கொறிக்க
(வழக்கம் போலவே) இதையும் ஆந்திரா தட்டிகிட்டு போனதை பற்றி ஆச்சர்யம் ஒன்றுமில்லை. இந்தியாவின் முதல் பெரிய சில்லுத்தொழிற்சாலை ஆந்திராவில் அமையும்னு சொல்லிட்டாங்க. மூணு பில்லியன் டாலர் ப்ராஜக்ட். உடனடியா 5 ஆயிரம் பேருக்கு நேரடியாகவும், மேலும் பல ஆயிரக்கணக்கானவுங்களுக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு. வரும் வருடங்களில் இந்த முக்கிய தொழிற்சாலையை நம்பி பல சிறு தொழில்சாலைகள், அதன் மூலம் தொழில் மூலதனம், லட்சக்கணக்கில் வேலைவாய்ப்பு எல்லாம் ஆந்திராவுக்கு ஸ்வாகா.
சுருக் விஷயங்கள் ::
1. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு மூன்றும் போட்டியில்... தமிழ்நாடு இதில் அக்கரை காண்பிக்காததால் மற்ற விஷயங்களை கருத்தில் கொண்டு ஹைதராபாத்தை தேர்ந்தெடுத்தோம் என்கிறார் semindia தலைவர்.
2. ஹைதராபாத்தில் அமையப்போகிறது என்ற அறிவிப்பை பெங்களூரில் அறிவித்தது தமிழக அமைச்சர் தயாநிதி மாறன்.
3. இந்த நிருபர் சந்திப்பு முழுவதும் semindia தலைவர் அகர்வால், தனது ஆலோசகர் மற்றும் முதலீட்டாளர் கொண்டமூரி, மென்பொருள் பூங்கா பி.வி.நாயுடு மற்றும் தனது ஆலோசகர் சி.எஸ்.ராவ் ஆகியோருக்கே மேடையில் முக்கியத்துவம் கிடைக்கச்செய்து தான் அடக்கியே வாசித்தாராம் ஆந்திர முதல்வர் ராஜசேகர் நாயுடு... ஹும்.
*
மேற்படி வெவகாரமெல்லாம் கிடக்கட்டும்... இத விட முக்கியமான வேற ஒரு விசயத்துக்காக மதுரைக்கார வக்கீலு ஒருத்தரு தலைக்கு மேல கோவம் வந்து ஷில்பா, ரீமா, தமிழ்முரசு மேல எல்லாம் கேஸ் போட்டுட்டாரு. பாண்டியன் காலத்துல இருந்து இன்னி வரய்க்கும் மதுரக்காரய்ங்களுக்கு கேஸுன்னா அம்பூட்டு பிரியம்...
அதாவது தமிழ்முரசுல வந்த ஷில்பா ஷெட்டி, ரீமா சென் ரெண்டு பேர் படமும் கவி(ர்)ச்சியா இருக்காம். அத பாத்தா பசங்க மனசு கெட்டுப்போயிருமாம். அத என்னான்னு விசாரிக்கணுமாம். அவங்கள மார்ச் 10 அன்னிக்கி பாத்து என்ன ஏதுன்னு கேக்கறேன்னு நீதிபதியும் சம்மன் அனுப்பிட்டார்.
சரி, அவங்க போட்டோவ எங்கியோ புடிச்சி தமிழ்முரசுல படமா போட்டுட்டான், அதுக்கு ஷில்பாவும் ரீமாவும் வந்து என்ன செய்யணுமாம்... இந்த மாதிரி கேஸ எடுத்துகிட்டு எவனாவது நீதிமன்றத்துக்கு வந்தா, சர்தான் போயி வேற எதுனா ஒளுங்கான பொளப்ப பாருய்யான்னு சொல்றத வுட்டுபோட்டு நம்ம நீதிபதிங்களும் உடனே நடிகைங்க நேரில் ஆஜராகணும்னு ஒரு கட்டளைய போட்டுற்றாங்க...
