<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar/12213354?origin\x3dhttp://mugamoodi.blogspot.com', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

*னவீணத்தூவ பதிவு எழுதுவது எப்படி


இதென்ன இப்படி ஒரு துவம்/இஸம் இருக்கிறதா? என்றெல்லாம் வியப்பு அடைந்தால் நீங்கள் இன்னும் பதிவுலக பச்சா என்று அர்த்தம். யு ஆர் ரீடைரக்டட்டு & ரீரௌட்ட்டு டு :: ஆழமான பதிவுகள் எழுதுவது எப்படி?

வலையுலகுல இந்த துவமெல்லாம் சகஜமடா.. அப்படியே நமக்கு ஏத்த மாதிரி ஒரு துவம் இல்லையின்னா நாமளா அப்பிடியே ஒண்ணு கிரியேட் பண்றதுதான் அப்படீன்ற டைப்பா நீங்க, அப்டீன்னா கமான் ஜ்டார்ட் மீசிக்..

இடுகை போடுறது படுத்துக்கிட்டு போத்திக்கிறது மாதிரின்னா, இந்த மாரி துவம் பதிவுகள் சமைக்கிறது போத்திகிட்டு படுக்கிறது மாதிரி. பாக்க வித்தியாசம இருக்குமின்னாலும் சமாச்சார் என்னவோ ஒண்ணுதான்.. பாத்தா மலைப்பா இருந்தாலும் ஒரு தடவ சமைச்சா போதும், அப்புறம் "ஜஸ்ட் தோ மினிட்ஸ்" அளவு பழகிடும்.

*

அ) பிச்சி போடுதல். நீங்கள் குழந்தையாக இருக்கும்போது சப்பாத்தி சுடும் நேரத்தில் உங்கள் ரவுசு பொறுக்காமல் உங்களை அ(ம)டக்க ஒரு டெம்பரரி ரிலீப் காக்கா சப்பாத்தி உங்களிடம் தரப்படும். அந்த சப்பாத்தியை...

1. கொடுத்தவுடன் முழுங்கிவிட்டு ரீவியில் யம்மாடி ஆத்தாடி பாக்க போவேன்
2. நாய்க்கு கொடுத்துவிடுவேன்
3. அதை கண்ட மாதிரி பிச்சி போட்டுவிட்டு அதில் பொம்மை உருவங்கள் கண்டுபிடித்து பயர் இஞ்சின் மாதிரி ஒரு உருவம் தெரிந்தால் அதற்கு வேலை தருவதற்காக கார்ப்பெட்டில் மூச்சா போவேன்

ஆ) பிரிச்சி மேய்வது. . உம், பக்கார்டி என்ற வார்த்தையை பார்த்தால்...

1. ரம் ஞாபகம்
2. அப்படின்னா என்னா
3. பக்கா ஆருடி, பக்கு கார்டு, பக்கா காருடி, பக்க கரடி, பக்காரு டிங், பக்கா டிங்கரடிங்காலே என்றெல்லாம் எந்த ஒரு வார்த்தையும் ஒரே வார்த்தையாக தோன்றாமல் பல வார்த்தைகளாக பல்லிளித்து பரிமாணம் காண்பிக்கிறது.

இ) வார்த்தை தொடுத்தல். ங்கா என்று சொல்ல சொன்னால்...

1. வேற வேல இல்ல என்று தூங்க போவேன்
2. ங்கா என்று மட்டும் சொல்லிவிட்டு நாய்க்கு எத்தினி பல்லு என்று அது வாய நோண்டி எண்ணி பார்ப்பேன்
3. ங்கா, தங்கா, மங்கா, திங்கா, ஜும்பா, ஜும்பரிக்கி ஜுலூப்பா, ஜும்பாலகரி, ஜலபுலஜங்க்ஸ், ஜிங்கிரிஜிப்பிடி, ஜிலுஜிலுஜும்பா, ஜங்கரிஜம்பா என்று ரைமிங்காக வார்த்தைகள் பிடிப்பேன்.

ஈ) ரெட்டை கிளவி (கிழவி அல்ல) காதல். கந்த சஷ்டி கவசம் பாடக்கொடுத்தால்...

