<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

இவர்கள் என்ன நினைத்திருப்பார்கள்


வான்புகழ் கொண்ட வள்ளுவம் நூலின் முதல்படியைப் பெற்றிடும் வாய்ப்பினை முத்தமிழ் அறிஞர் நல்கிட, ஜூன் இரண்டாம் நாள் என் நெஞ்சில் இன்பம் பொங்கிய நாள் ஆயிற்று! அமெரிக்க நாட்டில் இருந்து நெடுந் தொலைவுப் பயணித்த களைப்பின் முற்றுகையில் இருந்து விடுபடா நிலையிலும், என் மனதுக்கு நிறைவாகவே உரையாற்றிட முடிந்தது. அடுத்த நாள் காலையில் ஆருயிர் அண்ணன் டாக்டர் கலைஞர் அவர்களின் 82-ஆவது பிறந்த நாள் விழாவில் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுத் தலைநகர் தில்லிக்கு விரைந்தேன்.


அரியலூர் தெற்கு ஒன்றியச் செயலாளர் கழகத்தின் உயர்வே தனது உயிர் மூச்சாகக் கருதும் கர்ம வீரர் கலிங்கராஜன் அவர்கள் கொள்கைக்காக வாழ் கின்றவர். திருமணம் செய்து கொள்ளவில்லை. அவரது இளவலின் திருமணத்தை என் தலைமையில் நடத்திட பெரிய அளவில் ஏற்பாடு செய்து இருந்தார். நான் காலையிலேயே வந்து சேர முடியாத காரணத்தால் அவைத் தலைவர் ஆருயிர் அண்ணன் எல்.ஜி. அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்கள். எனினும் அரியலூர் மண்டபத்துக்குள் நான் நுழைந்தபோது என் வாழ்த்துகளைப் பெறுவதற்காக மேடையிலேயே மணமக்கள் மாலை வரையிலும் காத்து இருந்ததைக் கண்டு திடுக்கிட்டேன். எனது வாழ்த்துரைக்குப் பின்னர்தான் கலிங்கராஜனின் முகவாட்டம் நீங்கியது.

அங்கிருந்து விழுப்பணங்குறிச்சிக்கு வந்தேன். உழுத நிலம் போல் ஆயிற்று உள்ளம்! ஞாபகக் கலப்பை கடந்த காலத்தைக் கீறியது. கொள்ளிடம் ஆற்றங்கரையில் தன் மேனியில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு திகுதிகுவென பனைமர உயரத்துக்கு நெருப்பு பற்றி எரித்தபோதும் ஒரு அலறல் சத்தம் கூட இன்றி உடம்பெல்லாம் கருகிய நிலையில் தஞ்சை மருத்துவமனையில், ‘நான் கண்ணை மூடுவதற்குள் வைகோ அண்ணா வந்து பார்ப்பாரா?’ என்ற ஏக்கம் அணையாமலேயே மரணத்தை அணைத்துக் கொண்டானே அந்த இடிமழை உதயன் ஊர் அல்லவா இந்த விழுப்பணங்குறிச்சி. என்னை அறியாமலேயே மனம் பதட்டப்பட்டது. காரை நிறுத்தச் சொன்னேன் தம்பி துரையிடம்.அந்த எளிய கிராமத்தில் இடிந்த இடிபாடாய்க் காட்சி அளித்தது இடிமழை உதயன் பிறந்த வீடு. பக்கத்தில் ஒரு ஓலைக் குடிசை. என்னைப் பார்த்த மாத்திரத்திலேயே கதறி அழுதனர் அவனது தாய், தம்பி, ‘காட்டில் வேலை பார்த்துக் கொண்டு இருந்தேன். நீங்கள் இந்தப் பக்கமாக வருவதாகச் சொன்னார்கள் விழுந்தடித்துக் கொண்டு ஓடி வந்தேன் என்று கூறினார் உதயனின் தந்தை. அந்தக் குடிசையில் சற்று நேரம் அமைதியாக அமர்ந்து இருந்தேன். எந்த உதவியும் கேட்கவில்லை அவர்கள். குடி இருக்க ஒரு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்று என் மனதுக்குள் எண்ணிக் கொண்டேன். உதயனுக்கு மட்டும் அல்ல - மற்ற நான்கு பேர்களின் குடும்பங்களுக்கும் எவ்விதத்திலாவது உதவுவதற்கு உரிய வேளையைத் திட்டமிட்டுக் கொண்டு இருக்கிறது மனம்

பாசமுடன், வைகோ

நன்றி: வைகோ எழுதிய கடிதம் ம.தி.மு.க வலைத்தளத்திலிருந்து. பதிவின் நீளம் கருதி கடிதத்தின் சில பகுதிகள் மட்டும் - பத்தி அமைப்பிலோ எழுத்திலோ எந்த மாறுதலும் இல்லாமல் - கொடுக்கப்பட்டுள்ளது.

