்கள் மற்றும் பலரின் வளர்கிற பின்னூட்டங்களைப் பார்க்கும்போது தெரிகிறது. **//

இதுக்கு இந்தவிடத்தில் மீண்டும் ஒரு ""சபாஷ்"" மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

ரோசாவுக்கு, இராமகியின் பதிவுக்கு பதில் எழுத நினைத்தேன், நேரமின்மைதான் காரணம். வாரக்கடைசியில் முடிகிறதா என்று பார்க்கிறேன்.
 



PKS,
உங்களுக்கு யார் யார் மீது என்னென்ன கோபம் என்பதோ, அதற்கான ரிஷிமூலங்களும், நதிமூலங்களும் எனக்கு தெரியாது. என் வலையுலக அனுபவம் கடந்த ஓராண்டாக மட்டுமே. அதற்கு முன் நான் உங்களோடு விவாதித்தது திண்ணையில் அண்ணாவின் மரணத்தைப் பற்றிய ஜெயகாந்தனின் பேச்சு சம்பந்தமாக மட்டுமே.

//நான் காங்கிரஸ் கட்சியிலோ பா.ஜ.க.விலோ மெம்பர்ஷிப் கார்டை வைத்திருப்பதைப் பார்த்த உத்தமபுத்திரர்கள்
மாதிரி சின்ன வயதில் பீடி அட்டையில் பெயர் பொறித்துப் பார்த்து மகிழ்ந்துவிட்டபின், லோகாயுத சுகங்களைத் துறந்துவிட்ட முனிவர்களான
சுந்தரமூர்த்திகளும்//

திண்ணையில் என்னுடைய கடிதத்தை வைத்து நீங்கள் இப்படி கற்பனை செய்துக்கொண்டால் நான் ஒன்று செய்ய முடியாது. ரோசாவும், ஆர்வமுள்ள பிறரும் இக்கடிதத்தை படித்து நான் என்ன எழுதியிருக்கிறேன் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

//ஆனால், ஆதாரமே இல்லாமல், சிவகுமாரைப் பற்றிச் (other names deleted) சுந்தரமூர்த்திகளும் வரம்புமீறி
எழுதுவதைப் பற்றி//

நான் எங்கெல்லாம் உங்களைப் பற்றி ஆதாரமில்லாமல் வரம்பு மீறி எழுதியிருக்கிறேன் என்பதைச் சுட்டிக்காட்டினால் விளக்கமளிக்கமுடியும். இப்படி போகிறப் போக்கில் புழுதி வாரித் தூற்றினால் புறக்கணித்துவிட்டுப் போவதைவிட ஒன்று செய்வதற்கில்லை. சக வலைப்பதிவாளரை idiot என்றெல்லாம் அழைக்கிற உங்களிடமிருந்து என்னைபற்றி இப்படி ஒரு குற்றச்சாட்டு வருவது வேடிக்கைதான். ஒரே வேண்டுகோள், என்னைப் பற்றி நீங்கள் ஏதேனும் நிரூபிக்க நினைத்தால் தயவு செய்து மார்ச்சு 20க்கு மேல் செய்தால் நன்றியுடையவனாக இருப்பேன்.

என்னை இந்த சர்ச்சைக்குள் இழுத்ததே நீங்கள் தான். திண்ணையை திட்டிக்கொண்டே அதில் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று நீங்கள் என்னை குறிப்பிட்டு எழுதியதற்காக சிறு விளக்கம் அளிக்க வேண்டி வந்தது. எழுத்தாளனாக ஆகவேண்டுமென்ற கனவெல்லாம் இல்லை என்பதை கொஞ்சம் நகைச்சுவையாக் சொல்ல முயன்றதே 'பீடி உறை' கதை. நான் முனிவனல்ல. லோகாயதவாதிதான்.
 



PKS,
//மார்ச்சு 20க்கு மேல்//

சிறு திருத்தம். "மார்ச்சு 30க்கு மேல்" என்று இருந்திருக்க வேண்டும்.
 



பிகேஎஸ்-க்கு,

கொஞ்சம் கண்ணைத்திறந்துபார்த்து இந்தப்பதிவில் தேவையில்லாமல் "உளறுவாயர்கள்" என்று ஆரம்பித்தது யார் என்று சொல்லவும்.

உங்களுக்கு ரோசாவுக்கு ரோசா என்று பெயர் சொல்லி எழுது தைரியம் இருந்தால், உளறுவாயர்களிம் பெயர்களையும் சொல்லி எழுதியிருந்தால், நானெல்லாம் "நாமதான் புத்திசாலிஆச்சே" என்று வாளாவிருந்திருப்பேன்.