1. நாலி வரி பாடிவிட்டு முழுசா பாடுனதாக கத விட்டு அதுக்கு லஞ்சமா சாக்லேட் கேப்பேன்
2. இது ஆத்திக கடவுளுக்காக அகண்ட வெளியிலந்து வந்த பாப்பான் எளுதுனது. இங்கயே புழு பூச்சியில இருந்து பொறந்த நம்ம சாதி சனம் இத செய்யக்கூடாதுன்னு அத எரிச்சி பீடி பத்திக்குவேன்
3. எடுத்தவுடன் நேராக பாதி பாட்டுக்கு போய் ரரரர,ரிரிரிரிரி,ருருருருரு,நகநகநக,டிகுகுண, டகுடகு,கடகட,கட்டுக்கடகட,டிகுடிகு,டங்குடிங்கிகு, விந்து விந்து என்ற பாராவை மட்டும் 'சனியனே போதும் பாடுனது, நிறுத்தி தொலை' என்று யாராவது பெல்டால் அடிக்கும்வரை கத்தி பாடுவேன்

உ) தொடர்வண்டி வார்த்தைகள். சுவத்தில் பல்லி சப்தமிட்டால்...

1. அது மாதிரியே சப்தமிடுவேன்
2. பல்லி வாலை எப்படியாவது வெட்ட முடிகிறதா என்று பார்ப்பேன்
3. பல்லி சப்பு தட்டுது, பறவ எச்சி கொட்டுது, பாம்பு கிஸ்ஸு அடிக்கிது, காண்டா மிருகம் குமுறுது, கழுத உறுமுது, கண்டாங்கி சேல நழுவுது, காட்டன் மேல தழுவுது, காட்டுச்சுப்பிரமணி நாட்டுக்கு போனா, கழுதமேல ஏற்ற குமரன் வேட்டைக்கு போனான் என்று தொடர்ச்சியாக சம்பந்தமில்லாமல் முழ நீளத்துக்கு முழங்குவேன்

ஊ) வார்த்தை அலங்காரம். I gotta pee என்பதை...

1. மூச்சா போகணும்
2. டாய்லட்
3. முதுகு தண்டுவடம், மூளை ஸ்டெம், செரிபரல் கார்டெக்ஸ் ஆகியவற்றின் நரம்பு மண்டலம் தசைகளின் மூலம் கட்டுபடுத்தும் அளவு நூறு முதல் நூத்திஐம்பது மில்லி என்றான காரணத்தால் கொஞ்சம் அசவுகரியம் ஏற்பட்டு மூத்திரப்பை எனப்படும் ப்ளாடரிலிருந்து மூத்திரம் வெளியேறியது என்றுதான் சொல்லுவேன்.

மேற்கண்ட மேட்டர்களில் எல்லாவற்றிலும் எண் 3ஐ தேர்ந்தெடுத்திருந்தால் உங்கள் ரத்தத்தில் ஆல்கஹால் அளவை விட நவீனத்த்துவம் ஊறிக்கிடக்கிறது. சும்மா அப்படியே பீச்ச வேண்டியதுதான். மற்ற எண்காரர்களும் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். சோனாகஞ்சியில் பாடி ஜோசியம் பாத்துவிட்டு வந்து அ முதல் ஊ வரை உள்ள குறிப்புகளை உபயோகித்து 'ஆழமான பதிவு' தயாரிக்கும்போது மீந்து போன சில பல நவீனத்துவ வார்த்தைகளையும் ஆங்காங்கே தூவி I gotta pee என்பதை எடுத்துக்கொண்டு 100 வார்த்தைகளுக்கு மிகாமல் ஒரு சின்ன செய்முறை குறிப்பு கொறிக்கவும்.

" தன்னாலே தில்லாலே தண்டுவடம் நல்லால்லே. அம்மு கம்முனு ஆச்சி, எனக்கோ ஸ்டெம்மு ஸ்டன்னாச்சி.. கால்டெக்ஸு பாக்கத்துல கீது ஒரு பங்கு, நம்ம கார்ட்டேக்ஸுக்கோ ஊது சங்கு. எல்லாமும் சேந்துகிச்சி, நாமோ ஒரு சோத்து பச்சி மச்சி குச்சி கச்சி. தசைகளின் பின்ன ஏற்பட்ட கட்டுப்பாடு கடுப்பு கட்டுப்படு கட்டுக்கடங்காமல் கட்டு கட்டு கட்டுன்னு கடகடகடன்னு லொடலொடவா ஆயி கொஞ்ச போயி மிஞ்ச நாயி. ஊர்க்கோடி ஆல, பலா, வேப்ப, முருங்க, விலா, வேம்ப, ஆலிலக்கு, புல்லலுக்கு, புதினா, சிறுகீர, அறகீர, முழுகீர, பொன்னாங்கன்னி, கரிசலாங்கன்னி, ஜூப்புமுர, இஞ்சிமுரப்பா, ஆலோல மூங்கி காட்டுல காச்சுர சாராயத்த சூடா அடிக்கிம்போது போத தெரியிற நூறு நூத்து அம்பது மில்லி மாதிரி எனக்கும் பிளாட்டரு க்ளாட்டரு ஆகாம சும்மா சலசலன்னும் சல்லுன்னும் (மூத்திர) கொழாய் வழியா குறியால வெளியேத்தினேன்ம்பா "

