<body><script type="text/javascript"> function setAttributeOnload(object, attribute, val) { if(window.addEventListener) { window.addEventListener('load', function(){ object[attribute] = val; }, false); } else { window.attachEvent('onload', function(){ object[attribute] = val; }); } } </script> <div id="navbar-iframe-container"></div> <script type="text/javascript" src="https://apis.google.com/js/platform.js"></script> <script type="text/javascript"> gapi.load("gapi.iframes:gapi.iframes.style.bubble", function() { if (gapi.iframes && gapi.iframes.getContext) { gapi.iframes.getContext().openChild({ url: 'https://www.blogger.com/navbar.g?targetBlogID\x3d12213354\x26blogName\x3d%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF\x26publishMode\x3dPUBLISH_MODE_BLOGSPOT\x26navbarType\x3dBLUE\x26layoutType\x3dCLASSIC\x26searchRoot\x3dhttps://mugamoodi.blogspot.com/search\x26blogLocale\x3den_US\x26v\x3d2\x26homepageUrl\x3dhttp://mugamoodi.blogspot.com/\x26vt\x3d-7163554657587908544', where: document.getElementById("navbar-iframe-container"), id: "navbar-iframe" }); } }); </script>

முகமூடி

'சுதந்திர' இந்தியாவில் ஆஸிட் வீச்சும் ஆட்டோ ஆட்களும் மிச்சம் இருப்பதால்

 

ப.ம.க ஆட்சியில்


பச்சோந்தி மக்கள் கட்சி ஆட்சி முக்காலியில் அமரும் நாள் வெகுதொலைவில் இல்லை என்ற நிலையில் ஆட்சி அதிகார செயல்பாடு குறித்த ஆலோசனைக்குழு கூட்டம் இன்று மைலாபெரும் தோட்டத்தில் நடந்தது...


முடிவில் தொலைநோக்காளர்கள் ஆலோசனையின் படி கீழ்க்கண்ட வேலைகளுக்கான ஒப்பந்தப்படிவங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டன..

1. கைபர்போலன் கணவாய்க்கு ஓடுதளம் அமைக்கும் பணி - திட்ட மதிப்பீடு ரூ.12000 கோடி.

தமிழ்நாட்டிலிருந்து கைபர் கணவாய் வரை - இதன் துல்லியமான புவியியல் லொக்கேஷன் கண்டுபிடிக்கும் பணி திரு.கோமான் அவர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது - ஒரு ஓடுதளம்... 2 அடி அகலத்தில் ஒரு ஆள் ஓடும் அளவுக்கு ஜல்லி, சரளைக்கற்களால் தளம் அமைக்கப்பட வேண்டும். ஓடுதளத்தின் இருபக்கமும் பொதுமக்கள் நிற்கும் அளவு இடம் விடப்பட வேண்ட்ம். 10 கிமீ இடைவெளியில் கழுதை சீரமைப்பு புணர்வாழ்வு மையங்கள் அமைக்கப்படவேண்டும். பொதுமக்கள் ஏன் பிடிக்கிறோம் எதற்கு பிடிக்கிறோம் என்றே தெரியாமல் பிடிக்கும் கட்சிக்கொடிகள் விற்பனை மையங்கள் ஒவ்வொரு 30 கிமீ இடைவெளியில் அமைக்கப்படவேண்டும்...

2. இந்தியாவிற்குள் குறுக்கும் நெடுக்குமாக பல ஓடுதளங்கள் அமைக்கும் பணி - மதிப்பீடு ரூ 13000 கோடி.

சொரணை உள்ள தமிழர்கள் 50% மேல் இருக்கும் அனைத்து கிராமங்களிலிருந்தும் மற்ற அனைத்து பெரிய ஊர்களுக்கும் ஓடுதளங்கள் அமைக்கும் பணி... எதிர்காலத்தில் யார் யார் எது எதற்காக தமிழர் விரோத கருத்துக்கள் தெரிவிப்பர் என்று தெரியாததால் தொலை நோக்கோடு அனைத்து சினிமா உலக பிரமுகர்கள் பிறந்த ஊருக்கும் தளங்கள் அமைக்கப்படும்... முதற்கட்டமாக பள்ளிப்பாளையம் to பரமக்குடி, சிலுக்குவார்ப்பட்டி to சின்னமனூர், பட்டிவீரன்பட்டி to பம்பாய், கொண்டலாம்பட்டி to கொத்தவால்சாவடி ஆகியவை நிறைவேற்றப்படும். கைபர் திட்டத்தில் இருக்கும் சில்லறை வேலைகள் இங்கும்
நிறைவேற்றப்பட வேண்டும்...

இது குறித்து விளக்கம் தெரிவித்த அமைப்புச்செயலாளர் ஃபாரஸ்ட்கட்டர் தெரிவித்ததாவது ::

இந்த முக்கியமான பணிகளை செய்பவர் காசுக்கான வேலையாக நினைக்காமல் உணர்வோடு இதை ஒரு புனிதப்பணியாக செய்ய வேண்டும் என்பதால் இந்த வேலைகளுக்கு விண்ணப்பிப்பவர் தூய தமிழராக மட்டுமே இருத்தல் வேண்டும் என்பது அடிப்படை தகுதியாகிறது. எதிர்காலத்தில் தூய தமிழர் அல்லாதவர் அனைவருமே கைபர் கணவாய்க்கு ஓட ஓட விரட்டப்படுவர் என்ற காரணத்தால் தூய தமிழர் என்ற சான்றிதழ் பெறுவது தமிழ்நாட்டில் வாழும் அனைவருக்கும் அவசியமாகிறது... சில சான்றுகளுடன் சென்று இந்த சான்றிதழை எல்லா தாசில்தார் அலுவலகங்களிலும் நீங்கள் பெறலாம் என்றாலும் பொதுக்குழுவிற்கு பிடிக்காத ஜாதிகள் என்று ஏற்கனவே ஒரு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.. அதில் ஏதாவது ஒன்றில் நீங்கள் இருந்தால் குட்டிக்கரணம் போட்டாலும் உங்களுக்கு இந்த சான்றிதழ் கிடைக்காது.. மற்றவர்கள் உங்கள் family treeஐ ஆழமாக தோண்ட வேண்டும்... கல்தோன்றி மண்தோன்றா காலத்தே தமிழ்நாடு என்ற நிலப்பரப்பு உருவானபோது பரிணாம வளர்ச்சி பெற்று உருவானதாக மூன்று குரங்குகளை நாங்கள் அடையாளம் கண்டிருக்கிறோம். உங்கள் மூதாதையர் அந்த மூன்று குரங்கில் ஒன்றிலிருந்து உருவானவராக இருக்க வேண்டும்... இன்றைய உங்கள் உருவ அமைப்பு தமிழ்க்குரங்குகளோடு ஒத்துப்போனால்
உங்களுக்கு செயற்குழுவில் இடம் பெறவும் அதிர்ஷ்டம் அமையும்...

கூட்டத்துக்கு தாமதமாக வந்து சேர்ந்த சுகாதரத்துக்காக மட்டுமே மூச்சு விடும் அமைச்சர் வம்புகனியை நிருபர்கள் சூழ்ந்து அவரது எதிர்கால திட்டங்கள் குறித்து கருத்து கேட்ட போது...

முதலில் தமது தாமதத்திற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட அவர் 500 புதிய சிகரெட், பீடி, மதுபான தயாரிப்புக்கூடங்கள் திறப்புக்கான கோப்பில் கையெழுத்திட்டு வந்ததாலேயே தாமதம் என காரணம் தெரிவித்தார்... தமது எதிர்கால திட்டமாக சினிமாவில் பீடி, மது ஆகியவை உபயோகிக்கக்கூடாது என்று சட்டம் வரும் என்றார்... மேலும் சினிமாவை நெறிப்படுத்த பல தி(ச)ட்டங்கள் கைவசம் இருக்கிறது என்றும் அது ப.ம.கவில் சினிமாத்துறை அமைச்சராக இருக்கப்போகும் தகரகிச்சான் வசம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொன்னார்... அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து அதன் முடிவில் மனிதர்களுக்கு ஒவ்வாதது, நீண்ட கால பயனால் அவர்கள் உயிருக்கே உலை வைக்ககூடியது என்று தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இந்தியாவில் இன்னமும் விற்பனை செய்யப்படுவது குறித்து தினமூடி நிருபர் கேள்வி கேட்டபோது "எந்த கட்சி பத்திரிக்கைடா நீ" என்று சொல்லி கட்சிக்கு அவப்பெயர்
ஏற்படுத்த முனையும் அந்த நிருபரை "மரியாதையாக" வெளியே(ற்)றும்படி கேட்டுக்கொண்டார்.

ஆஹா, படம்னா என்னோதுதாண்டா படம், பின்னிட்டேன்ல, பிச்சிபுட்டேன்ல, இந்த நாசமத்து போன திராவிடனுங்க, தமிழன் என் படத்த பாக்காம ஆர்யர்கள் எடுக்கற படத்தை பாத்து வீணாப்போறானுங்க என்று தனக்குத்தானே பேசிக்கொண்டிருந்த வருங்கால சினிமா மந்திரி தகரகிச்சானை நிருபர்கள் அணுகியபோது, தனது வருங்கால திட்டங்களாக அவர் சொன்னது..

அ) இனி கதாநாயகிகள் அம்மா வேஷத்தில் மட்டுமே நடிக்க வேண்டும் ; அம்மா வேஷத்தில் நடிக்க விரும்பாத நடிகைகள் இனி நடிக்கவே கூடாது என சட்டம் இயற்றப்படும்
ஆ)கதாநாயகியாகளாக நடிக்க ஏற்கனவே பெண் வேஷத்தில் நடித்துள்ள பிரசாந்த், ரஜினி, சத்யராஜ், வடிவேல், கவுண்டமணி ஆகியோரையும் தத்ரூப நடிப்பிற்கு அப்பாஸ், குணால் ஆகியோரை மட்டுமே நடிக்க வைக்க வேண்டும்.
இ)இனி நாயகன் வாந்தி எடுத்தால் நாயகி அழுதுகொண்டே கையல் அதை ஏந்திக்கொள்வது, நாயகனை நாயகியின் அப்பா செருப்பால் அடித்து தெருவில் தள்ளி துப்பினாலும் வேலைக்கார சிறுமி அளவு கூட சொரணை காமிக்காமல் நாயகி அமைதியாக மனதுக்குள் அழுவது, ஆந்தை கடிச்ச ஆப்பிள் பழம் போன்ற பாடல்கள் போன்று தமிழ்ப்பண்பாடுகள் தூவப்பட்ட கதைகள் மட்டுமே தமிழ்த்திரைப்படங்களாக தயாரிக்க வேண்டும்.. படத்தின் கதைகள் முதல்கட்டமாக அமைச்சர் குழுவாலும் அடுத்த கட்டமாக பமக, அடிமை எலி கட்சிகளின் பொதுக்குழுவாலும், கடைசி கட்டமாக பமக நிறுவனர், அடிமை எலி செயலாளர் ஆகியோராலும் அப்ரூவல் செய்யப்பட்ட பிறகே படமெடுக்க அனுமதிக்கபடும் என்றும் அவர் சொன்னார்...

கூட்டத்தின் முடிவில் கட்சியினருக்கு கேப்பங்களி, சோள ரொட்டி, பனங்கள்ளு, பட்டை சாராயம், கழுதைகளுக்கு (கட்சிகாரங்கள சொல்லல, இது மிருகம்) குஷ்பு, சுகாசினி போஸ்டர்கள் என்று தடபுடலாக விருந்து நடந்தது...


கட்சி மேட்டர் 1 : ப.ம.க வின் பழைய சட்டங்கள்
கட்சி மேட்டர் 2 :
உதயம்: பச்சோந்தி மக்கள் கட்சி


š இப்பதிவை மின்னஞ்சலிட


மக்கள்ஸ் கருத்து ::


சூப்பர் முகமூடி,

உங்கள் கற்பனை வளத்துக்கு முதுகில் ஒரு ஷொட்டு!

த.நா.வில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் எங்கள் இரு கட்சிகளுக்கும் சம்மந்தம் இல்லை அது மக்களணியினரால் நடத்தப்படுகிறது என்று இவர்கள் சப்பைக்கட்டு கட்டினாலும் இவர்கள் சொல்வது 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்பதுபோல்தான். இந்தியன் எக்ஸ்ப்ரஸ், பைனான்ஷியல் எக்ஸ்ப்ரஸ் தங்குளுடைய தலையங்கங்களில் இவர்கள்தான் இதற்கு காரணம் என்று மிகத்தெளிவாக கண்டித்திருக்கிறார்கள்.

அப்படியும் அவர்களுக்கு உரைக்கவில்லையென்றால் என்ன செய்வது?
 



Muhamoodi,

FYI ..

Did u noticed that India today (Tamil version) listed your blog in its This week's website series ...

-- Vignesh
 



கிண்டல் நல்லாயிருக்கு!
 



Please change your agenda per request from your DIE-HARD fan :-))

shukriya (Delhi Tamil ;-)
 



// mugamoodi, you seem to have only one agenda. for how long you will go on mocking PMK and DPI. //

வாங்க விசிதா.. ரொம்ப நாளா ஆளக்காணோம்... என் அஜெண்டாவ விடுங்க.. சின்னப்பய புள்ள ஏதோ இணையத்துல கிறுக்கிகிட்டு இருக்கேன்... ஆனா நீங்க சொல்ற பாமக, விசி அஜெண்டா தெரிஞ்சா கொஞ்சம் சொல்லுங்க...

எனக்கு மட்டும் என்ன இவங்கள பத்தியே எழுதணுமுன்னு வேண்டுதலா.. நான் வேற ஒரு பதிவுதாங்க எழுதினேன்.. அத பதிவேத்தற முன்னாடி பாருங்க ஒரு சீனு... ரெண்டு பொம்பளைய்ங்க அடி வயத்தில இருந்து கிறீச்சிடுறாங்க போலீஸ எதிர்த்து... அவங்க கையில இஷ்டார் போட்ட கொடி இருந்திச்சா, நான் கூட சமூகத்தின் அடித்தளத்தில் இருக்காங்க பாருங்க ஒரு கோஷ்டி.. அதாங்க பேண்டு சட்டை போட்டாலே போதும் ஆபிஸருங்கன்னு எழுந்து நின்னு மரியாதை கொடுக்கிற அப்பாவி மக்கா... வீரப்பன புடிக்கிறேன்னு சொல்லி போன அரசாங்க ஆபிஸருங்க அவங்கள்ல பாதி ஆம்பளைங்கள காணடிச்சி, பொம்பளைங்கள வக்க கூடாத எடத்துல எல்லாம் கரண்டு வச்சி, பாதி பேரு பைத்தியம் ஆகி மீதி பேரு கர்ப்பம் ஆகின்னு... அந்த மக்களுக்காக கல்யாணம் கூட செஞ்சிக்காம இருக்காரே தலைவரு, அவரு சொல்லி அந்த மக்கள் அடைஞ்ச பாதிப்ப பத்தி விசாரணை கமிஷன் கொடுத்த ரிப்போர்ட்டு படி அந்த மிருகங்களுக்கு கொடுத்த பட்டா, பரிசையெல்லாம் திருப்பி வாங்கிட்டு அவங்கள ஜெயில்ல் போடுங்கடான்னு சொல்லி போராடறாங்கன்னு நினைச்சேன்...

ஆனா பாருங்க கத்துன பொமபளைங்கெல்லாம் வேற விஷயம் சொல்றாங்க... அதாவது குஸ்பாத்தாவ விசாரிக்கிற நீதிபதி பக்கத்துல போயி உக்காந்து அவங்க மேல முட்டை அடிக்கணுமாம், தெருவுல இருந்து அடிங்க, நீதிமன்றத்துக்கு உள்ளாற எல்லாம் போகக்கூடாதுன்னு தடையா இருந்து அவங்கள விலக்கி விட்டுட்டாங்கன்னு அந்த பொம்பளயாளுங்களுக்கு கோவமாம் அதான் கத்தறாங்களாம்... இந்த சீன பாத்தப்புறம் நம்ம பதிவு கெடக்கு கழுதன்னு இப்பிடி எளுதிபுட்டேன்...

அதுல பாத்தீங்கன்னா, என்னோட மொத்த பதிவுகள்ளயும் பாத்தா நம்ம வி.சிய நான் விமர்சிச்சது ஒரு 2% தான் இருக்கும்... அந்த தார் அடிச்சாங்களே அப்போ... பாமக கூட வெறும் 10%தான்... ஆனா அப்பிடி பெரிசா தோணுது.. எனக்கும் மாறணும்னுதாங்க ஆச... இந்த மாதிரி அராஜகத்தையும் ஆபாசத்தையும் நாடகமா போட்டு சமூகத்த சீரளிக்கிறவங்க மாறணும்னுதான் ஆச... பூனாவ பிறப்பிடமா கொண்ட என் நண்பன் ஒருத்தன் பம்பாயில இருந்து பீஹாரிங்கள விரட்டுனாத்தான் பம்பாய் உருப்படுமுன்னு சிவசேனா அஜெண்டாவ மட்டையடியா பேசும் போது பெரிய புடுங்கி மாதிரி பேசுன நானே எங்க எதிர்காலத்துல தமிள்நாட்டுல இருந்து தமிளர் அல்லாதவங்க எல்லாம் வெளியேறுனாத்தான் நம்ம மாநிலம் உருப்படுமுன்னு சொல்ல ஆரம்பிச்சிடுவேனோன்னு பயமா இருக்கு...

இப்ப எல்லாம் சொல்றாங்க பாருங்க, இதெல்லாம் வெறும் சில்லறை ஆர்ப்பாட்டம்... இதெல்லாம் தமிழ் மக்களின் ஒட்டு மொத்த உணர்வு கிடையாதுன்னு... அப்படித்தாங்க மொத மொதல்ல மரம் வெட்டின போதும் எல்லாரும் நினைச்சாங்க.. எல்லாம் சரியாயிடுமுன்னு... ஆனா இன்னி வரக்கும் அதுவே அவங்களுக்கு கொளுகையா ஆயிடுச்சி... நான் இல்லாம ஆட்சி அமைச்சிடுவியான்னு கட்சிங்களுக்கு சவாலு, என்னய கைது செய்யி பாக்கலாம்னு அரசாங்கத்துக்கு சவாலு, என்னய எதுத்து பேசிடுவியான்னு மத்தவங்களுக்கு சவாலுன்னு ஒரு கெத்தாத்தான் ஓடுது வாழ்க்கை.. ரொம்ப சிம்பிளாத்தான் தெரியுது சமாச்சாரம். ஆனா இது வெற்றி அடைஞ்சா எதிர்காலத்துல இதுவே பழக்கமா ஆயிரும்.. அட நம்ம பதிவர்களையே எடுத்துக்கோங்க, குஷ்பு கருத்த எதிர்க்கிறவங்க தாராளமா எதிர்க்கட்டும்ங்க... ஆனா அவங்க குஷ்புவுக்கு எதிரா மட்டும் கருத்து சொல்றாங்களே தவிர அதுக்காக 20 கோர்ட்ல கேசு, தக்காளி முட்டை எல்லாம் சரியா தப்பான்னு சொல்றாங்களா பாருங்க.. அவங்களுக்கு அப்போ மட்டும் வேற ஒரு அஜெண்டா வந்திருது... அதனால இந்த வாட்டியாவது இந்த ப்ரச்னை முடியிற வரைக்கும் நான் கொஞ்சம் பேசிக்கிறேங்க... மன்னிச்சிடுங்க...

***

குழலி பதிவில் இட்ட பின்னூட்டம் ::

ராமதாஸ் மீது எப்போதும் காழ்ப்புணர்ச்சியோடு திரியும் சிலரில் என்னையும் வைத்திருப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு நிறையவே உண்டு... நான் சென்ற முறை ஆட்சியமையும் போது சுகாதார மந்திரி பதவி கேட்டு அதை ராமதாஸ் கொடுக்காததால் வந்ததல்ல... காழ்ப்புணர்ச்சி அல்ல அது... ப்ரச்னை தீயாய் எரிந்த வடமாவட்டங்களில் வாழ்ந்தவன் நான். வன்னியர் சங்கம் தன் சுயநல அஜன்டாவான ஜாதி முன்னேற்றத்துக்காக போராடியபோது அந்த பிரதேசங்களில் வாழ்ந்தவன். பள்ளி செல்லும் போது பல முறை பஸ் கண்ணாடி உடைப்புக்களையும் அதை நிகழ்த்தியவர்களின் ஆபாசத்தையும் மிக அருகிலிருந்து நேரில கண்டவன் - அப்பொழுது நான் ஒன்பதாவது பத்தாவது வகுப்புகளில்... பஸ்ஸுக்குள் கல் பறந்து வந்த போது பெற்றோர்களுடன் சேர்ந்து பஸ் சீட்டுக்கடியில் ஒளிந்து எங்கே தன் மகன் மண்டை உடைந்து விடுமோ என்ற ஒரு தாயின் பதைபதைப்பை மிக அருகில் இருந்து கண்டவன்... பயணம் செய்த பஸ்ஸிலிருந்து இறக்கி விடப்பட்டு சற்று முன் பயணம் செய்த பஸ் எரிக்கப்பட்டதை கண்ணால் கண்டு அதிர்ச்சியில் உறைந்தவன்... அந்த மூன்று இளந்தளிர்கள் எரிந்த போது உங்களால் என்னளவிற்கு அதன் பாதிப்பை உணர்ந்திருக்க முடியாது குழலி... என் தங்கை முறையில்தான் அவர்களை என்னால் உணர முடிந்தது... நான் வாழ்க்கையில் மிகவும் கலங்கிய சில தருணங்களில் அதுவும் ஒன்று. பஸ் எரிந்த இடத்திலிருந்து 2 கி.மீல் என் வீடு... அந்த கலாச்சாரம் அங்கு மிகவும் சகஜம். பஸ் எரித்தவர்கள் அதிமுகவினராக இருந்தாலும் எரித்தவர்களில் பெரும்பாலானோர் வன்னியர் என்பதை நினைவில் கொள்க... எனக்கு வன்னிய நண்பர்கள்தான் நிறைய. அதில் ஒருவன் அரசியல் கட்சிகளின் வார்த்தை ஜாலங்களை நம்பி மிகவும் கேவலமான முறையில் வீணாய்ப்போனவன்... அவன் மகிழ்ச்சிக்காக இரண்டு முறை பாமகவுக்கு ஓட்டு போட்டவன் நான். அதன் பிராயசித்தமும்தான் இப்பொழுததய என் பாமக நிலைப்பாடு... நீங்கள் வன்னியர் தலித் என்ற அளவில் பெரிய கோட்பாட்டில் யோசிப்பவர். ஆனால் எனக்கு எந்த கவனிக்கவும் எந்த கட்சியும் பற்றி கவலையில்லை... மனிதன் பிறந்ததிலிருந்து இயற்கையாக இறக்கும் வரை அவன் வரி கட்டும் ஆளும் அரசாங்கம் அவனை பாதுகாக்க வேண்டும், அவனது அடிப்படை உரிமைகள் பாதிக்கப்படக்கூடாது என்ற எளிமையான கோட்பாடுதான் என்னுடையது... ஜாதி ஜாதி என்று சமூகத்தை பின்னுக்கு கொண்டு சென்றதில் சமீப காலங்களில் முக்கிய பங்கு வகித்தது பாமக... அராஜகத்தை அஜன்டாவாக கொண்டது.. இன்று வரை குஷ்பு விஷயத்தில் பாமக எடுக்கும் நிலைப்பாடு சரியா தவறா என்று சொல்லவில்லை நீங்கள்... ஆனால் அடுத்தவரின் சார்பு நிலையை குறித்து ஆராய்ந்து அவர்களுக்கு காழ்ப்புணர்ச்சி என்று சர்டிபிகேட் கொடுக்க முடிகிறது உங்களால்... அடுத்த எலக்சனில் பாமக கூட்டணி வகிக்கும் கட்சி வி.சிக்களுக்கு இடம் கிடையாது என்று கை விரித்தால் தனக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலிருந்து வி.சிக்கு இடம் தருவோம் என்று பாமக் சொல்லும்பட்சத்தில் சந்தோஷமடைவோம்...