பிகேஎஸ் திரிப்புகளில், திரிப்பு ஸ்குயர்களும் உண்டு.

//ஸ்ரீரங்கம் போன்ற இடங்களில் வைணவர்கள் ஒன்று சேர்ந்து திருப்பி அடிகொடுத்த பின்புதான் இந்தப் போக்குகள் நின்றன."//

என்று அவர் சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் சுட்டியதற்கு
பதிலாய் நான்
//"வரலாற்றில் தாழ்த்தப்பட்டவர்களையும் பற்றியும் எங்காவது கண்ணில் பாட்டால் வாசிப்பரா? அல்லது ஜம்ப் பன்ணுவாரா?" //என்று மிகவும் பொதுப்பொறுளில் எழுதினேன்..

அதனுடைய திர்பூ ஸ்குயர்தான் பிகேஎஸ் எழுதும் இது :

//திருமாவும் வை.கோ.வும் அணி மாறியதற்குக் கூட நான் திரு. மு.க.வையே அதிகமாகக் குறை சொல்வேன். அதை
இட்லிவடைப் பதிவிலும் எழுதியிருக்கிறேன். எனவே, என்னை உடனடியாகத் தலித் எதிரியாகவும், அம்மாவுக்கு ஓட்டுப் போடுகிறவராகவும் திரிக்கிற
யோக்கியவான்களின் முகமூடிகளை நான் கிழிப்பதைப் பற்றி யார் கவலைப்பட்டாலும் எனக்குக் கவலையில்லை.
//

எது திர்ப்பு/திரிப்பு ஸ்குயர் என்று கன்ண்ணுள்ளவர்கள் வாசிக்கக்கடவது.
 



ஐயா பி கே எஸ்ஸ¤

நீங்களும் இன்னொரு கும்பலும் சண்டை போட்டுக்குவீங்க. அப்ப நான் அந்த வழியா ஓரமா போயிக்கிட்டு இருக்கேன். உங்களை நாலு ரவுடிப் பசங்க சேர்ந்து கிட்டு தேவையில்லாம அடிக்கிறானுங்க. நீங்களும் பதிலுக்கு வசமா கொடுக்குறீங்க. அதப் பாத்துக்கிட்டு இருந்த நான் நடந்தது என்னன்னு தொகுத்து எனக்குப் பின்னால் வந்தவுங்களுக்கும் புரியற மாதிரி சொல்லியிருக்கேன். இதில் எங்கே ஐயா நான் தேவையில்லாமல் பிரச்சினையை வளர்க்கிறதா நினைக்கிறீங்க? நான் எழுதக் கூடாதுன்னா அதை முகமூடி சொல்லட்டும், நீங்க உங்களுக்குத் தெரிஞ்சத சொன்னீங்க அதைப் பார்த்துக் கொண்டு நின்ற நானும் எனக்குத் தெரிந்ததைச் சொல்லுகிறேன். இதில் உமக்கு எங்கையா காண்டு? நான் உமக்கு அடியாளும் கிடையாது. உமது பதிவுகளுக்கு எல்லாம்¢, "இது நல்ல பதிவு', 'இது இது" "மிக நல்ல பதிவு என்று", 'நல்ல அலசல்', 'பிரமிக்க வைக்கிறீர்கள்' 'அசத்தி விட்டீர்கள்' என்றெல்லாம் வாயுபசாரம் பண்ணுவதும் கிடையாது. நீர் ரோசா போன்றவர்களையும் கூட மரியாதையாக நடத்த வேண்டும் என்று நினைத்தால் தாராளமாகச் செய்து கொள்ளுங்கள். ஆனால் அதற்கான தகுதி அவருக்குக் கிடையாது என்பது உங்களுக்கு இன்னும் உறைக்கவில்லை என்றால் நான் என்ன செய்வது? இந்த பதிலில் நான் கொடுக்கும் குறைந்த பட்ச மரியாதை கூட சபை நாகரீகம் கருதி நான் கொடுப்பதுதான் அன்றி உள்ளத்தில் இருந்து வருவது அல்ல. உங்களுக்கு வேண்டுமானால் அவரைப் போன்ற இரட்டை வேடதாரிகள், போலிகள், நாகரீமற்ற பிறவிகள் நசிவு சக்தியாகத் தோன்றாமல் இருக்கலாம், ஆனால் ஓரமாக நின்று நிதானமாகப் பார்க்கும், படிக்கும் எங்களைப் போன்ற வழிப்போக்கர்களுக்கு அவர் நசிவு சக்தி மட்டுமல்ல, நச்சுச் சக்தியாகவும்தான் தெரிகிறாரே என்ன செய்வது? அடுத்த முறை உங்கள் கண்ணாடியை நன்றாக அழுக்குத் துடைத்துப் போட்டுப் பார்க்கவும், எங்களுக்குத் தெரிந்த உண்மை உங்களுக்கும் தெரியலாம். அதுதான் சரி, ஈழநாதன் கெஞ்சாத குறையாக நான் இனி வரமாட்டேன் என்று பயந்து ஓடி ஒளிந்து கொண்ட பின்னரும் நேர்மையில்லாமல் அவரது அடியாட்களை வைத்து உங்களை தொடர்ந்து அடிக்கிறார்களே? அது சரியா? ஐயா நான் பாதசாரி, என் கண் முன்னே நடக்கும் அநியாயத்தைக் நாலு பேருக்குச் சொல்லாமல் போக முடியாது. நீங்களே தர்ம அடி வாங்கிக் கொண்டிருக்கிறீர்கள் !! நீங்களா என்னைப் போன்ற வழிப்போக்கனைக் காப்பாற்ற முடியும்? அப்படி எல்லாம் உங்கள் (புது) நண்பரிடம் கோரிக்கை எல்லாம் வைக்க வேண்டாம். பின்னே இணையத்தில் வழிப்போக்கனாக வந்தால் கூட சதிகாரக் கும்பல்களை சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டியிருக்கிறதே? அட, நாங்கள் பாட்டுக்கும் வழிப்போய் கொண்டிருந்தாலும் இவர்கள் வீசும் மலம் எங்கள் மீதும் தெறிக்கிறதே? என்ன செய்வது? மலம் வீசும் மலினப் பிறவிகளை எப்படி சமாளிப்பது என்பது இணையத்தில் எட்டிப் பார்க்க வந்த எனக்கும் தெரியும் ஐயா. உங்களுக்கு அது பற்றி கவலை வேண்டாம்.