(மூத்திரம் போன்ற வார்த்தைகள் சரளமாக எழுதவும். தயக்கம் வேண்டாம். உங்கள் ஜாதியை பொறுத்து 'வார்த்தையில் இல்லை நாகரீகம். கருத்தில் மட்டும்தான்' என்ற ஆதரவு குரல் விட, for a nominal price, 'ஏஜன்சி' மூலம் ஆள் ஏற்பாடு செய்து கொள்ளலாம்)

ஓரளவு க்ளோஸா வரீங்களா.. ஓகே. இதுமாதிரியே இருக்க வேண்டும் என்பதில்லை, ஓவ்வொருவர் எழுத்தும் தனித்தன்மை கொண்ட நவீனத்துவம்தான். இந்த பார்முலா படி இப்போ இப்பதிவின் தலைப்பை பாருங்கள்.

*நவீனத்துவ என்பதை ஒரு எதுகை மோனையோடு (கே)ன+வீணா+த்தூ+வ என்பதாக பார்க்கும் சித்தி அடைந்திருப்பீர்கள்..

இப்போது நீங்கள் உங்கள் பதிவுக்கு சம்பந்தமில்லாமல் - பதிவே சம்பந்தமில்லாததுதான், இதுல எங்க அதுக்கும் சம்பந்தமில்லாமன்னு எல்லாம் சலிச்சிக்க கூடாது - ஒரு ம்யூஜிக் போடணும். அட்லீஸ்ட் அதுவாவது உங்கட பதிவை கஷ்டப்பட்டு படிக்சி சன்னி கண்ட சனங்களுக்கு ஆறுதலா இருக்கும்.

http://www.musicindiaonline.com/p/x/0UX2koX1vd.As1NMvHdW/

இப்பிடி மூசிக் போடறதுல உள்ள இன்னொரு பிரயோசனம், இதுல டார்க்கெட்டு ஆடியன்ஸுக்கு எதாவது மெசேஜ் இருக்குமோந்து சாதா ரணம், டார் கெட்டு ரெண்டுமே பாட்ட முழுசா கேக்கும். அததுக்கு ஏத்தா மாதிரி பாட்ட பதிவோட லிங்கு பன்னி கெரோன்னு போகும்.

மண்ட சாயுற நேரம் கொஞ்ச நஞ்ச விசரயும் விட்டு வக்க கூடாது. மொத்தமா போட்டு தள்ள இன்னொரு விசயமும் இருக்கு. அத போட்டாத்தான் பதிவு முழுசு பெறும். அது படம்.

உங்க கம்பியூட்டரில் உள்ல குப்ப கூடயில் (அதாம் ரீசைக்கிளு பின்னு) எதாவது படம் இருக்காண்டு பாக்கோணும். அத ரீ ஸ்டோரு பண்ணிக்கணும். அந்த படத்த மைக்ரோசாப்டு பெயிண்டு பிரஸ்ஷுல ஓப்பன் பண்ணி அதுல ஒரு பாகத்த மட்டும் வெட்டி எடுக்கணும். அதாவது உங்க படம் 1280 x 1024 என்றால் ரேண்டமா அந்த படத்துல ஒரு பகுதிய 128 x 102 அளவுல வெட்டி புது படமா உருவாக்கிக்கோணும். பின் நவீனத்துக்கு ஏத்தா மாரி *னி, *த்து சம்பந்தப்பட்ட படங்களா இருந்தா ரொம்ப நல்லது. (இந்த வார்த்தைகளை பார்த்தால் உங்களுக்கு உடனே கூனி, கூத்து என்பதாக தோன்றினால் நீங்கள் இன்னும் முன்நவீனத்திலேயே இருக்கிறீர்கள். நீங்கள் பின்நவீனத்துவவாதியா இருந்தால் உங்களுக்கு அந்த வார்த்தைகள் சோ சோ சோ சோனி, நா நா நா நாத்து என்பதாக் தோன்றவேண்டும்)

ஹோம் வொர்க் :: சென்ற பதிவில் சொன்ன 'தி பார்க்' கேட்டுக்கு வெளியே குந்திகினு இருந்த ஒரு ஆளிடம் நடந்த இந்த உரையாடலை, கேன வீண த்தூ வ மார்க்க ச்சீய ரண பதிவாக மாற்றவும்.