சரி எனக்கும் மாஸ்க் நாயகி காத்தரீன் ஜீட்டா ஜோன்ஸ், மிஸஸ் ஸ்மித் ஆன்ஜலீனா ஜோலியெல்லாம் பாக்கணும்னு ஆசையா இருக்கு. அவங்க என் மனச கெடுக்கறாங்கன்னு சிலுக்குவார்ப்பட்டி மாஜிஸ்திரேட்டுகிட்ட பிராது கொடுத்திருக்கேன். அவரும் அவங்க ரெண்டு பேரும் நேர்ல ஆஜராயி வெளக்கணும்னு கட்டளை போடுவாரு... கோர்ட்டுக்கு வர்றப்போ அவங்கள பாக்க பிரியப்படுறவங்க ஜோன்ஸுக்கு 10 ரூவா, ஜோலிக்கு 20 ரூவான்னு முன்கூட்டியே பணத்த கட்டி சீட்டு வாங்கிருங்க.. நீதிபதி, வக்கீல், போலீஸ் வேலை பாக்கறவங்களுக்கு தரிசன கட்டணத்துல தள்ளுபடி உண்டு...
(அந்த ஷில்பா படம் இதுவாத்தான் இருக்கணும். மனசு கெட்டுப்போற வாய்ப்பு இருந்தா சுட்டிய க்ளிக்காதீங்க. ரீமா படம் கண்டுபிடிக்க முடியல)
*
நீங்க ஜோசியம் பார்த்துவிட்டு, அதன்படி கட்சி ஆரம்பிச்சு இருக்கிறதா மு.க.ஸ்டாலின் சொல்லியிருக்காரே?
‘‘அய்யா, நான் ஜோசியம், ஜாதகம்னு கொஞ்சம் நம்பிக்கை உள்ளவன்தான். இல்லைனு சொல்லமாட்டேன். எங்களுக்கு எதிலும் நம்பிக்கை இல்லைனு சொல்லிட்டு, திருட்டுத்தனமாகப் போயி சாமி கும்பிடுவது, திருட்டுத்தனமாக ஜோசியம் பார்க்கிறது என் பிழைப்பு கிடையாது. உங்களுக்கு வேண்டுமானால் இது கைவந்த கலையாக இருக்கலாம். இதைப்பற்றி அவர் திரும்பத் திரும்பப் பேசினால், அவரைப் பற்றி புட்டுப்புட்டு வைப்பேன். ஏப்ரலுக்குப் பிறகு, அவர் முகத்திரையைக் கிழிப்பேன். யார், யார் எந்தக் கோயிலுக்குப் போறாங்க, வர்றாங்கன்னு எனக்குத் தெரியும். நீங்க திருச்சி மாநாட்டுக்கு வாழையிலை போட்டு, சாமி கும்பிட்டுப் பூமிபூஜை நடத்தலையா? கே.என்.நேரு எலுமிச்சம்பழத்தைச் சுத்திப்போடலையா? வெள்ளிக்கிழமை பத்தரை பன்னிரண்டு ராகுகாலம். போட்டியிடுகிற விண்ணப்பத்தைப் பத்துமணிக்குள்ளே வாங்கி, அடுத்து பன்னிரண்டு மணிக்கு விண்ணப்பம் வாங்கலையா? ஏன் உங்களுக்குத்தான் ராகுகாலம், எமகண்டம் எதுவும் கிடையாதே. அதெல்லாம் எங்களை மாதிரி சாதாரண ஜனங்களுக்குத்தானே!’’
- விஜயகாந்த், குமுதம் 15.02.06
*
‘புயலுக்குப் பின்’ வாழ்க்கை எப்படியிருக்கு?
‘‘குஷ்புக்கு அசாத்திய துணிவு. என்னோட சைடில் அவங்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் அவங்களுக்குப் பக்கபலமாக நின்னேன். சாஞ்சிக்க தோள் கொடுத்தேன். சொல்லாத ஒரு விஷயத்தை, ஊதிப் பெரிசாக்கி, பறக்கவிட்டாங்க. ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி உண்மை ஆக்கப் பிரயத்தனப்பட்டாங்க. எல்லாம் ஓவர். அவங்க டி.வி., நான் ஹீரோன்னு வாழ்க்கை திரும்பி ஓடிக்கிட்டு இருக்கு. ஒரு சின்ன அளவில் சறுக்கினால், பின்னாடி சிரிக்க ஆயிரம் பேர் இருக்காங்க என்ற பயம் முதுகில் குறுகுறுப்பாக ஓடிக்கிட்டு இருக்கு.