அகோ வாரும் பிள்ளாய் ரோசா வசந்து என்ற இராமன் ஸ்ரீநிவாசரே!!


ஆத்துல எல்லோரும் சொளக்கியமா?

என்னடா இன்னும் காணுமேன்னு பார்த்தேன். முதலில் ஒரு அடியாள், அதன் பின் ஒரு பொடியாள், அதனைத் தொடர்ந்து இன்னொரு எடுபிடி, இப்ப இவரு. இப்ப என்ன சொன்னாரு பி கே எஸ்ஸ¥ ?, ஈழநாதன் மலரவன் பெயரில் எழுதினார் என்று சொன்னார். அதை ஈழநாதன் கையும் களவுமாகப் பிடிபட்ட போதும் கூட ஒத்துக் கொள்ள மறுக்கிறார். அவர் அந்தப் பெயரில் என்ன எழுதினார் என்பது முக்கியமல்ல, வேறு பெயர்களில் எழுதவேயில்லை என்று பொய் சொன்னதுதான் இப்ப்பொழுது அவரை நேர்மையில்லாதவராகக் காட்டுகிறது. பொய் சொன்னாரா இல்லையா? When President Clinton was about to be impeached the charge on his was not adultery, it was prejury, he was charged for lied under oath not for having sex in office. Same thing applies here. It does not count what he wrote. அவர் மலரவன் என்ற பெயரில் பிறரைத் தாக்கியதாக இப்பொழுது நிர்மாணம் என்பவர் வந்து சொல்லுகிறார். ஆக ஈழநாதன் ஒரு பொய்யர், நேர்மையற்றவர், இதைச் சொன்னால் உமக்கு என்னையா பிரச்சினை, தாவிக் குதித்து வந்து அட்டைக் கத்தி வீசுகிறீரே? இது போல அபாண்டமான பழிகளால் இணையத்தில் பாதிக்கப் பட்ட எல்லோர் சார்பிலும் நீதி நியாயம் எல்லாம் கேட்டுருக்கிறீரா? என்றைக்கவது? உம்ம கும்பலுக்கு வேண்டிய ஆள், உமக்கு ஜால்ரா போடும் ஆள்னா தாவிக் குதித்து வந்துடுவீங்களே? இங்கு கேட்கப் படும் கேள்வி ஈழநாதன் பொய் சத்தியம் பண்ணிணாரா இல்லையா? ஆம் அல்லது இல்லை, மற்ற ஜால்ஜாப்பு எல்லாம் தேவையில்லை. உமக்கு ஈழநாதனைத் தாங்கிப் பிடிக்க ஆயிரம் காரணம் இருக்கலாம்.



