<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/plusone.js"></script> <script type="text/javascript"> gapi.load("iframes-styles-bubble", function() { if (window.iframes && iframes.open) { iframes.open( '//www.blogger.com/navbar.g?targetBlogID\07512213354\46blogName\75%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\46publishMode\75PUBLISH_MODE_BLOGSPOT\46navbarType\75BLUE\46layoutType\75CLASSIC\46searchRoot\75http://mugamoodi.blogspot.com/search\46blogLocale\75en_US\46v\0752\46homepageUrl\75http://mugamoodi.blogspot.com/\46vt\0753361231228256067100', { container: "navbar-iframe-container", id: "navbar-iframe" }, { }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவி கொலை ?


பொதுவாகவே தமிழகம் முழுவதும் E&E என்றால் கொஞ்சம் ஒருமாதிரியாகத்தான் இருக்கும் என்பதாக நாங்கள் படிக்கும் போது இண்டர்-யுனிவர்சிடி கேம்ஸ் போகும்போது பகிர்ந்து அறிந்ததுதான் என்றாலும் அண்ணாமலையின் இந்த பிரிவுகளில் - எல்லோரும் இல்லை - கால்வாசிக்கும் மேற்பட்ட வாத்திகள் சைக்கோக்களாக இருப்பார்கள்... அறையின் எல்லா கதவுகளையும் மூடிவிட்டு மின்விசிறிகளையும் அணைத்துவிட்டு மாணவர்கள் அனைவரும் வியர்வையில் குளிக்க குளிக்க ஒரு லூஸு பாடம் நடத்தும். என்னது Oscilloscopeல் Volt/Div என்று ஒரு Knob இருக்கிறதா... எங்க காட்டு என்று Ph.D முடித்த லாப் இன்சார்ஜ் ப்ரபொசர் ஞானி இந்த கோடியிலிருந்து அந்த கோடி வரை நடந்து "ஆமா இருக்கு" என்று வழிந்து விட்டு போனாலும் லேபுக்கு வரும்போது முழுக்கை சட்டையில் இப்படி இருக்க வேண்டும், பேண்ட் அப்படி இருக்க வேண்டும் என்று ஏகப்பட்ட ரூல்ஸை போட்டு தாளிக்கும்... மத்த டிபார்மெண்ட் மக்கள்ஸ் எல்லாம் ஜாலியாக இருக்க இந்த துறை மட்டும் 34 பக்கத்துக்கு அப்ஜெக்டிவ், ப்ரொசீஜர் என்று ஈயடிச்சான் காப்பியாக ரிகார்டை - இங்குதான் ஜூனியர்களை வாட்டுவது ஆரம்பமாகும் இடம் - எழுதி கழுத்தறுபடும். ஆணும் பெண்ணும் பேசினால் இந்த வாத்திகளுக்கு பேதி போகும். எப்பொழுது சான்ஸ் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் ஆண்களாக இருந்தால் "ஏம்பா ஆனா அந்த ஐஸ்க்ரீம் கடையில பிகர் பார்க்க மட்டும் நல்லா தெரியுது, மத்ததுக்கெல்லாம்... " என்றும் பெண்களாக இருந்தால் "பேண்ட் சர்ட்ன்னு ஸ்டைலா போட்டுகிட்டு சினிமாவுக்கு கூட்டமா போய் கூத்தடிக்க தெரியிது ஆனா... "என்று குத்தி காண்பிப்பது. இண்டர்னல் மார்க் இருக்கிறது என்பதால் சம்பந்தா சம்பதமில்லாமல் பயங்கரமாக ஓட்டுவது என்பதெல்லாம் சகஜமாக நடக்கும் இடம் மின்/னணுவியல் துறை.

பிட் அடிக்கும்போது பிடிபட்டதால் மாணவி தற்கொலை என்று செய்தியை படித்தால் எழும் பொது சிந்தனை, இதென்ன இவ்வளவோ கோழையாக இருக்கிறார்கள் என்பதாக இருக்கும். ஆனால் அண்ணாமலையில் மாணவி தற்கொலை என்று வந்த செய்தியை படித்ததும், இந்த பெண் மட்டும் E&E அல்லது E&I பிரிவில் படிப்பதாக இருந்தால் இவளது தற்கொலைக்கு முக்கால் காரணம் விரிவுரையாளராகத்தான் இருப்பான் என்பதே எனது முதல் சிந்தனையாக இருந்தது. அவர்கள் மாணவர்களை நடத்தும் விதம் அப்படி... மனதளவில் ரொம்பவே பாதிப்பார்கள்.