அதுவரை காழ்ப்புணர்ச்சி அது இது என்றெல்லாம் சொல்லாமல், முடிந்தால் நடுநிலைமையோடு இந்த முயற்சியை செய்யப்பாருங்கள்... மாயவரத்தான் சொன்னது போல் வழக்கமான குழலி பார்வையில் அந்த பதிவை எழுதாதீர்கள் - வன்னியர் & ராமதாஸ் மாயையில் பல விபரங்கள் வெளிவராமல் போய் விடும்
 



// த.நா.வில் நடக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் எங்கள் இரு கட்சிகளுக்கும் சம்மந்தம் இல்லை அது மக்களணியினரால் நடத்தப்படுகிறது //

வாங்க ஜோசப்.. நேத்தி ராம்கி திருமா பேட்டின்னவுடனேயே இதத்தான் சொல்வாருன்னு நினைச்சேன்... இது ரொம்ப நாளக்கி முன்னாடியே செய்யப்பட்ட ரெக்கார்டட் வாய்ஸ்... வேணும்கிறப்ப டேப் ஆன் செய்யப்படும்... இதையும் பாக்கணும்னு இருக்கு... என்ன செய்யிறது..

***

விக்னேஷ், நேற்றே ரெபல்லியஸ் என்பவர் இது பற்றி குறிப்பிட்டிருந்தார். நான் இருக்கும் இடத்தில் தமிழ் இந்தியா டுடே கிடைக்காது.. ஆனாலும் விஷயத்தை கேள்விப்பட்டேன்.. தகவலுக்கும் உங்கள் அன்புக்கும் நன்றி

***

நன்றி வெளிக்கண்ட நாதர்...

***

குஷும்பன், என்ன தில்லி தமிழ் திடீர்னு... (அடப்பாவமே... அஜெண்டான்னு முடிவே கட்டிட்டீங்களா..)
 



கேவலம் இரண்டு ரூபாய் செலுத்தி தொண்டர் அடையாள அட்டை வாங்காததை காரணம் காட்டி, பொதுக்குழுவிற்கு அழைப்பிதழ் அனுப்பாத கட்சி தலைவரை எதிர்த்து போராட்டம் நடத்த சன் டிவியிடம் நேரம் கேட்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்ள புதிய பமக விழைகிறது .
 



//Please change your agenda per request from your DIE-HARD fan :-))//

//(அடப்பாவமே... அஜெண்டான்னு முடிவே கட்டிட்டீங்களா..) //

இங்கே முகமூடி என்னும் திருநாமத்தில் எழுதுபவர் எவ்வாறு விதயங்களை தன் போக்கிற்கு திரிப்பார் என்று தமிழ் கூறும் நல்லுலகு அறிந்தே இருக்கின்றது. அதற்கு உதாரணம்தான் மேலே குறிப்பிடப்பட்ட லேட்டஸ்ட் அக்மார்க் ரக திரிப்பு. அஜெண்டா என்று நான் முடிவு கட்டவில்லை. தார் பூசப்படாத எனது ஆங்கில பின்னூட்டை மறுபடி தெளிவாகப் படிக்கும்படி வேண்டிக்கொள்கின்றேன். //per request from your DIE-HARD fan :-))// என்றால் என்ன? அஜெண்டா என்று கூறியது யார் என்பது வெள்ளிடைமலை. ஆகவே ரசிகப்பெருமக்களே எனது புகழுக்கு இழுக்கு தேடும் பணியில் இனிமேலும் முகமூடி தொடர்ந்து செயல்படுவாரெனில் இதோ எம்முடைய ஆக்ஷன் பிளான்:

1.
2.
3.

இதோ நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் தர கேவலமான தமிழ் இண்டியா டுட்டோரியலில் ஸாரி டுடேயில் பிரசுரம் செய்யப்பட்ட முகமூடி தயாரா?

1.
2.
3.

அடப்பாவிங்களா அடுத்த பதிவு போட ஐடியா கொடுத்துட்டேனா?

பி.கு. இது முற்றிலும் அங்கதமான பின்னூட்டம். எவரையும் காயப்படுத்தவோ, காய்******இல்லை. ஸீரியஸான பின்னூட்டம் இல்லை. இல்லவே இல்லை.(லை லை லைலா லைலைலைலா... ஒரே ஒரு பதிவுக்காக வெச்சேன் கச்சேரி என்ற பாடலுடன் இப்பின்னூட்டத்தைப் படிக்கவும். இந்தாப் புடிங்க எமது கூற்றை நிரூபணம் செய்ய :-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)
 



அடடே மைனஸ் குத்தி ஜனநாயகத்தைக் காப்பாத்த மறந்துட்டன். இதோ ஒரு "புடிச்சுக்க குத்து" :-) அடக்கவுளே மாத்தி பிளஸ்ல குத்திப்போட்டேனே... சரி சரி அடுத்த எலீக்ஷன்ல வெச்சிக்கிறேன் கச்சேரிய...:0)
 



புதிய பமகவா? ப்ரச்னை நடக்குறப்போல்லாம் சும்மா தூங்கிபோட்டு எல்லாம் அந்தர்பல்டி அடிச்சப்புறம் சினிமா க்ளைமாக்ஸ் போலீஸ் மாதிரி கடேசி நேரத்துல வந்து பொதுக்குழு செயற்குழுன்னா இன்னாபா அர்த்தம்...

***

அடப்பாவமே // தன் போக்கிற்கு திரிப்பார் என்று // முடிவே கட்டிவிட்டீர்களா? ;-))) அது கொஞ்சம் மைன்டு ஸ்லிப்பாயிபோச்சி குஷ¤ம்பர்... தில்லி தமிழ் அர்த்தம் புரியாததால வந்த வென...

டுட்டோரியல் என்று சொல்லும் நீங்கள் வெயிலுக்கு எந்த கொடியை தூக்கி பிடிக்கிறீர்கள்... அப்பால ஸீரியஸான பின்னூட்டம்னு டிஸ்க் ளெய்மர் எல்லாம் அவசியமா என்ன? ஆருக்கு மெஸேஜு?
 



மெசேஜ் கொடுக்கிறதுக்கு நானென்ன தலீவரா (ரா.ர. மன்னிக்க :-) இல்லை தொண்டர்கள்தான் எமக்கு உண்டா?

இக்காலத்துல எதைத் திரிப்பாரென்று புரியல பாசு... அத்தான் டிஸ்கெளைமரு அக்காங் :-)
 



கட்சி வளர்ச்சிக்காக நிதி வசூலிக்க புலம் பெயர்ந்த ஐரோப்பிய தமிழிர்களை சந்திக்க வெளிநாடு சுற்று பயணத்தில் இருப்பதால் உடனுக்கு உடன் கருத்து தெரிவிக்க இயலுவதில்லை.

:-)
 



//கேவலம் இரண்டு ரூபாய் செலுத்தி தொண்டர் அடையாள அட்டை வாங்காததை காரணம் காட்டி//

அத்த விடுங்க ஆனந்த் - கட்சிக்காக உயிரையே கொடுத்துப் போரட்டம் நடத்திய, கட்சிக்காக பத்திரிக்கை தொடங்கிய மூத்த இணை துணை பொதுச் செயலாளர் எனக்கே முறையான அழைப்பு இல்லை!
 



Dear Mugamudi

Your post to Kuzhali reminded me the same. I evidenced still worser incident during our school days, one of the students threw stones at the school and teachers. It was shocking to see a 10th std kid (yes, kid) has been stirred so.
 



November 21, 2005 10:43 AM க்கு நம்ம Kusumban சொல்றது என்னன்னா:
Please change your agenda per request from your DIE-HARD fan :-))

shukriya (Delhi Tamil ;-)//

:-)))))))))))))))))))))))))))))))))))))
 



ஜெயலலிதா, குஸ்பு, சுகாசினி, பாஜக போன்றவை(!)களை ஆதரித்து திருமா, ராமதாஸ், தங்கர்பச்சான் போன்றவர்களை எதிர்க்கும் பார்ப்பனர்கள் ஹைபர்போலன் கணவாய்க்கு ஓடச்செய்வதில் தவறு ஒன்றும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. உங்கள் எழுத்து பார்ப்பன வெறியைத்தானே காட்டுகிறது? எங்கள் தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் என்ன குறை கண்டீர்?
 



ஜயா முகமூடி அவர்களே..

பல உருப்படியான(*&*&) திட்டங்களை அள்ளி விட்டுருக்கிங்க...சீரியசா நினைச்சு களத்துள குதிக்கப் போறங்க..

ஒரு சின்ன மாற்றம் உங்கள் பதிவில்...

/ஆந்தை கடிச்ச ஆப்பிள் பழம் போன்ற பாடல்கள் போன்று தமிழ்ப்பண்பாடுகள் தூவப்பட்ட கதைகள் மட்டுமே தமிழ்த்திரைப்படங்களாக தயாரிக்க வேண்டும்.. /
இந்த ஆப்பிள் பழத்திற்க்கு பதிலாக் "மாம்பழம்" போடலாமே..

நீங்கள் முகமூடி மட்டுமல்லாமல் ஒரு கெல்மெட்(அய்யோ தமிழ்ல தெரியலையே..) அணியுமாறு 'மரியாதையுடன்' கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன்(வேண்டாம் இதுக்கு வேற மாதிரி சொல்லனும்..) சொரனையுடன்..
மாயக்கூத்தன் கிருஷ்ணன்.
 



I have been reading your columns for the last few weeks and have been urging to post my comments but was unable to and I express my sincere thanks for opening this page for us!

Your write-ups have been revolutionary and a much needed one at this critical time, when gullible people are being misled by opportunistic politicians to satisfy their means and life, by using these innocent people.

Opposition for such bold writings is automatic and inevitable but I sincerely pray that you will continue to this good job knowing fully well that there are many,many righteous people behind you to support this crusade you have undertaken.

If the current trend that is happening in our state is not curbed right away, there will be no future for the people and will only pave way for these so-called-leaders taking our state for a ransom and for their 'kaattu-dharbaar'.

ungaL muyaRchikaL veRRiyadaiya vaazhththukkaL!

[p.s.: will post in thamizh next time for sure!]
 



This comment has been removed by a blog administrator.
 



//உயிரையும் அளிக்கும்//

அழிக்கும்(மாய்த்துக்கொள்ளும்) என்று இருக்க வேண்டும். தவறுக்கு மன்னிக்க.
 



கவரிமான் பரம்பரை, நடக்கும் ப்ரச்னை நீங்கள் நினைப்பது போல் ஜாதிப்பிரச்னை அல்ல... ஒரு மூன்றாம் மனிதரை ஜாதி குறிப்பிட்டு திட்ட இந்த இடத்தை நீங்கள் பயன்படுத்த முடியாமைக்கு வருந்துகிறேன்...
 



இதப்படிங்க மொதல்ல...

http://karuppupaiyan.blogspot.com/
 



கருப்பு.. நீங்கள் உங்கள் பதிவுக்கு கொடுத்த சுட்டியை பிடித்து "குஷ்பு பயோ டேட்டா" பதிவை படித்த்தும் எனக்கு தோன்றியது :: பூக்கடைக்கு கூட விளம்பரம் தரலாம் தப்பில்லை இங்கே சாக்கடைக்கு விளம்பரம் கொடுத்துவிட்டாரே ஒருவர்..

better luck next time..

உங்களுடைய மற்ற பதிவுகளை (இன்னும்) படிக்கவில்லை..
 



ஒரு தன்னிலை விளக்கம் ::

ரொம்ப நாள் காத்து வந்த விரதம் கலைத்து முதலில் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுவிட்டேன், பின்பு சிரித்துவிட்டு கடந்து போனேன், ஆனால் காமெடி அளவுக்கதிகமாக போவதை பார்க்கையில் யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்...

முதலில் ப.ம.க ஆட்சியில் எனும் இந்த பதிவுதான் வெளிவந்தது சில மணிநேரங்கள் கழித்து இந்த பதிவில் இருக்கும் ஒரு படத்தை (நன்றி விகடன்) போட்டு இன்னொரு பதிவு வேறொரு இடத்தில் வந்தது..

காமெடி என்னவெனில், பயங்கர பில்டப்போடு வந்த அவரின் அடுத்த பதிவின் பின்னூட்டங்களில், என்னவோ இந்த பதிவே நான் அவரை (+அவரின் அவரையும்) நக்கல் செய்வதற்காக எழுதியது போன்ற தொனியில் சிலர் உணர்ச்சிவசப்பட ஆரம்பித்துவிட்டனர்...

mindset.

[இந்த பின்னூட்டம் புரியாதவர்கள் டோன்ட் ஒர்ரி, புரியாததற்காக நீங்கள் சந்தோஷம்தான் படவேண்டும் ;-) ]
 



"பள்ளி செல்லும் போது பல முறை பஸ் கண்ணாடி உடைப்புக்களையும் அதை நிகழ்த்தியவர்களின் ஆபாசத்தையும் மிக அருகிலிருந்து நேரில கண்டவன்"

உடைந்த மனதிலிருந்து வந்த வார்த்தைகள். இந்த கொடுமைகள் இன்னும் பல வருடங்கள் தொடர்ந்தாலும் ஆச்சரியப்பட மாட்டேன். ஒரு வேளை ராமதாஸ் முதலமைச்சரானால் இந்த "போராட்டங்கள்" முடிவுக்கு வரலாம். ஆனால் அது இன்னும் பெரிய கொடுமையாகி விடும்.

இப்போது தான் முதல் முறையாக உங்கள் வலைத்தளத்தில் எட்டி பார்த்தேன். நன்றாக எழுதிகிறீர்கள். வாழ்த்துக்கள்.
 



Indha padhivai en "Tharudhalai Narigal" katchi saarbaaga kandikkiren.
 



குஸ்புவை வாழ்த்துவது எல்லாம் பூக்கடை, எதிர்த்து எழுதுவது எல்லாம் சாக்கடை என்று வேதத்தில் எழுதி இருக்கிறார்கள்? தெரிந்துகொள்ளலாமா முகமூடி?

உங்கள் பதிவினை பூக்கடை என்று ஐ.எஸ்.ஐ முத்திரையா வாங்கி இருக்கிறீர்கள்? யார் கொடுத்தார் தரச் சான்றிதழ் உங்களுக்கு?
 



திரு.'முகமூடி'யாரின் பளுவைக் சற்று குறைக்கலாமோ என்ற எண்னத்தில் இதை எழுதுகிறேன்!

திரு.'கருப்பு' அவர்களே! உணர்ச்சிவசப் படுகிறீர்களே!
உங்கள் எழுத்தையா அவர் 'சாக்கடை' என்று சொன்னார்?
மீண்டும் ஒரு முறை சரியாகப் படியுங்கள்; அவர் குறிப்பிட்ட 'சாக்கடை' யாரென்பது விளங்கும்.
நானும் உங்கள் 'பயோ-டேட்டா'வைப் படித்தேன்.['உங்கள்' என்றதும், உடனே மறுபடியும் உணர்ச்சி வசப்படாதீர்கள்! நீங்கள் எழுதிய 'குஷ்பூ பயோ-டேட்டா'வைத்தான் குறிப்பிடுகிறேன்!]
அந்த ஆளுக்கெல்லாம் ஒரு குறிப்பு தேவை இல்லை என்பதே என் கருத்தும்.
அதைத்தான் திரு.'முகமூடி' குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது.
உங்களுக்குப் புரியாதது ஏனோ?
'குஷ்பூ' என்ன; சென்னையின் இமாமா, இல்லை மாதர் குல மானிக்கமா?
இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக நான் எண்ணவில்லை.
ஆனால், ஒரு சுதந்திர நாட்டில் ஒருவர் ஒரு கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறதா, இல்லையா [அ] சொன்ன கருத்து பிடிக்க வில்லை எனில் அந்த எதிர்ப்பினைக் காட்டும் விதம் சரியானதா இல்லையா [அ] அந்த எதிர்ப்புகளை தூண்டி விடும் நபரின் நோக்கம் முறையானதா இல்லையா என்பதுதான் இங்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமே அன்றி, முறைகேடான வார்த்தைப் பிரயோகங்கள் செய்வது நாகரீகம் அற்றது என்பது என் தாழ்மையான கருத்து.
இதில் போய் சாதி, மதங்களை இழுத்து அதைக் கொச்சைப் படுத்துவது, அயோக்கியத்தனம் என்றே நான் கருதுகிறேன்.
சற்று தெளிவுடன் சிந்திப்பீர்கள் என நம்புகிறேன்.
நேர்மையான விவாதம் தொடரட்டும்.
நன்றி.
அன்புடன்,
எஸ்கே
 



//திரு.'முகமூடி'யாரின் பளுவைக் சற்று குறைக்கலாமோ என்ற எண்னத்தில் இதை எழுதுகிறேன்!//

நீங்கள் மட்டுமல்ல. முகமூடி அவர்களுக்கு வலு சேர்க்க ஒரு பெரிய கூட்டமே இருக்கிறது.

//திரு.'கருப்பு' அவர்களே! உணர்ச்சிவசப் படுகிறீர்களே!
உங்கள் எழுத்தையா அவர் 'சாக்கடை' என்று சொன்னார்?
மீண்டும் ஒரு முறை சரியாகப் படியுங்கள்; அவர் குறிப்பிட்ட 'சாக்கடை' யாரென்பது விளங்கும்.//

அவர் எனது வலைப்பதிவைச் சொல்லவில்லை என்றால் மன்னிக்க. அவர் குஸ்புவைத்தான் சாக்கடை என்று சொன்னால் நான் கருத்து சொல்ல விரும்பவில்லை.

//நானும் உங்கள் 'பயோ-டேட்டா'வைப் படித்தேன்.['உங்கள்' என்றதும், உடனே மறுபடியும் உணர்ச்சி வசப்படாதீர்கள்! நீங்கள் எழுதிய 'குஷ்பூ பயோ-டேட்டா'வைத்தான் குறிப்பிடுகிறேன்!]
அந்த ஆளுக்கெல்லாம் ஒரு குறிப்பு தேவை இல்லை என்பதே என் கருத்தும்.//

பயோடேட்டா குஸ்பு அளவுக்குப் போக வேண்டும் என ஒட்டுமொத்த தமிழர் இனமும் நினைத்தது இல்லை. ஆனால் அவர்கள் சார்பாகச் சொல்ல நான் ஒன்றும் சுகாசினியும் இல்லை.

//அதைத்தான் திரு.'முகமூடி' குறிப்பிடுகிறார் என்பது எனக்குப் புரிந்தது. உங்களுக்குப் புரியாதது ஏனோ?//

குஸ்புவைத்தான் சாக்கடை என்று முகமூடி சொன்னார் என்பதை சரிவரப் புரிந்து கொள்ளாத நான் சுத்த மக்கு.

//'குஷ்பூ' என்ன; சென்னையின் இமாமா, இல்லை மாதர் குல மானிக்கமா?
இதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாக நான் எண்ணவில்லை.//

அவர் இமாமாக இருக்காத பட்சத்தில்(இருந்தாலுமேகூட) தனது கற்பினைப்பற்றி மட்டுமே சொல்லி இருக்கலாம். இந்தியப் பெண்கள், அதுவும் தமிழகப் பெண்களின் கற்பு குறித்து எல்லாம் தவறாகப் பேசியது தவறுதான்.

//ஆனால், ஒரு சுதந்திர நாட்டில் ஒருவர் ஒரு கருத்தைச் சொல்ல உரிமை இருக்கிறதா, இல்லையா//


கருத்து சொல்ல உரிமை இருக்கிறது. அந்தக் கருத்து முறையாக இல்லாத பட்சத்தில் எதிர்க்கருத்து சொல்ல எல்லோருக்கும் முழு உரிமை இருக்கிறது என்பதனை நீங்கள் மறக்கக் கூடாது.

//[அ] சொன்ன கருத்து பிடிக்க வில்லை எனில் அந்த எதிர்ப்பினைக் காட்டும் விதம் சரியானதா இல்லையா//

ஒருசிலரின் எதிர்ப்புகள் முறையாக உள்ளன. ஒருசிலரின் எதிர்ப்புகள் முறையாக இல்லை என்பது உண்மை. அதற்காக குஸ்புவுக்கு ஆதரவளிக்காமல் எதிர்ப்பாளர்களைக் கண்டிக்கலாமே? அதனை ஏன் முகமூடியோ அல்லது நீங்களோ செய்யவில்லை?

//[அ] அந்த எதிர்ப்புகளை தூண்டி விடும் நபரின் நோக்கம் முறையானதா இல்லையா என்பதுதான் இங்கு விவாதத்துக்கு எடுத்துக் கொள்ள வேண்டுமே அன்றி, முறைகேடான வார்த்தைப் பிரயோகங்கள் செய்வது நாகரீகம் அற்றது என்பது என் தாழ்மையான கருத்து.//

முறைகேடாக நடந்ததை நடந்ததாக எழுதுவதில் பேசுவதில் தவறில்லை. இல்லாத ஒன்றினைச் சொல்வது நிச்சயமாக தவறு. இல்லாத ஒன்றுக்காக வெற்றுப் போராட்டம் கூச்சல் என்பதை வெறுப்பவன் நான்.

//இதில் போய் சாதி, மதங்களை இழுத்து அதைக் கொச்சைப் படுத்துவது, அயோக்கியத்தனம் என்றே நான் கருதுகிறேன்.//

இதில் நான் எங்கே சாதியை இழுத்து இருக்கிறேன் என்று தெளிவு படுத்துங்கள் முதலில். அல்லது கொச்சைப்படுத்தினேன் என்று சொல்லுங்கள். கண்களை மூடிக் கொண்டு குஸ்புவுக்கும் முகமூடிக்கும் ஆதரவு அளிக்க வேண்டாம். நன்கு படித்த பின்னர் கருத்து சொல்லுங்கள் போதும்.

