30 கேள்விகளும் மூணாப்பு வாத்தியாரும்
வாத்தி :: எலேய் பசங்களா.. நீங்கள்லாம் நல்ல மனுசங்கதானான்னு தெரிஞ்சிக்க ஒரு பரிச்சை.. மண்டைய ஒடச்சி இந்த நுப்பது கேள்விங்கள தயார் பண்ணியிருக்கேன். இதுக்கு பதில் எளுதி அவனவனுங்களே மார்க்கும் போட்டு நல்ல பசங்களா இல்லியான்னு அப்படி வேலியோரமா போயி உங்களுக்கு நீங்களே தனியா பேசிக்கிங்க...
மாணவன், பெயர் மறந்துவிட்டது எல்லாரும் அவனை ஜால்ரா மணி என்றுதான் கூப்பிடுவார்கள்
ஜா :: (ஜனகராஜ் அஸிஸ்டெண்ட் பாணியில்) சார் நீங்க தெய்வம் சார்...
வாத்தி :: எலேய் ஜால்ரா இந்தா இந்த கேள்வித்தாள பசங்க கையில கொடு
கேள்வித்தாள் விநியோகிக்கப்படுகிறது.
மா 1 :: (எழுந்து நின்று சத்தமாக படிக்கிறான்)
அ) நீங்கள் எல்லாம் கோவணம் கட்டியிருக்கிறீர்களா?
ஆ) சிலேட்டு பலகையை எச்சி தொட்டு சுத்தமாக துடைத்திருக்கிறீர்களா?
இ) தலையில் வேப்பெண்ணெய் வைத்து படிய வாரியிருக்கிறீர்களா?
இதே மாதிரி நுப்பது கேள்விங்க... ஏன் சார். நீங்க மூணாப்பு படிச்சப்ப உங்க வாத்தியாரு கொடுத்தத அப்படியே கொடுத்திட்டீங்களா... இங்க பாருங்க நான் டவுசர் போட்ருக்கேன், நோட்டு பென்சில் வச்சிருக்கேன் அப்ப நான் மனுசன் இல்லியா..
ஜா :: எலேய் உக்கார்றா.. வாத்தியாரையே எதுத்து பேசிறியா
வாத்தி :: வுடு மணி... அவன் ஆண்டை.. விழுமியங்கள் அவன பேச வக்கிது...
ஜா :: சார் (ராகமாக) நீங்க தெய்வம் சார்
வாத்தி :: தம்பி.. இந்த பரீச்சய நானே இன்னும் இந்த எளுதுனதில்ல... எனக்கு மட்டும் நான் மனுசனா இல்லியான்னு தெரிஞ்சிக்க ஆச இருக்காதா... நானும் உங்களோட எளுதறேன் பாரு... நல்லதுப்பா...
மா 1 :: சார்... நியாயமா பாத்தா நீங்க பரீச்சை வக்கிறதே தப்பு. நீங்க இன்னும் டீச்சர் ட்ரெயினிங்கே முடிக்கல. இதுல தோணுன கண்டதையும் கேள்வின்னு கேட்டு மனுசனான்னு ஒரு பரீச்சை வக்கிறீங்க. இத எளுத எனக்கு இஸ்டம் இல்ல... நான் வரேன்..
மா 2 :: ஆண்டை, விழுமியம் அப்படீன்னா என்னடா
ஜா :: அதெல்லாம் நமக்கெதுக்குடா, அய்யா சொன்னா சரியாத்தான் இருக்கும்
மா 2 :: அடப்பாவி என்னன்னு புரியரதுக்கு முந்தியே ஜால்ராவா... உருப்பட்டா மாதிரிதான்
ஜா :: வாத்தியாரு என்ன அஞ்சாப்புல லீடர் ஆக்குறேன்னு சொல்லியிருக்காரு
வாத்தி :: அங்கன என்னடா சத்தம்
ஜா :: ஒன்னியும் இல்ல சார். வளக்கம் போலவே நான் இந்த வாட்டியும் 100% இல்ல சார்... 32% வாங்கிக்கீறேன்.. அப்படின்னா நான் மனுசன் இல்லியா சார்...
டூரிங் கொட்டாயி ஸ்பீக்கரில் ஆளவந்தான் பாடல் ஒலிக்கிறது :: ....பாதி கலந்து செய்த கலவை நான்....
மக்கள்ஸ் கருத்து ::
இந்த நுப்பது கேள்வி பதிவு மூலம் நீங்க என்ன சொல்ல வரீங்கய்யா? "இதுக்கெல்லாம் 'ஆம்' என்று பதிலிருத்தால் மட்டுமே இப்போது நடக்கும் அரசியல் அட்டூழியங்களுக்கு கண்டனம் தெரிவிக்க உனக்கு உரிமையிருக்கு இல்லென்னா மூடிக்கிட்டு போ" அப்பிடின்னூ எடுத்துக்கலாமா? யப்போவ் சூப்பர் டூப்பர் உள்குத்து இதுதானுங்கோவ்!