அமெரிக்காவில் எல்லாம் ஒரு மாணவனோ மாணவியோ இது போன்ற அகால மரணம் அடைந்தால் அதனால் மனதளவில் பாதிக்கப்படும் மற்ற மாணவர்களுக்கு - மாணவர்களின் வயது காரணமாக - ஆறுதல் சொல்வதெற்கென்றே counsellors உண்டு. ஆகவே இந்த தற்கொலை செய்தியை கண்டவுடன் அண்ணாமலையில் தற்பொழுது படிக்கும் எனக்கு தெரிந்த அந்த மாணவன் நினைவு வந்தது. ஒருவேளை அவனுக்கு அந்த பெண்ணை தெரிந்திருந்தால் அவனுக்கு ஆறுதல் சொல்லலாம் என்றும் மேற்விபரங்களுக்கும் அவனை தொடர்பு கொண்டேன். பார்த்தால் அவன் அந்த மாணவியின் வகுப்பு தோழன்.

சேட்னா (தற்)கொலை பற்றி அவன் சொன்னது ::

சேட்னா நன்றாக படிக்கக்கூடியவள். அவளது GPA > 9.0/10.0... Group Discussion, Seminar போன்றவற்றில் நன்றாக பிரகாசிக்கக்கூடியவள். எல்லாரிடமும் நன்றாக பழக்ககூடிய சுபாவம். தோற்றத்திலும் நல்ல அழகு. சம்பந்தப்பட்ட விரிவுரையாளன் மணிக்குமார் இளைஞன்.. கடந்த ஒரு வருடமாகவே இந்த பெண்ணுக்கு செல்போன் மூலமாகவும் ஏனைய வழிகளிலும் டார்ச்சர் தந்து வந்துள்ளான். இவனுக்கு இன்னொரு விரிவுரையாளனும் கூட்டாளி. இந்த நிலையில் சம்பவம் நடந்த அன்று மாடல் தேர்வில் பங்கேற்ற மாணவி சேட்னாவிடம் சென்று அவள் பிட் வைத்திருப்பதாக தான் சந்தேகப்படுவதாக கூறியிருக்கிறான் மணிக்குமார்.. கவனிக்கப்பட வேண்டிய விஷயம், இது செமஸ்டர் தேர்வு கூட இல்லை. வெறும் மாடல் தேர்வுதான். இந்த மாடல் தேர்வில் மார்க் வாங்குவதால் கிடைக்கும் அதிக பட்ச பயன் இண்டர்னல் மார்க்கின் ஐந்தில் அல்லது மூன்றில் ஒரு பங்கில் மட்டுமே உபயோகப்படும்.

சேட்னா அவன் குற்றச்சாட்டை மறுத்து தனது துணிகளை உதறி காண்பித்திருக்கிறார். மேலும் சந்தேகம் இருந்தால் பெண் விரிவுரையாளர் எவராவது வந்து தன்னை சோதித்துக்கொள்ளலாம் என்று அவள் சொல்லிக்கொண்டிருக்கும்போதே சேட்னாவின் உடையில் கையை விட்டு சோதனை செய்திருக்கிறான் மணிக்குமார். பிட் என்று எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.. உடன் இதையும் ஏற்கனவே அவனால் தான் பாதிக்கப்பட்டதையும் துறைத்தலைவரிடம் சென்று புகாராக சொல்லியிருக்கிறார் சேட்னா. ஆனால் அவரோ விரிவுரையாளனையும் அழைத்து இது நீங்கள் இரண்டு பேரும் தீர்த்துக்கொள்ள வேண்டிய ப்ரச்னை என்று சொல்லியிருக்கிறார். வெளியில் வந்த உடனேயே "நீ எங்கே வேண்டுமானாலும் சென்று புகார் செய்து கொள், என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று சொல்லிவிட்டு சென்றிருக்கிறான் மணிக்குமார். தன் உடைக்குள் கைவிட்டு சோதனை நிகழ்ந்த அதிர்ச்சியிலும் அதனை துறைத்தலைவர் கூட கண்டுகொள்ளவில்லை என்ற அதிர்ச்சியிலும் சேட்னா தற்கொலை செய்து கொண்டாள்.

