<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

வாத்தின் அறிவிக்கை (அ) மீன்களின் பாதுகை


கருவாச்சி காவியத்த பாதியில நிறுத்தி வெளக்கம் கொடுக்கற டய மண்டு கணக்கா நம்ம பதிவுக்கும் வெளக்கம் கொடுக்க வச்சிட்டீங்களே மக்கா... அதாவது, நேத்து இதெ "இருப்பின் அறிவிக்கை (அ) மீன்களின் பாதுகை"ன்ற தலைப்புல பதிவா போட்டேன்... எதுக்கு? இலக்கிய வட்ட பெருந்தலைகள் நம்ம பதிவ பார்த்துட்டு வழக்கம் போல நமக்கே புரியாத விசயத்த புரிய வச்சி, எதுனா ம்யூசிக் சைட்டுக்கு லிங்க் கொடுத்தா நாமளும் தன்யனாயிடலாம்னு ஒரு நப்பாசையில... ஆனா தலைப்புல வாத்து இல்லாததாலயோ என்னவோ ஆரும் வரக்காணோம். அர்சுன் படத்துல சொல்ற தேசப்பற்று கருத்தயெல்லாம் காத்துல விட்டுட்டு அவரு ஆட்டம் போட்ட நடிகைய கனவுல வச்சி காதலிக்கிற காத்தவராயன் கணக்கா, என் பதிவோட கேரக்டரரயே புரிஞ்சிக்காம அல்லாரும் வாத்து படம் போடறதும், வாத்து போட்டி வக்கிறதும், கலி முத்திடுச்சிடா 'கார்த்தி'கேயா...

சரி இப்ப தலைப்புல வாத்து போட்டாச்சி... இனியாவது தன்யனாக்குங்க சனங்களே...

****
பாயா
கூப்பு
அச்சூ
மடிப்பு
ஜிகினா
சுய்யான்
ஜில்பான்ஸி
காகம்
இரவுக்கடன்
கொடுமுடி

****

அப்புறம் வாத்து படம் இல்லாமயா... இந்திய வலைப்பதிவுகளில் முதல்முறையாக படாத கஷ்டப்பட்டு வாத்தின் எக்ஸ்ரே படம் போட்றுக்கேன். யாராவது மத்தவங்க யாருக்கும் புரியாத மாதிரி நாலுவரில ஒரு கவிதை எழுதுங்கைய்யா... புண்ணியமா போகும்.

****

இது சம்பந்தமான கானா பாடல் சுட்டி : http://musicindiaonline.wholesale.nameless.com/ஆத்தி இது வாத்து கூட்டம்

****

கதவிடுக்கு, சன்னலில் துருப்பிடித்த கம்பி எதுவும் மேக்ரோ மோடில் எடுக்க நேரம் இல்லாததால், நான் எடுத்த ஒரு படத்தோட சிறு பகுதி..



மீன்களுக்கு பாதுகையா? எனில் பாதம் உண்டா என்று கேட்பவர்கள் வேறு ஏதாவது பெயர் கொடுத்துக்கொள்ளுங்கள்

****

ஒரு மண்ணும் புரியலைன்னு நாலு பேரு சொன்னீங்கன்னா, அறிவு ஜீவி க்ளப்ல சேந்து அப்படியே சிறு பத்திரிக்கைல எழுத போயிருவேன்... என்ன சொல்றீங்க.

முக்கிய அறிவிப்பு :: இந்த பதிவுக்கு புரியவே புரியாதுங்கற மாதிரி பின்னூட்டம் தரவங்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கேய்...

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


நிஜமாவே ஒண்ணும் புரியலீங்கண்ணா !
 



இருப்பின் அறிவிக்கை பதிவு செய்யப்பட்டுவிட்டது தல..

வாத்து.
நேத்து
உன்னை பாத்து..

கொஞ்சம் அதிகமா
மசாலா சேர்த்து..

அட, நாக்குல நீர் ஊத்து...
 



//அப்புறம் வாத்து படம் இல்லாமயா... இந்திய வலைப்பதிவுகளில் முதல்முறையாக படாத கஷ்டப்பட்டு வாத்தின் எக்ஸ்ரே படம் போட்றுக்கேன்//

அப்படியா?
நானேதோ இந்தியரல்லாதார் பதிவுகளைச் சொல்கிறீரோ என்று கரவுண்டேன்.
 



இப்பதிவை அரசியலாக்க சில "சின்ன" சக்திகள் முயலுகின்றன.. எல்லாருக்கும்

ஒரு டிஸ்க்ளெய்மர் ::

அறிவுஜீவித்தனமான ஒரு பதிவு எழுதும் முயற்சியே (நேரமின்மையால்) இது..

அப்ப உடனே, பதிவுக்கு என்ன அர்த்தம்னு கேக்கப்படாது. ஏன்னா படைச்ச ப்ரம்மனுக்கே அர்த்தம் தெரியாது.. ஊரோடு ஒத்துவாழும் - அவங்கெல்லாம் செய்யிறாங்க இவனும் செய்யிறான் - மனநிலையின் விளைவு.
 



உங்கள் ஊக்கத்துக்கு நன்றி சிறுசு.. இதத்தான் எதிர்பார்த்தேன் ;-)

வீ.எம். உங்கள் கவிதை அர்த்தம் புரிகிறது. ஆக புரியாத பாஷையில் எழுதவும்.

அனானி, என் வேண்டுகோளுக்கிணங்க புரியாத பின்னூட்டம் கொடுத்ததற்கு நன்றி...

