குடும்ப சண்டையும் பொதுமக்களும்
கொறிப்பு :: மேற்கண்ட படத்தொகுப்புக்கும் கருணாநிதி, அழகிரி, ஸ்டாலின், மாறன்ஸ், கருத்து "கனி"ப்பு, வாரிசு அரசியல், மதுரை வன்முரை ஆகிய எந்த *க்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மறைமுகமாகவோ நேரடியாகவோ எதாவது நினைவுக்கு வந்து தொலைந்தால் சிபிஐ உட்பட எவரும் பொறுப்பல்ல.
தமிழ்ப்பதிவுகள்
நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா
I've been prime minister of this country for just over 10 years ... I think that's long enough for me, but more especially, for the country. - Tony Blair.
அடப்பாவி, நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...
நீங்க என்ன எப்ப வீட்டுக்கு அனுப்பிச்சாலும் சந்தோசமா போறேன். உயிரில்லாத மொழிக்கு சேவை செய்வதில் மிச்ச காலத்த கழிச்சிக்கிறேன்னு அறிக்கை மேல அறிக்கையா, வெறும் அறிவிப்ப மட்டும் விட்டுட்டு கடேசி வரைக்கும் பதவிய கெட்டியா புடிச்சி பொளப்பு ஓட்ட தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...
நார்த் இங்கிலாந்து ஒரு பையனுக்கு, சவுத் இங்கிலாந்து இன்னொரு பையனுக்கு, அயர்லாந்து அத்தை பசங்களுக்கு, மான்செஸ்டர் மகளுக்குன்னு குத்தகை போட்டு கொடுத்திட்டு அவனவன் பதவி வெறியில அடிச்சிகிட்டு அதுல அப்பாவிங்கள போட்டு தள்றத பாத்து அழுதுகிட்டே அரசாங்க பணத்த அள்ளித்தெளிச்சி அரசியல் பண்ண தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...
எது எக்கேடு கெட்ட எனக்கென்ன, எனக்கு விழா எடுங்கன்னு முப்பதாவது பிறந்த நாளு, ஐம்பதாவது கல்யாண நாளுன்னு எதுனா விழா எடுத்து அதுக்கு காலிவுட்டு கோலிவுட்டு நடிகைங்கள மார்பு கச்சை இடுப்பு கச்சையோட மட்டும் ஆட விட்டுட்டு ஆறு மணிநேரம் ஆனாலும் அத தான் மட்டும் ஒக்காந்து ரசிக்கணுமின்னு நினைக்காம எலிக்கறி சாப்பிடுற பிச்சைக்கார வெத்து பசங்களோட பசியாத்த அத கஷ்டப்பட்டு மருமகனோட டிவியில இலவசமா ஒளிபரப்பி எண்டர்டெயின் பண்ணத்தெரியாத நீயெல்லாம் ஒரு அரசியல்வாதியாடா...
பொறந்ததுல இருந்து அரசியல்வாதியா மட்டுமே இருந்துட்டேன். வேற ஒண்ணும் தெரியாது. மிச்சம் இருக்கிற கொஞ்ச நஞ்ச காலத்தையும் பதவி நாக்காலியில நிம்மதியா கழிச்சிட்டு போலாம்னு பாத்தா அதுக்கு விடாம வம்பு பண்ற தகுதி இல்லாதவங்களோட எல்லாம் அரசியல் பண்ண வேண்டியது இருக்கேன்னு பார்லிமெண்டுல முதலைக்கண்ணீர் வடிச்சிட்டு அதுக்காக எல்லாரும் உச்சு கொட்டுறத பாத்து சந்தோசமா பொழப்பு ஓட்டாம நீயெல்லாம் என்னடா அரசியல்வாதி...
*
ஹாய் டமிள் காமன் மக்கள்ஸ் :: நமீதா இடுப்பு அழகா இல்ல த்ரிஷா இடுப்பு அழகான்னு மட்டுமே கருத்து கணிப்பு போடாம வாரிசுங்க சம்பந்தப்பட்டதா இருந்தா போட வேணாமின்னு தலைவரு எவ்வளவோ எடுத்து சொல்லியும் கேக்காம யாரோ என்னமோ கருத்து கணிப்பு போட்டு என்னமோ ப்ரச்னையாமே. எழவு மூணு சாவுதான விழுந்திருக்கு. செத்தவன் எல்லாம் என்ன தமிழக தலையெழுத்தையே மாத்துற அளவு அரசியல்வாதியா.. அதான் அவனுங்க அப்பன் ஆத்தா ஆயுசுக்கும் பாக்காத அளவு ரெண்டு லச்ச ரூவாய மனுநீதி சோழன் தந்திட்டாரே,வாங்கிகிட்டு பேசாம போக வேண்டியதுதான.. அதுவும் இல்லாம மனுநீதி சோழரு சிபிஐ விசாரணைக்கும் லெட்டரு போட்டுட்டாரு. சிபிஐ விசாரணை செஞ்சி எப்படியும் பதினஞ்சி இருவது வருசத்துல என்ன ஏதுன்னு சொல்லலையின்னா மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து ஆட்சிய கவுத்திடுவாரு.. அப்புறம் என்ன.. பொத்திகிட்டு போவீங்களா. அத வுட்டுட்டு இதயெல்லாம் ஒரு ப்ரச்னை பண்ணிகிட்டு.. வேற எதுனா உருப்படியான விசயம் இருந்தா பாருங்கப்பா... எனக்கு ஒரு முக்கியமான வேல இருக்கு... இங்கன லாஸ் ஏஞ்சலீஸ் ஜூவுல கடல் ஆமை ஒண்ணு ஆயிரம் வருசமா மூச்சு வுட்டுகிட்டு இருக்காம். அதுக்கு ஏன் இன்னும் நிர்வாகம் விழா கொண்டாடாம இருக்குன்னு விசாரிக்க போகோணும்.
தமிழ்ப்பதிவுகள்