கொஞ்ச நாளைக்கு முன்னர் நீர் இப்பொழுது ஜால்ராப் போடும் இதே பெயரிலி, குசும்பன் தான் ஆபாசமாக எழுதும் போலி டோண்டு என்று ஐ பி எல்லாம் போட்டு அபாண்டமாக பொய்யாகக் குற்றம் சாட்டினாரே, அப்பொழுது நீர் எங்கே ஐயா போனீர்? ஏனப்பா பெயரிலி உன்னிடம் ஆதாரம் உருப்படியானதாக இருக்கிறதா , நீ செய்வது தப்பு என்று நியாயம் சொன்னீரா பெயரிலியிடம் போய்? அட அதுதான் வேண்டாம் குசும்பனும் பெயரிலி சொன்னது பொய், ஆதாரம் இல்லாத அபாண்டமான குற்றசாட்டு என்று நிரூபித்தாரே, சவால் விட்டாரே? அப்பொழுதாவது பெயரிலி நீ செய்வது சரியில்லை, நேர்மையில்லை என்று பெயரிலிக்கு அறிவுரை சொல்லி, மன்னிப்பு கேட்கச் சொன்னீரா? இல்லையே? அப்பொழுது எங்கே போயிற்று உம்ம நேர்மை? உம்ம தார்மீகக் கேள்வி? இப்பொழுது இங்கே வந்து ஒரு பொய்யரான ஈழநாதனுக்கு வக்காலத்து வாங்கியது போல குற்றமற்ற குசும்பனுக்கு சப்போர்ட் பண்ணிணீரா? இல்லையே, அப்பொழுது எங்கே போனீர்? யார் ஆண் குறியையாவது அறுக்கப் போய் விட்டீரோ? இப்பொழுது மட்டும் வந்து ஆஜராகி விட்டீர் ? ஞாயம் பேச. வெட்கமாயில்லை இப்படி பிழைப்பு பிழைக்க? இரட்டை வேடம் போட? நியாய அநியாயம் பேசினால் இரண்டு பக்கம் பேசியிருக்கணும். அதை விட்டு விட்டு உம்ம கும்பலுக்கு வலிக்குதுன்னா மட்டும் ஓடி வந்து "ஈழநாதன் நல்லவர்" "ஈழ்நாதன் யோக்கியர்" என்று சர்ட்டி·பிகேட் கொடுக்கு வந்திட்டீரே? நீரே ஒத்துக் கொள்கிறீர் ஈழநாதன் விளக்கத்தில் திருப்தி இல்லை என்று
அப்புறம் என்ன வக்காலத்து ... வேண்டியிருக்கு? மலரவன் என்ற பெயரில் ஈழநாதன் யாரையுமே தாக்கியதில்லை என்று சர்ட்டி·பிகேட் வேற. அது எப்படி உமக்குத் தெரியும் ? அப்ப ஈழநாதன் யாரைத் தாக்கினாலும் உம்மிடம் சொல்லி விட்டுத்தான் செய்கிறாரோ? அதைத்தான் பி கே எஸ்ஸ¤க்கும் சாட் பண்ணூ, டெலி கான்பரன்ஸ் போடு, அலர்ட் கொடு என்று ரெகமண்டேஷன் பண்ணிணாரோ? அப்ப ஈழநாதன் எந்த எந்த பெயரில் யார் யாரைத் தாக்கினார் என்று உங்களுக்குத் தெரியும் நீங்கள் எல்லாம் ஒரே கும்பல் என்று படிப்பவர்கள் அனுமானம் பண்ணினால் என்ன தவறு இருக்க முடியும்? அதனால்தான் ஈழநாதன் ஒரு நேர்மையற்ற மனிதர் என்று பி கே எஸ் நீரூபித்தால் உங்களுக்கு குத்துகிறதோ? குடைகிறதோ?


நீராக வந்தீரா ? அல்லது "எங்களால் முடியவில்லை ஆதிமூலமே காப்பாத்து" என்று உம்ம கூட்டாளிகள் ஓலமிட்டு அழைத்தார்களா என்று தெரியவில்லை, எப்படி இருந்தாலும் அடியாள் வேலையை எப்படி செய்வது என்று பெயரிலுக்கு டையப்பர் மாட்டி விடும் சிஷ்யனான கார்த்திக்கைக் கேட்டு அறிந்து கொள்ளவும், டயப்பர் பில்லை எல்லாம் காட்டி அருமையாக விளக்குவார் அந்த இணையத்து அடியாள். உம்மை குருபீடம் ரேஞ்சிலிருந்து இப்படி அநியாயமாய் அடியாள் ரேஞ்சுக்கு இறக்கி விட்டு விட்டார்களே, ஐயோ பாவம்.