மேலும் பல புரியாத பின்னூட்டங்கள் தர சக வலையர்கள் அழைக்கப்படுகிறார்கள்
 



மீன் செத்தாக் கருவாடு நீ செத்தா வெறுங்கூடு
கண்ணதாசன் சொன்னதுங்க,
அதையே முகமூடி படமாப் போட்டிருக்கார்.

இந்த இரண்டு பத்துக்குள்ள இவ்வளவு அருமையான தத்துவமா?
 



"இரண்டு படத்துக்குள்ள" என்று வந்திருக்க வேண்டும்.
 



நீந்தின மீன்கள்,
பார்த்த நான் கருவாடானேன்.
 



//இந்தியரல்லாதார் பதிவுகளைச் சொல்கிறீரோ


இப்படி அழகாய் க்ளு கொடுத்த நேம்லெஸ் க்கு என் நன்றிகள்.

கண்டு பிடிச்சேன், கண்டு பிடிச்சேன், x-ray ஏன் என்று கண்டு பிடித்தேன்.

"சின்ன" சக்தியா இல்ல "சின்னம்மா" சக்தியா என்று தமிழ் கூறும் நல்லுகம் அறியும்


:)
 



வணக்கம் தல,

சௌக்கியமா கண்ணா சௌக்கியமா? என்னது வேல பிஸி அது இதுன்னு...

போட்டோ சூப்பரப்பு...போட்டியும் சூப்பரப்பு...

அறிவு ஜீவி (ஜீனியர் விகடன்) பக்கமெல்லாம் போகாண்டாம். இங்கனயே குப்பை கொட்டலாம். என்ன ஷொல்றீர்? :-)
 



பாண்டி,

// காக்கை கூடு
கோழி முட்டை
எக்ஸ்-ரே
மற்றும் நீ வளர்!!! //

பண்டு பாக்கினம், நண்டு நோக்கினம்.
கோழி முட்டை என்ன முட்டை
வெளிறா வியாக்கியானமா?

ஸ்மைலி வேற போடணும் ;-))

****

அய்யய்யோ அனானிமோசு,

காரியத்த கெடுத்தீகளே... இப்படி புரியிறா மாதிரி எழுதுனா நீங்க நம்ம கூட்டத்திலேயே ஸாரி ஆட்டத்துலேயே இல்ல (ஆஹா... குப்பையில எல்லாம் மாணிக்கம் எடுக்கறாங்களே... இத விட புரியாம எப்படி எயுதுறதோ தெரியலையே)
 



// நீந்தின மீன்கள்,
பார்த்த நான் கருவாடானேன். //

அன்னைமோசு,

உங்களுக்கு இந்த பாட்லை கேளுங்கோ

எச்சி.டீடிபீ : // ம்யூசிக் இந்தியா ஆன்லைனு / சிக்காங்கோ சீயாங்கோ கோலாலம்பூரு....
 



சின்னஞ்சிறுசு,

நீங்க என்ன புது அர்த்தம் கொண்டாரீங்க... புரியாத மாதிரி இங்கயும் புரியிர மாதிரி தனிமயிலும் அனுப்பவும்

இன்னொரு ஸ்மைலி ;-))
 



அய்யோ குஷ¤ம்பா,

எங்கய்யா போயிட்டீர் கொஞ்ச நாளா... ஒரே படமா காமிக்கிறாங்கோ... கூட்டம் கூட்டமா வாத்து மேயுது. எனக்கு பயமா இருந்தது... விளக்கம் கேக்கலாம்னா நீர் வேற காணோம்... அதான் பதுங்கி பதுங்கி பதிவு போடறேன்...

மாசிலாக்கா, முருக லஷ்மண், டிஸ்க் ஜாக்கி போல பெரியவங்கள்லாம் புரியாத பின்னூட்டம் கொடுத்தால் தன்யனாயிடுவோம்னுதான் இந்த பதிவே போட்டேன்... ஆனா தலைப்புல "வாத்து"ன்னு இல்லாததால அவிங்கல்லாம் இங்கன வரவே இல்ல போல...
 



வா(ழ்)த்தோட ஒரு மயில் அனுப்பி இருக்கிறேன். முகமூடி பாருங்க !
 



முகமூடி அவர்களே (டோண்டு ஸார் மாதிரி படிக்கவும்)!

அந்த ஏழு நாட்களில் பாக்கியராசு மாதிரி அவா அவா "நான் வாத்து; நான் வாத்து; அதை ஏங்கிட்ட சொல்லி புண்ணியமில்லை"ன்னு பாடாம படம் போடறா !!!

நம்ம உடன் பிறவா சோதரரும் கலக்கறார் போலருக்கு !!!

ஷரி நாமளும் சோதியில ஐக்கியமாயிடுவோமா? எண்ட குருவாயூரப்பா !!!!

:-)
 



நம்ம உடன் பிறவா சோதரரும் கலக்கறார் போலருக்கு

யாருங்க இந்த உபிச ??
 



//கலி முத்திடுச்சிடா 'கார்த்தி'கேயா

அவருமா ?
மம்மி !!!!!!!!!!
 



முகத்தை மூடி
தேடலைத் தொடர்ந்து
எலும்புக்குள் உயிர் வைத்த வாத்தே

கண்ணால் உன்னின் நிதர்சன அற்புதங்களைத்
தரிசிக்காத தரிசு நிலங்கள்தான்
உன் சிந்தனைத் தெளிவினை
பகடி பேசும் முட்டாளினம்.

உனக்கும் பாதம் உண்டு..
மீனுக்கு பாதம் உண்டா..
தேடலைத் தொடர..

ரொம்ப யோசிச்சு பார்த்துட்டேன்.. இதைவிட புரியாமல் எழுத முடியவில்லை:-)
 



சரி, உங்க கருத்து ??