- சுந்தர் சி., குமுதம் 15.02.06
*
பா.ம.க., மோனோ ரயில் திட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பது ஏன்?
‘‘மோனோ ரயில் என்பது நமக்குப் புதிது. இந்தியாவில் இது எங்கும் இல்லை. மோனோ ரயிலுக்கான பாதையை எப்படி அமைப்பது என்று நமக்குத் தெரியாது. மோனோ ரயிலை நாம் தயாரிப்பதில்லை. வெளிநாட்டிலிருந்துதான் இறக்குமதி செய்ய வேண்டும். அதை எப்படி இயக்குவது, பராமரிப்பது என்பதும் நமக்குத் தெரியாது. தப்பித் தவறி ஏதாவது ரிப்பேர் என்றால்கூட, அதைச் சரி செய்ய வெளிநாட்டிலிருந்து ஆட்கள் வரவேண்டும். இப்படி நமக்கு எள்ளளவுகூட பரிச்சயம் இல்லாத ஒரு திட்டத்தைத் தமிழக அரசாங்கம் கொண்டு வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?’’ என்று கேட்கிறார்கள் பா.ம.க. தலைவர்கள்.
மக்கள் கருத்து :
கோவிந்தராஜ் (பெட்டிக்கடைக் கடைக்காரர்): ‘‘இது வெளிநாட்டு விஷயம். நமக்குத் தேவையான்னு கேக்குறாங்க. பஸ், ரயில், விமானம்னு எல்லாமே வெளிநாட்டு விஷயம்தான். அதை நாம கத்துக்கிட்டு ஓட்டலையா? அதுமாதிரிதான் மேனோ ரயிலும்.’’
குமுதம் 15.02.06
*
பி.ஜீவன், திண்டுக்கல் :: ஒரு புதிய திரைப்படத்தில் திருமாவளவனின் ‘போஸ்’களைப் பார்த்தீர்களா?
அரசு பதில் :: சில புலிகள் இருந்ததாம். சில அதைப் பார்த்து சூடு போட்டுக் கொண்டதாம்.
குமுதம் 15.02.06
*
வி.இராசு, திருப்பத்தூர் :: ‘கேபிள் டி.வி.க்களை அரசுடைமை ஆக்குவதை வரவேற்கிறேன் என்கிறாரே கருணாநிதி?
அரசு பதில் :: வேறு வழி?
குமுதம் 15.02.06
*
அரசு ஊழியர்களுக்குச் சலுகைகள், சாலைப் பணியாளர்களுக்கு மீண்டும் வேலை என்று, முதல்வர் வாரி வழங்குவதெல்லாம் தேர்தல் பயத்தினால்... என்று கிண்டலடிக்கிறாரே கருணாநிதி?
எங்களுக்குத் தேர்தல் ஜுரமோ, பயமோ துளிகூட கிடையாது. அதுவும் எங்கள் அம்மாவுக்குப் பயமா? (சிரிக்கிறார்) துணிச்சல்தான் அவரது மிகப் பெரிய பலம். நிதிநிலை சரியில்லாதபோது கட்டுப்படுத்த வேண்டிய நேரத்தில் கட்டுப்படுத்தினோம். சிக்கன நடவடிக்கையை மேற்கொண்டார் முதல்வர். குடும்ப வரவு செலவைப் பார்த்துக் கொள்ளும் ஒரு தாய், அப்படித்தானே செய்வார்! ஒரு கட்டுக்குள் வந்ததும், இப்போது செய்யவேண்டியதைச் செய்கிறார் அம்மா.
எங்களை நக்கலடிக்கும் கருணாநிதி, எந்தப் பதவியிலும் இல்லாமல் வாராவாரம் அடிக்கல் நாட்டுகிறார். சேது சமுத்திரத் திட்டம், தேசிய நெடுஞ்சாலை, பாலங்கள் என்று மத்திய அரசின் திட்டங்களைத் தன் கட்சியின் சொந்தத் திட்டம் போல அறிவிக்கிறார். முழுப்பக்க விளம்பரத்தில் சிரிக்கிறார். இதெல்லாம் மட்டும் தேர்தலுக்காக இல்லையா? பொழுது விடிந்து பொழுதுபோனால் அம்மாவைத் திட்டி அறிக்கை விடுவதை ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளார். சரி, சட்டசபையில் வந்து மக்கள் பிரச்னையைப் பேசுங்கள் என்றால் பதுங்குகிறார்!