இங்கே வந்து வக்கனையா நியாயம் பேசுகிறீரே? உம்ம கும்பலால் தூண்டி விடப் பட்டு, ஒரு வக்கிரம் பிடித்த மிருகம் கழ்ந்து விட்டுச் செல்லும் மலங்களை தங்கள் பின்னூட்ட பெட்டியில் வைத்துப் பூசை செய்கிறார்களே, உங்கள் நண்பர்கள் பலரும், அதைப் போய் கண்டித்தீரா? அதையெல்லாம் கேட்டு விட்டு இங்கு வாரும் ஐயா. அது சரி உம்மைப் போய் கேட்க்கச் சொன்னேன் பாரும்? நீரும் அதே போன்ற கழிவுகளை கழிக்கும் மற்றொரு பிறவிதானே? நீர் ஒரு ஐயங்கார் என்பதை மறைத்து வேடம் போட பிற பிராமணர்களை எல்லாம் வேசி மகன்கள் என்று எழுதியவ்ர்தானே ? வந்தியத்தேவன் என்ற பதிவரை பாஸ்டர்ட் என்று ஏசியவர்தானே? எம் கே குமார் அம்மாவைப் பற்றி கூசாமல் அவதூறு எழுதியவர்தானே, ஏன் போலி டோண்டு செய்யும் ஆபாசக் கழிவுகளுக்கு வக்காலத்து வாங்கிய யோக்கிய சிகாமணிதானே நீர்? வேலிக்கு ஓணான் தானே சாட்சியாக முடியும்?


கோபாலசாமியை கடவுள் ரேஞ்சுக்கும் வைத்து இணையத்தில் ஒரு பெரும் கும்பலே பூஜித்து வந்ததே ஐயா? இன்னும் பூஜித்து வருகிறதே? சந்தேகம் இருந்தால் உம்ம கூட அதிகாலை மூன்று வரை அளவளாவினேன் என்று இணையத்தில் பெருமை பீற்றிக் கொண்ட உம்மோட நண்பரின் வலைப்பதிவைப் படித்துப் பாரும் தெரியும், புரியும். கோபாலசாமியை யாரும் பூஜிக்கவில்லை என்று சொன்ன நீர் திருமாவைக் கடவுளாகப் பூஜிக்கிறார் என்பதை மொளனமாக ஒத்துக் கொள்கிறீர். அந்த மட்டும் சரி. கடவுள்கள் ஏமாற்றினால் பக்தர்களுக்கு ஆவேசம் வருவதும், அழுகை வருவதும், சுய பச்சாதாபம் வருவதும், கழிவிரக்கம் வருவதும், அவமான உணர்வு வருவதும் இயற்கைதானே? அது எல்லாம் முட்டிக் கிட்டு வரும் பொழுது அந்தக் கடவுள்களைக் கிண்டல் செய்யும் முகமூடி போன்றவர்களின் மீது ஆத்திரம் வருவதும், அவரின் பதிவுகளை திசை திருப்ப முயல்வதும் உண்மைதானே? அதைத்தானே உங்கள் கும்பலில் இருந்து ஒவ்வொருவராக வந்து இங்கு செய்து கொண்டிருக்கிறீர்கள்? இன்னும் ஒரு அஞ்சாறு டிக்கட் வர வேண்டியது பாக்கி இருக்கே? அவங்களையும் சீக்கிரமா அடுத்து அனுப்பி வையுங்க போங்க.


குஷ்பு விஷயத்தில் எம் கே குமாரை ஆபாசமாகப் ஏசிய நீர், இன்று அதே குஷ்பு விஷயத்தை தன் கையில் எடுத்திருக்கும் உங்கள் மரியாதைக்குரிய ஐயாவிடம் போய் அதே கேள்வியை ஏன் கேட்கவில்லை? அதே ஆபாசத்தை ஏன் காட்டவில்லை? ஆக உங்களுக்கு வேண்டியவர் என்றால் ஒரு நியாயம் , மற்றவர்களுக்கு மற்றொரு நியாயமா? ஆக ஏப்ப சாப்பையின்னா ஏறி அடிப்பிங்க. உங்க கூட்டாளி ஐயான்னா மண்டி போட்டுகிட்டு நிப்பீங்க, கூழைக் கும்பிடு போட்டுவிட்டு ஒதுங்கிக்குவீங்க. நீரே ஒரு இரட்டை வேடம் போடும், யோக்கியர் ஈழநாதனுக்கு வக்காலத்து வாங்க வந்து உம்ம லட்சணமும் இங்கே கிழிந்து தொங்குகிறது. போம், போய் அடுத்து யாருக்கு ஆண்குறி அறுக்கலாம் என்று ஆராய்ச்சி செய்யும். அடுத்த முறை இது போன்று பஞ்சாயத்து பண்ண வரும் முன்னால் உம்ம யோக்கியம் எப்படின்னு கண்ணாடில மூஞ்சியப் பாத்து கேட்டு விட்டு அப்புறமா கீ போர்டைத் தொடவும். இல்லாட்டி இப்படித்தான் வந்து நாற வேண்டி இருக்கும்.