நுப்பது கேள்வில தேறுரது என்னமோ 4,5... மற்றதெல்லாம் மனமுதிர்ச்சியில்லாததுங்கிறது வேற விசயம். எது எப்பிடியோ மேட்டர திசை திருப்பிட்டீங்கன்னு பின்னுட்டங்களை பார்த்தா தெரியுது!
ஷ்டாண்டர்டு பின்னூட்டம் டெம்ப்ளேட் தரவே இல்லையே! சரி நான் தர்றேன்.
1. எத்தனை மார்க் எடுத்தா பாஸ் சார்?
2. நல்ல சுவையான அலசல்.. மனிதர்கள் என்று சொல்லிக்கொல்பவர்களை கொல்லும் பதிவு!
3. உங்கள் பதிவுகளிலேயே இதுதான் அருமை - சூப்பர்!
4. எனக்கு 10 மார்க்தான் வருது.. நான் பாஸா பெயிலா?
சுரேஷ்... அனானி கருத்தை படித்தவுடன் போடணும்னு நினைச்சேன்... நீங்க போட்டுட்டீங்க... நன்றி... நான் ஆரம்பிக்க இருந்தது இப்படி...
****
அனானி,
இடம் மா(ற்)றி எழுதினீர்கள் என்பதாவது புரியுமா தெரியவில்லை... இருந்தாலும் "சில பேர்களில் ஒருவர்" பெயரில் எழுதியிருந்தால் கீழ்க்கண்ட வழிமொழி கிடைத்திருக்கும். மிஸ் பண்ணிட்டியே மவராசா...
இன்ஷ்டந்த் பின்னூட்டம் ::
1. உங்கள் எழுத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்... இல்லை எழுத்துக்கு எழுத்து உடன்படுகிறேன்.. அய்யோ காற்புள்ளி கமாவெல்லாம் கண் கலங்க வைக்குதே.. உங்க கைய என் நெஞ்சுகுள்ள உட்டு வார்த்தைய பிடுங்கி எழுதுன மாதிரியே இருக்கு... உற்சாகம் பீறிடுது... சட்டைய பிச்சிகிட்டு கதறணும் போல இருக்கே...
//இடம் மா(ற்)றி எழுதினீர்கள் என்பதாவது புரியுமா தெரியவில்லை//
இடம் மா(ற்)றி தான் எழுதினேன்.
//... இருந்தாலும் "சில பேர்களில் ஒருவர்" பெயரில் எழுதியிருந்தால் கீழ்க்கண்ட வழிமொழி கிடைத்திருக்கும். மிஸ் பண்ணிட்டியே மவராசா...//
கொழப்புறயே மவராசா???? கொஞ்சம் டார்ச் அடிங்க... நான் இன்னும் சிறுசுதான். இங்க நடக்குற உள், வெளி,left,right,center குத்துகளை பாக்குறப்போ நாக்கு தள்ளுது சாமி :-(
அதுசரி...... இன்ஷ்டந்த் பின்னூட்டம் :: பதிவுக்கா /முதல் பின்னூட்டத்துக்கா?
அதே அனானி!!!
நன்றி தெருத்தொண்டன்... // முகமூடியின் வழக்கமான பதிவு.. // இதுல திட்டறீங்களா பாராட்டறீங்களான்னே தெரியல... பதிவுல இருந்து பின்னூட்டம் வரை ஒரே கொயப்பமா ஆயிடுச்சே நம்ம தமில் (தமிள்?) பதிவுங்க நிலைமை...
****
அனானி,
இது என்ன கொயப்பம்... எழுதுறவர பொறுத்து (எழுத்த பொறுத்து அல்ல) இந்த இன்ஷ்டந்த் பின்னூட்டத்த பதிவுக்கோ பின்னூட்டத்துக்கோ யூஸ் பண்ணிக்கலாம்
// எந்த உள்குத்தும் இல்லையென்பதை மனசாட்சியுடன் //
அ)உள்குத்துக்கும் மனசாட்சிக்கும் என்ன சம்பந்தம்
ஆ) இந்த ஸ்டேட்மெண்டில் ஏதும் உள்குத்து உள்ளதா
இ) இல்லையெனில் எதற்கு ஒரு டிஸ்க்ளெய்மர்
சரி, உங்க கருத்து ??