//சற்று தெளிவுடன் சிந்திப்பீர்கள் என நம்புகிறேன்.
நேர்மையான விவாதம் தொடரட்டும்.//

நான் தெளிந்துதான் இருக்கிறேன். நேர்மையான விவாதத்துக்காக காத்திருக்கிறேன்.

குஸ்பு, சுகாசினி சார்பாகப் பேசுபவர்கள் கைதூக்கலாம்.
 



maRumozhi aLiththa naNbar thiru. Karuppu' avarkaLE,
Thank you for your kind reply.
Since I am not a computer expert, pl. pardon this post. I am re-producing a 'reply' in another thread as the contents are the same. I am neither a 'kushbuu' nor a 'mugamuudi' supporter but a sympathizer for the atrocities inflicted on women in general. My comments on 'caste' was not directed against you but the general trend here in some replies. Pl. read on. nanRi.
anbudan,
SK

மிகக் கண்ணியமாகவும், பொறுமையுடனும் மறுமொழி இட்ட நண்பர் திரு. '***' அவர்களே,

மிகத் திறமையாக பதில் சொல்லி இருந்த போதிலும், அதில் சில மாற்றுக் கருத்துக்கள் இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்புடன் இதனை எழுதுகிறேன்.

நீங்கள் சொல்லும் 'அறத்துடன்' எனக்கு மாறுபாடு இல்லை.

அவர்களைப் பற்றிய பேச்சும், விவாதமும் இப்போது இல்லை.

ஆனால், இவன் தான் 'வரப்போகும் கணவன்' [அ] 'மனைவி' என்னும் ஆழ்ந்த நம்பிக்கையில், உணர்ச்சி வசப்பட்டு தன் கற்பை இழக்கும் ஆண்/பெண் பற்றித்தான் இந்த கருத்துக்கள் எல்லாம் என்பதை முதல் நிலையாகக் கொண்டால், குழப்பம் இருக்காது என நம்புகிறேன்.

இந்த நிலைமை எந்த சாதியிலும் உண்டு என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

எந்தச் சாதியில் இது அதிகம் என்ற விவாதம் இங்கு தேவை இல்லாதது.

'இல்லை' என்று மறுத்தால், அது ஒரு வாதமாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, உண்மை நிலை அதுவல்ல என்பது எல்லாருக்கும் தெரியும், மனசாட்சி உள்ளவர்களுக்கு.

அந்த நிலையில் உள்ள ஆண் தப்பித்து விடுகிறான்; அவனை இந்த சமூகமும், 'வல்லவன்' எனப் பாராட்டுகிறது என்பதும் உண்மை என உங்களுக்கும் புரியும்.

அந்தப் பெண்ணின் கதி?

அவ்வளவுதானா?

ஒடுக்கி, உதாசீனப்படுத்த வேண்டியவள் தானா, அவள்?

பாதிக்கப் படுபவர் இங்கு பெண்ணாக இருக்கும் கொடுமையில் இருந்து, ........அது தவறுதான், ஆனால் தவிர்க்க முடியாமல் போன ஒரு தவறு......, நம்பியவன் இல்லாமல் கை விட்டுப் போகும் நிலைமையில் உள்ள ஒரு பெண், [நீங்கள் சொல்வது போல், காசுக்கோ, அல்லது 'சோரம்' போக வேண்டுமென்றோ இல்லாமல், தன்னை இழந்த ஒருவர்], தன் உடல் பாழ் படாமல் இருக்க, ஒரு சில மருத்துவ வழிகளைப் பயன் படுத்தலாமே என்றுதான் 'உலக எய்ட்ஸ் சங்கம்' வேண்டுகோள் விடுக்கிறது.

தனக்கு இல்லாமல் போன, தெரியாமல் போன, ஒரு வழியை, மற்றவர்களாவது கைக்கொள்ளட்டுமே என்ற ஆதங்கத்தில், ஒரு பாழ் பட்டுப் போன 'குஷ்பூ' சொன்னதாக நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?

இந்த 'விஷயங்களில்' கற்று கை தேர்ந்த ஒரு பெண்ணின் புலம்பலாக ஏன் அதை பார்க்கக் கூடாது.... அட, ....ஒரு வாதத்திற்காகவேனும்?

இனியாவது, இந்த பிரச்சினையை, குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல், சற்று விசாலமான உள்ளத்துடனும், பரிவுடனும், 'குஷ்பூ', 'சுஹாசினி' இவர்களை மறந்து விட்டு, அந்தப் பாழாய்ப்போன பெண் இனத்தை நினைத்து உங்கள் கருத்துக்கள் தொடரும் என நிச்சயமாக நம்புகிறேன்.

உங்களது கண்ணியமான, பதில் கொடுத்த நம்பிக்கையில்!

'தற்காத்து தற்கொண்டார்ப் பேணின் தகை சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்'
என்னும் வள்ளுவனின் கருத்தைப் புது கோணத்தில் பாருங்கள், உண்மை விளங்கும்!

எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் எழுதியதால் தான் அவன் இன்றும் நிற்கிறான், இமயமென!

நன்றி!

அன்புடன்,
எஸ்கே
 



//மிகக் கண்ணியமாகவும், பொறுமையுடனும் மறுமொழி இட்ட நண்பர் திரு. '***' அவர்களே,//

நன்றி நண்பரே, எனது பெயர் கருப்பு(இது வண்ணம் அல்ல, வண்ணமென்றால் கறுப்பு என வைத்திருப்பேன்)

//மிகத் திறமையாக பதில் சொல்லி இருந்த போதிலும், அதில் சில மாற்றுக் கருத்துக்கள் இருப்பதைச் சுட்டிக் காட்ட வேண்டிய பொறுப்புடன் இதனை எழுதுகிறேன்.//

கண்டிப்பாகச் சொல்லலாம். கருத்து சொல்ல அனைவருக்கும் முழு உரிமையுண்டு. ஆனால் அது மத, இன, நாடு சம்பந்தமான ப்ரச்னைகளைத் தூண்டிவிடாத வகையில் இருக்க வேண்டும்.

//நீங்கள் சொல்லும் 'அறத்துடன்' எனக்கு மாறுபாடு இல்லை.அவர்களைப் பற்றிய பேச்சும், விவாதமும் இப்போது இல்லை.//

அறமா? என்ன சொல்கிறீர்கள்? நான் எங்கே சொன்னேன் அப்படி? சுயநிலையுடன்தான் இருக்கிறீர்களா?


//ஆனால், இவன் தான் 'வரப்போகும் கணவன்' [அ] 'மனைவி' என்னும் ஆழ்ந்த நம்பிக்கையில், உணர்ச்சி வசப்பட்டு தன் கற்பை இழக்கும் ஆண்/பெண் பற்றித்தான் இந்த கருத்துக்கள் எல்லாம் என்பதை முதல் நிலையாகக் கொண்டால், குழப்பம் இருக்காது என நம்புகிறேன்.//

அந்த உணர்ச்சி வசப்படுதலைத்தான் கற்பு நிலையில் இருந்து வழுகுதல் என்கிறேன். அப்படி ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் கற்பினை இழக்கக் கூடாது.


//இந்த நிலைமை எந்த சாதியிலும் உண்டு என்பதை என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.எந்தச் சாதியில் இது அதிகம் என்ற விவாதம் இங்கு தேவை இல்லாதது.//

உண்மைதான். குறிப்பிட்ட ஜாதி என்றில்லை. எல்லா ஜாதியிலும் உள்ளது. எந்தச் சாதியாக இருந்தாலும் தங்கள் கற்பினைப் போற்றிப் பேணி காப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.


//'இல்லை' என்று மறுத்தால், அது ஒரு வாதமாக மட்டுமே இருக்க முடியுமே தவிர, உண்மை நிலை அதுவல்ல என்பது எல்லாருக்கும் தெரியும், மனசாட்சி உள்ளவர்களுக்கு.//

சரிதான்.

//அந்த நிலையில் உள்ள ஆண் தப்பித்து விடுகிறான்; அவனை இந்த சமூகமும், 'வல்லவன்' எனப் பாராட்டுகிறது என்பதும் உண்மை என உங்களுக்கும் புரியும்.//

அவனை ஏன் தப்பிக்க விடுகிறீர்கள்? பிடித்து நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கித் தர வேண்டாமா?

//அந்தப் பெண்ணின் கதி?அவ்வளவுதானா?ஒடுக்கி, உதாசீனப்படுத்த வேண்டியவள் தானா, அவள்?//

தவறு செய்வதற்கு முன்பல்லவா அவள் யோசித்து இருக்க வேண்டும்? தவறு செய்யும்போது எங்கே போனது அவள் புத்தி? பெண்புத்தி பின்புத்தி என்பார்களே? அது உண்மையா? அவ்வாறு தவறான வழியில் செல்லக் கூடாது என்று குரல் கொடுத்து அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு பாதுகாப்பாக உடலுறவு கொள் என்று ஆலோசனை கூறுவதா சிறந்தது?

//பாதிக்கப் படுபவர் இங்கு பெண்ணாக இருக்கும் கொடுமையில் இருந்து, ........அது தவறுதான், ஆனால் தவிர்க்க முடியாமல் போன ஒரு தவறு......, நம்பியவன் இல்லாமல் கை விட்டுப் போகும் நிலைமையில் உள்ள ஒரு பெண், [நீங்கள் சொல்வது போல், காசுக்கோ, அல்லது 'சோரம்' போக வேண்டுமென்றோ இல்லாமல், தன்னை இழந்த ஒருவர்], தன் உடல் பாழ் படாமல் இருக்க, ஒரு சில மருத்துவ வழிகளைப் பயன் படுத்தலாமே என்றுதான் 'உலக எய்ட்ஸ் சங்கம்' வேண்டுகோள் விடுக்கிறது.//

ஆணென்ன பெண்ணென்ன நீயென்ன நானென்ன எல்லாம் ஓரினந்தான்! இது எல்லோருக்கும் பொருந்தும். பாதிக்கப் படுமுன் அந்த அபலைப் பெண் யோசிக்க வேண்டாமா? காதலித்தான் மனதை மட்டும் கொடுக்க வேண்டியதுதானே? அவளை யார் உடம்பைக் கொடுக்கச் சொன்னது? மனதால் உண்மையுடன் காதலிக்கும் எந்த பெண்ணும் உடலுக்கு உடன்பட மாட்டாள். உண்மையாகக் காதலிக்கும் எந்த ஆணும் காதலியை உடலுறவு கொள்ள நிச்சயம் விரும்ப மாட்டான்.

//தனக்கு இல்லாமல் போன, தெரியாமல் போன, ஒரு வழியை, மற்றவர்களாவது கைக்கொள்ளட்டுமே என்ற ஆதங்கத்தில், ஒரு பாழ் பட்டுப் போன 'குஷ்பூ' சொன்னதாக நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?//

தான் கெட்டுப்போன விடயத்தை, தான் நோய் வந்து கஷ்டப்பட்ட காலத்தை நினைத்து மற்றவர்களுக்கும் குஸ்பு அறிவுரை கூற விரும்பியதில் தவறில்லை. ஆனால் அதனைச் சொன்ன விதம் தவறு. "தமிழ்ப் பெண்கள் கற்போடு இருக்கிறார்களா? படித்தவன் கற்புள்ளவளைக் கேட்கமாட்டான்!" என்றெல்லாம் பேசி இருக்க வேண்டாம் அவர்.

//இந்த 'விஷயங்களில்' கற்று கை தேர்ந்த ஒரு பெண்ணின் புலம்பலாக ஏன் அதை பார்க்கக் கூடாது.... அட, ....ஒரு வாதத்திற்காகவேனும்?//

ஒரு வாதத்திற்காக அல்ல. உண்மையில் அவர் கற்றவர். தேர்ந்தவர். தான் கெட்டதோடு போகட்டும் என்று மற்றவர்களைத் திருத்தப் பார்த்திருந்தால் தட்டலைப் பெற்றிருப்பார். தனக்கு ஒரு கண் போனால் பரவாயில்லை எதிரிக்கு இரண்டு கண்ணும் போக வேண்டும் என நினைப்பது போலத்தான் இப்போது அவர் கொடுத்த ஆலோசனைகள்.


//இனியாவது, இந்த பிரச்சினையை, குறுகிய கண்ணோட்டத்தில் பார்க்காமல், சற்று விசாலமான உள்ளத்துடனும், பரிவுடனும், 'குஷ்பூ', 'சுஹாசினி' இவர்களை மறந்து விட்டு, அந்தப் பாழாய்ப்போன பெண் இனத்தை நினைத்து உங்கள் கருத்துக்கள் தொடரும் என நிச்சயமாக நம்புகிறேன்.//

பெண் இனம் தன் வாழ்வு நெறியில் இருந்து ஒருபோதும் வழுவாமல் சிறந்து விளங்க வேண்டும். அவர்களை நான் பெண் தெய்வங்களுக்கு ஒப்பாகப் பார்க்கிறேன். பஸ்சில் ஒருவன் இடித்துச் சென்றதால் கற்பு போய் விட்டது என்று குதிக்கும் பத்தாம் பசலி அல்ல நான். அதே சமயம் வேண்டு மென்றே முழு மனதுடன் அடுத்தவருடன் உறவு கொள்பவர்களை எதிர்க்கிறேன். இதனைக்கூட கற்பு என்று முகமூடி அவர்கள் எழுதியுள்ளார்.

//உங்களது கண்ணியமான, பதில் கொடுத்த நம்பிக்கையில்!//

மறுபடியும் நன்றி.

//'தற்காத்து தற்கொண்டார்ப் பேணின் தகை சான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்'
என்னும் வள்ளுவனின் கருத்தைப் புது கோணத்தில் பாருங்கள், உண்மை விளங்கும்!

எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் எழுதியதால் தான் அவன் இன்றும் நிற்கிறான், இமயமென!//

திருவள்ளுவர் தனது குறளில் நல்லன எல்லாமும் எழுதி இருக்கிறார். எனவே குறளை தகுந்த முன் உதாரணமாகக் கொள்ளலாம். அவரே சொல்வன்மை பற்றியும் நாவடக்கம் பற்றியும் நன்கு விளக்கி இருக்கிறார்.
 



///அந்த உணர்ச்சி வசப்படுதலைத்தான் கற்பு நிலையில் இருந்து வழுகுதல் என்கிறேன். அப்படி ஒருபோதும் எந்த சூழ்நிலையிலும் கற்பினை இழக்கக் கூடாது.///

ஏன்?சாமி கண்னை குத்திவிடுமோ?

///உண்மைதான். குறிப்பிட்ட ஜாதி என்றில்லை. எல்லா ஜாதியிலும் உள்ளது. எந்தச் சாதியாக இருந்தாலும் தங்கள் கற்பினைப் போற்றிப் பேணி காப்பதில் தவறில்லை என்று நினைக்கிறேன்////

அடுத்தவன் கற்பை பற்றி நாம் கவலை கொள்ள தேவைஇல்லை என நான் நினைக்கிறேன்.


//////தவறு செய்வதற்கு முன்பல்லவா அவள் யோசித்து இருக்க வேண்டும்? தவறு செய்யும்போது எங்கே போனது அவள் புத்தி? பெண்புத்தி பின்புத்தி என்பார்களே? அது உண்மையா? அவ்வாறு தவறான வழியில் செல்லக் கூடாது என்று குரல் கொடுத்து அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும். அதை விட்டுவிட்டு பாதுகாப்பாக உடலுறவு கொள் என்று ஆலோசனை கூறுவதா சிறந்தது? //////

அது தவறே இல்லை என்பது தான் வாதமே.18 வயது பூர்த்தியானோர் இஷ்டப்படி வாழ சட்டம் அனுமதிக்கிறது.தலிபான்கள் தான் அனுமதி மறுக்கிறார்கள்.

/////மனதால் உண்மையுடன் காதலிக்கும் எந்த பெண்ணும் உடலுக்கு உடன்பட மாட்டாள். உண்மையாகக் காதலிக்கும் எந்த ஆணும் காதலியை உடலுறவு கொள்ள நிச்சயம் விரும்ப மாட்டான்.//////

சகுந்தலை துஷ்யந்தன் கதை மறந்தீரோ?சங்கப்பாடல்களில் தலைவன் தலைவி கூடிக்களிப்பது பற்றி பல பாடல்கள் உண்டு.அதை மறந்தீரோ?

/////தான் கெட்டுப்போன விடயத்தை, தான் நோய் வந்து கஷ்டப்பட்ட காலத்தை நினைத்து மற்றவர்களுக்கும் குஸ்பு அறிவுரை கூற விரும்பியதில் தவறில்லை. ஆனால் அதனைச் சொன்ன விதம் தவறு. "தமிழ்ப் பெண்கள் கற்போடு இருக்கிறார்களா? படித்தவன் கற்புள்ளவளைக் கேட்கமாட்டான்!" என்றெல்லாம் பேசி இருக்க வேண்டாம் அவர்.//////

பேசுவதற்கு முன் அனுமதி வாங்கி தான் தமிழ்நாட்டில் எதுவும் பேசவேண்டுமோ?இது தமிழ்நாடா தலிபான் நாடா?

/////பெண் இனம் தன் வாழ்வு நெறியில் இருந்து ஒருபோதும் வழுவாமல் சிறந்து விளங்க வேண்டும். அவர்களை நான் பெண் தெய்வங்களுக்கு ஒப்பாகப் பார்க்கிறேன். பஸ்சில் ஒருவன் இடித்துச் சென்றதால் கற்பு போய் விட்டது என்று குதிக்கும் பத்தாம் பசலி அல்ல நான். அதே சமயம் வேண்டு மென்றே முழு மனதுடன் அடுத்தவருடன் உறவு கொள்பவர்களை எதிர்க்கிறேன். இதனைக்கூட கற்பு என்று முகமூடி அவர்கள் எழுதியுள்ளார்.//////

பெண்னை தெய்வம் என்று சொல்லிதான் முன்பு தீயில் தள்ளினார்கள்.வேண்டாமையா இந்த தெய்வ பட்டம் எல்லாம்.
பெண் தெய்வம் அல்ல.சக மனுஷி.நம்மைபோல் ஆசாபாசம் நிரம்பிய ஒரு மனுஷி.

தனக்கு பிடித்தவரோடு ஒரு பெண் அல்லது ஆண் உறவு கொள்வதை தடை செய்ய நீங்கள் யார்?

////திருவள்ளுவர் தனது குறளில் நல்லன எல்லாமும் எழுதி இருக்கிறார். எனவே குறளை தகுந்த முன் உதாரணமாகக் கொள்ளலாம். அவரே சொல்வன்மை பற்றியும் நாவடக்கம் பற்றியும் நன்கு விளக்கி இருக்கிறார்./////

புலால் மறுத்தல் பற்றி கூட எழுதி இருக்கிறார்.கடைபிடிப்பீரோ?
 



தமிழ்கலாச்சார பாதுகாவலர்களுக்கும்,பெண்மான காவலர்களுக்கும்,இரு பெண்களை எதிர்த்து செருப்பு,துடைப்பக்கட்டை போன்ற ஆயுதங்களை ஏந்தி வீரப்போர் புரியும் மாவீரர் படைகளுக்கும் என் கண்டனம்.

பெண்களுக்கு எதிராக போர்புரியும் உன்னை கண்டால் புறநானூற்று தமிழன் வெட்கத்தால் தற்கொலை செய்துகொள்வான்.நீயா தமிழன்?இல்லை நீ தலிபான்.

தமிழனை மணந்து தமிழ் குழந்தைகளை பெற்ற ஒரு தாயை தமிழச்சி அல்ல என்று சொல்லும் தமிழக தலிபான்களை கண்டிக்கிறேன்.

பரமக்குடியில் பிறந்த தமிழச்சியை கைபர் கணவாய்க்கு ஓடசொல்லும் தமிழக ஒசாமா பின் லாடன்களை,தமிழக வட்டாள் நாகராஜ்களை வன்மையாக கண்டிக்கிறேன்

குஷ்பு தமிழ் நாட்டின் மருமகள்.சுகாசினி தமிழ்மகள்.2 பெண்களுக்கு எதிராக உலகப்போர் தொடுத்திருக்கும் மாவீரர் கூட்டமே.நீ ஒடு தமிழ்நாட்டை விட்டு.

ஆப்கனிஸ்தானுக்கு ஓட வேண்டியவன் நீ தான்.தலிபான் ராஜியத்தின் முழுமுதல் பிரஜையாகும் தகுதி உனக்குதான் இருக்கிறது.

பெண்தொடைகளின் நடுவே கலாச்சாரம் உள்ளது என நம்பும் தலிபானே ஓடிப்போ தமிழ்நாட்டை விட்டு.ஓடிப்போ தலிபான் நாட்டுக்கு
 



//ஏன்?சாமி கண்னை குத்திவிடுமோ?//

சரி உங்கள் வாதம்படி பார்த்தால் கண்ணை சாமி குத்தாது என்பதற்காக உன் தாய், மனைவி, மக்களை ஊராரிடம் கூட்டிக்கொடுப்பேன் என்கிறீர்களா?

//அடுத்தவன் கற்பை பற்றி நாம் கவலை கொள்ள தேவைஇல்லை என நான் நினைக்கிறேன்.//

குஸ்பு அடுத்தவருக்குத்தானே ஆஅலோசனை கூறினார்?


//அது தவறே இல்லை என்பது தான் வாதமே.18 வயது பூர்த்தியானோர் இஷ்டப்படி வாழ சட்டம் அனுமதிக்கிறது. தலிபான்கள் தான் அனுமதி மறுக்கிறார்கள்.//

18 வயதில் ஒருவர் தன் இஸ்டப்படி வாழலாம், உடலுறவு கொள்ள்ளலாம் என்றால் சட்டங்கள்ள் எதாற்கு? பள்ளி எதற்கு? அப்பா, அம்மா எட்தற்Kஉ? சுதந்திரமாக உடைகூட உடுத்தாமல் கண்ட இடங்களில் உடலுறவு கொள்ளலாமே மிருகங்களைப் போல???!!!

//சகுந்தலை துஷ்யந்தன் கதை மறந்தீரோ? சங்கப்பாடல்களில் தலைவன் தலைவி கூடிக்களிப்பது பற்றி பல பாடல்கள் உண்டு.அதை மறந்தீரோ?//

தலைவன் தனது தலைவியுடன்தான் கூடிக் களித்தான்!!! கல்யாணத்துக்கு முந்தைய கள்ள உறவில் அல்ல என்பதை அறியவும்.


//பேசுவதற்கு முன் அனுமதி வாங்கி தான் தமிழ்நாட்டில் எதுவும் பேசவேண்டுமோ?இது தமிழ்நாடா தலிபான் நாடா?//

பேசுவதற்கு முன் அனுமதி தேவை இல்லை. ஆனால் நாவை அடக்கிப் பேச வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் மக்கள் பொங்கி எழுவர். பின் இப்போது குசுப்பு அலைவதுபோல கோர்ட்டு கோர்ட்டாக அலைய நேரிடும்.