- அமைச்சர் வளர்மதி, குமுதம் 15.02.06
*
விரைவில் எதிர்பார்க்கப்படும் பதிவுகள் ::
% குமுதம் காழ்ப்பின் பிண்ணனியில் உள்ள உள்குத்து அரசியல்
% குமுதம் அரசுவின் நியூரான் நெட்வொர்க்ஸ் செயல்படும் முறையில் உள்ள குறைபாடுகள்.
% குமுதம் ஆர்யர்களின் கைக்கூலியா? அலசுகிறார் திராவிட திலகம்.
% வளர்மதி என்பவர் ஆர்ய சூர்ப்பனகை.. விளக்குகிறார் மேட்ரிக்ஸ் ஹீரோ.
தமிழ்ப்பதிவுகள்
மக்கள்ஸ் கருத்து ::
உங்கள் பதிவில் எப்பொழுதும் இருக்கும் ஒரு லாஜிக் எனக்குப் பிடிக்கிறது..
பாராட்டுக்கள்,
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
bangalore 91-96 period ல டெவலப் ஆனதே அம்மாவல தான்னு இந்தியா டுடே ல படிச்ச ஞாபகம். ம்ம்ம்..... இப்ப ஆந்திரா.
என்ன பண்றது, அவுங்களும் எத்தனை நாளைக்கு தான் கருப்பு கோட்டையும், காக்கி சட்டையும் பார்த்துக்கொண்டே இருப்பது!!!!!!! ரீமாவும் ஷில்பாவும் எந்த உடை ல போஸ் கொடுத்தாங்களோ அதே உடையில் கோர்ட்க்கு வந்தால் உடனடி விடுதலை??? (ஷில்பா படத்தையும் தேடிப்போட்டிருந்தா புண்ணியமாப் போயிருக்கும்)
//தான் அடக்கியே வாசித்தாராம் ஆந்திர முதல்வர் ராஜசேகர் நாயுடு... ஹும்.//
ஏனுங்க.. ரெட்டிகாருவை நாயுடுன்னு சொல்லி கட்சியில கொழப்பம் வந்துடப் போவுது. ஆந்திராவுல சாதியோட ஆளுமை கொஞ்சம் சாஸ்தி..
சரி, உங்க கருத்து ??
உங்கள் பதிவில் எப்பொழுதும் இருக்கும் ஒரு லாஜிக் எனக்குப் பிடிக்கிறது..
பாராட்டுக்கள்,
என்றென்றும் அன்புடன்,
சீமாச்சு...
bangalore 91-96 period ல டெவலப் ஆனதே அம்மாவல தான்னு இந்தியா டுடே ல படிச்ச ஞாபகம். ம்ம்ம்..... இப்ப ஆந்திரா.
என்ன பண்றது, அவுங்களும் எத்தனை நாளைக்கு தான் கருப்பு கோட்டையும், காக்கி சட்டையும் பார்த்துக்கொண்டே இருப்பது!!!!!!! ரீமாவும் ஷில்பாவும் எந்த உடை ல போஸ் கொடுத்தாங்களோ அதே உடையில் கோர்ட்க்கு வந்தால் உடனடி விடுதலை??? (ஷில்பா படத்தையும் தேடிப்போட்டிருந்தா புண்ணியமாப் போயிருக்கும்)
//தான் அடக்கியே வாசித்தாராம் ஆந்திர முதல்வர் ராஜசேகர் நாயுடு... ஹும்.//
ஏனுங்க.. ரெட்டிகாருவை நாயுடுன்னு சொல்லி கட்சியில கொழப்பம் வந்துடப் போவுது. ஆந்திராவுல சாதியோட ஆளுமை கொஞ்சம் சாஸ்தி..
சரி, உங்க கருத்து ??