இப்படிக்கு
இது வரை வழிப்போக்கனாக மட்டும் இருந்த ´Õ ŨÄôÀ½¢
 



பிகேஎஸ், வீட்டில் இணைய இணைப்பு இன்னமும் இல்லை. அதனால் வார இறுதியில் பார்க்க இயலாமல் வேலைக்கு வந்து இப்போதுதான் பார்கிறேன். சில பதில்களை இன்று அல்லது நாளை தருகிறேன்.

வழிபோக்கன் இப்படி எழுத மட்டுமே காத்திருந்தேன். அவர் எழுதிய அபத்தங்கள், பொய்கள் (உதாரணமாய் ஒரே ஒரு விஷயம் மட்டும். போலி டோண்டு விவகாரம் குறித்து (அதை எழுதும் ஆசாமியை உயிரினங்களில் இழிந்த ஒன்று என்பது போல சிலவற்றை டோண்டு அப்படி சொல்வதற்கு முன்னால் சொன்னது தவிர) நான் கருத்தே கூறியதில்லை), திரித்தல்களை விட்டு விட்டு ஒரே ஒரு உருப்படியான கேள்வி குறித்து,

//இதே பெயரிலி, குசும்பன் தான் ஆபாசமாக எழுதும் போலி டோண்டு என்று ஐ பி எல்லாம் போட்டு அபாண்டமாக பொய்யாகக் குற்றம் சாட்டினாரே, அப்பொழுது நீர் எங்கே ஐயா போனீர்?//

//குசும்பனும் பெயரிலி சொன்னது பொய், ஆதாரம் இல்லாத அபாண்டமான குற்றசாட்டு என்று நிரூபித்தாரே, சவால் விட்டாரே? //

இரண்டையுமே நான் படிக்கவில்லை. குசும்பனின் பதிவுகளை படிப்பது இல்லை. பெயரிலியின் பதிவுகளும் பல காரணங்களினால் விட்டு போகிறது. தொடர்சியாய் தமிழ்மணம் பார்பதில்லை, பெயரிலியின் பதிவுகளில் பழைய பதிவுகளை தேடி பார்ப்பது (எப்படி என்று என்னால்) இயலாததாய் இருக்கிறது. சிவக்குமாருக்கு சில பதில்களை விரைவில் தருகிறேன்.
 



ரோசா


(வழிபோக்கன் இப்படி எழுத மட்டுமே காத்திருந்தேன். )

காத்திருபவர்களை ஏமாற்றுவது என் வழக்கமில்லை. இனிமேல் எழுத மாட்டேன் என்பதும், இதுதான் கடைசி என்று புருடா விடுவதும் உமது பிறவிக் குணம். கேட்ட கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல், மழுப்புவதும், திரிப்பதும் இந்த வழிப்போக்கனின் வழக்கம் அல்ல ரோசா.


(
அவர் எழுதிய அபத்தங்கள், பொய்கள் (உதாரணமாய் ஒரே ஒரு விஷயம் மட்டும். போலி டோண்டு விவகாரம் குறித்து (அதை எழுதும் ஆசாமியை உயிரினங்களில் இழிந்த ஒன்று என்பது போல சிலவற்றை டோண்டு அப்படி சொல்வதற்கு முன்னால் சொன்னது தவிர) நான் கருத்தே கூறியதில்லை), திரித்தல்களை விட்டு விட்டு ஒரே ஒரு உருப்படியான கேள்வி குறித்து,
)

எது அபத்தம்?
எது பொய்?
எது திரித்தல்?


ரோசாவசந்த்தின் உண்மைப் பெயர் ராமன் ஸ்ரீநிவாசன் என்பது பொய்யா? ராமன் அபத்தமா அல்லது ஸ்ரீநிவாசன் அபத்தமா அல்லது மொத்தமாக எல்லாமே அபத்தமா? ஸ்ரீநிவாசன் பொய்யா அல்லது ராமன் பொய்யா? யார் பொய்? அல்லது ரோசா வசந்தே பொய்யா? எது பொய்? எது அபத்தம்? எது திரித்தல்?