ஏம்பா.. வருசம் முச்சூட இப்பிடி அழுக்காவே திரியிறியே. பாரு.. தலய தண்ணியே காணாம சிக்கு புடிச்சி கட்டி தட்டி போயி குருவி கூடு கட்டி வச்சிருக்கு. இதுக்கு மேல ஓட்டையே வுழாதுங்கிற அளவுல கிழிஞ்சி போன சட்டையும் முழுசு அரையாகி நூல் நூலா தொங்கற டப்பா டவுசரும் போட்ருக்க. நகம் ஏகத்துக்கும் வளந்து அதுக்கு கீழ அழுக்கு படிஞ்சி கிடக்கு. நாத்தம் வர கிழிஞ்ச சாக்க காவக்கார போர்வைன்னு போத்திகிட்டு துண்டு சுருட்ட வாயில வச்சிகிட்டே திரியிற. எவ்வளவோ பேர் நல்ல துணிமணி தராங்களே, ஒனக்கு ஏண்டாப்பா இப்பிடியே இருக்கணும்னு தோணுதுன்னு ஒரு வார்த்தை கேட்டா.... போடா வெண்ண, போன தீவாளிக்கி கோடி வூட்டு (லாஸ்) ஜிஞ்ஜிலிக்கி கொடுத்த கோமேதகம் பிராண்டு ஜட்டி போட்ருந்தனே பாக்கலியா.. என்ன பத்தி இந்த மாரி இன்னொருக்கா பேசுன ஒனக்கும் சாக்ரமண்டோ சங்கிலி பருப்பு கெதிதான்னு வுட்டான் ஒரு சாபம்.

*

வெயிட். பதிவு இவ்ளோதான்னாலும் அது முழுமை பெற இன்னும் ஒரு விஷயம் இருக்கு. அது நவீனத்துவத்தை அடுத்த நிலைக்கு, அதாவது இடுகையின் பின்னூட்டிலும் கொண்டு செல்லுதல்.

அதாவது உங்கள் இடுகையின் முதல் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் ::

பின் ஊட்டு ஒன்று, அதில கேள்வி ரெண்டு ::

அ) அண்ணை, இந்த பதிவுல நீங்க சொல்லாதது எதுவும் உண்டா?
ஆ) அண்ணை, இந்த பதிவுல அப்பால கொஞ்சம் மப்பால நீங்க சொல்ல நனைக்கிறது எதுனா உண்டா?

- தன் வாயால தனக்கு தானே வெச்ச நெருப்பால வெந்த றக்கயால பறக்க முடியாம விந்தி விந்தி நடக்குற பாம்புடம்பும் யாளிமுகமும் கொண்ட நாத விந்து பேரு கொண்ட ஒரு ஜந்து (சுருக்கமா FD,Handicapped)

*

அதாவது உங்கள் பதிவின் இரண்டாம் பின்னூட்டம் இப்படியாக இருக்க வேண்டும் ::

ஒண்ணுமில்ல FDHங்கிற பேருல வந்த பின்னூட்டம் எனக்கு நானே போட்டுகிட்டதுதான். அதாவது திராவிட கச்சி தலைவரு கரு.நா.நிதி நெதமும் யாருக்குனா மெசேஜ் கொடுக்கணுமின்னு ஆசப்பட்டா இப்படித்தான் கூவாம்பேட்ட குப்புசாமி கேக்குறதா ஒரு கேள்விய எளுதி, உடன்கட்டை ஏறுற ஈன பிழைப்பேன்னு ஒரு பதிலும் எளுதி ஒட்டுவாறு. அது மாதிரியே, நானும் மெசேஜ் கொடுக்கலாமின்னு கேள்வி கேட்டுகினேன். கேட்டவரு பேரு பேன்ஸி பனியனாட்டமா இருக்கா.. இப்ப பதில்.

பறக்கவியால ஜந்து, இங்க வந்து குந்து, போகப்போற நொந்து. இரு மொதல்ல ஒரு கவித சொல்லிக்கிறேன்.நான் கவிஞர் குடுமிபேட்ட குஞ்ஞாயிங்கிற நாமகிரகணத்துல தேசவிசாரியா அலைஞ்ச ப்போ எளுதுனது.. இப்ப உட்டா அப்புறம் எப்பத்தான் இத நான் சொல் உரது. கேளு,

வாலாட்டி திரிகிறேன் நான்,
வள்ளென்று குலைக்கிறாய் நீ,
நம்மிருவரில் யாரடி நாய்?