//பெண்னை தெய்வம் என்று சொல்லிதான் முன்பு தீயில் தள்ளினார்கள்.வேண்டாமையா இந்த தெய்வ பட்டம் எல்லாம்.
பெண் தெய்வம் அல்ல.சக மனுஷி.நம்மைபோல் ஆசாபாசம் நிரம்பிய ஒரு மனுஷி.//

சக மனுஷி என்பதற்காக அவர்களை கண்டவர்களிடம் போகச் சொல்கிறீர்கள், அதுவும் பாதுகாப்பு கவசம் அணிந்து!!! குசுப்பு, சுகாசினி போன்ற உங்கள் மூத்தவர்கள் சொல்படி நீங்களும் நடக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தாருக்கு தெரியுமா நீங்கள் பேசுவது?

//தனக்கு பிடித்தவரோடு ஒரு பெண் அல்லது ஆண் உறவு கொள்வதை தடை செய்ய நீங்கள் யார்?//

உங்கள் வயது வந்த தங்கை தனது காதலருடன் திருமணத்துக்கு முன் உறவுகொள்ள நீங்கள் அனுமதிப்பீர்களா? ஆமாம் என்று நீங்கள் சொன்னால் நான் ப்பதில் தருகிறேன்!

//புலால் மறுத்தல் பற்றி கூட எழுதி இருக்கிறார்.கடைபிடிப்பீரோ?//

இப்போது நான் சுத்த சிவம்தான்!!!


//தமிழ்கலாச்சார பாதுகாவலர்களுக்கும்,பெண்மான காவலர்களுக்கும்,இரு பெண்களை எதிர்த்து செருப்பு,துடைப்பக்கட்டை போன்ற ஆயுதங்களை ஏந்தி வீரப்போர் புரியும் மாவீரர் படைகளுக்கும் என் கண்டனம்.//

இதாருங்க புதுப்புலி? வாங்க, வாங்க எந்தூரு உங்களுக்கு?

///பெண்களுக்கு எதிராக போர்புரியும் உன்னை கண்டால் புறநானூற்று தமிழன் வெட்கத்தால் தற்கொலை செய்துகொள்வான்.நீயா தமிழன்?இல்லை நீ தலிபான்.//

புறநானூறா? ஏன் அகநானூற்றுத் தமிழன் எல்லாம் தீண்டத் தகாதவனா? கலைஞர் மாதிரி பேசுறதா நெனைப்பு...???

//தமிழனை மணந்து தமிழ் குழந்தைகளை பெற்ற ஒரு தாயை தமிழச்சி அல்ல என்று சொல்லும் தமிழக தலிபான்களை கண்டிக்கிறேன்.//

சோனியாவை எப்படி இத்தாலியப் பெண் என்று உங்கள் கோஷ்டியினர் கானம் பாடினாஅர்கள் என நான் அறிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

//பரமக்குடியில் பிறந்த தமிழச்சியை கைபர் கணவாய்க்கு ஓடசொல்லும் தமிழக ஒசாமா பின் லாடன்களை,தமிழக வட்டாள் நாகராஜ்களை வன்மையாக கண்டிக்கிறேன்//

பரமக்குடியில் பிறந்தவள் இன்னும் நிறைய கிழிப்பாள் என்று அறிந்து உள்ளம் உவகை பூரிக்கிறது!!!

//குஷ்பு தமிழ் நாட்டின் மருமகள். சுகாசினி தமிழ்மகள்.2 பெண்களுக்கு எதிராக உலகப்போர் தொடுத்திருக்கும் மாவீரர் கூட்டமே.நீ ஒடு தமிழ்நாட்டை விட்டு.//

திருமாவின் மனைவியும் தமிழ்நாட்டு மருமகள். திருமாவும் தமிழ்நாட்டவர். என்னவே ஓடச்சொல்ல உமக்கு அதிகாரமில்லை. உலகப்போர் என்று நீங்கள் புரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி.

//ஆப்கனிஸ்தானுக்கு ஓட வேண்டியவன் நீ தான். தலிபான் ராஜியத்தின் முழுமுதல் பிரஜையாகும் தகுதி உனக்குதான் இருக்கிறது.//

ஆப்கானிற்கு போக வேண்டியவர்கள் நீங்களும் உங்கள் குடும்பமும். அங்குதான் கல்யாணம் செய்து கொள்ளாமல் உடலுறவு கொள்ள பெண்கள் நிறைய தேவைப்படுகிறார்கள் அமெரிக்க படைகளுக்கு!!!

//பெண்தொடைகளின் நடுவே கலாச்சாரம் உள்ளது என நம்பும் தலிபானே ஓடிப்போ தமிழ்நாட்டை விட்டு.ஓடிப்போ தலிபான் நாட்டுக்கு//

பெண்ணின் தொடை நட்டுவில் கற்பும் கலாச்சாராமும் இல்லை என்றால் உனது தாயை, சகோதரிகளை, மனைவியை, பாட்டியை அம்மணமாக தெருவில் நடக்கச்ச் சொல். கல்யாணம் ஆவ்வதற்கு முன்பென்றாலும் கல்யாணம் பின்பென்றாலும் உடலுறவு கொள்ள நிறைய இளையர்கள் காத்திருக்கிறார்கள்!!!

வத்தலாவது தொத்தலாவது பொத்தலே பிரதானம்!!!
 



///சரி உங்கள் வாதம்படி பார்த்தால் கண்ணை சாமி குத்தாது என்பதற்காக உன் தாய், மனைவி, மக்களை ஊராரிடம் கூட்டிக்கொடுப்பேன் என்கிறீர்களா?//

இதுதான் நீங்கள் வாதிடும் முறை என்றால்,உங்களை நினைத்து நான் பரிதாபப்படுகின்றேன்.

எனது கேள்விகள் அப்படியே இருக்கின்றன.பதில் ஏதுமிருந்தால் நாகரிகமான முறையில் அளியுங்கள்.கருத்துக்கு வசவு தான் பதில் என்றால் உங்களிடம் எந்த பதிலும் இல்லையென்று அர்த்தம்.
 



//இதுதான் நீங்கள் வாதிடும் முறை என்றால்,உங்களை நினைத்து நான் பரிதாபப்படுகின்றேன்.//

நீங்கள் திருமணத்துக்கு முன்பு உடலுறவு கொள்ள ஆசைப்படுகிறீர்காள். எனவே உங்கள் வீட்டுப் பெண்கள் சுதந்திரமாக உடலுறவு கொள்ள சர்வ நிச்சயமாக அனுமதி உண்டு. அவர்கள் உங்களின் அனுமதி கேட்டு கல்யாணம் செய்வதற்கு முன் உறவு கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. அதனை முன் வைத்தே பதில் கொடுத்தேன். இதில் என்ன தவறு கண்டீர்? உங்களுக்கு ஒரு கருத்தினில் நம்பிக்கை உண்டு என்றால் நீங்கள் அதனை செயல்படுத்து கிறீர்கள் என்றுதானே அர்த்தம். என்ன வேடிக்கை இது?

//எனது கேள்விகள் அப்படியே இருக்கின்றன.பதில் ஏதுமிருந்தால் நாகரிகமான முறையில் அளியுங்கள்.கருத்துக்கு வசவு தான் பதில் என்றால் உங்களிடம் எந்த பதிலும் இல்லையென்று அர்த்தம்.//

உங்கள் எல்லா கேள்விக்கும் பதில் அளித்து இருக்கிறேன். ஒருவேளை நான் பதில் தராத கேள்வி இருந்தால் தயவு செய்து மீண்டும் ஒருமுறை கேட்கவும். நாகரீகமாகத்தான் பதில் எழுதுகிறேன். உங்கள் வீட்டுப் பெண்களை திருமணத்துக்குமுன் உடலுறவு கொள்ள அனுமதிப்பீர்களா என்பது எனது கேள்வியாக இருந்தது. அதில் என்ன வசவு கண்டீர்கள்? ஒரு கருத்தினை உங்களுக்குப் பிடிக்கிறது என்றால் செயல்படுத்துகிறீர்கள் என்றுதானே அர்த்தம்?
 



//18 வயது நிரம்பியவர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் உறவு கொள்ள சட்டம் அனுமதிக்கிறது.உங்கள் வீட்டு பெண்களுக்கும் அதே சட்டம்தான்.என் வீட்டு பெண்களுக்கும் அதே சட்டம் தான்.அந்த சட்டத்தை நீங்களும் தான் மதிக்க வேண்டும்,நானும் தான் மதிக்க வேண்டும்.//

அல்ல அல்ல. எங்கள் வீட்டுப் பெண்களுக்கு(ஆண்களுக்கும்)) வயது ஐம்பதே னாலும் கல்யாணத்துக்கு முன் உடலுறவு கொள்ள நிச்சயம் அனுமதி கிடையாது. அந்த அளவுக்கு அவர்களை நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்த்து இருக்கிறோம். இது எழுதப்படாத சட்டம். இதனை மீறி ஏதேனும் நடந்தால் வெட்டிப் பொலி போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாய் கணக்கு எழுத தயங்க மாட்டோம். கற்பு எங்களுக்கு உயிரினும் மேலானது.

//சட்டப்படி பெண்களுக்கு அந்த உரிமை உண்டு என்று சொன்னால் என் மீது பாய்ந்தால் நான் என்ன செய்ய முடியும்?அம்பேத்கர் 1950'ல் எழுதிய அரசியல் சட்டத்திலேயே அந்த உரிமையை ஆணுக்கும் பெண்ணுக்கும் அளித்துள்ளார்.இந்தியாவில் உள்ள 18 வயது தாண்டிய அனைத்து பெண்களுக்கும் அந்த உரிமை உண்டு.உங்கள் வீட்டு பெண்களுக்கும் உண்டு,என் வீட்டு பெண்களுக்கும் உண்டு.//

அம்பேத்கர் தனது எத்தனையாவது ஷரத்தில் பெண்கள் கல்யாணத்துக்குன் உறைபோட்டு எல்லோருடனும் உறவு கொள்ள வேண்டும் என எழுதி இருக்க்கிறார் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஆனாலும் ஒரு நல்ல குடும்பத் தலைவன் தனது மகள் கல்யாணத்துக்கு முன் உடலுறவு கொள்வதை விரும்ப மாட்டான், ஒரு நல்ல தாய் விரும்ப மாட்டாள். ஒரு நல்ல சகோதரன் விரும்பமாட்டான். இதற்கு அம்பேத்கர் வந்துதான் சட்டம் போட வேண்டுமென்றில்லை. ஒவ்வொருவருக்கும் சுய கட்டுப்பாடும் பெற்றோர் சொல்படி கேட்டு நடத்தலுமே போதும். கற்புகண்டிப்பாக பேணப்பட வேண்டும்.

//அடுத்தவருடன் உடலுறவு கொள்ள உங்கள் வீட்டு பெண்ணோ அல்லது என் வீட்டு பெண்ணோ விரும்பினால் நம்மிடம் அனுமதி கடிதம் கேட்டு வரப்போவதில்லை.ஆகையால் நான் அனுமதிக்கிறேன்,நீங்கள் அனுமதிக்கவில்லை என்ற பேச்சுக்கள் எழ எந்த முகாந்திரமும் இல்லை.//

வளர்ப்புநிலை சரியாக இருந்தால் எந்த பெண்ணும் கெடமாட்டாள் என்பது தெரியும்தானே. இளையர்களிடம் ஒரு நண்பரைப்போலப் பழகினால் நிச்சயம் அவர்கள் தன் காதலைச் சொல்வார்கள். அப்போது நம் குலப் பெருமையை எடுத்துச் சொல்லி கற்பின் மாண்பினைச் சொல்லி அவர்கள் காதலை ஏற்று கல்யாணம்வரை பொறுக்குமாறு அறிவுரை சொன்னால் நிச்சயம் காத்திருப்பார்கள். இது உங்கள் வீட்டுப் பெண்களுக்கும் பொருந்தும். அவ்வாறில்லாமல் கண்டுகொள்ளாமல் விட்டால் வயிற்றில் வாங்கி வந்து நிற்கும். காதலென்று சொல்லி போட்டவன் நிச்சயம் கம்பு நீட்டி இருப்பான்!

//அப்படி விரும்பும் பெண்ணை நாம் பலவந்தமாக தடுத்து நிறுத்தி என்ன செய்ய போகிறோம்?'போகாதே" என்று புத்தி வேண்டுமானால் சொல்லலாம்."இல்லை,போவேன்" என்று சொன்னால் என்ன செய்ய முடியும்?"//

நல்ல விதத்தில் வளர்க்கப் பட்ட பெண் நிச்சயம் அப்படி ஒரு காரியம் செய்ய மாட்டாள். ஒருவேளை அப்படி செய்தால் நான்முன்பே சொன்னபடி அனுபவித்து ஆகவேண்டும் தன் பிறவிப் பயனை.

//என் வீட்டு பெண் அடுத்தவனுடன் உடலுறவு கொள்ள விரும்பினாள்,நான் அரிவாளை காட்டி தடுத்துவிட்டேன்" என்பது பெருமைபட்டுகொள்ளும் விஷயமா என்ன?//

வளர்ப்பும் அறிவுரைகளும் இளைஞர்களுக்கு மிக முக்கியம். எனவே நல்ல சூழ்நிலையில் வளர்ந்த பெண்ணுக்கு அரிவாள் தேவையில்லை. ஒருவேளை கல்யாணத்துக்குமுன் "அந்த" சுவை வேண்டும் என ஒரு இளம்பெண் கேட்டாள் அவலை வெட்டுவதில் தவறில்லை.

//18 வயது தாண்டி அடுத்தவனுடன் போகிறவளை தடுத்துநிறுத்த சட்டப்படி எந்த தகப்பனுக்கும்,அண்ணனுக்கும் உரிமை இல்லை."அரிவாளை எடுத்து வெட்டுவேன்" என்று வீரவசனம் வேண்டுமானால் பேசலாம்.ஆனால் அது சட்டப்படி செல்லுபடியாகாத விஷயம்.சட்டவிரோதம்.உணர்ச்சிபூர்வமாக கொதித்து எழலாம்,அதற்கான விலையை சிறையில் தர தயாராக இருந்தால்.//

இதற்கும் முன்பே நான் பதில் கொடுத்து இருக்கிறேன். ஆயிரம் அம்பேத்ஹ்கர் சட்டம் எழுதுவதற்கு முன் ஒரு தந்தை ஸ்தானத்தில், தமையன் ஸ்தானத்தில் இருந்து யோசித்துப் பாருங்கள். உங்கள் பெண், உங்கள் சகோதரி கல்யாணத்துக்குமுன் இத்தவறைச் செய்தால் என்ன செய்வீர்? நீங்கள் பரவாயில்லை சொல்லலாம். நான் எமசாட்சிக்கு விரோதமாக எதுவும் செய்ய மாட்டேன். என் தீர்ப்பு வெட்டு ஒன்று துண்டு ரெண்டுதான். மானம் எங்களுக்கு மிகவும் முக்கியமானாது. உமக்கு முக்கியம் இல்லை என்றால் நான் அதற்கு ஒன்றும் செய்ய முடியாது.

//ஆக இதில் நீங்கள் கோபமடைந்து பேச என்ன இருக்கிறது என்று தெரியவில்லை.இந்தியாவில் உள்ள அனைத்து பெண்களுக்கும் ஒரே சட்டம் எனும்போது நமது அனுமதிக்கு இதில் எந்த முகாந்திரமும் இல்லை.//

கற்பு என்பது எல்லோருக்கும் முக்கியமானது. கற்பு நிலையில் இருந்து விலகியபிந்தானே எய்ட்ஸ் என்ற கொடிய நோய்கள்? அதற்குமுன் வந்ததா? உங்களின் 15 வயதில் எய்ட்ஸ் பற்றிக் கேள்விப் பட்டு இருக்கிறீர்களா? நான் பட்டதில்லை. இப்போது எய்ட்ஸ் இந்த அளவுக்கு வியாபித்திருக்க இந்த கற்புநிலை மிக முக்கியம் என்று கருதுகிறேன். இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகள் அனைத்திற்கும் கற்புநிலை பொது.

//ஒரு கருத்து எனக்கு பிடிக்கிறது என்பதற்க்கும் அனுமதிக்கிறேன் என்பதற்க்கும் பல்லாயிரம் வித்தியாசம் உண்டு.//

ஆக பெண்கள் கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்வது பிடித்திருக்கிறது. ஆனால் உங்கள் குடும்பத்தினர் அவ்வாறு செய்தால் பிடிக்கவில்லை என்பதுதானே அய்யா உங்கள் கருத்தின் முழு விளக்கம். ஊருக்குத்தான் உபதேசமா?

//எனக்கு லல்லுபிரசாத் பிடிக்காது.அதற்காக ஜனநாயக முறையில் அவர் பீகாரில் தேர்ந்தெடுக்கபட்டால் நான் அதைதடை செய்ய முடியாது.//


ஒட்டுமொத்த உலகமுமே கல்யாணத்துக்கு முந்தைய உடலுறவை ஆதரித்தாலும்கூட எனது முடிவில் மாற்றமில்லை. கற்புநிலையில் இருந்து வழுகுதல் மனிதனுக்கு அழகல்ல.

//எனது சகோதரி ஜாதிவிட்டு ஜாதி மாறி திருமணம் செய்தால் எனக்கு பிடிக்காது என்று வைத்துகொள்ளுங்கள்,அதை எனக்குபிடிக்காது என்றபோதிலும் நான் அனுமதி கொடுத்துதான் தீரவேண்டும்,அல்லது எக்கேடோ கெட்டு போ என்று ஒதுங்கி நிற்க வேண்டும்.//

ஜாதி பிடிக்கவில்லை என்றால் ஏன் பிடிக்கவில்லை, அதனால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன என்பதை அந்த சிறிசுகளுக்கு நல்ல முறையில் எடுத்துச் சொல்லி திருத்த வேண்டும். ஒரே ஜாதி என்றாலும்கூட 15 வயதில் செய்து கொள்ளலாமா? அவர்களைக் கூப்பிட்டு படிப்பு இந்த வயதில் முக்கியம் என்று சொல்லி வேலை கிடைத்தபின் செய்துகொள்ளலாம், அது வரைக்கும் நன்றாகப்படி என்ற அறிவுரை சொல்லி திருத்தப் பார்க்கனும். அதனை விடுத்து உங்கள் கூற்றுபடி நடந்தால் குடும்ப மானம் கப்பல்தான் ஏறும்.

//நமது வீட்டுபெண் அடுத்தவனுடன் குஷ்பு சொன்னபடி போனால் சட்டப்படி நாம் எடுக்கவேண்டிய வழிமுறைகள் 3 தான்.

புத்திசொல்லி கேட்கவில்லையென்றால்

1.கண்டுகொள்ளாமல் இருப்பது.//


மானமுள்ள எந்த தமிழனும் செய்யமாட்டான். வெட்டிப் பொலி போடுபவன் எவ்வளவோ தேவலாம். உப்பு போட்டு சோறு தின்றவன் ஒருபோதும் சம்மதியான்!

//2.தலைமுழுகுவது.//

தலைமுழுகினால் நாளைக்கு இன்னொருவன், அதன்பின் அடுத்தவன், குடும்ப மானம் கப்பலேறும், விமானமும்! எனவே பொலி போடுவதே சிறந்த வழி.

//3.பாதுகாப்பாகவாவது இரு என்று புத்திசொல்வது//

இதனைத்தான் குஸ்பு சொன்னார். இங்கு பல ப்ராமன அன்பர்களும் அதனைத்தான் சொல்கிறார்கள். அதனைத்தான் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். தன் மகள் கல்யாணத்துக்குமுன் அடிக்கடி உடலுறவு இன்னொருவனுடன் கொள்கிறாள் என்று தெரிந்த எந்த ஆண்மகனும் பாதுகாப்பா இரு என்று சொன்னான் ஆனால் அவன் பிணத்திற்கு ஒப்பானவன்! சத்தியமாகச் சொல்கிறேன் நான்.

//3வது வழிமுறையை ஒரு தகப்பனோ அண்ணனோ சொல்வது நமது கலச்சாரத்தில் ஒத்துவராது.அதற்கு தான் அரசாங்கமே செக்ஸ் கல்வி என்று வைத்துள்ளது.//

செக்ஸ் கல்வி என்பது காமம் பற்றி சந்தேகம், உடலுறுப்புகள், கற்பின் மாண்பு பற்றி சொல்லிக் கொடுக்கவே தவிர கல்யாணத்துக்குமுன்பு உறைபோட்டு பாதுகாப்பாக உடலுறவு கொள்ளச் சொல்ல அல்ல!

//3வது வழிமுறை தவறு என்று நீங்கள் சொல்லலாம்.ஆனால் நகரத்தில் இன்று நடப்பது அதுதான். டேட்டிங்க்,வாலண்டைன் கலாச்சாரம் இந்தியாவில் புகுந்துவிட்டது.அது அதிகரிக்குமே தவிர குறையாது.//

விபசாரத்திற்கு ஆங்கிலத்தில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஆங்கில வார்த்தை டேட்டிங். அதனை மானமுள்ள எந்த தமிழனும் ஒப்புக் கொள்ள மாட்டான். நகரங்களில்கூட டிஸ்கொத்தே, பாப் செல்லும் கல்லூரி மாணவிகள் தங்கள் நண்பருடன் தண்ணி அடிக்க சிகரெட் குடிக்கச் செல்வதாக பெற்றோரிடம் அனுமதி கேட்பதில்லை. கம்பைன் ஸ்டடி என்ற பொய் வார்த்தை அங்கே அவர்களுக்கு அனுமதி வாங்கித் தருகிறது. ஒரு நல்ல பெற்றோர் தன் குழந்தைகள் என்ன செய்கின்றனர் என்பதை அனுதினமும் கண்காணிப்பான். அவர்கள் செய்யும் தவறுகளை முளையிலேயே கிள்ளி எறிவான். அப்படி இல்லாமல் டேட்டிங் என்று சொல்லி வெளியில் போனால் ஏகப்பட்ட டாக்டர் பிரகாஷ்கள் தோன்றுவார்கள். நீலப்படத்தில் நடித்த பெருமை உண்டாகும். எய்ட்ஸ் எனும் கொடிய நோய் இலவசமாகக் கிடைக்கும். குடும்ப மானம் கப்பலேறும். அம்மா, அப்பா தூக்கில் தொங்குவர். அனராகுப்தா என்ற காஷ்மீர் அழகியின் கதை தெரியும்தானே?