இடிமழை உதயன் - வைகோ தலைமை பொறுப்பிற்கு வர ஏதுவாக விடுதலைப்புலிகள் கருணாந்தி உயிருக்கு குறி வைத்திருக்கிறார்கள் என்ற உளவுத்துறை கண்டுபிடிப்பை ஜெயலலிதா சொன்னதும், ஜெயலலிதா மீது முழு நம்பிக்கை கொண்ட முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் (பார்க்க முதல் பத்தி), 'அய்யகோ கொலைச்சதியா' என்று வைகோவை அடிப்படை உறுப்பினர் அந்தஸ்திலிருந்து விடுவித்ததும், தாய்நாட்டின் மேல் பழி என்றாலும் பொறுக்கலாம், தலைவன் மேல் பழியா என்று தீக்குளித்த 5 தொண்டர்களில் ஒருவர்.

கணவனின் சகோதரனின் கொள்கைக்காக நாள் முழுதும் மேடையிலேயே காத்திருந்த அந்த புதுமணப்பெண் - காலமெல்லாம் ரேசன் கடையில் கால்கடுக்க காத்திருக்கும் மக்களை விட கொள்கைக்காக காத்திருக்கும் நாம் எவ்வளவோ மேல் என்று நினைத்திருப்பாரோ?

தீயின் வெப்பம் தன் தோலை கருக்கிய போதும் பின்பு வலியை உணர்ந்து மருத்துவமனையில் காத்திருந்த போதும் இடிமழை உதயன் - கொலைப்பழியை தன்னாலேயே தாங்க முடியவில்லையே, தலைவன் தாங்குவானா, பழி சுமத்தியோர் முகத்தில் மீண்டும் முழிக்க அவன் தன்மானம் இடம் தருமா என்று நினைத்திருப்பானா?

தலை நிமிர்ந்தே பழக்கப்பட்ட தன்மான சிங்கம் மருத்துவமனைக்கு வந்து தனக்காக கண்ணீர் சிந்துவதை கூட விரும்பாத அவன், முன்னாள் தலைவர் சிறையில் பார்த்த சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு முன்னாளோடு இருந்த மலரும் நினைவுகளை மேடை போட்டு கண்ணீர் உகுப்பான் என்று கண்டிருப்பானா?

எல்லா இடத்திலும் கர்ஜிக்கும் தன் தலைவன், வாய் மூடி மௌனியாய், கொடுப்பதை கொடுங்கள் என்று பணிவு காட்டி, தொலைக்காட்சியில் இருட்டடிப்பு செய்யப்பட்டும், விழாக்களிலும் வேண்டா விருந்தாளியாய் உதாசீனப்படுத்தப்பட்டும், எதையும் பெரிது படுத்தாமல் மனதுக்குள் மறுகி வாழும் காலத்தை காணுவான் என்று நினைத்திருப்பானா?

š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


என்றேனும் ஒருநாள் நாமும் ஒரு பெருந்தலைவராகி நாட்டு மக்களுக்காக தினமும் முழுநேர சேவை செய்யவேண்டும் என்று இருக்குமோ ?
 



// என்றேனும் ஒருநாள் நாமும் ஒரு பெருந்தலைவராகி // அப்படி நினைப்பவர்கள் எல்லாம் தீக்குளிக்க மாட்டார்கள் லதா... மற்றவர்களை தீக்குளிக்க வைப்பார்கள்
 



இங்கே பெருந்தலைவர் என்ற வார்த்தை பதத்தை வன்மையாக கண்டிக்கிறேன். வேண்டுமானால் 'குறுந்தலைவர்' என்று பயன்படுத்திக் கொள்ளவும்.
 



சரி, உங்க கருத்து ??