இந்த நிலையில் சேட்னா இறந்த பிற்பாடு கூட அந்த விரிவுரையாளர் மேல் எந்த நடவடிக்கையும் இல்லை என்பது போக அந்த பெண்ணின் நடத்தை மீதே களங்கம் கற்பிக்க முயற்சி நட்ந்திருக்கிறது. சேட்னா நடத்தை ஒரு மாதிரி என்று நிர்வாகமும் போலீஸும் எழுதி கொடுக்க சொல்லி ஹாஸ்டல் மாணவிகளை வற்புருத்தியிருக்கின்றனர். விசாரணையின் போது 'அவ அடிக்கடி பாண்டி போறவளாமே' என்பது மாணவிகளிடம் விசாரணை என்ற பெயரில் அண்ணாமலை நகர் போலீஸ் விடுத்த ஸ்டேட்மெண்டில் ஒன்று. அவள் விபச்சாரி என்ற ரீதியிலேயே "விசாரணை" நடத்தப்பட அது SMS மூலமாக மாணவர்களை சென்றடைய மாணவர்கள் கொதித்திருக்கின்றனர்.. அதன் பிறகே ஸ்ட்ரைக்கில் இறங்கியிருக்கின்றனர். போலீஸ் பேசிக்கொண்டிருக்கும்போது கல்லூரி நிர்வாகம் அங்கு வர அதுவே கல்லெறிதல் முதற்கொண்டு கலவரமாக மாறியிருக்கிறது. உடனே பல்கலைக்கழகத்துக்கு காலவரையற்ற மூடல் நடத்தியாகிவிட்டது..

"அவ பாவம் க்ளாஸ் டாப்பர்ணே, அவள போயி பிட்டு வச்சிருக்கான்னு பொய் சொல்லி சாகடிச்சிட்டான் அந்த லெக்சரரு.. ஏண்ணே அந்தாள ஒரு சஸ்பெண்டு கூட பண்ணாம வச்சிருக்காங்க"

"சஸ்பெண்டு பண்ணா காலேஜ் பேரு கெட்டு போயிருமின்னு பண்ணியிருப்பாங்கப்பா"

"எண்ணனே இது, சஸ்பெண்ட் பண்ணா, தப்பு பண்ணவங்கள கண்டிக்கிறாங்கன்னு காலேஜ் மேல நல்ல பேருதான வரும். எப்படி அது கெட்ட பேரா ஆகும்"

"அது இல்லப்பா, சஸ்பெண்ட் பண்ணா, தப்ப ஒத்துகிட்ட மாதிரி இருக்கும். அப்படின்னா அங்க அப்படித்தான் நடக்குதுன்னு செய்தியாயிரும். அடுத்த வருசம் புள்ளங்கள அங்க சேக்க பேரண்ட்ஸ் பயப்படுவாங்க. வருமானம் வராதுல்ல"

"அதுக்காக எப்படின்னே இப்படி பொய் சொல்ல முடியுது இவங்களால... அது காப்பியடிச்சதாலதான் தூக்கு மாட்டிகிச்சின்னு எல்லா பேப்பர்லயும் வருது"

"கொஞ்சம் எங்கிட்ட போன கொடு... யேய். நீ கொஞ்சம் புத்திமதி சொல்லப்பா.. நேத்தியிருந்து நியூசையே பாத்துகிட்டு இருக்கான். சோறு தண்ணி சரியா சாப்பிட மாட்றான்"

"ஆமா.. கூடவே பேசி பழகுன பொண்ணு பொக்குனு செத்து போயிட்டா... எப்படி சாதாரணமா இருக்கிறது"

"நீ ரொம்ப மனச அலபாய விடாம இருடா... தப்பு செஞ்சவங்களுக்கு கண்டிப்பா தண்டனை கெடைக்கும்.. நீ கொஞ்சம் அமைதியா இரு" - இதை சொல்லும்போது எனக்கே என் வார்த்தை மீது நம்பிக்கை இல்லை...

"ஆமாண்ணே, இந்த அண்ணாமலை நகர் போலீஸ் மாதிரி இல்லாம ஏ.எஸ்.பி எங்ககிட்ட நடந்த உண்மைய கேட்டு வாங்கி எழுதிகிட்டு போயிருக்கார். அதுதான் கொஞ்சம் நம்பிக்கையா இருக்கு... அவங்க அப்பாம்மாவுக்கு பர்னாலா கிட்ட இன்புளுயன்ஸ் இருக்கிறதா பேசிக்கிறாங்க.. பாவம் அவங்க.. அவ்ளோ தூரம் எடுத்து போக ரொம்ப செலவாகும்னு இங்கயே பொதச்சிட்டாங்க... எண்ணன்னே இது வாழ்க்கை"

ஒரு 20 வயது சிறுவன் என்ன வாழ்க்கை இது என்று கேட்டால் என்ன சொல்வது?


தினமலர் செய்தி
தினமணி செய்தி
தி ஹிந்து செய்தி


š இப்பதிவை மின்னஞ்சலிட