இந்த நுப்பது கேள்வி பதிவு மூலம் நீங்க என்ன சொல்ல வரீங்கய்யா? "இதுக்கெல்லாம் 'ஆம்' என்று பதிலிருத்தால் மட்டுமே இப்போது நடக்கும் அரசியல் அட்டூழியங்களுக்கு கண்டனம் தெரிவிக்க உனக்கு உரிமையிருக்கு இல்லென்னா மூடிக்கிட்டு போ" அப்பிடின்னூ எடுத்துக்கலாமா? யப்போவ் சூப்பர் டூப்பர் உள்குத்து இதுதானுங்கோவ்!
நுப்பது கேள்வில தேறுரது என்னமோ 4,5... மற்றதெல்லாம் மனமுதிர்ச்சியில்லாததுங்கிறது வேற விசயம். எது எப்பிடியோ மேட்டர திசை திருப்பிட்டீங்கன்னு பின்னுட்டங்களை பார்த்தா தெரியுது!
ஷ்டாண்டர்டு பின்னூட்டம் டெம்ப்ளேட் தரவே இல்லையே! சரி நான் தர்றேன்.
1. எத்தனை மார்க் எடுத்தா பாஸ் சார்?
2. நல்ல சுவையான அலசல்.. மனிதர்கள் என்று சொல்லிக்கொல்பவர்களை கொல்லும் பதிவு!
3. உங்கள் பதிவுகளிலேயே இதுதான் அருமை - சூப்பர்!
4. எனக்கு 10 மார்க்தான் வருது.. நான் பாஸா பெயிலா?
சுரேஷ்... அனானி கருத்தை படித்தவுடன் போடணும்னு நினைச்சேன்... நீங்க போட்டுட்டீங்க... நன்றி... நான் ஆரம்பிக்க இருந்தது இப்படி...
****
அனானி,
இடம் மா(ற்)றி எழுதினீர்கள் என்பதாவது புரியுமா தெரியவில்லை... இருந்தாலும் "சில பேர்களில் ஒருவர்" பெயரில் எழுதியிருந்தால் கீழ்க்கண்ட வழிமொழி கிடைத்திருக்கும். மிஸ் பண்ணிட்டியே மவராசா...
இன்ஷ்டந்த் பின்னூட்டம் ::
1. உங்கள் எழுத்தோடு வரிக்கு வரி உடன்படுகிறேன்... இல்லை எழுத்துக்கு எழுத்து உடன்படுகிறேன்.. அய்யோ காற்புள்ளி கமாவெல்லாம் கண் கலங்க வைக்குதே.. உங்க கைய என் நெஞ்சுகுள்ள உட்டு வார்த்தைய பிடுங்கி எழுதுன மாதிரியே இருக்கு... உற்சாகம் பீறிடுது... சட்டைய பிச்சிகிட்டு கதறணும் போல இருக்கே...
//இடம் மா(ற்)றி எழுதினீர்கள் என்பதாவது புரியுமா தெரியவில்லை//
இடம் மா(ற்)றி தான் எழுதினேன்.
//... இருந்தாலும் "சில பேர்களில் ஒருவர்" பெயரில் எழுதியிருந்தால் கீழ்க்கண்ட வழிமொழி கிடைத்திருக்கும். மிஸ் பண்ணிட்டியே மவராசா...//
கொழப்புறயே மவராசா???? கொஞ்சம் டார்ச் அடிங்க... நான் இன்னும் சிறுசுதான். இங்க நடக்குற உள், வெளி,left,right,center குத்துகளை பாக்குறப்போ நாக்கு தள்ளுது சாமி :-(
அதுசரி...... இன்ஷ்டந்த் பின்னூட்டம் :: பதிவுக்கா /முதல் பின்னூட்டத்துக்கா?
அதே அனானி!!!
நன்றி தெருத்தொண்டன்... // முகமூடியின் வழக்கமான பதிவு.. // இதுல திட்டறீங்களா பாராட்டறீங்களான்னே தெரியல... பதிவுல இருந்து பின்னூட்டம் வரை ஒரே கொயப்பமா ஆயிடுச்சே நம்ம தமில் (தமிள்?) பதிவுங்க நிலைமை...
****
அனானி,
இது என்ன கொயப்பம்... எழுதுறவர பொறுத்து (எழுத்த பொறுத்து அல்ல) இந்த இன்ஷ்டந்த் பின்னூட்டத்த பதிவுக்கோ பின்னூட்டத்துக்கோ யூஸ் பண்ணிக்கலாம்
// எந்த உள்குத்தும் இல்லையென்பதை மனசாட்சியுடன் //
அ)உள்குத்துக்கும் மனசாட்சிக்கும் என்ன சம்பந்தம்
ஆ) இந்த ஸ்டேட்மெண்டில் ஏதும் உள்குத்து உள்ளதா
இ) இல்லையெனில் எதற்கு ஒரு டிஸ்க்ளெய்மர்
சரி, உங்க கருத்து ??