ராமன் ஸ்ரீநிவாசன் என்ற ரோசா வசந்த் என்பவர் பிறப்பால் ஐயங்கார் என்பது பொய்யா? அதை மறைத்து போலி வேடமிட்டுக் கொண்டு திரியும் ரோசா வசந்த் பொய்யா? யார் பொய்? நீர் பிறப்பாலும் வளர்ப்பாலும் அந்தணர் என்பதை மறுக்கிறீரா? அதை மறைப்பதற்காக உம்மை ஒரு பிராமண வெறுப்பாளராகக் காட்டிக் கொள்ளும் விதமாக, வேடமிட்டுக் கொள்ள அந்தணர் அனைவருமே வேசி மகன்கள் என்று அழைத்தது பொய்யா? யார் இங்கே மாறு வேடம் போடுகிறார்கள்? யார் இங்கே பித்தலாட்டம் நடத்துகிறார்கள், சொல்லும் ரோசா, சொல்லும். அப்படி நீர் பிறப்பால் ஐயங்கார் என்பது பொய்யானால், உமது பிறப்பிலே உமக்குச் சந்தேகம் இருக்குமானால் அது உம் பிரச்சினை, ஊரில் உள்ள பிராமணர்களையெல்லாம் உம்மைப் போலவே நினைத்துக் கொண்டதுதான் இங்கு அபத்தம்.

எம் கே குமாரை ஆபாசமாக எழுதி கண்டிக்க தெரிந்த நீர் அதுவே இரா ம கி என்று வரும் பொழுது பதுங்கி பம்மிக் கொள்கிறீர் என்கிறேன். அது பொய்யா? நீர் போடும் இரட்டை வேடம் பொய்யா? அதற்கெல்லாம் பதிலையே காணும்?


வலிக்கிறதா ரோசா? வலிக்கிறதா? இந்த வலி உம்மைப் படித்த எத்தனை பேர்களுக்கு ஏற்பட்டிருக்கும்? உம் அளவுக்கு என்னால் தரமிழந்து வரமுடியாதுதான், இருந்தாலும் இது உம்மை உமக்கே கண்ணாடியில் காண்பிக்கும் ஒரு சிறு கேள்விதான். உம் கூடப்பிறந்த ஆணவமும் திமிரும்தான் இணையத்தில் எண்ணற்ற உள்ளங்களை வேதனையடைய வைத்தது என்கிறேன் நான், அது பொய்யா? வலியும் உணர்வும் எல்லோருக்கும் உண்டு ரோசா எல்லோருக்கும் உண்டு. அவை பொய்யல்ல.


நீர் சொல்லும் உயிரினங்களிலேயே இழிந்த பிறவி செய்த ஆபாசங்களை ஆதரித்து பின்னூட்டம் இடவில்லை? அதில் உள்ள நியாயத்தைப் பார்க்க வேண்டும் என்று சொன்னதில்லை? பொய், பொய், ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள். பொய்யிலும், புரட்டிலும், திரித்தலும் உம் குலத்தொழில். அது சரி, அந்த ஆபாசப் பிறவியை இழிபிறவி என்று அழைக்க உமக்கு என்ன அருகதை இருக்கிறது? கொஞ்சம் உமது பல்வேறு ஆபாசப் பின்னூட்டங்களையும் தேவையில்லாமல் இடுப்புக் கீழ் அடித்த உமது பதில்களையும் படித்து விட்டுச் சொல்லும், மூர்த்திக்கும் உமக்கும் என்ன வித்தியாசம் என்று? அதே இழி பிறவி காசியைப் பற்றி எழுதியது தவறு ஆனால் டோண்டு ராகவனின் மனைவி மகளைப் பற்றி எழுதியது சரி என்று உமது அடியாளான மற்றொரு இழிபிறவி எழுதியதே அதையும் நீர் படிக்கவில்லையா? அது போன்ற இழிபிறவிகளிடம் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருப்பது நீர்தானே? அப்படி உமது நண்பன் டோண்டுவை பற்றி அசிங்கமாக எழுதியதை நீர் என்றைக்காவது கண்டிக்கத் துணிந்ததுண்டா? இத்தனை நாள் அதை நீர் படித்திருக்கவில்லை என்று ஒரு பேச்சுக்கு நம்பிக் கொள்கிறேன். இப்பொழுது அந்த இழி பிறவி டோண்டுவைப் பற்றி எழுதியது நியாயம்தான் என்று வக்காலத்து வாங்கிய உமது அடியாளையும் அதே போல உயிரினங்களில் இழிந்த ஒன்று என்று இன்று அழைக்கத் தயாரா? பெண்களை இழிவாகப் படம் எடுத்தான் என்பதால் சிம்புவின் ஆண் குறியை அறுக்க வேண்டும் என்று ஆவேசத்துடன் கிளம்பிய ரோசாவே, அதை விடக் கேவலமாக, அதை விட பன்மடங்கு இழிவாக டோண்டுவின் குடும்பத்தை அசிங்கமாக எழுதிய மூர்த்தியின் ஆபாசம் சரி என்று வக்காலத்து வாங்கியவர்களின் ஆண் குறியை ஏன் அறுக்கக் கிளம்பவில்லை? மனசாட்சி என்று ஒன்று இருந்தால் அதைக் கேட்டுச் சொல்லும் ரோசா. இந்த இரட்டை வேடங்கள் பொய்யா ?