- சிர்கா 37/13/1469

(கலைக்கிற நாய் வெறிக்காது மாதிரி புது கிழமொழி யாராவது எளுதுனா, அவங்களுக்கு அண்டாகாகசம் ஒரு பானை எலவச திட்டத்துல திரட்டி தரப்படும்)

அ) அப்பால என்னா கேட்ட, சொல்லாதது எதுவும் உண்டா... இதுல எதாவது சொல்லியிருக்கேன்னு நினைச்சியே அதுக்கே ஒனக்கு மாலும் ஜாலும் போடலாம்னாலும் சோக்கா கேட்டியே ஒரு கேள்வியேன்னு பதில் சொல்றேன் கேளு. இது ஒரு புவிக்கோட்டு கேட்டு பதிவு. அதாவது வல்லூறுலியோ கடலாமையிலயோ பிரயாணிச்சி ஏழு கடல் தாண்டி ஏழு மலை தாண்டி தூர தேசத்துல இருக்குற சிங்கத்தலை ஊருக்கு போனா, அங்க இலக்கிய விசாரத்துல என்ன விட மேன்மை தங்கிய அண்ணை ஒருத்தரு இருப்பாரு. அவரு எந்த மனவிசாரமும், தன சகாப்தமும், சகல சஞ்சாரங்களும் இல்லாத அட்வைஸு எளுத்தையே குப்பன்னுட்டாரு. அப்ப ரத்த கொதிப்பு தரும் இத்த என்னன்ன சொல்வாரு. அதனால அவருக்கு ஒரு முன்-வருத்தத்த பின்னாள்ல இல்லாம இந்நாள்லயே பேஸ்ட் அண்ட் போஸ்ட் பண்ணிட்டு எங்ட குப்பையில யாருக்க்காவது கோமேதகம் இல்லையின்னாலும் கோலிகுண்டாவது கெடக்காமலா போகுமின்னு மனச தேத்திங்கோன்னு மட்டும் சொல்லிக்கிறேன்

ஆ) அம்பு உட்ட ஒடம்பொறப்பே, நீ கேக்கிறியோ கேக்கலயோ சொல்லிக்கிரேன் கேளு. இது இதோட கடேசி. எது இதோட கடேசின்னு கேக்காத. இது இதோட கடேசிதான்.. அடுத்த தடவ இத நான் திருப்பியும் சொல்வேன். அப்போ போன தடவ கடேசின்னு சொன்னியே வாத்யாரேன்னு கேக்காத. அது அப்போதைய கடேசி. இது இப்போதைய கடேசி. கடிச்சி விட்ட காயமும், கிளிச்சி விட்ட கிங்கரரும் சும்மா இருக்குமோ சண்டமாருதமே என் ஞானத்தங்கமே. அதனால எத்தன தடவ சொன்னாலும், அந்த வார்த்த அப்போதக்கி மட்டும்தான் கடேசிய தவிர அது எப்போதைக்கும் கடேசி இல்லன்னு புரிஞ்சிக்க. அப்புறம் எம்க்கிட்ட இருக்கிற பெருங்காய டப்பாவுக்கு வயசு ரொம்ப ஆச்சி. அதுனால 83 வரிசம் மின்னாடி வாசமா இருந்ததயே கெலரி கெளரி இப்பவும் காலி டப்பாவுல வாசன இருக்கான்னு கேட்டு ரணகள ப் படுத்தாத..அப்புறம் நான் நேத்தி பொறந்த பாப்பாவுக்கும் அடுத்த வருசம் பொறக்கலாமான்னு ஆச்சரியமா நீந்திகிட்ட இருக்கிற வாலுள்ள வெள்ள ஆசாமிகிட்டயும் என்ன பத்தி சொல்றேன் கேளுன்னு இன்னும் கொஞ்சம் டேமேஜ் ஆக்கிக்குவேன். நாள்பட சட்டி சுட்டதடா கை விட்டதடான்னுதான் ஆகுதே தவிர பிரயோசனம் எதுவும் இருக்கிறதா காணும். ஆகவே இதே கடஏசி. நெஞ்சம் கொஞ்சமாக http://www.musicindiaonline.com/p/x/gqQgCnsJSS.As1NMvHdW/ கேட்டு சுகம் பெறவும்.

*

தட்ஸ் ஆல். உங்களுக்கு *னவீணாத்தூவ பதிவு உழுவது கைகூட அந்த கண்டி கதிர்காமன் அருள் புரிவானாக.




š இப்பதிவை மின்னஞ்சலிட