//கண்டுகொள்ளாமல் இருக்க நகர தகப்பன்கள் பழகிவிட்டனர்.மும்பையில்,பெங்களூரில் அது சர்வசாதாரணம்.சென்னைக்கு ஓரளவு பழக்கம் ஆகிவிட்டது.//

இதனைத்தான் நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். குழந்தைகளோடு நண்பர்களாகப் பழகி தக்க அறிவுரைகள் கூறி அவர்களை நல்வழிப் படுத்த வேண்டும். அப்படி இன்றி உறையில் நாலு கொடுத்து காலையில் ஒன்னு யூஸ் பன்னிக்க, மத்தியானம் ஒன்ன்னு, சாயங்காலம் ஒன்னு, நைட்டுக்கு ஒன்னு என்று சொல்லி அனுப்புபவன் அப்பன் அல்லன், அவன் மாமா!!!

//சமூகம் மாறிவிட்டது நண்பரே.அதை நாம் விரும்பினாலும் இனி ஒன்றும் செய்ய முடியாது.//

முடியாது என்பது முட்டாள்களின் முதல் வார்த்தை. எறும்பூற கல்லும் தேயும். அடிமேல் அடி அடிக்க மலையும் நகரும். வாருங்கள் கைகொடுங்கள். ஒன்றாய் இணைவோம். கற்பின் மாண்புதனை இக்கால இளையருக்கு பிஞ்சு முதல் போதிப்போம். ஒருவனுக்கு ஒருத்தி என்ற உயர்ந்த பண்பினை பாலர் பள்ளியில் இருந்தே மீண்டும் ஆரம்பிப்போம். எய்ட்ஸ் எனும் கொடிய அரக்கனை விறட்டி ஒழிப்போம்.

ஜெய்ஹிந்த்!
 



"அல்ல அல்ல. எங்கள் வீட்டுப் பெண்களுக்கு(ஆண்களுக்கும்)) வயது ஐம்பதே ஆனாலும் கல்யாணத்துக்கு முன் உடலுறவு கொள்ள நிச்சயம் அனுமதி கிடையாது. அந்த அளவுக்கு அவர்களை நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்த்து இருக்கிறோம். இது எழுதப்படாத சட்டம். இதனை மீறி ஏதேனும் நடந்தால் வெட்டிப் பொலி போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாய் கணக்கு எழுத தயங்க மாட்டோம். கற்பு எங்களுக்கு உயிரினும் மேலானது."

அப்படீங்கறீங்க? இம்முறையில் எத்தனை மகன்கள் தங்கள் தந்தை மற்றும் தமையனால் கொல்லப்பட்டனர் என்று கூற முடியுமா? அவனுக்கென்ன ஆம்பிளை, இப்படி அப்படியென்றுதான் இருப்பான், கால்கட்டு போட்டால் சரியாகிவிடும் என்றுதானே சாதாரணமாகப் பேசுகிறார்கள்?

அதிலும் வெட்டிப் போட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டதாக எழுதி விடுவதா? சொந்த உயிர் மேல் ஆசைதானே அது? இன்னொரு உயிரைக் கொன்றதற்கு மனத்திண்மையுடன் தண்டனையை ஏற்பதுதானே முறை? அப்படி செய்யாதவனை அவன் பெண் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன வகையைச் சேர்ந்தது?

ஐம்பது வயசு வரை கல்யாணம் கட்டிக்கொடுக்கத் துப்பில்லாத தகப்பனெல்லாம் பெண் உடல் இச்சையைத் தணித்துக் கொண்டால் மட்டும் அரிவாளை தூக்குவது என்ன நியாயம்? ஆனால் அவன் மட்டும் ஊரெல்லாம் தொடுப்பு வைத்துக் கொள்வான். என்ன போங்கு இது?

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



நண்பரே

1. 18 வயது AGE OF CONSENT என்று சட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.அம்பெத்கார் எழுதிய அரசியல் சட்டம் 18 வயது தாண்டிய அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் அந்த உரிமையை வழங்குகிறது.அந்த சட்டத்தை என்ன செய்யலாம் என்று சொல்கிறீர்கள்?

2.சட்டம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.நான் வெட்டுவேன் என்று நீங்கள் சொன்னால் உங்கள் வீட்டுக்கு ஒரு நியாயம் ஊரானுக்கு ஒரு நியாயம் என்று ஆகிவிடுமல்லவா?அனைவருக்கும் பொதுவானா நியாயம் வேண்டும்,ஊரானுக்கு மட்டும் உபதேசம் செய்யாதே என்று எனக்கு சொன்னீர்கள்.இப்போது உங்களிடம் அதையே தான் சொல்கிறேன்.18 வயது AGE OF CONSENT என்று சட்டம் சொல்வதை மாற்ற குரல் கொடுக்க நீங்கள் தயாரா?

3.அப்படி குரல் கொடுக்க தயார் என்றால் அதுநடக்கும் வரை சட்டபுத்தகத்தில் உள்ளதை சொன்ன குஷ்பு மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவீரா?அப்படி சொன்னவர்களை எல்லாம் கண்டிக்க வேண்டும் என்றால் இந்திய அரசியல் சட்டத்தின் மீது தான் நீங்கள் முதலில் பாய வேண்டும்.

3. 2 திருமணம் செய்த ஆண்கள் ஏராளமாக உள்ளனர்.அவர்கள் கற்பு தவறியவர்களா?அவர்களை என்ன செய்யலாம்?வெட்டுவேன் என்றது அவர்களுக்கும் பொருந்துமா?2 திருமணம் செய்யும் பெண்னை ஆதரிக்கிறீர்களா?அல்லது ஆண் 2 திருமணம் செய்யலாம்,பெண் செய்யகூடாது என்று சொல்கிறிர்களா?


4.உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் AGE OF CONSENT உள்ளது.அவர்கள் அத்தனை பேர் சொல்வதும் தவறு நீங்கள் சொல்வது தான் சரி என்று சொல்கிறீர்களா?

உங்கள் வாதம் உணர்ச்சிபூர்வமாக உள்ளது.சட்டபூர்வமாக இல்லை.

ஒன்று சட்டத்தை மாற்றுங்கள்.அல்லது சட்டம் இருக்கும் வரை அதை கடைபிடிக்க விரும்புவோரை தடுக்காமல் இருங்கள்.சட்டம் என்னவோ சொல்லட்டும்.அது என் வீட்டுக்கு இல்லை,ஊரானுக்கு என்று சொன்னீர்களானால் நீங்கள் தான் தவறு செய்கிறிர்கள் என்று அர்த்தம்.
 



///அல்ல அல்ல. எங்கள் வீட்டுப் பெண்களுக்கு(ஆண்களுக்கும்)) வயது ஐம்பதே னாலும் கல்யாணத்துக்கு முன் உடலுறவு கொள்ள நிச்சயம் அனுமதி கிடையாது. அந்த அளவுக்கு அவர்களை நல்ல பழக்க வழக்கங்களுடன் வளர்த்து இருக்கிறோம். இது எழுதப்படாத சட்டம். இதனை மீறி ஏதேனும் நடந்தால் வெட்டிப் பொலி போட்டுவிட்டு தற்கொலை செய்துகொண்டதாய் கணக்கு எழுத தயங்க மாட்டோம். கற்பு எங்களுக்கு உயிரினும் மேலானது.///

முழுக்க முழுக்க சட்டவிரோத பேச்சு நண்பரே,
நீங்கள் சொல்வது தூக்குதண்டனை விதிக்ககூடிய அளவு ஒரு குற்றம்.அதை செய்வேன் என்று கூறுகிறீர்கள்.

பின்வரும் சூழ்நிலையை சட்டப்படி பாருங்கள்

1.அடுத்தவனுடன் போக விரும்புகிறாள் தங்கை
2.தடுக்கிறான் அண்ணன்.
3.கேட்கவில்லை.போகிறாள்.
4.வெட்டுகிறான் அண்ணன்

இதில் சட்டப்படி முழுமுதல் குற்றவாளி அண்ணன் தான்.சட்டம் தனக்கு அளித்த உரிமையை பயன்படுத்த நினைத்த இந்திய குடிமகளை கொன்ற குற்றவாளி அந்த அண்ணன்.

தலிபான் கோர்ட் தவிர உலகின் எந்த நாகரிக நாட்டின் கோர்ட்டிலும் அந்த அண்ணனுக்கு தூக்குதண்டனைதான் கிடைக்கும்.

சட்டம் என ஒன்று உள்ளவரை அதை தலைவணங்கி ஏற்பது தான் முறை.குடியரசு,ஜனநாயகம் என்பதன் அர்த்தம் அதுதான்.அதை ஏற்க முடியாது என்று சொன்னால் நீங்கள் ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாதவர் என்று அர்த்தம்.

ஆக தவறு உங்கள் பக்கம் தான்.
 



//அப்படீங்கறீங்க? இம்முறையில் எத்தனை மகன்கள் தங்கள் தந்தை மற்றும் தமையனால் கொல்லப்பட்டனர் என்று கூற முடியுமா?//

டோண்டு, நான் முன்பே சொன்னமாதிரி கற்பினை உயிரினும் மேலாக மதிக்கிறவர்கள் நாங்கள். எனவே முறைதவறி நடப்பவர்களள நிச்சயம் கொல்வோம். அவ்வாறில்லாமல் இன்னும் பலருக்கும் கூட்டிக்கொடுக்கும் பரம்பரை நீங்கள் என்றால் நான் இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை.

//அவனுக்கென்ன ஆம்பிளை, இப்படி அப்படியென்றுதான் இருப்பான், கால்கட்டு போட்டால் சரியாகிவிடும் என்றுதானே சாதாரணமாகப் பேசுகிறார்கள்?//

இல்லை, ஆண் தவறு செய்தாலும் தவறுதான். நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டியவன்.

//அதிலும் வெட்டிப் போட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டதாக எழுதி விடுவதா? சொந்த உயிர் மேல் ஆசைதானே அது?//

உங்கள் மகள் தவறு செய்தால் வெட்டாமல் நடுத்தெருவில் கட்டவுட் வைப்பீர்கள். எங்கள் குலங்களில் அவ்வாறான வழக்கம் இல்லை. மன்னிக்கவும். எங்கள் உயிர்மேல் பயமுண்டு. காரணம் அடுத்த பிள்ளை தவறான வழியில் செல்லாமல் தடுக்க வேண்டும்.

//இன்னொரு உயிரைக் கொன்றதற்கு மனத்திண்மையுடன் தண்டனையை ஏற்பதுதானே முறை? அப்படி செய்யாதவனை அவன் பெண் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பது என்ன வகையைச் சேர்ந்தது?//

அந்த மகள் தவறு செய்தவள். அவளின் மதிப்பு யாருக்கு வேண்டும்? நல்ல ஒரு மகள் தந்தையை மதிக்கவில்லை என்றால் சொல்லுங்கள். நடத்தை கெட்ட மகளின் மதிப்பு நிச்சயமாக தந்தைக்குத் தேவை இல்லை.


//ஐம்பது வயசு வரை கல்யாணம் கட்டிக்கொடுக்கத் துப்பில்லாத தகப்பனெல்லாம் பெண் உடல் இச்சையைத் தணித்துக் கொண்டால் மட்டும் அரிவாளை தூக்குவது என்ன நியாயம்?//

இதுதான் ஏணிமடை என்றால் நோணிமடை என்பது. ஐம்பது வயதுவரை கட்டிகொடுக்க துப்பு இல்லையென்றா சொன்னேன்? வயசு ஐம்பது ஆனாலும்கூட கற்பினில் நாங்கள் உறுதியாக இருப்போம் என்றேன். நல்லா படித்துவிட்டு வந்து கருத்து சொல்லுங்கள்.

//ஆனால் அவன் மட்டும் ஊரெல்லாம் தொடுப்பு வைத்துக் கொள்வான். என்ன போங்கு இது?//

மறுபடியும் நீங்கள் ஒரு லூசு என்பதை நிரூபித்து இருக்கிறீர்கள்!!! நான் சொன்னது சட்டம் யாவர்க்கும் பொது என்றேன். கற்பு நெறியில் இருந்து விலகியவர் ஆண் என்றாலும் தண்டிக்கப்பட வேண்டும்.
 



//1. 18 வயது AGE OF CONSENT என்று சட்டத்தில் தெளிவாக குறிப்பிட்டுள்ளது.அம்பெத்கார் எழுதிய அரசியல் சட்டம் 18 வயது தாண்டிய அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் அந்த உரிமையை வழங்குகிறது.அந்த சட்டத்தை என்ன செய்யலாம் என்று சொல்கிறீர்கள்?//

அம்பேத்கர் சொன்ன 18 என்பது கல்யாணம் செய்துகொண்டு உடலுறவு. உம்மைப்போல் கல்யாணம் செய்யாமல் உடலுறவு கொள்ளச் சொல்லவில்லை! சட்ட புத்தகம் வேண்டுமா உமக்கு? கல்யாணத்துக்கு முன்பே சோரம் போகச் சொல்லவில்லை!

//2.சட்டம் என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும்.நான் வெட்டுவேன் என்று நீங்கள் சொன்னால் உங்கள் வீட்டுக்கு ஒரு நியாயம் ஊரானுக்கு ஒரு நியாயம் என்று ஆகிவிடுமல்லவா?அனைவருக்கும் பொதுவானா நியாயம் வேண்டும்,ஊரானுக்கு மட்டும் உபதேசம் செய்யாதே என்று எனக்கு சொன்னீர்கள்.இப்போது உங்களிடம் அதையே தான் சொல்கிறேன்.18 வயது AGE OF CONSENT என்று சட்டம் சொல்வதை மாற்ற குரல் கொடுக்க நீங்கள் தயாரா?//

உங்கள் மகள் இன்னொருவனிடம் சென்று வயிற்றில் வாங்கி வந்து அந்த விஷயம் தெருவுக்கே தெரிந்து நீங்கள் தலை குனிய நேரும்போது நான் சொல்வது உமக்குப் புரியும். இப்போது புரியாது! சத்தியமாகப் புரியாது. அப்படியும் அவளை வெட்ட மாட்டேன், அள்ளி உச்சி முகர்வேன் என்றால் நிச்சயமாக நீர் ஒரு ஆண் மகன் இல்லை! அவளை அதற்கு முன்னே கண்டித்து வளர்க்காதது உம் தவறுதானே?


//3.அப்படி குரல் கொடுக்க தயார் என்றால் அதுநடக்கும் வரை சட்டபுத்தகத்தில் உள்ளதை சொன்ன குஷ்பு மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்துவீரா?அப்படி சொன்னவர்களை எல்லாம் கண்டிக்க வேண்டும் என்றால் இந்திய அரசியல் சட்டத்தின் மீது தான் நீங்கள் முதலில் பாய வேண்டும்.//

குஸ்புவின் கருத்து கண்டிக்கப்பட வேண்டியது. ஆனால் செருப்பு விளக்கமாறெல்லாம் அத்துமீறல். பாதுகாப்பாக உடலுறவு கொள்ளச் சொன்னது அவரின் தவறு. அதுவும் கல்யாணம் ஆகுமுன்னரே இளம்பெண்கள் கையில் உறையோடு அலைய வேண்டுமாம்! வடபழனியின் பஸ்ஸ்டாண்டு எனக்கு ஞாபகம் வருகிறது!

//3. 2 திருமணம் செய்த ஆண்கள் ஏராளமாக உள்ளனர்.அவர்கள் கற்பு தவறியவர்களா?அவர்களை என்ன செய்யலாம்?வெட்டுவேன் என்றது அவர்களுக்கும் பொருந்துமா?2 திருமணம் செய்யும் பெண்னை ஆதரிக்கிறீர்களா?அல்லது ஆண் 2 திருமணம் செய்யலாம்,பெண் செய்யகூடாது என்று சொல்கிறிர்களா?//

தன் துணைவியின் அனுமதியோடு இன்னொரு கல்யாணம் செய்தல் சரிதான். அது கற்புநிலையில் இருந்து வழுகுதல் இல்லை. ஐவரோடு உறவு கொண்ட பாஞ்சாலிகூட இங்கே கற்பிற் சிறந்தவள் என்று இலக்கியம் கூறவில்லையா? எனவே துணைக்குத் தெரிந்து இன்னொரு திருமணம்(கவனிக்க;- திருமணம்!) செய்தல் கற்பு நிலையில் இருந்து வழுகுதல் இல்லை. ரெண்டு கட்டும் பெண்ணும் அதேதான்.


//4.உலகின் அனைத்து ஜனநாயக நாடுகளிலும் AGE OF CONSENT உள்ளது.அவர்கள் அத்தனை பேர் சொல்வதும் தவறு நீங்கள் சொல்வது தான் சரி என்று சொல்கிறீர்களா?//

உலகின் எந்த சட்டப் புத்தகத்திலாவது பெண்கள் கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்ள வேண்டும் என எழுதப்பட்டுள்ளதா? ஒரே ஒரு பக்கம் காமியுங்கள். அது எம்மொழியாயினும் பரவாயில்லை! இளம்பெண்கள் கையில் உறையுடன் அலைய வேண்டும் என எழுதி இருந்தால் மெய்ப்பியுங்கள் பார்க்கலாம்.

//உங்கள் வாதம் உணர்ச்சிபூர்வமாக உள்ளது.சட்டபூர்வமாக இல்லை.//

கற்பினை இழந்த ஒரு இளம்பெண்ணின் தந்தை ஸ்தானத்தில் இருந்து யோசியுங்கள். விதி என்ற படத்தினை ன்னுமொருமுறை பாருங்கள். புரியும்.

//ஒன்று சட்டத்தை மாற்றுங்கள்.அல்லது சட்டம் இருக்கும் வரை அதை கடைபிடிக்க விரும்புவோரை தடுக்காமல் இருங்கள்.//

சட்டத்தில் என்ன குஸ்பு சொன்னமாதிரி கல்யாணத்துக்கு முன்பே பாதுகாப்பாக உறை போட வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறதா? அல்லது கற்புள்ளவளைக் கேட்பவன் படித்தவன் அல்லன் என எழுதப் பட்டுள்ளதா? எந்தப் பக்கத்தில் எழுதப் பட்டிருக்கிறது?

//சட்டம் என்னவோ சொல்லட்டும்.அது என் வீட்டுக்கு இல்லை, ஊரானுக்கு என்று சொன்னீர்களானால் நீங்கள் தான் தவறு செய்கிறிர்கள் என்று அர்த்தம்.//

இங்கே பேசிச்செல்லும் நீங்கள் அனைவரும்தான் உமக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒன்று என்கிறீர்கள்.

ஒரு பெண் கையில் பாதுகாப்பு கவசம் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் குஸ்பு!

நீங்கள் உம் வீட்டு கல்லூரி செல்லும் இளம்பெண்களுக்கு அன்றாடம் ஒரு காண்டம் பாக்கெட் கொடுத்து அனுப்புவீர்களா?

கல்யாணத்துக்குமுன் உடலுறவு கொள்ளலாம் என்கிறார் குஸ்பு!

நீங்கள் உங்கள் மகளை, அல்லது சகோதரியை இவ்வாறு மற்றவர்களுடன் உறவு கொள்ள அனுமதிப்பீர்களா?

கற்புள்ளவள்தான் வேண்டும் என்று எந்த படித்தவனும் கேட்கமாட்டான் என்று சொன்னார் குஸ்பு!

நான் படித்தவன். எனக்கு வரப்போகும் மனைவி கற்போடு வரவேண்டும் என எதிர்பார்ப்பது தவறில்லை. நீங்கள் கற்புள்ள பெண்தான் வேண்டும் என எதிர்பார்க்காவிட்டால் மும்பையின் தாராவியிலோ கோல்கத்தாவின் சோனாகஞ்சிலோ பெண் தேடலாம். ஒன்றும் பாதகமில்லை. ஆனால் இதற்கு நீங்கள் ஒப்புக் கொள்வீர்களா?
 



///அம்பேத்கர் சொன்ன 18 என்பது கல்யாணம் செய்துகொண்டு உடலுறவு. உம்மைப்போல் கல்யாணம் செய்யாமல் உடலுறவு கொள்ளச் சொல்லவில்லை! சட்ட புத்தகம் வேண்டுமா உமக்கு? கல்யாணத்துக்கு முன்பே சோரம் போகச் சொல்லவில்லை!////

இதோ அம்பேத்கார் எழுதிய சட்டம்.கல்யாணம் என்ற வார்த்தையே இதில் இல்லை. சட்டத்துக்கு தேவை 18 years+consent அவ்வளவுதான்

IPC - Indian Penal Code
IT(P) Act - Immoral Traffic (Prevention) Act, 1986.

Age of consent for sexual activity

"The legal age at which a person is currently competent to consent to sexual intercourse is currently eighteen (18) years."

http://www.ageofconsent.com/india.htm

அமெரிக்காவில் உள்ள சட்டத்தை பாருங்கள்

http://www.actwin.com/eatonohio/gay/consent.htm

//உங்கள் மகள் இன்னொருவனிடம் சென்று வயிற்றில் வாங்கி வந்து அந்த விஷயம் தெருவுக்கே தெரிந்து நீங்கள் தலை குனிய நேரும்போது நான் சொல்வது உமக்குப் புரியும். இப்போது புரியாது! சத்தியமாகப் புரியாது. அப்படியும் அவளை வெட்ட மாட்டேன், அள்ளி உச்சி முகர்வேன் என்றால் நிச்சயமாக நீர் ஒரு ஆண் மகன் இல்லை! அவளை அதற்கு முன்னே கண்டித்து வளர்க்காதது உம் தவறுதானே?//

வெட்டுவேன்,குத்துவேன் என்பது வன்முறை.சட்ட விரோதம்.நீங்கள் சொல்வது எல்லாம் சட்டவிரோத நடவடிக்கையாகவே உள்ளது.அப்படி எல்லாம் எனக்கு பிரச்னை வந்தால் சட்டவிரோதமாக எதுவும் செய்ய மாட்டேன் என்பது உறுதி.

//உலகின் எந்த சட்டப் புத்தகத்திலாவது பெண்கள் கல்யாணத்துக்கு முன்பு உடலுறவு கொள்ள வேண்டும் என எழுதப்பட்டுள்ளதா? ஒரே ஒரு பக்கம் காமியுங்கள். அது எம்மொழியாயினும் பரவாயில்லை! இளம்பெண்கள் கையில் உறையுடன் அலைய வேண்டும் என எழுதி இருந்தால் மெய்ப்பியுங்கள் பார்க்கலாம்.//

18 வயது தாண்டினால் உடலுறவு கொள்ள அனுமதி உண்டு என்று எழுதப்படுள்ளதே.சுட்டிகளை கொடுத்துள்ளேன்.படியுங்கள்.ஆணுறை அணிந்து உறவுகொள் என்று அரசாங்கமே சொல்கிறது.இலவசமாக ஆணுறைகளை வழங்குகிறது.

//ஒரு பெண் கையில் பாதுகாப்பு கவசம் கொண்டு செல்ல வேண்டும் என்கிறார் குஸ்பு!//

அரசாங்கமே ஆணுறை விளம்பரத்தில் அந்த மாதிரி தானே சொல்கிறது?பாதுகாப்பான உடலுறவு என்று அரசாங்கம் சொல்வதை தானே குஷ்புவும் சொன்னார்?