<
இரண்டையுமே நான் படிக்கவில்லை. குசும்பனின் பதிவுகளை படிப்பது இல்லை. பெயரிலியின் பதிவுகளும் பல காரணங்களினால் விட்டு போகிறது. தொடர்சியாய் தமிழ்மணம் பார்பதில்லை, பெயரிலியின் பதிவுகளில் பழைய பதிவுகளை தேடி பார்ப்பது (எப்படி என்று என்னால்) இயலாததாய் இருக்கிறது. சிவக்குமாருக்கு சில பதில்களை விரைவில் தருகிறேன்.
>

பாருடா !!! இரண்டையும் இவர் படிக்கவில்லையாம். அட!! ஆக இணையத்தில் அதிகம் உலவ முடியாத ரோசாவுக்கு முகமூடி பதிவில் ஈழநாதனின் முகத்திரை கிழி படுவது மட்டும் செலக்டிவ்வாக எப்படித் தெரிந்தது? ஓடி வந்து உடனே பதில் போட எப்படித் தோன்றியது? இவர் வீட்டில் இணைய இணைப்பு இல்லாவிட்டாலும் கூட ஈழநாதன் பெயர் நாறும் தகவல் காற்றில் கலந்து வந்ததா அல்லது புறாவின் காலில் சீட்டுக் கட்டப் பட்டு வந்ததா? எப்படி தெரிந்தது அது மட்டும்? ஆக, முகமூடியை தொடர்ந்து படிக்கிறார். அப்படி முகமூடியைத் தொடர்ந்து படித்திருந்தால் பெயரிலியின் அயோக்கியத்தனமும், குசும்பன் விட்ட சவாலும் எப்படி இவர் கண்ணில் படாமல் போயின? ஒரு வேளை ஈழநாதன் என்ற பெயர் வரும் முகமூடி பின்னூட்டங்களை மட்டும்தான் நீர் படிக்கிறீரோ? ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் அவற்றை மறைக்க ஓராயிரம் பொய்கள். பொய்யிலேயே புழுத்துத் திரிவது இங்கு யார் ரோசா? யார்?

ஆக குசும்பனைப் படித்ததில்லை, பெயரிலியின் பதிவுகளைப் படித்ததில்லை, தமிழ் மணம் பக்கம் ஒதுங்கியதில்லை ஆனால் பாருங்கள் இந்த ரோசாவுக்கு ஈழநாதன், மலரவன் என்ற பெயரில் எழுதியதில்லை என்ற உண்மை மட்டும் எப்படியோ தெரிந்து விட்டது. அது எப்படி? அது எப்படி? ஈழநாதன், மலரவன் என்ற பெயரில் எதையும் அபவாதமாக எழுதியதில்லை என்று இணையம் பக்கம் வராமலேயே எப்படி வக்காலத்து வாங்க முடிந்தது? அப்ப அந்த கூற்று பொய்யா? எது பொய் ரோசா எது பொய்? எது அபத்தம், ஈழநாதனுக்கு வாங்கிய வக்காலத்தா அல்லது தமிழ் மணம் பக்கமே வரவில்லை என்பதா? வராமல் எப்படி தெரிந்தது உமக்கு? நீர் சொல்வது உமக்கே அபத்தமாகத் தெரியவில்லை? கேவலமாக இல்லை உமது பொய்யும், புரட்டும், திரித்தலும்.

ஆகவே இதைப் படிக்கும் மஹாஜனங்களே நீங்கள் புரிந்து கொள்வது என்னவென்றால் இணையம் பக்கம் வராமலேயே ஈழநாதன் வேறு பெயரில் எழுதவில்லை என்பதை ஞானக் கண்ணால் அறியக் கூடிய மகா சக்தி படைத்தவர் பூர்வாசிரமத்தில் ராமன் ஸ்ரீநிவாசனாக விளங்கிய ரோசா வசந்த் என்ற மஹான். எல்லோரும் அவரை வணங்குங்கள் உங்கள் ஆண் குறி பிழைத்துப் போகும்.


வழிப்போக்கன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் பொத்தாம் பொதுவாக அபத்தம், பொய் திரித்தல் என்று மழுப்பி விட்டு பி கே எஸ்ஸ¤க்கு பதில் சொல்ல ஓடும் ரோசாவே, மீண்டும் கேட்கிறேன் நான் சொன்னதில் எது பொய்? எது திரிப்பு? எது அபத்தம்?
 



சரி, உங்க கருத்து ??