//கல்யாணத்துக்குமுன் உடலுறவு கொள்ளலாம் என்கிறார் குஸ்பு!
நீங்கள் உங்கள் மகளை, அல்லது சகோதரியை இவ்வாறு மற்றவர்களுடன் உறவு கொள்ள அனுமதிப்பீர்களா?///

18 வயது தாண்டினோர் உறவு கொள்ள விரும்பினால் யாருடைய அனுமதியும் தேவை இல்லை.இந்தியா முழுக்க அந்த சட்டம் தான்.உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் அந்த சட்டம் தான்.

//தன் துணைவியின் அனுமதியோடு இன்னொரு கல்யாணம் செய்தல் சரிதான். அது கற்புநிலையில் இருந்து வழுகுதல் இல்லை. ஐவரோடு உறவு கொண்ட பாஞ்சாலிகூட இங்கே கற்பிற் சிறந்தவள் என்று இலக்கியம் கூறவில்லையா? எனவே துணைக்குத் தெரிந்து இன்னொரு திருமணம்(கவனிக்க;- திருமணம்!) செய்தல் கற்பு நிலையில் இருந்து வழுகுதல் இல்லை. ரெண்டு கட்டும் பெண்ணும் அதேதான்//

கற்புக்கு புது விளக்கம் அல்லவா கொடுக்கிறீர்கள்?

மனைவியின் அனுமதியுடன் இன்னொரு திருமணம் என்றால் அது நீங்கள் சொல்வது போல் கூட்டி கொடுப்பதாகாதா?கணவனின் அனுமதி பெற்று இன்னொரு திருமணம் என்றால் அதுவும் நீங்கள் சொன்னது போல் கூட்டிகொடுப்பதுதானே?

கட்டிய மனைவி கல்லுகுண்டாக இருக்கும்போது,பல குழந்தைகள் பிறந்தபிறகும் இன்னொரு திருமணம் எதற்கு?

திரவுபதி, புராண கதை எல்லாம் இழுத்திர்கள் என்றால் அதில் பல வில்லங்கங்கள் உண்டு

திருமணத்திற்கு முன் சூரியனுடன் உறவுகொண்டு கர்ணனை பெற்ற குந்தியை கூடத்தான் கற்பரசி என்று மகாபாரதம் கூறுகிறது.
திருமணத்திற்கு முன் குழந்தை பெற்ற சகுந்தலையை கற்பரசி என்று இலக்கியம் கூறுகிறது.
திருமணத்திற்கு பிறகு இந்திரனுடன் உறவு கொண்ட அகல்யையை கற்பரசி என்று புராணம் கூறுகிறது.
பாண்டுவின் மனைவி மாத்ரி அசுவினி தேவர்களுடன் கூடி நகுலன்,சகாதேவனை பெற்றாள்.பாண்டு இறந்ததும் அவள் உடன்கட்டை ஏறினாள்.அவளை கற்பரசி என்று தான் சொல்கிறார்கள்.
கண்ணனோடு ராசலீலை செய்த கோபிகளில் பலர் திருமணமானவர்கள்.
வீட்டுக்கு வீடு வழிபடப்படும் துளசி என்பவள் இன்னொரு அரசனின் மனைவி.அவள் அதன்பின் விஷ்னுவின் மனைவியானாள்.

அனைத்து மதங்களிலும் இதுபோல் பல வில்லங்க கதைகள் உண்டு.
 



During the entire course of these discussions, the one thing really bothered m greatly was this:
"WHAT DID KUSHBOO ACTUALLY SAY WHICH WAS NOT TRUE AND MADE PEOPLE CRINGE?"

My repeated search brought me to this passage from 'FRONTLINE'[Nov,04,2005]: Please read!

"Another controversy raged in Tamil Nadu in the last week of September. This was over certain observations made by film actor Kushboo, published in a Tamil-language magazine with the findings of a survey on sex-related issues, including pre-marital sex. The controversy exposed the intolerance, gender bias and hypocrisy of sections of the State's media and the political class which, however, lose no opportunity to assert their reformist zeal and progressive spirit.

The magazine's survey was about the sexual attitude of women and it covered women in the age group of 18-30 across 11 cities in India. Kushboo begins her article with the observation that women in Chennai, who so far had been behind those in Bangalore in the matter of expressing their sexual desires, were now overcoming sex-related mental blocks. She, however, says that this openness also raises the question whether this is a healthy trend in a largely orthodox Indian society. She says that parents, if not teachers, should teach the basics of sex to children. Expressing herself against "changing boyfriends every week", she says that sex is not just about the body, but also the mind. She says that if the girl is convinced of the firmness of her relationship with her boyfriend, she can go out with him with her parents' permission. She suggests that parents can permit this if the girl and the boy are "serious" in their relationship.

She writes: "Our society should liberate itself from the ideas such as the one that women should have their virginity intact when getting married. No educated man will expect the woman he marries to be a virgin." She has also a word of caution to women who go in for pre-marital sex: "Guard against conceiving and contracting AIDS."

A day or two after the magazine hit the stands, a Tamil-language eveninger said in its lead story: "Kushboo's observation that women having [sexual] relationships with other men is common has raised vehement condemnation from many sections." The daily reported that critics took Kushboo's comment as an insult to the Tamil woman and that she seemed to expect others to behave just the way she did in her personal life. They wanted her to apologise for expressing such an opinion, the tabloid added.

It also published the views of a few people, including Bharatiya Janata Party national secretary L. Ganesan and Marumalarchi Dravida Munnetra Kazhagam propaganda secretary Nanjil Sampath. Both of them were critical of Kushboo's remarks. Two days later, a group of women, with brooms in hand, staged a demonstration demanding that the actor quit the State, and burnt her effigy. The demonstrators belonged to the Tamil Protection Movement led by Pattali Makkal Katchi (PMK) founder S. Ramadoss and Viduthalai Siruthaigal leader Thol. Thirumavalavan.

The police provided heavy security to Kushboo's residence. The issue has also been taken to court by the PMK's Central Chennai district women's wing secretary Deepam Jayakumar, on the grounds that Kushboo's observations undermined the culture and civilisation of Tamils and derided the pride of Tamil women.

Kushboo, who was on a short visit to Singapore, first clarified that her observations on pre-marital sex were based on the findings of the magazine's survey on the subject and said that she had been misunderstood. She explained that her contention was that pre-marital sex was an "unfortunate trend worldwide" and that she had not said anything specifically to malign Tamil culture or women. Soon, she rushed back to Chennai and in a television appearance said that the issue had been blown out of proportion. She added that she was sorry if she had hurt the sentiments of Tamils by any of her observations in the magazine article. The matter ended there, though some petitions against her observations are still pending in the courts.

The media debate, however, continues. While human rights activists, feminists, some women's organisations and a section of intellectuals assert that Kushboo has every right to express her views, a number of political leaders, particularly those connected with the BJP and the Dravidian parties, feel outraged and say that she has hurt Tamil sentiments with her remarks about the chastity of their women. Feminists, however, assert that there should be perfect equality between man and woman and that chastity should not be expected of women only.

The debate also has raised some questions about the media, which take up such sensitive issues, and also movements that attempt to suppress diversity of opinion in the name of protecting culture and traditions. The State Committee of the All India Democratic Women's Association (AIDWA) has defended Kushboo's right to express her views and criticised as "undemocratic" her detractors' demand that she leave the State on the grounds that she had derided Tamil culture. A statement issued by the president of the State Committee, N. Amirtham, and general secretary, U. Vasuki, said that those who sought to protect Tamil culture should do well to raise their voice against the increasing incidents of sex-related violence and kidnapping of girls for forced prostitution, which also had been doing great harm to Tamil culture. The AIDWA criticised the attempt by a section of the media to convert personal sex-related issues to marketable commodities in the context of globalisation and cited in support the "obscene" photographs published by the Tamil-language magazine along with the controversial survey report."

Having satisfied my curiosity, I then started to analyze the points she had made and the following facts emerged as a result!

1. This was in reference to a survey conducted in 11 MAJOR CITIES.
2. Women in the age group of 18-30 were considered.
3. Chennai women[not the entire womenhood in Tamilnadu!] were now overcoming sex-related mental blocks.
4. She is against this 'openness' and considers this as an unhealthy trend.
5. She expects the parents and teachers to play a crucial role in educating these kids .
6. She is definitely not asking the parents to supply their kids with condoms!
7. She IS AGAINST 'changing boyfriends' often.
8. Sex is not just about the body , but also the mind.
9. Based on this changing trend, she feels the SOCEITY [note: not parents and brothers!] should take a more liberal view.
10. Again, with all these disturbing trends around, she felt that a truly 'educated man' [who must have been aware of this already, as acc. to her it is prevalent among the educated people only!]should know that he may not be getting a virgin.
11. Finally,She strongly cautioned those few, who still preferred to engage in pre-marital sex to "GUARD against conceiving and contracting AIDS".
12. Please read her Singapore interview again in the same passage and her apology also.

Nowhere she has said anything wrong nor detrimental to our culture. She was only reflecting the trend in major cities and as a concerned woman, she cautioned our Tamil, CITY, 18-30 group, who despite all the values, and education, still wanted to experiment in dangerous waters to be cautious.

"I am in full agreement with what she said in that context".

Simply because, her show is popular in the 'other' Tv channel, and simply because she spear-headed a war against a Dalit-Film director who made derogatory remarks on the entire actresses, because of his grudge against one Navya Nair, all these hue and cry and cases are being held , and that too after she has apologized!
It's shame on us!
And, I apologize to her ,PERSONALLY, for what has been done to her!

anbudan,
SK
 



//அப்படீங்கறீங்க? இம்முறையில் எத்தனை மகன்கள் தங்கள் தந்தை மற்றும் தமையனால் கொல்லப்பட்டனர் என்று கூற முடியுமா?//

"டோண்டு, நான் முன்பே சொன்னமாதிரி கற்பினை உயிரினும் மேலாக மதிக்கிறவர்கள் நாங்கள். எனவே முறைதவறி நடப்பவர்களள நிச்சயம் கொல்வோம். அவ்வாறில்லாமல் இன்னும் பலருக்கும் கூட்டிக்கொடுக்கும் பரம்பரை நீங்கள் என்றால் நான் இதில் சொல்வதற்கு ஒன்றும் இல்லை."

இந்த மழுப்பல் எல்லாம் செல்லாது மங்குண்டான். எவ்வளவு சொந்த குடும்பத்து ஆண்கள் அவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள் என்று கூறவும். முக்கியமாக நீங்களே முக்காடு போட்டுக் கொண்டுதானே இங்கு எல்லாவற்றையும் கூறுகிறீர்? சொந்தப் பெயரில் எழுத தைரியமில்லாத கோழைகள் இங்கு வந்து தைரியமாகப் பேசுவது நகைப்புக்குரியது. அப்போதுதானே உங்கள் பரம்பரை பற்றியும் நாங்களும் தெரிந்து கொள்ள முடியும். வாதம் செய்யத் தெரிந்தால் செய்யும். மற்றவர் பரம்பரையை இழுக்கும் முன்னால் நீங்கள் ஒழுங்காக நடக்கிறீர்களா என்பதைப் பாருங்கள்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



//IPC - Indian Penal Code
IT(P) Act - Immoral Traffic (Prevention) Act, 1986.

Age of consent for sexual activity

"The legal age at which a person is currently competent to consent to sexual intercourse is currently eighteen (18) years."//

இதில் எந்த இடத்திலும் கல்யாணத்துக்குமுன் சோரம்போக வேண்டும் என எழுதவில்லையே நண்பரே?

//அமெரிக்காவில் உள்ள சட்டத்தை பாருங்கள்

http://www.actwin.com/eatonohio/gay/consent.htm//

இது நான் முன்னமே சொன்னது. வேலைக்காக பிழைக்க மேற்கத்திய நாடுகளுக்குச் சென்ற நாம் கார்ச்சாவி குலுக்குதல், பத்துநாளைக்கொரு பாய்பிரண்டு மாற்றுதால், கற்பினை டிஸ்யூவாக நினைத்தல் போன்றவை பெருகி வருகின்றன. இது நகரங்களில் மட்டுமே அதிக அள்ளவில். கிராமங்கள் இன்றைக்கும் கற்பு நிலையில் உயர்ந்துதான். மேற்கத்திய கலாச்சரத்தினை நீன்ங்கள் மதிக்கிறீர்கள். நான் இந்திய அட்திலும் குறிப்பாக தமிழ் கலாசாரத்தினை மதிக்கப் பார்க்கிறேன்.

//வெட்டுவேன்,குத்துவேன் என்பது வன்முறை.சட்ட விரோதம்.நீங்கள் சொல்வது எல்லாம் சட்டவிரோத நடவடிக்கையாகவே உள்ளது.அப்படி எல்லாம் எனக்கு பிரச்னை வந்தால் சட்டவிரோதமாக எதுவும் செய்ய மாட்டேன் என்பது உறுதி.//

நான் முன்பே சொன்ன பதில்தான் இங்கும். வயிற்றில் வாங்கி வந்த மகளை வைத்து உச்சி முகர்ந்து பாராட்டினால் நீர் மனிதர் அல்ல.. மாமா!

//18 வயது தாண்டினால் உடலுறவு கொள்ள அனுமதி உண்டு என்று எழுதப்படுள்ளதே.சுட்டிகளை கொடுத்துள்ளேன்.படியுங்கள்.ஆணுறை அணிந்து உறவுகொள் என்று அரசாங்கமே சொல்கிறது.இலவசமாக ஆணுறைகளை வழங்குகிறது.//

தாங்கள் வெற்றியுடன் பேசிவிட்டதாக தயவு செய்து நினைத்துக் கொள்ள வேண்டாம். 18 வயது தாண்டினால் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் உறை பயன்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் உறை பயன்படுத்த வேண்டும் என்றா சொன்னார்? அய்யகோ பாவம் அம்பேத்கர். இப்போது உங்கள் உரையைக் கேட்டிருந்தால் நிச்சயம் தற்கொலை செய்து கொள்வார்!!! அரசாங்கம் சொல்வது எய்ட்ஸைத் தடுக்க! திருமணம் ஆனவர்களுக்காக. அரசாங்கம் என்ன திருமணத்துக்கு முன் மற்றவர்களுடன் உறை போட்டு உறவு கொள் என்றா சொன்னது? அதற்கு ஏதேனும் சுட்டி இருக்கிறதா நண்பரே?

//அரசாங்கமே ஆணுறை விளம்பரத்தில் அந்த மாதிரி தானே சொல்கிறது?பாதுகாப்பான உடலுறவு என்று அரசாங்கம் சொல்வதை தானே குஷ்புவும் சொன்னார்?//

அரசாங்கம் பாதுகாப்பான உடலுறவு என்று சொன்னது திருமணம் ஆனவர்களுக்கு. அதுவும் தன் சொந்தத் துணையுடன்! மாற்றான் வீட்டு மல்லிகைக்கும் மணமுண்டு என்பதற்காக நீர் மலர் தாவினால் உம் வீட்டுப் பெண்களும் வண்டு தாவும் என்பது நிச்சயம் மனதில் இருக்கட்டும். மாறந்தீர்கள் என்றால் குடும்பம் சின்னா பின்னம்தான்!

//18 வயது தாண்டினோர் உறவு கொள்ள விரும்பினால் யாருடைய அனுமதியும் தேவை இல்லை.இந்தியா முழுக்க அந்த சட்டம் தான். உலகின் எந்த ஜனநாயக நாட்டிலும் அந்த சட்டம் தான்.//

வாய்ப்பேச்சு எப்பாடியும் பேசலாம். வலியும் நோவும் தனக்கு வந்தால்தான் தெரியும். ஒரு பெண் 18 வயது பூர்த்தியானாள் என்பதற்காக எதுவும் செய்து விட முடியாது. அவள் விரும்பியவனோடு படுக்கலாம், விரும்பியபோது வயிற்றினை ரொப்பிக் கொள்ளலாம் என்றால் ஆசான் எதற்கு? பெற்றோர் எதற்கு? நல்ல நண்பர்கள் எதற்கு? நல் பழக்க வழக்கங்கள் எதற்கு? மானம் எதற்கு? சமூகம் எதற்கு? முக்கியமாக உடை எதற்கு? ஆடுமாடுகளைப்போல அவிழ்த்துப் போட்டு விட்டு நடுத்தெருவில் நின்று உறவு கொள்ள வேண்டியதுதானே? பண்பாடு என்ற ஒன்றை காதாலாவது கேட்டிருக்கிறீர்களா?

//கற்புக்கு புது விளக்கம் அல்லவா கொடுக்கிறீர்கள்?//

துணையை இழந்த ஒருவர் இன்னொரு திருமணம் செய்தால் அங்கே கற்போடு இருக்கிறார் எனும்போது இருக்கும் துணையின் அனுமதியோடு இன்னொரு கணவன்/மனைவியை திருமணம் செய்வதும் கற்பின் நல்நிலைதான். இதில் என்ன புதுக் கருத்து கண்டீர்?


//மனைவியின் அனுமதியுடன் இன்னொரு திருமணம் என்றால் அது நீங்கள் சொல்வது போல் கூட்டி கொடுப்பதாகாதா?கணவனின் அனுமதி பெற்று இன்னொரு திருமணம் என்றால் அதுவும் நீங்கள் சொன்னது போல் கூட்டிகொடுப்பதுதானே?//

இதில் கூட்டி கொடுப்பது எங்கிருந்து வந்தது? பணத்துக்காக பொருளுக்காக பதவிக்காக மனைவியை அல்லது கணவனை மற்றவர்களுக்கு தாரை வார்ப்பது மட்டுமே கூட்டிக் கொடுத்தல். ஆனால் இங்கே இருவரும் மனமுவந்து மற்றொருவரை கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்கின்றனர். உம் கருத்துபோல் கல்யாணமின்றி பாய்போடவில்லை!

//கட்டிய மனைவி கல்லுகுண்டாக இருக்கும்போது,பல குழந்தைகள் பிறந்தபிறகும் இன்னொரு திருமணம் எதற்கு?//

நான் இங்கே ஆணை மட்டும் சொல்லவில்லை. பெண்ணையும் சேர்த்துதான் சொல்கிறேன். துணை இருக்கும்போது இன்னொரு துணை தேடுதல் தவறுதான். ஆனால் நம்மை மீறிய கட்டத்தில் அவரின் அனுமதியோடு இன்னொன்று செய்து கொள்ளலாம். அப்படித்தான் (உங்கள்)சட்டம் சொல்கிறது. இஸ்லாத்தில் நான்கு கட்டலாம். தெரியும்தானே? அதுவும் அவர்கள் மதச் சட்டம்தானே? சட்டமில்லா அக்காலத்தில் கூட ஐவர் வைத்திருந்தனர் பாஞ்சாலியை!

//திரவுபதி, புராண கதை எல்லாம் இழுத்திர்கள் என்றால் அதில் பல வில்லங்கங்கள் உண்டு//

உண்மை. புராணம் என்றாலே கட்டுக்கதை என்றுதான் அர்த்தம்..

//திருமணத்திற்கு முன் சூரியனுடன் உறவுகொண்டு கர்ணனை பெற்ற குந்தியை கூடத்தான் கற்பரசி என்று மகாபாரதம் கூறுகிறது.//

சூரியன் ஒரு கடவுள். அவனை மனத்தால் நினைத்து உறவு கொண்டுவிட்டு மாற்றானுடன் படுக்கைக்குச் செல்லவில்லை குந்தி. தவிர இது உண்மையல்ல. காதை என்பதை நினைவில் வையுங்கள்.

//திருமணத்திற்கு முன் குழந்தை பெற்ற சகுந்தலையை கற்பரசி என்று இலக்கியம் கூறுகிறது.//

மேற்சொன்ன பதில்தான் இதற்கும்.

//திருமணத்திற்கு பிறகு இந்திரனுடன் உறவு கொண்ட அகல்யையை கற்பரசி என்று புராணம் கூறுகிறது.//

மேற்சொன்ன பதிலே இதற்கும்.

//பாண்டுவின் மனைவி மாத்ரி அசுவினி தேவர்களுடன் கூடி நகுலன்,சகாதேவனை பெற்றாள்.பாண்டு இறந்ததும் அவள் உடன்கட்டை ஏறினாள்.அவளை கற்பரசி என்று தான் சொல்கிறார்கள். கண்ணனோடு ராசலீலை செய்த கோபிகளில் பலர் திருமணமானவர்கள்.
வீட்டுக்கு வீடு வழிபடப்படும் துளசி என்பவள் இன்னொரு அரசனின் மனைவி.அவள் அதன்பின் விஷ்னுவின் மனைவியானாள்.//

மேற்சொன்ன பதில்தான் இதற்கும். இதற்கு நான் பதில் சொல்லத் தொடங்கினால் இந்துமதத்தினை இழிவு படுத்தியவன் ஆவேன். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடுள்ள எனக்கு அந்த தெய்வநிந்தனை வேண்டாம் என்று நினைக்கிறேன். பார்வதி தேவியின் அழுக்கில் பிறந்தவர் பிள்ளையார் என்பதுபோன்று இன்னமும் கதை கூறி வருகின்றனர். காதை, புராணம் எல்லாமே உண்மை இல்லை. அனைத்தும் கட்டுக் கதைகள். பாஞ்சாலி கதையும் இதில் அடக்கம்.

//அனைத்து மதங்களிலும் இதுபோல் பல வில்லங்க கதைகள் உண்டு.//

ஒப்புக் கொள்கிறேன். கதீஜா ஆடாத ஆட்டமா? உண்மையை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் எல்லாமே புராணங்கள் என்பதை மனதில் வையுங்கள். வாழும் மனிதர்கள் தெய்வங்களாவதும் மிருகங்களாவதும் அந்த அரையணா பெறாத கற்பில்தான் உள்ளது!
 



//இந்த மழுப்பல் எல்லாம் செல்லாது மங்குண்டான். எவ்வளவு சொந்த குடும்பத்து ஆண்கள் அவ்வாறு தண்டிக்கப்பட்டார்கள் என்று கூறவும்.//

சத்தியமாகச் சொல்கிறேன். நானே பல கொலைகளை என் கண்களால் பார்த்திருக்கிறேன். இது உண்மை. கட்டாயம் நிரூபித்தே ஆகவேண்டும் என்றால் இறந்தவரை மறுபடியும் மீடியேட்டர்மூலம் வரவழைத்து பேசச் செய்கிறேன். எப்படி வெட்டினார்கள் என்று நீங்கள் அறிய விரும்பினால் கழுத்தை நீட்டுங்கள். வெட்டிக் காட்டுகிறேன்!!! உண்மையில் நடந்தவை மட்டும் நீங்கள் அறிய விரும்பினால் அவர்களின் முகவரி தருகிறேன். பத்திரிக்கைக்காரர்கள் என்று சொல்லாமல் போய் விசாரிக்கவும்.

//முக்கியமாக நீங்களே முக்காடு போட்டுக் கொண்டுதானே இங்கு எல்லாவற்றையும் கூறுகிறீர்? சொந்தப் பெயரில் எழுத தைரியமில்லாத கோழைகள் இங்கு வந்து தைரியமாகப் பேசுவது நகைப்புக்குரியது.//

டோண்டு என்பது உம் தந்தை, தாய் வைத்த பெயரா? அல்லது ஆசான் சூட்டிய நாமகரணமா?? உம் பிள்ளைக்கு 'டோ' என்பதுதான் இனிஷியலா? இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். அரசு கெஜெட்டில் டோண்டு என்றா உள்ளது? முகமூடி என்பது மறைபெயர்தானே? சொன்ன கருத்தினைப் பாருங்கள். பேர் எல்லாம் எதற்கு உமக்கு?

//அப்போதுதானே உங்கள் பரம்பரை பற்றியும் நாங்களும் தெரிந்து கொள்ள முடியும்.//

நான் பேச்சும் பேச்சினை வைத்து எம் பரம்பரை கற்பினில் எவ்வாறு சிறந்தது நிச்சயமாக எல்லோர்க்கும் விளங்கும். உம் பேச்சினை வைத்து நீர் எப்படி உம் சொந்தங்களை கல்யாணத்துக்குன் உறவு கொள்ள வைத்தீர்கள் என்பது தெரிய வரும். இவ்வாறு பேசும் உம் வீட்டில் எல்லாம் பெண் கட்ட வருகிறார்களே.. அய்யகோ பாவம். ஏமாளிகள்! இதற்கு மேலும் எம் ப்பரம்பரை எவ்வாறு தூய்மையானது என அறிய விரும்பினால் இதன் கீழே உங்கள் மின்முகவரி இடவும். எனது ஏரியா முகவரி தருகிறேன். சென்று விசாரித்து கற்பில் சிறந்தவர் யாம் என்பதை அறிந்து கொள்ளவும்.

//வாதம் செய்யத் தெரிந்தால் செய்யும். மற்றவர் பரம்பரையை இழுக்கும் முன்னால் நீங்கள் ஒழுங்காக நடக்கிறீர்களா என்பதைப் பாருங்கள்.//

அன்புள்ள டோண்டு,

உங்களைப் பற்றி எடை போடுவதற்கு முன் உங்கள் நண்பர்களைப் பற்றி தெரிந்தாலே போதும். உங்களைப் பற்றி பெருமளவில் அறிந்து கொள்ளலாம் என்பார்கள். வயதுதான் ஆகிவிட்டதே தவிர சத்தியமாக உமக்கு மூளையே இல்லை என உறுதியாகச் சொல்வேன். இங்கு கற்பின் மாண்பினைக் கடுமையாக வலியுறுத்துபவன் நான். எனவே எம்குலப் பெண்டிர் நிச்சயம் நல்ல பண்புகளைக் கொண்டிருப்பார்கள். கார்ரணம் அவர்களுக்கு நல்லது எது தீயது எது என நாங்கள் சொல்லித் தந்திருக்கிறோம். கற்பின் உயர்வை அவர்களுக்கு அன்போடு ஆன்மீகம் கலந்து போதித்து இருக்கிறோம். கற்பினை மதிக்காவிட்டால் எழுபிறப்புக்கும் துன்பக் கடலில் உழல்வாய் என போதனை செய்திருக்கிறோம். எனவே அவர்கள் தூய ஒழுக்கத்தினை கடை பிடிக்கிறார்கள்.

ஆனால் நீங்களோ உம் வீட்டுப் பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்து விட்டீர்கள். அவர்கள் யாரோடு வேண்டுமானாலும் உறவு கொள்ளலாம். பள்ளி செல்லும் பிள்ளைகளுக்கு பாக்கெட் மணிக்குப் பதிலாக பாக்கெட் உறை கொடுத்து அனுப்புவதை ஆதரிக்கிறீர்கள். டேட்டிங், சாட்டிங்கில் கூட சுதந்திரம் உண்டு அவர்களுக்கு. எனவே அவர்கள் தங்களின் சுதந்திரத்தினை நிச்சயம் நன்கு பயன்படுத்திக் கொள்வார்கள்! அவர்கள் விருப்பம்படி யாரோடு எங்கு வேண்ட்டுமானாலும் உறவு கொள்ளலாம்! கற்பு என்பது அங்கே கிலோ என்ன விலையாகிறது. எனவே இங்கு உங்கள் பாரம்பரியம் மிக்க பரம்பரை நன்கு புலனாகிறது!

இதற்கும் மேல் என்ன விளக்கம் வேண்டும் உங்களுக்கு? பெற்றோரின் வளர்ப்பு நன்றாக இருந்தால்தானே பிள்ளைகள் நல்லொழுக்கத்துடன் வாழும்?
 



"டோண்டு என்பது உம் தந்தை, தாய் வைத்த பெயரா? அல்லது ஆசான் சூட்டிய நாமகரணமா?? உம் பிள்ளைக்கு 'டோ' என்பதுதான் இனிஷியலா? இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன். அரசு கெஜெட்டில் டோண்டு என்றா உள்ளது? முகமூடி என்பது மறைபெயர்தானே? சொன்ன கருத்தினைப் பாருங்கள். பேர் எல்லாம் எதற்கு உமக்கு?"

டோண்டு என்பது என் தாய் தந்தை எனக்கு இட்ட செல்லப் பெயர். இதை பற்றி ஏற்கனவே நான் பதிவுகள் போட்டுள்ளேன். பார்க்க:
1)
2)

உம்மை மாதிரி முக்காடு போட்டுக் கொண்டு வருபவன் நான் அல்ல.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



இதில் எந்த இடத்திலும் கல்யாணத்துக்குமுன் சோரம்போக வேண்டும் என எழுதவில்லையே நண்பரே?//

"18 வயது ஆனால் விரும்பினவனுடன், விருப்பமிருந்தால் போகலாம்" இதுதான் அதன் சாராம்சம்.சோரம் போவது எல்லாம் அதற்குல்லேயே அடங்கிவிடுகிறது."சோரம்போக விருப்பமிருந்தால் போ" என்று சட்டம் தெளிவாக அனுமதிக்கிறது.

//இது நகரங்களில் மட்டுமே அதிக அள்ளவில். கிராமங்கள் இன்றைக்கும் கற்பு நிலையில் உயர்ந்துதான். மேற்கத்திய கலாச்சரத்தினை நீன்ங்கள் மதிக்கிறீர்கள். நான் இந்திய அட்திலும் குறிப்பாக தமிழ் கலாசாரத்தினை மதிக்கப் பார்க்கிறேன்.//

நான் இரண்டு கலாச்சாரத்தையும் மதிக்கிறேன்.எந்த கலாச்சாரம் பிடிக்கிறதோ அதை ஏற்று வாழுங்கள்.இந்த கலாச்சாரம் உயர்ந்தது,அது தாழ்ந்தது என்று எதுவுமில்லை.

//நான் முன்பே சொன்ன பதில்தான் இங்கும். வயிற்றில் வாங்கி வந்த மகளை வைத்து உச்சி முகர்ந்து பாராட்டினால் நீர் மனிதர் அல்ல.. மாமா!//

வயிற்றில் வாங்கி வந்த மகளை வெட்டிகொன்றால் நீங்கள் கொலைகாரர்.

உடனே வெட்டிகொல்வதன் பெருமை பற்றி சொல்ல ஆரம்பித்துவிடாதீர்.வெட்டிகொல்வது சட்டப்படி தவறு என்பதை அம்பெத்கார் சொல்லியிருக்கிறார்.

//18 வயது தாண்டினால் திருமணம் செய்து கொண்டவர்கள்தான் உறை பயன்படுத்த வேண்டும். பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்கள் உறை பயன்படுத்த வேண்டும் என்றா சொன்னார்? அய்யகோ பாவம் அம்பேத்கர். இப்போது உங்கள் உரையைக் கேட்டிருந்தால் நிச்சயம் தற்கொலை செய்து கொள்வார்!!! //

ஐயா,,18 வயது தாண்டியவர்கள் என்றால் அதில் பள்ளி,கல்லூரி,திருமணமகாத அனைவரும் அடங்குவர்.சட்டத்தில் திருமணத்திற்கு முன் உறவு கொள்வது அனுமதிக்கபட்டுள்ளது.

18 வயது தாண்டியவர்கள் விருப்பமிருந்தால் உறவு கொள்ளலாம் என்பது தான் சட்டம்.

18 வயது தாண்டிய திருமனமானவர்கள் என்று சட்டம் சொல்லவில்லை.

///அரசாங்கம் சொல்வது எய்ட்ஸைத் தடுக்க! திருமணம் ஆனவர்களுக்காக. அரசாங்கம் என்ன திருமணத்துக்கு முன் மற்றவர்களுடன் உறை போட்டு உறவு கொள் என்றா சொன்னது? அதற்கு ஏதேனும் சுட்டி இருக்கிறதா நண்பரே?///

பாதுகாப்பான உறவுக்கு ஆணுறை என்றால் என்ன அர்த்தம்?
மனைவியோடு மட்டும் உறவு என்றால் அது 100% பாதுகாப்புதானே?
பிறகு எதற்கு ஆணுறை?

ஐயா,மனைவியோடு பாதுகாப்பான உறவு கொள் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை.மனைவியோடு கொள்ளும் உறவு பாதுகாப்பான உறவுதான்.வெளியே போகும்போது தான் எய்ட்ஸ் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.அதற்குதான் ஆணுறை அணிந்துகொள் என்று அரசாங்கம் சொல்கிறது.

//அரசாங்கம் பாதுகாப்பான உடலுறவு என்று சொன்னது திருமணம் ஆனவர்களுக்கு. அதுவும் தன் சொந்தத் துணையுடன்!//

மனைவியோடு கொள்ளும் உடலுறவில் பாதுகாப்பு எதற்கையா?அது 100% பாதுகாப்பான உறவுதான்.பிள்ளை பிறக்க வேண்டாம் என்றால் தான் மனைவியோடு உறவுகொள்ளும்போது உறைமாட்டுவார்கள்.ஆனால் அதற்கு காப்பர் டி,மாத்திரை என்று ஆயிரம் வழிகள் உள்ளன.

அரசாங்கம் சொல்லும் பாதுகாப்பான உறவு என்பது வெளியே கொள்ளும் உறவைதான் சொல்கிறது.நாமக்கல்லில் லாரிடிரைவர்வ்களுக்கு இலவசமாக ஆணுறை வழங்குகிறது.

///ஒரு பெண் 18 வயது பூர்த்தியானாள் என்பதற்காக எதுவும் செய்து விட முடியாது///

சட்டப்படி முடியும்.100% உரிமை உள்ளது.தடுக்க தான் யாருக்கும் உரிமை இல்லை.

///ஆசான் எதற்கு? பெற்றோர் எதற்கு? நல்ல நண்பர்கள் எதற்கு? நல் பழக்க வழக்கங்கள் எதற்கு? மானம் எதற்கு? சமூகம் எதற்கு? முக்கியமாக உடை எதற்கு? ஆடுமாடுகளைப்போல அவிழ்த்துப் போட்டு விட்டு நடுத்தெருவில் நின்று உறவு கொள்ள வேண்டியதுதானே? பண்பாடு என்ற ஒன்றை காதாலாவது கேட்டிருக்கிறீர்களா?///

சட்டம் எழுதிய அம்பேத்கரை கேளுங்கள் ஐயா.என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?

///பணத்துக்காக பொருளுக்காக பதவிக்காக மனைவியை அல்லது கணவனை மற்றவர்களுக்கு தாரை வார்ப்பது மட்டுமே கூட்டிக் கொடுத்தல். ஆனால் இங்கே இருவரும் மனமுவந்து மற்றொருவரை கல்யாணம் செய்துகொள்ள சம்மதிக்கின்றனர். உம் கருத்துபோல் கல்யாணமின்றி பாய்போடவில்லை!///

கல்யாணம் கட்டிகொண்டு எத்தனை பேருடன் வேண்டுமானாலும் பாய் போடலாமா?சட்டம் தடுப்பது அதைதான்.பலதார மணத்தை தான் சட்டம் தடுக்கிறது.திருமணத்திற்கு முந்திய உறவை அல்ல.

பலதார மணம் இந்து மற்றும் கிறுஸ்தவர்களுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
பலதாரமணம் ஐரொப்பாவில்,அமெரிக்காவில் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முந்தைய உறவு உலகின் எந்த ஜனனாயக நாடுகளிலும் தடை செய்யப்படவில்லை.

சட்ட விரோத கருத்துக்களையே தாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறீர்கள்.சட்டபூர்வக்கருத்துக்களையே நான் வலியுறுத்துகிறேன்.

///வாழும் மனிதர்கள் தெய்வங்களாவதும் மிருகங்களாவதும் அந்த அரையணா பெறாத கற்பில்தான் உள்ளது! ///

சட்டப்படி மக்கள் வாழவேண்டிய நாட்டில் சட்டம் அனுமதிக்கும் உரிமையை பயன்படுத்துபவர்களை யாரும் தடுக்க முடியாது ஐயா.

இது குடியரசு.தனிமனித சுதந்திரம் நிறைந்த நாடு.உங்கள் விருப்பபடி நீங்கள் வாழுங்கள்.மற்றவரை அவர் விருப்பப்படி வாழவிடுங்கள்.
 



//டோண்டு என்பது என் தாய் தந்தை எனக்கு இட்ட செல்லப் பெயர். இதை பற்றி ஏற்கனவே நான் பதிவுகள் போட்டுள்ளேன். பார்க்க:
1)
2)
உம்மை மாதிரி முக்காடு போட்டுக் கொண்டு வருபவன் நான் அல்ல.//

டோண்டு,

நீர் கேட்டது மறைபெயர் பற்றி. விளக்கம் கொடுத்து விட்டேன். கற்புக்கும் சேர்த்து. உமக்கு உம் பெற்றோர் இட்டதுபோல எனக்கும் இது செல்லப் பெயர். கொஞ்சம் பொத்துகிறீர்களா?
 



//"18 வயது ஆனால் விரும்பினவனுடன், விருப்பமிருந்தால் போகலாம்" இதுதான் அதன் சாராம்சம்.சோரம் போவது எல்லாம் அதற்குல்லேயே அடங்கிவிடுகிறது."சோரம்போக விருப்பமிருந்தால் போ" என்று சட்டம் தெளிவாக அனுமதிக்கிறது.//

கோபப்படாமல் கருத்தினை வாசிக்கவும். நான் உங்கள் வழிக்கே வருகிறேன். எனக்கும் சோரம்போக வேண்டுமென்ற ஆவல் ஒட்டிக் கொண்டது என்று வைத்துக் கொள்வோம். சட்டத்தில் இடமிருக்கிறது. உமது தங்கை அல்லது மகளுக்கு 18 வயது. என்னுடன் படுக்கிறாயா என்று கேட்க எனக்கு முழு உரிமை உள்ளது. படுக்கவும் மறுக்கவும் அவருக்கு உரிமை உள்ளது. ஒருவேளை அவர் ஒப்புக் கொண்டால் நாங்கள் இருவரும் உமது கண்முன்னாலேயே பாதுகாப்பு உறை அணிந்து உறவு கொள்ள ஆசைப் படுகிறோம்.ஒரு தமையன்/தந்தை என்ற வகையில் உங்களின் மனநிலை எப்படி இருக்கும்? வாழ்த்தி வரவேற்று தட்டு தாம்பூலத்துடன் ஆசீர்வதிப்பீர்களா? நன்கு யோசித்து பதில் கூறவும். எனக்கும் அவருக்கும் வயது 18க்கு மேல் என்பதை நினைவில் கொள்ளவும்.

(இங்கு உங்கள் என்பது நீங்கள் அல்ல; குஸ்புக் கொள்கையை ஆதரிக்கும் எல்லோரையும்)

நான் இராமனாக வாழ ஆசைப்படுகிறேன். என்னை ராமனின் தந்தையாக வாழும்படி வற்புறுத்துகிறீர்கள்!. இதனைத்தான் உங்கள் வேதம் சொன்னதா? இதனைத்தான் உங்கள் சட்டமும் சொன்னதா?

// இரண்டு கலாச்சாரத்தையும் மதிக்கிறேன்.எந்த கலாச்சாரம் பிடிக்கிறதோ அதை ஏற்று வாழுங்கள்.இந்த கலாச்சாரம் உயர்ந்தது,அது தாழ்ந்தது என்று எதுவுமில்லை.//

மேற்கத்திய கலாச்சாரம் சிறந்தது என்றால் அதனையே பாலோ பன்னனும். இந்திய பாரம்பரியம் பிடித்து இருந்தால் இதனை பாலோ செய்யனும். அப்படி இன்றி இரண்டையும் போட்டு குழப்பிக் கொண்டால் அது தவறு. அங்கே பாய் பிரண்ட் இல்லாத இளம்பெண்ணின் பெண்மை சந்தேகத்துக்கு உரியது. கேர்ள் பிரண்டு இல்லாத இளம்பையனின் ஆண்மை கேள்விக் குரியது. ஆனால் நம் நாட்டில் பாய்பிரண்டு உள்ள இளம்பெண்ணின் குடும்ப மானம் கேள்விக்குரியது. கேர்ள் பிரண்டு உள்ள பையனின் குடும்பத்தினை கண்டவரும் திட்டுவார்கள். பிள்ளையை வளர்க்கத் தெரியாமல் தடிமாடு போல வளர்த்து இருக்கிறார்கள் என்று ஏசுவார்கள்.

//வயிற்றில் வாங்கி வந்த மகளை வெட்டிகொன்றால் நீங்கள் கொலைகாரர்.//

எம் குடும்ப மானத்துக்குமுன் தண்டனை பெரிதாகத் தெரியவில்லை.

//உடனே வெட்டிகொல்வதன் பெருமை பற்றி சொல்ல ஆரம்பித்துவிடாதீர்.வெட்டிகொல்வது சட்டப்படி தவறு என்பதை அம்பெத்கார் சொல்லியிருக்கிறார்.//

அம்பேத்கர் தனது பெண் இப்படி திருமணத்துக்கு முன் தவறு செய்வாள் என்று நிச்சயம் எதிர்பார்த்து இருக்க மாட்டார்! அல்லது அவரின் குடும்பம் நான் சொல்வதுபோல ஒழுக்கத்துக்கு பெயர்போன குடும்பமாக இருக்க வேண்டும்!

//ஐயா,,18 வயது தாண்டியவர்கள் என்றால் அதில் பள்ளி,கல்லூரி,திருமணமகாத அனைவரும் அடங்குவர்.சட்டத்தில் திருமணத்திற்கு முன் உறவு கொள்வது அனுமதிக்கபட்டுள்ளது.//

தங்களின் பேச்சு சுவையாக இருக்கிறது. ஆனால் சிந்திக்க மறுக்கிறீர்கள். நான் என் செய்வேன்? சட்டத்தில் அனைவருக்கும் காம உரிமை இருக்கிறது என்கிறீர்கள். பாதுகாப்பு உறையைக் கையில் கொண்டு பள்ளி கல்லூரி செல்லலாம் என்கிறீர்கள். கல்யாணத்துக்குமுன் உடலுறவு கொள்ளலாம் என்கிறீர்கள். அம்பேத்கர்கூட கல்யாணத்துக்கு முந்தைய உடலுறவை ஆதரிக்கிறார் என்கிறீர்கள். இப்படியே போனால் காந்தியே கல்யாணத்துக்குமுன்பு உடலுறவு கொண்டிருந்தார் என்று சொன்னாலும் சொல்வீர்கள்!

//18 வயது தாண்டியவர்கள் விருப்பமிருந்தால் உறவு கொள்ளலாம் என்பது தான் சட்டம்.//

கொள்ளட்டும் அய்யா. அது முறையான உறவாய் இருக்கட்டுமே?! கட்டும் கணவனுக்கு பண்ட பாத்திரம் கொண்டு போக வேண்டாம், சீர்செட்டு நகை நட்டு கொண்டு போக வேண்டாம். தூய்மையான கற்பினை ஒரு பெண் சீதனாகக் கொண்டு செல்லட்டுமே?

வரப்போகும் மனைவிக்கு ஆடைஆபரணம் வாங்க வேண்டாம், மாடமாளிகைகள் வாங்க வேண்டாம். நிலநீச்சு, கூட கோபுரமும் கட்டித் தரவேண்டாம். விலைமதிப்பில்லாத கற்பினை ஒரு ஆடவன் அவளுக்காக சேர்த்து வைத்திருக்கலாமே அய்யா? இதில் என்ன தவறு கண்டீர்? சட்டம் என்ன கற்போடு இருப்பவர்களைக் கூண்டிலா தள்ளும்?

//18 வயது தாண்டிய திருமனமானவர்கள் என்று சட்டம் சொல்லவில்லை.//

அய்யா ராசா, காலு எங்கய்யா இருக்குது? கும்பிடுறேன் சாமி! ஆள விடுய்யா!

//பாதுகாப்பான உறவுக்கு ஆணுறை என்றால் என்ன அர்த்தம்?
மனைவியோடு மட்டும் உறவு என்றால் அது 100% பாதுகாப்புதானே?
பிறகு எதற்கு ஆணுறை?//

பிள்ளையைத் தள்ளிப்போடப் பயன்படும். கணவனுக்கோ அல்லது மனைவிக்கோ பிறப்புறுப்பில் இன்பெக்சன் என்றால் பயன்படுத்தலாம். வேண்டாத கற்பத்தினைத் தடுக்கலாம்.

//ஐயா,மனைவியோடு பாதுகாப்பான உறவு கொள் என்று சொல்லவேண்டிய அவசியமே இல்லை.மனைவியோடு கொள்ளும் உறவு பாதுகாப்பான உறவுதான்.வெளியே போகும்போது தான் எய்ட்ஸ் வரக்கூடிய வாய்ப்பு உள்ளது.அதற்குதான் ஆணுறை அணிந்துகொள் என்று அரசாங்கம் சொல்கிறது.//

மனைவியோடு கொள்ளும் எல்லா உறவும் பாதுக்காப்பானதுதான். அதற்காகத்தான் ஒருவனுக்கு ஒருத்தி என்ற உன்னத கோட்பாட்டினை வலியுறுத்து கிறேன். உம் கோட்பாட்டின்படி யாரும் யாரிடமும் போகலாமென்றால் அப்படிப் போய்விட்டு வந்து மனைவியிடம் சென்றால் எய்ட்ஸ், வீடி, கண்ட எழவெல்லாம் வரும். அதனால்தான் கற்பின் மகத்துவத்தினை விளக்குகிறேன்.

//மனைவியோடு கொள்ளும் உடலுறவில் பாதுகாப்பு எதற்கையா?அது 100% பாதுகாப்பான உறவுதான்.பிள்ளை பிறக்க வேண்டாம் என்றால் தான் மனைவியோடு உறவுகொள்ளும்போது உறைமாட்டுவார்கள்.ஆனால் அதற்கு காப்பர் டி,மாத்திரை என்று ஆயிரம் வழிகள் உள்ளன.//

இதற்கான பதில் நான் முன்னரே சொல்லி இருக்கிறேன். காப்பர் டீயை மட்ட ஒருமுறை கழட்ட ஒருமுறை மருத்துவரிடம் செல்ல வேண்டும். உறையென்றால் அந்த தொந்தரவில்லை. மாத்திரை சைடு எபெக்ட் தரவல்லது.


//அரசாங்கம் சொல்லும் பாதுகாப்பான உறவு என்பது வெளியே கொள்ளும் உறவைதான் சொல்கிறது.நாமக்கல்லில் லாரிடிரைவர்களுக்கு இலவசமாக ஆணுறை வழங்குகிறது.//

எந்த ஒரு அரசாங்கமும் பள்ளிப் பிள்ளைகளை, கல்லூரி இளையர்களை, திருட்டு உறவை, கள்ள உறவை, வேலி தாண்டுபவர்களை, ஊர் மேய்பவர்களை ஆதரிக்க வில்லை. எய்ட்சைத் தடுக்க என்ன செய்யலாம் என்று யோசித்து மண்டையைப் போட்டு பிய்த்து கடைசியில் தப்பு செய்றதுதான் செய்றே.. சரி முடியாத பட்சத்தில் உறை மாட்டியாவது செய் என்று தண்ணி தெளித்து விட்டது. எந்த ஒரு அரசும் முறை கெட்ட உறவினை ஆதரித்து பாராட்டு பெற்றதாய் சரித்திரமில்லை. ஒரேபாலின திருமணத்தினை சில நாடுக்ள் ஆதரித்ததும் சில பாதிரியார்கள் மற்றும் வாடிகனின் எதிர்ப்பைச் சம்பாதித்ததும் ஞாபகம் இருக்கட்டும்.

லாரி டிரைவர் தொடர்ச்சியாக 2 நாட்கள் வரை ஓட்டுபவர்கள். எஞ்சினின் அதிக சூட்டினால் தத்தம் கற்பினை காற்றில் பறக்க விடுகிறார்கள். ஒருசிலர் வேண்டுமானால் நல்லவர்கள் இருக்கலாம். புள்ளி விபரத்தின்படி லாரி டிரைவரால்தான் அதிகம் எய்ட்ஸ் பரவுகிறதாம். ஊர் விட்டு ஊர், மாநிலம் விட்டு மாநிலம் பரப்பிய இந்த டிரைவர்கள் இப்போது நாடு விட்டு நாடு பரப்பும் தொழிலையும் செய்து வருகிறார்கள். அவர்களை திருத்த அரசு எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போகவே சரி உறை மாட்டியாவதுச் எய் என்று அரசு இறங்கி வந்தது.

அங்கே நாமக்கல்லில் தெருவில் நிற்கும் பெண்களை அரசே முன்னின்று சப்ளை செய்கிறது, இதற்கு அம்பேத்கரின் சட்டத்தில் எதிர்ப்பு இல்லை என்று சொன்னாலும் சொல்வீர்கள்!

//சட்டப்படி முடியும்.100% உரிமை உள்ளது.தடுக்க தான் யாருக்கும் உரிமை இல்லை.//

வேறென்ன அய்யா நான் சொல்ல முடியும்? இது உமது வழி! ஆனால் உங்கள் அறிவுரை கேட்டு உங்களுக்குப் பின் வரும் சந்ததியினரை நினைத்தேன், சிரிக்கிறேன்.


//சட்டம் எழுதிய அம்பேத்கரை கேளுங்கள் ஐயா.என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்?//

பாவம் அய்யா அம்பேத்கர். இப்படி தெரிந்திருந்தால் சத்தியமாக எழுதியே இருக்கமாட்டார். ஜெயகாந்தன் மாதிரி நக்கிக்கொண்ட நாய்கள் என்று எங்கேனும் உரை நிகழ்த்தப் போயிருப்பார்!


//கல்யாணம் கட்டிகொண்டு எத்தனை பேருடன் வேண்டுமானாலும் பாய் போடலாமா? சட்டம் தடுப்பது அதைதான்.பலதார மணத்தை தான் சட்டம் தடுக்கிறது. திருமணத்திற்கு முந்திய உறவை அல்ல.//

ஒரு ஆண் இரு திருமணம் செய்யலாம் என சட்டத்தில் இடமுள்ளது. ஒரு பெண் இரு திருமணம் செய்யலாம், பலவும் செய்யலாம். அதற்கும் சட்டத்தில் இடமுள்ளது. இருக்கும் கணவன்/மனைவியின் ஒப்புதலின் பேரில் செய்யலாம். அரசின் சலுகைகளை மட்டுமே அனுபவிக்க முடியாது. எதற்கும் சட்டத்தினை இன்னொருமுறை புரட்டுங்கள்.

//பலதார மணம் இந்து மற்றும் கிறுஸ்தவர்களுக்கு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.//

கருணாநிதி எப்படிச் செய்தார்? பிடித்து கூண்டில் நிறுத்தி தண்டனை வாங்கித் தந்திருக்க வேண்டாமோ?

//பலதாரமணம் ஐரொப்பாவில்,அமெரிக்காவில் அனைவருக்கும் தடை செய்யப்பட்டுள்ளது.//

கல்யாணம் செய்தால்தானே தொந்தரவு. கட்டாமல் எத்தனை பேர் வைத்திருக்கின்றனர்?

//திருமணத்திற்கு முந்தைய உறவு உலகின் எந்த ஜனனாயக நாடுகளிலும் தடை செய்யப்படவில்லை.//

அப்படி விட்ட காரணத்தால்தான் இன்றைக்கு வர்ஜின் என்பது கேள்விப் பட்டிராத பெயராக இருக்கிறது.

என்னுடைய நிறுவனத்தில் பணிபுரியும் நண்பர் என்னிடம் கேட்டார்.

"Hey friend, why you haven't get married?"

"No, I am waiting for a good, educated, virgin girl!"

"Go ahead, then why you are waiting here? Please go to the kindergarden school, then get one!"

//சட்ட விரோத கருத்துக்களையே தாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறீர்கள்.சட்டபூர்வக்கருத்துக்களையே நான் வலியுறுத்துகிறேன்.//

சட்டத்திற்கு முன் எனக்கு மனிதாபிமானமும் கற்பில் இருந்து குன்றிமணியும் வழுகாத நல்நிலையும் பெரிதாகத் தெரிகிறது. எனவே நான் சட்டத்தில் இருந்து விலகியவன் என்றாலும் எம் தமிழ் பண்பாட்டினைக் காத்தவன் என்ற வகையில் பெருமதிப்பு கொள்கிறேன்.

//சட்டப்படி மக்கள் வாழவேண்டிய நாட்டில் சட்டம் அனுமதிக்கும் உரிமையை பயன்படுத்துபவர்களை யாரும் தடுக்க முடியாது ஐயா.//

மக்கள் சட்டப்படி வாழட்டும், எல்லோரும் சுயமாக சிந்தித்து எல்லோருடனும் எப்போதும் சர்வ சகஜமாக உறவு கொள்ளட்டும். உங்கள் உலகத்தில் இடமிருந்தால் எனக்கும் ஒரு துண்டு போட்டு வையுங்கள். உங்களைத் திருத்த முடியாத நானும் உங்கள் வழியிலேயே வந்து நிலை தடுமாறி கண்டவர்களோடும் உறவு கொள்ளும் சூழ்நிலை வந்தாலும் வரலாம். அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பதுபோல என் மனதையும் கரைத்து அழைத்துச் சென்று கற்பில்லா அந்த பாதாள சாக்கடியில் தள்ளுவதுதான் உம் திட்டமென்றால் தொடர்ந்து செய்யும். இனிவரும் தலைமுறையினர் நிச்சயம் உம்மை மன்னிக்க மாட்டார்கள்.

//இது குடியரசு.தனிமனித சுதந்திரம் நிறைந்த நாடு.உங்கள் விருப்பபடி நீங்கள் வாழுங்கள்.மற்றவரை அவர் விருப்பப்படி வாழவிடுங்கள்.//

எனது இந்த மறுமொழியின் முதற் பத்தியை மீண்டும் ஒருமுறை வாசிக்கவும்.

எனக்காக நேரம் செலவழித்த உமக்கு எனது சிறப்பு நன்றி.
 



If the trend of future replies are going to be a rebuttal or response to Mr.'KMP' or Mr.'manguNdaan', then I think the purpose of this thread is deviating from the original issue. It should not be anyone's job or duty to convince these two[or one?!]!

Even one of them has already asked to reserve a place for him!

The politicians also have seen the negative publicity they are genarating for them and are playing it down.

Not that I don't want to continue this debate but wud prefer healthier comments and not rebuttals to vulagarity and perversions!

'mugamoodi'yaar gavanikka!

anbudan,
SK
 



//எவ்வளவு நாகரிகமாக பதில் சொன்னாலும் தாங்கள் அதற்கு இப்படி பதில் எழுதுவதையே வாடிக்கையாக வைத்துள்ளீர்கள்.//


அய்யா நாம் பேசிக் கொண்டிருப்பது கற்பினைப் பற்றி. எனவே இங்கு காமம் பற்றி கண்டிப்பாகப் பேசித்தான் ஆக வேண்டும். நீங்கள் உங்கள் பிள்ளைகளை சர்வ சுதந்திரத்துடன் வளர்க்கிறீர்கள். அவர்கள் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள். நானோ 18க்கு மேற்பட்ட சின்னப் பையன். உடலுறவு கொள்ளும் உரிமை எனக்கும் இருக்கிறது என்பதனை நீங்கள் மறுக்க முடியாது. எனவே அவர்களோடு நான் உடலுறவு கொள்ளலாமா? அதுவும் அவர்கள் சம்மதத்துடன் ஆனால் உம் முன்னாடி எனக் கேட்டிருந்தேன். உங்களின் கருத்துக்களில் இருந்துதான் மேற்கோளிட்டுக் கேட்டிருந்தேன் என்பதனை நினைவில் கொள்க. இது எப்படி தவறாகும்? இது எப்படி அநாகரீகமாகும்? ஒரு கொள்கையை உமக்குப் பிடிக்கிறது என்றால் அதில் நீங்கள் ஈடுபட்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். உண்மையாயில்லையா?

//தங்கள் கருத்துக்களை எடுத்துவைக்க வேண்டுமென்ற எண்ணத்தைவிட எதிர்கருத்து சொல்பவனை அவமானப்படுத்தவேண்டும் என்ற எண்ணமே உங்களிடம் மேலோங்கியிருப்பதாக தோன்றுகிறது.//

சத்தியமாக இல்லை அய்யா. உங்கள் வாதத்தினை வைத்தே உங்களை மடக்க வேண்டும் என் நினைத்தேன். மடக்கினேன். அதுதவிர காமத்தினைப் பொருத்தவரையில் நான் இராமனைப் போன்றவன். என்னை ராமனின் அப்பாபோல மாறச் சொல்வது நீங்கள்தான் என்பதனை மீண்டும் நினைவு படுத்துகிறேன்.

//இதே வாதத்திற்கு உங்கள் அக்கா தங்கையை இழுத்து வைத்து பதில் அளிக்க முடியும்.ஆனால் அப்படி செய்ய நான் விரும்பவில்லை.என்னால் தரம் தாழ்ந்து எழுத முடியாது.//

அன்புள்ள பிரதிவாதி,

நான் முன்பே சொன்னபடி எம் மக்கள் கற்பிற்கு பெயர் போனவர்கள். நீங்கள் வாவென்றால் வருவதற்கும் படு என்றால் படுப்பதற்கும் அவர்கள் உங்கள் குழந்தைகளைப் போல வளரவில்லை. நாங்கள் கற்பின் மாண்பினை சிறு குழந்தையில் இருந்து போதித்து வளர்த்திருக்கிறோம். எங்களிடம் வளர்ந்த குழந்தைகள் கற்பு நெறியில் இருந்து ஒருபோதும் தவறியதில்லை. இனியும் தவறாது. எங்கள் வளர்ப்பு அப்படி. உம்மைப் போல் நாங்கள் வளர்க்கவில்லை என்பதனை மீண்டும் நினைவு படுத்து கிறேன். தரம் தாழ்த்தி உங்களை நான் பதியவில்லை. உங்கள் பதிலில் இருந்தே உங்களை மடக்கி நான் கேட்டிருந்தேன். அதற்கு உங்களுக்கு பொத்துக்கொண்டு வந்துவிட்டது அய்யா.


//நேர்மையாக வாதாடினால் தோற்றுபோகபோவது தாங்கள் தான்.வாதத்தில் தோல்வி எற்படும்போது தோல்வியை தாங்க முடியாதவர்கள் இப்படி வசவுகளை அள்ளி வீசுவதை நான் பார்த்திருக்கிறேன்.//

யாரு நானா? தோல்வியா எனக்கா? இதுவரை நான் பங்கேற்ற விவாதங்களில் நான் தோற்றதாய் சரித்திரமில்லை. இங்கே நான் கற்பில் உறுதியுடன் இருக்கிறேன். நீங்கள் கற்பினைக் காற்றில் பறக்க விடுகிறீர்கள். கற்பு பெரிதா இல்லையா என்பதற்கு முன் தோற்று கூனிக்குருகி குய்யோ முறையோ எனக் கூக்குரலிடுகிறீர்கள். உம் குடும்பத்தை இழுத்ததாய் பொய்க் குற்றம் சாட்டுகிறீர்கள். வளர்ப்பு பற்றி பேசியது நீங்கள். உம் வளர்ப்பில் சர்வ சுதந்திரமாய் வளர்ந்த ஒரு பிள்ளை தவறு செய்யும் என்ற உண்மையை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள். பாராட்டி தாலாட்டி, அன்பு செலுத்தி நல்லொழுக்கம் போதித்து நேர் வழியில் நடக்கும் எம் குழந்தைகளைப் பற்றிச் சொல்லியும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே தெரிகிறது எனக்கு. நீர் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் வென்றது நானில்லை. கற்புதான் அய்யா வென்றது. கற்புதான். கற்பினைக் கரன்சிக்கு விற்கும் கூட்டங்களுக்கு மத்தியில் என் விவாதம் எடுபடவில்லை என்றாலும் இனிவரும் இளைய சமுதாயம் இதைப் படித்து தம்மைக் காத்துக்கொள்ளும் என்ற உன்னத கோட்பாட்டுடன்தான் அய்யா நான் இந்த விவாதத்தில் பங்கேற்றேன்.

//அது என் எதிராளி தான் தோற்றுவிட்டதாக அளிக்கும் ஒப்புதல் வாக்குமூலம் என்பது எனக்கு தெரியும்.//

சொன்னாலும் சொல்லாவிட்டாலும் தோற்றது நீங்கள்தான்.

//கருத்து பதில் கருத்து என்று இருக்கவேண்டும்.ஆனால் கருத்துசொன்னவனுக்கு கோர்ட்டுவாசலில் புடவையை தூக்கிகாட்டி பதில் சொல்லும் கலாச்சாரம் தமிழ்நாட்டில் பரவிவருகிறது.//

கோர்ட்டு வாசலில் புடவைத் தூக்கிக் காட்டுவது அதிமுக பெண் தொண்டரணி கலாச்சாரம். வளர்மதிதான் அதற்கு லீடர். அதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் எனத் தெரியவில்லையே.


//இணையதளத்திலும் அதுபோல் எழுதுவது வாடிக்கையாகிவிட்டது.//

பதினெட்டு வயது ஆகிவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றது நீங்கள். எனவே 18க்கு மேற்பட்ட எல்லா பெண்களும் தூக்கிக் காட்டலாம் என்பதில் உங்களுக்கு உடன்பாடு உண்டு. எனவே இணையத்தில் அவ்வாறாக எழுதுவது தாங்கள்தான்.

//கற்பை ஆதரித்துவாதிட புடவையை தூக்கிகாட்டுவது தான் உங்கள் பதில் என்றால்..... பாவம் நீங்கள்//

வயது 18 என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்றது நீங்கள். அவர்களுக்கு பரிபூரண சுதந்திரம் உண்டென்று சொன்னது நீங்கள். அவர்கள் புடவை. அவர்கள் உடம்பு. எனவே புடவை தூக்கும் பெண்ணுக்கு 18 என்பதனால் அவர் தூக்குகிறார். அவர் உங்களின் கோட்பாடுகளை மதிக்கிறார். அதனாலேயே தூக்குகிறார். எனக்கென்னவோ அவர்கள் உங்கள் பாணியில் வளர்ந்தவர் என நான் நினைக்கிறேன். நிச்சயம்

//(நான் நீங்கள் என்று சொன்னது உங்களையல்ல.குஷ்புவை எதிர்த்து கருத்து சொல்லி புடவையை தூக்கி காட்டியவர்களை)//

குஸ்புவை எதிர்த்து கருத்து சொல்லியவர்கள் பாமகவினர், திருமா அணியினர். அவர்கள் புடவையைத் தூக்கியதாக பத்திரிக்கையிலோ வானொலியிலோ தொலைக்காட்சியிலோ வரவில்லை. தாங்கள்தான் புதிதாகக் கண்டு பிடித்து இருக்கிறீர்கள். அவர்கள் தூக்கியது செருப்பும் விளக்குமாறும். பழந்தமிழ் ஆயுதங்களான அவகளைத் தூக்கியதை நானே தவறுதான் என்கிறேன். தவிர அவர்கள் உண்மையில் புடவையே தூக்கி இருந்தாலும் உங்களின் கருத்துப்படி அவர்களுக்கு வயது 18க்கு மேல் என்பதால் தூக்கி இருப்பதில் தவறில்லை. ஆனால் என் கூற்றுப்படி புடவை தூக்குதல் தவறுதான் அய்யா!
 



//If the trend of future replies are going to be a rebuttal or response to Mr.'KMP' or Mr.'manguNdaan', then I think the purpose of this thread is deviating from the original issue. It should not be anyone's job or duty to convince these two[or one?!]!//

ஒரிஜினல் இஸ்யூ என்பது என்ன அய்யா? திருமணத்துக்கு முன்பு கற்பினை இழப்பதுதானே எஸ்கே அவர்களே? அதுவன்றி கூட்டாஞ்சோறு எப்படி சமைப்பது என்றா?

//Even one of them has already asked to reserve a place for him!//

உங்கள் கூற்றுப்படி என்னையும் நான் சர்வ சுதந்திரத்துடன் சகஜமாக எப்போதும் எல்லோருடனும் உடலுறவு கொள்ளும்படி நீங்கள் கூறினால் எனக்கும் துண்டு போடுங்கள்,(கஷ்டம்தான்) நானும் வர முயற்சிக்கிறேன் என்றேன்.

//The politicians also have seen the negative publicity they are genarating for them and are playing it down.//

தப்பை தப்பில்லாம செஞ்சா தப்பே இல்லன்னு நீங்கதான் சொல்லிக் குடுத்தீங்க. வயது வந்த எல்லோரும் தப்பு செய்யலாம் என்று இங்கே புதுச் சட்டம் சொன்னவர் பிரதிவாதி. அம்பேத்கர் 18வயசு பிள்ளைகள் உடலுறவு கொள்ளலாம் என சட்டம் எழுதி வைத்திருக்கிறாராம்!!! நான் நீங்கள் பேசியது, பிரதிவாதி பேசியது, குஸ்பு பேசியது, சுகாசினி கிழிப்பேன் என்று சொன்னது எல்லாவற்றையும் சரியாகத்தான் புரிந்து கொண்டேன்.

//Not that I don't want to continue this debate but wud prefer healthier comments and not rebuttals to vulagarity and perversions!//

உங்கள் வழியிலேயே வந்து உங்களை கிடுக்கிப்பிடி போட்டு மண்ணைக் கவ்வ வைத்தேன் என்பது உண்மை. அதற்கு சரியான பதில் சொல்லக்கூட திராணியற்று வல்கர் என்று கூகுரலிடுகிறீர்கள். 18வயசுக்குமேல் எல்லோரிடமும் எப்போதும் போய்விட்டு வரலாம் என்று நீங்கள் சொன்னது வல்கர் இல்லையா பெரியவரே? அதனைத்தான் நான் தவறு எனப் பேசுகிறேன் இங்கே.

//'mugamoodi'yaar gavanikka!//

முகமூடியார் கவனித்தாலும் முகமூடியரின் அப்பாவே வந்து கவனித்தாலும் ஏன் அந்த ஆண்டவனே வந்து கவனித்தாலும் கற்பு நெறியில் இருந்து ஒருபோதும் தவற மாட்டேன் அய்யா.
 



Dear SK and Pradhivaadhi

This maniac none other than the same old pervert from Malysia. After his recent marriage his level of insanity heightened beyond any repair. He is running a porno site and writing pornography under the name Rambo. His other business is blackmailing fellow netizens and damaging their repute. Mugamoodi please ban this retarded fellow from your site.

Beware of this retarded guy and stay away from him
 



Mugamoodi,

Try to collect the evidence and send it to Malaysian Cybercrime division.

According to Section 5 of the act, Malaysian law does not make a distinction between a harmless hacker who defaces a webpage and a cyberterrorist who desires to cause injury - both will be guilty of offences under the Act, and both will be punishable, although by different sections of the Act.

Practical examples of cybercrimes include but are not limited to:

Cyberstalking. The goal of a cyberstalker is control. Stalking and harassment over cyberspace is more easily practised than in real life. There are many cases where cyberstalking crosses over to physical stalking.

Some examples of computer harassment are:
- Live chat obscenities and harassment;

- Unsolicited and threatening e-mail;

- Hostile postings about someone;

- Spreading vicious rumours about someone;

- Leaving abusive messages on a website’s guest books.

A person guilty of a cybercrime offence shall on conviction be liable to a maximum fine of RM150,000 or a maximum prison term of 10 years or both the fine and imprisonment depending on the nature of the complaint. The legislature also provided for a higher fine and a higher prison term, if applicable.
 



முகமூடி அவர்களே,

பின்னூட்டங்களை அழிக்கும்போது லிங்குகளை அப்படியே வைக்கவும். அடையாளம் இன்றி அழிக்காதீர்கள். அவ்வாறு செய்தால் புது பின்னூட்டங்கள் வந்தால் தமிழ்மணத்தால் இற்றைப்படுத்த முடியாது.

நீங்கள் சுமார் 17 பின்னூட்டங்களை அழித்துள்ளீர்கள். மேலும் அதே எண்ணிக்கையில் பின்னூட்டங்கள் வந்த பிறகே இற்றைப்படுத்தல் நடக்கும்.

அந்த மனம் பிறழ்ந்தவனுக்கு இதுவே வேலை. கல்யாணம் ஆகியும் பைத்தியம் குறையவில்லை. அவன் மனைவி பாவம்தான்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
 



சரி, உங்க கருத்து ??